பீஜே அவர்களின் தாயார் மரணித்த போது
அஸ்ஸலாமு அல்லைக்கும், பி. ஜே. அவர்களே இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள ஒரு வியாபாரி கூறினார் 01. எல்லோரின் ஜனாஸாவை விரையில் எடுக்க சொல்லும் பி.ஜே, அவரின் உம்மாவின் ஜனாஸாவை மட்டும் ஒன்றரை நாட்கள் வைத்தது சரியா விளக்கம் தரவும். 02. மேலும் சுனாமி பணத்தையும் நீங்கள் சுருட்டியதாக உங்கள் மீது அபாண்டமாக பலி போடுகிறார்களே இவர் போன்றவர்களுக்கு விரிவான பதில் தரவும்
WASSALAM
இறந்தவரின் ஜனாஸாவை உடனே எடுக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. அதனால் நானும் அவ்வாறு சொல்லவில்லை. ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூல் இனைய தளத்தில் உள்ளது. பார்த்துக் கொள்ளவும். சுனாமி விஷயமாகவோ வேறு எந்தப் பண மோசடி சம்மந்தமாகவோ என் மீது எவரும் எந்தக் குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. அவ்வாறு உங்களிடம் கூறியவருக்கு முதுகெலும்பு இருந்தால் என் முன்னிலையில் கூறட்டும். அல்லது அதற்கான ஆதாரத்தை எழுதி அனுப்பட்டும். நானே இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறேன். சுனாமி கணக்கை முழுமையாக உணர்வில் வெளியிட்டுள்ளோம்.
28.09.2009. 01:45
