நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகர்களின் கேள்விகள் சிலவற்றை ஒரு இனிமை என்ற சகோதரர் நம்க்கு அனுப்பி பதில் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகலூம் அதற்கான பதில்களும் கீழே

அஸ்ஸலாமு அலைக்கும்,
அருண்ராஜ் என்பவர் செங்கொடியின் தளத்தில் சில கேள்விகளை கேட்டு பின்னூட்டமிட்டிருந்தார்.
அவைகள் கீழே,

//1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்கமுடியவில்லை!?
2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தை சொல்ல முடியவில்லை!?
3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகை படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?
4.இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளை படைத்தது யார்!?
5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!?
இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!//

என்று. இதற்கு நேரடி விவாதத்திகு அவரையும் அவரைச் சேர்ந்தவங்களையும் அழைத்து வரச் சொன்னதற்கு TNTJ தலைமையகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லி முகவரியையும் கொடுத்ததற்கு நான் எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை தனி ஒருவனாக வருகிறேன் என்று தன்னுடைய பெயரையும், மொபைல் நம்பர் 9994500540 யும் தந்து
//ஈரோட்டுக்கு வந்து போன் செய்தால் பொது இடத்தில் சந்திக்கலாம்!, அல்லது ஈரோட்டில் இருக்கும் உங்கள் ஜமாத்தில் கூட!

வீட்டில் தான் விவாதிக்க வேண்டும் என கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!என்று பதில் தந்துள்ளார். இது தங்கள் மேலான பார்வைக்கு.

நமது பதில்

நாத்திகர்கள் அனைவரின் கோளாறும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதாவது எதையும் அரை குறையாக புரிந்து கொள்வது தான் அந்தக் கோளாறு.

மேற்கண்ட கேள்விகள் அனைத்திலும் அது தான் தெரிகிறது.

இப்லீஸை அழிக்கவில்லை என்பதற்கும் அழிக்க இயலவில்லை என்பத்ற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை. நமக்கு இயலுமான் அனைத்தையும் நாம் செய்ய மாட்டோம். நமக்கு இயலுமான விஷயத்தில் நமக்கு எது விருப்பமோ அதைத் தான் செய்வோம். இப்லீஸை அல்லாஹ்வுக்கு அழிக்க முடியவில்லை என்று குர் ஆன் எந்த வசந்த்தில் கூறி இருக்கிறது என்பதற்கு அவரிடம் ஆதாரம் கேளுங்கள். நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகு. அதைத் தான் அரை குறை என்கிறோம்.

இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. ஒரே வேதப்புத்தகத்தில் என்னால் சொல்ல முடியாதத்தால் பல வேதங்களில் சொல்லி இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினால் தான் இப்படி கேட்க முடியும். இவர் ஐந்து கேள்வி கேட்டால் மக்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக் வாரம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?

இங்கேயும் அதே அறை குறை தான் வெளிப்படுகிறது. நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?

நாலாவது மற்றும் ஐந்தாவ்து கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்ல்வும். அதில் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லவும்.

கடவுள் படைக்கவில்லை என்று கூறும் இவர்க்ளும் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். ஒரு அணு வெடித்து இந்த உலகம் எப்படி உண்டானது என்று கூறுகிறார்கள். அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள். ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மேபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப் பூர்வமானது.

எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நமது தலைமையைச் சந்தித்து அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.

22.01.2010. 17:38




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
92 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி