கோவை ஜாஃபரை நீக்கியது ஏன்?
கோவை ஜாஃபரை நீக்கியது ஏன்?
பல தடவை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சில தடவை கண்டிக்கப்பட்டும், சில தடவை தற்காலிக நீக்கம் செய்தும் இதன் பிறகும் திருந்தாததால் இறுதியாக அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்ட பாக்கர், கோவை ஜாஃபர் நீக்கம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.
இவர் நீக்கப்பட்டதற்காக இவரால் வாய் திறக்க முடியவில்லை.
நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் ஹாமீம் இப்ராஹீமும் அல்தாஃபியும் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. பணமோசடி குறித்த குற்றச்சாட்டுக்கும் பதில் இல்லை.
நேரடி விவாதத்துக்கு விட்ட அழைப்புக்கும் பதில் இல்லை. விபரம் அறிய பார்க்க மேலும் பார்க்க
மானமும் ரோஷமும் உள்ளவராக இருந்தால் இதன் பிறகு வெளியில் தலை காட்டி இருக்கக் கூடாது.
தன்னை நீக்கியது தவறு என்று நிரூபிக்க வக்கில்லாத பாக்கர் கோவை ஜாஃபர் பற்றி கேள்வி எழுப்புகிறார்.
பொதுவாக ஒவ்வொரு இயக்கத்துக்கும் சில விதி முறைகள் இருக்கும். அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு தான் ஒருவர் அந்த இயக்கத்தில் இருக்கிறார். அந்த விதி முறைகள் மீறப்படும் போது அந்த இயக்கம் தனது சட்டதிட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும்.
இதை அந்த இயக்கத்தில் இல்லாதவர்கள் கேட்க உரிமை இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் தான் வகுக்கும். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களோ மற்றவர்களோ அதன் கொள்கையை வகுக்க முடியாது,.
இந்த அடிப்படை கூட தெரியாமல் இவர் கேள்வி கேட்கிறார்.
பாலியல் மற்றும் பண மோசடிக்காக நீக்கப்பட்ட் ஒவ்வொருவருக்கும் போன் போட்டு தனது இயக்கத்தில் சேர்க்கும் பாக்கர் இப்படி கேட்கிறார். (தேவைப்பட்டால் அவருடன் உள்ள ஒவ்வொருவரின் கொள்கைப் பிடிப்பு நேர்மை பணமோசடி சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை ஆதாரத்துடன் வெளியிடுவோம்.)
கேவலமானவர்கள் சங்கமிக்கும் இயக்கம் நடத்தி வரும் பாக்கர் இது பற்றி கேள்வி கேட்க முடியாது.
சம்மந்தப்பட்ட கோவை ஜாஃபர் இது குறித்து ஜமாஅத்தின் மீது ஆட்சேபம் தெரிவித்தால் தான் அவருக்கு விளக்கம் தரப்படும். அல்லது அவர் மக்கள் மத்தியில் பரப்பினால அப்போது மக்கள் மத்தியில் காரணம் சொல்லப்படும்.
மக்கள் பிரச்சனையாக ஆகாத ஒன்றை இவர் கூறுகிறார் என்பதற்காக மக்கள் பிரச்சனையாக ஜமாஅத் ஆக்காது
யார் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான காரணத்தை மூடலாகத் தான் ஜமாஅத் சொல்லி வந்துள்ளது. தனி நபர்களை இழிவுபடுத்தும் செயலை ஆரம்பித்து வைக்காது. அவர்கள் தனக்கு அநீதி இழைக்கப்படதாக பிரச்சாரம் செய்தால் மட்டுமே காரணங்கள் மக்கள் மத்தியில் வைக்கப்படும்.
இப்படித்தான் கடந்த காலங்களிலும் செயல்பட்டு வந்தது
16.04.2010. 10:53
