பாக்கர் யாதவ்

பாக்கர் யாதவ்

நெல்லையில் நேற்றைய தினம் நடந்த யாதவர்கள் மாநாட்டில் சிரப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாக்கர் யாதவ் அவர்கள் வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சிகள் இன்னும் கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லா வகையறாக்களுக்கு கிடைக்கவில்லை போலும். பாக்கரின் அனைத்து தீமைகளுக்கும் முட்டுக் கொடுத்து நியாயப்படுத்தும் இவர்கள் ஏன் இன்னும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை பரப்பாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.

நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்காத சமுதாயமடா இது என மேடைகளில் அக்ரோஷமாய் வீர வசனம் பேசிய அதே பாக்கர் தான் பாக்கர் யாதவாக மாறி நிற்கிறார்.

 கொள்கைச் சகோதரர்கள் சிலர் இப்படியும் ஒருவர் கேவலமாக நடக்க முடியுமா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நமக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

பாலியல் குற்றச்சாடு நிரூபனமானதற்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதன் பிறகு அதை உணர்ந்து நட்ந்து கொள்ள வேணும். மானம் உள்ள மக்கள் இப்படித்தான் நடப்பார்கள். ஆனால் பாக்கருக்கு அது கடுகளவும் இல்லை.

அன்னிய இளம் பெண்ணுடன் நள்ளிரவில் சொகுசு பேருந்தில் 14 மனி நேரம் பயணம் செய்வது குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறியவர் பாக்கர். அதை கூறியது மட்டுமின்றி அதை வீடியோவாகவும் வெளியிட்டவர் பாக்கர்.

பார்க்க வீடியோ
பார்க்க வீடியோ

அதாவது இனி மேலும் நான் இப்படித் தான் நடப்பேன். அன்னியப் பெண்களுடன் நான் தனித்து அருகருகே அமர்ந்து பயணம் செய்வேன். நான் மட்டுமின்றி என்னுடன் இருப்பவர்களும் அப்படித் தான் நடப்பார்கள் என்பது இதன் கருத்து.

நாங்கள் கன்னியமானவர்கள். எங்கள் குடும்பத்துப் பெண்கள் கண்ணியமானவர்கள். உன்னுடன் சேர்ந்தால் எங்களையும் எங்கள் குடும்பப் பெண்களையும் மக்கள் தப்பாக நினைப்பார்கள்; கேலி செய்வார்கள் என்று கூறி கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லாக்கள் கூறி இருந்தால் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதர்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதையும் நியாயப்படுத்தி மெயில் போடுபவர்கள் இருக்கும் வரை இது போல் பாக்கர் யாதவ் நடக்காவிட்டால் தான் ஆச்சரியம்.

பள்ளிவாசல் வகைக்காக 50 ஆயிரத்தை நஸ்ருத்தீனிடம் வாங்கி விட்டு அதை ஏப்பம் விட்டார் என பாதிக்கப்பட்ட நஸ்ருத்தீன் குமுறினார். நியாயம் கேட்டார். அப்போதாவது யாராவது தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்கி இருந்தால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமாவது அவருக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். அப்படியும் மேற்படி சீடர்கள் செய்யவில்லை.

இன்னும் என்னென்ன செய்தாலும் நமக்கு முட்டுக் கொடுக்க நம்மைப் போன்ற கேடு கெட்டவர்கள் தயாராக காத்திருக்கிறார்கள் என்ற துணிச்சல் காரணமாக இப்படி அவரால் நடக்க முடிகிறது.

இந்து இயக்கத்தினரே முகம் சுளித்து பிரசுரம் வெளியிடும் அளவுக்கு  சமுதாயத்துக்கு அவமானத்துக்கு மேல் அவமானத்தி ஏற்படுத்தி வருகிறது இந்தக் கும்பல்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன் இந்துக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட ஜெராக்ஸ் பிரதியை சேட் அவர்கள் அனுபி வைத்துள்ளார். பார்க்க



 தேவ நாதன் சிலை திறப்பதற்காக ரிமோட்டை இயக்க பாக்கர் அருகில் நிற்கும் காட்சி வெளியான பின் பயங்கரமான விளக்கம் கொடுத்துள்ளனர். தேவ நாதனும் பாக்கரும் வாக்கி டாக்கியை வைத்து மேடையில் விளையாடிக் கொண்டிருக்கும் படத்தைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன என்று வெட்கமில்லாமல் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். 
தமிழக அதே நாளில் வெளியான இன்னொரு படத்தில் தமிழக் முதல்வரும் உயர் நீதிமன்ற நீதிபதியும் வாக்கி டாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி என்று இதயும் சொல்வார்களா?

26.04.2010. 17:17




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
118 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி