பாக்கர் பிரச்சனை என்ன

பாக்கர் பிரச்சனை என்ன

பாக்கர் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் காரணங்கள் அனைவருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. நீக்கப்பட்டவர்கள் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்தால் நாமும் அது போல் இருந்து விடலாம்.

ஆனால் அவர்கள் அவ்வாறு நடப்பதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளில் வெறுப்படைந்து தாமாக விலகிச் சென்று தனி இயக்கம் கண்டது போலவும், அவர்கள் மீது வீண் பழி சுமத்தி தவ்ஹீத் ஜமாஅத் அவர்களை நீக்கி விட்டது போலவும் ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

அது மட்டுமின்றி தவ்ஹீதின் பெயரால் மார்க்கத்துக்கு முரணான ஃபத்வாக்களும்  பாக்கர் கும்பலால் அளிக்கப்படுகின்றன. தமுமுகவினர் எப்படி முகமூடி அணிந்து பல அவதூறுகளைப் பரப்பினார்களோ அதே வழிமுறையை இவர்களும் கையாள்கிறார்கள்.  (இப்போது தமுமுகவினரின் இது போன்ற செயல்கள் பெருமளவு குறைந்துள்ளன)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவரான பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பாக்கர் மீது பொய்ப்பழி சுமத்தி விட்டார் என்று மின்னஞ்சல் மூலம் துணிந்து இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் நடந்தது என்ன என்பதை விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

பாக்கர் நீக்கப்பட்டது ஏன்? அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா? என்பதை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி விளக்கியுள்ளார். அதன் காரணமாகத் தான் அவரைப் பொய்யர் என்கின்றனர். யார் பொய்யர்கள் என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

பாகம்-1

பாகம்-2
Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ


பாக்கர் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் வந்தன. அவரை அம்பலப்படுத்தாமல் அவர் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று புதிய நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதை அறிந்த ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் பாக்கர் மீது பகிரங்கமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க நான் தயார் என்றும் தலைமைக்குக் கடிதம் எழுதினார். இதுவே பாக்கர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்தது. இதன் பின்னர் மண்ணடியில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பகிரங்க சவால் விட்டு ஹாமீம் இப்ராஹீம் உரையாற்றினார். அந்த உரையிலும் போதிய விபரங்கள் உள்ளன. அந்த உரையைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

பாகம்-1

பாகம்-2
 

09.11.2009. 10:02

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்

பாக்கர் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்த விஷயம் மின்னஞ்சல் வழியாக மீண்டும் விவாதிக்கப் படுகிறது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் அது குறித்து விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

தொடர்ந்து படிக்க 09.11.2009. 01:07

கண்காணிப்பது உங்கள் வேலையா

கண்காணிப்பது உங்கள் வேலையா
இஸ்லாத்தை தழுவியவர்களை  வரவேற்பது நமது தலையாய கடமைஅப்படி நாம் வரவேற்பதை  விட்டு, இவர் உண்மையிலேயே இஸ்லாத்தை ஏற்று இருக்கிறாரா? என்று நமது ஜமாஅத் கண்காணிக்கிறது. என்று சில தனி நபர் ஜமாத்துக்குள் விமர்சனம் செய்வதோடு, இதற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் எத்தனையோ மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தில் இணைத்து இருக்கிறார்கள்! அவர்களை எல்லாம் கண்கானித்துத் தான் இஸ்லாத்தில் சேர்த்தார்களாஎன்று சில நியாயமான கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு எனக்கு சரியான விளக்கத்தை அளிக்கவும்.

தொடர்ந்து படிக்க 16.04.2010. 09:42

பீஜே அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில்

பீஜேக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் அதிருப்தியா
 ASSALAAMU ALLAIKUM, ANNAN PJ AVARGALE BAAKER VIDAYATHIL NEENGAL IPOLUTHUM NADUNILAI VAKIPPATHAGAVUM, MELUM BAAKER ENTHA THAPPUM SEIYAVILLAI ENDRUM, M.I.SULAOMAN.AND ALTHAFI PONDROUR BAAKER MEEDU IRUNTHA PORAAMAI THAN BAAKERAI VELIYETRINAARGAL. MELUM UNGALUKUM THATPOTHAYA JAMATH(TNTJ) NIRUVAAGIGALUKUM IDAIYE PANIPPOR NADAI PERUGIRATHAM ATHANAAL THAN NEENGAL JUMMA NATHTHUWATILLAI AND RAMALAN SOTPOLIVU KOODA THALAMAI ALUVAGATHIL NADATHTHAAMAL VERU ORU IDATHIL IRUNDHU NADATHUKIREERGAL ENDRU ILLANGAIYIL IRUKKUM BAKERIN NANBARGAL KOORUGIRAARGAL.!!!!! UNMAIYAAA ?

பாக்கர் மீது தலைமை எடுத்த எல்லா நடவடிக்கையிலும் நான் உடன்படுகிறேன்.

தொடர்ந்து படிக்க 28.09.2009. 04:05

தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?

முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படும் போது தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?

மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இடச் சென்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களூம் சிறையில் அடைப்பு! அனைத்து முஸ்லிம்கள் கொந்தளிப்பு! தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்த்தது! என்று பலவாறாக மின்னஞ்சல்கள் நேற்று முழுவதும் பரப்பப்பட்டன.

தொடர்ந்து படிக்க 08.12.2009. 00:32

கண்காட்சியும் பொருட்காட்சியும்

கண்காட்சியும் பொருட்காட்சியும்

பீஸ் கண்காட்சிக்குப் போகக் கூடாது என்று கூறி விட்டு பீஜே குடும்பத்துடன் தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்குப் போனது கண் கொள்ளாக் காட்சி என்று எழுதி சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

அந்த விமர்சனம் இது தான்

தொடர்ந்து படிக்க 22.01.2010. 00:23

ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா?

ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா?
போர்ஜரிப் பேர்வழியின் கேள்வி.
மதுரை ஆதீனத்தின் கடிதத்தை தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளம் வெளியிட்டது. அதன் எழுத்துக்களில் முதல் பகுதி ஒரு வகையான எழுத்திலும் இறுதிப் பகுதி வேறு வகையான எழுத்திலும் இருப்பதாலும் அதன் இறுதியில் ஆதீனத்தின் கையெழுத்து இல்லாததாலும் இதில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதாவது வருத்தம் தெரிவிக்கும் பகுதி நாமாக எழுதிக் கொண்டது போல் அந்தச் சந்தேகம் அமைந்துள்ளது.

தொடர்ந்து படிக்க 04.01.2010. 20:15

கீழைப் பொய்யரின் கிறுக்கு வாதம்

கீழைப் பொய்யரின் கிறுக்கு வாதம்

பொய்யன் டீஜே என்று செல்லப் பெயர் பெற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நம்மைப் பொய்யன் என்று சித்தரிப்பது வேடிக்கையாக உள்ளது.

தொடர்ந்து படிக்க 10.12.2009. 15:24

பாக்கர் யாதவ்

பாக்கர் யாதவ்

நெல்லையில் நேற்றைய தினம் நடந்த யாதவர்கள் மாநாட்டில் சிரப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாக்கர் யாதவ் அவர்கள் வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சிகள் இன்னும் கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லா வகையறாக்களுக்கு கிடைக்கவில்லை போலும். பாக்கரின் அனைத்து தீமைகளுக்கும் முட்டுக் கொடுத்து நியாயப்படுத்தும் இவர்கள் ஏன் இன்னும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை பரப்பாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.

நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்காத சமுதாயமடா இது என மேடைகளில் அக்ரோஷமாய் வீர வசனம் பேசிய அதே பாக்கர் தான் பாக்கர் யாதவாக மாறி நிற்கிறார்.

 கொள்கைச் சகோதரர்கள் சிலர் இப்படியும் ஒருவர் கேவலமாக நடக்க முடியுமா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நமக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

பாலியல் குற்றச்சாடு நிரூபனமானதற்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதன் பிறகு அதை உணர்ந்து நட்ந்து கொள்ள வேணும். மானம் உள்ள மக்கள் இப்படித்தான் நடப்பார்கள். ஆனால் பாக்கருக்கு அது கடுகளவும் இல்லை.

அன்னிய இளம் பெண்ணுடன் நள்ளிரவில் சொகுசு பேருந்தில் 14 மனி நேரம் பயணம் செய்வது குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறு இல்லை என்று கூறியவர் பாக்கர். அதை கூறியது மட்டுமின்றி அதை வீடியோவாகவும் வெளியிட்டவர் பாக்கர்.

பார்க்க வீடியோ
பார்க்க வீடியோ

அதாவது இனி மேலும் நான் இப்படித் தான் நடப்பேன். அன்னியப் பெண்களுடன் நான் தனித்து அருகருகே அமர்ந்து பயணம் செய்வேன். நான் மட்டுமின்றி என்னுடன் இருப்பவர்களும் அப்படித் தான் நடப்பார்கள் என்பது இதன் கருத்து.

நாங்கள் கன்னியமானவர்கள். எங்கள் குடும்பத்துப் பெண்கள் கண்ணியமானவர்கள். உன்னுடன் சேர்ந்தால் எங்களையும் எங்கள் குடும்பப் பெண்களையும் மக்கள் தப்பாக நினைப்பார்கள்; கேலி செய்வார்கள் என்று கூறி கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லாக்கள் கூறி இருந்தால் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதர்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதையும் நியாயப்படுத்தி மெயில் போடுபவர்கள் இருக்கும் வரை இது போல் பாக்கர் யாதவ் நடக்காவிட்டால் தான் ஆச்சரியம்.

பள்ளிவாசல் வகைக்காக 50 ஆயிரத்தை நஸ்ருத்தீனிடம் வாங்கி விட்டு அதை ஏப்பம் விட்டார் என பாதிக்கப்பட்ட நஸ்ருத்தீன் குமுறினார். நியாயம் கேட்டார். அப்போதாவது யாராவது தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்கி இருந்தால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமாவது அவருக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். அப்படியும் மேற்படி சீடர்கள் செய்யவில்லை.

இன்னும் என்னென்ன செய்தாலும் நமக்கு முட்டுக் கொடுக்க நம்மைப் போன்ற கேடு கெட்டவர்கள் தயாராக காத்திருக்கிறார்கள் என்ற துணிச்சல் காரணமாக இப்படி அவரால் நடக்க முடிகிறது.

இந்து இயக்கத்தினரே முகம் சுளித்து பிரசுரம் வெளியிடும் அளவுக்கு  சமுதாயத்துக்கு அவமானத்துக்கு மேல் அவமானத்தி ஏற்படுத்தி வருகிறது இந்தக் கும்பல்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன் இந்துக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட ஜெராக்ஸ் பிரதியை சேட் அவர்கள் அனுபி வைத்துள்ளார். பார்க்க



 தேவ நாதன் சிலை திறப்பதற்காக ரிமோட்டை இயக்க பாக்கர் அருகில் நிற்கும் காட்சி வெளியான பின் பயங்கரமான விளக்கம் கொடுத்துள்ளனர். தேவ நாதனும் பாக்கரும் வாக்கி டாக்கியை வைத்து மேடையில் விளையாடிக் கொண்டிருக்கும் படத்தைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன என்று வெட்கமில்லாமல் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். 
தமிழக அதே நாளில் வெளியான இன்னொரு படத்தில் தமிழக் முதல்வரும் உயர் நீதிமன்ற நீதிபதியும் வாக்கி டாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி என்று இதயும் சொல்வார்களா?

26.04.2010. 17:17

கோவை ஜாஃபரை நீக்கியது ஏன்?

கோவை ஜாஃபரை நீக்கியது ஏன்?

பல தடவை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சில தடவை கண்டிக்கப்பட்டும், சில தடவை தற்காலிக நீக்கம் செய்தும் இதன் பிறகும் திருந்தாததால் இறுதியாக அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்ட பாக்கர், கோவை ஜாஃபர் நீக்கம் பற்றி கேள்வி எழுப்புகிறார். 
இவர் நீக்கப்பட்டதற்காக இவரால் வாய் திறக்க முடியவில்லை.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் ஹாமீம் இப்ராஹீமும் அல்தாஃபியும் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. பணமோசடி குறித்த குற்றச்சாட்டுக்கும் பதில் இல்லை.
நேரடி விவாதத்துக்கு விட்ட அழைப்புக்கும் பதில் இல்லை. விபரம் அறிய
பார்க்க மேலும் பார்க்க

 

மானமும் ரோஷமும் உள்ளவராக இருந்தால் இதன் பிறகு வெளியில் தலை காட்டி இருக்கக் கூடாது.

தன்னை நீக்கியது தவறு என்று நிரூபிக்க வக்கில்லாத பாக்கர் கோவை ஜாஃபர் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

பொதுவாக ஒவ்வொரு இயக்கத்துக்கும் சில விதி முறைகள் இருக்கும். அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு தான் ஒருவர் அந்த இயக்கத்தில் இருக்கிறார். அந்த விதி முறைகள் மீறப்படும் போது அந்த இயக்கம் தனது சட்டதிட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும்.

இதை அந்த இயக்கத்தில் இல்லாதவர்கள் கேட்க உரிமை இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் தான் வகுக்கும். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களோ மற்றவர்களோ அதன் கொள்கையை வகுக்க முடியாது,.

இந்த அடிப்படை கூட தெரியாமல் இவர் கேள்வி கேட்கிறார்.

பாலியல் மற்றும் பண மோசடிக்காக நீக்கப்பட்ட் ஒவ்வொருவருக்கும் போன் போட்டு தனது இயக்கத்தில் சேர்க்கும் பாக்கர் இப்படி கேட்கிறார். (தேவைப்பட்டால் அவருடன் உள்ள ஒவ்வொருவரின் கொள்கைப் பிடிப்பு நேர்மை பணமோசடி சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை ஆதாரத்துடன் வெளியிடுவோம்.)

கேவலமானவர்கள் சங்கமிக்கும் இயக்கம் நடத்தி வரும் பாக்கர் இது பற்றி கேள்வி கேட்க முடியாது.

சம்மந்தப்பட்ட கோவை ஜாஃபர் இது குறித்து ஜமாஅத்தின் மீது ஆட்சேபம் தெரிவித்தால் தான் அவருக்கு விளக்கம் தரப்படும். அல்லது அவர் மக்கள் மத்தியில் பரப்பினால அப்போது மக்கள் மத்தியில் காரணம் சொல்லப்படும்.

மக்கள் பிரச்சனையாக ஆகாத ஒன்றை இவர் கூறுகிறார் என்பதற்காக மக்கள் பிரச்சனையாக ஜமாஅத் ஆக்காது

யார் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான காரணத்தை மூடலாகத் தான் ஜமாஅத் சொல்லி வந்துள்ளது. தனி நபர்களை இழிவுபடுத்தும் செயலை ஆரம்பித்து வைக்காது. அவர்கள் தனக்கு அநீதி இழைக்கப்படதாக பிரச்சாரம் செய்தால் மட்டுமே காரணங்கள் மக்கள் மத்தியில் வைக்கப்படும்.

இப்படித்தான் கடந்த காலங்களிலும் செயல்பட்டு வந்தது . இது குறித்து கோவை ஜாஃபர் தான் கேள்வி கேட்க முடியும். ஜமாஅத்தில் இருந்து பொதுக்குழுவாலும் செய்றகுழுவாலும் நீக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்க முடியாது.

16.04.2010. 10:53




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி