பட்டப் பெயர் சூட்டலாமா?
கேள்விஅஸ்ஸலாமு அலைக்கும்
பட்டப் பெயர் கொண்டு ஆழைக்காதீர்கள் என்று மார்க்கம் சொல்லும் போது கீழைப் பொய்யர் என்று ஒருவரை நீங்கள் குறிப்பிடுவது சரியானதா?
ஷாஹல் இஸ்மாயீல்
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 49:11,12)
ஒருவருக்கு உடல் ரீதியில் குறை ஏதும் இருந்தால் அந்தக் குறையை சுட்டிக்காட்டி பட்டப்பெயர் வைப்பது கூடாது. உதாரணமாக நொண்டி குருடு போன்ற பெயர்களை கூறுவது இந்த வசனத்தின் அடிப்படையில் தவறாகும். இதேப் போன்று ஒருவரிடம் இல்லாத தன்மையை அவருக்கு பட்டப்பெயராக சூட்டி அவரை நோவினைப்படுத்துவதும் தவறாகும். ஒருவர் தவறுசெய்த பிறகு திருந்தி வாழும்போது அவர் முன்பு செய்த தவறை குத்திக்காட்டும் வகையில் அவருக்குப் பட்டப்பெயர் வைப்பதும் தவறாகும்.
ஆனால் ஒருவன் நிறைய பொய்களையும் அவதூறுகளையும் பரப்பித்திரிகின்றான். இதிலே முழு மூச்சாக செயல்படுகிறான். நாம் சுட்டிக்காட்டிய பிறகும் இதிலிருந்து திருந்த மறுக்கிறான். பொய்யை தனது கொள்கையாகக் கொண்டு குழப்பம் செய்யும் இதுபோன்ற நபர்களை பொய்யர் என்று கூறுவது தவறல்ல. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
3621 فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَأَهَمَّنِي شَأْنُهُمَا فَأُوحِيَ إِلَيَّ فِي الْمَنَامِ أَنْ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي فَكَانَ أَحَدُهُمَا الْعَنْسِيَّ وَالْآخَرُ مُسَيْلِمَةَ الْكَذَّابَ صَاحِبَ الْيَمَامَةِ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் இரு கைகலிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ''அதை ஊதி விடுவீராக!'' என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய் விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கின்ற (தம்மை இறைத் தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (3621)
7131 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بُعِثَ نَبِيٌّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ الْأَعْوَرَ الْكَذَّابَ أَلَا إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ فِيهِ أَبُو هُرَيْرَةَ وَابْنُ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறைவனால் அனுப்பிவைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை, மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (7131)
8 و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَرْمَلَةَ بْنِ عِمْرَانَ التُّجِيبِيُّ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي أَبُو شُرَيْحٍ أَنَّهُ سَمِعَ شَرَاحِيلَ بْنَ يَزِيدَ يَقُولُ أَخْبَرَنِي مُسْلِمُ بْنُ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ مِنْ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُضِلُّونَكُمْ وَلَا يَفْتِنُونَكُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.
முஸ்லிம் (14)
நாம் யாரையும் அநியாயமாக விமர்சனம் செய்வதில்லை. நம்மைப் பற்றியும் நமது ஜமாஅத்தைப் பற்றியும் அவதூறுகளை கூறித்திரிபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்நிலையில் அவர்கள் வரம்பு மீறினால் நாம் வரம்பு மீறுவது தவறல்ல.
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنْ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا(148)4
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 148)
புனித மாதத்துக்கு (நிகர்) புனித மாதமே! புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் (2 : 194)
17.08.2010. 17:05
இனி ஆய்வுகள் மட்டுமே
அன்பிற்குரிய கொள்கைச் சகோதரர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக ஏகத்துவக் கொள்கையை நாம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தியவைகளை விட தெளிவுபடுத்த வேண்டியவை அதிகமாக உள்ளன.
சமீபத்தில் நடந்த விவாதத்துக்குப் பின் இது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இறைவனுக்கு உருவம் உண்டு என்ற விஷயம் இந்த விவாதத்துக்கு முன்னால் அதிகமான தவ்ஹீத் சகோதரர்களுக்குத் தெரியாமலே இருந்துள்ளது என்பதை இப்போது அறிய முடிகிறது.
இந்த விஷயம் மேலோட்டமாகத் தான் தெரியும்; இவ்வளவு ஆதாரங்களுடன் எங்களுக்குத் தெரியாது என்று சிலரும், இறைவனுக்கு உருவம் இருப்பதே இப்போது தான் தெரிந்தது என்று சிலரும், இறைவனுக்கு உருவம் இல்லை என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்று கருதியிருந்தோம்; இப்போது தான் தெளிவு கிடைத்தது என்று சிலரும் என்னிடம் கூறினார்கள்.
முக்கியமான விஷயங்கள் கூட இவ்வளவு காலம் சென்ற பின்பும் தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியானது.
இதற்குக் காரணம் நூல் வடிவில் மக்களுக்குப் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தான். எனவே அரசியல், சமுதாயப் பிரச்சனைகள், இயக்க நடவடிக்கைகள் ஆகிய அனைத்தில் இருந்தும் ஆறு மாத காலம் முழுமையாக ஒதுங்கி முற்றிலும் மார்க்கம் சம்மந்தமான ஆய்வில் ஈடுபட்டு அனைத்தையும் நூல் வடிவில் மக்கள் மத்தியில் வைப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
எனவே எந்தப் பிரச்சனைக்காகவும் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்.
எந்தப் பிரச்சனையையும் ஆறு மாத காலத்துக்கு என் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாக்களித்த சில நிகழ்ச்சிகள் மட்டும் உள்ளன. அவற்றை வாக்களித்த படி நிறைவேற்றுவேன். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்.
26.07.2010. 19:27
ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்
ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்
Play Without Downloading
Download To your computer
19.07.2010. 23:04
எடுபடாத வாதங்கள்
எடுபடாத வாதங்கள்
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஜூலை 4 மாநாடு அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
மாநாடு குறித்த முழு விபரங்களை நிர்வாகிகள் அறிவிப்பார்கள். இது குறித்த சில வாதங்களுக்கு மட்டும் நான் விளக்கம் அளிப்பதற்காக இந்த மடலை எழுதுகிறேன்.
இந்த மாநாட்டுக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல விதமான தந்திரங்களைச் சிலர் கையாண்ட போதும் அவை மக்களிடம் எடுபடவில்லை.
இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் பல மாநாடுகளை நடத்தி விட்டோம். எனவே மக்கள் செல்ல வேண்டாம் என்று பாப்புலர் பிரண்ட் இயக்கத்தினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். இந்தப் பிரச்சாரத்தை மக்கள் அடியோடு நிராகரித்து விட்டனர்.
இட ஒதுக்கீடு ஹராம் என்று ஷம்சுத்தீன் காசிமி செய்த பிரச்சாரமும் எடுபடவில்லை. இவர் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக ஜெயலலிதாவைச் சந்தித்த குழுவில் இடம் பெற்றவர் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதை எதிர்க்கிறார் என்று மக்கள் கருதியதால் இவரது பிரச்சாரம் கடுகளவு கூட எடுபடவில்லை. இவர் இமாமாக இருக்கும் பள்ளிவாசலின் நிர்வாகி மெஜஸ்டிக் கரீம் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளிடம் 5000 ரூபாய் மாநாட்டுக்காக நன்கொடை கொடுத்தார் என்றால் இவரது பிரச்சாரத்துக்கு உள்ள மதிப்பை எடை போட்டுக் கொள்ளலாம்.
ஜாக் இயக்கமும் மாநாட்டுக்கு எதிராகச் சில வாதங்களை முன் வைத்து ஜும்மா உரைகளில் மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தது.
நாம் உயர்ந்த சமுதாயம். ஆனால் இவர்கள் ஒடுக்கப்பட்டோர் என்று கூறுகின்றனர் எனவே மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்பது இவர்கள் கண்டு பிடித்த காரணம்.
சிறந்த சமுதாயம் என்பதும் ஒடுக்கப்பட்டோர் என்பதும் முரண்பாடானது அல்ல. சிறந்த சமுதாயம் தான் உலகில் ஒடுக்கப்படும். நபிமார்கள் ஒடுக்கப்பட்டதால் அவர்கள் சிறந்தவர்கள் இல்லை என்று ஆகாது என்ற வித்தியாசம் மக்களுக்குத் தெரிந்ததால் இவர்களின் பிரச்சாரம் எடுபடவில்லை. மேலும் இவர்களே தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடங்களில் சேர்க்கும் போது பிற்பட்டோர் என்று சான்றிதழ் பெறுவதால் இவர்கள் காழ்ப்புணர்ச்சியில் தான் கூறுகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டனர். இதனால் இதுவும் எடுபடவில்லை.
என்னை எதிர்க்க வேண்டும் என்பதற்காக காதியானிகளை முஸ்லிம்கள் என்று கூறும் அளவுக்கு மனநோய் முற்றிய அபூ அப்துல்லா என்பவரின் பிரச்சாரமும் வழக்கம் போல் எடுபடவில்லை.
அடுத்ததாக மிகவும் கேவலமான செயலில் ஈடுப்பட்டவார்கள் பொய்யன் பாக்கரின் கும்பல்.
பொய்யன் பாக்கர் என்று நான் எனது சொந்த இணைய தளத்தில் நேருக்கு நேராகத் தான் குறிப்பிட்டுள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பொய் சொல்வதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்பதால் இந்தப் பட்டம் இவருக்குப் பொருத்தமானது தான். தன் பெயரைப் பயன்படுத்தி நேருக்கு நேர் குற்றம் சொல்ல வக்கில்லாமல் காசுக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட ஒருவன் மூலம் அவதூறு பரப்பும் பொய்யன் பாக்கர் போல் யாருடைய முதுகுக்குப் பின்னாலும் நான் ஒளிந்து கொண்டு இப்படி கூறவில்லை.
பொய்யன் பாக்கர் மாநாட்டுக்கு எதிராக எழுப்பிய பயங்கரமான கேள்வி பெண்கள் மாநாட்டுக்குச் செல்லலாமா? என்பது தான். இதற்கு பல முறை ஆதாரத்துடன் பதில் சொல்லப்பட்டு விட்டது.
அன்னியப் பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்யலாம் என்று பத்வா கொடுக்கும் கூட்டம் இப்படிக் கூறுவதை மக்கள் பைத்தியக்காரனின் உளறல் என்றே எடுத்துக் கொண்டனர். மேலும் இதே பொய்யன் பாக்கர் பெண்களைக் கேடயமாக்கிக் கொண்டு டிசம்பர் ஆறில் நடத்திய போராட்டமும் மக்களுக்கு மறந்திடவில்லை. இது தவிர பொய்யன் பாக்கர் நீக்கப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாநாடுகளுக்கும் பெண்கள் அழைக்கப்பட்டதும் மக்களுக்குத் தெரிந்ததால் இந்த வாதம் எடுபடவில்லை.
அதிராம்பட்டிணத்தில் இந்த வாதத்தை எடுத்து வைத்து மாநாட்டுக்குப் பெண்கள் போக வேண்டாம் என்று பிரச்சாரம் செய்த போது பொது மக்களே மேடையில் ஏறி பொம்பளப் பொறுக்கி பாக்கர் பெண்கள் பற்றி பேசுகிறாயா என்று மைக் பிடித்து கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த வாதம் பைத்தியக்காரத் தனமானதாக மக்களால் கருதப்பட்டது.
தேர்தல் நெருங்குவதால் தான் இந்த மாநாடு இப்போது நடத்தப்படுகிறது என்ற வாதமும் பொய்யன் கூட்டத்தால் பரப்பப்பட்டது. எந்தக் கோரிக்கையை எடுத்து வைப்பதாக இருந்தாலும் அதற்குரிய நேரம் பார்த்துத் தான் எடுத்து வைக்க வேண்டும். ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் தேர்தல் நெருங்கும் போது தான் கோரிக்கைகள் மதிக்கப்படும் என்பதை மக்கள் விளங்கி வைத்திருந்ததால் இந்த வாதம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் பதவிகளைப் பெறாது; தேர்தலில் நிற்காது என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளும் விளங்கி வைத்துள்ளதால் இது போன்ற வாதம் எந்தக் காலத்திலும் எடுபட்டதில்லை.
தீவுத்திடலின் நீள அகலம் குறித்தும் கேள்விகளை எழுப்பி பொய் சொல்லி அழைப்பதால் போகாதீர்கள் என்றும் பொய்யன் பாக்கர் கும்பல் பரப்பியது. ஷம்சுத்தீன் காசிமியும் இந்த வாதத்தை எடுத்து வைத்தார்.
பொய்யனைத் தவிர மற்றவர்கள் இதை எழுப்பினால் இந்த வாதம் மக்களால் கவனிக்கப்பட்டிருக்கலாம். பொய்யன் பாக்கர் கூறுயதால் இதுவும் எடுபடவில்லை. ஏனெனில் தீவுத்திடலை விட பல மடங்கு குறைவான இடம் கொண்ட கும்பகோனத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக இதே பொய்யன் பாக்கர் அடித்தொண்டையில் கூறியது மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை.
மேலும் தீவுத்திடலை விடப் பல மடங்கு சிறிய இடம் கொண்ட வல்லத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக பொய்யன் பாக்கர் கத்தியதும் மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை.
இவர்கள் இப்போது எடுத்துக் காட்டும் நீள அகலக் கணக்குகள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு என்பது ஒருவருக்கும் தெரியாததல்ல.
இன்னொரு காரனத்தினாலும் இந்த வாதம் எடுபடாமல் போனது.
மிகைப்படுத்திக் கூறுதல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் போர்க்களத்தில் மிகைப்படுத்திக் கூற அனுமதி உண்டு. எதிரி நாட்டுடன் யுத்தம் செய்யும் போது நம்முடையை படையில் ஒரு லட்சம் பேர் இருந்தால் பல லட்சங்கள் இருப்பதாகக் கூறலாம். அதுவே எதிரிகளுக்குப் பாதி அச்சத்தை ஏற்படுத்தி விடும். படை எண்ணிக்கை ஆயுத பலம் பற்றி பேசும் போது இத்தகைய வழிமுறையைத் தான் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். மார்க்கமும் இதை அனுமதிக்கிறது.
நியாயத்துக்காக அரசை எதிர்த்துப் போராடுவதும் ஜிஹாத் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.
அரசாங்கம் தொடர்ந்து முஸ்லிம்களைப் புறக்கணித்து வரும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் போராட்டங்களில் அனைத்து இயக்கத்தினரும் எண்ணிக்கை விஷயத்தில் மிகைப்படுத்தியே கூறுவார்கள். கூறியுள்ளனர். வந்த மக்களின் தலையை எண்ணி எந்த இயக்கத்தினரும் கூறுவது கிடையாது. பொய்யன் பாக்கர் இதில் அனைவரையும் மிஞ்சியவர் என்பது மக்களுக்குத் தெரியும்.
இந்த விஷயத்தில் திடலின் நீள அகலத்தை அளப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்து சமுதாயத்துக்குத் துரோகம் செய்தவர்களே.
ஆனால் பத்து பேர் கூடும் போது ஒரு லட்சம் என்று பொய்யன் பாக்கர் போல் ஓவராக மிகைப்படுத்தினால் அது கேலிக்கூத்தாகி விடும். ஐநூறு பேர் இருந்தால் அது மக்கள் பார்வையில் ஆயிரமாக மதிப்பிடப்படுவதால் ஆயிரம் என்று கூறி அதனால் சமுதாயத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றால் அந்த மிகைப்படுத்துதல் போர் என்ற வகையில் அனுமதிக்கப்பட்டதே.
மாநாடு நடப்பதற்கு முன் நம்முடைய எதிர்பார்ப்பைச் சொல்வது பாரதூரமானது அல்ல. நடந்து முடிந்த ஒன்றை நம்ப முடியாத அளவுக்கு மிகைப்படுத்துவது தான் பாரதூரமானது. டிசம்பர் ஆறில் ஆயிரக்கணக்கான மக்கள் கைது என்று பாக்கர் புளுகியது போல் தவ்ஹீத் ஜமாஅத் புளுகியதில்லை.
இனி மேல் யார் நடத்தும் போராட்டமானாலும் அதில் கலந்து கொண்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பி கோரிக்கையை வென்றெடுப்பதற்கு முட்டுக்கட்டை போடும் வழக்கத்தை பொய்யன் பாக்கர் கும்பல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இன்னொரு காரணத்தினாலும் பொய்யன் பாக்கரின் பிரச்சாரம் எடுபடாமல் போனது.
தீவுத்திடலின் கொள்ளளவை மட்டும் கருத்தில் கொண்டு மாநாடு நடத்தப்படவில்லை. தீவுத்திடலுக்குள் மக்கள் கொள்ளாமல் எந்த அளவுக்கு பிதுங்கி வெளியேயும் நிரம்பி வழிகிறதோ அந்த அளவுக்கு கோரிக்கை வலுப்பெறும் என்ற அடிப்படையில் தான் இவ்வாறு அழைப்பு விடப்பட்டது. தீவுத்திடலுக்குள் மக்கள் நிரம்பிய பின் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள உள்ள நான்கு வழிச் சாலை முழுவதும் மக்கள் அடர்த்தியாக நின்றனர். அது மட்டுமின்றி நெருக்கமாக இல்லாமல் கடற்கரை வரை மக்கள் கூட்டம் இருந்தது. இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் நாம் மதிப்பிட்டோம்.
ஆனால் அதிகாரிகள் எவ்வளவு பேர் வருவார்கள் என்று கேட்டால் பதினைந்தாயிரம் பேர் என்று தான் கூறினோம்.
பேரணி முடிந்த பின் பதினந்தாயிரம் எனக் கூறி ஆறு லட்சம் பேரை அழைத்து வந்து விட்டீர்கள். இனி மேல் சென்னைக்குள் உங்கள் ஜமாஅத்துக்கு மாநாட்டு அனுமதி அளிப்பது பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் என்று உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
பொய்யன் கூட்டம் நீள அகலம் குறித்து பிரச்சாரம் செய்த போது ரோட்டையும் நிரப்புவோம் என்று அப்போது பதில் கூறினால் உடனடியாக மாநாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்படும் என்பதால் மாநாடு முடியும் வரை மவுனம் காத்தோம். ரோட்டை நிரப்பி கடற்கரை வரை மக்களைக் கூட்டுவோம் என்று அப்போது நாம் கூறி இருந்தால் மாநாட்டின் அனுமதியை மறுக்க இதை விட சிறந்த காரணம் காவல் துறைக்குத் தேவை இல்லை. எதை எப்போது சொல்ல வேண்டும் என்பது எமக்குத் தெரியும்.
அதே நேரத்தில் இவர்கள் பரப்பியது போல் தீவுத்திடல் அவ்வளவு சிறியதும் அல்ல. தீவித்திடலைப் போல் நான்கு மடங்கு மக்கள் வெளியே இருந்தனர். இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான் திடலுக்குள் மட்டும் எல் ஈ டி திரை வைக்காமல் மன்றோ சிலை வரை மாபெரும் வீடியோ திரைகள் இரண்டு அமைத்தோம்.
வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக ஏழு பகுதிகளை ஒதுக்கி இருந்ததும் இதன் காரணத்தினால் தான்.
சமுதாயத்தின் முக்கிய கோரிக்கையை வென்றெடுப்பதற்காக ஒரு போர் நடக்கும் போது மக்கள் எண்ணிக்கையை உள்ளதை விட பல மடங்கு குறைத்துக் காட்டும் இவர்கள் சமுதாயத்தின் துரோகிகளே.
பண வசூலுக்காக இந்த மாநாடு நடக்கிறது என்றும் பொய்யன் பாக்கர் கும்பலால் வாதிடப்பட்டது. பண வசூல் செய்யாமல் மாநாடு நடத்த முடியாது. இதில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ஆனால் பண விஷயத்தைப் பொருத்தவரை தவ்ஹீத் ஜமாஅத்தில் தனி நபர்கள் தன்னிச்சையாகக் கையாள முடியாது. பொருளாளர் சாதிக் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதலுடன் தான் நிதியாதாரத்தைக் கையாள முடியும். ஐந்தாயிரம் ரூபாய்க்கு உட்பட்ட செலவு என்றால் தலைவர், பொதுச் செயலாளர் பொருளாளர் என மூவர் ஒப்புதலுடன் தான் செலவிட முடியும். ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் செலவிடுவதாக இருந்தால் அனைத்து நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவின் முடிவு. இதில் எந்த முறைகேடும் நடக்காதவாறு கண்கானிக்க அதிகாரம் படைத்த தணிக்கைக் குழுவும் இருக்கிறது.
மாநாட்டைச் சீர்குலைக்க பொய்யன் பாக்கர் கும்பல் இன்னொரு வாதத்தையும் எடுத்து வைத்தது. ஷிர்க் பித்அத் என்று காரணம் கூறி மக்களைத் திட்டி விட்டு இப்போது அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பது என்ன நியாயம் என்று பொய்யன் பாக்கர் கும்பல் பிரச்சாரம் செய்தது. இதே பிரச்சாரத்தை ஷேக் அப்துல்லா ஜமாலி கூட்டமும் சுவரொட்டி அடித்து பிரச்சாரம் செய்தது
இதுவும் எடுபடவில்லை. காரணம் பொய்யன் பாக்கரைப் பொருத்த வரை இதைக் கூற தகுதி இல்லை. ஏனெனில் தஞ்சை கும்பகோனம் ஆகிய மாநாடுகளின் போது பொய்யன் பாக்கர் இது போல் அனைவரையும் அழைத்துள்ளதால் இது காழ்ப்புணர்ச்சியினால் எடுத்து வைக்கப்படும் வாதம் என்பது மக்களுக்கு நன்றாகாவே புரிந்தது.
மார்க்க விஷயத்தில் வேறுபாடு இருந்தாலும் இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத் போல் யாரும் தூய்மையாகச் செயல் பட மாட்டார்கள் என்று கொள்கையில் மாறுபட்ட முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ளதால் அனைவரையும் நாம் அழைத்தோம். யார் எதைச் சரியாகச் செய்வார்கள் என்பது மக்களுக்குத் தெரிந்திருப்பதை முன்னரே நான் அனுபவ வாயிலாகக் கண்டறிந்துள்ளோம். எனவே தான் மக்களை அழைத்தோம். தொன்னூறு சதம் பள்ளிவாசல்களில் இது குறித்து ஜும்மாவில் அறிவிப்பு செய்தனர். ஷேக் அப்துல்லா ஜாமாலி இயக்கத்தின் நிர்வாகி இமாமாக இருக்கும் பள்ளி வாசலிலும் நிர்வாகிகள் இது குறித்து அறிவிப்புச் செய்தனர்.
அதே நேரத்தில் முஸ்லிம் இயக்கத் தலைவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மீது நம்பிக்கை இல்லை. அதனால் முஸ்லிம் இயக்கத் தலைவர்களில் தவ்ஹீத் ஜமாஅத் மீது நம்பிக்கை இல்லாதவர்களை அழைக்க வேண்டாம். மக்களும் ஜமாஅத் தலைவர்களும் இந்த ஜமாஅத் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்களை நாம் அழைத்தோம்.
பொய்யன் கூட்டத்தினர் மட்டும் வர வேண்டாம் எனவும் அறிவிப்புச் செய்தோம். பொய்யன் கூட்டத்தில் நாடு முழுவதும் 300 பேர் கூட தேற மாட்டார்கள். பொய்யனின் கேவலமான செயல்களை அறிந்த பின்னும் அவரை ஆதரிப்பவர்களை பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு அழைக்காமல் இருப்பது தான் பாதுகாப்பானது
மாநாட்டை எப்படியாவது சீர் குலைக்க வேண்டும் என்பதற்காக பிஜே என்ற தனிப்பட்ட என்னைப் பற்றியும் அவதூறுகளைப் பரப்பியது பொய்யன் பாக்கர் கூட்டம்.
மாநாட்டை பீஜே நடத்தவில்லை. பீஜே நிர்வாகியாகவும் இல்லை. பீஜே மாநாட்டுக் குழுவிலும் இல்லை. அரசியல் தலைவர்களைச் சந்தித்து அழைப்பு கொடுக்கும் பொறுப்பிலும் பீஜே இல்லை. பீஜே அழைக்கிறார் என்று மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்படவும் இல்லை. மாநாட்டை தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் தான் நடத்தியது.
பொறுப்பு எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும் நிர்வாகிகள் எனது ஒத்துழைப்பைக் கேட்டால் என்னால் இயன்ற அளவுக்கு வழங்கி வருகிறேன். முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்பதால் எனது ஒத்துழைப்பை வழங்கினேன். மாவட்டம் தோறும் நடத்தப்பட்ட செயல் வீரர்கள் கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். மாநாட்டு ஏற்பாடுகளில் எனது ஆலோசனையைக் கேட்டால் மட்டும் ஆலோசனை வழங்கினேன்.
ஆனாலும் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் நான் ஒதுங்கி விடுவேன்; அதனால் மாநாடு தோல்வியடைந்து விடும் என்பது பொய்யன் பாக்கரின் எண்ணம்.
நான் எந்த ஒத்துழைப்பும் கொடுக்காவிட்டாலும் மாநாடு வெற்றி பெறும். இது தனி நபரைச் சார்ந்து நிற்கும் ஜமாஅத் அல்ல.
பொய்யன் பாக்கரும் நமது எதிரிகளும் தான் என்னை மையப்படுத்தியதாக இந்த ஜமாஅத்தைப் பற்றி சித்தரிக்கிறார்களே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை இதுவல்ல.
மேலும் அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்படும் போது முன்னை விட முனைப்பாக செயல்படுவதே என் இயல்பு. எனவே இதிலும் பொய்யன் பாக்கர் முயற்சி பலனளிக்கவில்லை.
தமுமுகவினர் கடந்த காலங்களில் நடந்து கொண்டது போல் இந்த மாநாட்டின் போது நடந்து கொள்ளவில்லை. ஒரு சில கிளைகளில் சிலர் பேனர்களைக் கிழித்து எறிந்தது தவிர பரவலாக அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். பொய்யன் பாக்கரை விட தமுமுகவினர் ஆயிரம் மடங்கு மேலானவர்கள் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு பாக்கரின் தரம் கெட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமுமுக மீது இதுவரை நாம் கூறியதை மாற்றிக் கொண்டதாக இதைப் புரிந்து கொள்ள வேண்டாம். லட்ச ரூபாய் திருடையவனை கோடி ரூபாய் திருடியவன் நல்லவனாக்கி விட்டான் என்று கூறினால் அது லட்ச ரூபாய் திருடியவனுக்குக் கொடுத்த நற்சான்று ஆகாது. அவனை விட பெரிய திருடன் ஒருவன் தலையெடுத்து விட்டான் என்றே அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். தமுமுக மீது தவ்ஹீத் ஜமாஅத் வைத்த அனைத்து குற்றச் சாட்டுக்களும் அப்படியே உள்ளன.
என் மீது எவன் குற்றம் சாட்டினாலும் தெளிவாக என் முன்னே அதைச் சுமத்தி நிரூபிக்கத் தயாரா? என்பதை மட்டுமே இதற்கு நான் பதிலாகக் கூறினேன். மாநாடு முடியும் வரை இதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனால் இப்போது மாநாடு முடிந்து விட்டதால் பண விஷயமாக, பெண்கள் விஷயமாக, குடும்ப விஷயமாக அவதூறு பரப்பியவர்கள் அதற்குத் துணை நின்றவர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை இன்ஷா அல்லாஹ் எடுக்கவுள்ளேன். பல பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதி வரும் அந்த ஒரு பொய்யன் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் எனது பதிலடி எத்தகையதாக இருக்கும் என்பதை மிக விரைவில் அறிந்து கொள்வார்கள்.
இனி மேல் பொய்யன் பாக்கரின் உளறல்களுக்கு பதிலளிக்க இந்த இணைய தளம் பயன்படுத்தப்பட மாட்டாது. எந்த மேடையில் புளுகுகிறார்களோ அந்த மேடையில் ஏறி மக்கள் கேட்கும் கேள்விகளை பாக்கர் கும்பல் சந்தித்தாக வேண்டும்.
மாநாட்டுக்காக பொறுமை காத்ததை கோழைத்தனம் என்று எண்ணிக் கொண்டார்கள். அந்த நிலை இனி இருக்காது.
மேலும் எல்லாவிதமான அவதூறுகளும் சட்டப்படி எதிர் கொள்ளப்படும் இந்த இணைய தளம் மூலம் பதில் அளிக்கப்படாது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
05.07.2010. 13:21
சொர்க்கம் வானத்தில் இல்லை
சொர்க்கம் வானத்தில் இல்லை
அல்லது நான் தவறான தகவலைக் கூறி விட்டேன்; தவறான கேள்வியை கேட்டு விட்டேன் என்று பரப்ப வேண்டும்.
இரண்டில் எதையும் செய்யாத இவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று நேயர்கள் சிந்திக்க வேண்டும்.
அடுத்ததாக இவர்கள் கேட்கும் எட்டாவது கேள்வியைப் பார்ப்போம்.
8. "சுவர்க்கம் வானத்தில் இல்லை; அது பூமியில் படைக்கப்படும்" என்று தனது திருகுர்ஆன் மொழிபெயர்ப்பில் பெரியவர் பிஜே எழுதியதற்கான ஆதாரம் என்ன?. இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த வரிகளை, இறைவாக்கின் மொழிபெயர்ப்பில் கூறும் அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைகளில் கவனமில்லாதவரா பிஜே?
என்று எட்டாவது கேள்வியைப் பரப்பினார்கள். இந்தக் கேள்வியில் பல விஷயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
சொர்க்கம் பற்றி நாம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை. அதை விளக்குவதற்கு முன்னால் இக்கேள்வியில் உள்ள அபத்தங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
சொர்க்கம் பற்றி பீஜே தவறாக எழுதி விட்டார்; இந்த அளவுக்கு அவர் கவனமில்லாதவரா?
என்ற கேள்வியை முதலில் எடுத்துக் கொள்வோம். பீஜே எழுதியது தவறு என்றே வைத்துக் கொள்வோம்.
இந்தக் கேள்வியின் மூலம் கேள்வி கேட்டவர் இஸ்லாத்தின் அடிப்படையை முதலில் தகர்த்து விடுகிறார். பீஜே போன்ற பெரியவர்களூக்கு கவனமின்மையால் தவறு ஏற்படாது என்பது இதன் உள் கருத்தாக இருக்கிறது.
அல்லாஹ்வைத் தவிர யாராக இருந்தாலும் கவனமின்மை ஏற்படும் என்பதும் கவனமின்மையால் தவறு ஏற்படும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இந்தக் அடிப்படைக் கொள்கையை பீஜே மீது கொண்ட வெறுப்பின் காரணமாக இவர் மறுக்கத் துணிந்ததால் தான் இப்படிக் கேட்டுள்ளார்.
மற்ற இயக்கத்தின் தவறுகளையும் மற்ற தலைவர்களின் தவறுகளையும் யாராவது விமர்சனம் செய்தால் உடனே இந்தக் கள்ளப்பேர்வழி முட்டுக் கொடுப்பார். மனிதன் தவறு செய்பவன் தான். அதற்காக இப்படியெல்லாம் விமர்சிக்காலாமா என்று முட்டுக் கொடுத்தவருக்கு இப்படி எழுத முடிகிறது என்றால் உடம்பெல்லாம் விஷம் என்பது புரிகிறதா?
பீஜே போன்றவருக்கு கவனமின்மை ஏற்படாது என்பது இவரது கொள்கையா? எந்தத் தகுதியில் உள்ளவருக்கு கவனக் குறைவு ஏற்படாது என்பதற்கு ஏதாவது அளவு கோல் வைத்துள்ளாரா? அந்த அள்வு கோல் என்ன? அல்லது பீஜேயோ தவ்ஹீத் ஜமாஅத்தோ பீஜியிடம் தவறு ஏற்படாது என்று கூறியுள்ளார்களா?
நான் கவனக் குறைவாக எழுதி விட்டேன் என்று பீஜே பதில் சொன்னால் அதை மக்கள் நம்பக் கூடாது எந்தற்காகவும் இப்படி இவர் எழுதி இருக்கிறார். இவரைப் போன்றவருக்கு எந்தக் கொள்கையும் கிடையாது, பீஜே என்ற தனி மனிதனைத் தாக்க வேண்டும். இஸ்லாத்தைக் காவு கொடுத்தால் தான் அது முடியும் என்றால் அதற்கும் இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
சொர்க்கம் பூமியில் படைக்கப்படும் என்று பீஜே எழுதியதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்த்து விட்டார் என்று கள்ளப்பேர்வழி கூறுகிறார். இஸ்லத்தின் அடிப்படையை பீஜே தகர்த்து விட்டார் என்றால் இதன் மூலம் இஸ்லாத்தின் எந்த அடிப்படை தகர்க்கப்பட்டது என்று கூற வேண்டுமல்லவா? அடிப்படையைத் தகர்த்து விட்டார் என்று பாரதூரமான குற்றச் சாட்டைக் கூறுபவர் எந்த அடிப்படை தகர்க்கப்படுகிறது என்று ஒன்றுமே சொல்லவில்லை. இவர் அவ்வப்போது தன்னை மேதாவியாகக் காட்டிக் கொண்டு உளறிக்கொட்டுவது எவ்வாறு அபத்தனாக இருக்குமோ அது போல் தான் இந்தக் குற்றச் சாட்டும் உள்ளது. ஆய்வு செய்து இப்படி கூறுபவர் என்றால் அதற்கான காரண காரியங்களௌடன் கூறியிருப்பார். யாராவது எழுதியதையும் பேசியதையும் கேட்டு சிந்திக்காமல் கேள்வி கேட்டதால் வாயில் வந்தபடி எழுதியுள்ளார் என்று தெரிகிறது.
இவருக்கு எதிராக நான் கடுமையான விமர்சனம் செய்தது இவரது கேள்விகள் முழுவதும் ஒளிந்திருந்த இந்த விஷமக் கருத்துக்காகத் தான்.
அடுத்து சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்று பீஜெ எழுதியது சரியா?
நிச்சயம் சரி தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும் இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது என்ற காரணத்தினால் நமது கூற்றை சிலர் மறுக்கின்றனர்.
உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும், பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் முன்னரே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இதற்கு முரணாக பீஜே எழுதி உள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆதாரங்களில் எதையும் பீஜே மறுக்கவில்லை. இது குறித்து பீஜெயே தனது தமிழாக்கத்தின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்.
ஸித்ரதுல் முன்தஹா அருகில் தான் சொர்க்கத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) கண்டனர்- 53:15 330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம்
ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 36:26)
இதனுள் அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே உடனே அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார்கள் என்பதும் இவ்வசனம் கூறும் கருத்து.
கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்றெல்லாம் நாம் நம்புகிறோம். இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்து பறவை வடிவத்தில் தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் விளக்கி உள்ளனர்.
சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டு உள்ளது என்பதை பீஜேயும் எழுதியுள்ளார் என்பதை மேற்கணட் அவரது எழுத்தில் இருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்தது உண்மை தான். அதில் பீஜேக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உலகம் அழிக்கப்படும் போது வானம் பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும். சொர்க்கம் நரகமும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்று கூறுவது சொர்க்கம் குறித்து மேற்கண்ட வசனங்களை மறுத்ததாக ஆகாது.
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வின் வழிமுறையே இது தான்.
உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 10:4
உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:34
நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 27:64
அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில் லையா? பின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
திருக்குர்ஆன் 29:19
அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 3011
அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.
திருக்குர்ஆன் 30:27
அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
திருக்குர்ஆன் 85:13
இந்த வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்! படைக்கப்பட்ட பொருட்களை அழிப்பதும், அழித்ததை மீண்டும் படைப்பதும் இறைவன் என்பதற்கான ஆதாரமாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இப்படி என்னைத் தவிர யாராலும் செய்ய முடியுமா என்று அறை கூவல் விடுவதில் இருந்து இதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு வானங்களுக்கும் சென்றார்கள் என்று ஹதீஸ் உள்ளதால் வானம் அழியாது என்று யாராவது கூற முடியுமா?
முதலில் எப்படி எதுவும் இல்லாமல் இருந்ததோ அது போன்ற நிலையை உலகம் அடையும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அல்லாஹ் படைப்பான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறவில்லையா? இதில் சொர்க்கம் மட்டும் விதி விலக்கு என்று ஆதாரம் எதையும் நாம் காணவில்லை. எனவே தான் ஏற்கனவே சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தாலும் அந்த சொர்க்கம் அழிக்கப்பட்டு வேறு சொர்க்கம் படைக்கப்படும்; அந்த சொர்க்கத்துக்குத் தான் சொர்க்கவாதிகள் செல்வார்கள் என்று கூறுகிறோம். இது தான் சரியான கருத்தாகும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சொர்க்கத்தைப் பார்த்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. உலகம் அழியும் போது வானம் என்னவாகும்? இது பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!
அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 11 21;104
உலகம் அழிக்கப்படும் போது வானம் வேறு வானமாகவும் பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்றால் அவை அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் வானத்தில் இருந்த சொர்க்கமும் அழிந்து விடும் என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் வானத்தில் இருந்த சொர்க்கத்தை விட மிகப் பிரம்மாண்டமானதாக சொர்க்கம் இருக்கும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
திருக்குர் ஆன் 3:133
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
திருக்குர் ஆன் 57:21
வானத்தில் இருந்த சொர்க்கம் வேறு; வானத்தையும் பூமியையும் உள்ளடக்கும் அளவிலான் சொர்க்கம் வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.
உலகம் அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். எங்கிருந்து எழுப்பப்படுவார்க்ள்? இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
திருக்குர்ஆன்20;55
பூமியில் இருந்து தான் மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளது. மேலே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாம் அறிந்தவரை எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது வானம் பூமி, சொர்க்கம் நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். என்பதும், அழிக்கப்பட்ட பின் வானம் வேறு வானமாகவும் பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்பதும் மனிதர்கள் பூமியில் இருந்து எழுப்பப்படுவதால் அங்கு தான் சொர்க்கம் அமைக்கப்படும் என்பதும், அந்த பூமி வானம் பூமியை விட மிகப் பிரும்மாண்டமாக இருக்கும் என்பதும் தெரிகிறது.
சொர்க்கம் நரகம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர் என்றாலும் நாம் கூறி இருப்பதர்கு எதிராக உரிய ஆதாரம் இல்லை என்பதால் இதையே சரியானது என்கிறோம். இதில் இஸ்லாத்தின் எந்த அடிப்படையும் மீறப்படவில்லை
இந்தக் கட்டுரை வெளியான பின் சகோதரர் மவலவி அப்துன்னாஸர் அவர்கள் மற்றொரு கோணத்தில் எழுதி அனுப்பிய கட்டுரையை கீழே தருகிறோம்
சொர்க்கம் நரகம் பூமியில்தான் அமைக்கப்படும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள்
நாம் மலைகளை இடம் பெயரச் செய்யும் நாளில் பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்! அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்). (அல்குர்ஆன் 18 : 47, 48)
(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ''என் இறைவன் அவற்றைத் தூள்தூளாக்கு வான்'' என்று கூறுவீராக! பின்னர் அதை வெட்ட வெளிப் பொட்டலாக ஆக்குவான். அதில் மேடு பள்ளத்தைக் காண மாட்டீர்! எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்! (அல்குர்ஆன் 20 : 105லி108)
மேற்கண்ட இரண்டு வசனங்களும் மறுமையில் பூமி மேடு, பள்ளம் எதுவுமில்லாத வெட்ட வெளிப் பொட்டலாக மாற்றப்படும் என்றும் அதில் தான் மக்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என்றும் தெளிவாக அறிவிக்கின்றது.
மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவதற்காகத்தான் அல்லாஹ் பூமியை வெட்டவெளியாக ஆக்குகின்றான்.
முதலாவது சூர் ஊதப்படும் போது வானங்கள், பூமி அனைத்தும் அழிந்து விடும் . வானம், பூமியிலுள்ள அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். பிறகுதான் அல்லாஹ் பூமியை மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கு தோதுவாக வெட்ட வெளியாக மாற்றுவான். இதனை பின்வரும் திருமறை வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் இருப்போர் மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒருமுறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சி கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களி டையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 40 ; 68, 69)
இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் பூமி தன்னுடைய ஒளியால் பிரகாசிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதைத் தொடர்ந்து பதிவுப் புத்தகம் வைக்கப்ட்டு சாட்சிகள் விசாரிக்கப்படும் என்று இறைவன் கூறுவதிலிருந்தே பூமியில் ஒன்று கூட்டப்படுவதும் விசாரணையும் நடைபெறும் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது.
மேலும் பின்வரும் வசனங்களும் மக்கள் அனைவரும் பூமியல்தான் மீண்டும் ஒன்று திரட்டப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதிலிருந்து உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச்செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம். (அல்குர்ஆன் 20 : 55)
''அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான் (அல்குர்ஆன் 7 : 25)
அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.. பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். (அதிலிருந்தே) உங்களை வெளியேற்றுவான். (அல்குர்ஆன் 71 : 17, 18)
அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். (அல்குர்ஆன் 30 : 25)
(அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள். அழைப்பாளரை நோக்கி விரைவார்கள். இது கஷ்டமான நாள்தான் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுவார்கள். (அல்குர்ஆன் 54 : 6,7,8)
பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும் போது, தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது, இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது, அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும். அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99 ; 1லி8)
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து மக்கள் மாற்றப்பட்ட பூமியில்தான் ஒன்றுதிரட்டப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது தெளிவாக விளங்குகிறது.
எங்கு மக்கள் ஒன்று திரடப்படுவார்களோ, எங்கு விசாரணை நடைபெறுமோ அங்குதான் சொர்க்கம் நரகம் இருக்கும் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் ''அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம்ன கேட்டார்கள். அப்போது நபி அவர்கள் ''மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''இல்லை; அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில் அதாவது மாற்றப்பட்ட பூமியல்) ) ஒன்று கூட்டி '' யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின் தொடர்ந்து செல்லட்டும்'' என்பான். ஆகவே, சூரியனை வணங்கிக்கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வணங்கிக்கொண்டிருந்தவர்கள் (அதைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்களை வணங்கிக்கொண்டிருந்த வர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள்.
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன், அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து ''நான்தான் உங்கள் இறைவன்'' என்பான். உடனே அவர்கள் ''உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்'' என்பர். அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து ''நானே உங்கள் இறைவன்'' என்பான். அதற்கு அவர்கள் ''நீயே எங்கள் இறைவன்'' என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள். அனைவரின் பிரார்த்தனையும் 'அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று' என்பதாகவே இருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முற்களைப் போன்றிருக்கும். ''கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்த தில்லையா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தார்கள்.
(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல் களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறைமறுப்பு உள்ளிட்ட) தன் (தீய) செயல் களால் அழிந்துபோனவரும் இருப்பார். (இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக்கொள்பவரும் இருப்பார். இறுதி யாக இறைவன், தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், வணக்கத்திற் குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான். அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணை யிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்று வார்கள்.
அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள் மீது 'மாஉல் ஹயாத்' எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர் ''என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பி விடுவாயாக!'' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். அப்போது அல்லாஹ் ''(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?'' என்று கேட்பான். அதற்கு அவர் ''இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்'' என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அதற்குப் பிறகு ''என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக!'' என்பார் அவர். அதற்கு இறைவன் ''வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!'' என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் ''நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்'' என்பான். அதற்கு அவர் ''இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்'' என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழி களையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.
இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மௌனமாக இருப்பார். பிறகு ''இறைவா! என்னை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!'' என்று கூறுவார். பின்னர் இறைவன் ''வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலை தான் என்ன!'' என்று கேட்பான். அதற்கு ''என் இறைவா! என்னை உன் படைப்புகளி லேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!'' என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்திக் கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான். சொர்கத்திற்குள் அவர் நுழைந்த பின், ''நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்'' என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) ''நீ (விரும்பிய) இன்னதை ஆசைப் படலாம்'' என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரை ஆசைப்பட்டு (தன் விருப்பங் களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் ''இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்'' என்பான்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.
(புகாரி 6574)
எனவே பூமியில் தான் சொர்க்கம் நரகம் அமைக்கப்படும் என்பது தெளிவாகிறது. ஆனால் நாம் இப்போது வசிக்கின்ற பூமியைப் போன்று இருக்காது
19.05.2010. 22:37
வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக
வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக் கொள்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர். இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களமிறங்கினார்கள்.
திருச்சியில் இவர்கள் அனைவரும் 1990 களில் கூடி தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களைத் தாக்கவும் திட்டங்களை வகுத்தனர்.
அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தவ்ஹீத் கூட்டங்களில் புகுந்து ரகளையில் ஈடுப்பட்டனர். மேலப்பாளையத்தில் பீஜே பேசிக் கொண்டிருக்கும்போது மேடையில் ஏறி அவரை அரிவாளால் வெட்டினார்கள். பலத்த காயத்துடன் அவர் பிழைத்துக் கொண்டார்.
இப்படியெல்லாம் இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அவர்களுக்குப் பலன் தருவதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கே பலம் சேர்த்தது. ஊருக்கு நாலு பேர் கூட இல்லாமல் இருந்த தவ்ஹீத் ஜமாஅத் ஊர்கள் தோறும் கிளை பரப்பவும் தமிழகத்தில் சுமார் 600 மர்கஸ்கள் உருவாகவும் இவர்களின் வன்முறை வெறியாட்டமே காரணமாக அமைந்தது.
இவர்களின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் மக்கள் மத்தியில் அதிகரித்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேருவதற்கு இவர்களே பாதை அமைத்துக் கொடுத்தார்கள்.
விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அற்பமான நிலையில் நாம் இருந்த போதே இவர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சவில்லை. நம்முடைய பிரச்சாரத்தைத் தளர்த்தவில்லை. முன்பை விட இன்னும் வீரியமாகவே நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இவர்களின் எதிர்ப்பு நமக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது.
அதுபோல் தான் இப்போதும் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். முன்பு இவர்கள் எப்படி முனை மழுங்கிய ஆயுதத்தை நமக்கு எதிராகத் தூக்கினார்களோ அதை விட பலவீனமான ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு இப்போது நமக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர்.
திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத் பிரமுகர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஹஜ் முஹம்மதுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சாயம் பூசி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக மக்களை உசுப்பி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.
இவர்கள் நாடெங்கும் ஒட்டிய ஆளுயர சுவரொட்டியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
"தமிழக அரசே திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரைப் படுகொலை செய்த டிஎன்டிஜே குண்டர்களுக்கும் அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு''
என்பது சுவரொட்டியின் முக்கிய வாசகம்.
இதில் 19 இயக்கங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 15 இயக்கங்கள் வெறும் லட்டர் பேடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜாக் ஆகிய இரண்டு இயக்கங்கள் தவிர அனைத்து இயக்கங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் இப்படி சுவரொட்டி ஒட்டுவதால் அந்தக் கொலையைச் செய்த சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவராகி விடுவாரா? அரசாங்கம் உடனே இந்தச் சுவரொட்டியை ஆதாரமாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் மீது நடவடிக்கை எடுத்து விட முடியுமா? இந்தச் சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.
அல்லது இப்படி சுவரொட்டிகள் ஒட்டுவதால் மக்கள் அதை அப்படியே நம்பி கொந்தளித்துப் போய் விடுவார்களா? அந்தக் காலம் மலையேறி விட்டது. இவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை இழந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன.
தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையைப் பிடிக்காத மக்களுக்குக் கூட இந்த ஜமாஅத் இது போன்ற செயல்களில் ஈடுபடாது என்று நல்லெண்ணம் இருக்கிறது. இதனால் தான் ஜூலை 4 அன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களும் தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பை ஏற்று தீவுத் திடலில் குழுமினார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் மீது இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இருக்கும் போது இவர்களின் ஆளுயர சுவ ரொட்டிகள் இவர்களுக்கு ஒரு பயனையும் அளிக்கப் போவதில்லை.
இவர்களின் சுவரொட்டிக்குப் பின்னர் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என்பதை மக்கள் விசாரிக்கும் போது 19 கூட்டமும் பொய்யர்கள் என்பது இன்னும் உறுதியாகும். இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பால் மக்கள் கவனம் திரும்பும். இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஒரு இயக்கத்துக்கு எதிராக ஏன் புளுகுகிறார்கள் என்ற விழிப்புணர்வு தான் இதனால் ஏற்படும். இன்ஷா அல்லாஹ் இது தான் சுவரொட்டியால் கிடைக்கும் நன்மையாக இருக்கும்.
இப்போது தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் அனைவரும் ஏற்கனவே இவர்களின் கூட்டத்தில் இருந்தவர்கள் தான். இவர்களின் தில்லுமுல்லுகளையும், திருகுதாளங்களையும், புளுகு மூட்டைகளையும் கண்டு தான் அங்கிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தனர் என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.
தவ்ஹீத்வாதிகளைப் பொறுத்த வரை இது போன்ற மிரட்டல்களால் அவர்களின் ஈமான் இன்னும் அதிகரிக்குமே தவிர சோர்வோ தளர்வோ அவர்களுக்கு ஏற்படாது. அவர்களுக்குப் பின்வரும் வசனங்கள் மன தைரியத்தை அதிகரிக்கும்.
மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம் பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.
எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!.
(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
"(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது'' என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.
நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
(திருக்குர் ஆன் 3 : 173 - 179)
அல்லாஹ் போதுமானவன் என்பதில் அசைக்க முடியாத உறுதி கொண்ட தவ்ஹீத்வாதிகளை இதுபோன்ற மிரட்டல்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாக நமக்குச் சொல்கிறது.
மறுமையில் யாருக்கு நற்பேறு இல்லை என்று அல்லாஹ் முடிவு செய்து விட்டானோ அத்தகையவர்கள் தான் இது போல் சத்தியத்துக்கு எதிராக அணி திரள்பவர்கள் என்றும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இவர்களை அடையாளம் காட்டுகிறான்.
மேலும் நாங்களும் தவ்ஹீத் தான் என்று வேஷம் போட்டு கலந்திருந்தவர்களை பிரித்துக் காட்டாமல் அல்லாஹ் விட மாட்டான் என்ற வாக்குறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். இவர்கள் என்ன தான் நடித்தாலும் இவர்கள் தவ்ஹீதின் எதிரிகள் தான் என்பதை அல்லாஹ் அடையாளம் காட்டுவதற்காக இவர்களைத் தள்ள வேண்டிய இடத்தில் தள்ளி விட் டான்.
கப்ரு வணங்கிகளையும் அதை எதிர்ப்பதாக நாடகமாடியவர்களையும். மத்ஹபுவாதிகளையும் மத்ஹபை எதிர்ப்பதாக நாடகமாடியவர்களையும் அல்லாஹ் ஓரணியில் திரட்டி அடையாளம் காட்டி விட்டான்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இவர்கள் ஒன்றுபட்டிருப்பது போல் தோன்றினாலும், இவர்கள் ஒன்றுபட்டு பலம் பெற்றிருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் இவர்களிடையே எந்த ஒற்றுமையும் இல்லை. இவர்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
இதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) நயவஞ்சகரை நீர் அறியவில்லையா? "நீங்கள் வெளியேற்றப்பட்டால் உங்களுடன் நாங்களும் வெளியேறுவோம். உங்கள் விஷயத்தில் எவருக்கும் எப்போதும் கட்டுப்பட மாட்டோம். உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் உங்களுக்கு உதவுவோம்'' என்று வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரிடம் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுடன் இவர்கள் வெளியேறவே மாட்டார்கள். அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அவர்களுக்கு உதவவும் மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவர்களது உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றியே அதிக பயம் இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அவர்களுக்குச் சற்று முன் சென்ற சமுதாயத்தினர் போன்றே (அவர்கள் உள்ளனர்) அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(திருக்குர் ஆன் 59:11-15)
பார்வைக்குத் தான் இவர்கள் ஒன்று பட்டது போல் காட்டிக் கொள்வார்கள். உண்மையில் இவர்களின் உள்ளம் சிதறிக் கிடக்கிறது.
ஒரு தேர்தல் வந்தால் போதும். இவர்களின் ஒற்றுமை மாயை கலைந்து போய் விடும். ஆளுக்கு ஒரு கட்சியுடன் பேரம் பேசிக் கொண்டு தனித் தனியாக சிதறிப் போய் விடுவார்கள்.
ஒரு டிசம்பர் ஆறு வந்தால் போதும் தங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவதற்காக தனித்தனி வழியில் பலம் காட்ட போய் விடுவார்கள்.
நம்மை எதிர்ப்பதில் தவிர வேறு எந்த ஒரு காரியத்திலும் இவர்கள் ஒத்த கருத்தை எட்ட முடியாது. மேலும் இவர்கள் அனைவரும் சேர்ந்து விட்டதால் ஏதோ பலம் பெற்று விட்டது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் கோழைகள். சொந்த பலத்தில் எதையும் சாதிக்கத் திராணியற்றவர்கள். தங்களுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தால் தவிர எதிலும் இறங்கத் திராணியற்றவர்கள் என்பதையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்கின்றன.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)
12.10.2010. 12:45
இவன் தான் காதியானி
இவன் தான் காதியானி
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்று வாதிட்டு தனி மதத்தை உருவாக்கி இஸ்லாத்தை விட்டு வெளியேறினான்.
இவனைப் பின்பற்றும் குருட்டுக் கும்பல் தம்மை அஹ்மதியா ஜமாஅத் எனக் கூறிக் கொண்டு முஸ்லிம் வேடம் போட்டு அப்பாவிகளை ஏமாற்றப் பார்க்கிறது.
புதிய தலைமுறைக்கு மிர்ஸா குலாம் என்பவனின் அயோக்கியத்தனம் தெரியாது என்ற தைரியத்தில் காதியானிகள் என அறியப்படும் இக்கூட்டம் அப்பாவிகளுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளது.
மிர்ஸா குலாம் என்பவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதைப் புதிய தலைமுறையினருக்கும் தெளிவுபடுத்தி எச்சரிக்கும் கடமை நமக்கு உள்ளது.
இந்தக் கூட்டத்துடன் நான் நேருக்கு நேர் விவாதம் நடத்தி மிர்சா குலாம் என்பவன் பொய்யன் என்பதை நிரூபித்திருந்தும் எனக்கே அழைப்பு அனுப்பியது இந்தக் கூட்டம்
ஆம் இந்தக்கும்பலைச்சேர்ந்த ஜஃபருல்லா என்பவர் jafarla@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்துஎனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் காதியானி கும்பலின் வெப்சைட் இடம் பெற்றிருந்தது. இது போன்ற குப்பைகளை எனக்கு அனுப்பக் கூடாது என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன்.
எது குப்பை? விளக்க முடியுமா என்று கேட்டு மேலும் சில லின்குகள் வந்தன. இந்த லின்குகள் எல்லாம் எனக்கு முன்னரே தெரியும். நீ சரியான ஆளாக இருந்தால் லின்க் அனுப்புவதை விட்டு விட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லத் தயாரா என்று பதில் போட்டேன். அனுப்புங்கள் பார்ப்போம் என்று எனக்கு பதில் வந்தது
நான் கீழ்க்கண்ட முதல் கேள்விப்பட்டியலை அனுப்பினேன்.
நான் எழுதியது:
முதலில் இந்த வீடியோவைப் பார்.
http://onlinepj.com/VIVATHAM%20AUDIO/mirza_poyyan.wmv
மிர்ஸா குலாம் சொன்னதில் சில விஷயங்களை முதலில் எடுத்துக் காட்டுகிறேன்.
முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான்.
இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.
முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன்.
இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.
மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.
நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.
ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்.
ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள்
இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறா விட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.
ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவன் எழுதினான்.
இப்போது நான் கேள்விக்கு வருகிறேன் சைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது ஸவ்வஜ்னாகஹா அவரை உமக்கு மணமுடித்துத் தந்தேன் என்று கூறினான்.
அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மனமுடித்துக் கொடுத்ததாக கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள்.
இவ்வாறு ஸவ்வஜ்னாகஹா அவரை உமக்கு மணமுடித்துத் தந்தேன் என்று பொய்யன் மிர்சாவுக்கு அல்லாஹ் கூறினால் அது கட்டாயம் நிறைவேற வேண்டும். ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை.
இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் இது தான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம் என்றும் அவன் சொன்னான். இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்.
சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்கா விட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்ன படி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.
நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை பொய்யன் குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.
அதுவும் இது தான் நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரம் என்று பொய்யன் அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது. இந்தக் கேள்விகளை பொய்யன் கூட்டத்துடன் விவாதம் நடத்திய போது மூல நூலை வாசித்து நான் கேட்டது.
அதைப் பொய்யன் கூட்டம் விவாதத்தில் மறுக்கவில்லை.
அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் நடக்கும் வரை உயிருடன் இருந்து எனக்கு திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்கு கல்யாணம் செய்து வைக்காமலே செத்து போய் விட்டார்.
இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும் பொய்யன் என்பது உறுதியாகி விட்டது. அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா இல்லையா
அல்லாஹ் அப்படி சொல்லி இருக்கும் போது அது போல் நடந்ததா ? இது நிறைவேறா விட்டால் அவன் பொய்யன் இது நிறைவேறி இருந்தால் அவன் பொய்யன் அல்ல.
சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் சாவார் என்று இந்த அயோக்கியன் சொன்னானா இல்லையா அவன் அப்படி சொன்னால் அதன் படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் அவன் உண்மை சொன்னான் நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொன்னான்
அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்து தந்து விட்டு மரணிப்பார் என்று இவன் சொன்னானா இல்லையா சொன்னான் என்றால் அது நிறைவேறினால் அவன் உண்மை சொன்னான். நிறைவேறா விட்டால் அவன் பொய் சொன்னான்.
இது நான் காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்ட கேள்விகள். நான் கேட்கும் கேள்விகள் திடீர் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட கேள்விகள் தான். அந்த விவாதத்தின் போதும் அதற்குப் பதில் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு கூட பதில் சொல்ல முடியாது.
நீ இந்தக் கிறுக்கன் மீது குருட்டு நம்பிக்கை வைத்து அவன் தனது பொய்யை நியாயப்படுத்துவதற்காக உளறியதை எனக்குச் சொல்ல வேண்டாம். அவன் அயோக்கியன் எனும் போது அவனுடைய சமாளிப்புகள் எனக்கு தேவை இல்லை. அவனை பொய்யனா உண்மை சொன்னவனா என்பதற்கு அவனே எதை ஆதாரமாகக் காட்டினானோ அதைக் கொண்டே அல்லாஹ் அவனை அடையாளம் காட்டி விட்டான்.
அவன் சொன்னது நடந்ததா இல்லையா இது தான் தேவை. இதற்கு நேரடியாகப் பதில் சொல்லி முடித்த பின் இதே விஷயத்தில் மிச்சமுள்ள மற்ற கேள்விகள் வரும்.
இப்படி பதில் போட்டவுடன் அரை மணி நேரத்துக்கு ஒரு மெயில் அனுப்பிக் கொண்டிருந்த மேற்படி காதியானி அத்துடன் காணாமல் போய் விட்டார்.
டிசம்பர் முதல் தேதியன்று இந்த மின்னஞ்சல் தொடர்பு நடந்தது. நான் கேட்ட கேள்விகளுக்குப் பின் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்.
குலாம் அஹ்மத் காதியானி என்ற அயோக்கியனைப் பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இன்னும் யார் யாருக்கோ இது போல் குப்பைகளை மேற்படியார், அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வரலாம் என்பதற்காக ஒரு மாதம் வரை பதிலுக்கு காத்திருந்து விட்டு இதை வெளியிடுகிறேன்.
மேலும் காதியானிகள் என்று அழைக்கப்படும் இந்த அஹ்மதியா மதத்தை உருவாக்கிய மிர்சா குலாம் என்பவனைப் போல் மார்க்க விஷயத்தில் பொய் சொன்ன ஒருவன் உலகில் பிறந்தது இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
புதிய தலைமுறையினர் இவனைப் பற்றி அறிந்து எச்சரிக்கையாக இருப்பதற்காக அவனது மறுக்க முடியாத புளுகு மூட்டைகளை வெளியிடுகிறேன்.
புளுகு மூட்டை –1
அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத் தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் எனக்கு நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று இவன் கூறினான்.
இதற்கான ஆதாரம் வருமாறு
ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவன் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரில் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் – பேரன் என்று மாற்றிக் கொண்டது பொய்யனை நம்பிய கூட்டம். இதற்கான ஆதாரம் வருமாறு

மிர்சா குலாம் காதியானிக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அது ஒரு குறைபாடு அல்ல. ஆனால் இவன் தனக்கு உர்துவிலும் அரபியிலும் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வஹீ வந்ததாக புருடா விட்டான்.
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 14:4
எந்த இறைத்தூதரை அனுப்புவதாக இருந்தாலும் அவரது சமுதாயம் எந்த மொழி பேசுகிறதோ அந்த மொழியிலேயே வஹீ அனுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் தூதர் அதை விளக்கிக் கூறுவார் என்றும் அல்லாஹ் கூறுகிறான். விளக்கிக் கூறும் அளவுக்கு தூதருக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது இதில் இருந்து விளங்குகிறது. ஆனால் இவனோ தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்தது என்கிறான். அதன் அர்த்தத்தை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறினான்.
இவனுக்கு வஹீ வரவில்லை என்பதற்கு இதுவே போதிய ஆதாரம்.
இந்தப் பொய் மட்டுமின்றி இது தொடர்பான மற்றொரு பொய்யை இப்போது பார்ப்போம்.
எந்த ஒரு மனிதனின் எந்த மொழியில் அமைந்த வாசகமாலாலும் அதில் சில பிழைகள் வரலாம் அதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியில் பிழை இருக்கக் கூடாது. அல்லாஹ் பிழைக்கு அப்பாற்பட்டவன்.
ஆனால் இந்தக் கேடு கெட்டவனுக்கு வந்த ஆங்கில வஹீயில் பிழைகள் பல இருந்தன. இவன் சுயமாக எழுதிய வாசகம் என்று சொல்வானானால் அதில் பிழை இருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவனுக்கு அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயின் இலட்சணத்தைப் பாருங்கள்

த்கிரா நூல் பக்கம் 116
இதில் இவனுக்கு வந்த ஆங்கில வஹியை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளான். அதையே உருது லிபியிலும் எழுதியுள்ளான்.
கடவுளின் வார்த்தை மாற்ற முடியாது என்பதை அல்லாஹ் இவனுக்கு அங்கிலத்தில் சொன்னானாம்
எப்படிச் சொன்னான் தெரியுமா
Words of god not can exchange
இப்படி இவனுக்கு வஹீ வந்ததாம்.
Words of god cannot exchange என்று கூறுவதற்குப் பதிலாக இவன் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் Words of god not can exchange
என்று எழுதி விட்டான். என்னடா கடவுளின் வார்த்தையில் இப்படிப் பிழை வரலாமா என்று கேட்டு இவன் ஒரு அயோக்கியன் என்று புரிந்து கொண்டு சிலர் அவனை உதறி விட்டு வெளியேறினர்.
இதை நியாயப்படுத்தி வஹீ என்பது ஃபோர்ஸாக வரும் போது இலக்கண விதிகளைக் கண்டு கொள்ளாது எனக் கூறி தன்னுடன் உள்ள மரமண்டைகளை ஏமாற்றினான்.
ஆனால் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் போது இலக்கணப் பிழையை நீக்கி அதாவது வஹீயை ஷேஞ் பண்ணி வெளியிட்டனர். இந்தக் கேடு கெட்ட மூளையற்ற காதியானிக் கும்பல்.

தத்கிரா மொழியாக்கம் பக்கம் 63
அல்லாஹ்வின் வார்த்தையில் மாற்றம் இல்லை என்று சொல்லும் வார்த்தையே மாறிப்போய் விட்டது என்றால் இது எவ்வளவு பெரிய அற்புதம். தன் பெயரில் பொய் சொன்னவனை அவனது வாயாலே அல்லாஹ் பொய்யன் என்று எப்படி அடையாளம் காட்டி விட்டான் என்று பாருங்கள்.
இவனது புளுகு மூட்டை இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்
04.01.2011. 07:53
ஷீஆக்களின் மறுபிரவேசம்
ஷீஆக்களின் மறுபிரவேசம்
அறிஞர் பீஜே அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜன்னத்தில் நீங்கள் எழுதிய ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற ஆய்வுக் கட்டுரை அதன் முக்கியத்துவம் கருதி அண்மையில் ஏகத்துவத்திலும் மீள் பிரசுரிக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஷீஆக் கும்பல் தலை காட்டிய போது, இலங்கையில் உள்ள ஜம்இய்யத்து அன்ஸாருஸ் சுன்னா அல்முஹம்மதிய்யா என்ற நிறுவனம் ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற உங்கள் ஆய்வுக் கட்டுரையை நுாலாக வெளியிட்டு, இலவசமாக வினியோகித்தது. அதன் ஒரு பிரதி எனக்கு சவுதி அரேபியாவில் கிடைத்தது. அதன் முக்கியப் பகுதியை அனுப்பியுள்ளேன். இதனை இணையத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வஸ்ஸலாம்.
இவ்வண்ணம்
மவ்லவி கைஸான் அப்துல் ஜப்பார்.
அழைப்பாளர், நஸீம் ஜாலியாத். ரியாத்.
ஷீஆக்களின் மறுபிரவேசம்
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
'(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.'
(அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1 பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் - 1 பக்கம்: 238)
இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில்
'நபி (ஸல்) அவர்கள், ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள் 'இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக' என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் பக்கம் - 1 பக்கம் : 226)
அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.
'நான் முஸா (அலை), ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்' என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில், புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம் 1, பக்கம் 261
'உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்' என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
அல்புர்ஹான் முன்னுரை, பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது 'முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ' என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அலி' என்றார்களாம். 'முஹம்மதே திரும்பிப் பாரும்' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
தஃப்ஸீருல் புர்ஹான், பாகம் 2, பக்கம் 404
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 258
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 393
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
மேற்படி நூல் பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.
குர்புல் இஸ்னாத், பக்கம் 146
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 19, பக்கம் 197
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) 'வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன். நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்' என்றார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 1, பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது 'முடியுமே' என்றார்களாம்.
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
'யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.' அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
பஹ்ரானியின் 'புர்ஹான்' எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
'ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 78
'ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.' என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 315
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236
'எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல், என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்' என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.
ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:
பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும், நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58
குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?
அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
காஷானியின் கிதாபுஸ்ஸாபி, பாகம் 1, பக்கம் 347
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர்
ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீயின் நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245
அபூபக்கரும், உமரும், அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 2, பக்கம் 246
(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பக்கம் 296
எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு
இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித் தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.
இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.
ஷீயாக்களிடம் 'முத்ஆ' என்றொரு கொள்கை உண்டு. அதாவது, சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள், சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.
ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் 'முத்ஆ' என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு 'முத்ஆ' செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்ட போது 'செய்யலாம்' என்றாராம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 460
இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது 'ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள்' என்றார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 259
'ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது' என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியது தான்' என்று பதிலளித்தார்களாம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 462
'மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 256
'யூத, கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்' என்று அபுல் ஹஸன்
(8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)
விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம்.
(அதே நூல் அதே பக்கம்)
இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்ன தான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால், 'முத்ஆ' என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித் தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!
விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
(குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292)
விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சி தான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத் தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!
சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!
'ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.'
அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252
'யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு' என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
அல் இர்ஷாத் பக்கம் 252
அல்லாஹ்வின் தூதர் பெயரால் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் 'வர வேண்டியவர்' என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல் - காயிம்' என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
'காயிம்' வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷீயாக்கள். பொய்களையும், கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.
விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்குத் துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள்.
ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.
இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!
23.09.2011. 14:55
