பிப் 14ல் ஒரே இட்த்தில் போராட்டம் நடத்
பிப் 14ல் ஒரே இட்த்தில் போராட்டம் நடத்தலாமே
பிப்ரவரி 14 போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தினால் என்ன?
- அஸீலா பீ.ஏ,
திருவல்லிக்கேனி
போராட்ட வழிமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல் அடையக் கூடியது தான். ஒரே இடத்தில் மக்களைத் திரட்டிப் போராடுவது தான் இப்போதைக்கு நல்லது என்று நாம் கருதும் போது அவ்வாறு முடிவு செய்வோம். பரவலாக நடத்துவது தான் நல்லது என்று கருதும் போது அதற்கேற்ற முடிவை எடுப்போம். எப்போதும் ஒரே மாதிரியான போராட்டத்தை நடத்துவது விவேகமாகாது.
தேர்தல் நெருங்கும் போது தான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் மாநில அளவில் மக்களைத் திரட்டி ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால் அது அதிகம் கவனிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற அதிக வாய்ப்பு இருக்கும்.
இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. மேலும் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டங்களுக்கு அதிகமான செலவுகள் ஏற்படும். வரக்கூடிய மக்களும் அதிகமான பணத்தையும் அதிகமான நேரத்தையும் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். தலைமைக்கும் அதிகமான செலவுகள் ஏற்படும். அதிக செலவு பிடிக்கும் போராட்டத்தை அடிக்கடி நடத்திக் கொண்டிருக்க முடியாது.
மாவட்ட அளவில் நடத்தும் போராட்டங்களுக்கு குறைந்த நேரத்தையும் குறைந்த அளவு பணத்தையும் செலவிட்டு மக்கள் கலந்து கொள்ள இயலும்.
இது போன்ற காரணங்களால் தான் தற்போதுள்ள நிலையில் மாவட்ட அளவில் அதிகமான மக்களைத் திரட்டி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.
உணர்வு 16:24
21.02.2012. 12:56
