மாநாடு போன்ற செலவுகள் தேவைதானா

மாநாடு போன்ற செலவுகள் தேவைதானா

எத்தனையோ அவசியமான தேவைகள் சமுதாயத்துக்கு இருக்கும் போது மாநாடு போன்ற செலவுகள் தேவைதானா

அப்துல் முனாப்

ஒரு மனிதனுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. ஒருவர் தரமான ஆடைக்கு செலவிடும் போது இதற்குச் செலவிடும் பணத்தில் நல்ல பிரியாணி சாப்பிடலாமே என்று கேட்பதும் இந்த ஆடைக்கு செலவிட்ட பணத்தில் நூறு ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமே என்றும் கேட்பது எவ்வாறு அறியமையாக உள்ளதோ அது போல் தான் உங்கள் கேள்வியும் அமைந்துள்ளது.

ஆடைக்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் நீங்கள் ஏழைகளுக்கும் ஏதாவது செய்தால் என்ன என்று கேட்டால் அதில் நியாயம் உள்ளது.

ஒருவரது வீட்டில் ஒரு முதியவர் நோயாளியாக இருக்கும் போது அவர் தனது மகனை கல்லூரியில் சேர்க்க பல லட்சங்களை செலவு செய்தால் கல்லூரியில் சேர்க்காமல் முதியவருக்கு வைத்தியம் பார் என்று கூறக் கூடாது. மருத்த்துவத்துக்கும் செலவு செய்யுங்கள் என்று தான் கூற நம்க்கு உரிமை உண்டு,

ஒருவர் முக்கியமானது என்று நினைப்பது மற்றவருக்கு முக்கியமற்றதாக தோன்றலாம். அவரவர் தனக்கு முக்கியமானது என்று தோன்றுவதற்கு முன்னுரிமை அவருக்கு எது முக்கியத்துவம் என்பதை அவர் தான் முடிவு செய்வார். இதில் அடுத்தவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மேலும் ஒரு தேவைக்காக செலவிடுவதால் இன்னொரு தேவைக்கு செலவிடக்கூடாது என்று சட்டம் இல்லை. மனிதனின் மன நிலையும் அப்படி இல்லை. ஒரு மகனைக் கல்லூரியில் சேர்க்க செலவிட்டதால் மகளுடைய திருமணத்துக்கு அவர் செலவிட மறுக்க மாட்டார். உணவுக்கு செலவிடுவது உடைக்கு செலவிடுவதற்கு தடையாக இருக்காது. இந்த சாதாரண அடிப்படைக்கு மாற்றமாக உங்கள் வாதம் அமைந்துள்ளது.

தனி நபர்களுக்கு தேவை இருப்பது போல் சமுதாயத்துக்கும் இயக்கங்களுக்கும் தேவைகள் உள்ளன. தனித்தனி பார்வைகளும் உள்ளன. அவர்கள் மாநாடு அவசியம் என்று கருதும் போது மாநாடு நட்த்துவார்கள். அதற்காக செலவிடுவதால் அந்தப் பணத்தைக் கல்விக்கு செலவிடலமே என்று கேட்கக் கூடாது.

உஙகளுக்கு கல்விக்குச் செலவிடுவது முக்கியமாக தோன்றலாம். இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் ஏராள்மான மக்களுக்கு இலவச்மாக உயர் கல்வி கிடைக்கலாம் என்பதால் இட ஒதுக்கீடு தான் முதன்மையானது என்று ஒரு இயக்கம் கருதலாம். நீங்கள் எதை முதன்மையானது என்று நினைக்கிறீர்களோ அதையே முக்கியமானதாக அனைவரும் கருத மாட்டார்கள்.

மாநாட்டுக்காக நிதி அளித்த மக்கள் மற்றொரு நல்ல பணிக்கு உதவி செய்ய மறுக்க மாட்டார்கள்.

வீண் விரயம் ஆடம்பரம் மார்க்க முரணான செயல்கள் இடம் பெற்றால் அந்த மாநாடுகளைக் கண்டிக்கலாம். மாநாடே கூடாது என்ற வாதம் ஏற்புடையதல்ல்/

சொந்த வாழ்க்கையில் எப்படி தமது பொருளாதாரத்தை குறிப்பிட்ட் ஒரு வகைக்கு மட்டும் மக்கள் செலவிட மாட்டார்களோ அனைத்து தேவைகளுக்கும் ஒதுக்கீடு செய்வார்களோ அது போல் தான் பொதுக்காரியங்களையும் பார்ப்பார்கள். எனவே ஒரு நற்பணிக்கு உதவுவதால் இன்னொரு நற்பணி பாதிக்காது என்பது தான் உண்மை.

10.11.2011. 03:55




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
98 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி