கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொ

கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா?

மீலாது விழா கந்திரிக்காக அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியை ஒருவர் விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார். நாம் அவரிடம் காசு கொடுத்து வாங்கி உண்ணலாமா?

ஃபாரூக்

பதில்

இறைவன் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

மேற்கண்ட முறையில் அறுக்கப்பட்டவைகளை அன்பளிப்பாக பெறுவதும் கூடாது. காசு கொடுத்து விலைக்கு வாங்குவதும் கூடாது. 

மார்க்கம் ஒரு பொருளை எந்த விதிவிலக்கும் கொடுக்காமல் பொதுவாகத் தடைசெய்தால் அதை விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டதாகும். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

2224حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ يَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمْ الشُّحُومُ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களை அல்லாஹ்  தனது கருணையிலிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (2224)

3026حَدَّثَنَا مُسَدَّدٌ أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَاهُمْ الْمَعْنَى عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ بَرَكَةَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ ثُمَّ اتَّفَقَا عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عِنْدَ الرُّكْنِ قَالَ فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ فَقَالَ لَعَنَ اللَّهُ الْيَهُودَ ثَلَاثًا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمْ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَيْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் தமது பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தி சிரித்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக என்று மூன்று முறை கூறினார்கள். மேலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தான். ஆனால் அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு கூட்டத்தாருக்கு ஒரு பொருளை உண்ணக் கூடாது என்று தடை செய்தால் அதை விற்ற காசையும் (சேர்த்தே) தடை செய்கிறான் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (3026)

மார்க்கம் தடை செய்த பொருளை விற்பது கூடாதென்றால் காசு கொடுத்து அந்தப் பொருளை வாங்குவதும் கூடாது.

மேலுள்ள வசனத்தில் தானாகச் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணி குறிப்பிடப்படுகின்றது. இரத்தம், பன்றி, தானாகச் செத்த பிராணியின் இறைச்சி ஆகியவற்றை ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தாலும் விலைக்குக் கொடுத்தாலும் அதை உண்ண மாட்டோம். உண்ணக் கூடாது. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணிக்கும் இதே சட்டம் தான்.

24.08.2011. 15:07




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
96 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி