அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம் கூற ஆதா

அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம் கூற ஆதாரம் உண்டா

கேள்வி

ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா?

அபூ சாலிஹ்

பதில்

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது.

இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சில பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது.

صحيح ابن خزيمة  - كتاب الصلاة

 

 باب التثويب في أذان الصبح - حديث : ‏378‏        

 نا محمد بن عثمان العجلي ، نا أبو أسامة ، عن ابن عوف ، عن محمد بن سيرين ، عن أنس قال : " من السنة إذا قال المؤذن في أذان الفجر : حي على الفلاح قال : الصلاة خير من النوم "

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும்.

நூல் : சஹீஹு இப்னி குஸைமா (378)

இந்த ஹதீஸ்

அனஸ் (ரலி

முஹம்மது பின் சீரீன்

இப்னு அவ்ஃப்

அபூ உசாமா முஹம்மது பின் உஸ்மான்

ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

இதே செய்தி சுனனுத் தாரகுத்னீ என்ற நூலிலும் ஆதாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

سنن الدارقطني  - كتاب الصلاة

 

 باب ذكر الإقامة واختلاف الروايات فيها - حديث : ‏810‏ 

 حدثنا الحسين بن إسماعيل , ثنا محمد بن عثمان بن كرامة , ثنا أبو أسامة , ثنا ابن عون , عن محمد , عن أنس , قال : " من السنة إذا قال المؤذن في أذان الفجر : حي على الفلاح , قال : الصلاة خير من النوم الصلاة خير من النوم مرتين , الله أكبر الله أكبر لا إله إلا الله " *

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூறுவது நபிவழியாகும்.

நூல் : தாரகுத்னீ (810)

எனவே ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

20.01.2012. 09:41




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
108 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி