உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்
உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டிணிச்சாவு ஏன்
சாந்து மக்பூல் கான்
பதில்
அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்பதை இப்படி நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. ஒருவரும் பட்டிணியால் சாக மாட்டார்கள் என்பது இதன் கருத்து அல்ல. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்று மட்டும் இறைவன் சொல்லவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலக் கெடு உண்டு என்றும் சொல்கிறான்.
ஒருவனுக்கு எப்போது மரணம் என்று இறைவன் நிர்ணயம் செய்துள்ளானோ அதுவரை தான் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளான். தவணை வந்து விட்டால் பொறுப்பேற்றல் என்பது கிடையாது.
பார்க்க திருக்குர்ஆன் 6:2, 7:34, 10:49, 11:3, 16:61, 71:4
இது உணவுக்கு மட்டும் அல்ல. அனைத்துக்கும் உள்ள பொதுவான விதியாகும். ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு இறைவன் தான் பொறுப்பு. ஒருவனின் பாதுகாப்புக்கும் இறைவன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டால் எந்த மனிதனும் சாக மாட்டான் என்று அர்த்தம் அல்ல.
19.01.2012. 03:24
