நபியின் பெற்றோருக்கு வழிகாட்டி யார்?
நபியின் பெற்றோருக்கு வழிகாட்டி யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தகப்பனார் மற்றும் பாட்டனாருக்கு வழிகாட்டி யார்?
ரபீக் அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சமுதாயத்துக்கு தூதராக அனுப்பப்பட்டார்களோ அவர்களுக்கு எந்த வழிகாட்டியும் அனுப்பப்படவில்லை. இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் வழித்தோன்றல்களாக இவர்கள் இருந்த போதும் பல்லாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டதால் இப்ராஹீம் நபியின் வழிமுறை எதுவும் அவர்களிடம் மீதமாக இருக்கவில்லை. இப்ராஹீம் நபி மார்க்கத்தில் இருந்த பத்துக் காரியங்கள் மட்டுமே அவர்களிடம் மீதம் இருந்தன. இதைப் பின்வரும் நபிமொழியில் இருந்து அறியலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், "பத்தாவது விஷயத்தை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம்'' என்று கூறினார்கள்.
நூல் முஸ்லிம் 436
இப்ராஹீம் நபியின் அனைத்து வழிமுறைகளையும் குழிதோண்டிப் புதைத்த அந்தச் சமுதாயத்தால் மேற்கண்ட பத்துக் காரியங்களையும் விட்டுவிட முடியாததால் இவை இயற்கையான வழிமுறைகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட இப்ராஹீம் நபி அவர்கள் இநதச் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட தூதராக இருக்க முடியாது.
ஆனாலும் இவர்கள் ஸாபியின்கள் எனும் கூட்டத்தில் சேர்ந்திருந்தால் அவர்கள் காபிராக கருதப்பட்டிருக்க மாட்டார்கள். இது குறித்து முழுமையாக அறிய
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/Thuthar-Anuppappadatha-NabiSal-Petror-Kafira/
23.07.2011. 06:40
