எல்லா நபிமார்களும் வளைகுடாவைச் சேர்
எல்லா நபிமார்களும் வளைகுடாவைச் சேர்ந்தவர்களா?
ராஜ் முஹம்மத் குவைத்
குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் அனைவரும் வளைகுடா பகுதியைச் சார்ந்தவர்கள் என்ற கூற்று தவறானது.
ஒவ்வொரு இறைத்தூதாரும் எந்தெந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற முழுமையான விபரம் குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. அவ்வாறிருக்க அனைத்து இறைத்தூதர்களும் வளைகுடாப்பகுதியில் தான் அனுப்பப்பட்டார்கள் என்று யூகிப்பது தவறாகும்.
வளைகுடாப் பகுதி அல்லாத வேறு இடங்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் எகிப்து நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள். எகிப்து வளைகுடாப் பகுதி இல்லை.
உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டாலும் வளை குடாப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே இறைத்தூதர்களைப் பற்றிய குறிப்புகளை ஓரளவாவது பதிவு செய்து வைத்திருந்தனர். திருக்குர்ஆன் சொல்லக் கூடிய பல நபிமார்கள் வளைகுடாப் பகுதி மக்களால் முன்னரே அறியப்பட்டிருந்தார்கள்.
ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த நபிமார்களின் பெயர்களையோ அவர்களைப் பற்றிய குறிப்புகளையோ அந்த மக்கள் பாதுக்காக்கத் தவறி விட்டனர். உதாரணமாக இந்தியாவின் பல்வேறு மொழிபேசும் மக்களுக்கு அனுப்பிய தூதர்களின் பெயர்களை அல்லாஹ் கூறினான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயர் அந்த மக்களுக்கு பரிச்சயமில்லாத யாரோ ஒருவரைப் பற்றியதாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும். தங்களுக்கு அனுப்ப்ப்பட்ட தங்கலைச் சேர்ந்தவர்களைப் பற்றி கூறுவ்தாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே. இங்கு அனுப்ப்ப்பட்ட நபிமார்களின் பெயர்களைக் குறிபிடுவதால் ஒரு பயனும் இருக்காது.
பொதுவாக எந்தத் தனி நபரின் பெயரைப் பற்றி குறிப்பிடுவதாக இருந்தாலும் அந்தப் பெயர் மக்களுக்கு அறிமுகமாக இருக்க வேண்டும். அல்லது மக்களில் சிலருக்காவது தெரிந்திருந்தால் மட்டுமே கூறுவதுண்டு. யாருக்குமே தெரியாதவர்களின் செயல்பாடுகளைக் கூறுவது கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
07.01.2012. 01:21
