அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது?

 அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது? 

கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்ப்புக் கூறியதாக ஸஹீஹ் புகாரியில் 5758, 5759, 5760, 7317 ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. முக்கிய கருத்தை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். 

பிழைகளுக்குப் பிராயச்சித்தமாக அடிமை விடுதலை குறிப்பிடப்பட்ட இடங்களில் அல்லது நோன்பு அல்லது ஏழைகளுக்கு உணவு என்று பகரம் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ்களில் அவ்வாறில்லை. அடிமை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடிமைகள் இல்லாத காலத்தில் அல்லது ஒருவரிடம் அடிமை இல்லாத போது, அல்லது அடிமை ஒருவனை விலை கொடுத்து வாங்க வசதியில்லாத ஒருவர் என்று பார்க்கும் போது இது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பது தெளிவு. எனவே, கீழ் வரும் வினாக்கள் எழுகின்றன: 

கேள்வி 1: இந்த ஹதீஸ்களுடன் சேர்த்து வாசித்து விளக்கம் பெறப் போதுமான குர்ஆன் வசனமோ அல்லது மற்றும் ஹதீஸ்களோ உள்ளனவா? 

கேள்வி 2: அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம் என்ன? 

P.G.M.M. ளாஃபிர்

புளுகஹதென்னை, அக்குறணை, இலங்கை

பதில்: வயிற்றில் உள்ள குழந்தையைக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வேறு பரிகாரத்தையும் கூறியுள்ளனர். அடிமை இல்லாத காலத்திலும் அடிமைகள் இருக்கும் காலத்திலும் அந்த நட்ட ஈட்டையும் கொடுக்கலாம்.

அந்தப் பரிகாரம் இது தான்:

أخبرنا يعقوب بن إبراهيم وإبراهيم بن يونس بن محمد قالا حدثنا عبيد الله بن موسى قال حدثنا يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه أن امرأة حذفت امرأة فأسقطت فجعل رسول الله صلى الله عليه وسلم في ولدها خمسين شاة ونهى يومئذ عن الخذف أرسله أبو نعيم

Nasayi 4731

ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின் கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்டஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : நஸாயீ

06.02.2012. 01:50

நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா

நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா

கேள்வி  இரவு நேரங்களில் மூன்று காரணங்களுக்காகவே தவிர விழித்திருக்கக் கூடாது என்று ஹதீஸ்களில் உள்ளதே. ஆனால் சில கம்பெனிகளில் இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை நடக்கிறதே? விளக்கம தரவும்

ஹக்கீம், கேரளா

பதில்

மூன்று காரணங்களுக்காக தவிர அல்லது இரண்டு காரணங்களுக்காக தவிர இரவில் விழித்திருக்க்க் கூடாது என்ற கருத்தில் வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.

இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அஹ்மத் (3421, 3722, 4023, 4187) திர்மிதி  (2654)  மேலும் இன்னும் பல நூற்களில் இடம் பெற்றுள்ளன.

3421 حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَنْ رَجُلٍ مِنْ قَوْمِهِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا سَمَرَ بَعْدَ الصَّلَاةِ يَعْنِي الْعِشَاءَ الْآخِرَةَ إِلَّا لِأَحَدِ رَجُلَيْنِ مُصَلٍّ أَوْ مُسَافِرٍ    رواه أحمد

 

4023   حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنِي مَنْصُورٌ عَنْ خَيْثَمَةَ عَمَّنْ سَمِعَ ابْنَ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا سَمَرَ إِلَّا لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ  رواه أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் நின்று) தொழுபவர், பயணி ஆகிய இருவரைத் தவிர (வேறு யாருக்கும்) இரவு நேரப் பேச்சு என்பது கூடாது.

அறிவிப்பவர்  அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்  அஹ்மத்

இதை அப்துல்லாஹ்பின் மஸ்வூத் வழியாக அறிவிப்பவர் ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டுள்ளது. அவரது பெயரோ விபரமோ கூறப்படவில்லை. எனவே இது ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.

 

3722    حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي مَنْصُورٌ قَالَ سَمِعْتُ خَيْثَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا سَمَرَ إِلَّا لِأَحَدِ رَجُلَيْنِ لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ  رواه أحمد

4187 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ مَنْصُورًا يُحَدِّثُ عَنْ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا سَمَرَ إِلَّا لِرَجُلَيْنِ أَوْ لِأَحَدِ رَجُلَيْنِ لِمُصَلٍّ وَلِمُسَافِرٍ  رواه أحمد

மேற்கண்ட அஹ்மத் 3722, 4187 ஆகிய ஹதீஸ்களில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் வழியாக கைஸமா அறிவிப்பதாக உள்ளது. கைஸமா என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் காலத்தவர் அல்ல.

இவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூதிடம் எதையும் செவியுறவில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் அபூஹாத்தம் ஆகியோர் கூறுகின்றனர்

] و قال عبد الله بن أحمد ، عن أبيه : لم يسمع خيثمة من ابن مسعود . و كذا قال أبو حاتم .

எனவே இது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

இதே செய்தி வேறோரு அறிவிப்பாளர் வரிசையில் தப்ரானியுடைய அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

المعجم الأوسط - (ج 6 / ص 36)

 5721 - حدثنا محمد بن عبد الله الحضرمي قال نا إبراهيم بن يوسف الصيرفي قال ثنا سفيان بن عيينة عن منصور عن حبيب يعني بن أبي ثابت عن زياد بن حدير عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه و سلم لا سمر إلا لمصل أو مسافر لم يرو هذا الحديث عن سفيان بن عيينة إلا إبراهيم بن يوسف الصيرفي [ ص 37 ]

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில்  ஹபீப் பின் அபீ ஸாபித் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் முதல்லிஸ் ஆவார்.  அதாவது தன்னுடைய ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்திகளைக் கேட்டதைப் போன்று அறிவிப்பார்.

تقريب التهذيب - (ج 1 / ص 150)

1084- حبيب ابن أبي ثابت قيس ويقال هند ابن دينار الأسدي مولاهم أبو يحيى الكوفي ثقة فقيه جليل وكان كثير الإرسال والتدليس من الثالثة مات سنة تسع عشرة ومائة ع

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவர் முதல்லிஸ் என்பதைத் தம்முடைய தக்ரீபுத் தஹ்தீப் நூலில் (பாகம் 1 பக்கம் 150) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனவே மேற்கண்ட செய்தியும் பலவீனமானதாகும்.

மேலும் இதே செய்தி ஆயிஷா (ரலி)  அவர்களின் சொந்தக் கூற்றாக முஸ்னத் அபீயஃலா நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

مسند أبي يعلى - (ج 8 / ص 289)

 4879 - قال معاوية : وحدثني أبو عبد الله الأنصاري : عن عائشة زوج النبي صلى الله عليه و سلم قالت : السمر لثلاثة : لعروس أومسافر أو متجهد بالليل

قال حسين سليم أسد : إسناده منقطع

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:  இரவு நேரப் பேச்சு மூன்று வகையினருக்குரியதாகும். 1. புது மாப்பிள்ளை 2. பயணி 3. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்

நூல்  முஸ்னத் அபீ யஃலா பாகம்  8 பக்கம் 289

இந்தச் செய்தி நபியவர்கள் கூறியது கிடையாது. இது ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கரு்த்தாகும்.

மேற்கண்ட செய்திகள் பலவீனமாக இருந்தாலும் பொதுவாக இஷாத் தொழுகைக்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பதை நபியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا   رواه البخاري

இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை பிற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அறிவிப்பவர்  : அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)

நூல் புகாரி 771

 

694  حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الطَّائِفِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الْعِشَاءِ وَلَا سَمَرَ بَعْدَهَا   رواه ابن ماجة

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவிற்கு முன்னால் தூங்கியதும் இல்லை. இஷாவிற்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டதும் இல்லை.

நூல் : இப்னு மாஜா (694)

மேற்கண்ட ஹதீஸ்களில் பொதுவாக இஷாவிற்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபடுவதை நபியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று வந்திருந்தாலும் இது வீணாகப் பேசிக் கொண்டிருப்பதைத்தான் குறிக்கும்.

ஏனென்றால் நபியவர்கள் சில முக்கிய விசயங்களுக்காக ஸஹாபாக்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

154  حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمُرُ مَعَ أَبِي بَكْرٍ فِي الْأَمْرِ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ وَأَنَا مَعَهُمَا وَفِي الْبَاب عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَوْسِ بْنِ حُذَيْفَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ رَجُلٍ مِنْ جُعْفِيٍّ يُقَالُ لَهُ قَيْسٌ أَوْ ابْنُ قَيْسٍ عَنْ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْحَدِيثَ فِي قِصَّةٍ طَوِيلَةٍ وَقَدْ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِي السَّمَرِ بَعْدَ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمْ السَّمَرَ بَعْدَ صَلَاةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِي مَعْنَى الْعِلْمِ وَمَا لَا بُدَّ مِنْهُ مِنْ الْحَوَائِجِ وَأَكْثَرُ الْحَدِيثِ عَلَى الرُّخْصَةِ قَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا سَمَرَ إِلَّا لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ  رواه الترمدي

முஸ்லிம்களுடைய விசயம் தொடர்பாக நபியவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள்நானும் அவ்விருவருடன் இருந்தேன்.

அறிவிப்பவர்  : உமர் (ரலி)

நூல் திர்மிதி (154)

நபியவர்கள் ஆட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் மக்களுடைய நிலை தொடர்பாகவும், போர்கள் தொடர்பாகவும், தேவையான பல விசயங்கள் தொடர்பாகவும் முக்கியமான ஸஹாபாக்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நாம் மேற்கண்ட செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

இதிலிருந்து இஷாத் தொழுகைக்குப் பிறகு வீணாண பேச்சுகளில் ஈடுபட்டிருப்பதுதான் நபிகள் நாயகம் வெறுத்த விசயமே தவிர அவசியமான காரியங்களுக்காக விழித்திருப்பதில் தவறில்லை.

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர் இரவின் பெரும் பகுதியினை வீணான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் , கேளிக்கைகளிலும், வீணான காரியங்களிலும் கழிப்பது மார்க்கத்திற்கு எதிரானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் விரும்பாத இத்தகைய செயல்களை கைவிடுவதே நாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் என்பதற்கு அடையாளமாகும்.

அது போன்று இரவு நேரங்களில் நாம் நமக்காகச் சம்பாதிப்பதும், உழைப்பில் ஈடுபடுவதும் இறைவன் அனுமதித்ததே. பின்வரும் இறைவசனங்கள் அதற்குச் சான்றாகும்.

وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ  [القصص/73]

நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது. (அல்குர்ஆன் 28  73)

وَمِنْ آَيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ  [الروم/23]

இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 30  23)

மேற்கண்ட வசனத்தில் இரவிலும், பகலிலும் இறைவனுடைய அருளைத் தேடுவது இறைவனுடைய அத்தாட்சிகளிலும் உள்ளது என்றும் இறைவனுடைய அருள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

இறைவனுடைய அருளைத் தேடுவதில் நாம் நம்முடைய வாழ்க்கைக்காகச் சம்பாதிப்பதும் உள்ளடங்கும்.

எனவே இரவு நேரங்களில் வியாபாரம் மற்றும் தொழிற் துறைகளில் ஈடுபடுவது மார்க்கத்திற்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் பாதிப்பு ஏற்படாதவாறு நம்முடைய காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

20.01.2012. 08:30

செல்போனில் படம் பிடிக்கலாமா?

செல்போனில் படம் பிடிக்கலாமா?

பதில்:

தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது மார்க்கத்தில் அனுமதி இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது தவறல்ல.

வீடியோ கேம்ராவில் படம் பிடிப்பதற்கு உரிய சட்டம் செல்போன் மூலம் படம்பிடிப்பதற்கும் பொருந்தும். இது குறித்து நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற நூலில் பின்வருமாறு நாம் விளக்கியுள்ளோம்.

டி.வி., வீடியோ

டி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.

நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.

கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

டி.வி.யும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.

மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.

அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.

ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான். கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம்.

ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.

வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்.

கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை. கடைசியாக ஒரு போதனை.

பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன. ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.

இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.

மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பலமுறை யோசிக்க வேண்டும்.

நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும்.

நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.

18.01.2012. 22:38

வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்

வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்

அப்துல் அலீம்

பதில்

இதற்கு எந்த அளவையும் இஸ்லாம் நிர்ணயிக்கவில்லை. காலத்துக்கும் இட்த்துக்கும் ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகும் விஷயங்களில் இஸ்லாம் பொதுவான எல்லையை நிர்ணயிப்பது கிடையாது. எத்தனை மாடிகள் கட்டலாம் என்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய விதிமுறையை உருவாக்க முடியாது.

உறுதியான கட்டுமான பொருள் இல்லாத காலத்தில் ஒரு மாடிக்கு மேல் கட்ட முடியாது. இன்று 200 மாடிகள் கொண்ட கட்ட்டங்களைக் கட்டும் அளவுக்கு உறுதியான கட்டுமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற முன்னேற்றங்களைப் பொருத்து மாடியின் அளவு வித்தியாசப்படும்.

அடிக்கடி நிலச்சரிவும் சுனாமியும் ஏற்படும் ஜப்பானின் பல பகுதிகளில் ஒரு மாடி கூட கட்ட முடியாது. கட்டினால் அழிவு ஏற்படும் போது கடும் பாதிப்பு ஏற்படும். இதைப் பொருத்தும் மாறுபடும்.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் அதிக்மான மாடிகள் கட்டினால் காற்றோட்டம் பாதிக்கப்படும். இடைவெளி விட்டு மக்கள் வசிக்கும் இடங்களில் எவ்வளவு மாடிகள் கட்டினாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. இதைப்பொருத்தும் மாறுதல் ஏற்படும்

நிலத்தின் தன்மையைப் பொருத்தும் இது நிர்ணயிக்கப்படும்.

இப்படி பல காரணங்களால் ஊருக்கு ஊர் காலத்துக்கு காலம் இது மாறிக் கொண்டே வரும் என்பதால் எத்தனை மாடி கட்டலாம் என்று இஸ்லாம் நிர்ணயித்து சொல்லவில்லை.

மாடி கட்டுவதற்கு பொதுவான அனுமதி உள்ளதால் நமது வசதிக்கு ஏற்ப நாட்டின் சட்ட்திட்டங்களை அனுசரித்து மாடிகளை கட்டிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மரத்தால் ஆன மாடியைக் கட்டி அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

378 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால்' அல்லது தோள்பட்டை' கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்' என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாத காலம் தங்கள் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தாம் என்று கூறினார்கள்.

13.01.2012. 21:55

TNTJ மூலம் தப்லீக் செல்லலாமே

TNTJ மூலம் தப்லீக் செல்லலாமே

தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் மக்களுக்கு போதிப்பதற்காக 3 நாள் 40நாட்கள் தப்லீக் செல்லலாமே?

மின்ஹாஜ்

பதில்

தப்லீக் ஜமாஅத் வழியில் நல்ல விஷயங்களை மட்டும் நாம் எடுத்துச் சொல்ல்லாமே என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும். நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. தீமைகளைத் தடுக்காமல் நன்மைகளை அதுவும் மிகச்சில நன்மைகளை மட்டும் தப்லீக் ஜமாஅத் சொல்வதால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகிறது. பெரும்பாலான பள்ளிவாசல்களில் தங்க முடிகிறது.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து நன்மைகளையும் போதிப்பதாலும் அனைத்து தீமனைகளையும் தாட்சண்யமின்றி த்டுப்பதாலும் இப்போது சந்திக்கும் அதே எதிர்ப்புகளுடன் தான் பிரச்சாரம் செய்ய வேண்டி வரும். பள்ளிவாசல்களில் போய் தங்கி அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு உறங்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

மேலும் மனைவி மக்களுக்குச் எய்யும் கடமைகளை விட்டு விட்டு நாற்பது நாட்கள் வருமாறு நாம் அழைக்க முடியாது.

வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு மார்க்கத்தை போதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தப்லீக் ஜமாஅத்தினர் 3 நாள் 10 நாள் 40 நாள் என கூட்டமாக இன்றைக்குக் கிளம்புகின்றனர். மக்களை அழைத்துச் செல்லும் இவர்கள் சரியான முறையில் மார்க்கத்தைப் போதிக்கவில்லை என்பது தனி விஷயம்.

இவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து தொழக்கூடியவர்களை உருவாக்குவதைப் போன்று நமது ஜமாத்தும் இந்தப் பணியைச் செய்யலாமே என்று நீங்கள் கேட்கின்றீர்கள்.

மக்களுக்கு மார்க்கத்தை போதிக்க இவர்கள் செல்லும் வழியை விட பல சிறந்த வழிமுறைகளை நாம் கடைபிடித்து வருகின்றோம்.

ஒவ்வொரு ஊருக்கும் பேச்சாளர்களை அனுப்பி பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றோம். இதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் மார்க்கத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

ஒரு நாள் தர்பியா இரண்டு நாள் தர்பியா என மக்களுக்கு அறிவிப்புச் செய்து நபிவழி அடிப்படையில் தொழுகைப் பயிற்சி மற்றும் பல மார்க்க விஷயங்களை மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றோம்.

இன்றைக்கு தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து வீடுகளிலும் இந்த சாதனம் உள்ளது. இந்த தொலைக்காட்சி வழியாக தினந்தோறும் மார்க்கத்தைப் போதித்து வருகின்றோம். ஏகத்துவம் தீன்குலப் பெண்மனி ஆகிய இதழ்கள் வழியாகவும் மார்க்கத்தைப் போதிக்கின்றோம்.

இன்றைக்கு உலகில் ஒரு மூலையில் இருந்துகொண்டு மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மார்க்க விஷயங்களை எளிதாக எடுத்துச்சொல்ல முடியும். இணையதளம் வாயிலாக மார்க்க விஷயங்கள் மக்களை எளிதாக சென்றடையும் வசதி இன்றைக்கு உள்ளது.

நவீன வசதிகளைச் செய்து கொண்டால் இன்றைக்கு வீட்டில் இருந்து கொண்டே மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இணையதளம் வழியாகவும் மார்க்கத்தை உலக மக்களுக்கு போதிக்கின்றோம்.

தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் மார்க்கப் பணியையும் நமது ஜமாஅத் செய்யும் மார்க்கப் பணிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ்வுடைய கிருபையால் நாம் அவர்களை விட நிறைய நபர்களுக்கு பல்வேறு வழிகளில் மார்க்கத்தை போதித்துக் கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் நிறைய பயன்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இணைவைப்பின் கேந்திரமாக இருந்த பள்ளிவாசல்கள் ஏகத்துவத்தின் கோட்டைகளாக மாறியுள்ளன. பல ஊர்களில் ஏராளமான ஏகத்துவப் பள்ளிகள் புதிதாக தோன்றியுள்ளது.

இவ்வாறு மார்க்கத்தை மக்களுக்கு நிறைவாக எடுத்துச்சொல்வதுடன் குடும்பப் பொறுப்புகளையும் நம்மால் சரியாக நிறைவேற்ற முடிகின்றது. ஆனால் 40 நாள் தப்லீக் சென்றால் குறைந்த நபர்களையே சந்திக்க முடியும். குடும்பத்தைக் கவனிக்காமல் கடமை தவறும் நிலை ஏற்படுகின்றது.

தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத கடந்த காலங்களில் வேண்டுமானால் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்க ûத் தவிர வேறு வழியில்லை எனலாம். ஆனால் எல்லா வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலத்தில் இதைவிடவும் சிறந்த வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளில் நாம் மக்களுக்கு மார்க்கத்தைப் போதித்து வருகின்றோம்.

06.01.2012. 00:16

பட்டாசு கொளுத்தி மகிழலாமா

பட்டாசு கொளுத்தி மகிழலாமா

மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா?

எஸ்.எம்.காசிம்

பதில்

பட்டாசுகள் வெடிப்பொருட்களில் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று எதுவும் இல்லை. அனைத்து பட்டாசுகளும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

சிறிய பட்டாசைக் கொளுத்தினாலும் அதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

குடிசைகளில் பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري

அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 11

2518حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مُرَاوِحٍ عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللَّهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ قُلْتُ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَعْلَاهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ ضَايِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تَدَعُ النَّاسَ مِنْ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ رواه البخاري

அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம், "எந்த நற்செயல் சிறந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.  நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள்.  நான், "என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள், "பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள்.  நான், "இதுவும் என்னால் இயலவில்லையென்றால்....?" என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2518

பட்டாசு கொளுத்துவதை சுற்றுலாச் செல்வது போன்று கருத முடியாது. சுற்றுலாச் செல்வதால் யாருக்கும் எந்த்த் தீங்கும் ஏற்படாது. ஆனால் பட்டாசு கொளுத்துவதால் மேலே நாம் சுட்டிக்காட்டிய தீங்குகள் நிச்சயம் ஏற்படுகின்றன.

 

எனவே பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது.  இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும்.  

01.01.2012. 11:27

கொலை செய்தவனை என்ன செய்ய வேண்டும்?

கொலை செய்தவனை என்ன செய்ய வேண்டும்?

மீரான்

முஸ்லிமல்லாத ஒருவர் ஒரு முஸ்லிமைக் கொன்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்

ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்வது இஸ்லாத்தில் பெரும் பாவமாகக் கூறப்பட்டிருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட  அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று  கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6857

இந்தப் பாவத்தைச் செய்தவர் கொல்லப்பட வேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகின்றது. கொல்லப்பட்டவனின் உறவினர் மன்னித்தால் மட்டுமே இந்தத் தண்டனை விலக்கிக்கொள்ளப்படும்.

கொலை செய்தவனுக்கு இஸ்லாம் கூறும் இந்த்த் தண்டனையை அனைவரும் செயல்படுத்திவிட முடியாது. ஆட்சி அதிகாரம் உள்ளவர்களே இந்த்த் தண்டனையை வழங்க முடியும்.      நாம் வாழும் நாடு இஸ்லாமிய நாடல்ல. இங்குள்ளவர்கள் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இஸ்லாமியச் சட்டத்தை நாம் செயல்படுத்த  வேண்டுமேன்றால் நமக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் நாம் இந்திய அரசாங்கத்தின் கீழ் வாழும் சாதாரண குடிமக்களாகவே உள்ளோம். சட்டத்தை நாமே கையில் எடுத்தால் பெரும் விபரீதங்களைச் சந்திக்க வேண்டிவரும்.

எனவே இந்தச் சூழ்நிலையில் இந்தக் குற்றத்துக்கு அரசாங்கம் என்ன தண்டனை வழங்கினாலும் அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நம்முடைய ஆதங்கத்தை இறைவனிடம் தான் முறையிட முடியும்.

26.12.2011. 12:00

மணி டிரான்ஸ்பர் செய்யலாமா?

மணி டிரான்ஸ்பர் செய்யலாமா?

அதாவது ஒருவரிடம் டாலர் உள்ளது. அவருக்கு நாம் இந்திய ரூபாயாக மாற்றி தருவதற்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் வசூலிக்க படுகிறது. இதை நாம் செய்யலாமா?

அஜ்மல்

ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என இது இரு வகைகளில் அமைந்துள்ளன.

ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சம்மான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும். அது போல் ஒரு நாட்டின் ரூபாய்க்கு சில்லரை மாற்றும் போது கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. நூறு ரூபாயை பத்து ரூபாயாக மாற்றும் போது பத்து நோட்டுகள் வாங்கலாம். பதினொன்று அல்லது ஒன்பது நோட்டுக்கள் வாங்க்க் கூடாது. அது போல் நோட்டுக்கு பதிலாக காயன்ஸ் வாங்கும் போது அதற்குச் சம்மான மதிப்பில் தான் வாங்க வேண்டும்.

நாணய வகை மாறுபட்டால் மார்கெட் நிலவரப்படி அல்லது நம் விருப்ப்ப்படி விலை நிர்ணயிக்கலாம். மார்க்கத்தில் இது குற்றமாகாது. டாலருக்கு ரியாலை அல்லது ரூபாய்க்கு திர்ஹமை மாற்றும் போது அல்லது தங்கத்துக்கு வெள்ளியை மாற்றும் போது எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது உடனுக்குடன் நடக்க வேண்டும். கடனாக இருக்க்க் கூடாது. இன்று ஒரு நூறு டாலர் கொடு நாளை ஐந்தாயிரம் த்ருகிறேன் என்று வியாபாரம் நட்ந்தால் கடனுக்காக நாம் அதிகம் பெற்றதாக ஆகி வட்டியில் சேர்ந்து விடும்.

ஒரே வகையான நாணயத்தை மாற்றும் போது நாம் அதிகமாக பெறுவதில்லை எனப்தால் கடனாக இருக்கலாம். இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து நாளை அதற்கான சில்லறையைப் பெறலாம்.

இவை அனைத்துக்குமான ஆதாரங்கள் புகாரியில் இடம்பெற்ற கீழ்காணும் ஹதீஸ்களில் உள்ளன.

2060 & 2061 அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நாணயமாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி( மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள்.

2175 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக்கொள்ளுங்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2176 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) சம்பந்தப்பட்ட முந்தைய ஹதீஸ் போன்று அபூசயீத் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் அபூசயீத் (ரலி) அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, நீங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாக என்ன அறிவித்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி), நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

2177 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கிவிடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2180 & 2181 அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதிலளித்தனர். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டி, இவர் என்னைவிடச் சிறந்தவர் என்றனர்.

2497 & 2498 சுலைமான் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், நானும் எனது கூட்டாளியான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், உடனுக்குடன் மாற்றிக் கொண்டதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்து விடுங்கள்' என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.

 

16.12.2011. 22:59

அமாவாசையில் மனநிலை பாதிக்குமா?

அமாவாசையில் மனநிலை பாதிக்குமா?
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பது உண்மையா?

 

ராஜா முஹம்மத்

மனநோயாளிகளுக்கு இந்த நாட்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் பாதிப்புகள் ஏற்படும். கடல் அலை ஏற்படுவதற்கு நிலவின் ஈர்ப்புவிசையே காரணமாக உள்ளது. இந்த ஈர்ப்பு விசை பவுர்ணமி அமாவாசை நாட்களில் அதிகமாக இருப்பதால் அந்த நாட்களில் மற்ற நாட்களை விட அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் மன நோயாளிகளின் மனநிலை அதிகம் பாதிக்கப்படுவதை மனநோயாளிகளை கண்காணிப்பவர்கள் மூலம் நாம் அறிகிறோம். இதற்கு நிலவின் சீற்றம் இந்த நாட்களில் அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

09.12.2011. 22:04

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா?

கேள்வி

போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?

அப்துல் காதிர்

பதில்

இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

3670حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ وَائِلٍ الْحَضْرَمِيِّ أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ أَوْ كَرِهَ أَنْ يَصْنَعَهَا فَقَالَ إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ فَقَالَ إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ رواه مسلم

வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்'' என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்'' என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (4015)

இந்த ஹதீஸையும் இதே போல் அமைந்த வேறு சில ஹதீஸ்களையும் ஆதாரமாக்க் கொண்டு ஹராமான பொருள் கலந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகம் அவர்களின் வாதத்தை நிறுவப் போதுமானதாக இல்லை. மதுவையே மருந்தாகப் பயன்படுத்துவதற்கும் மதுவையும் மற்றும் சில பொருட்களையும் கலந்து மருந்து தயாரிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த ஹதீஸில் அந்த மனிதர் மருந்து தயாரிப்பதாகக் கூறவில்லை. மருந்துக்காக மதுவைக் காய்ச்சுகிறேன் என்று தான் அவர் கூறுகிறார். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள். சில நோய்களுக்கு மதுவை அருந்தினால் அதில் குனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரது எயல் அமைந்துள்ளது.

எந்த நோய்க்கும் மது மருந்து அல்ல என்ற முடிவைத்தான் இந்த ஹதீஸில் இருந்து எடுக்க முடியும். மது என்ற பெயரை இழந்து மருந்து என்ற நிலையை அடையும் போது அதைத் தடுக்க இது ஆதாரமாக ஆகாது.

தடை செய்யப்பட்டவைகளைக் கொண்டு மருந்து செய்யலாம் என்ற கருத்துக்குத் தான் வலுவான ஆதாரங்கள் உள்ளன.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகளை நிர்பந்த நிலையில் ஒருவர் செய்தால் அது குற்றமாகாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.

நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்டதைச் செய்தால் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று  2:173, 5:3, 6:119, 6:145, 16:115 அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான்.

மேற்கண்ட வசனங்களில் இரத்தம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுள்ளது. ஆனாலும் நிர்பந்தம் காரணமாக ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்தலாம் என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.

நிர்பந்தம் என்பதன் குறைந்தபட்ச அளவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர்.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் தாமாகச் செத்தவை எங்களுக்கு ஹலாலாகும்?'' என்று நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் அருந்தும் பால், மாலையில் அருந்தும் பால் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ணலாம் என்றனர்.

(நூல்கள்: அஹ்மத் 20893, 20896, தாரமி 1912)

ஒரு நாள் உணவு கிடைக்காவிட்டாலே ஒருவன் நிர்பந்த நிலையை அடைந்து விடுகிறான் என்பதை இந்த நபிமொழியில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

ஒரு நாள் பசியை விட நோயில் விழுந்து கிடப்பது அதிக நிர்பந்தம் என்பதை அறிவுடயோர் மறுக்க மாட்டார்கள். எனவே நோய் நிவாரணம் கிடைக்கும் என்றால் தடை செய்யப்பட்டவைகளை மருந்தாக உட்கொள்ள மார்க்கத்தில் தடை இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு கூட்டத்தினர் நோயுற்ற போது அவர்களை ஒட்டகத்தின் சிறு நீரை அருந்துமாறு கூறினார்கள். அதை அருந்திய உடன் அவர்கள் குணமடைந்தார்கள் என்று ஹதீஸ்களில் காணப்படுகிறது.

. 233 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உக்ல்' அல்லது உரைனா' குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகப் பராமரிப்பாளரைக் கொன்றுவிட்டனர்; ஒட்கங்களை ஓட்டிச் சென்றனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களிடம் வரவே அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்து வர ஒரு) படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்களை(ப் பிடித்து)க் கொண்டு வரப்பட்டது. அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ஹர்ரா' பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்கு தண்ணீர் புகட்டப்படவில்லை.

அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இவர்கள் (பொது மக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டகப் பராமரிப்பாளரைக்) கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரிப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். (இத்தகைய கொடுங்செயல் புரிந்ததனால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.)

புகாரி 1501 மற்றும் 3018, 4192, 4610, 5658, 5686, 5727, 6802, 6804, 6805

சிறுநீர் அசுத்தமானது என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். 7:157 வசனத்தின் மூலமும் இதை நாம் அறிய முடியும்.

அதை மருத்துவத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தச் சொல்லியுள்ளதில் இருந்து தடை செய்யப்பட்ட காரியங்களை மருத்துவத்துக்காக செய்யலாம் என்பதை அறிந்து கொள்கிறோம்.

பெரும்பாலான மருத்துவ முறைகள் தடை செய்யப்பட்ட முறைகளாகத் தான் இருக்கும். அது போல் பெரும்பாலான மருந்துகளும் தடை செய்யப்பட்ட பொருள்களாகவே இருக்கும். இது சாதாரண உண்மையாகும்.

ஒருவரின் வயிற்றை அல்லது உடலின் ஒரு பகுதியை அறுப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது தான். ஒருவரின் உடலில் ஊசியால் குத்துவதும் தடுக்கப்பட்டது தான். ஒருவரை வேதனைப்படுத்துவதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது தான்.

ஆனாலும் மருத்துவம் என்று வரும்போது ஆபரேசனுக்காக உறுப்புகள் அறுக்கப்படுகின்றன. அகற்றப்படுகின்றன. இஞ்சக்‌ஷன் மூலம் குத்தப்படுகிறது. இவை பொதுவாகத் தடுக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்தின் போதும் தடுக்கப்பட்டவை என்று கூற முடியாது.

அது போல் பல்வேறு ரசாயனங்கள் மூலம் தான் எல்லா மாத்திரைகளும் தயாரிக்கப்படுகின்றன. அவை அனைத்துமே சாதாரண நிலையில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை தான். சாதாரணமான நேரத்தில் நோய் தீர்க்கும் மாத்திரைகளைச் சாப்பிடுவது நிச்சயம் கேடு விளைவிக்கும். கேடு விளைவிப்பவை ஹராம் என்பதால் மருத்துவத்தின் போது இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று யாருமே சொன்னதில்லை.

இன்னும் சொல்லப் போனால் உயிர் காக்கும் பல மருந்துகள் விஷத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அறுவை சிகிச்சையின் போதும் மற்ற நேரங்களிலும் இரத்தம் அதிகம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் விஷத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண நேரத்தில் விஷத்தை உட்கொள்ள அனுமதி இல்லை என்றாலும் மருத்துவம் என்று வரும் போது அது அனுமதிக்கப்பட்ட்தாகவும் சில நேரங்களில் கட்டாயக் கடமையாகவும் ஆகிவிடுகிறது.

பட்டாடை ஆண்களுக்கு ஹராம் என்ற போதும் மருத்துவ நோக்கத்தில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்கள் அதை அணிய நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அனுமதி வழ்ங்கினார்கள்.

2919 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்

(ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

புகாரி 2919, 2920, 5839

இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் சட்டங்கள்

·         மதுவை அப்படியே மருந்தாகப் பயன்படுத்தக் கூடாது.

·         அத மருந்தாக மாற்றி பயன்படுத்தலாம்.

·         மருந்துடன் மது கலந்து இருந்தாலும் அதைப் பயன்படுத்தலாம்.

·         மது அல்லாத மற்ற தடை செய்யப்பட்ட பொருள்களில் நிவாரணம் இருப்பது தெரிய வந்தால் அப்படியே அதை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

·         அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தலாம்

இவை அனைத்தும் நிர்பந்தம் என்ற காரணத்தினால் மருந்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்பந்தம் இல்லாத் போது சாதாரணமாக இவற்றையோ இவை கலந்த பொருளையோ உட்கொள்ள அனுமதி இல்லை.

09.12.2011. 08:33

தரகுத் தொழில் கூடுமா?

தரகுத் தொழில் கூடுமா?

நூர்தீன்

பதில்

பொதுவாக தரகு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது. இதற்காகவே சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டி தருவதை தமது முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் தடைபட்டு விடும்.

மனிடஹ் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட தரகுத் தொழிலை முழுமையாக ஆகும் எண்றும் சொல்ல முடியாது. முற்றிலும் கூடாது என்றும் சொல்ல முடியாது.

இதில் ஹராமானதும் உண்டு. ஹலாலானதும் உண்டு. ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து அவருக்கு வேண்டிய தகவலைக் கொடுத்து அதற்காக கமிஷன் பெற்றால் அது ஹலாலான தொழிலாகும்.

ஒரு வீட்டை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். தரகரைத் தொடர்பு கொண்டு இது குறித்த தகவலும் ஒத்துழைப்பும் வேண்டும் எனக் கோருகிறீர்கள். அவர் உங்களுக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு சொத்தை விற்க விரும்பும் நபரிடம் போய் அதிக விலைக்கு தலையில் கட்டி விடுகிறேன்; எனக்கு ஒரு சதவிகிதம் தரவேண்டும் என்று அங்கேயும் பேரம் பேசி உங்களிடம் வந்து குறைந்த விலையில் அமுக்கி விடுகிறேன் எனக்கு ஒரு சதவிகிதம் தர வேண்டும் எனக் கூறினால் இது வடிகட்டிய அயோக்கியத்தனமும் மோசடியுமாகும். இப்படி இரு தரப்புக்கும் சாதகமாக உழைப்பதாக சொல்லி ஏமாற்றாமல் ஏதாவது ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக நட்ந்தால் அதில் மோசடி ஏதும் இல்லாத்தால் அதற்கு தடை போட முடியாது.

ஆனால் நடைமுரையில் இருபக்கமும் கமிஷன் வாங்கி இருவரையும் ஏமாற்றுவது தான் தற்போது தரகுத் தொழிலில் இலக்கணமாக உள்ளது. இது ஹராமாகும்.

28.11.2011. 12:24

உள்ளாட்சியில் மமகவின் மகத்தான வெற்ற

உள்ளாட்சியில் மமகவின் மகத்தான வெற்றி?

தமுமுகவின் அரசியல் பிரிவான மமக 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா?

- அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை.

நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள் என்றால் கட்டாயம் அவர்களை மனநல மருத்துவர்களிடம் தான் காட்ட வேண்டும். கனவுலகில் வாழ்வதும் ஒருவகை மனநோய் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி ஏமாந்த ஊடகங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி எழுதும் போதும் பேசும் போதும் மமகவையும் அதிமுக வெற்றிக்கு காரணமாகக் குறிப்பிட்டனர். ஊடகங்களின் அறியாமையை நினைத்து சமுதாயம் கேலிச் சிரிப்பு சிரித்தது.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு சதிவிகிதத்தைக் குறிப்பிடும் பத்திரிகைகள் அந்தப் பட்டியலில் மமக என்ற பெயரையே குறிப்பிடக் காணோம்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன என்று பட்டியல் போட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. இக்கட்சி 0.70 சதம் ஓட்டுக்கள் வாங்கியதாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 400 வாக்குகளில் 3 வாக்கினை இக்கட்சி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 400க்கு மூன்று என்ற அற்பமான வாக்கைக் கூட மமக வாங்காததால்தான் பட்டியலில் கூட மமகவைச் சொல்ல முடியவில்லை. இது தான் மமக வெற்றியின் லட்சணம்.

இவர்கள் கூறுவது போல் 60 அல்லது 90 இடங்களில் வெற்றி பெற்றது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.  நூறு இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது ஆயிரம் இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது பத்தாயிரம் இடங்களில் 60 இடங்களை பிடித்தார்களா? நிச்சயமாக இல்லை.

தேர்தல் நடந்த மொத்த இடங்கள் ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு இடங்களாகும். 1,32,467 இடங்களில் 60 இடம் என்பது என்ன கணக்கு?

நூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கில் இவர்கள் வெல்லவில்லை. 200 இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை. முன்னூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெற்றி பெறவில்லை. நானூறு இடங்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை. ஐநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை. அறுநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை. மாறாக ஆயிரத்துக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் மமக வெல்லவில்லை. மாறாக இரண்டாயிரம் இடங்களுக்கு ஒரு இடம் என்பது தான் இவர்கள் வெற்றி பெற்ற சதவிகிதக் கணக்கு.

234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். சுமார் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கு வருகின்றது. இந்தக் கணக்குப்படி 1,32,467 இடங்களில் 1,324 இடங்களை வென்றால் தான் சட்ட சபையில் பெற்ற அற்ப வெற்றிக்கு ஈடாகும். 1,324 இடங்களுக்கு பதிலாக 60 இடம் என்பது எவ்வளவு கேவலமான தோல்வி! இதைக் கூட வெற்றி என்று தம்பட்டம் அடிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும்.

சரி அப்படியே வெற்றி பெற்ற இடங்கள் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர் என்றால் அதில் அதிக ஓட்டுக்களையாவது பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். ஆனால் இவர்கள் அதிகம் வென்ற இடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள சின்னச் சின்ன வார்டுகள்தான். அதாவது ஒரு வார்டில் சுமார் 100 முதல் 300 ஓட்டுகள் வரை இருக்கும். இதில் வெற்றி பெறுபவர் 60 அல்லது எழுபது ஓட்டுக்கள் வாங்கினாலே போதும். ஜெயித்து விடலாம். இவர்களே தம்பட்டம் அடித்த ஒரு வார்டு நீடூர் வார்டு; அதன் கணக்கைப் பாருங்கள்.

சபீர் (மமக) - 57

ரோஜா (எ) அப்துல் கபூர் (சுயே) - 47

இதில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நீடூரில் ஒரு தெருவில் 57 வாக்குகள் வாங்கி அதில் ஜெயித்து விட்டதாகக் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. அவ்வூரில் அதிகமான வார்டுகளில் ஜெயிக்கவில்லை. ஒரு வார்டில் 57 வாக்குகள் வாங்கி ஜெயித்துள்ளனர்.

இவர்கள் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்றால் மொத்த வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தம் எவ்வளவு என்பதை பட்டியல் போட்டு விளக்கத் தயாரா?

மொத்தம் உள்ள நான்கு கோடி வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பட்டியல் போட்டு சட்டமன்றத் தேர்தலைவிட தாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறத் தயாரா என்று கேளுங்கள்.

முஸ்லிம் லீக் வென்ற இடங்களில் கால்வாசி இடங்களில் கூட வெற்றி பெறாத இவர்கள் தம்பட்டம் அடிப்பதை அவர்களின் தொண்டர்களே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

எஸ் டி பி ஐ இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றதாகப் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்திற்கும் இந்தப் பதில் பொருந்தும். 
உணர்வு 16:10

21.11.2011. 06:33

தவ்ஹீத் ஜமாஅத்தால் உறவுகள் முறிவு

தவ்ஹீத் ஜமாஅத்தால் உறவுகள் முறிவு
இஸ்லாத்திற்கு முரணான திருமணங்கள் மற்றும் அனாச்சாரமான
, நிகழ்ச்சிகளுக்கு சொந்த உறவினர்கள் வந்து அழைத்தாலும் தவ்ஹீத் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். மாற்றுக் கொள்கையுடையவர்கள் இந்த தவ்ஹீத் ஜமாஅத் வந்ததில் இருந்து உறவுகள் முறிகின்றன என்று சொல்வது சரியா ?

- கிள்ளை யூசுப்,

? உறவுகள் முறியும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை எதிர்த்து யார்  களம் இறங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்தே உள்ளனர். தீமைகளைக் கண்டு யாருக்குக் கோபம் வருகிறதோ தீமையை ஒழிப்பதில் யாருக்கு உண்மையான அக்கறை உள்ளதோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் கொள்கைக்காக உறவை முறிப்பது போற்றுதலுக்கு உரியது தான். விமர்சனத்துக்கு உரியது அல்ல.

பார்க்க: நூல்: புகாரி (2613)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகள் வீட்டுக்குச் சென்ற போது அங்கே மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத அலங்காரத் துணி தொங்க விடப்பட்டதைக் கண்டு விட்டு அதைப் புறக்கணித்து திரும்பினார்கள். மகளின் உறவு பாதிக்கும் என்றோ மகளின் மனம் புண்படும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை. எனவே உறவு முறிவதைப் பற்றி நாம் கவலைப்படாமல் தீமைக்கு எதிராக கடும் போக்கை நாம் மேற்கொள்வது தான் நமது கடமையாகும். அதன் மூலம் தான் தீமைகள் ஒழியும்.
உணரவு 16:10

21.11.2011. 06:27

பொன்னாடையும் ஒரு அன்பளிப்பு தானே

பொன்னாடையும் ஒரு அன்பளிப்பு தானே

அன்பளிப்புகள் மார்க்கத்தில்  அனுமதியாக இருக்கும்போது பொன்னாடை போர்த்திக் கொள்வதை எந்த அடிப்படையில் கூடாது என்கிறீர்கள்? விளக்கம் தரவும்.

- அபு ரிஃபா, துபை

? மனிதனை மனிதன் துதிபாடுவதும் அன்பளிப்பும் ஒன்றாகாது. சாதாரண ஆடையைப் பொன் (தங்கம்) ஆடை என்று சொல்லி தங்க ஆடை போர்த்துவதற்கு தகுதியானவர் இந்தத் தலைவர் என்று சித்தரிக்கவே பொன்னாடை கலாச்சாரம்.

இவனுக்கெல்லாம் பொன்னாடை போர்த்த வேண்டியுள்ளதே என்று வேண்டா வெறுப்பாக இது போர்த்தப்படுவதும், இது முழு நடிப்பு என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

இது போன்ற துதிபாடலுக்கும் நடிப்புக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. அந்தப் பொன்னாடையை வாங்கியவர் அதைப் பயன்படுத்த மாட்டார். அதை எந்த வகையிலும் பயன்படுத்தவும் முடியாது. அவரது அடிவருடிகள் அதை எடுத்துக் கொள்வார்கள். வெறும் பந்தா தவிர இதில் ஒருபயனும் இல்லை.
உணர்வு 16:10

21.11.2011. 06:25

சினிமாதுறை முஸ்லிம்களைத் திருத்த என

சினிமாதுறை முஸ்லிம்களைத் திருத்த என்ன வழி

சினிமாவைத் தான் ஒழிக்க முடியவில்லை சினிமாவில் ஈடுபடும் முஸ்லிம் பெயர்தாங்கிகளைத் தடுக்க டி.என்.ஜே முயற்சி மேற்கொள்ளுமா?

- என்.ஜாஹீர் உசேன், நாச்சியார் கோவில்

? சினிமாவில் ஈடுபடத் துணியும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் அனைவருக்கும் இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட தொழில் என்பது நன்றாகத் தெரியும். மேலும் காசுக்காக எந்த ஈனத்தனத்தையும் செய்யும் கழிசடைகள் தான் இதில் இருக்க முடியும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் மானத்தையும் மார்க்கத்தையும் விற்றாவது பணம் பண்ண வேண்டும் என்று துணிந்து இறங்கியுள்ளனர்.

சினிமாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு தெரிவதை விட உள்ளே இருக்கும் இவர்களுக்குத்தான் அதன் அனைத்து அயோக்கியத்தனங்களும் நன்றாகத் தெரியும்.  எனவே மார்க்கத்தில் கூடாது என்பதையும் நாம் சொல்லி அவர்கள் தெரிய வேண்டியதில்லை. அதன் அயோக்கியத்தனங்களையும் நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் விழக்கூடியவர்களுக்கு எந்த அறிவுரையும் பயன் தராது. 
உண்ரவு 16:10

21.11.2011. 06:14

தேமுதிக சரிவுக்கு என்ன காரணம்

தேமுதிக சரிவுக்கு என்ன காரணம்

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தனித்து நின்று 10 முதல் 12 சதவிகித ஓட்டுக்கள் வாங்கிய தேமுதிக தற்போது கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு தோற்கடிக்கப்பட்டது ஏன்? அந்தக் கட்சிக்கு என்று இருந்த ஓட்டுக்கள் என்னவானது?

- எஸ். அப்துல் பாசித், வாணியம்பாடி

? எந்தக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிகள் வாங்கும் ஓட்டுக்கள் அனைத்தும் அந்தக் கட்சியின் வாக்குகள் அல்ல. தமிழகத்தில் பெரிய கட்சிகளாக அறியப்படும் திமுக, அதிமுகவை எடுத்துக் கொண்டால் கூட அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு ஐந்து என்ற கணக்கில் கூட இருக்க மாட்டார்கள். உங்கள் தெருவில் உள்ள நூறு பேரை அல்லது உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள நூறு பேரை ஆய்வு செய்யுங்கள். அவர்களில் ஐந்து பேருக்கும் குறைவாகத் தான் திமுகவினர் இருப்பார்கள். அதிமுகவினரும் இந்தக் கணக்கில் தான் இருப்பார்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே அறியலாம். இப்படி அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து ஒரு ஐந்து சதவிகிதம் இருப்பார்கள். மீதி 85 சதவிகிதம் மக்களுக்கு எந்தக் கட்சி சார்பும் கிடையாது.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறி மாறி இவர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் திமுக,அதிமுக எப்படி மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்ளலாம்.

தேமுதிகவுக்கு உள்ள உண்மையான வாக்குகள் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தான் இருக்கும். ஆனால் திமுக மீதும் அதிமுக மீதும் அதிருப்தி அடைந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் இன்னொரு நல்ல கட்சியை எதிர்பார்த்தார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதாக சொல்லிக் கொண்டு விஜயகாந்த வந்தார். மக்களுடன் கூட்டணி என்றார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றார். திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சம நிலையில் வைத்து விமர்சனம் செய்தார். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருந்த மக்களுக்கு தங்கள் அதிருப்தியைக் காட்ட இது வாய்ப்பாக இருந்தது.

இரண்டும் வேண்டாம் என்ற கருத்தில் இருந்த சிலர் விஜயகாந்தை நம்பினார்கள். ஆனால் எப்போது அவர் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாரோ அப்போதே அவர் தனித்தன்மையை இழந்து விட்டார். நானும் பத்தோடு பதினொன்று தான் எனக் காட்டி விட்டார். இரண்டில் ஒன்றைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தவிர வழியில்லை என்ற முடிவுக்கு விஜயகாந்தை நம்பியவர்களும் வந்து விட்டனர். தனித்தன்மைக்காக ஆதரவுத் தளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து அதைக் காப்பாற்றாவிட்டால் இந்தக் கதி தான் ஏற்படும்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்றாக இவரைப் போல் வந்தவர் தான் வைகோ. அவர் மூன்றாவது சக்தியாக உருவெடுக்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஒரு தேர்தல் தோல்வியுடன் துவண்டுபோய் திமுகவிடன் கூட்டு வைத்தார், பின்னர் அதிமுகவுடனும் கூட்டு வைத்தார். இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்ற கருத்து உள்ளவர்களின் ஆதரவை அவரும் இழந்தார்.

அதிமுக இப்போது அமோக வெற்றி பெற்றாலும் அவர்களின் வாக்கு ஐந்து சதம் தான். ஒழுங்காக ஆட்சி நடத்தாவிட்டால் இந்த நிலை தலைகீழாக மாறிவிடும்.
உணர்வு 16:9

21.11.2011. 06:11

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது

* சின்ன விஷயத்திற்கு கூட கோபப்படுகிறேன். கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? கோபம் எதனால் ஏற்படுகின்றது?

- லியாகத் அலி, மேலக்கோட்டை ராம்நாடு

?மனிதனுக்கு இறைவன் கொடுத்த இயற்கை குணத்தில் கோபமும் ஒன்றாகும். நபிமார்களும் கூட பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளதால் கோபத்தில் இருந்து முழுமையாக யாரும் விடுபட முடியாது. கோபங்களால் நன்மைகளும் விளைகின்றன. சமுதாயத்தில் தீமைகள் நடக்கும் போது அதில் கோபம் ஏற்பட்டவர்கள் தான் எதிர்த்து களம் இறங்குவார்கள். அநியாயத்துக்கு எதிராக உயிரைத் தியாகம் செய்ய முன் வருவதற்கும் கோப உணர்வு தான் காரணம். தீயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், மனைவி மக்கள் தவறு செய்யும் போது கண்டிப்பதற்கும் கூட கோபம் தான் காரணம். கோபம் கொள்ளாதவர்கள் எந்த சீர்திருத்தப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். ஒருபாதி நன்மை என்றாலும் இன்னும் பாதிக் கோபம் அர்த்தமற்றதாகவும் பிறருக்கு அநீதி இழைப்பதாகவும் உள்ளது. அது போல் கோப உணர்ச்சி எல்லை மீறும் போதும் பாதிப்பு ஏற்படுகிறது.கோபம் ஏற்படும் போது அதைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது.

அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்) எனக் கூறினால் உடனே அந்தக் கோபம் அடங்கிவிடும். இது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழியாகும். பார்க்க புகாரி 6115
உணர்வு 16:9

21.11.2011. 05:58

பெட்ரோல் விலை உயரக் காரணம் என்ன

பெட்ரோல் விலை உயரக் காரணம் என்ன

* கச்சா எண்ணெயின் விலையேற்றம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நஷ்டம் எனக் கூறி பெட்ரோல் விலையை ஏற்றிக் கொண்டே போகிறார்களே, அதற்கான உண்மையான காரணம் என்ன?

?அரசாங்கத்தின் கொள்ளை அடிக்கும் மனப்பான்மை தான் இதற்குக் காரணம். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் பெட்ரோலின் விலை 20 ரூபாய்தான். 20 ரூபாய் பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் சுமார் 50 ரூபாய் வரி போட்டு விட்டு அடக்க விலை 70 ரூபாய் என்று மக்களை ஏமாற்றுகின்றன. 70 ரூபாய் அடக்கமாவதால் 75 ரூபாய்க்கு விற்கிறோம் என்று நாட்டுமக்கள் காதில் பூ சுற்றுகின்றனர். மிகவும் அவசியமான பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் விதி விலக்கு அளித்தால் பெட்ரோல் 25 ரூபாய்க்கு விற்க முடியும். அதன் மூலம் விற்பனையாளருக்கு 20 சதம் லாபமும் கிடைக்கும். அத்துடன் விலைவாசி உயர்வும் உடனடியாக பல மடங்கு குறைந்து விடும். இன்றைய விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணம் பெட்ரோல் விலை உயர்வு தான். சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்பது இதற்குத் தான் கச்சிதமாக பொருந்தும்.
உண்ரவு 19:9

21.11.2011. 05:56

மீடியா தேவை என்ற முடிவுக்கு என்ன கார

மீடியா தேவை என்ற முடிவுக்கு என்ன காரணம்

* முன்பு கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒருவர் மீடியா தேவையா என்ற கேள்விக்குப் பதில் அளித்த நீங்கள் அதற்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. மேலும் மார்க்கத்திற்கு எதிராக சில காரியங்கள் செய்ய வேண்டி வரும். அமைப்பின் நிர்வாகம் சீர்குலையும் என்பதால் நாங்கள் அதற்கு முயற்சி எடுக்கவில்லை என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது மீடியா வேண்டும் என்று உரை நிகழ்த்தினீர்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்?

- காவேரி நகர் யூனூஸ், குவைத்

மீடியா வேண்டாம் என்று நாம் சொன்னது பொருளாதார ரீதியாக அது சாத்தியமாகாது. அதிகம் சமரசம் செய்ய வேண்டிவரும் என்ற காரணத்துக்காகத் தான். நாம் ஒரு சேனல் நடத்த அனுமதி பெற்றாலும் அதை மக்களிடம் நாமே கொண்டு செல்ல இயலாது. சுமங்கிலி போன்ற எம்.எஸ்.ஓ க்கள் மூலமும், டிடிஎச் தொழில் நடத்துவோர் மூலமும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமும் தான் அதைக் கொண்டு செல்ல முடியும்.

ஒவ்வொரு பகுதியிலும் நமது சேனலை ஒளிபரப்பிட பல லட்சங்களை மாதாமாதம் செலுத்தினால் தான் அது மக்களைச் சென்றடையும். இப்போது அரசு கேபிள் வந்து விட்டதால் அவர்கள் அனைத்து இலவச தமிழ் சேனல்களையும் ஒளிபரப்ப வேண்டும். குறிப்பிட்ட சேனலை ஒளிபரப்ப முடியாது என்று அரசாங்கம் சொல்ல முடியாது. நாம் அனுமதி வாங்கியவுடன் அந்தச் சேனல் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து விடும். இந்த வகையில் ஆகும் செலவு இப்போது இல்லாததால் நமக்கு அது சாத்தியமாகும் என்று இப்போது கூறுகிறோம்.

மேலும் செய்திச் சேனல் பற்றி அப்போது நாம் சிந்திக்கவில்லை. மாறாக நம்முடைய ஏகத்துவப் பிரச்சார நிகழ்ச்சி நடத்தும் சேனல் பற்றியே நாம் சிந்தித்தோம். அது போன்ற சேனல்களுக்குத் தான் நிறைய சமரசம் செய்யும் நிலை ஏற்படும். ஆனால் செய்திச் சேனலில் அந்த நிலை ஏற்படாது. இதைத் தான் நாம் இப்போது கூறுகிறோம். சூழ்நிலை மாறியுள்ளதால் அது சாத்தியம் என்று நாம் கருதுகிறோம். ஆனால் அதற்கான முயற்சியில் நாம் இறங்கவில்லை. சாத்தியம் எனக் கூறி இதன் அவசியத்தைப் புரிய வைப்பதை மட்டுமே செய்து வருகிறோம், அதற்கான வாய்ப்பு வந்தால் இன்ஷா அல்லாஹ் தக்க அறிவிப்பு செய்து செயலில் இறங்குவோம்.
உணர்வு 16:8

21.11.2011. 05:52

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்

* உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்?

- ஏ. அப்துல் நாசர், திருச்சி-1.

முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி  முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக இருந்தாலே நம் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற கருத்தை விதைக்கின்றனர்.

ஆனால் உலகில் எல்லா மக்களையும் தான் துன்பங்கள் தொடர்கின்றன. முஸ்லிம்களை விட அதிகத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் துன்பங்களை அனுபவிப்போரும் அதிகமாக உள்ளனர்.

எத்தனையோ நபிமார்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அது போல் நல்ல மக்கள் இன்றும் பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது போல் கெட்டவர்களும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்; உள்ளாக்கப் படுகின்றனர்.

இந்த உலகில் ஏற்படும் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் பொதுவான ஒரு காரணத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு மனிதனின் துன்பத்துக்கும் வெவ்வேறு காரணம் இருக்கலாம். அல்லது மறுமையில் பெரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக இறைவன் சோதிக்கலாம். எனவே முஸ்லிம்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கற்பனை வாதத்தில் இருந்து விடுபடுங்கள். இது போன்ற தவறான எண்ணத்தை விதைப்பதால் சமுதாய மக்களுக்கு அதிக மன அழுத்தம் தான் ஏற்படும்.
உணர்வு 16:8

21.11.2011. 05:49

<< First < Previous [1 / 4] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
95 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி