நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிட

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே!

முஹம்மது இஹ்ஸாஸ்

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் குறைவினால் ஏற்பட்டதாகும். இதில் உண்மையும் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லை.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும் திருக்குர்ஆனின் அற்புதநடை தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம் தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.

நபித்தோழர்கள் தான் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

நீதி மன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதி மன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?

நீதிமன்ற உத்தரவை இவர் தான் என்னிடம் கோண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படி கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?

உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும் உங்கள் வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை.

குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்து தந்திருந்தும் நபித்தோழர்கள் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்கிறீர்களே அதுவாவது உண்மையா? கேள்வி கேட்கும் உங்களுக்கும் எனக்கும் நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நம்க்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?

நமக்கு முந்தின தலைமுறையும் நபீயிடம் நேரடியாக்க் கேட்டு நம்க்கு சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா?

இதையே இன்னும் தீவிரமாக சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் ஐதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள்.

இப்படியெல்லாம் கூர்மையாக சிந்தித்தால் உங்கள் வாதம் பொருளற்றது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற வாதங்களுக்கு பதிலாக நாம் பல ஆண்டுகளுக்கு முன்னா எழுதிய கருத்து வேறு தகவல் வேறு என்ற ஆய்வுக்கட்டுரை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோரின் தவறான வாதங்களுக்குப் பதில் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்.

25.01.2012. 05:34

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா

கேள்வி ஒருவர் விபச்சாரக் குற்றத்தின் விபரீதத்தை உணராமல் இளம் வயதில் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து விடுகிறார். இப்போது அதற்காக மனம் வருந்துகிறார். இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும்.

முஹம்மத் ஜஃப்ரீன்

பதி்ல்

விபச்சாரக் குற்றம் என்பது தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் போது சாட்சிகளின் அடிப்படையில் விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் திருமணம் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கல்லெறிதல் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும். திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கசையடி தண்டனை வழங்கப்படும்.

விபச்சாரக் குற்றம் செய்தவர் இணைகற்பிக்காத நிலையில் மரணித்திருந்தால் நிச்சயமாக அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் அவர் சுவனம் செல்வார். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் பெரும் பாவம் என்று அறியாமல் விபச்சாரம் செய்து விட்டால், பின்னர் அது தவறு என்று அறிந்து மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக இறைவன் அந்தப் பாவத்தை மன்னிப்பான். இறைவனின் கருணையிலிருந்து நாம் நிராசையடைந்து விடக்கூடாது.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ''நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

(அல்குர்ஆன் 4 : 17, 18)

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் ''உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்'' எனக் கூறுவீராக! உங்கள் இறைவன் அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 6 : 54)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்

( அல்குர்ஆன் 16 : 119)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக

(அல் குர்ஆன் 39 : 53)

மேற்கண்ட திருமறை வசனங்கள் அனைத்தும் அறியாமையினால் ஒருவர் ஒரு பாவத்தைச் செய்த பிறகு மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினால் நிச்சயமாக இறைவன் அவரை மன்னிப்பான் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

மேலும் விபச்சாரம் செய்தவர்கள் செய்கின்ற நற்காரியங்களின் காரணமாகவும் இறைவன் அவர்களது பாவங்களை மன்னிப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண் டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3467)

எனவே அறியாமையினால் விபச்சாரம் என்ற பெரும்பாவத்தைச செய்தவர்கள் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் நிச்சயமாக இறைவன் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பான்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்''எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது 'எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், ''அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?'' எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்''  என்று பதிலளித்தார்கள்.'

அறிவிப்பவர் : அபூதர் (லி)  

நூல் : புகாரி (1237)

மேற்கண்ட நபி மொழியிலிருந்தும் விபச்சாரக் குற்றம் பெரும் பாவமாக இருந்தாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

20.01.2012. 08:50

நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்க

நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா

கேள்வி  நபித்தோழர்கள் எம்மை போன்று சாதாரண மனிதர்களா?

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில் 

நீங்கள் நபித்தோழர்களைப் பற்றி கேட்கிறீர்கள். நபிமார்கள் அனைவருமே மனிதர்கள் தான் மனித்த்தனமையில் நம்மைப் போன்றவர்கள் தான் என்று குர்ஆன் கூறும் நிலையில் நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா என்று கேள்வி கேட்பது வியப்பாக உள்ளது..

உண்ணுதல், பருகுதல், மலம் ஜலம் கழித்தல், மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடுதல், வியாபாரம் செய்தல், மற்றும் இன்பம் கவலை துன்பம் துக்கம் போன்ற அனைத்து உலகரீதியிலான தன்மைகளிலும் நபித் தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

நபிமார்கள் ஆனாலும் நபித் தோழர்கள் ஆனாலும் யாரும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்கள் மற்றும் இணை வைப்பாளர்களைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூற வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 18 : 110)

மேலும் 41 : 7 வது வசனத்திலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்தே நபியவர்களும்,  நபித்தோழர்களும் நம்மைப் போன்ற மனிதத் தன்மைக்கு உட்பட்டவர்கள் தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையிலும் இறையச்சத்திலும் நம்மை விட மிகச் சிறந்த மனிதர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித் தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் பல வகையில் மற்றவர்களை விட அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும் அவர்கள் மீது (பிணைக் கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி இவரைக் கண்ணியப்படுத்தி இவருக்கு உதவியும் செய்து இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் : 7:157

கிராம வாசிகளில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும் இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

ஹிஜ்ரத் செய்தோரிலும் அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும் நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் : 9:99,100

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் : 9:108

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும் சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் : 9:117118

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் : 57:10

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும் இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்..

திருக்குர்ஆன் : 59:9

நபித் தோழர்களின் நம்பிக்கை, கொள்கை உறுதி, மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையை மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் புகழ்ந்து போற்றுகிறான்.

'என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல் : புகாரி : 3673

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : திர்மிதி : 3797

உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப் படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : புகாரி 2651 3650 6428 6695

நபித் தோழர்களைச் சிறப்பித்துக் கூறும் இது போன்ற வசனங்களும் நபிமொழிகளும் உள்ளதால் நபித்தோழர்களை நாமும் மதிக்கிறோம்.

மனிதர்கள் என்ற வகையில் நபித்தோழர்களிடம் எத்தகைய பாரதூரமான காரியங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களின் தியாகத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று நாம் நம்புகிறோம்.

சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட நபித் தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போர் செய்து கொண்டாலும் அந்தச் செயலை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டோமே தவிர அவர்கள் தவறுகள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திலேயே சஹாபாக்கள் சிறந்தவர்கள் என்பதே நமது நிலைபாடு.

சஹாபாக்களைக் கண்ணியப்படுத்தி மதிப்பது வேறு! அவர்களைப் பின்பற்றி நடப்பது வேறு. குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக எவ்வளவு பெரிய நபித்தோழர் நடந்திருந்தாலும் அதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாது.

குர்ஆனிலும் நபிவழியிலும் கூறப்படாத வணக்கத்தை எவ்வளவு பெரிய நபித் தோழர் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம்.

திருக்குர்ஆனும் நபிவழியும் அப்படித் தான் நமக்கு வழிகாட்டுகின்றன என்பதால் அதைப் பின்பற்றியே நாமும் அவ்வாறு கூறுகிறோம்.

17.01.2012. 04:22

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் எத்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் எத்தனை

கேள்வி : குர்ஆனுக்கு எத்தனை ஹதீஸ்கள் முரண்படுகின்றன?

முஹம்மது இஹ்சாஸ்

பதில் : திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது.

நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி 'இது என் இறைவனிடமிருந்து வந்தது' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித் தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

குர்ஆனின் எந்த வசனம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பார்களா என்று கடுகளவு கூட சந்தேகத்துக்கு இடமில்லை. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.
ஆனாலும் நபித் தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். நம்பகமான அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கப்ப்டும் ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதாதவரை சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை.

 

குர்ஆனுடன் மோதும் போது 'இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது' என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.
'ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல் குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.

இவ்வாறு குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்கள் மற்ற பலவீனமான ஹதீஸ்களோடு ஒப்பிடும் போது மிக மிக்க் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும்.

அதே நேரத்தில் இத்தனை தான் என்று வரையறுத்துக் கூற முடியாது. நம்முடைய ஆய்விற்கு வராத சில செய்திகளும் கூட குர்ஆனுக்கு முரண்படும் வகையில் அமைந்திருக்கலாம்.

அறிவிப்பாளர்களின் மீதுள்ள குறைகள் நமக்கு தெரியாத காரணத்தினால் முன்பு ஆதாரப்பூர்வமானவை என்று கூறிய சில ஹதீஸ்கள் கூட பின்பு பலவீனம் என்று கூறியிருக்கின்றோம்.

நாம் முன்னர் ஆதாரப்பூர்வமானது என்று கூறிய ஹதீஸ்களை பலவீனம் என்று அதற்குரிய சான்றுகளோடு குறிப்பிடும் போது எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றோமோ அது போன்று முறையான சான்றுகளுடன் ஒரு செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறப்படுமென்றால் அதை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்வது தான் அறிவுடைமை ஆகும்.

அறிவிப்பாளர் சரியில்லாத ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதை நாமும் மற்ற அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் அந்த ஹதீஸ்களின் பட்டியலை தாருங்கள் எனக் கேட்டால் அது சரியாக இருக்குமா? இது போல் தான் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.

பலவீனமான ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறமுடியுமா? என்று நாம் அவர்களிடம் கேட்டால்  அவர்கள் நமக்கு என்ன பதில் கூறுவார்களோ அதே பதிலைத்தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களின் எண்ணிக்கையைக்  கேட்பவர்களுக்கும் நாம் கூறுகின்றோம்.

இப்போது நாம் இதுவரை நாம் ஆய்வு செய்து அறிந்து வைத்துள்ள பட்டியலைக் கொடுத்தாலும் அது முடிந்த முடிவாக இருக்கப் போவதில்லை. மேலும் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக நமக்குச் சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாக இருந்தால் அதுவும் பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும்.

17.01.2012. 04:08

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூற

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான்! என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர் "தனக்கு தானே அநீதி இழைத்துக் கொண்ட எனது அடியார்களே!.... " என்று தொடங்கும் வசனத்தை க்காட்டி பின்வருமாறு கூறுகின்றனர். அதாவது நபியவர்களை பார்த்து அல்லாஹ்வே நம்மை "எனது அடியார்களே"! என்று அழைக்கச் சொல்வதன் மூலம் நாம் நபியவர்களுக்குக் கூட அடிமை என்பதாக்க் கூறுகின்றனர் இது சரியா?

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில்

இறைவனுக்கு இணை வைக்கின்ற விஷயத்தில் வெறிபிடித்து திரிபவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைக்கின்றனர். இந்தப் பெரும் பாவத்தைச் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி முழு இணைவைப்பில் விழுந்து விடுகிறார்கள்.

இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு அவன் எஜமானாகவும் மனிதர்கள் அவனுக்கு அடிமையாகவும் இருப்பது தான். இறைவனுக்கு மட்டும் உரிய இந்த அந்தஸ்த்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று நம்பிவிட்டால் இதற்கு மேல் பெரிய இணை வைப்பு என்ன இருக்கின்றது?. இவர்கள் கீழ்க்காணும் வசனத்திலிருந்து இந்த தவறான வாதத்தை வைக்கின்றனர்.

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53)39

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் (39 : 53)

இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது எனது அடியார்களே என்று நபியை அல்லாஹ் கூறச் சொல்கிறான். எனவே நாம் நபிக்கும் அடிமைகள் தான் என்பது இவர்களின் வாதம்.

பொதுவாக எல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்களுக்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன.

உங்களுக்கும் உங்கள் தகப்பனாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் ஒருவரை அழைத்து தந்தையிடம் ஒரு செய்தியை சொல்லி அனுப்புகிறீர்கள். என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு வா என்று நண்பரிடம் கூறுகிறீர்கள்.

இந்த வார்த்தையை மட்டும் பார்த்தால் உங்கள் உங்கள் தந்தை உங்கள் நண்பருக்கும் தந்தை போல் தோற்றம் தருகிறது. வார்த்தையில் அந்தக் கருத்து இருந்தாலும் செய்தியைச் சொன்ன நீங்களும் சொல்லி அனுப்பிய உங்கள் நண்பரும் உங்கள் தந்தையும் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் மேற்கண்ட வாசகத்தில் ஒரு சொல் மறைந்து நிற்கிறது என்று தான் இதைப் புரிந்து கொள்வோம்.

என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு வா

என்றால்

என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று (நான் சொன்னதாக) சொல்லி விட்டு வா

என்றுதான் அர்த்தம்.

நான் சொன்னதாக என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் சந்தர்ப்பம் இதை நமக்குச் சொல்லித் தந்து விடுகிறது. உங்கள் நண்பரின் தந்தை வேறு உங்கள் தந்தை வேறு என்பதால் அதுவே சரியான பொருளை நமக்குச் சொல்லித்தந்து விடுகிறது.

இதுபோல் ஆயிரமாயிரம் சொற்பிரயோகங்கள் அனைத்து மொழி பேசும் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆனும் அருளப்பட்டதால் இது போல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து நடையில் குர்ஆன் அருளப்படவில்லை. பேச்சு நடையில் அருளப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல விபரீதங்கள் ஏற்படும்.

பேச்சு வழக்கில் அதை எடு இதை எடு என்று சொல்வோம். எதைச் சொல்கிறோம் என்பதை வார்த்தை விளக்காவிட்டாலும் சூழ்நிலை அதை விளக்கி விடும். ஆனால் எழுத்து நடையில் பேனாவை எடு பென்சிலை எடு என்று தான் எழுத வேண்டும். அதாவது பேச்சுக்களுக்கு பொருள் கொள்ளும் போது அது சொல்லப்பட்ட சூழ்நிலைகளும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

இன்னும் தெளிவாக இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

திருக்குர் ஆனின் முதல் அத்தியாயம் அல்ஃபாத்திஹா அத்தியாயம்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் அகிலத்தில் அதிபதி. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அது ஆரம்பிக்கிறது.

சூழலைக் கவனிக்காமல் சொல்லை மட்டும் பார்த்தால் இது அல்லாஹ்வின் வார்த்தை அல்ல எனக் கூறலாம். அல்லாஹ் சொல்வதாக இருந்தால் இப்படி படர்க்கையாகக் கூறாமல்

எல்லாப் புகழும் எனக்கே. நான் அகிலத்தின் அதிபதி. நான் அளவற்ற அருளாளன். நிகரற்ற அண்புடையோன்

என்று தான் கூற வேண்டும்.

சொல்லமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு 39:53 வசனத்துக்கு இந்தக்கேடு கெட்டவர்கள் அர்த்தம் செய்தது போல் இதற்கும் அர்த்தம் செய்வார்களா? இச்சொல் அமைப்பு அல்லாஹ் கூறுவது போல் இல்லை. எனவே இது அல்லாஹ்வைப் புகழ்வதற்காக முஹம்மது நபி சுயமாகச் சொன்ன வார்த்தை என்று இவர்கள் கூறுவார்களா?

மனிதர்களைக் கடவுளாக்கும் இந்த கேடுகெட்ட கும்பல் போகும் பாதையில் நாம் சென்று குர்ஆனை வாசித்தால் குர்ஆன் இறைவேதம் அல்ல என்று கூறும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே தான் நம்முடைய தமிழாக்கத்தில் அடைப்புக் குறிக்குள் மறைந்து கிடக்கும் வார்த்தையைப் போட்டுள்ளோம்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

என்று நாம் நமது தமிழாக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்துக்கோ வேறு நபிமார்களுக்கோ மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று பல வசனங்கள் தெளிவாகக் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிமைகளாக இருக்க முடியாது. மக்கள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் எனக் கூற எந்த இறைத் தூதருக்கும் தகுதியில்லை என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُونَ (79)3

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே கூறினர்)

அல்குர்ஆன் (3 : 79)

நபிமார்கள் உட்பட பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்இதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَانِ عَبْدًا(93)19

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

அல்குர்ஆன் (19 : 93)

இறைவன் திருமறைக்குர்ஆனில் பல இடங்களில் மனிதர்களை எனது அடியார்களே என்று அழைக்கின்றான். அது போன்று  39 : 53 வது வசனத்திலும் எனது அடியார்களே என்று இறைவனே அழைத்துள்ளான். இறைவனுடைய இந்த அழைப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடப்படுகின்றது. இதுவே குர்ஆனைச் சரியாக புரிந்துகொள்ளும் முறை.

நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளாகத் தான் இருக்க முடியும். அவர்கள் எவ்வளவு தான் இறைவனுக்கு நெருக்கமானாலும் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து மாற முடியாது. பின்வரும் ஆதாரங்கள் இதை தெளிவுபடுத்துகின்றது.

وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا(19)72

அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனிடம் பிரார்த்திக்க எழும் போது (மக்கள்) கூட்டம் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.

அல்குர்ஆன் (72 : 19)

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)17

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

அல்குர்ஆன் (17 : 1)

1130 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ زِيَادٍ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا رواه البخاري

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தமது பாதங்கள்' அல்லது "கணைக்கால்கள்' வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது "நான் நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.

நூல் : புகாரி (1130)

3445 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تُطْرُونِي كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ رواه البخاري

இப்னு அப்பாஸ் (லி) அவர்கள் கூறுகிறார்கள் :

"கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடிமை' என்றும் "அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (லி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல் : புகாரி 3445

17.01.2012. 03:53

விதி என்றால் என்ன

விதி என்றால் என்ன

செய்யத் அஹ்மத் குலாம்

பதில்

இந்த உலகத்தில் நடக்கின்ற அனைத்துக் காரியங்களும் இறைவனின் நாட்டத்தாலே நடக்கின்றது. இறைவன் நாடாமல் உலகத்தில் அனு கூட அசைவதில்லை.

நம் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டாலும் துன்பம் ஏற்பட்டாலும் அவை அனைத்து இறைவன் நாடியதாலே ஏற்படுகின்றது. இந்த நம்பிக்கைக்கு விதி என்று கூறுகிறோம். இதை நம்பியவர் தான் முஸ்லிமாக இருக்க முடியும்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையை மக்களுக்கு விளக்குவதற்காக மனித வடிவில் வந்து சில கேள்விகளை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். விதியைப் பற்றியும் கேட்டார்கள்.

அடுத்து அவர், "ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மைதான்'' என்றார்.

நூல் : முஸ்லிம் (1)

இது குறித்து மேலும் அறிய

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/-/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vithiyai_nambuvathu_eppadi/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/vithiyai_nambuvathu_eppadi/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vithi_unmai_enraal_sorkam_narakam_en/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/Vithi/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/ellam_vithipadi_than_wadakkiratha/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/vithiyai_vella_mudiyuma/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vithiyai_nambi_virupam_pol_vazalama/

13.01.2012. 12:18

சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்கள

சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்களாக இருப்பார்கள்?

ஷாஜஹான்

பதில்

மறுமையில் சொர்க்கவாசிகள் அனைவரும் முப்பத்து மூன்று வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி திர்மிதீ, அஹ்மது, பைஹகீ, மற்றும் தப்ரானீ ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது.

2468حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ مُحَمَّدُ بْنُ فِرَاسٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا عِمْرَانُ أَبُو الْعَوَّامِ عَنْ قَتَادَةَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلَاثِينَ أَوْ ثَلَاثٍ وَثَلَاثِينَ سَنَةً قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَبَعْضُ أَصْحَابِ قَتَادَةَ رَوَوْا هَذَا عَنْ قَتَادَةَ مُرْسَلًا وَلَمْ يُسْنِدُوهُ رواه الترمذي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சொர்க்கவாசிகள் முப்பது வயது அல்லது முப்பத்து மூன்று வயது உள்ளவர்களாகக சொர்க்கத்திற்குள் நுழைவார்கள். அவர்களின் உடலில் (தேவையற்ற) முடிகள் இல்லாமலும் (கண்களுக்கு) சுர்மா இட்டவர்களாகவும் அழகிய தோற்றத்தில் செல்வார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

நூல் : திர்மிதி (2468)

திர்மிதியில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் இம்ரான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மனனசக்தி குறைபாடுள்ளவர் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே இந்த அறிவிப்பை ஆதாரமாக்க் கொள்ள முடியாது.

மேலும் இந்தச் செய்தி ரிஷ்தீன், யசீத் பின் சினான், அலீ பின் ஸைத் பின் ஜத்ஆன் ஆகியோரின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களும் பலவீனமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் வழியாக இது அறிவிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

எனவே சொர்க்கவாசிகளின் வயதைத் தெளிவாக்க் குறிப்பிடும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. ஆனால் சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் எப்பொழுதும் இளமையோடு இருப்பார்கள் என ஆதாரப்பூர்வமான செய்தி கூறுகின்றது.

5069حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ وَاللَّفْظُ لِإِسْحَقَ قَالَا أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ قَالَ الثَّوْرِيُّ فَحَدَّثَنِي أَبُو إِسْحَقَ أَنَّ الْأَغَرَّ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ وَنُودُوا أَنْ تِلْكُمْ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோயுற மாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் இறக்க மாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடு தான் இருப்பீர்கள்; ஒரு போதும் துன்பம் காண மாட்டீர்கள்'' என்று அறிவிப்புச் செய்வார். இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்து கொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்'' (7:43) என்று கூறுகின்றான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5457

மேலும் அவர்களுக்கு சொர்க்கத்தில் வாழ்க்கைத் துணையும் கொடுக்கப்படுவதாகக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் (2 : 5457)

சொர்க்கவாசிகள் வாலிபர்களாக இருப்பார்கள் என்பதை இந்த ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

13.01.2012. 12:09

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வே

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா?

ரஃபீக்

பதில்

 

மத்ஹபைப் பின்பற்றும் போலி அறிஞர்கள் இஸ்லாமியச் சட்டங்களைப் பல வகைகளாகப் பிரித்து மக்களைக் குழப்பி வருகின்றனர்

இவர்கள் மார்க்க விஷயங்களை ஃபர்ள் (குர்ஆனில் கூறப்பட்ட கட்டாயக் கடமைகள்) வாஜிபு (நபிவழியில் கூறப்பட்ட  கட்டாயக் கடமைகள்) நஃபில் (உபரியானது) சுன்னத் (நபிவழி) முஸ்தஹப்பு (விரும்பத்தகுந்தது) சுன்னதுன் முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட நபிவழி) சுன்னதுன் கைரு முஅக்கதா (வலியுறுத்தப்படாத நபிவழி) என்று பிரிக்கின்றனர்.

மார்க்கச் சட்டங்களை இத்தனை வகைகளாகப் பிரிக்க வேண்டியதில்லை. அனைத்து மார்க்க விஷயங்களையும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் ஒரு வகை. உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஸகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம் செய்ய வேண்டும். இவற்றைச் செய்யக் கடமைப்பட்டவர்கள் இவற்றைச் செய்யாவிட்டால் குற்றம் ஏற்படும். இதற்காக மறுமையில் கேள்வி கேட்கப்படும். எனவே இது மாதிரியான விஷயங்களை விட்டுவிடாமல் சரியாக நிறைவேற்ற வேண்டும்.

செயல்படுத்துவதற்கும் செயல்படுத்தாமல் விடுவதற்கும் அனுமதியுள்ளவை இரண்டாவது வகையாகும். கடமையான தொழுகைக்கு முன் பின் நிறைவேற்றப்படும் சுன்னத்தான தொழுகைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுபோன்ற வணக்கங்களைக் கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. செய்தால் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டால் நன்மையும் கிடைக்காது. குற்றமும் ஏற்படாது.

நபி மொழிகளில் மேலே நாம் குறிப்பிட்டுள்ள படி கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்களும் விரும்பி செய்யக்கூடிய காரியங்களும் கூறப்பட்டுள்ளன.

திருக்குர் ஆனில் வலியுறுத்தப்பட்டால் அது கடமை என்றும் நபிமொழியில் வலியுறுத்தப்பட்டால் அது சுன்னத் என்று சிலர் கூறுவது அறியாமையாகும்.

திருக்குர்ஆனில் வலியுறுத்தப்பட்ட பல விஷயங்கள் கடமையாக இல்லாமல் இருக்கின்றன. உதாரணம் ஜகாத் அல்லாத தான தர்மங்கள்.

அது போல் ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளிலும் கடமையானவை உள்ளன.

கடமை என்றோ கடமை அல்ல என்றோ ஒரு வணக்கத்தை முடிவு செய்வது மிக எளிதானது தான்.

ஒரு காரியத்தைச் செய்யுமாறு அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிட்டதுடன் அக்கட்டளையை மீறினால் கடும் தண்டனையும் கிடைக்கும் என்று சொல்லி இருந்தால் அவை கட்டாயக் கடமை என்று புரிந்து கொள்ளலாம். கடமையை விட்டால் தான் அல்லாஹ் தண்டிப்பான். கடமையாக்காத ஒன்றைச் செய்தால் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.

ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளை இட்டு அதைச் எய்தால் பெரிய பரிசுகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டால் அல்லது பரிசோ தண்டனையோ குறிப்பிடாமல் ஆர்வமூட்டப்பட்டால் அதை சுன்னத் அதாவது கடமையாக்கப்படாத நபிவழி என்று முடிவு செய்யலாம்.

முஸ்தஹப், மக்ரூஹ், சுன்னத் முஅக்கதா என்று வகைப்படுத்த தக்க காரணமோ, ஆதாரமோ இல்லை.

13.01.2012. 10:52

ஜின்கள் மனிதனுக்குள் மேலாடுமா

ஜின்கள் மனிதனுக்குள் மேலாடுமா

கேள்வி

என்னுடைய உறவினர் ஒருவரின் மீது முஸ்லிம் ஜின் ஒன்று பிடித்துள்ளதாக கூறுகிறார். அவர் மற்றவர்களைப் பற்றி கூறும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மையாக உள்ளது.

ஜின்கள் மனிதன் மீது வரமுடியாது என்றால் இது எப்படி சாத்தியம்?

அலி

பதில்

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் "ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது'' என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றதுஅதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றான், பகலில் தெரியாது என்று கூறுகிறான் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அவனிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

(அல்குர்ஆன் 33:4)

மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.

அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லைதிருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அந்நபர் மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாதுமறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு யார் வேண்டுமானாலும் இவ்வாறு நடித்து மற்றவர்களை ஏமாற்ற முடியும். ஜின்களின் சக்தியைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார். "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. "கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன்'' என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும், "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்" (என்று சுலைமான் கூறினார்)

(அல்குர்ஆன் 27:38-40)

கண் மூடித் திறப்பதற்குள் வேறு ஒரு நாட்டிற்குச் சென்று அந்த நாட்டு அரசியின் சிம்மாசனத்தைத் தூக்கி வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாக அல்லாஹ் இந்த வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்இதை அபார சக்தி என்று கூறலாம்.

நீங்கள் கூறும் அந்த நபர் இது போன்ற அற்புதத்தைச் செய்து காட்டுவாரா? என்று கேட்டுப் பாருங்கள்தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, காட்டி அதை அபார சக்தி என்று கூறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

அவரால் மற்றவர்களைப் பற்றிய விபரங்களைக் கூற முடியும் என்றால் அதிமான மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு பொருளை கையில் மறைத்துக்கொண்டு இது என்ன? என்று கேளுங்கள். அவர் பார்த்திராத யாரோ ஒருவரை அழைத்து வந்து அவரைப் பற்றிய முழு விபரங்களை துல்லியமாக்க் கூறச் சொல்லுங்கள். அவரால் ஒருக்காலும் கூற முடியாது. அவரிடம் ஜின் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி விடும்.

ஒவ்வொரு நாளும் மனிதன் பிறந்துகொண்டும் மரணித்துகொண்டும் இருக்கின்றான். மற்றவர்களைப் பற்றி விபரம் அவருக்குத் தெரியும் என்றால் நாளைக்கு யார் யாரெல்லாம் மரணிப்பார்கள். எங்கு மரணிப்பார்கள். எப்படி மரணிப்பார்கள் என்று கேளுங்கள்.

இதை விடுத்து பிறரை ஏமாற்றும் தந்திர வேலைகளைச் செய்து ஜின் ஒரு மனிதனுக்குள் ஊடுறுவி இருப்பதாகக் கூறுவது தெளிவான ஏமாற்று வேலைமுறையாக விசாரித்தால் உண்மை வெளியாகும்.

மேலும் ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை என திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது. எனவே மற்றவர்களைப் பற்றி ரகசியங்களை இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாராலும் கூற முடியாது. இதற்கு மாற்றமாக ஜின்களுக்கு இந்த சக்தி உண்டு என்று நம்புவது இணைவைப்பாகும். இந்த நம்பிக்கை நம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்.

ஜின்கள் மகத்தான் ஆற்றல் உள்ள படைப்பாக இருந்தாலும் மறைவான விஷயங்களை அறிந்து கொள்வதில் மனிதர்களைப் போன்று பலவீனமானப் படைப்பாகும்.

மறைவான ஞானம் என்பது இறைவனுக்கு மட்டும் உரித்தான அம்சமாகும். இந்த அதிகாரத்தை இறைவன் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் வழங்கவில்லை. இறைவனுடைய தன்மைகளில் ஒன்றான மறைவானவற்றை அறியும் ஆற்றல் ஜின்களுக்கு இருப்பதாக ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்தவராக ஆகிவிடுவார்.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (27 : 65)

மறைவான ஞானம் தங்களுக்கு இல்லை என்று ஜின்கள் கூறியதை திருக்குர்ஆன் எடுத்துக்கூறுகிறது.

பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.

அல்குர்ஆன் (72 : 10)

ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் மும்முறமாக ஈடுபட்டிருந்தார்கள்ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார். ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார்.

பிறகு கைத் தடியைக் கறையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகு தான் ஸுலைமான்  இறந்து நீண்ட காலமாகிவிட்டது என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிகிறது.

தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஸுலைமான் நபி மரணித்துவிட்டதைக் கூட ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் (34 : 14)

09.01.2012. 00:00

விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நி

விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டுமா

ஒரு ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எவ்விதத்திலும் அந்த ஹதீசுக்கு விளக்கம் கொடுக்க முடியாவிட்டால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி உள்ளது என்பதற்கு ஆதாரம் என்ன?

ராசிக் ரஃபீக்தீன்

பதில்

ஒரு ஹதீஸிற்கு சிலருக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றால் அது அவரது அறியாமையாகும். அது போன்ற ஹதீஸ்களை நிறுத்தி வைக்க முடியாது.

ஆனால் யாராலும் விளக்கம் கொடுக்க முடியாவிட்டால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஹதீஸ் கலையில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

செய்தி மோசமான கருத்தை உள்ளடக்கி இருந்தால் அல்லது அதன் கருத்து குர்ஆனுடைய போதனைக்கு எதிராக இருந்தால் மட்டுமே அந்த செய்திக்கு யாராலும் விளக்கம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எதார்த்தமான உண்மைக்கு மாற்றமாக இருந்தாலும் இந்த நிலை ஏற்படும்.

இது போன்ற செய்திகள் பொய்யானவை என்று அதன் கருத்தை வைத்தே முடிவு செய்து விடலாம். அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை எடைபோடுவதற்குக் காரணம் அவர்கள் அறிவிக்கும் செய்தியில் தவறு வந்துவிடக் கூடாது என்பது தான்.

 

செய்தியில் தவறு இருப்பது உறுதியாகி விட்டால் இதற்குப் பின் அறிவிப்பாளர்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது. நமக்கு முன் பல அறிஞர்கள் இந்த விதியை மக்களுக்குத் தெளிவுபடுத்தியும் இதனடிப்படையில் பல செய்திகளை நிராகரித்தும் இருக்கின்றனர். 

ஹதீஸ் கலையில் இந்த விதி இருக்கின்றதா என்று நீங்கள் கேட்டுள்ளதால் அதற்கான ஆதாரத்தைத் தருகின்றோம்.

تدريب الراوي ج: 1 ص: 276

أن من جملة دلائل الوضع أن يكون   مخالفا  للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية أو السنة المتواترة أو الإجماع القطعي أما المعارضة مع إمكان الجمع فلا

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று : விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருக்கும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

تدريب الراوي ج: 1 ص: 277

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث   يباين المعقول  أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

ஒரு செய்தி அறிவுக்கு மாற்றமாகவோ (சரியான) ஆதாரத்திற்கு மாற்றமாகவோ அடிப்படை விதிமுறைகளுக்கு எதிராகவோ இருப்பதை நீ கண்டால் அது இட்டக்கட்டப்பட்ட செய்தி என்று அறிந்துகொள் எனக் கூறியவரின் கூற்று மிக அழகானது. இவ்வாறு இப்னுல் ஜவ்ஸி கூறினார்.

التعريفات ج: 1 ص: 113

549 الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من   مخالفة  آية أو خبر متواتر أو إجماع وكان رواية عدل وفي مقابله السقيم

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதில் மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113

08.01.2012. 12:54

உலக அழிவு வெள்ளிக்கிழமையில் தானா

உலக அழிவு வெள்ளிக்கிழமையில் தானா

ராஜா முஹம்மத் குவைத்

உலக அழிவு வெள்ளிக்கிழமையன்று தான் நிகழும் என ஆதாரப்பூர்வமான நபிமொழி கூறுகின்றது.

1411 و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் (1548)

இந்தக் கேள்வியை உலகம் எப்போது அழியும் என்பதை அறிந்து கொள்வதற்காக நீங்கள் கேட்டிருந்தால் இதுவே அதற்குப் போதுமான பதிலாகும்.

ஆனால் சிலர் இந்தச் செய்தியில் இருந்து தவறான வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அதாவது உலகம் அழிவது வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் ஒரே கிழமை என்பதற்கு இது ஆதாரமாக் உள்ளது என்பது தான் அந்த வாதம்

இந்த வாத்த்துக்கான பதில் பிறை ஓர் ஆய்வு எனும் நூலில்  உலகம் எப்போது அழியும் என்ற தலைப்பின் கீழ் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பார்க்க

http://onlinepj.com/books/pirai-or-vilakam/

08.01.2012. 09:57

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன?

அர்ஷத்

பதில்

இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது.

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

 

ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது என்பதையும் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும் பாவிகளுக்கே பரிந்துரை செய்வார்கள் என்பதையும் அறியலாம். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவாக அறிவிக்கின்றன

حدثنا العباس العنبري حدثنا عبد الرزاق عن معمر عن ثابت عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه وفي الباب عن جابر -      ترمذي 2359

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது சமுதாயத்தில் பெரும்பாவம் புரிந்தவர்களுக்கே எனது பரிந்துரை உண்டு.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : திர்மிதீ (2359)

4301 حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا أَبُو بَدْرٍ حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُيِّرْتُ بَيْنَ الشَّفَاعَةِ وَبَيْنَ أَنْ يَدْخُلَ نِصْفُ أُمَّتِي الْجَنَّةَ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ لِأَنَّهَا أَعَمُّ وَأَكْفَى أَتُرَوْنَهَا لِلْمُتَّقِينَ لَا وَلَكِنَّهَا لِلْمُذْنِبِينَ الْخَطَّائِينَ الْمُتَلَوِّثِينَ رواه إبن ماجه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

எனது சமுதாயத்தில் பாதி நபர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பது அல்லது பரிந்துரை செய்வது (இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும்) தேர்வு செய்யும் உரிமை எனக்கு (இறைவனால்) வழங்கப்பட்டது. நான் பரிந்துரை செய்வதைத் தேர்வு செய்தேன். ஏனென்றால் அது தான் நிறைவானதாகவும் விசாலமானதாகவும் உள்ளது. அந்தப் பரிந்துரை இறையச்சமுள்ளவர்களுக்கு என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை நிச்சயமாக அது பாவக்கறை படிந்த பாவிகளுக்கே உரியது.

அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி)

நூல் : இப்னு மாஜா (4301)

மறுமையில் உயர்ந்த தகுதியைப் பெற்றவர்கள் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். ஆனால் நரகவாசிகள் பிறருடைய பரிந்துரை மூலம் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்வரும் செய்தி இதைத் தெளிவுபடுத்துகின்றது.

حدثني عبيد الله بن سعيد وإسحق بن منصور كلاهما عن روح قال عبيد الله حدثنا روح بن عبادة القيسي حدثنا ابن جريج قال أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله يسأل عن الورود فقال نجيء نحن يوم القيامة عن كذا وكذا انظر أي ذلك فوق الناس قال فتدعى الأمم بأوثانها وما كانت تعبد الأول فالأول ثم يأتينا ربنا بعد ذلك فيقول من تنظرون فيقولون ننظر ربنا فيقول أنا ربكم فيقولون حتى ننظر إليك فيتجلى لهم يضحك قال فينطلق بهم ويتبعونه ويعطى كل إنسان منهم منافق أو مؤمن نورا ثم يتبعونه وعلى جسر جهنم كلاليب وحسك تأخذ من شاء الله ثم يطفأ نور المنافقين ثم ينجو المؤمنون فتنجو أول زمرة وجوههم كالقمر ليلة البدر سبعون ألفا لا يحاسبون ثم الذين يلونهم كأضوإ نجم في السماء ثم كذلك ثم تحل الشفاعة ويشفعون حتى يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن شعيرة فيجعلون بفناء الجنة ويجعل أهل الجنة يرشون عليهم الماء حتى ينبتوا نبات الشيء في السيل ويذهب حراقه ثم يسأل حتى تجعل له الدنيا وعشرة أمثالها معها - مسلم 278

நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். (அவர்களில்) தப்பிச் செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).

பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை' (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறி எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். (ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (316)

நல்லவர்கள் அனைவரும் சொர்க்கம் சென்ற பிறகு தான் நரகத்தில் உள்ளவர்களுக்காக பரிந்துரை நடைபெறும் என இந்தச் செய்தி தெளிவாக்க் கூறுகின்றது.

சிறிய அளவு ஈமான் உள்ளவர்களுக்குத் தான் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை தேவைப்படும். உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு இந்தப் பரிந்துரை தேவைப்படாது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

حدثنا يوسف بن راشد حدثنا أحمد بن عبد الله حدثنا أبو بكر بن عياش عن حميد قال سمعت أنسا رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا كان يوم القيامة شفعت فقلت يا رب أدخل الجنة من كان في قلبه خردلة فيدخلون ثم أقول أدخل الجنة من كان في قلبه أدنى شيء فقال أنس كأني أنظر إلى أصابع رسول الله صلى الله عليه وسلم - البخاري 7509

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் "என் இறைவா! எவரது உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!'' என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் "எவரது உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக'' என்று மீண்டும் பிரார்த்திப்பேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (7509)

ولكن عليكم بمحمد صلى الله عليه وسلم فيأتوني فأقول أنا لها فأستأذن على ربي فيؤذن لي ويلهمني محامد أحمده بها لا تحضرني الآن فأحمده بتلك المحامد وأخر له ساجدا فيقول يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تعط واشفع تشفع فأقول يا رب أمتي أمتي فيقول انطلق فأخرج منها من كان في قلبه مثقال شعيرة من إيمان فأنطلق فأفعل ثم أعود فأحمده بتلك المحامد ثم أخر له ساجدا فيقال يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تعط واشفع تشفع فأقول يا رب أمتي أمتي فيقول انطلق فأخرج منها من كان في قلبه مثقال ذرة أو خردلة من إيمان فأخرجه فأنطلق فأفعل ثم أعود فأحمده بتلك المحامد ثم أخر له ساجدا فيقول يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تعط واشفع تشفع فأقول يا رب أمتي أمتي فيقول انطلق فأخرج من كان في قلبه أدنى أدنى أدنى مثقال حبة خردل من إيمان فأخرجه من النار - البخاري 7510

நான் (மறுமையில் மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்பேன். அப்போது, "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்'' என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், "முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்று சொல்வேன். அப்போது "செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் "அணுவளவு' அல்லது "கடுகளவு' இறை நம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்லப்படும்.

நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்பேன். அதற்கு அவன், "செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று (த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (7510)

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவிகளுக்குத் தான் பரிந்துரை செய்வார்கள் என்று மேற்கண்ட செய்திகள் தெளிவாகக் கூறுகின்றன.

பாவிகளுக்குத் தான் பரிந்துரை உண்டு என்றாலும் நாம் மறுமையில் பாவிகள் பட்டியலில் சேர்வோமா? எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்வோமா என்பது நமக்குத் தெரியாது. நாம் பாவிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்ல முடியாமல் போனால் அப்போது நமக்கு நபிகள் நாயகத்தின் பரிந்துரை தேவைப்படும். எனவே யாருக்குப் பரிந்துரை தேவைப்படும் என்பதை அறிய முடியாததால் நமக்கு அந்த நிலை ஏற்பட்டால் நபியின் பரிந்துரை கிடைக்க வேண்டும் ஆசைப்படலாம். இப்படி நபித்தோழர்களும் ஆசைப்பட்டுள்ளனர்.

حدثنا حسن بن موسى يعني الأشيب قال ثنا سكين بن عبد العزيز قال أخبرنا يزيد الأعرج قال عبد الله يعني أظنه الشني قال ثنا حمزة بن علي بن مخفر عن أبي بردة عن أبي موسى قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره قال فعرس بنا رسول الله صلى الله عليه وسلم فانتهيت بعض الليل إلى مناخ رسول الله صلى الله عليه وسلم أطلبه فلم أجده قال فخرجت بارزا أطلبه وإذا رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم يطلب ما أطلب قال فبينا نحن كذلك إذ اتجه إلينا رسول الله صلى الله عليه وسلم قال فقلنا يا رسول الله أنت بأرض حرب ولا نأمن عليك فلولا إذ بدت لك الحاجة قلت لبعض أصحابك فقام معك قال فقال رسول الله صلى الله عليه وسلم إني سمعت هزيزا كهزيز الرحى أو حنينا كحنين النحل وأتاني آت من ربي عز وجل قال فخيرني أن يدخل شطر أمتي الجنة وبين شفاعتي لهم فاخترت شفاعتي لهم وعلمت أنها أوسع لهم فخيرني بأن يدخل ثلث أمتي الجنة وبين الشفاعة لهم فاخترت لهم شفاعتي وعلمت أنها أوسع لهم فقالا يا رسول الله ادع الله تعالى أن يجعلنا من أهل شفاعتك قال فدعا لهما ثم إنهما نبها أصحاب رسول الله صلى الله عليه وسلم وأخبراهم بقول رسول الله صلى الله عليه وسلم قال فجعلوا يأتونه ويقولون يا رسول الله ادع الله تعالى أن يجعلنا من أهل شفاعتك فيدعو لهم قال فلما أضب عليه القوم وكثروا قال رسول الله صلى الله عليه وسلم إنها لمن مات وهو يشهد أن لا إله إلا الله - احمد 18892

என்னுடைய இறைவன் எனது சமுதாயத்துக்கு நான் பரிந்துரை செய்வது அல்லது அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை சொர்க்கத்திற்குள் அனுப்புவது (இவ்விரண்டு விஷயங்களில் ஒன்றை) தேர்வு செய்யும் உரிமையை எனக்கு வழங்கினான். பரிந்துரையே அவர்களுக்கு விசாலமானது என்று நான் கருதி பரிந்துரை செய்வதை தேர்வு செய்துகொண்டேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அபூ மூசா (ரலி) அவர்களும் அவர்களுடன் வந்த ஒருவரும் அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய பரிந்துரைக்குரிய நபர்களில் எங்களையும் ஆக்குமாறு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அவ்விருவரும் நபித்தோழர்களிடம் (வந்து) நபியவர்கள் கூறிய இவ்விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய பரிந்துரைக்குரிய நபர்களில் அல்லாஹ் எங்களையும் ஆக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினர். நபியவர்கள் அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். (இதை மற்ற) கூட்டத்தினர் (செவியுற்று) பொறாமை கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதிகமாக வரத் தொடங்கினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை' (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று யார் உறுதியுடன் கூறி மரணித்தாரோ அவர்கள் அனைவருக்கும் எனது பரிந்துரை உண்டு என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி)

நூல் : அஹ்மது (18892)

நபியவர்களின் பரிந்துரை அவர்களின் பிரத்யேகப் பிரார்த்தனையால் தான் கிடைக்கும் என்று நபித்தோழர்கள் புரிந்துகொண்டனர். எனவே தான் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வரத்தொடங்கி விட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை அவர்கள் பிரார்த்தனை செய்யாவிட்டாலும் ஏகத்துவக் கொள்கை உள்ளவர்களுக்கு கிடைக்கக் கூடியது என்று நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஏகத்துவக் கொள்கை இல்லாவிட்டால் அவருக்காக யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள். ஏகத்துவக் கொள்கையில் இருந்தால் அவர்கள் எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை மூலம் சொர்க்கம் செல்வார்கள் என்ற விதி வகுக்கப்பட்டு நமக்கும் சொல்லப்பட்டு விட்டது.

எனவே தான் அனைவரும் பரிந்துரை வேண்டி வந்த போது அவ்வாறு செய்யாமல் ஏகத்துவத்தில் உள்ள அனைவருக்கும் பரிந்துரை உண்டு எனக் கூறி பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடித்து வைத்து விட்டார்கள்.

இதன் பின்னர் இறைவா எனக்கு நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனமாகும்.

எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத் தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.

மறுமைப் பேறுகளுக்காக துஆ செய்யக் கற்றுத் தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!' என்று கேட்குமாறு கற்றுத் தரவில்லை. அவ்வாறு யாரும் கேட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த்தாக்வும் ஆதாரம் இல்லை.

பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.

பொதுவாக சிறந்ததைத் தான் நாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்வது தான் சிறந்தது.

பரிந்துரை குறித்து தெளிவான விளக்கம் வருவதற்கு முன்னர் தான் நபித்தோழர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் எங்களுக்காக பரிந்துரைக்க துஆச் செய்யுங்கள் எனக் கேட்டனர். ஏகத்துவக் கொள்கை உள்ள அனைவருக்கும் என் பரிந்துரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்ட பிறகு அதையே மீண்டும் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமானதாகும்.

உலக விஷயத்தில் நாம் விரும்புவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத்தராத்தை கேட்கலாம். ஆனால் மறுமை விஷயமாக செய்யும் எந்த துஆ வானாலும் எந்தக் கோரிக்கைஅயானலும் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ கற்றுத்தந்தால் தான் கேட்க வேண்டும். நம் இஷ்டப்படி கேட்கக் கூடாது.

27.12.2011. 23:58

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன

ஜே.எம்.சர்ஜூன்

இறைச்செய்திகள் குர்ஆன் என்றும் ஹதீஸ்கள் என்றும் ஹதீஸ் குத்ஸி என்றும் மூன்று வகைகளாக மக்களால் கூறப்படுகிறது. இதன் இலக்கணத்தை நாம் அறிந்து கொண்டால் ஹதீஸ் குத்ஸி என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
  

குர்ஆன் என்பது லவ்ஹூல் மஹ்பூல் எனும் மூலப்பிரதியில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக இறைவன் கொடுத்து அனுப்பியதாகும். 

இறைவனிடமிருந்து வந்த செய்திகள் அனைத்தும் குர்ஆனாகாது. அது போல் ஜிப்ரீல் மூலம் வந்த அனைத்தும் குர்ஆன் ஆகாது. திருக்குர்ஆனுக்கு அல்லாஹ்விடம் ஒரு மூலப்பிரதி உள்ளது. அந்த மூலப்பிரதியில் உள்ளதை ஜிப்ரீல் மூலம் அல்லாஹ் கொடுத்து அனுப்புவான். அது மட்டும் தான் குர்ஆன் எனப்படும். 

ஜிப்ரீல் வழியாக வழங்கப்பட்டது தான் திருக்குர்ஆன் என்பதை  2:97, 16:102, 81:19, 26:193, 53:5-8 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம். 

ஜிப்ரீல் அவர்கள் மூலப்பிரதியில் இருந்து இல்லாமல் இறைவனின் செய்தியைக் கொண்டு வந்தால் அது குர்ஆனாக ஆகாது. அது ஹதீஸில் சேரும். இதை  56:77,78, 85:21,22 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம். 

இது அல்லாத அனைத்து இறைச் செய்திகளும் ஹதீஸ்கள் எனப்படும். 

வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51 

இறைவன் நேரடியாகப் பேசுவதன் மூலமோ வானவர்கள் மூலமோ உள்ளத்தில் உதிக்கச் செய்வதன் மூலமோ இறைவன் தனது செய்திகளை இறைத்தூதர்களுக்கு தெரிவிப்பான். அவை ஹதீஸ்கள் எனப்படும். 

ஹதீஸ்கள் அனைத்தும் இறைச் செய்திகள் தான். ஆனால் இந்த இறைச் செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் போது பயன்படுத்தும் சொல்லமைப்பைப் பொறுத்து ஹதீஸ் குத்ஸி என்ற ஒரு வகை பிற்காலத்தில் பிரிக்கப்பட்டது. 

குத்ஸீ என்றால் பரிசுத்தமானது; தூய்மையானது என்று பொருள். ஹதீஸ் குத்ஸீ தூய்மையான ஹதீஸ் என்று பொருள்படும்.

நோன்பாளிக்கு அல்லாஹ் கூலி கொடுப்பான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னால் அது சாதாரண ஹதீஸ் என்றும் 

நான் கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னால் அது ஹதீஸ் குத்ஸீ என்றும் 

குறிப்பிடுகின்றனர். 

இவ்வாறு வகைப்படுத்துவது அறியாமையால் விளைந்ததாகும். மேலே சொன்ன இரண்டு வகையான சொற்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருந்தால் இரண்டுமே பரிசுத்தமானவை தான். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து பெற்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னவை தான். இரண்டுக்கும் தரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. 

ஒன்றை தூய்மையான ஹதீஸ் என்றும் மற்றொன்றை சாதாரண ஹதீஸ் என்றும் கூறுவதன் மூலம் குத்ஸீ ஹதீஸ் தான் அல்லாஹ்வின் வழியாக்க் கிடைத்தவை என்றும் மற்ற ஹதீஸ்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொந்தமாக சொன்னவை என்றும் சித்தரிகிறார்கள். இது அறிவற்ற வகைப்படுத்துதல் ஆகும். 

ஹதீஸ் குத்ஸீ என்ற வகைப்படுத்துதலில் எந்த அறிவார்ந்த சிந்தனையும் இல்லை. ஹதீஸ்கள் அனைத்துமே ஹதீஸ் குத்ஸீ –பரிசுத்த ஹதீஸ்கள் - தான். 

இதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியை குறிப்பிடலாம்.

2227حَدَّثَنِي بِشْرُ بْنُ مَرْحُومٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ رواه البخاري 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன்என்று அல்லாஹ் கூறுகின்றான்.  ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒருகூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்! 

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (2227) 

ஹதீஸுல் குத்ஸி அனைத்தும் சரியானவை என்று கூற முடியாது. பலவீனமானவர்கள் பொய்யர்கள் வழியாகவும் இது போன்ற செய்திகள் அறிவிக்கப்படும். எனவே மற்ற ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்களை ஆராய்வது போன்று இந்த வகை ஹதீஸ்களையும் ஆராய வேண்டும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மறுத்துவிட வேண்டும்.

27.12.2011. 11:22

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதா?

எம்.ஏ.எம்.ஃபாரிஸ்

ஹதீஸ்களும் நிச்சயம் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த மனிதரின் போதனைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை அளவுக்குப் பாதுகாக்கப்படவில்லை. அந்த ஒரு மனிதரின் போதனைகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தப் பாதுகாப்பு ஏற்பட்டை திருக்குர்ஆனின் பாதுகாப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித் தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள். பல நபித்தோழர்களும் மனப்பாடம் செய்திருந்தனர். இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரி பார்ப்பார்கள். இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.

நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ இரண்டு மூன்று நபித் தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு - அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் - சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்கள்

எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.

குர்ஆனை அல்லாஹ்வே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை அறிஞர்கள் தான் இதற்கான விதிகளைக் கண்டறிந்து ஹதீஸ்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதால் மனிதர்கள் வகுத்த பாதுகாப்பு வளையத்தை மீறி தவறான ஹதீஸ்கள் சரியான ஹதீஸ்கள் என்ற பெயரில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதையும் களை எடுப்பதற்குத் தான் பலவித நிபந்தனைகளை அறிஞர்கள் வகுத்தனர். அவற்றில் ஒன்று தான் குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.

மேலும் அறிவிப்பவர் நம்பகமானவராகவும் நினைவாற்றல் உள்ளவராகவும், தனக்க் முந்திய அறிவிப்பாளரிடம் நேரில் கேட்டவராகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை வகுத்து போலி ஹதீஸ்களைக் களை எடுத்தார்கள். இது போன்ற விதிமுறைகளை மனிதர்கள் மூலம் வகுக்கச் செய்து அல்லாஹ் ஹதீஸ்களையும் பாதுகாக்கிறான்.

குர்ஆனுடைய் பாதுகாப்பு என்பது அதில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ மாற்றவோ முடியாத முதல் நிலை பாதுகாப்பாகும்.

ஹதீஸ்களுடைய பாதுகாப்பு என்பது அதில் கூடுதல் குறைவு செய்ய் வழி இருந்தாலும் சரியானதைக் கண்டு பிடித்து தவறானதை ஒதுக்க முடியும். இது இரண்டாம் நிலையில் உள்ள பாதுகாப்பாகும்.

26.12.2011. 11:49

நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்

நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்றப்படுவாரா

ஒரு முஸ்லிம் தான் செய்த தவறுக்கு நரகில் தண்டனையை அனுபவித்துவிட்டு பிறகு சொர்க்கம் செல்வான் என்று கூறுகிறார்கள். இது சரியா?

பதில்

ஒரு முஸ்லிம் செய்த பாவத்தை அல்லாஹ் நாடினால் மறுமையில் மன்னிக்கலாம். அவருடைய தண்டனையைத் தள்ளுபடி செய்து நேரடியாகவே அவர் சொர்க்கம் செல்லலாம். இதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.

4894 حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَاهُ قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَتُبَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَزْنُوا وَلَا تَسْرِقُوا وَقَرَأَ آيَةَ النِّسَاءِ وَأَكْثَرُ لَفْظِ سُفْيَانَ قَرَأَ الْآيَةَ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْهَا شَيْئًا مِنْ ذَلِكَ فَسَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ رواه البخاري

உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்; திருடமாட்டோம் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?'' என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 4894 

அல்லாஹ் நாடினால் அதற்காக அவரை தண்டிக்கவும் செய்யலாம். அவர் பாவத்துக்குரிய தண்டனையை பெற்றுவிட்டு பிறகு அவர் இஸ்லாமிய கொள்கையை ஏற்றதற்காக சொர்க்கம் செல்வார். இதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.

22حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى أَخْرِجُوا مِنْ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيُخْرَجُونَ مِنْهَا قَدْ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا أَوْ الْحَيَاةِ شَكَّ مَالِكٌ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً قَالَ وُهَيْبٌ حَدَّثَنَا عَمْرٌو الْحَيَاةِ وَقَالَ خَرْدَلٍ مِنْ خَيْرٍ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மறுமையில் விசாரணைகள் முடிந்தபின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பிறகு "உள்ளத்தில் கடுகளவேனும் இறை நம்பிக்கை (ஈமான்) இருந்தோரை (நரகத்திலிலிருந்து) வெறியேற்றிவிடுங்கள்'' என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் "மழைநதி'யில் (நஹ்ருல் ஹயா) அல்லது "ஜீவநதி'யில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். (அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக்கரையில் விதைப்பயிர் முளைப்பது போல (நிறம்) மாறிவிடுவார்கள். அவை வளைந்து நெளிந்து மஞ்சள் நிறத்தில் (பொலிலிவுடன்) இருப்பதை நீர் கண்டதில்லையா?

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 22

44حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ وَيَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ وَيَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ قَالَ أَبُو عَبْد اللَّهِ قَالَ أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا أَنَسٌ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِيمَانٍ مَكَانَ مِنْ خَيْرٍ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 44

16.12.2011. 22:29

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்கள்

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்கள்
2011 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பீஜே ஆற்றிய உரை தலைப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.

1-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏன்?

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
2- மார்க்கத்தைப் பிரிப்பது பெரும்பாவம்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

3- மனோ இச்சைதான் பிரிவினைக்குக் காரணம்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
4- பிரிவினைக்கான மேலும் சில காரணங்கள்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
5- இஸ்லாத்தின் பெயரால் நுழைந்த ஷிர்க்

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ
6- இறைநேசர்களை நம்மால் அறிய முடியுமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

7- உலக விஷயத்தில் நல்லவர் என தீர்மானிக்கலாம்

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

8-நபித்தோழர்கள் கூட நல்லவர்களைத் தீர்மானிக்க முடியாது

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

9-நபிகள் நாயகம் கூட அவ்லியாக்களை தீர்மானிக்க முடியாது

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

10-நல்லவர் கெட்டவர் என நாம் தீர்மானிக்கலாமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
11- நல்லவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள் யார்

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ
12-இறைநேசர்களின் ஆற்றல் என்ன

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
13-இறைநேசர்களின் ஆற்றல் பற்றி திருக்குர்ஆன்

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

14-நபிமார்கள் மனிதர்களாகவே இருந்தனர்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

15-நபிகள் நாயகம் (ஸல்) மனிதராகவே இருந்தனர்

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

16-நபிகள் நாயகத்தின் மரணம் சொல்வது என்ன?

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

17-நபிகள் நாயகத்தின் போதனை செய்தது என்ன

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

18-நபிகள் நாயகத்துக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உண்டா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

19-மறைவானவற்றை நபிமார்கள் அறிய முடியாது

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

20-மறைவானவற்றை நபிகள் நாயகம் ஸல் அறிய முடியாது

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

21-நபிகள் நாயகத்துக்கு மறைவான ஞானம் உண்டு என்போரின் வரட்டு வாதங்கள்

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

22-நபிமார்களும் அற்புதங்களும்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

23-அற்புதங்கள் மூலம் பெற வேண்டிய படிப்பினை என்ன

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

24-சாதாரண மனிதர்கள் அற்புதம் செய்ய முடியுமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

25-முஹம்மத் நபி சமுதாயத்தில் எதிர்காலம் அறிபவர் இல்லை

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

26-நான் அவலியாக்களின் கையாவேன் என்பதன் கருத்து என்ன

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

27-தீயவர்களுக்கும் அற்புதம்

Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ
ஆடியோ

28-இறந்தவருக்கு எந்த ஆற்றலும் இல்லை

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

29-இறந்தவர்கள் செவியேற்பார்களா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

30-இறந்தவர்களுக்கும் உலக்குக்கும் இடையே திரை

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

31-அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் ஆற்றல் என்ன

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

32-இறந்தவர்களுக்கு ஸலாம் சொன்னால் அது அவருக்கு கேட்குமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

33-ஜியாரத் என்ற வார்த்தைக்கு பொருள்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

34-அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கலாமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

35-நபிகள் நாயகம் கப்ரின் மீது கட்டடம் கட்டப்பட்டது ஏன்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

36-இறந்தவருக்கு ஸலாம் சொல்வது ஏன்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

37-ஜியாரத் செய்வதன் இரு நோக்கங்கள்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

38-ஜியாரத் செய்யத் தகுந்த கப்ருகள் யாவை

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

39-தீமையைத் தடுக்காவிட்டால் அதில் நாமும் பங்காளிகளே

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

40-தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

41-இறந்தவர்கள் மிஃராஜில் நபிக்கு உதவியது எப்படி

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

42-அவ்லியாக்கள் சிபாரிசு செய்வார்களா?

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

43-பரிந்துரையின் விளக்கம்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

44-அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கும் மனிதர்களிடம் உதவி தேடுவதற்கும் வேறுபாடு

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

45-அல்லாஹ்விடம் உதவி தேட இடைத்தரகர் தேவையா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

46-அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறக்கூடாது

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

47-திருக்குர்ஆன் வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்தல்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

48-நபிகள் நாயகம் இன்றும் உயிருடன் உள்ளார்களா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

49-மகான்களுக்கு நபிமார்களை விட அதிக ஞானம் உண்டா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

50-அபூஹுரைரா அறிவிக்கும் இரண்டு ஞானங்கள் என்ன

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

51-அலி (ரலி) அவர்களுக்கு மெஞ்ஞானம் இருந்ததா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

52-ஆதம் நபியின் பாவம் முஹம்மது நபி பொருட்டால் மன்னிக்கப்பட்டதா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

53-வசீலா என்றால் என்ன

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

54-இறைநேசர்களின் பொருட்டால் என்று துஆ செய்யலாமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

55-கனவுகள் மார்க்கச் சட்டமாகுமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

56-நற்செய்தி கூறும் கனவுகள்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

57-கனவுகளின் விளக்கங்கள்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

58-கனவுகளை எவ்வாறு அணுகுவது

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

59-கனவுகளுக்கு யாரும் விளக்கம் சொல்ல முடியாது

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

60-ஆதம் நபிக்கு வானவர்கள் செய்த ஸஜ்தா என்ன

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

61-அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் ஸஜ்தா செய்யலாமா

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

62-முந்தைய சமுதாயங்களுக்கும் நமக்கும் சட்டங்களில் வேறுபாடு

http://onlinepj.com/play.png
Play Without Downloading Download To your computer
http://www.onlinepj.com/images/3gp.png 
மொபைல் வீடியோ
http://www.onlinepj.com/images/mp3.png
ஆடியோ

63-
நபிகள் நாயகத்தின் கால்களை நபித்தோழர்கள் முத்டமிட்டார்களா

http://onlinepj.com/play.png
Play Without Downloading Download To your computer
http://www.onlinepj.com/images/3gp.png 
மொபைல் வீடியோ
http://www.onlinepj.com/images/mp3.png
ஆடியோ


64-நல்லடியார்கள் பாதம் பட்ட இடங்களுக்கு புனிதம் உண்டா

http://onlinepj.com/play.png
Play Without Downloading Download To your computer
http://www.onlinepj.com/images/3gp.png 
மொபைல் வீடியோ
http://www.onlinepj.com/images/mp3.png
ஆடியோ


65-நபிகள் நாயகத்தின் முடி இரத்தம் வியர்வை புனிதமா

http://onlinepj.com/play.png
Play Without Downloading Download To your computer
http://www.onlinepj.com/images/3gp.png 
மொபைல் வீடியோ
http://www.onlinepj.com/images/mp3.png
ஆடியோ


66-மனிதனால் ஜின்னை வசப்படுத்த முடியுமா

http://onlinepj.com/play.pngPlay Without Downloading Download To your computer
http://www.onlinepj.com/images/3gp.png 
மொபைல் வீடியோ
http://www.onlinepj.com/images/mp3.png
ஆடியோ


67-தாயத்து தட்டுகளுக்கு சக்தி உண்டா

http://onlinepj.com/play.pngPlay Without Downloading Download To your computer
http://www.onlinepj.com/images/3gp.png 
மொபைல் வீடியோ
http://www.onlinepj.com/images/mp3.png
ஆடியோ

16.12.2011. 02:31

தொழில் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற

தொழில் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கலாமா?

முஹம்மத்

பதில்

மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன் அந்த மக்கள் குலப்பெருமையில் மூழ்கி இருந்தனர். ஏற்றத்தாழ்வு கற்பித்து பெருமையடித்து வந்தனர். இதை ஒழிப்பதற்காகத் தான் இஸ்லாம் வந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிட மாட்டார்கள். (அவைகளாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறை கூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.

அறிவிப்பவர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 1700

4250حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ قَالَ حَدَّثَنِي أَبِي حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ الْحَجَّاجِ عَنْ قَتَادَةَ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَبْغِيَ أَحَدٌ عَلَى أَحَدٍ وَلَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் யாரும் யாரிடத்திலும் பெருமையடிக்க்க் கூடாது. நீங்கள் யாரிடத்திலும் வரம்பு மீறாமல் பணிவாக நடக்க வேண்டும் என அல்லாஹ் எனக்கு அறிவித்துள்ளான்.

நூல் : அபூதாவுத் 4250

4452حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ حَدَّثَنَا الْمُعَافَي ح و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ وَهَذَا حَدِيثُهُ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ أَنْتُمْ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ لَيَدَعَنَّ رِجَالٌ فَخْرَهُمْ بِأَقْوَامٍ إِنَّمَا هُمْ فَحْمٌ مِنْ فَحْمِ جَهَنَّمَ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنْ الْجِعْلَانِ الَّتِي تَدْفَعُ بِأَنْفِهَا النَّتِنَ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மாண்பும் வலிமையுமிக்க அல்லாஹ் அறியாமைக் காலத்திலிருந்த ஆணவத்தையும் முன்னோர்களின் மூலம் பெருமையடிப்பதையும் (இஸ்லாத்தில்) அழித்து விட்டான். இறைபக்தியுள்ள இறை நம்பிக்கையாளர்கள், பாவம்புரிந்த துர்பாக்கியவான்கள் (என (மனிதர்கள் இரண்டு வகையாக இருக்கின்றனர்). நீங்கள் (அனைவரும்) ஆதமுடைய மக்கள். ஆதம் மண்ணால் (படைக்கப்பட்டவர்).  முன்னோர்களைக் கொண்டு பெருமையடிப்பவர்கள் அதை விடவேண்டும். (இறை மறுப்பாளர்களாக இறந்த) அவர்கள் நரகின் கொள்ளிகளாவர். தனது மூக்கால் அசுத்தத்தை தள்ளிச் செல்லும் மலமுருட்டும் வண்டை விடவும் அவர்கள் அல்லாஹ்விடத்தில் இழிவானவர்களாக இருப்பர்.

நூல் : அபூதாவுத் 4452

குலப் பெருமை முளைவிடும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார்கள். பின்வரும் சம்பவங்கள் இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதற்கு எள்ளவு கூட அனுமதியில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

3829حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَا أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَلَغَ صَفِيَّةَ أَنَّ حَفْصَةَ قَالَتْ بِنْتُ يَهُودِيٍّ فَبَكَتْ فَدَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ فَقَالَتْ قَالَتْ لِي حَفْصَةُ إِنِّي بِنْتُ يَهُودِيٍّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكِ لَابْنَةُ نَبِيٍّ وَإِنَّ عَمَّكِ لَنَبِيٌّ وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ فَفِيمَ تَفْخَرُ عَلَيْكِ ثُمَّ قَالَ اتَّقِي اللَّهَ يَا حَفْصَةُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் யூதனின் மகள் என ஹஃப்ஸா (ரலி) கூறினார்கள். இந்தச் செய்தி ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்குக் கிடைத்தபோது அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் அழுதுகொண்டிருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். ஏன் அழுகிறாய்? என வினவினார்கள். நான் யூதனின் மகள் என ஹஃப்ஸா கூறிவிட்டார் என ஸஃபிய்யா (ரலி) தெரிவித்தார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ நபியின் மகள் தான். உன்னுடைய சிறிய தந்தையும் நபியாவார். நீ நபியின் மனைவியாக இருக்கின்றாய். பிறகு எப்படி ஹஃப்ஸா உன்னிடத்தில் பெருமையடிக்க முடியும்? என்று கூறினார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஹஃப்ஸாவே நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என்று எச்சரித்தார்கள்.

நூல் : அபூதாவுத் 3829

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடைத்தார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (லி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள்அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (லி)

நூல் : புகாரி 3730

குலப்பெருமையால் எந்த ஒரு நன்மையுமில்லை. அது மனிதனின் பெற்றிக்கு உதவாது. எனவே அது தேவையற்றது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

நூல் : முஸ்லிம் 5231

"பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

13.12.2011. 21:51

கப்ரை முத்தமிடலாமா?

கப்ரை முத்தமிடலாமா?

தவ்ஃபீக்

பதில்

பெரும்பாலும் இணைவைப்புக் காரியங்கள் இறந்தவர்களின் பெயராலே அரங்கேற்றப்படுவதால் இவ்விஷயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.

கப்றுக்கு மேல் கட்டிடம் எழுப்பக்கூடாது. கப்றை பூசக்கூடாது. கப்றை உயரமாக்குவது கூடாது. புனிதம் கருதி கப்றுக்கு அருகில் அமரக்கூடாது. கப்றை நோக்கித் தொழக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் தடை விதித்துள்ளது.

இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளை அனைவரும் சரியாக்க் கடைபிடித்தால் எந்தக் கப்றும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. சில நாட்களிலேயே கப்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இறந்தவர்களின் மண்ணறை இந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் மேற்கண்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

கப்றை முத்தமிடுவதும் இஸ்லாம் தடைசெய்த செயலாகும். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் அந்த மண்ணுக்கு சக்தி இருப்பதாகவும் அது மகத்துவம் அடைந்திருப்பதாகவும் நம்புகிறார்கள். இதன் காரணத்தாலே இறந்தவர்களின் கப்றை முத்தமிடுகிறார்கள்.

எந்த ஒரு பொருளையும் அதில் உள்ள தன்மைகளைத் தாண்டி மறைமுகமான ஆற்றல் அதில் இருப்பதாக நம்புவது மூடநம்பிக்கையாகும்.

இணை வைப்பாளர்கள் தாத்துல் அன்வாத் என்ற மரத்தில் தங்கள் வாட்களைத் தொங்கவிட்டு அங்கே தங்குவார்கள். இவ்வாறு செய்வதால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

இது போன்று ஒரு மரத்திற்கோ, ஒரு கல்லிற்கோ அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சக்தியில்லாத எந்தப் பொருளுக்கோ ஆற்றல் உண்டு என்று நாம் நம்பிவிடக் கூடாது என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாதுல் அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாதுல் அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ வாகித் (ரலி)

நூல் : அஹ்மத் (20892)

கப்றை சாதாரண மண்ணாகப் பார்ப்பவர்கள் அதை முத்தமிடமாட்டார்கள். அதில் மறைமுகமான புனிதம் இருப்பதாக நம்பும் மூடர்களே அதை முத்தமிடுவார்கள். இதை மேற்கண்ட ஹதீஸ் கண்டிக்கின்றது.

இஸ்லாத்தில் ஹஜருல் அஸ்வத் கல்லைத் தவிர வேறு எந்த கல்லையும் மண்ணையும் முத்தமிடுவதற்கு அனுமதியில்லை.  ஹஜருல் அஸ்வதைக் கூட அந்தக் கல்லில் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையில் முத்தமிடக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களை இப்படித்தான் உருவாக்கி இருந்தார்கள்.

1597حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الْأَسْوَدِ فَقَبَّلَهُ فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ رواه البخاري

ஆபிஸ் பின் ரபீஆ கூறுகிறார் :

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, "நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்மை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்கள்.

புகாரி (1596)

09.12.2011. 19:18

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா?

ரிஸ்வான் நுஃமான்

பதில்

இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று கூற வேண்டும்.

இணைவைத்தவர் லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறி இஸ்லாத்தில் நுழைய வேண்டும் என்பதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். வேறு யார்மீதாவது எதன் மீதாவது சத்தியம் செய்தால் அது இணைவைத்தலில் சேரும். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் லாத் உஸ்ஸா ஆகிய சிலைகளை வணங்கிவந்தனர். அந்தச் சிலைகள் மீதே சத்தியம் செய்து வந்தனர். இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பழைய வழக்கப்படி இது போல் வாய் தவறி சொல்லி விடுவார்கள். இது குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விளக்கும் போது

4860حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் சத்தியம் செய்யும் போது "லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) "லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்!

இதை அபூ ஹுரைரா (லி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

நூல் : புகாரி (4860)

09.12.2011. 19:08

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

உருவப்படமும் நாயும் உள்ள வீட்டில் வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா?

அப்துல் கஃபூர்

பதில்

நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறும் செய்தியின் சரியான பொருள் என்னவென்றால் இறைவனின் அருளையும் அமைதியையும் கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்பது தான்.

சில வானவர்கள் மனிதர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல், அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தல், ஷைத்தானை விரட்டுதல், அல்லாஹ்வின் கருணையை கொண்டு வருதல், அல்லாஹ்விடம் சென்று அடியானைப் பற்றி நல்லவிதமாகத் தெரிவித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள்.

இந்த வானவர்கள் வீட்டுக்கு வந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பலன் ஏற்படும். இந்த வானவர்கள் வராவிட்டால் வீட்டில் நிம்மதியின்மை ஏற்படும்அது பெரிய இழப்பாகும்.

நன்மைகளைக் கொண்டுவரும் இந்த வானவர்கள் தான் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் வர மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இத்தகைய வானவர்கள் இருப்பதாகப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

445 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَمْ يُحْدِثْ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் "இறைவா! இவருக்கு மன்னிப்பüப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்திக்கிறார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (லி)

நூல் : புகாரி (445)

4868 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ سَمِعْتُ أَبَا إِسْحَقَ يُحَدِّثُ عَنْ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُمَا شَهِدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا حَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ و حَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا شُعْبَةُ فِي هَذَا الْإِسْنَادِ نَحْوَهُ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும்போது, அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களைக் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.

அறிவிப்போர் : அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் (5232)

6408 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ رَوَاهُ شُعْبَةُ عَنْ الْأَعْمَشِ وَلَمْ يَرْفَعْهُ وَرَوَاهُ سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறு சிலரைத் தம் இறக் கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் (ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் - அவர்களை நன்கறிந்திருந்தும் - "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்.

மேலும், "அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்'' என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், "அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்து விட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிலிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்'' என்று கூறுவான்.

அப்போது வானவர்கள், "இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்து கொண்டான்'' என்று கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், "அவனையும் நான் மன்னித்து விட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (5218)

எனவே உருவப்படமும் நாயும் உள்ள  வீட்டில் நன்மையை கொண்டு வரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதே அந்த ஹதீஸின் சரியான விளக்கமாகும்.

இவை தவிர அல்லாஹ்வின் தண்டணையைக் கொண்டு வரவும் உயிரைக் கைப்பற்றவும் வானவர்கள் உள்ளனர். அவர்கள் உருவப்படம் இருக்கும் வீடுகளுக்கும் சென்று தமது கடமையைச் செய்து முடிப்பார்கள்.

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمْ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ(61)6

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் (6 : 61)

قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ(11)32

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (32 : 11)

மனிதர்களின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் பணியில் இருவானவர்கள் அவனுடன் எப்பொழுதும் இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் அவனை விட்டும் பிரியமாட்டார்கள்.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ(18)50            

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

அல்குர்ஆன் (50 : 18)

எனவே வீட்டில் உருவப்படம் நாய் போன்ற எந்தப் பொருட்கள் இருந்தாலும் இதனால் மலகுல் மவ்த் வராமல் இருந்துவிட மாட்டார். குறித்த நேரத்தில் வந்து உயிரை வாங்கிவிட்டுச் சென்றுவிடுவார்

28.11.2011. 05:50

<< First < Previous [1 / 4] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
54 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி