கள்ளத் தொடர்புக்குக் காரணம் என்ன?

கள்ளத் தொடர்புக்குக் காரணம் என்ன?
ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் அங்கே மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட உறவினர்களைத் தவிர மற்ற பெண்களுடன் எந்த ஆணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் அவலியுறுத்துகிறது.இந்த அறிவுரையை புறக்கணித்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நவமபர் 27 தேதியிட்ட தினமலர் நாளேட்டின் செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

லண்டன் : கள்ளத் தொடர்புகள் இருப்பது உலகில் வழக்கம்தான் என்றாலும், ஒரு நாட்டில் உள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்களா...? ஆம். இத்தாலியில் தான் இந்த நிலைமை.

இத்தாலியில், 1981 வரை, தங்களை ஏமாற்றும் மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு அந்நாட்டு கோர்ட்டுகள், கருணையுடன் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கொடுத்து வந்தன. சொல்லப் போனால் இதுபோன்ற விஷயங்களில் நடக்கும் கவுரவக் கொலைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கூட இருந்தது. ஆனால், சமீபத்தில் "இத்தாலி குடும்ப வக்கீல்கள் கூட்டமைப்பு' சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 55 சதவீத ஆண்களும், 45 சதவீத பெண்களும், தங்கள் திருமணத்துக்குப் பின் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்துள்ளது. அதிலும், ஐந்தில் மூன்று பங்கு கள்ளத் தொடர்புகள் அலுவலகங்களில் தான் ஆரம்பிக்கின்றன. நண்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரையிலான மதிய உணவு இடை வேளையின் போது, பல அலுவலகங்களில் பலர் ஜோடி ஜோடியாக வெளியே கிளம்பி விடுகின்றனர்.

 

02.11.2010. 17:40




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
31 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி