வட்டி இல்லா வங்கியே தீர்வு

வட்டி இல்லா வங்கியே தீர்வு

விதர்பா பிரச்சினையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன்
 
சென்னை: விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

நேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்.

சிறு வயதில் எனது பெற்றோர் என்னிடம் இருந்த நகைகளை காந்திஜியிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இவ்வாறு தானமாக பெறப்பட்ட நகைகளை காந்திஜி ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரிஜன மக்களுக்கு உதவினார் காந்தி. எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் . நம்மிடம் உபரியாக உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். அதனபடி என்னிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கை வளையத்தை காந்தியிடம் கொடுத்தேன் என்றார் சுவாமிநாதன்.

கருணா ரத்னா விருது என்பது சுற்றுச்சூழலியல் மற்றும் சைவம் மீதான அகிம்சை, அன்பு .ஆகியவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்திப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் விருதாகும். சென்னையைச் சேர்ந்த கருணா இன்டர்நேஷனல் அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது.

இந்த விருதினை இஸ்லாம் மற்றும் சைவம் குறித்த ஆய்வுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற முசாபர் ஹூசேன், புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணா, சிபிஆர் பவுண்டேஷனைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா ஆகியோர் உள்ளிட்ட நான்கு பேர் பெற்றனர். அவர்களுக்கு விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.
ஆதாரம் http://thatstamil.oneindia.in/news/2010/04/07/islamic-banking-solve-vidarbha-crisis-swaminathan.html
 

09.04.2010. 19:03

பெருவெடிப்பு சோதனை வெற்றி

பெருவெடிப்பு சோதனை வெற்றி
 இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

சில மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை. இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது என்றால் செயற்கையாக அணு மோதலை ஏற்படுத்தி வெடிக்கச் செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.

ஐரோப்பாவின் அணு ஆராய்ச்சி மையம் சுவிட்சர்லாந்தில் உள்ள சேர்ன் அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனையை நடத்த திட்டமிட்டது.

80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து சென்ற வருடம் இம்முயற்சியில் இறங்கினார்கள்.

சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து ல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, ப்போது உருவாகும் மாற்றங்களை யிரக்கணக்கான கருவிகள் மூலம் ய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் ண்டுபிடிக்க திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர்.

ஆனால் 2008 செப்டம்பர் 20ஆம் தேதி ந்திய நேரப்படி தியம் 2.57 ணிக்கு பிக்-பேங் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ற்பட்டது. குளிரூட்டும் கருவி ன்றில் இருந்து ஒரு ன்னிற்கும் மேற்பட்டதிரவ நிலையிலான ஹீலியம் வாயு சிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. சோதனை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனர்.

கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெருவெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் கீழ்க்காணும் உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

  • அணுக்கள் மோதும் போது மாபெரும் ஆற்றல் அதில் இருந்து வெளிப்படுகிறது.
  • அந்த ஆற்றல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
  • பின்னர் விரிவடையும் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து விரிவடைந்த ஆற்றல் சுருங்கி வெடிப்பதற்கு முன் இருந்த நிலையை அது அடைகின்றது.

இது தான் இந்த சோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இப்பிரபஞ்சம் உருவாகக் காரணமான அணு ஆற்றலுடனும்  இப்பிரபஞ்சம் உருவாக்குவதற்கான அணு மோதலுடனும் இதை ஒப்பிடவே முடியாது. பூமி உருண்டை என்பதைச் சொல்லிக் காட்டும் போது ஒரு கடுகை எடுத்துக் காட்டி இது போல் பூமி உருண்டையானது என்று சொல்வது போல் தான் இந்தச் சோதனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடுகுக்கும் பூமிக்கும் அளவில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது நமக்குத் தெரிகிறது.இரயில் வண்டியின் செயல்பாட்டை பொம்மை ரயில் மூலம் விளக்குவது போன்றது தான் இந்தச் சோதனை

இப்பிரபஞ்சம் உருவாகும் போது வெடித்த அணுவின் ஆற்றல் மற்றும் அதன் வெப்பம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த செயற்கை அணு மோதல் உதாரணம் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்குச் சிறியதாகும்

இவர்கள் சோதித்த செயற்கை அணு மோதல் விரிவடைந்ததும் மீண்டும் சுருங்கி பழைய நிலைக்கு திரும்பியதும் சில நாட்களில் முடிந்து விட்டன. ஆனால் 14 பில்லியன் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட விரிவடைதல் இன்னும் நிற்கவில்லை. விரிவடைந்து கொண்டே உள்ளது. அதன் பின்னர் தான் விரிவடைதல் நின்று பழைய நிலைக்குத் திரும்பும். இதில் இருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.

இது குறித்து இன்றைய 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி..ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்

சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.

அனைத்து இணைந்திருந்தன

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

திருக்குர்ஆன் 21:30

பிரபஞ்சம் விரிவடைகிறது

)நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.

திருக்குர் ஆன் 51:47

மீண்டும் சுருட்டப்படும்

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

திருக்குர் ஆன் 21:104

31.03.2010. 11:13

மூக்கில் போடப்பட்ட அடையாளம்.

 மூக்கில் போடப்பட்ட அடையாளம்.

ஒரு மனிதனைத் துல்லியமாக வேறுபடுத்தி அறிந்திட கைரேகையைத் தான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரது கைரேகையைப் போல் இன்னொருவரின் கைரேகை இருப்பதில்லை என்பது தான் இதற்குக் காரணம். முக்கியமான ஆவணங்களில் கைரேகை வாங்குவதும் இதற்காகவே.

தொடர்ந்து படிக்க 08.03.2010. 15:28

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் கார

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் காரணம்?  முற்போக்கு பெண்கள் வாக்குமூலம்

பெண்கள் அன்னிய ஆண்களைக் கவரும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று இஸ்லாம் வழி காட்டுகிறது. ஆண்களும் தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கிறது.

தொடர்ந்து படிக்க 21.02.2010. 09:23

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமி

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை

உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

யார் தன்னுடைய உயிரைக் காப்பாற்றும் போது நடக்கும் சண்டையில் கொல்லப்பட்கிறாரோ அவர் உயிர் தியாகியாவார். யார் தனது உடமையைப் பாதுகாக்கும் சண்டையில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார். யார் தனது குடும்பத்தினரைக் காக்கும் சண்டையில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து படிக்க 18.01.2010. 12:52

கற்பழிப்புக்கு கடும் தண்டனை

கற்பழிப்புக்கு கடும் தண்டனை

கற்பழிக்கும் மட்டுமின்றி எல்லாக் குற்றங்களுக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் முக்கிய அம்சம்.

(இது குறித்து மேலும் விபரம் அறிய குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற நமது நூலைப் பார்வையிடுக)

இது அனைவரின் மனசாட்சிக்கும் சரியாகத் தெரிந்தாலும் காழ்ப்புணர்வு காரணமாக இதை வெளிப்படையாகச் சொல்வதில்லை.

தொடர்ந்து படிக்க 14.01.2010. 13:44

பெண்கள் தாமாக திருமணம் செய்தல்

 பெண்கள் தாமாக திருமணம் செய்தல்

பெண்கள் தமக்குத் தாமே திருமணம் செய்து கொள்ளாமல் பொறுப்பாளர் மூலம் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் திருமணசட்டம். பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் இல்லை என்பது நபிமொழி.

பொதுவாக ஆண்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் மனைவியின் மீது சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் வேறு பக்கம் தாவுவதற்கு ஆசைப்படுகிறான். அனைத்து ஆண்களும் இப்படிப்பட்டவர்களாக இல்லாவிட்டாலும் கனிசமான ஆண்களின் மன நிலை இப்படித் தான் உள்ளது.

தொடர்ந்து படிக்க 14.01.2010. 13:03

வேலைக்குச் செல்லும் பெண்கள்

வேலைக்குச் செல்லும் பெண்கள்
ஆண்களுடன்
பெண்கள் தனித்திருக்கக் கூடாது; பெண்களின் தேவைகளுக்காக ஆண்கள் உழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை பிற்போக்கான சிந்தனை என்று கூறி அறிவு ஜீவிகள் குறை கூறி வந்தனர். பெண்கள் வேலைக்குச் செல்வதில் தான் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்றும் வாதிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு இருந்து வந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை. புகுந்த வீட்டாரின் அடக்கும் முறைக்கு மட்டும் ஆளான பெண்கள் தமது அதிகாரிகளின் அடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்குச் சென்றதால் வீட்டு வேலையில் இருந்து அவர்கள் விடுபட முடியாததால் அவர்கள் இரட்டைச் சுமையைச் சுமந்து வருகின்றனர் என்பது இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் வாயாலேயே வெளியாகி விட்டது.

தொடர்ந்து படிக்க 04.01.2010. 14:21

நீருக்குள் பிரசவம்

நீருக்குள் பிரசவம்

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

தொடர்ந்து படிக்க 26.10.2009. 02:03

சின்ன வீடு'களுக்கும் ஜீவனாம்சம்

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்

சின்ன வீடு'களுக்கும் ஜீவனாம்சம்

இஸ்லாம் கூறும் அனைத்துச் சட்டங்களும் போதனைகளும் மனிதனால் உருவாக்கப்படாமல் இறைவனால் உருவாக்கப்பட்டதால் அது எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளது.

உடனடியாக இதை மற்ற சமுதாயத்தினர் உணராவிட்டாலும் நீண்ட அனுபவத்துக்குப் பின் இந்த உண்மையை உணர்கின்றனர்.

தொடர்ந்து படிக்க 26.10.2009. 01:22

இரண்டாவது மனைவிக்கு சட்டப்பூர்வ உரி

இரண்டாவது மனைவிக்கு சட்டப்பூர்வ உரிமை

இந்தியச் சட்டத்தின் படி முஸ்லிம் ஆண்கள் மட்டும் தான் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்ய முடியும். மற்ற மதத்து ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்தால் அது பயங்கர குற்றம்; அவ்வாறு செய்வோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்; அவர்கள் அரசு ஊழியராக இருந்தால் வேலை போய்விடும் என்றெல்லாம் நாட்டில் சட்டம் இருப்பதாகச் சொல்லி ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களுக்கு மட்டும் சட்டத்தில் சிறப்புச் சலுகை உள்ளதாக பிரச்சாரம் செய்து நாட்டுமக்களிடையே கசப்புணர்வை அதிகரிக்க இதையே முக்கியப் பிரச்சாரமாகச் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க 22.11.2009. 12:56

பெண்கள் ஜாக்கிரதை!

பெண்கள் ஜாக்கிரதை!

காதல் என்ற பெயரால் பெண்கள் ஏமாற்றப்பட்டு சீரழிந்து போவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாம் கூறும் நற்போதனைகளை உலக மக்கள் குறிப்பாக பெண்கள் புரிந்து நடந்து கொண்டால் அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 1400 ஆண்டுகளாக இஸ்லாம் இது குறித்து நல்ல பல அறிவுரைகளைக் கூறினாலும் பட்ட பிறகு தான் ஞானம் பிறக்கிறது. இஸ்லாம் கூறும் இந்த அறிவுரையை இந்தியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படிக்க 18.11.2009. 10:33

சேர்ந்து குளிப்பது நல்லது

சேர்ந்து குளிப்பது நல்லது

கணவன் மனைவியர் சேர்ந்து குளிப்பது அவர்கள் ஒற்றுமையுடன் வாழ உதவும் என்று தெரிய வந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திச் சென்று விட்டனர்

தொடர்ந்து படிக்க 18.11.2009. 10:42

இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வரா

 தினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது: ஆய்வில் தகவல்

Last Updated :

 லண்டன், மே 28: தினமும் இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புக் குறைவு என லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

 லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வை பேராசிரியர் ரிச்சர்டு வாட் என்பவர் தலைமையேற்று நடத்தினார். 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இந்த ஆய்வில் வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வாட் கூறினார். தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 வாயில் புண் ஏற்பட்டால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் பராமரிப்பு செவிலியர் ஜூடி ஓ சுலிவான் தெரிவித்தார்.

தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதால் வாய்ப்புண்ணால் ஏற்படும் பாக்டீரியா தொற்று தடுக்கப்பட்டு இதயம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 இதுபற்றி வாட் கூறுகையில் தங்களது ஆய்வு முடிவுகளை இதய நோய் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இது பற்றி மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

நன்றி: தினமணி நாளிதழ்        மே 28

 
தினமும் இருமுறை பல்துலைக்கினால் இதய நோய்வராது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறும் நிலையில்,

காட்டுமிரண்டிகள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில்,  1400 ஆண்டுகளுக்கு முன்பே,
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகளை பாருங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்திற்கு' அல்லது மக்களுக்கு' நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன்.    (ஆதாரம் : புகாரி – 887)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (ஆதாரம் : புகாரி – 888)

நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும் போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள் என்று   ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்   (ஆதாரம் : புகாரி – 889)

 நபிகளார் மனித குலத்திற்கு பயன்படும் விதமாக கூறிச்சென்ற செய்திகளை உண்மைப்படுத்தும் விதமாக மேற்கண்ட லணடன் ஆய்வு தெரிவிக்கின்றது

 

 

29.05.2010. 11:55

மனிதன் பாவியாய் பிறப்பதில்லை

மனிதன் பாவியாய் பிறப்பதில்லை

பிறக்கும் குழந்தைகள் அனைவரும் பகுத்தறிவுள்ளவர்களாக இருந்த போதும் வளர்ந்து ஆளாகும் போது அவர்களில் சிலர் நல்லவர்களாகவும் சிலர் கெட்டவர்களாகவும் மாறிவிடுகின்றனர். சிலர் நன்கு சிந்திப்பவர்களாகவும், மற்றும் சிலர் சிந்தனை செய்யாதவர்களாகவும் உருவெடுக்கின்றனர்.

இந்தத் தன்மைக்குக் காரணம் என்ன? இது குறித்து மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.

குழந்தையாகப் பிறக்கும் போது அவனுடையை இயற்கை குணம் கெட்டவனாக வளரும் வகையிலேயே உள்ளது என்பது ஒரு கருத்து. அதாவது குழந்தைக்கு எந்த போதனையும் செய்யாமல் அதன் போக்கில் வளர விட்டால் கெட்ட செயல்கள் செய்யும் மூர்க்கனாக வளர்வான் என்பது இதன் விளக்கம். மனிதன் பாவியாகப் பிறக்கிறான் என்று கூறி கிறித்தவ மதம் இதை ஆதரிக்கிறது.

மனிதன் பிறக்கும் போது நல்லவனாகவும் கெட்டவனாகவும் பிறப்பதில்லை. வெற்றுக் காகிதம் போல் தான் குழந்தைப் பருவத்தில் மனிதன் இருக்கிறான். பார்த்தும் கேட்டும் எதை அறிகிறானோ அதற்கேற்ப வளர்கிறான் என்பது இரண்டாவது கருத்து. இந்தக் கருத்தின் படி ஒரு குழந்தைக்கு நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுக்காவிட்டால் எதுவும் தெரியாதவனாக வளர்வான். நல்லதைச் சொல்லிக் கொடுத்தால் நல்லவனாகவும் கெட்டதைச் சொல்லிக் கொடுத்தால் கெட்டவனாகவும் வளர்வான். ஒன்றுமே சொல்லிக் கொடுக்காவிட்டால் எதையும் முடிவு செய்ய இயலாதவனாக வளர்வான் என்பது இதன் கருத்து. இது தான் உளவியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது.

குழந்தகளுக்கு இயற்கையிலேயே நல்லது கெட்டதை பிரித்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் யாரும் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் இது நல்லது கெட்டது என்று அறிந்து கொள்ளக் கூடிய தன்மையுடன் தான் குழந்தை பிறக்கிறது. கெட்டவனாக மாறுவதற்கு பெற்றோரின் வளர்ப்பு முறை தான் காரணம். நல்லவனாக வலரும் இயல்புடைய குழந்தைக்கும் கெட்டவற்றை நல்லது போல் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதால தான் குழந்தை கெட்டவனாக வளர்கிறது. நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுக்காமல் சுயமாக அதை வளர விட்டால் அக்குழந்தை நல்லவனாகத் தான் வளரும் என்பது மூன்றாவது கருத்து. இதை இஸ்லாம் மார்க்கம் மட்டும் சொல்லி வந்தது.

1359 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (30:30ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

 இப்போது இது குறித்து மறு ஆய்வு செய்தவர்கள் மேற்கண்ட மூன்று கருத்துக்களில் இஸ்லாம் கூறும் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதை ஊகத்தின் அடிப்படையில் இல்லாமல் ஏற்கத்தக்க சோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து தினமலர் நாளேட்டில் வந்த செய்தியைப் பாருங்கள்.

லண்டன் : 'குழந்தைகள் நல்லது எது, கெட்டது எது என்று கண்டறியும் திறனுடன் தான் பிறக்கின்றனர்' என்று புதிய ஆய்வு கூறுகிறது. இதனால் சிக்மண்ட் பிராய்ட் போன்றவர்களின் சில கொள்கைகள் ஆட்டம்  கண்டுள்ளன.

புகழ்பெற்ற மனநல ஆய்வாளர் சிக்மண்ட் பிராய்ட்,'மனிதன் பிறக்கும் போது, வெற்றுத் தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல  மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்' என்று கருதினார்.ஆனால் சமீபகால ஆய்வுகள், இந்தக் கருத்தைத் தகர்த்துள்ளன. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின், குழந்தைகளின் புலனுணர்வு பற்றி ஆராயும் மையத்தில் சில ஆய்வுகள் நடந்தன. இந்த ஆய்வுகளில், ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் பங்கெடுத்து கொண்டனர்.

முதல் ஆய்வில், அவர்களுக்கு ஒரு அனிமேஷன் படம் காண்பிக்கப்பட்டது. அதில், ஒரு சிவப்பு நிற பந்து, மெல்ல மெல்ல மலையேறும். அதன் பின்னாலிருந்து ஒரு மஞ்சள் நிற சதுரம் அது மலையேற உதவியாக உந்தித் தள்ளும். பச்சை நிற முக்கோணம் ஒன்று, மேலிருந்து பந்தை ஏற விடாமல் தடுக்கும்.

சதுரம், முக்கோணம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்ட போது, 80 சதவீத குழந்தைகள், சதுரத்தைத் தான் தேர்ந்தெடுத்துள்ளன.

அதே போல், ஒரு நாய், ஒரு பெட்டியைத் திறக்க முயலும். ஒரு பொம்மைக் கரடி அதற்கு உதவி செய்யும். மற்றொரு பொம்மைக் கரடி அதைத்  திறக்க விடாமல் தடுக்கும். இரண்டு கரடிகளில், ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன போது, பெரும்பான்மையான குழந்தைகள் உதவி செய்யும் பொம்மைக் கரடியைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் பால் ப்ளூம் கூறுகையில்,'சிக்மண்ட் பிராய்ட் போன்ற மனநல ஆய்வாளர்கள் கூறிய மனிதனின் வாழ்க்கை ஒழுங்கு முறையற்ற மிருகம் போல் தான் ஆரம்பிக்கிறது என்ற கொள்கையை, இந்த ஆய்வு முறியடித்துள்ளது' என்று தெரிவித்தார்.

17-5-2010 தினமலர் சென்னை பதிப்பு

உருண்டை முக்கோனம், சதுரம் ஆகிய மூன்று வடிவங்களில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் உருண்டை தான் அதிகம் ஈர்க்கும். அடுத்ததாக முக்கோனம் ஈர்க்கும். சதுரம் அவ்வளவாக ஈர்ப்பதில்லமூன்று வடிவத்தில் உள்ள பந்துகளில் சதுர வடிவிலான பந்து உதவக் கூடிய தமை உடையதாகக் காட்டப்பட்டது. உதவும் தன்மைதான் நல்லது என்று குழந்தையின் இயற்கைத் தனமையில் இருந்ததால் தான் எண்பது சதவிகித குழந்தைகள் சதுரத்தைத் தேர்வு செய்தன. மேலும் சதுரத்தை குழந்தைகள் அவ்வளவாக விரும்புவதில்லை.  அப்படி இருந்தும் சதுர வடிவப் பொருள் உதவி செய்யக் கூடியதாகக் காட்டப்பட்டதால் அது தான் நல்லது என்று குழந்தைகள் தீர்மானித்துள்ளன. இப்படி ஏராளமான சோதனைகள் மூலம் இதை உறுதி செய்து மற்ற இரண்டு கருத்துக்களும் தவறானவை என்று தள்ளப்பட்டு விட்டன என்பது கவனிக்கத் தக்கது.
குழந்தைகளுக்கு கல்லையும் மண்ணையும் கடவுள் என்று சொல்லிக் கொடுக்காமல் இருந்தால் அது கல்லை கல்லாகவே பார்க்கும். மண்ணை மண்ணாகவே பார்க்கும். கடவுளாகப் பார்க்காது. நம்மைவிட எல்லா வகையிலும் மேலனதையே கடவுள் என்று முடிவு செய்ய்ம் வகையில் தான் குழந்தைகளின் இயற்கைத் தன்மை அமைந்துள்ளது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சொல்லி விட்டது.

 

 

 

19.05.2010. 08:05

வட்டியில்லா வங்கி சாத்தியமே

வட்டியில்லா வங்கி சாத்தியமே

இஸ்லாம் வட்டியை அறவே தடை செய்துள்ளதை முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களும் அறிவார்கள். ஆனால் வட்டி இல்லாமல் பொருளாதாரத்தைக் கற்பனை செய்ய முடியாது என்றும் வட்டி இல்லா வங்கி சாத்தியம் இல்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் (?) கூறி வந்தனர். இந்த நிலையில் உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று பெயர் எடுத்த இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள் மலேசியா சென்ற போது அங்கே வட்டியில்லா வங்கி சிறப்பாகச் செயல் படுவதைக் கண்டு தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். வட்டியில்லா வங்கியை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறியிருப்பது இஸ்லாத்தின் பொருளாதாரக் கொளகை காலத்தைக் கடந்து நிற்கக் கூடியது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. 

இது குறித்து நவம்பர் 27 அன்று தினமலர் நாளேட்டில் வெளியான செய்தியைப் பாருங்கள்

கோலாலம்பூர் : மலேசிய அரசின் இஸ்லாமிய வங்கி செயல்படுவதை போன்று, இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படி, ரிசர்வ் வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டுள்ளார்.

மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அந்நாட்டு பிரதமர் முகமது நஜிப் டுன் அப்துல் ரஜாக்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வர்த்தகத்தை பெருக்கி கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2011ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது. இதன் பின் ஆறு மாதத்தில் இது நடைமுறைக்கு வருகிறது. பெட்ரோலியம், மரபு சாரா எரிசக்தி, வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொள்வதென, முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களை சந்தித்த மலேசிய பிரதமர் ரஜாக் நிருபர்களிடம் கூறுகையில், "பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இரட்டிப்பாகும். மலேசியா தற்போது இந்தியாவுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறது. தடையற்ற ஒருங்கிணைந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும், 2015ம் ஆண்டில் வர்த்தகத்தின் அளவு 70 ஆயிரம் கோடி ரூபாயாகும்' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய - மலேசிய உறவில் இன்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை பெருக்கி கொள்ளும் வகையில், ரஜாக்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. மலேசியாவில் கட்டுமானம் மற்றும் தயாரிப்பு துறைகளில் இந்திய கம்பெனிகள் பெரும் முதலீடுகளை செய்யவும், மலேசியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன். பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டு பயணிக்க இருக்கிறது.

மலேசிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையை போன்று, இந்தியாவிலும் நடைமுறைபடுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். இது பற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப்பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் துவக்க முன்வர வேண்டும். அன்னிய நேரடி முதலீடு நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளோம். 

குறிப்பாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மலேசிய கம்பெனிகளுக்கு நீண்ட காலத்திற்கு தங்கள் முதலீட்டை ஏற்படுத்தி கொள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கட்டுமான பணிகள் மேம்பாட்டுக்காக நாங்கள் விரிவான திட்டங்களை வகுத்துள்ளோம். இதில், மலேசிய கம்பெனிகளும் பங்கேற்கும் போது, ஒரு உறுதியான வளர்ச்சியை காண்பதோடு, கட்டுமானத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில், இந்தியாவை சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து, மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் இணைந்து உருவாக்கிய விமான நிலையங்கள் சிறப்பான முறையில் உள்ளன. இதுவே ஒரு உதாரணம்.

சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் விரும்புகிறோம். சீனாவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சு வார்த்தை நல்ல பலனை கொடுக்கும். இந்தியாவும் சீனாவும் உலகளவில் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. சீனா இந்தியாவுடன் மிகப் பெரியளவில் வர்த்தக உறவை கொண்டுள்ளது. இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், உலகளவில் பெரும் சக்தியாக விளங்க முடியும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

 

02.11.2010. 17:48

கள்ளத் தொடர்புக்குக் காரணம் என்ன?

கள்ளத் தொடர்புக்குக் காரணம் என்ன?
ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் அங்கே மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட உறவினர்களைத் தவிர மற்ற பெண்களுடன் எந்த ஆணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் அவலியுறுத்துகிறது.இந்த அறிவுரையை புறக்கணித்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நவமபர் 27 தேதியிட்ட தினமலர் நாளேட்டின் செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

லண்டன் : கள்ளத் தொடர்புகள் இருப்பது உலகில் வழக்கம்தான் என்றாலும், ஒரு நாட்டில் உள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்களா...? ஆம். இத்தாலியில் தான் இந்த நிலைமை.

இத்தாலியில், 1981 வரை, தங்களை ஏமாற்றும் மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு அந்நாட்டு கோர்ட்டுகள், கருணையுடன் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கொடுத்து வந்தன. சொல்லப் போனால் இதுபோன்ற விஷயங்களில் நடக்கும் கவுரவக் கொலைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கூட இருந்தது. ஆனால், சமீபத்தில் "இத்தாலி குடும்ப வக்கீல்கள் கூட்டமைப்பு' சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 55 சதவீத ஆண்களும், 45 சதவீத பெண்களும், தங்கள் திருமணத்துக்குப் பின் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்துள்ளது. அதிலும், ஐந்தில் மூன்று பங்கு கள்ளத் தொடர்புகள் அலுவலகங்களில் தான் ஆரம்பிக்கின்றன. நண்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரையிலான மதிய உணவு இடை வேளையின் போது, பல அலுவலகங்களில் பலர் ஜோடி ஜோடியாக வெளியே கிளம்பி விடுகின்றனர்.

 

02.11.2010. 17:40

தேனீக்களின் வழி அறியும் திறன்

தேனீக்களின் வழி அறியும் திறன்

உலகில் எத்தனையோ உயினங்கள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேனீக்கள் தமது பாதையை எளிதாகக் கண்டு பிடித்து விடுகின்றன என்று திருக்குர்ஆன் கூறுகிறது அதை இன்றைய அறிவியல் அப்படியே மெய்ப்பித்துள்ளது, இது குறித்து குர்ஆன் கூறுவது இது தான்

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

திருக்குர் ஆன் 16:68,69

இது குறித்து இன்றைய (2 நவம்பர் 2010 தினமலர்) சென்னை பதிப்பில் வந்த செய்தியைப் பாருங்கள்

லண்டன் : சிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
 
அதில், விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் எளிதாக தீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள் குறித்து, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம், அதிக இடங்களுக்கு, குறுகிய நேரத்தில், எளிதாக சென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்தது. ஆனால், பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய தேனீக்கள் குறித்த ஆய்வில், கம்ப்யூட்டர் உருவாக்கிய வழிகளை விட, அதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.தேனீக்கள் நாள்தோறும், தேனை சேகரிப்பதற்காக, பூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறது. பறப்பதற்காக, அதிக சக்தியை செலவழிக்கும் தேனீ, குறுகிய நேரத்தில், அதிக பூக்களுக்கு செல்கிறது. இதற்காக, குறுக்கு வழிகளை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:தேனை தேடி, தேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கை பூக்களை கொண்டு, தேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள், விற்பனை பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

02.11.2010. 17:29

இணையதளத்தில் சாவுக்கடல் ஆவணம்

இணையதளத்தில் சாவுக்கடல் ஆவணம் 

குகைவாசிகள் பற்றி திருக்குர் ஆன் கூறும் போது ஆவணச்சுருள்களை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றதாக்க் கூறுகிறது. அதை மெய்ப்படுத்தும் வகையில் அந்த ஆவணச்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விபரத்தை நம்முடைய திருக்குர் ஆன் தமிழாக்கத்திலும் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.

அது பற்றி அறிய சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

சாவுக் கடல் (Dead Sea) ஆவணச் சுருள் தற்போது இணையதளத்தில் கிடைக்க உள்ளது. இயேசு போதித்த கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு பவுல் என்பவர் உண்டாக்கிய பொய்க் கிறித்தவக் கொள்கை ஆட்டம் காணும் நாள் நெருங்கிவிட்டது.

இஸ்ரேல் அருங்காட்சியகமும், கூகுலும் இணைந்து சாவுக் கடல் (Dead Sea) ஆவணச் சுருளை இணையதளத்தில் வெளியிடும் திட்டத்தை துவங்கி உள்ளது. 2016 -ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் முடிவடைந்து ஆவணச் சுருள் முழுவதும் பொது மக்களின் பார்வைக்கு வெளிவரும். 

இஸ்ரேலிய அரசு அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்  http://dss.collections.imj.org.il/ சுருளின் சில பகுதிகள்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் 5 முக்கிய ஆவணச் சுருள்களின் தொகுப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

அவை

  • பைபிளில் (பழைய ஏற்பாட்டில்) இடம் பெற்றுள்ள ஏசயா (Isaiah) என்னும் புத்தகம்,
  • கோயில் சுருள் (Temple Scroll) ,
  • மற்றும் மூன்று புத்தகங்கள்.

இதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய, இதனுடைய மேற்பரப்பு அதிநவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. 

2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படும் இந்த ஆவணச் சுருள் 1947 -ல் ஜெருசலேமிலிருந்து 13 மைல் தொலைவில் சாவுக் கடலின் வடமேற்குக் கரையில் உள்ள 11 குகைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1300 அடி கீழே உள்ளது.  தொடர்ந்து நடந்த ஆய்வில் 1952 -ஆம் ஆண்டு 15,000 ஆவணச் சுருள்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.  இவை 500 ஆவணச் சுருள்களின் தொகுப்பாகும்.

கோவில் சுருள் (Temple Scroll) , என்று சொல்லப்படும் சுருள் தான் இருப்பதிலேயே அளவில் பெரிய சுருள். இது 28 அடி நீளம் உடையது. தில் சில பகுதிகள் சிதிலமடைந்து 26.7 அடி உள்ளது.

மொத்தமாக 825 முதல் 870 ஆவணச் சுருள்களின் தொகுப்புகள் கண்டெடுக்கப்பட்ட. 

இந்தச் சுருள்களை தொல் பொருள் ஆராய்ச்சியளர்கள் பைபிளைச் சார்ந்தவை, பைபிளைச் சாராதவை என இரண்டு வகைகளாகப் பிரிகின்றனர்.  இந்தச் சுருள்கள் விலங்கினங்களின் தோலினாலும், காப்பர் தகடுகளினாலும் உருவாக்கப்பட்டுள்ள.

இவை அரபி எழுத்துக்கள் போல் வலமிருந்து இடது பக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதில் குறியீடுகள் இல்லை. எழுத்து மட்டும் தான் உள்ளது (பண்டைய கால அரபி எழுத்துக்கள் போல்).

பத்திகளைப் பிரிப்பதற்கு மட்டும் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ள. சில இடங்களில் வார்த்தைக்கு இடையில் இடைவெளி கூட இல்லை. தற்போது இவை அனைத்தும் இஸ்ரேலின் தொல்பொருள் துறையிடம் (Israel Antiquities Authority) உள்ளது (ஒரு சில துண்டுச் சுருள்களை தனி நபர்களும் வைத்துள்ளனர்). 

1947 - ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்தச் சுருள்கள் இத்தனை ஆண்டுகாலம் ஒரு சில மத குருமார்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால்  தற்போது அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு ஆன்லைனில் வந்துள்ளது.  மூல சுருள்கள் (இஸ்ரேலின் கட்டுபாட்டிலிருக்கும்) ஜெரூசலேத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஒவ்வொரு நுழைவாயிலிலும், மின்காந்த அட்டைகள், சங்கேத வார்த்தைகள் (Secret Code) மூலமே நுழைய முடியும்.

2000 -ஆம் ஆண்டுகளுக்கு முன் ஜெரூசலேத்தைச் சேர்ந்த யூதர்களால் எழுதப்பட்ட அல்லது தொகுக்கப்பட்டது தான் இந்தச் சுருள்கள், பின்னர் இவர்கள் ஜெரூசலேமிலிருந்து சாவுக் கடலின் அருகில் உள்ள கும்ரான் (Qumran) என்ற பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர் என வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிறித்துவர்களால் மறைக்கப்பட்ட ஹீப்ரு பைபிளின் உண்மைகள் மற்றும் கிறித்துவ மதம் உருவான உண்மை வரலாறு போன்ற தகவல்கள் இந்த சுருள்களில் உள்ளதாக நம்பப்படுகின்றது.  

இதை ஸ்கேன் செய்து புகைப்படம் எடுக்கும் பணி, முன்னால் நாசா விஞ்ஞானியின் உதவியுடன் நடைபெற்றது. இதற்காக கலிபோர்னியாவிலிருந்து வர வழைக்கப்பட்ட 2.5 லட்சம் டாலர் மதிப்புள்ள கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மறைக்கப்பட்ட இந்த ஆவணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும் அது ஹீப்ரு மொழியில் உள்ளதால் அந்த மொழியை அறிந்தவர்களுக்கு மட்டுமே உடனடியாக பயன் கிடைக்கும். அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படால் அதை ஒட்டி உலகின் அனைத்து மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டு விடும்.

அப்போது பவுல் உண்டாக்கிய போலி கிறித்தவம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விடும். இயேசு உண்டாக்கிய உண்மை கிறித்தவமான ஏகத்துவக் கொள்கை மேலும் புத்துயிர் பெறும். இன்ஷா அல்லாஹ்

தமிழில்
S.சித்தீக்

இதுவரை வெளியிடப்பட்ட சுருள்களைப் படிக்க
http://dss.collections.imj.org.il/isaiah
http://dss.collections.imj.org.il/war
http://dss.collections.imj.org.il/habakkuk
http://dss.collections.imj.org.il/temple
http://dss.collections.imj.org.il/community

வீடியோ வடிவில் பார்க்க
http://dss.collections.imj.org.il/dss_video

சிதிலமடைந்த சுருள்களில் ஒன்று


சிதிலமடையாமல் முழுமையாக கிடைத்த பிரதிகளில் ஒன்று




கும்
ரான் மலைக் குகை


கும்ரான் மலைக்குகை



05.10.2011. 23:07

பாலினத்தில் மூளைக்கும் பங்கு உண்டு

பாலினத்தில் மூளைக்கும் பங்கு உண்டு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் தொடர்பன உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் மட்டுமே வேறுபாடுகள் உள்ளன. மற்ற விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இந்தக் கருத்து முற்றிலும் சரியானதல்ல. பாலியல் தொடர்பான உறுப்புக்களில் மட்டுமின்றி மூளை, சிந்தனை, ஆற்றல் உள்ளிட்ட அநேக விஷயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அநேக வேறுபாடுகள் உள்ளன என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் சான்றுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

இது குறித்து இந்து நாளேட்டில் வெளியான கட்டுரையை சகோதரர் எஸ். சித்தீக் (முன்னாள் மாணவரணி மாநிலச் செயலாளர்) தமிழாக்கம் செய்து அனுப்பியுள்ளார். மக்களுக்கு பயன்படுவதற்காக அதை வெளியிடுகிறோம். இது போன்ற ஆக்கங்களை மற்றவர்களும் அனுப்பி வைக்கலாம்.

இது "THE HINDU" பத்திரிக்கையில் செப்டம்பர் 18 - 2011 அன்று 6 - வது பக்கத்தில் வெளிவந்த கட்டுரை

ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது.

உடற்கூறு கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்கள் பிறப்பிலேயே உள்ளது - பேராசிரியர் காஃபி

 

 

ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார் அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி.

சென்னையில் M.V. அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் "பாலினத்தின் பாத்திரம் (Role fo sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார்.

அதில் அவர்

ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கின்றனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண், பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட்பொருள்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிடின் (serebrospinal  fiuid) அளவு, வெள்ளை பருப்பொருள் (white matter), சாம்பல் பருப்பொருள்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு வளர வளர மாறுபடுகின்றதா?, அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்தக் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளன என்று கூறுகின்றார் பேராசிரியர் காஃபி.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரியதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண், பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது.  ஆண் மூளை "முன் மடலின் (frontal lobe)"  தடிமன் பெண் மூளையை விட  வேகமாக குறைகின்றது.  ஆனால் மூளையின் "பின்பக்கப் பகுதி (posterior region )" இதற்கு நேர்மாற்றமாக உள்ளது,  அதாவது பெண் மூளை பின்பக்க பகுதியின் (posterior region)  தடிமன் ஆண் மூளையை விட  வேகமாகக் குறைகின்றது.

சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேல குறிப்பிடபட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்திற்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார்  பேராசிரியர் காஃபி.  

அவர் மேலும் கூறுகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மொழிச் செயல்பாடுகளிலும் (language function),

காட்சி இடம்சார் செயல்பாடுகளிலும் (visual-spatial function),

சமூக அறிவாற்றல்  திறனிலும் (social cognition skills),

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் (empathy) ,

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் (emotion and perception)

தேடுவது (seeking) பரபரப்பு  (sensation) போன்ற பண்பிலும்

கண்டிப்பாக வேறுபாடுகள் உள்ளன.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும், பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வெவ்வேறாக உள்ளது.

இந்த உடல்கூறு ரீதியான வேறுபாடு ஆண், பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம், சமூகத்தில் ஆண்கள், தேடக் கூடியவர்களாகவும் (hunter), அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தையைச் சுமக்கக் கூடியவர்களாகவும், கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் எனப் பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? "ஆம் இந்த உடல்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை (ஆண், பெண் என) மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். எது எப்படி இருந்தாலும் "உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசிரியர் காஃபி

ஹிந்து நாளேட்டின் ஸ்கேன் காபி
.

27.09.2011. 22:49

<< First < Previous [1 / 2] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
84 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி