தீன்குலப் பெண்மணி மே 2012

தீன்குலப் பெண்மணி மே 2012

தலையங்கம்

நிலநடுக்கம் ர் ஏச்சரிக்கையா?

விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.

விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைத் தாக்கிய சுனாமியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பல அதிசயமான நிகழ்வுகளையும் ஆச்சரியக் கண் கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். இவ்வளவு பெரிய பயங்கரம் நடக்குமா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பனைமரம் உயரத்திற்கு கடல் அலைகள் ஏற்பட்டு பல லட்சம் மக்களை அள்ளிக் கொண்டு சென்றது.

பூமி பல அடுக்குகளாக அமைந்திருப்பதும் பூமிக்குள் நெருப்பு குழம்புகள் இருப்பதும் இது போன்ற நில நடுக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.

பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன.

இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக சிறியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

சிறிய உராய்வு கூட ஒரு நாட்டையே தலைகீழாக மாற்றிப் போடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சும்தரா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு அதைச் சுற்றியுள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

மனிதர்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் இது போன்ற இடர்களை ஏற்படுத்துவான். மனிதர்கள் தங்கள் செயல்களை மதிப்பீடு செய்வதற்காகவும் இதன் பின்னர் திருந்தி வாழ்வதற்காகவும் இதுபோன்ற சோதனைகளை ஏற்படுத்துவதாக அல்லாஹ்

கூறுகிறான்.

ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை.

(அல்குர்ஆன் 9:126)

இதை உணர்ந்து நடக்கும் நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக

 

 

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை        தொடர் : 11

முடிச்சுகளில்
எதும் பெண்கள் ஏன்றால் யார்?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

அடுத்ததாக, ஸிஹ்ர் - சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும்.

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புகாரி 2766,6857முஸ்லிம் 451

முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்-சூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும்.

ஒன்றிலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றைச் செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியெனில் சூனியத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்றாலே வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இன்று மக்கள் அப்படியில்லை. அதனால்தான் நபியவர்கள் இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக இதனை எச்சரிக்கிறார்கள்.

இன்னொரு இடத்தில் இரண்டு பாவங்களை மட்டும் குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லும் போது இணைவைத்தலையும் சூனியத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்தி சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 5764

அப்படியெனில் மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பயங்கரமான குற்றம் என்று சொல்லித் தரப்பட்ட விசயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு மக்களை வழி கெடுக்கின்றனர். அறியாத மக்கள் வயிற்று வலிக்காகவும் காய்ச்சலுக்காகவும் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு மார்க்க அறிஞர்களிடத்தில் வரும்போது அவர்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்லாமல், உனக்கு அவர் சூனியம் வைத்து விட்டார் இவர் சூனியம் வைத்து விட்டார் என்றெல்லாம் இல்லாத சூனியத்தை வைத்து மக்களைப் பயங்காட்டி ஏமாற்றி, அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடுவது, சம்பந்தம் செய்த குடும்பங்களிலும் சண்டையை மூட்டிவிட்டு குடும்பங்களை சூனியத்தின் பெயரால் பிரிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினைகள் நடப்பது என்பது எல்லோரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். இது அதிசயம் ஒன்றுமில்லை. இரண்டு மனிதர்களின் உள்ளங்கள் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது எந்தக் காலத்திலும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி எல்லா விசயத்திலும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் தகப்பனும் பிள்ளையுமாக இருந்தாலும் சரியே. அது போன்று கணவன் மனைவிக்கும் அப்படித்தான். விதிவிலக்கெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி முடிவெடுத்தாலும் ஒருவரின் கருத்து ஒருநேரம் மிகைத்தும் ஒருவரின் கருத்து சிலநேரம் மிகைக்காமலும் இருக்கத்தான் செய்யும் என்கிற இந்த சாதாரண விசயத்தைக்கூட புரிந்து கொள்ளாத சிலர், சூனியத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற இந்த மோசடிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

மனைவி, கணவன் என்னைச் சரியாகக் கவனிக்காமல் இருக்கிறார் என்றும் கணவன் மனைவியைப் பற்றி மனைவி எனக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லுவார்கள். உடனே அந்தப் பெண்ணிடம் உனக்கு மாமியார் வீட்டில் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று இல்லாத சண்டையை மூட்டிவிட்டு பெரியளவுக்கு குடும்பங்களில் பிரிவினையை உண்டுபண்ணி விடுவார்கள்.

நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பேச்சுக்காக சூனியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்திகள் குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதால் அவைகள் பலவீனமான செய்தி என்று சொல்லி நாம் அந்தச் செய்திகளை மறுக்கிறோம்.

இருந்தாலும் ஒரு வாதத்திற்காக நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அவர்கள் சொல்லுவதைப் போன்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை அந்த ஹதீஸில் உள்ளபடி எப்படி அறிந்து கொண்டார்கள்.

அந்த ஹதீஸில் நபியவர்களின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு மலக்குமார்கள் அமர்ந்து கொண்டு பேசியபோதுதான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றனர். அதன்படி ஆராய்ந்தால், ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி இறைவனால் மலக்குமார்களின் மூலமாகத்தான் அறிவிக்கப்பட்டது என்பதை அறிவுடைய யாரும் ஏற்றுக் கொள்வார்கள். மறுக்க மாட்டார்கள்.

விசயம் இவ்வாறு இருக்க, இன்று சமுதாயத்தில் மதரஸாக்களில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற போலித்தனமான உலமாக்கள் என்ற பெயரில் இருந்து கொண்டு, வயிற்று வலிக்காக வருகிற நபரிடம் சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?. மலக்கு வந்தல்லவா சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே!. தனக்கு என்ன நடக்கிறது என்பதே நபியவர்களுக்குத் தெரியாமல் குழம்பி இருந்ததாகத்தான் சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகளில் உள்ளது.

அந்தச் செய்தி சரியில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் அதைச் சரியென்று வைத்துக் கொண்டு பேசினாலும், அந்தச் செய்திகளில் உள்ள தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஐம்பது நாட்களாக எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்றும் நபியவர்கள் சொன்னதாகவும் அதில் இருக்கிறது. பிறகு தான் இரண்டு வானவர்களில் ஒருவர் நபியவர்களின் தலைமாட்டிலும் இன்னொருவர் கால்மாட்டிலும் உட்கார்ந்து கொண்டு பேசியதின் மூலம் தனக்கு சூனியம் வைக்கப்பட்டது நபியவர்களுக்குத் தெரிகிறது என்று பதிவாகியுள்ளது.

வஹீயின் மூலமாக அல்லாஹ்வோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நபியவர்களுக்கே தனக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வானவர்கள் சொன்ன பிறகுதான் நபியவர்களுக்கே சூனியம் வைக்கப்பட்டதென அறிந்து கொண்டார்கள் என்றால் இன்று மந்திரவாதி என்பவர்கள் எப்படி ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்கள். அதுவும் இவர்தான் வைத்தார் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்.

லபீத் இப்னு அஃஸம் என்பவன்தான், இந்தக் கிணற்றில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தான் என்பதையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே நபியவர்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை ஆராயும் போது அந்த ஹதீஸ்கள் சரியென்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்கிற பித்தலாட்டத்திற்கு ஆதாரம் அதில் இல்லவே இல்லை.

இந்த ஹதீஸை சரியென்று நம்புபவர்களுக்குத்தான் இதை நாம் சொல்கிறோம். நம்மைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் சூனியத்தின் மூலம் ஒரு கேடும் செய்ய முடியாது என்பதுதான்.

அடுத்து, நபிமார்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து மலக்குமார்களின் மூலமாக வஹீ வருவதால் அவர்களுக்கு தெரிகிற வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றாவது நம்பலாம். ஆனால் நபிமார்கள் அல்லாத நம்மைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எதுவும் வராது என்பதினால் அதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. எனவே அல்லாஹ்விடம் பொதுவாக பிரார்த்தனை செய்துவிட்டுப் போவதுதான் சரியான வழிமுறையாகும்.

அதனால் இந்த ஸிஹ்ர்-சூனியத்தை வைத்துக் கொண்டு வஸியம் பண்ணி விட்டார்கள், அதுபண்ணி விட்டார்கள் இது பண்ணி விட்டார்கள், மருந்து கொடுத்து விட்டார்கள், முகம் மாத்து பண்ணிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுவதை நாம் நம்பக்கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம்.

அதற்கடுத்ததாக, சூனியம் சம்பந்தமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அந்த சூராவின் வாசகத்திற்கான அர்த்தம். இந்த சூரத்துல் ஃபலக் என்ற அத்தியாயத்தில் சிலவற்றிலிருந்து அல்லாஹ் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.

பிறகு இருட்டின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான்.

அதன் தொடர்ச்சியாகத்தான்,

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்தும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபியே சொல்வீராக என்று அல்லாஹ் சொல்லுகிறான்.)

இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதுகிற பெண்கள் என்று உள்ளதால் இதுதான் ஸிஹ்ர்-சூனியம் என்று சொல்லி நம்மை நம்ப வைக்கப் பார்ப்பார்கள்.

இந்த சூராவும் இதற்கு அடுத்தாக உள்ள சூரத்துந் நாஸ் என்ற இரண்டு அத்தியாமும், நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுப்பதற்குத்தான் இறங்கியது என்றும். ஒரு நூலில் 12 முடிச்சுகளைப் போட்டுத்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தனர். எனவேதான் இந்த இரண்டு அத்தியாயங்களில் 12 வசனங்கள் உள்ளன என்றும். ஒவ்வொரு வசனத்தை ஓதும்போதும் ஒவ்வொரு முடிச்சு அவிழ்ந்து நபியவர்கள் குணமடைந்தார்கள் என்றும் ஒரு கதையை எழுதி வைத்துள்ளனர்.

இப்போது இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று வருகிறது. ஆனால் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் சூனியம் வைத்தது ஆண் என்று வருகிறது. இது முரண்பாடானதுதான்.

நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக கதை விடுகின்ற போலிகள் சொல்வதைப் போன்று வைத்துக் கொண்டால் நபியவர்களுக்கு சூனியம் வைத்தது பெண்களாக இருந்தால்தான் இந்த வசனம் நபியவர்களுக்கு சூனியம் பற்றிப் பேசுகிறது என்று சொல்லலாம். உண்மையில் புகாரி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஹதீஸில் இருக்கும் செய்தி என்னவெனில், லபீத் பின் அஃஸம் என்ற யூதன்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்ததாக உள்ளது. (பார்க்க புகாரி 3268).

அந்த ஹதீஸ்கள் சரியில்லை என்று நாம் சொல்லி விட்டோம். ஒரு வாதத்திற்கு சரியென்று வைத்துக் கொண்டால்கூட, அதற்காகத்தான் இந்த ஆயத்து இறங்கியிருக்குமானால் அது பொய்தான். ஏனெனில் நபியவர்கள் காலத்தில் யூதர்களிலுள்ள ஆண்கள்தான் சூனியம் வைத்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களில் எந்தப் பெண்ணும் சூனியம் வைக்கவில்லை. அதுபோன்று நபியவர்களுக்கு சூனியம் வைத்ததும் ஆண்கள்தாம்.

பொதுவாக ஸிஹ்ர்-சூனியம் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு திரிந்ததும் ஆண்கள்தாம். இன்னும் சொல்லப் போனால் யூதர்களைப் பொறுத்த அளவுக்கு பெண்களில் யாரும் வேதத்தையும் மந்திரங்களையும் ஓதவோ தொடவோ கூடாது என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாம் வந்த பிறகுதான் வேதங்களை பெண்களும் தொடலாம், தொடர்பு கொள்ளலாம், ஓதிக்கொள்ளலாம், வேதத்திலுள்ள சத்தியக் கொள்கையையும் எடுத்துச் சொல்லலாம் என்று பெண்களுக்கும் உரிமை கொடுத்தது.

இஸ்லாத்திற்கு முந்தியுள்ள பிற எல்லா சமுதாயங்களிலுமே வேதங்களை பெண்கள் படிக்கக் கூடாது. தொடவே கூடாதென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றளவும்கூட நமது நாட்டிலுள்ள சிலர் மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என்று சொல்லி வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பதற்கு முன்னோடிகளே யூதர்கள்தாம். யூதர்கள் மாதவிடாய்ப் பெண்களை வீட்டைவிட்டே வெளியேற்றி விடுவார்கள்.

எனவே பெண்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று விதி செய்த சமுதாயத்தில் ஒரு பெண் நபியவர்களுக்கு சூனியம் வைத்திருக்க முடியாது. ஆனால் இங்கே இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்று வருகிறது. ஆனால் ஆண்கள்தான் சூனியம் செய்யும் வேலைகளை செய்துள்ளனர் என்பதை அறியும்போது, இந்த வசனம் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதைப் பற்றிப் பேசவே இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் இப்படி நபியவர்களுக்கு 12 முடிச்சுப் போட்டுத்தான் சூனியம் வைத்தார்கள் என்ற செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் தலாயிலுந் நுபுவ்வத் என்ற புத்தகத்தில் அறிவிக்கிறார்கள். அந்த அறிவிப்புகள் எதுவுமே சரியில்லாதவை என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹல் பாரியில் சொல்லுகிறார்கள்.

இப்னு கதீர் அவர்களும் கூட 4 வது பாகம் 575 ஆவது பக்கத்தில் சொல்லுகிறார்கள். அது போன்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், இது சம்பந்தமாக வருகிற எந்த அறிவிப்பும் சரியானதாக இல்லை என்று தனது தல்ஹீஸுல் ஹபீர் என்ற நூலில் 4 வது பாகம் 40 ஆவது பக்கத்தில் சொல்லுகிறார்.

எனவே முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்ற இந்த ஆயத்து, ஸிஹ்ர்-சூனியத்தைப் பற்றி பேசுகிற வசனம் இல்லை. சூனியம் செய்வதற்கும் வித்தை செய்வதற்கும் இந்த வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஸிஹ்ர்-சூனியத்தினால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் சூனியம் என்பதே கிடையாது என்றும் நிரூபித்த பிறகு அதிலிருந்து ஏன் பாதுகாப்புத் தேடச் சொல்ல வேண்டும். ஏதேனும் நடந்தால்தான் பாதுகாப்புத் தேடுவது நியாயம். சூனியத்தினால் எதுவுமே நடக்காது என்கிற போது பாதுகாப்புத் தேடுவது என்பது அர்த்தமற்றது. அது தேவையுமில்லை.

அப்படியெனில், முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்று குர்ஆனில் இருந்தும் ஹதீஸில் இருந்துமே ஆய்வு செய்து விடலாம்.

முதலில் முடிச்சுகளில் ஊதுதல், முடிச்சு போன்ற வார்த்தைகள் எந்த அர்த்தத்தில் குர்ஆனில் ஹதீஸில் பயன்படுத்தப்படுகிறது என்று ஆராய்ந்தால், அது ஒரு இலக்கிய அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது  என்பதை விளங்கிக் கொள்ள முடியும். நம் நாட்டில் கூட அப்படித்தான் பயன்படுத்தப்படுகிறது. முடிச்சவக்கி, முடிச்சு அவிழ்க்கிற பயல் என்றால் முடிச்சு போட்டு அவிழ்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அர்த்தமில்லை. அந்தக் காலங்களில் பணப்பை என்கிற மணிப்பர்ஸ் போன்றவைகளெல்லாம் கிடையாது. ஒரு துணியை பை போன்று தைத்து பையின் மேல்பகுதியில் கயிறால் முடிச்சுப்போட்டு வைத்துக் கொள்வார்கள். எங்களது ஊரிலெல்லாம் அதற்கு பசுக்குட்டி என்பார்கள். அதற்கு சுருக்குப் பை என்றும் சொல்லுவார்கள். அந்த சுருக்குப் பையிலுள்ள முடிச்சியை அவிழ்த்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். இன்றைக்கு பிக்பாக்கட் என்று சொல்கிறார்களே அதுதான். இந்த பிக்பாக்கட்டின் பழைய வார்த்தைதான் முடிச்சவிக்கி என்பது. முடிச்சு அவிழ்ப்பது என்பதற்கு நேரடி அர்த்தம் அப்படியே விளங்குகிறது.

ஆனால் நடைமுறையில் முடிச்சவிக்கி என்றால் திருடனுக்குச் சொல்லப்படும் வார்த்தையாகும். ஆக சில சொற்களுக்கு நேரடி அர்த்தம் கொள்வோம். சில சொற்களுக்கு இலக்கிய அர்த்தம் வைத்துக் கொள்வோம்.

உதாரணமாக கம்பி எண்ணுகிறான் என்று சொல்லுகிறோம்

அப்படியென்றால் இரும்புக் கடையில் வேலை செய்கிறார் என்றல்லவா அர்த்தம் செய்ய வேண்டும். யாராவது அப்படி அர்த்தம் கொள்ளுகிறோமா? இல்லை. கம்பியை எண்ணுகிறான் என்ற அர்த்தமும் கொடுப்பது இல்லை. இரும்புக் கடையில் வேலை பார்ப்பவரும் கம்பியை எண்ணித்தான் வியாபாரம் செய்கிறார். இருப்பினும் நாம் கம்பி எண்ணுகிறான் என்ற வார்த்தையை ஜெயிலில் (சிறைச்சாலை) இருப்பவர்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம். ஜெயிலில் இருப்பவர் வெளியில் வர இயலாது. உள்ளேயும் எந்த வேலையும் இருக்காது. அவனுக்கு முன்னால் இரும்புக் கம்பிகளாலான கதவுதான் இருக்கும். வேறுவழியில்லாமல் கம்பியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால்தான் கம்பி எண்ணுகிறான் என்ற வார்த்தையை ஜெயிலில் இருப்பவனுக்குப் பயன்படுத்துகிறோம்.

எனவே கம்பி எண்ணுதல் எப்படி ஜெயிலில் இருப்பவனுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அது போன்றே முடிச்சுகளில் ஊதுதல் என்கிற வார்த்தைக்கும் நடைமுறையில் இலக்கியமாக பயன்படுத்துகிற அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும்.

ஒரு வாதத்திற்காக கேட்கிறோம். ஒருவன் ஒரு நூலிலோ கயிற்றிலோ முடிச்சுப் போட்டு ஊதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனால் முடிச்சியில் ஊதுவதற்கு நாம் ஏன் பாதுகாப்புத் தேடவேண்டும்நன்றாக சிந்தித்துப் பார்த்தால் அப்படியே நேரடி அர்த்தம் கொடுப்பதினால் எந்த பொருளையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அப்படியெனில் அல்லாஹ் தஆலா வேறு ஏதோ ஒரு விசயத்தைச் சொல்ல வருகிறான் என்பது தெரிகிறதல்லவா. இதுபோன்று குர்ஆனில் நிறைய விசயங்களுக்கு அல்லாஹ் பயன்படுத்துகிறான். அதுபோன்று ஹதீஸிலும் இருக்கிறது. ஏன் நம் எல்லோருடைய பேச்சுக்களிலும்கூட இப்படி இலக்கியமாகப் பேசுவது இருக்கத்தான் செய்கிறது. மனிதர்கள் பேசுகிற பேச்சுகளிலெல்லாம் இருக்கிறது.

பழமொழிகள்கூட இந்த அடிப்படையில்தான் சொல்லுகின்றோம். உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் நன்றாக தொடர்ச்சியாக பள்ளிக்கூடத்திற்கு வந்த ஒரு மாணவன் பின்னால் சரியாக வராமல் பள்ளியைப் புறக் கணித்தால் அவனைப் பார்த்து, "வரவர மாமியா கழுதை போல ஆனாளாம்''  என்று பேசுவோம். அப்படியெனில் மாமியார் கழுதையாகப் போனார் என்றா அர்த்தம். அதுவெல்லாம் கிடையாது. நன்றாக இருந்தவன் கெட்டுவிட்டான் என்று அர்த்தம். அவ்வளவுதான்.

அதனுடைய நேரடி அர்த்தத்தை எல்லாம் கவனிக்க மாட்டோம். இப்படி பயன்படுத்துவது எல்லாருடைய பேச்சுகளிலும் இருப்பதைப் போன்று குர்ஆன் ஹதீஸிலும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த முடிச்சுகளில் ஊதும் பெண்களிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதைப் புரிந்து கொள்வதற்கு குர்ஆனிலிருந்தே இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் ஒரு பிரார்த்தனை செய்கிறார்கள். அதாவது மூஸா நபிக்கு சரியாக பேச்சு வராது. அதனால்தான் மூஸா நபியுடன் அவர்களின் தம்பி ஹாரூனையும் நபியாக அனுப்பி மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய சொன்னான். மூஸா நபியவர்கள் விரிவாக பேச மாட்டார்கள். சுருக்கமாக ஹாரூன் நபியிடம் சொல்லி விடுவார்கள். அவர் விரிவாக விளக்கி தங்கு தடையின்றி பேசுகிற சொல் திறமை பெற்றவர்.

"என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்). "உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். 

(அல்குர்ஆன் 28:34,35)

எதனால் அல்லாஹ் ஹாரூனையும் நபியாக்கினான் என்றால் மூஸா நபி அல்லாஹ்விடம் ஒரு துஆ (பிரார்த்தனை) செய்தார்கள்.

"என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!

(அல்குர்ஆன் 20:25...32)

இந்த வசனத்தில் மூஸா நபியவர்கள் தனது நாக்கிலுள்ள முடிச்சியை அவிழ்த்துவிடு என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அப்படியெனில் மூஸா நபியின் நாக்கு ரொம்ப பெரியதாக இருந்தது என்றும் அல்லாஹ் மூஸா நபியின் நாக்கை இழுத்து பிடித்து முடிச்சு போட்டு வைத்திருந்தான் என்றும் விளங்க முடியுமா?, அப்படி அர்த்தம் செய்வது முட்டாள்தனமானது.

தனக்கு ஏற்பட்டுள்ள திக்குவாயை அல்லது கொன்னலைத்தான் நாவிலுள்ள முடிச்சு என்கிறார்கள். திக்குவாய் என்றால் ஒரு வார்த்தையைப் பேசமுடியாமல் திணறுவதற்குத்தான் சொல்லப்படும். அதைத்தான் நாவின் முடிச்சு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். யாருடைய நாக்கிலாவது முடிச்சு போட முடியுமா? முடிச்சுப் போடுகிற அளவிற்கெல்லாம் யாருடைய நாக்கும் இல்லை. நாவில் ஏற்படுகிற சிக்கல் என்று அர்த்தம். சிக்கல் என்ற வார்த்தையைக் கூட இலக்கியமாகத்தான் பயன்படுத்துகிறோம்.

சிக்கல் என்றால் தைக்கிற நூலின் முதல்பகுதி எது கடைசி பகுதி எது என்று தெரியாமல் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலந்து விடுவதற்குப் பயன்படுத்துகிற வார்த்தை. ஆனாலும் இந்த சிக்கல் என்ற வார்த்தையை நமது வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் தலையில் கையை வைத்துக் கொண்டு "நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன்", "நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறீர்கள்" என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். அப்படியெனில் நூலை வைத்து பின்னிவிட்டீர்களா என்று யாரும் கேட்க மாட்டார்கள். சிக்கல் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம் செய்ய வேண்டியதாயிற்று. யாரும் அப்படியே நேரடி அர்த்தத்தைக் கருதுவதுமில்லை. இதுபோன்றுதான் மூஸா நபி பிராத்தனையாகக் கேட்ட வசனத்தில் வருகிற வார்த்தையையும், சூரத்துல் ஃபலக்கில் வருகிற வசனத்தின் வார்த்தையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மூஸா நபி துஆ கேட்ட வசனத்தில் வருகிற வார்த்தையான உக்தத் (عُقْدَةٌ) என்பது ஒருமை. முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதில் வருகிற வார்த்தையான உகத் (عُقَدٌ) என்பது பன்மை. எனவே உக்தத்(عُقْدَةٌ)  என்றால் முடிச்சு, உகத் (عُقَدٌ) என்றால் முடிச்சுகள் என்று பொருள் வரும். சூரத்துல் ஃபலக்கில் வரக்கூடிய வார்த்தையின் ஒருமையைத் தான் மூஸா நபியவர்கள் பயன்படுத்துகிறார்கள். நாவின் முடிச்சியை அவிழ்த்து விடு என்றால் சிரமத்தை கஷ்டத்தை நீக்கிவிடு என்று அர்த்தம். சிக்கலை தீர்த்துவிடு, பிரச்சினை இல்லாமல் ஆக்கு என்று அர்த்தம். மேலே சொன்னதைப் போன்று சரியாகச் சொல்வதாக இருந்தால் அந்தத் திக்குவாயைப் போக்கிவிடு என்று அர்த்தம்.

(பார்க்க அல்குர்ஆன் 20:27) 

அப்படியெனில் சூரத்துல் ஃபலக்கில் வருகிற உகத் என்ற வார்த்தைக்கு கயிற்றில் முடிச்சுப்போட்டு தாயத்து தகடுகள் போடுகிறார்களே அதற்கு நமது கவனம் போய்விடக்கூடாது. அதனால்தான் ஒருகேடும் வராதே.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் முடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அந்த இடத்தில் உக்தத்துந்  நிக்காஹ் (عُقْدَةُ النِّكَاحِ)  என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். இதிலும் உக்தத் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

மேலும் 2:237 என்ற வசனத்தில் இறைவன் இதே உக்தத் (عُقْدَةٌ) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.

... أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ ...2:237   "...நிக்காஹ் என்ற முடிச்சு யார் கைவசம் இருக்கிறதோ அவன் விட்டுத்தர வேண்டும்...'' என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

முடிச்சு யார் கையில் இருக்கிறதோ என்றால் கணவன் அல்லது மனைவி கையில் இருக்கிறது என்று அர்த்தம். அப்படியென்றால் மஹர் தொகையின் மூலம் திருமணம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஒரு ஆணும் பெண்ணுமாகிய கணவன் மனைவியரிடத்தில் தான் ஒப்பந்தம் இருக்க முடியும். சம்பந்தமில்லாதவர்களுக்கு இதைச் சொல்ல இயலாது. அவர்கள் விட்டுத் தந்தால் அதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று விளங்க வேண்டும்.

இந்த இடத்திலும் நிக்காஹ் என்ற முடிச்சு என்பதைக் குறிக்க உக்தத் (عُقْدَةٌ) என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

அப்படியென்றால் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு முடிச்சு போட்டுக் கொண்டார்கள் என்றா அர்த்தம்?  இரண்டு பேரும் தாலிகட்டிக் கொண்டார்களா? அதுவெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. அவள் யாரோ இவன் யாரோ என்று இருந்தார்கள். நிக்காஹ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் இருவரும் கணவன் மனைவியாக இணைந்து விட்டார்கள். எனவே இரண்டு கயிறுகளை முடிச்சுப் போட்டு சேர்ப்பதைப் போன்று இருவரையும் ஒப்பந்தத்தின் மூலம் இணைப்பதினால் அல்லாஹ் உக்தத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.

அதே போன்று மறுமணத்தைப் பற்றி 2:235 அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். பெண்கள் இத்தாவில் இருக்கிறார்கள். கணவர் இறந்தவுடன் நான்கு மாதம் பத்து நாட்களோ அல்லது குழந்தை வயிற்றில் இருந்தால் பிரசவிக்கும் வரையோ இத்தாவில் இருப்பார்கள். அந்த நேரத்தில் கல்யாணமும் செய்துகொள்ளக் கூடாது. கல்யாணப் பேச்சுகளை பேசி முடிவு செய்துவிடவோ கூடாது. அதைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

...وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ... 2:235 - (இத்தா என்ற) தவணை முடியும் வரை நிக்காஹ் என்ற முடிவை நீங்கள் உறுதி செய்து விடாதீர்கள்.

இந்த இடத்தில் உக்தத் என்பதற்கு முடிவு, ஒப்பந்தம் (ஆஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற்) என்று அர்த்தம். ஆக எதற்காக நான் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்ல வருகிறேன் என்றால், இந்த ஆயத்துக்களை விளக்குவதற்காக சொல்ல வரவில்லை. முடிச்சு என்று சொன்னவுடன் நிஜமாக முடிச்சு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மேற்சொன்ன வசனங்களில் எதிலுமே நிஜமான முடிச்சுகள் கிடையாது. கல்யாணத்தில் நிஜ முடிச்சு இல்லை. மறுமண ஒப்பந்தத்தில் நிஜ முடிச்சு கிடையாது. மூஸா நபியின் நாக்கைப் பற்றிப் பேசுகிற வசனத்திலும் நிஜ முடிச்சு கிடையாது. 

இப்போது நாம் உக்தத் முடிச்சியிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறோம்.

அப்படியெனில் இது என்னவாக இருக்கும். இதற்கு புகாரியில் 1142,3269 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் இதே வார்த்தையைப் பயன்படுத்தி நபியவர்கள் நமக்குச் சொன்ன செய்தியில் இது என்ன என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் "இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு' என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்:புகாரி 1142,3269

ஆக முடிச்சுகள் என்றால் ஷைத்தான்கள் நம்மை நல்லகாரியங்களைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக முடிச்சுபோட்டு நம்மைக் கட்டிவைக்கிறான் என்று அர்த்தம். இப்படி ஷைத்தான் நம்மை நல்ல காரியங்களில் இருந்து தடுத்து வைப்பதிலிருந்து அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடவேண்டும். இந்த விசயத்தில் எந்தளவுக்கு தயாரிப்பாகவும் விவரமாகவும் இருந்தாலும் புரண்டு விடுகிறோம்.

அதனால் தினமும் தூங்கும்போது இந்த அத்தியாயங்களை ஓதவேண்டும். அதனால்தான் நபியவர்கள் இந்த மூன்று அத்தியாயங்களையும் இரவில் ஓதச் சொன்னார்கள்.

அப்படியெனில் சுப்ஹ் தொழுகைக்கு நாம் என்ன ஏற்பாடுகளை செய்திருந்தாலும் நம்மை எழுந்திரிக்க விடாமல் இருப்பதற்காக நம் தலைமாட்டில் ஒரு ஷைத்தான் இருக்கிறான். அவனிடமிருந்து நாம் வெற்றிபெற வேண்டுமானால் நம்மீது நம்பிக்கை வைத்துவிடாமல் நமக்கு மேலே ஏழு வானங்களைத் தாண்டியுள்ள அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்விடமே பாதுகாப்பைத் தேடவேண்டும்.

எனவே அலாரத்தின் மீதும் பக்கத்தில் உள்ளவர்களின் மீதும் நம்பிக்கை வைப்பதைவிட படைத்தவன் மீது கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டும். யாஅல்லாஹ்! நீ என்னை எழுப்பிவிடு! என்று அல்லாஹ்வைச் சார்ந்து இருக்க நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

இதுவரை பார்த்த இந்த அத்தியாயத்தின் வசனங்களை கோர்த்து மீண்டும் ஒருமுறை அர்த்தம் செய்து பாருங்கள்.

நபியே நீங்கள் சொல்லுங்கள்.

வைகறைப் பொழுதின் இறைவனிடமிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

அவன் படைத்தவற்றின் தீங்குகளிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

அவன் படைத்தவை என்னென்னவெல்லாம் இருக்கிறது என்ற பட்டியலை முன்னாலே நாம் பார்த்து விட்டோம். அவன் படைத்தவற்றின் அனைத்தின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அர்த்தம்.

இரவு சூழ்ந்து கொள்ளும் போது ஏற்படும் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இதில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. ஒன்று சந்திரகிரகணம் ஏற்படும் போது நடக்கவிருக்கின்ற பேராபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவது. மற்றொன்று, பொதுவாக இரவு ஆரம்பிக்கும் போது ஏற்படும் தீங்கு. இருட்டு என்று இருப்பதினால் பேய்பிசாசு என்றெல்லாம் இல்லாததை இருப்பதாக நினைத்து மனிதன் அஞ்சுகிறான். அதனால் இரவின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவது.

முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான்களின் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இந்த வசனத்தில் வருகிற ஷைத்தானைக் குறிப்பதற்காகத்தான் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி குர்ஆனில் ஷைத்தான்களைப் பற்றி பயன்படுத்துகிற இடங்களில் பெண்பால் வார்த்தைப் பிரயோகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

قُلْ أَنَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ(71 ) الأنعام 6

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ(210) 26

هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ(221) 26

அல்குர்ஆனின் 6:71,26:210,26:221 ஆகிய வசனங்களில் ஷைத்தான்களைக் குறிப்பதற்காக பெண்பால் வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

எனவே ஷைத்தான்களைக் குறிக்க பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்படுவதினால் இங்கேயும் அல்லாஹ் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்று பயன்படுத்துகிறான். அதாவது நம்மை தொழுகைக்கு எழுந்திருக்க விடாமல் நம்மைத் தடுக்கிற ஷைத்தான்களின் தீங்கிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக என்று விளங்க வேண்டும். அதனால்தான் நாம் அந்த அத்தியாயங்களை இரவில் பாதுகாப்புத் தேடுவதற்குப் பயன்படுத்துகிறோம். மேலும் தூங்கி எழுந்திருப்பதற்கும் அதில் பாதுகாப்புத் தேடுவதைத்தான் புகாரியின் 1142,3269 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ஹதீஸ்களிலும் நாம் பார்க்கிறோம். இதுதான் ஸிஹ்ர்-சூனியத்தைப் பற்றிச் சொல்வதற்கு அடிப்படையாக இருந்த வசனம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

வானவர்கள்                                                    தொடர்:5 

மலக்குகள் நுழையாத டங்கள்

எம்.முஹம்மத் சலீம் எம்.ஐ.எஸ்.ஸி,மங்களம்

எங்கே செல்லலாம்? எங்கே செல்லக் கூடாது? அங்கே யாருடன் செல்லலாம்? அங்கே யாருடன் செல்லக் கூடாது? என்றெல்லாம் மார்க்கத்தில் நமக்கு செல்வதற்கு தகுந்த, தகுதியில்லாத இடங்களை சொல்லப்பட்டுள்ளதைப் போன்று மலக்குகளுக்கும் சொல்லப்பட்டுள்ளன.

அந்த இடங்களுக்கு அவர்கள் ஒரு போதும் செல்லவே மாட்டார்கள். ஆகவே, அவ்விடங்கள் எவை? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக இப்போது தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப்படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி,

ஆதாரம் : புகாரி (3225)

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள். உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்து விட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

ஆதாரம் : முஸ்லிம் (4272)

நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்கüன் உருவப்படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப்படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

ஆதாரம் : புகாரி (3351)

உருவப்படங்கள், சிலைகள் மற்றும் நாய் இருக்கும் இடங்களுக்கு அருளைத் தரும் மலக்குமார்கள் மட்டுமே வர மாட்டார்கள் என்பதை மேற்காணும் செய்திகள் விளக்குகின்றன. ஆகையால் இந்த விஷயங்கள் நமது இல்லங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், இது போன்ற இடங்களுக்கு நன்மைகள் மற்றும் தீமைகளைப் பதிவு செய்யும் மலக்குமார்கள், உயிரைக் கைப்பற்றும் மலக்குகள், சிறப்பான காரியங்களைக் கவனிக்கும் மலக்குகள், தண்டனையைக் கொண்டுவரும் மலக்குகள் போன்றவர்கள் அதாவது அருளைக் கொண்டு வரும் பணியில் இல்லாத மலக்குகள் வருவார்கள் என்பதை என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலக்குகளின் எண்ணிக்கை

வானவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற ஞானம் அல்லாஹ் வைத் தவிர யாருக்கும் இல்லை. ஆதலால், அவர்களுக்கு நாமாகவே சுயமாக ஏதாவதொரு எண்ணிக்கையைச் சொல்லிவிடக் கூடாது. காரணம், மறைவான விஷயங்கள் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது என்று நாம் நம்பியிருக்கிறோம். இந்நிலையில், வானவர்களின் எண்ணிக்கையை நாமாக கற்பனை செய்து கூறினால், அல்லாஹ்வின் ஆற்றலான மறைவான ஞானம் நமக்கு இருப்பதாக வாதிடுவது போன்றதாகிவிடும்.

நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர் உறுதி கொள்வதற்காகவும், நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும், நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும், யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன்மாதிரியை நாடுகிறான்?'' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழி தவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை (வானவர்களை) அவனைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.

(திருக்குர்ஆன் 74 : 31)

வானவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? என்பதைத் துல்லியமாக அறிந்தவன், அல்லாஹ் மட்டுமே. அதேசமயம் அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்களா? அதிக எண்ணிக்கையில் உள்ளார்களா? குறிப்பிட்ட சில இடங்களில் எத்தனை மலக்குகள் உள்ளனர் என்பதற்கு சரியான பதிலை நம்மால் சொல்ல முடியும். அவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பின்வரும் தகவலின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

(மிஃராஜ் பயணத்தின்போது) "அல்பைத்துல் மஃமூர்' எனும் "வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், "இதுதான் "அல்பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்'' என்று சொன்னார்.

ஆதாரம் : புகாரி (3207)

பெயர் கூறப்பட்டுள்ள மலக்குகள்

நாமெல்லாம் மனிதர்கள் எனும் ஒரே இனமாக இருப்பினும், நம்மில் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக பெயர்கள் இருப்பது போல, வானவர்கள் என்ற இனத்திலும் அவர்களுக்கென தனித்தனியான பெயர்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரது பெயர்களை மட்டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், அப்பெயர்களில் வானவர்கள் இருக்கிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அதே சமயம், அவற்றைத் தவிர்த்து மற்ற பெயர்களை நாமாக யோசித்து அப்பெயர்களிலும் மலக்குமார்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறாகும். ஆகவே பெயர் சொல்லப்பட்ட வானவர்களைப் பற்றிய ஆதாரங்களை காண்போம்.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 2 : 98)

"(நரகத்தின் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்கள் கதையை முடிக்கட்டும்'' எனக் கேட்பார்கள். "நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்'' என்று அவர் கூறுவார்.          

(அல்குர்ஆன் 43 : 77)

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்  அவர்கள் கூறியதாவது: நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் "அல்லாஹும்ம ரப்ப ஜிப்ரீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆரிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தரிஃபூன். இஹ்தினீ ரிமக்துரிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலாஸிராதிம் முஸ்தகீம்' என்று கூறுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.)

ஆதாரம்  : முஸ்லிம் (1418)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை "ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சருமஅமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாபொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகüல் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

ஆதாரம்  : புகாரி (3239)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்கüல் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) "அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி),

ஆதாரம் : புகாரி (
3236)

ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல், மாலிக் என்று நான்கு மலக்குமார்களின் பெயர்கள் மட்டுதான் நமக்கு சொல்லப்பட்டுள்ளன.

ஆனால், இஸ்ராயீல் என்ற பெயரில் மலக்கு ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் அனைத்து உயிர்களையும் கைப்பற்றுகிறார் என்றும் பல முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உயிரைக் கைப்பற்றும் பணிக்கென்று பிரத்யேகமாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மாற்று மதத்தினர் சொல்வதைக் கேட்டு அப்படியே முஸ்லிம்களும் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வது எந்தளவிற்கு பாரதூரமான பிழை என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஏனெனில், இஸ்ராயீல் என்ற பெயரில் மலக்கு ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவொரு சரியான ஆதாரமும் இல்லை.

இன்னும் சொல்வதெனில், நமது உயிரைக் கைப்பற்றுவதற்காக என்று நம்மில் ஒவ்வொருவருக்கும் வானவர் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நியமித்திருப்பதாக அல்லாஹ் தமது திருமறையில் குறிப்பிட்டுள்ளான். அந்த வசனங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 32 : 11)

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். 

(திருக்குர்ஆன் 6 : 61)

தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள்.                 

(திருக்குர்ஆன் 18 : 28)

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள்.         

(திருக்குர்ஆன் 4 : 97)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள்.

(திருக்குர்ஆன் 7 : 37)

இப்லீஸ் மலக்குகளில் ஒருவனா?

ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தை வடிவமைத்த பிறகு நடந்த சம்பவத்தை திருமறையில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். ஆதம் (அலை) அவர்களுக்கு பணியுமாறு அவன் அங்கிருந்த வானவர்களுக்கு கட்டளையிடும் போது அவர்கள் அனைவரும் அக்கட்டளையை நிறைவேற்றினார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிவதற்கு மறுத்ததோடு அதை நியாயம் கற்பித்து தர்க்கம் செய்தான்  என்பதை திருமறையின் வசனங்களின் மூலம் தெரிந்து வைத்துள்ளோம். அந்த வசனங்களில் ஒரு வசனத்தை இப்போது பார்ப்போம்.

உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இல்லை.

(திருக்குர்ஆன் 7 : 12)

வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர் என்பதை படிக்கும் சிலர் அந்த வாசகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்த இப்லீஸ் வானவர்களில் ஒருவனாகத்தான் இருந்தான் என்று வாதிடுகிறார்கள். இந்த வாதம் தவறானது என்பதை இந்த நிகழ்வு தொடர்பாக வந்திருக்கும்  பிற வசனங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். அவன் மலக்குகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்று  மற்றொரு வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான். அந்த வசனத்தை இப்போது பார்ப்போம்.

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.

(திருக்குர்ஆன் 18 : 50)

வளரும் இன்ஷா அல்லாஹ்

பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை ட்டும் கல்விமுறை

இப்னு சாபிரா

ஒரு ஆசிரியை ஒரு மாணவனால் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, மாணவ சமுதாயத்தைப் பற்றியும், எதிர்கால சமுதாயத்தைப் பற்றியும் எழுதாத பத்திரிக்கைள் இல்லை! அலசாத தொலைக்காட்சி அலைவரிசைகள் இல்லை! பல கோணங்களில் இந்தச் சம்பவம் அலசப்பட்டது.

இதைப்போன்ற கொடூர சம்பவங்கள் நிகழ்வதற்கு நம்முடைய கல்வி முறையும் காரணம் என மனோதத்துவ மருத்துவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர்.  அதை மேலும் ஆமோதிக்கும் வகையில் ஈஇநஊ (ஈங்ய்ற்ழ்ஹப் இர்ஹழ்க் ர்ச் நஸ்ரீட்ர்ர்ப் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்)  நடத்தும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வின் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சம்பந்தமாக இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.  மாணவர்களின் மொழிப் புலமையைச் சோதிப்பதற்காக, ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றியோ

அல்லது ஒரு கூரை தீப்படிக்கும் சம்பவத்தைப் பற்றியோ 100 முதல் 125 வார்த்தைகளில் விவரிக்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.  இதைத் தான் பெற்றோர்கள் எதிர்க்கின்றார்கள்.  தேர்வு படபடப்பில் இருக்கும் மாணவர்களின் படபடப்பை மேலும் அதிகமாக்கும் வண்ணம், இதைப்போன்ற படபடப்பான சம்பவங்களைப் பற்றிய வர்ணணை அமைந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மாணவர்களின் எழுத்துத் திறனை சோதிக்க சுற்றுப்புற சுழல், புதிய கண்டுபிடிப்புகள் என பல விஷயங்கள் இருக்க, இதைப்போல பயங்கரத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைப் பற்றி ஏன் கேள்வி கேட்க வேண்டும் என பெற்றோர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இப்பொழுதாவது மாணவர்களின் மனநிலைமையைப் பற்றி பெற்றோர்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.

எது போதிக்கப்படுகிறதோ அதைத்தான் மாணவர்கள் தங்களுடைய நடைமுறையில் வெளிப்படுத்துவார்கள் என பெரும்பாலானோர் இப்பொழுது உணர்கின்றனர்.  இந்தத் தருணத்தில், வெறும் ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் தராமல், மாணவர்களின் மற்ற விஷயங்களைப் பாதிக்காத பள்ளிக் கூடங்களை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம் பெற்றோர்கள் வெறும் மொழிப் புலமைக்காக இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளைப் போதிக்கும் கல்விக்கூடங்களைத் தேர்ந்தெடுப்பதை அறவே விட வேண்டும்.  இல்லையென்றால் நம்முடைய வருங்கால சமுதாயம் உலக கல்வியை மெத்தப்படித்த, ஆனால் கொடூரங்களை நிகழ்த்தக்கூடிய கொடூரர்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கம் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை வளர்ப்பதை எந்தளவிற்குத் தடுக்கிறது என்றால், யதார்த்தமான விஷயங்கள் கூட குழந்தைகளின் மனதில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடாது என்கிற உயரிய நோக்கத்தில்குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது கூட அனுமதி பெற வேண்டும் என மிக அழகாக போதிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 24:58,59)

இப்பொழுது மாணவர்களின் மனநிலைமையைப் பற்றி அலசுபவர்கள், இதே இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் விஷத்தை ஊட்டும் வண்ணம், மாணவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது மாணவர்களின் உள்ளங்களில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

அறியாமை என்கிற இருள் விலகி, மனிதர்களை உயரிய பண்புகளோடு வாழ வேண்டிய பாடத்தை எந்தக் கல்வி போதிக்கிறதோ அது தான் உண்மையான கல்வி என்பதை அன்றாட நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்..

(அல்குர்ஆன் 39 : 9)

தரவற்றவர்களை ரவணைப்போம்

என். ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி, குழுமூர்

இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமோ அதே போல் மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்களின் உரிமைகளையும் பேண வேண்டியது மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகச் சிறந்தது அநாதைகளை அரவணைப்பதாகும்.

அனாதைகள் மனித சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கே திக்கற்றவர்கள். எந்த வகையிலும் தங்கள் வாழ்வாதாரங்களைப் பெற்றிட எந்தவொரு பக்கபலமும் இல்லாதவர்களாக உலகில் அனாதைகள் இருந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நாமெல்லாம் எண்ணிப் பார்த்திராத வகையில் கடினமிக்கதாக இருந்து வருகிறது.

பெற்றோரின் இயற்கை மரணங்களால் அனாதைகளாகும் பிள்ளைகள்.

இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுத்தும் பேரழிவுகளால் நிர்க்கதியாகி போகும் பிள்ளைகள்.

போர் ஏற்படுத்திய சீரழிவுகளால் உருவாகும் அனாதைகள்.

வலிமையுள்ள ஒரு நாடு, ஏழை நாட்டின் மீது சுமத்தும் பொருளாதார நெருக்கடிகளால் அனாதைகளாக ஆக்கப்பட்டவர்கள்.

என உலகின் பல பாகங்களிலும் நம்மைப் போன்ற மனிதர்கள் ரணங்களை மனதில் பூட்டி வைத்துக் கொண்டு நடைப் பிணமாய் இந்த அனாதைகள் நடமாடி வருகின்றனர்.

இஸ்லாம் கூறும் மனித நேயப்பணிகளில் அனாதைகளைப் பராமரிப்பதும் ஒன்று.

அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில் ரவுடிகளாக, கொள்ளையர்களாக, திருடர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதனால் நாடே பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.

சரியான வழிகாட்டுதல், தெளிவான அறிவுரைகள் இல்லாமல் கண்டிக்கப்படாமல் வளர்க்கும் போது இது போன்ற நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே இது போன்ற குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று விடாமல் அவர்களை நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது.

இறைவன் அநாதைகளை நடத்தும் விதம் பற்றியும், அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

அனாதைகளுக்கு உதவுதல்

இவ்வுலகில் வாழும் போது அனாதைகளை அரவணைத்தும், அவர்களுக்கு நல்ல நிலையையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அவர்களுக்காக நல்ல ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:220

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 4:36

"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோ ருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

அல்குர்ஆன் 2:83

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:215

செலவிடும் முறை 2:215 வசனத்தின் விளக்கம். எதைச் செலவிட வேண்டும் என்பது தான் இங்கே கேள்வி. ஆனால் எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்வியுடன் எப்படிச் செலவிட வேண்டும் என்பதற்கும் பதிலளிக்கப்படுகிறது.

கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக "செலவிடப்படும் பொருள் நல் வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்'' என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (திருக்குர்ஆன் 2:215) தெளிவுபடுத்துகிறது.

மற்ற பணிகளுக்குச் செலவிடுவதை விட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகள் மற்றும் நாடோடிகளுக்கும் செலவிடுவது சிறந்ததாகும் என்பதையும் இவ்வசனம் வலியுறுத்துகிறது.

எத்தனையோ அறப்பணிகளுக்குச் செலவு செய்வோர் பெற்றோரைச் சந்தியில் விட்டு விடுகின்றனர். உறவினர்களையும், அனாதைகளையும் கண்டு கொள்வதில்லை. இவர்கள் தான் முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் இங்கே போதிக்கப்படுகின்றது.

இறைவனை அஞ்சுபவர்கள்

அனாதைகளுக்கு நன்மை செய்பவர்களும் இறை அஞ்சுபவர்கள் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

கணவாய் என்றால் என்ன?

நன்மைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது கணவாய் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். கணவாய் என்பது பிறருக்கு உதவுவது என்று குறிப்பிட்டுள்ளான்.

(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்ன வென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).

அல்குர்ஆன் 90 : 10-17

செல்வம் சிறந்த தோழனாக திகழும்...

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.  ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக்கேட்டதும் நபி (ஸல்)

அவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே அந்த நபரிடம், "என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களே உம்மிடம் பேசாமரிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர் நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால் நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; - பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ - அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல் குத்ரீ (ரலி),

நூல் : புகாரி 2842, 1465, முஸ்லிம் 1901

இறைவனுக்காக தர்மம் செய்தல்

நாம் தர்மம் செய்வதாக இருந்தால் இறைவனுக்காக தான் செய்ய வேண்டுமே தவிர பிறர் பார்க்க வேண்டும் என்றோ அல்லது பிறர் பாரட்ட வேண்டும் என்றோ அல்லது பெருமைக்காகவோ செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை கீழ்கண்ட வசனம் உணர்த்துகிறது.

குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான். (நம்மை) மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் தயாரித்துள்ளோம். நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள்.

அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:1-9

அனாôதைகளுக்கு ஐந்தில் ஒரு பாகம்

நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாளில், வேறுபடுத்திக் காட்டிய நாளில் நமது அடியார் மீது நாம் அருளியதையும் (நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்), போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 8:41

8:41 என்ற வசனத்தின் விளக்கம் போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

அதாவது போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவிகிதமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினருக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், நாடோடிகளுக்கும் சேர்த்து இருபது சதவிகிதமும் என்று பிரிக்கப்பட வேண்டும்.

இதில் அல்லாஹ்வையும் குறிப்பிட்டிருப்பதால் அவனுக்கு ஒரு பங்கு என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு உரியது என்று கூறப்படும் பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஸகாத் நிதியிலிருந்து எதையும் தொடக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து அவர்களுக்கும் அல்லாஹ் பங்கு ஒதுக்கினான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அனாதைகளை விரட்டுபவன் மறுமையை நம்பாதவன்

சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் அனாதைகளையும், ஏழைகளையும் நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக நடத்துதலோ கூடாது.

அப்படி நடந்து கொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை) பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான்.

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

அல்குர்ஆன் 107 :1-3

தீர்ப்பு நாளை மெய்யாக்குபவர்கள் செய்ய வேண்டியது சமுதாயத்தில் பலவீனர்களாயிருப்போர் மீது இரக்கம் கொண்டு உதவுவதாகும்.

அனாதைகளின் சொத்துகளைப் பற்றி நபியின் வஸீயத்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்! உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),

நூல் : முஸ்லிம் 3730

அனாதைகளை அரவணைத்த ஸஹாபாக்கள்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள், குறிப்பாக பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பதை கீழ்கண்ட செய்திகளின் மூலம் அறியலாம்.

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர், "எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன்'' என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெüத்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 380

எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி) (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுதுகொண்டு) இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 727

நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்சாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் மனைவி ஸைனப் (ரலி),

நூல் : புகாரி 1466

அனாதைகளை அரவணைத்த குறைஷிப் பெண்கள்

நபி (ஸல்) அவர்கள் குறைஷிப் பெண்களின் குணத்தைப் பற்றி கூறும் போது அனாதைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள் "குறைஷிப் பெண்கள் ஆவர்' அல்லது "நல்ல குறைஷிப் பெண்கள் ஆவர்'.அவர்கள் அநாதைக் குழந்தைகள் மீது அதிகமான பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள் ஆவர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 4946

வளரும் இன்ஷா அல்லாஹ்

சொற்பொழிவு குறிப்புகள்

இடையூறுகளைத் தவிர்த்தல்

தொகுப்பு : இப்னு மர்யம்

சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர்

وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمْ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(282) سورة البقرة

ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:282)

விவாகரத்து செய்த பெண்களுக்கு இடையூறு கொடுக்காதீர்

أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ (٦) الطلاق

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்!

(அல்குர்ஆன் 65:6)

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (٢٣١) سورة البقرة

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்!

(அல்குர்ஆன் 2:231)

ஏழைத் தந்தையைத் துன்பப்பப்படுத்தாதீர்

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لا تُكَلَّفُ نَفْسٌ إِلا وُسْعَهَا لا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ ... (٢٣٣) سورة البقرة

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:233)

அடுத்தவர்களுக்கு துன்பம் தாரதவனே முஸ்லிம்

10 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளிலி)ருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி),

நூல் : புகாரி (10)

3924 عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ الْجَنْبِيِّ أَنَّ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذُّنُوبَ رواه ابن ماجة

எவர்களிடமிருந்து செல்வத்திலிருந்தம் உயிர்களிலிருந்தும் மக்கள் பாதுகாப்பு பொறுகிறார்களோ அவரே முஃமினாவார். எவர்  சிறிய, பெரிய பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

நூல் : இப்னுமாஜா (3924)

பாதையில் அமர்ந்து தொல்லை தராதீர்

2465 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ  رواه البخاري

"நீங்கள் சாலைகüல் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள்,

"அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச்  சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : புகாரி (2465)

தீமையை செய்யாமலிருப்பதும் நன்மை

1445 حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ عَنْ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ رواه البخاري

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'' என கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?'' எனக் கேட்டனர்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், " ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்'' என்றார்கள்.  தோழர்கள், "அதுவும் முடியவில்லையாயின்'' எனக் கேட்டதற்கு, "தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்'' என்று பதிலளித்தார்கள். தோழர்கள்  " அதுவும் இயலவில்லையாயின்'' என்றதும் "நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே அவர் செய்யும் தர்மமாகும்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),

நூல் : புகாரி (1445)

தொல்லை தரும் பொருட்களை அகற்றவது இறைநம்பிக்கையைச் சார்ந்தது

51 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது "அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)

நூல் :முஸ்லிம் (58)

1675 حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلَاثِ مِائَةِ مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ وَحَمِدَ اللَّهَ وَهَلَّلَ اللَّهَ وَسَبَّحَ اللَّهَ وَاسْتَغْفَرَ اللَّهَ وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلَاثِ مِائَةِ السُّلَامَى فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنْ النَّارِ رواه مسلم

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது  எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் :முஸ்லிம் (1833)

853 عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا رواه البخاري

வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது

853 عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا رواه البخاري

கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் செடியிலிருந்து -அதாவது வெள்ளைப்பூண்டுடைச்- சாப்பிட்டவர் நம் பள்üவாசலுக்கு நெருங்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் :புகாரி (853)

நிழல் தரும் இடங்களில் அசுத்தம் செய்யக்கூடாது

397 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتَّقُوا اللَّعَّانَيْنِ قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),

நூல் முஸ்லிம் (448)

அடுத்தவருக்கு இடையூறு தரும் விதமாக அம்பை எடுத்துச் செல்லக் கூடாது

حَدَّثَنَا سُفْيَانُ قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْسِكْ بِنِصَالِهَا رواه البخاري

 (மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாசலுக்குள் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவற்றின் முனைகளைப் பிடித்துக் கொள்!'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி (451) 

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா?

 (أول ما خلق الله نور نبيك يا جابر - الحديث) رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد الله بلفظ قال قلت : يا رسول الله ، بأبي أنت وأمي ، أخبرني عن أول شئ خلقه الله قبل الأشياء . قال : يا جابر ، إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره ، فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ، ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي ، فلما أراد الله أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء ، فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ، ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهى المعرفة بالله ومن الثالث نور إنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله - الحديث- كشف الخفاء - (1 / 265)

அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு

அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான்.  அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள், வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான். முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.

பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.

அதன் முதல் பகுதியிலிருந்து  வானங்களைப் படைத்தான்.  இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.

பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்)

நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265

இந்தச் செய்தி பரவலாக நபிகளாரின் சிறப்பு என்ற பெயரில் இமாம்களின் சொற்பொழிவில் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். குறிப்பாக மீலாது மேடைகளில் பேசுபவர்கள் இறைவனின் ஒளியைக் கொண்டே நபிகளார் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களே முதல் படைப்பு என்றும் மேற்கூறிய செய்தியை அடிப்படையாக வைத்து நீட்டி முழங்கிவருகின்றனர்.

இந்தச் செய்தி சில திருக்குர்ஆன் விரிவுரை நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. தப்ஸீரு ரூஹில் மஆனீ, தப்ஸீரு ரூஹில் பயான் போன்ற நூல்கள் முக்கியமானவையாகும்.

ஆனால் இந்தச் செய்தி எந்த அடிப்படையும் இல்லாத திருக்குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும்.

இந்தச் செய்தி முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த நூலில் இந்தச் செய்தி இடம்  பெறவில்லை. மேலும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதிய எந்த நூலிலும் இது இடம் பெறவில்லை.

முஸன்னஃப்  அல்ஜாமிவுல் கபீர் அஸ்ஸுனன் தஃப்ஸீருல் குர்ஆன் ஆகிய நூல்கள் தான் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. இதில் எதிலும் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்று இச்செய்தியை ஆய்வு செய்த அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் பார்த்த வரையிலும் இந்த செய்தி அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதிய நூல்களில் இடம்பெறவில்லை.

இந்தச் செய்தி ஜன்னத் குல்த் என்ற அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இப்படி ஒரு நூலை அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதியதாக பார்க்க முடியவில்லை.

மேலும் இந்தச் செய்தி திருக்குர்ஆன் கருத்துக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கும் முரணாக உள்ளது.

மனிதனை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்ததாக கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மனிதரே என்று பல இடங்களில் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.

(அல்குர்ஆன் 30:20)

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 18:110)

"என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:93)

 (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 25:20)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் :முஸ்லிம் (5722)

நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்ற செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லாததாலும் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் மாற்றமாக இருப்பதாலும் இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ்வை எப்படி நம்புவது?                                   தொடர் :4

திப் பார்க்கலாமா?

உரை : பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் போதல்லாம் அவர்கள் தமது உடலில் குல் என்றும் துவங்கும் அத்தியாயங்களை ஓதி ஊதி தமது கைகளால் தடவிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு வயது முதிர்ந்து உடல் தளர்வு ஏற்பட்ட போது அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்கள் ஓதி நபி (ஸல்) அவர்களின் கரத்தினால் உடல் முழுவதும் தடவி விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பாதுகாப்புக்கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்') ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள் மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள் மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.

ஆதாரம் முஸ்லிம் 4413

குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் பலக்அல் ஹம்து இது போன்ற அத்தியாயங்களை நோய் வரும் போது ஓதினால் அல்லாஹ் அதன் மூலம் நிவாரணத்தை ஏற்படுத்துவான்.

ஆனால் ஓதிப் பார்த்தலைப் பொறுத்தவரை இதைத் தொழிலாக செய்பவர்களிடம் சென்று ஓதிப் பார்ப்பதினால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை ஓதிப் பார்ப்பதைப் பொறுத்தவரை  நாம் ஆராய்ந்து பார்த்தால் அவரவர்கள் தான் ஓதிப் பார்க்க வேண்டுமே தவிர இது போன்ற புரோகிதர்களிடம் சென்று ஓதிப் பார்ப்பதை விட்டு விடவும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நோய்க்கு நிவாரணத்தை ஏற்படுத்தும் சிறிய சூறாக்களை நாம் மனனம் செய்து வைத்திருந்தால் இவைகளை நோய் ஏற்படும் போதும் ஓதிக் கொள்ளலாம் தொழுகையின் போதும் ஓதிக் கொள்ள முடியும்.

நோயாளிக்கு பிறர் எப்போது ஓதிப் பார்க்கலாம்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்') ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள் மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.

ஆதாரம்: முஸ்லிம் 4413

எப்போது பிறர் ஓதிப் பார்க்க வேண்டும் என்பதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த  நபி மொழி நமக்கு ஆதாரமாக உள்ளது. 

எவற்றை நோய் நிவாரணத்திற்கு ஓதிப்பார்க்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அதை ஓதுவதன் மூலமும் நோய் நீங்கும்.

நோயாளிகளால் ஓத முடியாது போனால் மற்றவர்கள் ஓதலாம்.

இதன் அடிப்படையில் தான் அபூ சயீத் (ரலி) தேள் கடிக்கு ஆளானவருக்கு அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார்கள்.

ஓதிப்பார்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று நினைத்துக் கொண்டு புரோகிதர்களைத் தேடிச் சென்று ஓதிப்பார்க்கின்றனர். ஆனால் அவரவர் தனக்காக ஓதிக் கொள்வதே சரியான நடைமுறையாகும். மேலும் ஓதிப்பார்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தியாயங்களும் துஆக்களும் எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பவைதான்.

அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம்.

இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும்.

சாதாரண நோய்களுக்கு நாம் நோய் நிவாரணத்தை நீக்கும் மாத்திரைகளை தெரிந்து வைத்திருக்கின்றோம். இது போன்று நோய் ஏற்படும் போது சிறிய நோய்களுக்கு சின்னச்சின்ன நோய் நிவாரணிகளை இன்றைய உலகில் நாம் பயன்படுத்தி வருகின்றது போல் சிறிய சூராக்களை நோய் ஏற்படுகின்ற போது ஓதுவதற்கு தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

சிறந்த தம்பதிகள்

யாசர் அரஃபாத், மங்களம்-திருப்பூர்

பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சினை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகரித்துக்  கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது  அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதற்கும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாகும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறன. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத் குடும்பங்களிலும் பெருகி வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன்  சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்க்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படைக் காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.

அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்கேற்ப தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஆம், இருக்கிறது என்று கூறி விட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டி விட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். உணவுடனா அனுப்பியுள்ளார்? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி ஸல்- அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி -ஸல்- அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டு வா! என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)

அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளி யேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

நூல் : புகாரி (3578)

இறைத்தூதர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை கண்ட இந்த தம்பதிகள் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக

அவர்களுக்காக இருவரும் இணைந்து செய்த தொண்டை இந்த சம்பவத்தில் காணமுடிகிறது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் உம்மு சுலைம் (ரலி):

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்க வில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப் பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப் பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனா வுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங் களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

நூல்: புகாரி (2630)

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் அபூ தல்ஹா (ரலி):

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங் களில் "பைரஹா' எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்'' எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்'' என்று சொன்னார்கள். எனவே, அதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (1821)

போர்க்களத்தில் அபூ தல்ஹா (ரலி) அவர்களும் உம்மு சுலைம் (ரலி) அவர்களும்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (த் தனியே) விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல் வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்பு களில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகைள நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல் :புகாரி (3811)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம் முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்'' என்று கூறினார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?'' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற் காகத்தான் அதை வைத்துள்ளேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றி யின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்  3697

இந்த தம்பதிகளைப் போன்று நாமும் மறுமை வெற்றியை கவனத்தில் கொண்டு செயல்பட்டு உலக விஷயங்களில் விட்டுக் கொடுத்து பிணக்களை களைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுத்துவோம்.

தகவல் களஞ்சியம்

யார் வர்?

தொகுப்பு : மனாஸ், இலங்கை

1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.

2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள்.

3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார்.

4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ ஸாயிதா கூடத்தில் ஒன்று கூடினார்கள்.  5 இவரின் தாயார் இறந்தபோது அவர் சார்பாக ஏதாவது தர்மம் கொடுக்கலாமா? என்று நபியர்வர்களிடம் கேட்டவர்

6 இவருடைய தாயார் இறந்த போது மிஹ்ராப் என்ற தோட்டத்தை தாயாருக்காக வேண்டி தர்மம் செய்தவர்.

7 மக்கா வெற்றியின் போது அன்சாரிகளின் கொடி இவர்களிடம் இருந்தது.

 8 அப்துல்லாஹ் பின் உபை மன்னிக்குமாறு நபிகளாரிடம் பரிந்துரை செய்தவர்.

9 நபியர்கள் இவருடைய ரோசத்தை கண்ட போது அவரைவிட நான் ரோஷக்காரன், அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன் என்று சொன்னார்கள்.

10 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களது அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டுவந்தார்கள்.

யார் ஈவர்?

விடை: ஸஅத் பின் உபாதா (ரலி-) அவர்கள்

1 ஆதாரம் புகாரி  1284                2 ஆதாரம் புகாரி   1304

3 ஆதாரம் புகாரி  4141                4  ஆதாரம் புகாரி   3668

5 ஆதாரம் புகாரி  2756                6 ஆதாரம் புகாரி   2762

7 ஆதாரம் புகாரி  4280                8 ஆதாரம் புகாரி 4566

9 ஆதாரம் புகாரி 6846           10 ஆதாரம் புகாரி 7155

02.05.2012. 11:28

ஏப்ரல் தீன்குலப் பெண்மணி

கோடைவிடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

 

கோடை காலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ,மாணவிகளுக்கு ஓய்வு அளிக்கிறது கல்வித் துறை. இந்த ஓய்வு காலத்தை மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வீணான காரியங்களிலே செலவிட்டு பாழாக்குகின்றனர்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்

றனர்.

1. ஆரோக்கியம். 2. ஓய்வு.

என்ற நபிமொழி, இன்று கோடை காலத்தை வீணாக்குபவர்களுக்கு சொன்னதைப் போன்று

அமைந்துள்ளது.

மனிதனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியமான காலத்தையும் நல்ல காரியங்கள் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் நாம் நல்ல காரியங்கள் செய்ய நினைத்தாலும் நமக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். சில நேரங்களில் உடல் ஒத்துழைக்காது. எனவே நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களை நல்ல செயல்கள் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இன்றைய காலத்தில் இளைஞர்கள், சிறுவர்,சிறுமிகள் கெட்டுப் போவதற்கும் கொள்கையை விட்டுப் போவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக, ஓரிறைக் கொள்கையில் உறுதி உள்ள பிள்ளைகளாக மாற்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளை செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக ஏராளமான சின்னத்திரைகள் புற்றீசல்கள் போல் உருவாகியுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அளவுக்கு அதிகமான சின்னத்திரை சேனல்கள் உருவாகி உள்ளன. மேலும் பல சேனல்கள் வருவதற்குரிய முயற்சிகள் நடந்து வருகின்றன.

விஞ்ஞான வளர்ச்சியின் பரிசான இந்த சின்னத்திரைகள் மக்களின் அறிவையும், பண்பாட்டையும், நல்லொழுக்கத்தையும் உயர்த்தி இருந்தால் பெரிதும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அறிவை மழுங்கடிக்கும் வகையிலும் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் வகையிலும்தான் அதன் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

பார்வையாளர்களைக் கவர்வதற்காக புதுமையான நிகழ்ச்சிகளை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக சிறுவர்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகளும் தனிச் சேனல்களும் உருவாகி சிறுவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதால் வேறு எந்த விஷயங்கள் மீதும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அவர்களின் அறிவுத்திறன் முடங்கிப் போகிறது.

எனவே மாணவ, மாணவிகள் ஓய்வு நேரத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருடம் தோறும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடம்தோறும் பயன் பெற்றுச் செல்கின்றனர்.

இது போன்ற நல்ல சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற நல்ல காரியங்களுக்கு பொருளாதார உதவிகளையும் நாம் வாரி வழங்கி இம்மை மறுமை நன்மைகளைப் பெற முயற்சிப்போம்.


பொறுப்புணர்வும் இறைபயமும்

 

மனித சமுதாயம் அனைவருக்கும் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யாரும் பொறுப்புகளிலிருந்து, கடமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட் பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாü யாவான்.

அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.  பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாü யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 2554

இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் என அனைவரும் பல்வேறு பணிகளுக்கு பொறுப்பாளர்கள் என்பதை இந்த செய்தி திட்டவட்டமாக தெரிவிக்கின்றது. அதே வேளை பொறுப்புகள் குறித்து மறுமையில் இறைவனால் விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் இந்த செய்தியில் உள்ளது.

பொறுப்பு என்பது அது நிர்வாகம் சம்பந்தமாகவோ அல்லது குடும்பப் பொறுப்பாகவோ இருக்கலாம். நம்மில் பலர் ஏதேனும் பள்ளிவாசல், இயக்கம், அல்லது இதர நிர்வாகத்தில் அங்கம் வகிப்போராக இருப்போம். அல்லது குடும்பப் பொறுப்பில் தந்தையாக, தாயாக, கணவனாக, மனைவியாக இப்படி ஏதாவது ஒரு பொறுப்பையோ ஒரே நேரத்தில் பல பொறுப்புகளையோ சுமந்து கொண்டிருப்போம். ஆக நம்மில் யாரும் எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது, நான் பொறுப்புகளற்றவன் என்றெல்லாம் கூற முடியாது.

இதை உணர்ந்த பிறகு நம்முடைய கடமைகள் விஷயத்தில் விசாரிக்கப்படுவோம் என்ற பொறுப்புணர்வுடன் நாம் நடந்து கொள்கின்றோமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

பல குடும்பத் தலைவிகள் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை சுமந்து கொண்டு அதில் அக்கரையற்று இருக்கின்றார்கள்.

தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அதாவது பிள்ளையை பள்ளிக்கு அனுப்

புதல், தலைவாருதல், சரியான நேரத்தில் பிள்ளைகளுக்கு உணவளித்தல், கண்டிக்கத்தக்க நேரத்தில் கண்டித்தல், பிள்ளைகளின் நடவடிக்கைகளை, படிப்பை கவனித்தல், மார்க்க கல்வியை புகட்டுதல், ஒழுக்கம் போதித்தல் போன்ற ஏராளமான கடமைகளை உதாசீனப்படுத்துகின்றனர்.

அதே போன்று கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பல நேரங்களில் செய்யத் தவறிவிடுகின்றனர். இவைகள் அனைத்திற்கும் பொறுப்புகளை பற்றி இறைவன் விசாரிப்பான், அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும் என்கிற அச்ச உணர்வு இல்லாமல் போனதே காரணம்.

அல்லாஹ்வின் தூதரவர்கள் எத்தனை பொறுப்புகளை பெற்றிருந்தார்கள். அன்றைய உலகுக்கு ஜனாதிபதியாக, தந்தையாக, பல மனைவிமார்களுக்கு கணவனாக, இதற்கெல்லாம் மேலாக இறைவனின் செய்தியை உலகுக்கு தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைக்கும் இறைத்தூதராக இவ்வாறு எண்ணற்ற பரிமாணங்களை நபிகளார் பெற்றிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் தன் கடமையை நிறைவாக செய்து முடித்தார்கள். அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவாக செய்யத்தூண்டியது  பொறுப்புகள் குறித்து இறைவன் விசாரிப்பான் என்ற இறைபயமே.

இதற்கு எடுத்துக் காட்டாக சில சம்பவங்களை காண்போம்.

இறைத்தூதராக . . .

கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்கிற முறையில் தனது பொறுப்பில் குறை வைத்தார்களா? இறைத்தூதர் என்ற பதவியை, பொறுப்பை பெற்ற பிறகு தான் அதிகமான எதிர்ப்புகளுக்கும்,

அவதூறான விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிட்டது. நபியவர்களை கொல்லவும் திட்டமிட்டு முயற்சி செய்தனர். இறைவனின் உதவியால்

அத்தகைய முயற்சிகள் தவிடு பொடியாக்கப்பட்டன. இதை குறிப்பிடுவதற்கு காரணம் இத்தகைய எதிர்ப்புகளை நபிகள் நாயகம் பெற்றது அவர்கள் தூதர் என்ற முறையில் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றினார்கள் என்பதை சான்றளிக்கின்றது என்பதை உணர்த்துவதற்காகவே.

நபிகள் நாயகம் இறைத்தூதர் என்ற பொறுப்பை மிக அழகாக, குறைவின்றி, தொய்வின்றி சிறப்பாக நிறைவேற்றினார்கள் என்பதற்கு ஏரளாமான எடுத்துக் காட்டுகளை குறிப்பிடலாம். இருப்பினும் ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு

நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள்  என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன்.

அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!) என்றேன்; அவர்கள் ஐந்த நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ஒன்பது நாட்கள்! என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்;  பதினொரு நாட்கள்! என்றார்கள். பிறகு, தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக! என்றார்கள்.

அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் (ரலி)

நூல் : லிபுகாரி 1980

அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் தொடர்ச்சியாக நோன்பு நோற்கின் றார் என்ற தகவல் நபிகளாருக்கு கிடைக்கின்றது. இதை அறிந்த

அல்லாஹ்வின் தூதர் நேரே அவரது வீட்டிற்கு சென்று இந்த தவறை எடுத்துரைக்கின்றார்கள் என்று மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கின்றது.

ஒரு இறைத்தூதர் இவ்வாறு மெனக்கெட்டு தன்னை பின்பற்றும் ஒருவரின் வீட்டிற்கே சென்று அவரது தவறான செயலை மார்க்க ரீதியாக கண்டிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இறைத்தூதர் என்ற பொறுப்பை பற்றி இறைவன் விசாரிப்பான், அதில் குறை வைத்து விடக்கூடாது என்ற இறைபயத்தை தவிர வேறொன்றுமில்லை.

குடும்பத் தலைவராக . . .

 ஊருக்கு உபதேசம் வீட்டிற்கு இல்லை என்று நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஊர் மக்களுக்கு தவறாமல் போதனை செய்து விட்டு தன் குடும்பத்தை வசதியாக மறந்து விடும் போதகரை பற்றி இவ்வாறு குறிப்பிடுவர். இதைப் போன்று மக்களுக்கு மாத்திரம் போதித்து விட்டு தமது குடும்பத்தை எச்சரிக்க நபியவர்கள் மறந்தார்களா? மறுத்தார்களா? அலட்சியம் செய்தார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  என்னிடமும் ஃபாத்திமா (ரலிலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை எழுப்ப நினைத்தால்தான் எங்களால் எழ முடியும்என்று கூறினேன்.  நான் இவ்வாறு கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள்.அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான் (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.

அறிவிப்பவர் : அலீ பின் தாலிலிப் (ரலி)

நூல் : புகாரி 1127

அல்லாஹ்வின் தூதர் இரவில் தொழுவார்கள். வித்ர் தொழ எண்ணும் போது ஆயிஷாவே எழுந்திரு வித்ர் தொழு என்று கூறுவார்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாக தொழுது முடிப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசைக்கும் (கிப்லா) இடையே குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன்.

அவர்கள் இறுதியில் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் (எழுந்து) வித்ர் தொழுகை தொழுவேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி),

நூல் : முஸ்லிலிம் (885)

நடு இரவில் எழுந்து, தான் தொழுதுவிட்டு தவறாமல் தன் மகள், மருமகன் தொழுதார்களா என்று விசாரிக்க செல்கின்றார்கள். தனது மனைவியை அன்றாடம் இரவுத் தொழுகைக்காக எழுப்பி விடும் வழக்கம் உள்ளவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ற இரு தகவல்களை மேற்கண்ட இரு ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

வணக்க வழிபாடுகளில் தம் குடும்பத்தாரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற அக்கறையில் நபியவர்கள் இத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கின்றார்கள். குடும்பத்தாரை நரக நெருப்பை விட்டும் எச்சரிக்க வேண்டும் என்ற இறைவசனத்தின் பிரகாரம் அல்லாஹ்வின் தூதர் பொறுப்பாற்றியுள்ளார்கள் என்பதை தெளிவாக பறைசாற்றுவதாக மேற்கண்ட சம்பவங்கள்

அமைந்துள்ளதை யாரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஆட்சித் தலைவராக . . .

இன்றைக்கு நாட்டு குடிமக்கள் மின்வெட்டு, விலை உயர்வு போன்ற குறைபாடுகளால் பெரிதும் அல்லல்படுவதை காண்கிறோம். அன்றாட நடைமுறைகளை செய்வதற்கே விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கும் சூழல் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக குடிமக்களின் வரிப்பணம் சர்வ சாதாரணமாக அதிகாரிகளாலே கொள்ளையடிக்கப்படும் அவலமும் அனுதினமும் நடந்தேறுகின்றது.

நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் குடிமக்களைப் பற்றி போதிய அக்கறை, பொறுப்புணர்வு, தொலைநோக்குப் பார்வை ஆகியவை இல்லாததே இத்தகைய குளறுபடிகளுக்கும், மக்கள் அவதிப்படுவற்கும் காரணங்களாகும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர் என்ற முறையில் மக்களுடைய பொருளாதாரத்தில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவங்கள் ஆதாரங்களாகும். நபியவர்களின் நேர்மைக்கும், பொறுப்புணர்வுக்கும் முத்தான எடுத்துக்காட்டுகளாகும்.

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலிலிலி) ஹுசைன் (ரலிலிலி) இருவரும்

அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலிலிலி)

நூல் : புகாரி 1485

விளையாட்டுப்பிள்ளை தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தமது கண்டனத்தையும், கோபக்கனலையும் அந்த சிறுவரிடம் நபிகளார் பதிவு செய்வது மக்களிடம் சென்றடைய வேண்டிய பொருள்கள் விஷயத்தில் நபிகளாரின் பொறுப்புணர்வை பிரதிபலிப்பவைகளாக உள்ளன பின்வரும் சம்பவமும் அது போன்ற ஒரு சம்பவமே.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை தொழுவித்துவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் லிஅல்லது கேட்கப்பட்டது லி அதற்கு

நபி (ஸல்) அவர்கள் நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; அப்பொருளுடன் இரவைக் கழிக்க விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்துவிட்டேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஹாரிஸ் (ரலிலி)

நூல் : புகாரி 1430

மக்களின் பொருளாதார விஷயத்தில் மட்டுமல்லாது குடிமக்களின் நலன் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் நபியவர்கள்

அக்கறை கொண்டவர்களாக, பொறுப்புணர்வு மிக்கவர்களாகவே நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மக்கüலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்

பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்கüன் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப் பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு, நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம் என்று கூறினார்கள். அல்லது, இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)

நூல் : புகாரி 2908

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது அவர்கள், ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா? என்று கேட்டுவிட்டு, மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலிலி) நூல் : முஸ்லிலிம் 164

கணவனாக . . .

இவ்வளவு ஏன் நபியவர்கள் தமது இல்லறத்தைக்கூட மனைவிமார்களுக்கு மத்தியில் சரிசமமாக பங்கிட்டுக் கொண்டார்கள் என்றால் ஏன்? தமக்கு விருப்பமான மனைவியிடம் இரவு தங்கலாமே? கணவன் என்ற ரீதியில் மனைவிமார்களுக்கு மத்தியில் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லையெனில் இறைவன் விசாரிப்பான் என்ற அச்ச உணர்வினாலே நபியவர்கள் மனைவிமார்களுக்கு மத்தியில் முறை வைத்து இரவு தங்கியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோயின் கடுமை அதிகரித்து விட்ட போது என் வீட்டில் தங்கி சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்கüடம் அனுமதி கேட்டார்கள்.

அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலிலி),

 நூல் : புகாரி (3099)

நபியவர்களிடம் இருந்த இந்த பொறுப்புணர்வையும், அது குறித்த இறைபயத்தையும் நாம் அனைவரும் பெற்றாக வேண்டும். பெற்றால் நமது அனைத்து கடமைகளையும் நிறைவாக செய்திட இதை வளர்த்துக் கொள்வோமாக.

  

மகப்பேறும் திருக்குர்ஆனும்

 

இன்றைய நவீன காலத்தில் கண்டறியப்பட்ட அனேக அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு, தீர்க்கதரிசனமாக திருக்குர்ஆன் உள்ளது.

கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால், ஐந்து  மருத்துவக் கருத்துகளை, மிகச் சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் திருக்குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும், மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில். மகப்பேறு மருத்துவர்கள் சென்ற பத்தாண்டு வரை கண்டு பிடிக்காத ஒரு விஷயத்தை, மிக அழகான சம்பவம் மூலம் விளக்குகிறது. மரியம் என்ற அத்தியாயத்தில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள்.

பிரசவ வலிலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா? என்று அவர்

கூறினார்.

கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிலிருந்து வானவர்

அழைத்தார்.

பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும் (என்றார்)

நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன் என்று கூறுவாயாக!                 (அல்குர்ஆன் 19:23லி26)

இதில் உள்ள மருத்துவ அறிவியல் கருத்துகளாவன;

1 .  தண்ணீரில் பிரசவம் நடந்தால் , பிரசவ வேதனை குறையும்.

2 . பிரசவத்தின் போது தண்ணீர் பருகினால் (பிரசவம் மிக வேகமாக இலகுவாக  முடியும்)

3  பிரசவத்தின் போது தண்ணீர் பருகுவதன் மூலம், தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரந்து, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்

4  பிரசவத்தின் போதும், அதற்குப் பின்னும், பெண்ணுக்கு இரும்புச் சத்து என்னும் ஐங்ம்ர்ஞ்ப்ர்க்ஷண்ய் அதிகம் தேவைப்படுகிறது.. அதனால் இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறுகிறது

5 தண்ணீர்ச் சத்தும், இரத்த சோகையும் சரியானால், கண்ணில் மாற்றம்   தெரியும்,

இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்

தண்ணீரில் பிரசவம்

திருக்குர்ஆன் இந்த வசனத்தில், மரியம் (அலை ) அவர்களுக்கு, தாங்க முடியாத பிரசவ வேதனை ஏற்பட்ட போது, தண்ணீரில் பிரசவம் நடந்து வலிலி இன்றி முடிந்தாக்க் கூறுகிறது. சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, தண்ணீரில் பிரசவம் என்று ஒன்று உள்ளது என்று, மருத்துவ உலகமே அறிந்திருக்கவில்லை. அப்படி அப்போது யாராவது  சொன்னால், அவரை மருத்துவ அறிவு இல்லாதவர் என்று எள்ளி நகையாடும் நிலையே இருந்தது.

சரி, நார்மலாக பிரசவத்தின் போது என்ன உடலிலில் மாற்றங்கள் நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு, தண்ணீர் பிரசவத்துக்குச் சென்றால்,

விளங்க வசதியாக இருக்கும்.

பிரசவம் எப்படி?

மனித உடலிலில் மூளையில் Pituitary Gland என்ற நாளமில்லா  சுரப்பி உள்ளது.  இதில் பின்புறம் இருக்கும்  posterior pituitary    இரண்டு ஹார்மோன்களைச்  சுரக்கிறது. 1. oxytocin  2  vasopressin.  இதில் oxytocin என்ற ஹார்மோன் தான், பிரசவ நேரத்தில், (கர்ப்பை uterus  மற்றும் கற்பவாய் cervix விரிவடைவதன் மூலம் தூண்டப்பட்டு )அதிகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன், கர்ப்பப்பையை, நன்றாக சுருங்கி சிசுவைக் கீழே தள்ளவும், கர்ப்பவாய் (cervix), மற்றும் யோனி குழாய் (vaginal canal) மிருதுவாக விரிவடையச் செய்யவும், இதன் மூலம் குழந்தை பாதுகாப்பாகப் பிறக்க உதவுகிறது.

மேலும் இந்த ஹார்மோன் தான், குழந்தை பிறந்த உடன் , மார்பகத்தில் உற்பத்தியான பால், வெளிவர உதவுகிறது.(பாலை உருவாக்க anterior pituitary இல் இருந்து prolactin என்னும் ஹார்மோன் உதவுகிறது)

anterior pituitary என்னும் ஹார்மோன், உடலில் தண்ணீரின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு ஹார்மோன்கள் சுரந்து வெளியாகும் இடம், ஒரே இடத்தில், ஒன்றோடு ஒன்று ஒட்டியே உள்ளது.

சரி இனி தண்ணீர் பிரசவம் பற்றி American Academy of Pregnancy என்ன கூறுகிறது ?

மகப்பேறு மருத்துவ அறிவியலுக்கு, அமெரிக்காவின் அமைப்பான இந்த அமைப்பு, தண்ணீரில் டெலிவரி பற்றி கூறுவதைக் காண்போம்.

water birth என்பது லேசான சூடான தண்ணீர் தொட்டியில் பிரசவம் நடப்பது. இதில், வலிலி ஏற்பட்ட உடன் தண்ணீரில் இருந்து விட்டு, டெலிலிவரி நேரம் மட்டும் வெளியில் வந்து குழந்தை பெறுவது, அல்லது குழந்தை பிறக்கும் வரை தண்ணீரிலே இருப்பது.

இந்தக் கோட்பாடுக்கு அடிப்படையாவது, சிசு ஒன்பது மாதங்கள் கருவறையில் இருக்கும் போது ஹம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ ச்ப்ன்ண்க் என்னும்  தண்ணீரில் தான் உள்ளது, அதுபோல் அதே சூழலிலில் பிறந்தால் குழந்தைக்கு மிருதுவாகவும், தாய்க்கு அழுத்தத்தைக் குறைப்பதாகவும் உள்ளது. தண்ணீரில் இருக்கும்போது ர்ஷ்ஹ்ற்ர்ஸ்ரீண்ய் ஹார்மோன் நார்மலை விட அதிகமாகச் சுரக்கப்பட்டு , வெகு விரைவாக கற்ப்பப்பை சுருங்கி, கற்ப்பப்பை வாய் விரிந்து, வலிலி குறைவாக , விரைவாகப் பிரசவம் ஆகிறது.

தண்ணீர் பிரசவத்தால் ஏற்படும் நன்மைகள்

தாய்க்கு தண்ணீர்,  பிரசவத்தின் பின் பகுதியில் பெண்களின்

ஆற்றலை அதிகரிக்கிறது

க்ஷிதண்ணீர் இனிமையான , சுகமான, ஓய்வைக் கொடுக்கிறது.

க்ஷிதண்ணீரின் மிதப்பு தன்மையால், உடல் எடை குறைவதோடு , தடையில்லாத அசைவு, மற்றும் புதிய நிலையைத் தருகிறது.

க்ஷிதண்ணீரின் மிதப்புத்  தன்மையால், கர்ப்பப்பை நல்ல முறையில் சுருங்கி, நல்ல இரத்த ஓட்டம் தாயின் உடலிலில் ஏற்பட்டு அதனால், கர்ப்ப்ப்பை தசைகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதன் மூலம், பிரசவ

வலிலி குறைகிறது, மேலும் குழந்தைக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்கிறது.

க்ஷிதண்ணீரில் மூழ்குவதால், இரத்த அழுத்தம் குறைந்து , மன

அழுத்தம் குறைகிறது.

க்ஷிதண்ணீர், மன அழுத்தம் சம்பந்தமான ஹார்மோன்களைக் குறைப்பதோடு, தாயின் உடலில் வலிலியைக் குறைக்கும் ங்ய்க்ழ்ர்ல்ட்ண்ய் என்னும் வேதிப்பொருள் உருவாக உதவுகிறது.

க்ஷிதண்ணீர் , பெண்ணின் ல்ங்ழ்ண்ய்ங்ன்ம் என்னும் கீழ்ப்  பகுதி நன்றாக

மிருதுவாகவும், ழ்ங்ப்ஹஷ் ஆக உதவுவதால், அந்தப் பகுதியில் பிரசவத்தால் காயம் ஏற்படுதல், தையல் போடுதல் தேவை வெகுவாகக் குறைகிறது.

க்ஷிதண்ணீரால், பெண்ணின் உடல் ழ்ங்ப்ஹஷ் ஆவதால், மனமும் ழ்ங்ப்ஹஷ் ஆகிறது.அதனால், அந்த பெண்ணால்,பிரசவ முறைகளில் நன்றாக கவனமும், ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

க்ஷிதண்ணீர் ஒரு தனிமையான உணர்வைப் பெண்ணுக்கு ஏற்படுத்துவதால், பெண்ணின் பயம், மனஉளைச்சல், போன்றவை வெகுவாக்க் குறைகிறது.

குழந்தைக்குப் பயன் என்ன ?

க்ஷிகுழந்தை கருவறைக்குள் எந்தச் சூழ்நிலையில் இருந்ததோ , (தண்ணீர் சூழ்ந்த சூழ்நிலை), அதே நிலை கிடைக்கிறது.

க்ஷிகுழந்தைக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதால், பின்னர் மூளை வளர்ச்சி குறைவு, போன்ற நிலை ஏற்படும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.

மகப்பேறு மருத்துவ உலகிற்கே ஜாம்பவானான தஞவஆக ஈஞககஊஏஊ ஞஎ ஞஇநபஊபதஒஈந ஹய்க்  ஏவசஆஊஈஞகஞஏவ என்ற இங்கிலாந்து நாட்டில் உள்ள அமைப்பு  இதைப்  பெரிதாக ஆமோதித்து உள்ளது.

பிரசவத்தின் போது தண்ணீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள்

இதே வரலாற்றை விளக்கும், இன்னொரு வசனத்தில், வானவர், மரியம் (அலை) அவர்களிடம், பேரீச்சைப் பழத்தை உண்டு, (ஆற்று நீரை) பருகி கண்குளிர்ந்து இருப்பீராக என்று கூறுகிறார்.

இப்போதும், பெண்களுக்கு பிரசவ வேதனை அதிகம் இருக்கும்போது, மருத்துவர்கள் அதிகம் தண்ணீரைக் குடிக்கச் சொல்கிறார்கள். அப்படி தண்ணீர் குடித்தால், வேதனையால், ஏற்படும் தண்ணீர் சத்து குறைவு வர வாய்ப்பு இல்லாமல் போய் விடுவதோடு, பிரசவமும் எளிதில் முடியும்.

ஏற்கனவே, ல்ர்ள்ற்ங்ழ்ண்ர்ழ் ல்ண்ற்ன்ண்ற்ஹழ்ஹ் ஞ்ப்ஹய்க் இல் இருந்து தான், ர்ஷ்ஹ்ற்ர்ஸ்ரீண்ய் என்னும் பிரசவத்தைத் தூண்டும் ஹார்மோனும், ஸ்ஹள்ர்ல்ழ்ங்ள்ள்ண்ய் என்னும் உடலிலில் தண்ணீர் அளவைக் கட்டுக்குள் வைக்கும் ஹார்மோனும் சுரக்கிறது என்று பார்த்தோம்..

இந்த இரண்டு ஹார்மோன் சுரக்கும் இடங்கள் தனித் தனியே இல்லாமல், ஒன்றோடு ஒன்று ஒட்டியே உள்ளது என்று பார்த்தோம்.

ஸ்ஹள்ர்ல்ழ்ங்ள்ள்ண்ய் ஹார்மோனின் வேலை, உடலிலில் தண்ணீர்ச் சத்து குறையும் போது, கிட்னியின் மூலம் இது சமிக்ஞை பெற்று, அதிகம் சுரந்து , கிட்னியில் வேலை செய்து ,உடலிலில் உள்ள மீதித் தண்ணீர் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும். உடலிலில் தண்ணீர் அதிகரித்து, தண்ணீர் மூலம் உடலுக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டால், இந்த ஹார்மோன் சுரப்பு  இயல்பை  விட குறைந்து, உடலிலில் இருந்து தண்ணீரைக் கிட்னியின் மூலம் வெளியில் தள்ளுகிறது. இப்படி உடலில் தண்ணீர் அளவை  ஒரு கட்டுப்பாட்டில்  வைக்கிறது..

பிரசவத்தின் போது, தண்ணீர் குடித்தால், உடலிலில், தண்ணீர் அளவு அதிகரிக்கும் போது, தண்ணீரை உடலிலில் இருந்து வெளியேற்ற தயார் செய்ய (மேற்சொன்ன அறிவியல் விதிப்படி) இந்த ஸ்ஹள்ர்ல்ழ்ங்ள்ள்ண்ய் ஹார்மோன் சுரப்பது குறையும். இந்த ஹார்மோன் சுரக்கும் இடமும், பிரசவத்தை  எளிதாக்கும்  ர்ஷ்ஹ்ற்ர்ஸ்ரீண்ய் ஹார்மோன் சுரக்கும் இடமும் ஒன்றோடு ஒன்று ஒட்டியே ஒரே இடத்தில இருப்பதால், ஸ்ஹள்ர்ல்ழ்ங்ள்ள்ண்ய் ஹார்மோன் சுரப்பது குறையும் போது, அதே இடத்தில் உள்ள ஹார்மோன் சுரக்கும்  செல்கள் ,, அந்த வேலையை ஈடு செய்யும் விதமாக, அதிக ர்ஷ்ஹ்ற்ர்ஸ்ரீண்ய் சுரந்து, கர்ப்பை வெகு சீக்கிரம் சுருங்கி , கருப்பை வாய் இலகுவாக விரிந்து பிரசவம் சற்று சிரமம் இல்லாமல் முடிகிறது.

(மகப்பேறு மருத்துவர்கள், பிரசவத்தின் போது, பிரசவம் இலகுவாக, பாதுகாப்பாக, சீக்கிரம்  நடக்க, இந்த ர்ஷ்ஹ்ற்ர்ஸ்ரீண்ய் ஹார்மோனை இன்ஜெக்சன் வடிவில் கொடுப்பார்கள்.).

தண்ணீர் குடிப்பதைப் பற்றி, சற்றும் அலட்டிக்கொள்ளாமல், பதினாலு நூற்றாண்டுக்கு முன்பு, அந்த அறிவியல் கண்டுபிடிப்பு இல்லாத காலத்தில், சர்வ சாதாரணமாக இன்றும் , மருத்துவர்கள் கூட விளங்க சற்று  கஷ்டமான கருத்தை குர்ஆன் கூறி, அது இறைவனின் வேதம் தான் என்று இன்றளவும் மெய்பித்து உள்ளது.   

 3 பிரசவத்தின் போது தண்ணீர் குடிப்பதால், பிரசவித்த பின் தாய்ப்பால் இலகுவாக சுரந்து, வெளிவரும் 

இதைப் பற்றி பார்க்குமுன், பிரசவித்த உடன், தாய்ப்பால் எப்படி சுரக்கிறது என்பதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம்.

தாய்ப்பாலை உருவாக்கும் ஹார்மோன் டதஞகஆஈபஒச என்பது

அதே ல்ண்ற்ன்ண்ற்ஹழ்ஹ் ஞ்ப்ஹய்க் முன்பகுதியான ஹய்ற்ங்ழ்ண்ர்ழ் ல்ண்ற்ன்ண்ற்ஹழ்ஹ் ஞ்ப்ஹய்க் இல் இருந்து சுரக்கிறது. கர்ப்பம் தரித்தது முதல், பிரசவம் ஆகும் வரை இந்த ஹார்மோன் சுரப்பு இல்லாமல் போய் (பால் சுரப்பதை தடுத்து), குழந்தை பிரசவித்த உடன் இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது. குழந்தை தாயின் மார்பை சப்பும் போது, சில வினாடிகளில், இந்த ஹார்மோன் ஊற்றென வெளியாகி, பால் சுரப்பை மார்பில் உற்பத்தி செய்கிறது.  மார்பில் சுரந்த பாலை , மார்பை விட்டும் ய்ண்ல்ல்ப்ங்    என்னும் மார்பகக் காம்பு துவாரம் வழியே வெளிக்கொண்டு வருவது, இந்த ர்ஷ்ஹ்ற்ர்ஸ்ரீண்ய் என்ற ஹார்மோன். ஞலவபஞஈஒச ஹார்மோன் வேலை, பிரசவத்தோடு நின்று விடாமல், பிரசவத்திற்குப் பின்னும், பால் குடி தொடரும் வரை சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர்கிறது.

பால் கொடுக்கும் தாய்மார்கள் அநேகம் அடுத்த கர்ப்பம் ஆகமாட்டார்கள் என்பதற்குக் காரணம், பால் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது, பாலைச் சுரக்க வைக்க  டதஞகஆஈபஒச ஹார்மோன் உடலிலில் இரத்தத்தில் அதிகம் இருக்கும் போது, அது, ர்ஸ்ன்ப்ஹற்ண்ர்ய்  என்னும் கருமுட்டை வெளியாவதைத் தடுக்கும். இதற்கு விதி விலக்கும் உண்டு) ஞலவபஞஈஒச ஹார்மோன் , மார்பில் ல்ழ்ர்ப்ஹஸ்ரீற்ண்ய்  மூலம் சுரந்த பாலை, மார்பகச் சுரப்பிகளை, நன்கு சுருங்க  வைத்து, குழந்தை சப்பிய உடன், வெளியேற்றுகிறது. இதன் சுரப்புக்கு குழந்தை மார்பைச் சப்புவது அவசியம்.

அதனால் பிரசவத்தின் போது தண்ணீர் குடித்தால், மேல் சொன்ன அறிவியல் காரணங்களால், ( (ஞலவபஞஈஒச < யஆநஞடதஊநநஒச  சுரக்கும் செல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் ) ஞலவபஞஈஒச அதிகம் சுரந்து.,தாய்ப்பால் மார்பிளிரிந்து வெளிவர உதவுகிறது.

பிரசவத்திற்கும் பேரீச்சைப்பழத்திற்கும் லி என்ன சம்பந்தம் ?

மரியம் (அலை ) அவர்களை வானவர் ஜிப்ரீல், பேரீச்சைப் பழத்தைச் சாப்பிட்டு, கண்குளிர இருப்பீராக என்று கூறினார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த இடத்தில் திருக்குர்ஆன் ,பிரசவத்திற்கும் பேரீச்சைப் பழத்திற்கும் ஒரு நேர்முறையான சம்பந்தம்  உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது..அது பற்றி பார்ப்போம்.

இன்றைய நவீன மகப்பேறு மருத்துவர்கள், எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போதும், பிரசவத்திற்குப் பின் மூன்று மாதத்திற்கு, இரும்புச் சத்து மாத்திரை தருகிறார்கள். காரணம் பொதுவாகவே, பெண்களுக்கு மாதமாதம், ஏற்படும் மாதவிடாய் காரணமாக இரத்த அளவு குறைவாகவே இருக்கும். மேலும் கர்பபமும், பிரசவமும்,

அவர்களின் இரும்புச் சத்து தேவையை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இதை அறிவியல் பூர்வமாகப் பார்ப்போம்.

ஒய்ஸ்ரீழ்ங்ஹள்ங்க் ண்ழ்ர்ய் க்ங்ம்ஹய்க் க்ன்ழ்ண்ய்ஞ் ல்ழ்ங்ஞ்ய்ஹய்ஸ்ரீஹ் லி  ஹய்க் ல்ப்ஹஸ்ரீங்ய்ற்ஹ (சிசு, நஞ்சு அதிக தேவை) 300ம்ஞ்

ஙஹற்ங்ழ்ய்ஹப் ஐக்ஷ ம்ஹள்ள் ங்ஷ்ல்ஹய்ள்ண்ர்ய், 500ம்ஞ்   

கர்ள்ள் ண்ய் ன்ழ்ண்ய்ங்/ள்ஜ்ங்ஹற்/ஞ்ன்ற் (சிறுநீர்,வியர்வை,குடல் மூலம் இழப்பு ) 200ம்ஞ்   

கர்ள்ள் க்ன்ழ்ண்ய்ஞ் உஊகஒயஊதவ (பிரசவ இரத்த போக்கு மூலம் இழப்பு ) 150லி200ம்ஞ்    கஹஸ்ரீற்ஹற்ண்ர்ய்   

(தாய்பால் கொடுப்பதால், அதிக தேவை )   150லி200 ம்ஞ்    

இவ்வளவு அதிக அளவு, கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுவதால், இதை, உடல் தன்னால் ஓரளவுக்கு மேல், உற்பத்தி பண்ண முடியாது. அதனால், இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது.. ஏற்கனவே  கர்ப்பத்தால், குமட்டல், வாந்தி  இருக்கும் போது, இரும்பு சத்து மாத்திரை   இன்னும் குமட்டலை அதிகரிக்கலாம்.

எனவே உணவு மூலம், எந்த குமட்டலும் இல்லாமல், இயற்கையாக இனிப்புச் சுவையுடன் இரும்புச் சத்தை அதிகரிக்கும் உணவு பேரீச்சைப்பழம் மட்டுமே என்று அறிவியல் கூறுகிறது.

100 கிராம் பேரீச்சைப் பழத்தில், சராசரியாக 1.15 ம்ஞ் இரும்புச் சத்து உள்ளது. இது போக பேரீச்சைப் பழத்தில், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியும்,  நார்ச்சத்து, வைட்டமின் இ காம்ப்ளெக்ஸ், காப்பர் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இப்படி பிரசவத்திற்கு முன்னும் ,பின்னும் சுவையான ஒதஞச சத்தின் அவசியத்தையும்  சர்வசாதாரணமாக, எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லாத காலத்தில், அழகாகக்  கூறி, இது கட்டாயம் இறை வேதமே என்று திருக்குர்ஆன் நிரூபிக்கிறது.

தண்ணீர்ச் சத்தும், இரத்த சோகையும் சரியானால், கண்ணில் மாற்றம்   தெரியும்.

திருக்குர்ஆன், தண்ணீர் பருகியும், பழத்தை உண்டும் கண் குளிர இருப்பீராக என்று கூறுகிறது

இதில் அறிவியல் பூர்வமான என்ன உண்மை உள்ளது என்று பார்ப்போம். பொதுவாக ஒருவருக்கு தண்ணீர்ச் சத்து குறையும் (க்ங்ட்ஹ்க்ழ்ஹற்ண்ர்ய் )   போது, ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று, ள்ன்ய்ந்ங்ய் ங்ஹ்ங்ள் எனப்படும், கண் குழிவிழுந்து போதல், மற்றும் கண் மங்குதல். கண் கரித்து வெட்பமாக உணருதல். நீர்ச் சத்து சரியாகிய உடன், கண்ணைச் சுற்றி உள்ள குழி போன்றது சரியாகி விடும். கண் மங்குதல் சரியாகி விடும். மேலும் கண் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும் என்று இன்றைய நவீன மருத்துவ உலகம் கூறுகிறது. இதை நாம் பலர் பலமுறை உணர்ந்துள்ளோம்.

அதுபோல , இரும்புச் சத்து குறைந்து ஹய்ங்ம்ண்ஹ என்னும் இரத்த சோகை ஏற்படும் போது, கண் இமையின்  உள்பகுதியில் தான், சிவப்பு நிறம் குறைந்து வெளிரிப் போக ஆரம்பித்து, கண் பார்வையைக் கெடுக்கும். இரத்த அளவு சரி செய்யப்பட்டவுடன், இந்த அறிகுறிகள் படிப்படியாக சரியாகி விடும்.

எவ்வளவு பெரிய இரண்டு விசயத்தை திருக்குர்ஆன் மிக சாதாரணமாக கூறியுள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.

இந்த சில வசனங்களிலே, நம் அறிவுக்குட்பட்ட ஐந்து மருத்துவ கருத்துக்கள் உள்ளன என்றால், திருக்குர்ஆன் அடிக்கடி கூறுவது போல், இதில் உள்ளதைச் சிந்திப்பீராக என்ற கோணத்தில் இந்தக் குர்ஆனை சிந்தித்தால், அறிவியலிலின் பெரிய களஞ்சியமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை               தொடர் : 10

 

ஹாரூத் மாரூத் மலக்கா?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

நாம் திருக்குர்ஆனில் உள்ள சின்னஞ்சிறிய அத்தியாயங்களுக்கு விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம்.

இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் 102 வது வசனம் தெளிவாகப் பேசுகிறது.

இன்று நம் காலத்தில் வாழ்கிற பெயர் தாங்கி ஆலிலிம்கள் நாங்கள் ஜின்களை அடக்கிவைத்திருக்கிறோம் என்றும் எங்களுக்கு மாயமந்திரம் தெரியும், பில்லிலிசூனியம் தெரியும் என்றும் கூறி மக்களைப் பயங்காட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது போல் நபிகள் நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் அன்றைய மக்களிடத்தில், எங்களை ஏதாவது செய்தீர்களென்றால் நாங்கள் சூனியம் செய்து உங்களை வீழ்த்திவிடுவோம் என்று சொல்லிலி மாயமந்திரங்களாலும் பில்லிலிசூனியத்தினாலும் அச்சுறுத்தி வந்தனர்.

இந்த சூனியத்தை அவர்கள் எதனடிப்படையில் நியாயப்படுத்தி வந்தார்களென்றால், சுலைமான் நபியைக் காரணம் காட்டித்தான்.

சுலைமான் இறைமறுப்பாளராக இருக்கவில்லை; சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தான் இறைமறுப்பாளர்களாக ஆனார்கள் என்ற சொற்றொடரில் இருந்து இதை நாம் அறியலாம். சுலைமான் நபி மூலமே எங்களுக்கு சூனியம் வந்தடைந்த்து என்று கூறுவோருக்கு மறுப்பாக சூனியம் என்பது இறை மறுப்பாகும். அதை சுலைமான நபி செய்ததில்லை என்று அல்லாஹ் அவர்களுக்கு மறுப்பு கொடுக்கிறான்.

சுலைமான் நபியவர்களுக்கு ஏராளமான சக்திகளை அற்புதமாக அல்லாஹ் கொடுத்திருந்தான். ஜின்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தன. காற்றை அல்லாஹ் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். பறவைகளும் எறும்புகளும் பேசுவதைக்கூட கேட்கிற அதிசயமான ஆற்றலையும்

அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்தான். இதனால் தான் யூதர்கள், தாங்கள் செய்துவந்த சூனியத்தை நியாயப்படுத்துவதற்கு சுலைமான் நபிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இவ்வளவு அற்புதத்தையும் ஆற்றலையும் சூனியத்தினால்தான் அவர்கள் பெற்றார்கள் என்று சொல்லிலி சூனியத்தை நியாயப்படுத்தினார்கள். நாங்களும் சுலைமான் நபி வழியாக வாழையடி வாழையாக அதைக் கற்று வருகிறோம் என்று சொல்லிலியும் வந்தனர். இந்த சூனியக்கலை இறைவனால்தான் நபி சுலைமான்

அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று மதத்தின் பெயராலேயே மக்களை நம்பவைத்தனர்.

இன்றும்கூட நமது சமூதாய பெயர்தாங்கி ஆலிம்கள் தகடு, தாயத்து, பில்லிலிசூனியம், பேய்பிசாசு என்பதை நம்ப வைப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் என்றும் நமது முன்னோர்களான பெரும்பெரும் இமாம்கள் இப்படிச் சொல்லிலித் தந்தார்கள் என்றெல்லாம் சொல்லிலி மதச்சாயம் பூசி மக்களை நம்ப வைக்கின்றனர். இதே போல் தான் யூதர்களின் நடவடிக்கைகளும் இருந்தன.

மேலும் இந்த சூனியக்கலை ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீல் என்ற இரண்டு வானவர்கள் வழியாகத்தான் நபி சுலைமான் அவர்களுக்குக் கிடைத்தது என்றும் சொல்லிலிக் கொண்டிருந்தார்கள். இப்படி தங்களது பித்தலாட்டத்தைச் சரிக்கட்டுவதற்காக மேற்சொன்ன காரணங்களைக் கூறிக்கொண்டிருந்த யூதர்களைக் குறித்து அருளப்பட்ட வசனம்தான் அல்குர்ஆன் 2 ஆம் அத்தியாயம் 102 வது வசனம்.

இந்த வசனம் ஸிஹ்ரை வைத்து ஏமாற்றுபவர்கள் சம்பந்தமாகவே அருளப்பட்ட வசனம். இதில் அல்லாஹ்,

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக்கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்துவிடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.

அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

(அல்குர்ஆன் 2:102)

சுலைமான் நபிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவதுடன் இந்த சூனியம் எனும் பித்தலாட்டம் யாரால் கற்பிக்கப்பட்டது என்பதை அடுத்து கூறுகிறான். சூனியத்தைக் கற்றுக் கொடுத்து ஷைத்தான்கள் காபிர்களாகி விட்டனர் என்பதில் இருந்து இதை ஷைத்தான்கள் தான் கற்றுக் கொடுத்தனர் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த இடத்தில் ஷைத்தான் என்று சொல்லப்படுவது தீய மனிதர்களைத் தான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வீணாண காரியத்தை செய்கின்ற மனிதர்களுக்கும் ஷைத்தான் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதை கடந்த வசனங்களில் விளக்கும் போதே சொல்லிலியிருக்கிறோம். உதாரணமாக கவிஞர்களை ஷைத்தான் என்று குர்ஆனிலும் நபிவழியிலும் பயன்படுத்துவதாகப் பார்த்தோம். மனிதனையும் ஷைத்தான் என்று சொல்வதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

இதே 2 அத்தியாயமான சூரத்துல் பகராவில் மனிதனை ஷைத்தான் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது. முனாஃபிக்குகளைப் பற்றிப் பேசுகிற வசனத்தில், கெட்ட தலைவர்களை ஷைத்தான் என்ற கருத்தில் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலிலி செய்வோரே எனக் கூறுகின்றனர்.

 (அல்குர்ஆன் 2:14)

மேற்சொல்லப்பட்ட வசனத்தில் ஷைத்தான்களுடன் முனாஃபிக்குகள் தனித்திருக்கும் போது என்றால், மக்கத்து குரைஷிக் காஃபிர்களிலுள்ள கெட்ட தலைவர்களுடன் தனித்திருக்கும் போது என்று பொருள்.

அதற்காக ஷைத்தான் என்ற வார்த்தைக்கு எல்லா இடத்திலும் கெட்ட மனிதர்கள் என்ற பொருள் கொள்ளக் கூடாது. அதிகமான இடங்களில் ஷைத்தான் என்ற வார்த்தைக்கு அப்படியே நேரடியாக ஷைத்தான் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.  குறைந்த அளவில் ஷைத்தான் என்ற வார்த்தை தீங்கிழைக்கிற மனிதர்களுக்கும் விஷ ஜந்துக்களுக்கம் பயன்டுத்தப்படும். எனவே ஷைத்தான் என்ற வார்த்தைக்கு மனித ஷைத்தான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இப்படி மனிதனை ஷைத்தான் என்று பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த 2:102 வசனமும் ஒன்றாகும்.

இந்த வசனத்தில் பொதிந்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்க விசயமாகும். அதாவது சுலைமான் அவர்கள் இந்த சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றும் அப்படி சூனியக்கலையைக் கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதுவும் குஃப்ர் (இறைவனை மறுப்பது) என்றும் அல்லாஹ் சொல்லுகிறான். குஃப்ர் என்பது சாதாரணப் பாவமில்லை. இறைவனை நிராகரிப்பதுவும் ஸிஹ்ரைக் கற்றுக் கொள்வதும் பாவத்தில் சமமானது என்கிறான். எனவே இப்படிப்பட்ட வேலையை சுலைமான் நபியவர்கள் செய்யவே மாட்டார்கள். இப்படிப்பட்ட வேலையை சுலைமான் நபியவர்கள் செய்யவே மாட்டார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில் وَمَا كَفَرَ سُلَيْمَانُ (வமா கஃபர சுலைமானு) என்று வந்துள்ளது. எனவே அவர் எப்படி நிராகரிப்பவராக இல்லையோ அவர் ஸிஹ்ரும் செய்து இருக்க மாட்டார். ஏனெனில் ஸிஹ்ர் என்பது நிராகரிப்பாகும் என்று இறைவன் இந்த வசனத்தில் சொல்கிறான்.

பிறகு யார் இந்த சூனியக் கலையைக் கற்றுக் கொடுத்திருப்பார் என்பதை அல்லாஹ்வே சொல்லுகிறான். சுலைமான் நபி காலத்தில் இருந்த சில கெட்ட மனிதர்கள்தான் இதைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறான். சில கெட்ட மனித ஷைத்தான்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்,

وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ (வலாகின்னஷ் ஷையாதீனு கஃபரூ(வ்) யுஅல்லிமூனன்னாஸஸ் ஸிஹ்ர) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கெட்டவர்கள்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து காஃபிராகி விட்டார்கள் என்று சொல்கிறான்.

எனவே இந்த வசனத்தின் மூலம் இறைவன் நமக்குச் சொல்லும் செய்தி, ஸிஹ்ர் என்ற சூனிய வித்தைக்கும் சுலைமான் நபியவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாறாக, சில ஷைத்தான்கள் காலங்காலமாக சொல்லிலிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு மார்க்கத்தின் அங்கீகாரம் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி சூனியத்தைச் செய்து வருகிறார்கள். எனவே இதிலிலிருந்தே இந்த வசனத்தில் ஷைத்தான் என்ற வார்த்தைக்கு மனித ஷைத்தானைத் தான் குறிக்கிறது என்பது விளங்குகிறது.

எப்படியெனில், ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் ஷைத்தான்கள் காஃபிராகி விட்டார்கள் என்கிறான். ஆனால் உண்மையில் ஷைத்தான் ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்துத்தான் காஃபிராக வேண்டும் என்பதில்லை. அவன் ஏற்கனவே காஃபிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறான்.

அப்படியெனில் ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்துத்தான் காஃபிராக மாறி விட்டனர் என்று அல்லாஹ் சொல்வதின் மூலம், இந்த இடத்தில் ஷையாதீன் என்ற வார்த்தை மனிதர்களிலுள்ள கெட்டவர்களைக் குறிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

ஆக, நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்கள், சுலைமான் நபி காலத்தில் கெட்டமனிதர்கள் சொல்லிலிக் கொடுத்த சூனியத்தை சுலைமான் நபியுடன் பொய்யாகச் சம்பந்தப்படுத்தி தங்களது சுயநலத்தை அடைந்து கொண்டிருந்தனர். அதனால்தான் அல்லாஹ் சுலைமான் நபி மறுப்பவராக இல்லை என்று யூதர்களுக்குச் சம்மட்டி அடிகொடுத்து யூதர்கள் சுலைமான் நபி மீது சொன்ன பொய்க்காரணத்தைக் களைகிறான்.

அதற்கடுத்ததாக இறைவன், وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ   (வமா உன்ஸில அலல் மலக்கைனி) என்று சொல்லுகிறான். இந்த வசனத்தில் இறைவன் மலக்கைனி என்று பயன்படுத்துகிறான். மலக் என்றால் அரபி மொழியில் ஒரு வானவர் என்று அர்த்தம். அல்மலக்கைனி என்றால் அந்த இரண்டு வானவர்கள் என்று அர்த்தம். எல்லா மொழியிலும் ஒருமை பன்மை மட்டும்தான் இருக்கும். ஆனால் அரபி மொழி போன்ற ஒருசில மொழிகளில் மட்டும் ஒருமை, இருமை, பன்மை போன்ற மூன்று வார்த்தை அமைப்பு உள்ளது. அதாவது ஒரு மனிதனைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தை, இரண்டு மனிதர்களைக் குறிப்பதற்கு வேறு ஒரு வார்த்தை, இரண்டுக்கு மேலுள்ள மனிதர்களைக் குறிப்பதற்கு  வேறு ஒருவார்த்தை. ஆனால் தமிழில் மனிதன்லிமனிதர்கள் பேனாலிபேனாக்கள், கழுதைலிகழுதைகள், குதிரைலிகுதிரைகள் என்று சொல்கிறோம். ஆங்கிலம் உட்பட பலமொழிகளிலும் இப்படித்தான் உள்ளன.

ஆனால் அரபு மொழியில் மலக் (மலக்குன்) லி ஒரு வானவர், மலக்கானி அல்லது மலக்கைனி லி இரண்டு வானவர்கள், மலாயிகத்து லி பல வானவர்கள் என்று அர்த்தம். இப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் தனித்தனியான வார்த்தை அமைப்பைக் கொண்ட மொழி அரபுமொழி. எனவே இந்த அடிப்படையில் மேற்சொன்ன வசனத்தில், மலக்கைனி என்று இருமையாக வந்துள்ளதால் இரண்டு வானவர்கள் என்று மொழி பெயர்க்க வேண்டும். அதுவும் வெறுமனே மலக்கைனி என்று வராமல் மலக்கைனி என்ற வார்த்தைக்கு முன்னால் அல் (ஒரு அலீஃப் மற்றும் ஒரு லாம் சேர்ந்தது) என்ற வார்த்தை வந்துள்ளது.

இப்போது இன்னொரு அரபிமொழி இலக்கணத்தையும் இந்த இடத்தில் சொன்னால் தான் சரியாக இந்த வசனத்தின் வார்த்தை அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். அரபி மொழியில் ஒரு பெயர்ச்சொல் வார்த்தைக்கு முன்னால் அல் (ஒரு அலீஃப் மற்றும் ஒரு லாம் சேர்ந்தது) என்ற இரண்டு எழுத்துக்களைச் சேர்த்தால், அந்த என்ற அர்த்தத்தைச் சேர்த்து பெயர்ச்சொல் பொருள் தரும். உதாரணமாக மலக் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளலாம்.

மலக் ஒரு வானவர். மலக்கைனி லி இரண்டு வானவர்கள். அல் மலக்கைனி  அந்த இரண்டு வானவர்கள்  என்று பொருள்வரும்.

இதே போன்று வேறொரு வார்த்தையையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கிதாப் என்றால் ஒருபுத்தகம். அல் கிதாப் என்றால் அந்தப் புத்தகம் என்று அர்த்தம். அது என்ன அந்தப் புத்தகம்? என்று சொன்னால், நேற்று பேசிக் கொண்டிருந்தோமே அல்லது காலையில் பேசிக் கொண்டிருந்தோமே அந்தப் புத்தகம் என்று அர்த்தம். அதாவது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே பேசிக் கொண்டிருந்து மறுபடியும் அதே புத்தகத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அல்கிதாப் என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். முதல் தடவை சொல்லும் போது வெறுமனே கிதாப் என்கிற வார்த்தையை மட்டும் சொன்னால் போதுமானது. இரண்டாம் முறை அதைப் பேசவேண்டுமானால் அல்கிதாப் என்று சொல்ல வேண்டும்.

இப்போது மீண்டும் இந்த வசனத்தில் இறைவன் பயன்படுத்தும் வார்த்தையைப் பிரயோகத்தைப் பாருங்கள். அலா மலக்கைனி என்று இறைவன் சொல்லவில்லை. அலல் மலக்கைனி லி அலா அல்மலக்கைனி என்று இறைவன் பயன்படுத்துகிறான். இப்போது அந்த வசனத்திலுள்ள தனித்தனி வார்த்தைகளின் பொருளை தெரிந்து கொண்டு பிறகு சேர்த்தால் தெளிவாகிவிடும்.

வமா உன்ஸில அருளப்படவில்லை 

அலா+அல்+மலக்கைனி = அலல் மலக்கைனி லி அந்த இரு வானவர்கள் மீது

அந்த இரு வானவர்களின் மீது (இந்த ஸிஹ்ர் என்ற சூனியக்கலை) அருளப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லுகிறான். அந்த இரு வானவர்கள் என்றாலேயே ஏற்கனவே சொல்லப்பட்ட வானவர்களா என்று

அந்த வசனத்திற்கு முன்னால் சென்று பார்க்க வேண்டும். அப்படி முன்னால் சென்று பார்த்தால், இந்த வசனத்திற்கு நான்கைந்து வசனங்களுக்கு முன்னால் ஜிப்ரயீலையும் மீக்காயிலையும் பற்றிப் பேசுகிறான்.

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். இது, தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது என்று கூறுவீராக!

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 2:97,98)

இந்த வசனங்களுக்குப் பின்னால்தான் ஸிஹ்ர் சம்பந்தமான வசனம் வருகிறது. மேற்சொன்ன வசனங்களில் ஜிப்ரயீல் மீக்காயீல் என்ற இரண்டு வானவர்களைப் பற்றி கூறுவதால், அந்த இரண்டு மலக்குகளுக்கும் சூனியம் இறக்கியருளப்படவில்லை என்ற வாசகம் ஜிப்ரயீலையும் மீக்காயிலையும் தான் குறிக்கிறது.

ஆனால் சிலர், இந்த வசனத்தில் அல்மலக்கைனி என்பது அதற்குப் பின்னால் வருகிற ஹாரூத்,மாரூத் என்ற இரண்டு பேரைத்தான் குறிக்கும் என்று வாதிடுகின்றனர். அப்படி பொருள் செய்ய இலக்கணப்படி இடமிருந்தாலும் இவ்வாறு பொருள் கொள்ளும் போது மலக்குகள் சிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற கருத்து வரும். ஆனால் ஸிஹ்ர் என்பது இறைமறுப்பு என்று சொன்ன இறைவன் அதற்கும் சுலைமான் நபிக்கும் சம்மந்தம் இல்லை என்றும் சொன்ன் இறைவன் அதையே மலக்குகளுடன் சம்மந்தப்படுத்த மாட்டான். இந்த வசனத்தில், சுலைமான் நபிக்கும் சூனியக்கலை என்ற பித்தலாட்டத்திற்கும், ஜிப்ரயீல் மீக்காயீல் என்ற இருவானவர்களுக்கும் இந்தப் பித்தலாட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று இரண்டு விசயங்களை இறைவன் மறுக்கிறான். எனவே ஷைத்தான் சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏமாந்து ஸிஹ்ரை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று இறைவன் சொல்லுகிறான்.

நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக யூதர்கள்தான் சொல்லிலிக் கொண்டிருந்தார்கள் என்று பல்வேறு அறிவிப்புக்களில் ஹதீஸ்கள் வருகிறது. அவைகள் சரியில்லாதவைகள் என்பதைத்தான் இந்த

வசனமும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

மலக்கு விசயத்தை முடித்ததற்குப் பின்னால், ஷைத்தானைப் பற்றியும் இறைவன் அந்த வசனத்தில் பேசுகிறான். ஹாரூத், மாரூத் என்ற இரண்டு ஷைத்தான்கள்தான் மக்களுக்கு சூனியக்கலையைக் கற்றுக் கொடுத்தனர் என்று இறைவன் சொல்லுகிறான். இந்த வசனத்தில் வருகிற ஷைத்தான்கள் என்றால், நிஜமான உண்மையான ஷைத்தான் இல்லை. மாறாக இதை ஓதினால் இப்படி நடக்கும், அதை ஓதினால் அப்படி நடக்கும் என்று சொல்லிலி மக்களைப் பயங்காட்டுவதற்காக, ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மனித ஷைத்தான்கள்தான் இந்த சூனியத்தைப் பரப்பினார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

இன்னும் சிலர், ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் மலக்குகள்தான் என்ற வாதத்தை வைக்கின்றனர். அப்படியெனில் மலக்குமார்கள் பாவம் செய்வார்கள் என்றாகிவிடுமே? ஆனால், மலக்குமார்கள் இறைவனின் கட்டளைப்பிரகாரம் நடப்பவர்கள், ஒருபாவமும் அறியாதவர்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லிலியிருக்க, அவர்கள் எப்படி இறை மறுப்பான சூனியத்தைக் கற்றுக் கொடுப்பார்கள் என்ற நியாயமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதினால், ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் வைத்து மலக்குமார்களாகச் சித்தரித்து ஒருகட்டுக்கதையைப் புனைந்துள்ளனர். .

இவ்வளவு பாவம் செய்கிற மனிதனை ஏன் படைத்தாய்? அவர்கள் உலகத்தை வீணடிக்கிறார்களே! நீ ஏன் அவர்களின் மீது கருணை காட்டுகிறாய்? என்றெல்லாம் மலக்குமார்கள் இறைவனிடம் சவால் விட்டார்களாம். உடனே அல்லாஹ் கேள்விகேட்ட மலக்குமார்களைப் பார்த்து, அவர்களைப் போன்று உங்களைப் படைத்தால், நீங்கள்

அவர்களை விடவும் அதிகமாகத் தவறிழைப்பீர்கள் என்று அல்லாஹ் சொன்னானாம்.

மலக்குமார்களுக்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், நமக்கு ஆசாபாசங்கள் இருக்கிறது, மலக்குகளுக்கு அது கிடையாது.

அதேபோன்று நமக்கு சுயமாகச் சிந்திக்க ஆற்றலும் சுயமாகச் செயல்படுகிற ஆற்றலும் இருக்கிறது. ஆனால் இது மலக்குமார்களுக்குக் கிடையாது. உதாரணமாக, அல்லாஹ் மலக்குகளைப் பார்த்து குனிந்து நில் என்று கட்டளை போட்டால் உடனே குனிந்து விடுவார்கள். பிறகு அல்லாஹ்வே, நிமிர்ந்து நில் என்று சொல்லும்வரை குனிந்தே நிற்பார்கள். ஒரு இலட்சம் வருசம் வரை வேண்டுமானலும் குனிந்தே நிற்பார்கள். ஆனால் மனிதனிடத்தில் அதே கட்டளையைச் சொன்னால், எவ்வளவு நேரத்திற்கு என்று கேட்போம். அப்படியே குனியும் போது கேட்காவிட்டாலும், குனிந்து சிறிது நேரம் கழித்த பிறகாவது இப்படியே எவ்வளவு  நேரத்திற்கு நிற்க வேண்டுமென்று கேட்டுவிடுவோம். எனவே மலக்குகளைப் பொறுத்தவரை சொன்னவுடனே செய்து விடுவார்கள். மறு பேச்சுக்கோ மறு பரிசீலனைக்கோ இடமே இல்லை. ஆனால் மனிதன் அப்படிப்பட்டவனாக இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சரி! கட்டுக் கதையைத் தொடருவோம். ..தவறிழைப்பீர்கள் என்று

அல்லாஹ் சொன்னானாம்.

அப்படிச் சொல்லிலிவிட்டு, கேள்விகேட்ட மலக்குமார்களுக்கு, நான் உங்களை வேறு மாதிரி படைத்துள்ளேன். உங்களுக்குச் சுயமாக சிந்திப்பதற்கோ முடிவு எடுப்பதற்கோ நல்லது கெட்டதை ஆய்வு செய்து நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்ற சுபாவங்கள் உங்களுக்குக் கிடையாது. நான் எப்படி உங்களைப் படைத்து வைத்திருக்கிறேனோ அப்படியே போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால் மனிதனை நான் அப்படியா படைத்துள்ளேன்? அவனுக்கு அறிவு என்று ஒன்றைக் கொடுத்துள்ளேன். அவன் நினைத்தால் நல்வழியிலும் நினைத்தால் தீயவழியிலும் போகலாம் என்கிற மாதிரி படைத்துள்ளேன். இப்படிப் படைத்திருக்கும் போது அவன் தவறுகள் செய்யத்தானே செய்வான் என்று அல்லாஹ் பதில் சொன்னானாம்.

உடனே அந்த மலக்குகள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வேண்டுமானால் மனிதர்களைப் போன்று எங்களுக்கும் ஆசாபாசத்தையும் சிந்திக்கிற ஆற்றலையும் தந்து மனிதர்களின் உலகத்திற்கு அனுப்பிப் பார். நாங்கள் ஒன்றும் கெட்டு விடமாட்டோம் என்று இறைவனிடம் சவால் விட்டார்களாம். உடனே அல்லாஹ், மலக்குமார்களைப் பார்த்து உங்களிலேயே சிறப்புமிக்க இரண்டு மலக்குமார்களை அழைத்து வாருங்கள். அவர்களை சோதனைக்காக

அனுப்பி வைப்போம் என்றானாம். உடனே மலக்குமார்கள் அதிக வணக்கசாலிலியாக இருந்த இந்த ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும்

அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்களாம். உடனே அல்லாஹ். இந்த இரண்டு பேருக்கும் மனிதர்களுக்குள்ள எல்லாத் தன்மைகளையும் கொடுத்து பூமிக்கு அவர்களை அனுப்பிவைத்து விட்டானாம். இவர்கள் வான் உலகத்திலிலிருந்து வந்ததினால் இவர்களுக்கு அங்குள்ள (வானத்தில்) சில விசயங்கள் தெரியுமாம். வானத்திலுள்ள ஸஹ்ரா என்ற நட்சத்திரத்தை அல்லது விடிவெள்ளியைப் பெண்ணாக மாற்றி அவர்களிருவரிடமும் இறைவன் அனுப்பினானாம். அப்பெண்ணைப் பார்த்தவுடன் இவர்கள் இருவருக்கும் ஆசை ஏற்பட்டு அவளை அடைய முற்பட்டார்களாம்,

அப்பெண் அவர்களிடம், என்னை நீங்களிருவரும் அடைய வேண்டுமானால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாளாம். அதற்கு அவர்களிருவரும் அதெல்லாம் முடியவே முடியாது என்று சொல்லிலிவிட்டார்களாம். பிறகு அடுத்த நாள் அந்தப் பெண் ஒரு குழந்தையுடன் சென்றாளாம். அப்போதும் இருவரும் அவளை

அடையவேண்டுமென ஆசைப்பட்டு நெருங்கினார்களாம், அப்பெண் நீங்களிருவரும் இந்தக் குழந்தையைக் கொன்றால் என்னை அடையலாம் என்றாளாம். அதற்கு அவ்விருவரும் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணையும் கற்பிக்க மாட்டோம், கொலையும் செய்யமாட்டோம் என்றார்களாம். மூன்றாவது நாள் அப்பெண் கையில் மதுக்குவளையுடன் வந்து என்னை அடைய வேண்டுமானல் நீங்கள் இந்த மதுவைக் குடிக்க வேண்டும் என்றாளாம். உடனே இருவரும் மது குடித்தார்களாம். போதை தலைக்கு ஏறியவுடன், அல்லாஹ்வுக்கு இணையும் கற்பித்து, அக்குழந்தையையும் கொன்று, அவளுடன் தவறான பாலிலியல் உறவு கொண்டார்களாம். இதனால்

இறைவன் அவர்களிருவரையும் தண்டிப்பதற்காக அவர்களிடம், உங்களுக்கு மறுமையில் தண்டனை தரட்டுமா? அல்லது இம்மையிலேயே தண்டனை தரட்டுமா என்று கேட்டானாம். அதற்கு அவர்களிருவரும் இந்த உலகத்திலேயே தண்டனையைத் தந்துவிடு அல்லாஹ்வே! என்று சொன்னதினால், அவர்களிருவரையும் தலைகீழாகக் கட்டி ஒருகிணற்றில் தொங்க விட்டு விட்டானாம். இன்றுவரை அவர்கள் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் இப்படியே கியாம நாள்வரை அந்தக் கிணற்றிலேயே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பார்களாம்.

இதுதான் ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் பற்றிய கடைந்தெடுத்த கட்டுக்கதை. இந்தக் கதையைத்தான் தப்ஸீர்கள் என்ற பெயரில் சில கிரந்தங்களில் எழுதி வைத்துள்ளனர். அதிலிலிருந்து காப்பியடித்து நம்மிடம் சொல்லுகிறார்கள் இந்த பெயர்தாங்கி ஆலிலிம்கள். இந்தக் கதைக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? நபியவர்கள் இப்படி இந்தச் செய்தியைச் சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளதா? ஒன்றுமில்லை. எவனோ ஒருவன் அடித்துவிட்ட இந்தக் கப்ஸாவை வைத்துக் கொண்டு, ஹாரூத் மாரூத் மலக்குகள் என்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்தக் கதையில் வருகிறதைப் போன்று நட்சத்திரத்தைப் பெண்ணாக மாற்றுவதெல்லாம் புராணங்களில் உள்ளதைப் போன்று இருக்கிறது. இப்படியெல்லாம் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டக்கூடாது. அல்லாஹ் களிமண்ணால் மனிதனைத் தனிப் படைப்பாகத்தான் படைத்துள்ளான். மலக்குகளைப் பொறுத்தவரை, அவர்களின் தன்மைகளை மாற்றி அல்லாஹ் அனுப்ப மாட்டான்.  இறைவனால் மாற்றமுடியாது என்பதற்காகச் சொல்ல வரவில்லை. மாறாக இறைவன் அப்படி செய்தமாதிரி ஒருஆதாரப் பூர்வமான செய்தியும் இல்லை.

மேலும் நபியவர்கள் பிரச்சாரம் செய்த சமூக மக்கள், மலக்குமார்களை அல்லாஹ் தூதராக அனுப்ப வேண்டியதுதானே என்றெல்லாம் கேட்டுப் பார்த்தார்கள். அதற்கு அல்லாஹ் அப்படி மலக்குமார்களைத் தூதராக அனுப்ப மாட்டான் என்று பதில் சொல்லச் சொல்லுகிறான். இந்தச் செய்தியை மறைகூறும் இறைத்தூதர்கள் என்ற தலைப்பில் நபிமார்களின் இலக்கணத்தில் விரிவாகப் விளக்கியுள்ளோம்.

எனவே மேற்சொன்ன கதை கட்டுக்கதை. ஹாரூத் மாரூத் என்பவர்கள் மலக்குமார்களாக இல்லை. ஹாரூத் மாரூத் என்ற இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் சில தந்திரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த வித்தையைப் பிறமக்களுக்குச் சொல்லிலிக் கொடுத்தார்கள் என்பது மேற்சொன்ன வசனத்திற்கு அர்த்தமாகும்.

பி பாபில ஹாரூத வமாரூத் லி பாபில் என்ற நகரத்தில் இரண்டு ஷைத்தான்கள் தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லுகிறான். இதன்மூலம் மலக்குமார்களுக்கும் சூனியத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், அது இறைவன் புறத்திலுள்ளது இல்லை என்பதையும் இறைவன் மறுத்து விடுகிறான். மக்களை ஏமாற்றுவதற்காக இவர்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் சொல்லிலி இந்த வசனத்தைத் துவக்குகிறான்.

وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ லி நாங்கள் சோதனையாக இருக்கிறோம். எனவே எங்களை மறுத்து விடாதீர்கள் என்று சொல்லாமல் எவருக்கும் அவர்களிருவரும் (சூனியத்தைக்) கற்றுக் கொடுப்பதில்லை.

எனவே எவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தாலும், நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்பதைச் சொல்லிலி பயமுறுத்தித்தான் கற்றுக் கொடுப்பார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். இப்படித்தான் ஒவ்வொரு வித்தைக்காரனும், இது பயங்கரமான விசயம். ஒரு வார்த்தையை மாற்றிச் சொன்னால் உன்னையே மாற்றி அடித்துவிடும் என்றெல்லாம் மக்களிடத்தில் எதையாவது ஒன்றைச் சொல்லிலி பயமுறுத்துவார்கள். இதுபோன்று தான் அந்தக் காலத்திலிலிருந்து இந்தக் காலம் வரை சூனியம் செய்பவர்கள் மக்களைப் பயமுறுத்தியும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான். அதற்கடுத்ததாக,

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ லி (இதன் மூலம்) ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் எவ்வாறு பிரிப்பது என்பதை அவர்களிருவரிடமிருந்தும் கற்றுக் கொண்டார்கள்.

என்று அல்லாஹ் கூறுகிறான்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிப்பதைத்தான் இந்த சூனியத்தின் மூலம் செய்யமுடியும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு, அடுத்ததாக,

وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்யமுடியாது. என்று

அழுத்தம் திருத்தமாகச் சொல்லிலிக்காட்டுகிறான்.

அல்லாஹ்வின் அனுமதி என்றால், விதியில் இருந்தாலே தவிர எவர்களுக்கும் எந்தத் தீங்கும் செய்யவே முடியாது என்று சொல்லு கிறான்.

இப்படி இறைவன் சொல்வதின் மூலம், சூனியம் என்பது வெறுமனே பொய் என்று உறுதியாகி விடுகிறது. ஆனால் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்திவிடலாம், மாயமந்திரத்தின் மூலம் வஸியம் செய்துவிடலாம் என்று நினைத்தே அதைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தாலே தவிர எந்த ஒன்றையும் இவர்களால் செய்யவே முடியாது என்பதை இறைவன் தெள்ளத்தெளிவாக விளக்கி விட்டான்.

அப்படியெனில் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட விதியின் மூலம் உண்மையிலேயே கணவன் மனைவி பிரிவதை சிலர் சூனியத்தின் மூலம் நடந்ததாக நம்பிக் கொண்டு சூனியம் இருப்பது உண்மை என்று வாதிடுகிறார்கள். இதனால் ஏதாவது செய்யமுடியுமா? என்றால் முடியவே முடியாது என்று அல்லாஹ் சொல்லுகிறான். அதற்கடுத்தாக

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ  மேலும் தங்களுக்கு எந்தத் தீங்கும் நன்மையும் செய்து கொள்ள முடியாததைக் கற்றுக் கொள்கிறார்கள்.

இப்படி சூனியத்தை வைத்து பிறருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்பதோடு இதனைக் கற்றுக் கொள்பவர்களுக்குத்தான் இது கேடானது என்றும் சொல்லுகிறான். இதனால் எந்த நன்மையும் இல்லை என்றும் சொல்லுகிறான்.

இந்த வசனத்தில் சூனியம் இறைவனிடத்திலிருந்து வந்தது என்பதையும் மறுக்கிறான். சூனியத்திற்கும் சுலைமான் நபிக்கும், சூனியத்திற்கும் மலக்குமார்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதையும் மறுக்கிறான். மேலும் இந்த சூனியத்தின் மூலம் எந்த ஒன்றையும் செய்யமுடியாது என்று சொல்லிலி சூனியத்தையும் மறுக்கிறான். இந்த சூனியத்தின் மூலம் எவரது கைகால்களையாவது முடக்கமுடியுமா? ஒருவரை மெண்டலாக்க முடியுமா? ஒருவருக்குப் பிள்ளை இல்லாமல் ஆக்கிவிட முடியுமா? ஒருவரை நோயாளியாக ஆக்கிவிட முடியுமா? ஒன்றுமே முடியாது என்கிறான் அல்லாஹ். அல்லாஹ் தனது விதியில் ஏதேனும் தீங்கு நேரவேண்டும் என எழுதியிருந்தால் மட்டுமே தீங்கு ஏற்படும். ஆனால்

சூனியத்தின் மூலம் ஒருவருக்குக்கூட எந்தத் தீங்கும் ஏற்படாது.

இந்த வசனத்தில் சூனியத்தின் மூலம் ஒருவருக்குக்கூட கேடு செய்ய முடியாது என்று இறைவன் சொன்ன வார்த்தை என்னையும், உங்களையும், ஏன் உலகத்தில் இருக்கிற எல்லோரையும் குறிக்கும். அற்பத்திலும் அற்பமானவர்களையெல்லாம் அது குறிக்கும். அதுவும் ஈமான் கொள்ளாத மனிதர்களையும் குறிக்கும். அப்படியிருக்கும் போது, நபிகள் நாயகம் அவர்கள் அந்த வார்த்தையினுள் வரமாட்டார்களா? எவருக்கும் என்ற வார்த்தைப் பிரயோகம் நபியவர்களையும் சேர்த்துத்தான் குறிக்கிறது. இந்தச் சாதாரண அறிவுகூட சூனியத்தை ஆதரிப்பவர்களுக்கு இல்லையே!

நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை ஆராய்ந்து பார்த்தால், நபியவர்கள் பல நாட்கள் மறதியாளராக இருந்ததாகவும், தான் செய்த காரியத்தைச் செய்யவில்லை என்றும் சொல்லிலியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மதியிழந்தவர்களாக நபிகளாரைச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இதனை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே முஹம்மது நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகள் அல்குர்ஆனின் 2:102 ஆகிய இந்த வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.

وَلَقَدْ عَلِمُوا لَمَنْ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ இதை (சூனியத்தை) விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை> என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ லி தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

இந்த வசனத்தில் அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என்றால்,

அவர்கள் என்பது யூதர்களைக் குறிப்பதாகும்.

இந்த வசனத்தில் இறைவன் சொல்வது இதுதான். ஸிஹ்ர் லி சூனியம் என்பது பெரும்பாவம். இந்தப் பாவத்தை எந்த நபியும் செய்ய மாட்டார்கள் என்றும் வானவர்களும் சூனியம் என்ற பெரும்பாவத்தைட் செய்ய மாட்டார்கள். மூன்றாவதாக, ஸிஹ்ர் லி சூனியத்தினால் யாருக்கும் எதனையும் செய்யவே முடியாது என்றும் சொல்லுகிறான். அது பொய் என்றும் உறுதிப்படுத்துகிறான். நான்காவது, யார் இதனை நம்புகிறாரோ செய்கிறாரோ அவரது மறுமை வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும் அல்லாஹ் சொல்லுகிறான்.

அப்படியெனில், இன்று வாழக்கூடிய ஆலிம்களில் அதிகமானவர்கள் சூனியத்தை உண்மையென்றும், அது வைக்கப்பட்டால் முட்டையை ஓதிவைக்க வேண்டும், வெற்றிலையில் எழுதிக் குடிக்க வேண்டும்,

அந்தப் பரிகாரம் இந்தப் பரிகாரம் என்றெல்லாம் பொய்புரட்டுகளைச் சொல்லிலி மக்களை ஏமாற்றுபவர்களின் மறுமை வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை என்பதை உணர வேண்டும்.

எனவே மாயமந்திரம், சூனியம், தாயத்து, தல்ஸமாத் போன்றவைகள் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் உங்களால் சூனியத்தினால் ஏதாவது செய்ய முடியும் என்றால், எனக்கு எனது கால்கைகளை சூனியத்தினால் முறித்துப் பாருங்கள் என்று கடந்த 30 வருடங்களாக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சூனியம் உண்மை என்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம். இப்போதும் சவால் விடுகிறோம். எனக்குச் செய்வினை வைப்பதற்கு எனக்குச் சொந்தமான எனது தலைமுடி, காலடிமண், சட்டை, வியர்வை சம்பந்தமான..... இப்படி எதை வேண்டுமானாலும் தருகிறேன். உங்களால் எனக்குச் செய்வினை மூலம் ஏதேனும் ஒன்றை செய்து காட்ட முடியுமா?

மத்ஹப்வாதிகளின் பார்வையில் நாம் அவர்களின் எதிரிகளாக இருக்கிறோம். ஏன் எங்களை உங்களது சூனியத்தினால் முறியடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது பொய் என்று நாங்கள் நம்புகிறோம். எவர்கள் அதனை நம்பி ஏமாளிகளாக இருக்கிறார்களோ அல்லது பயந்து கொண்டிருக்கிறார்களோ, இல்லாததை இருப்பதாக வஸ்வாஸை ஏற்றுக் கொண்டுள்ளார்களோ அவர்களைத் தான் சூனியத்தை வைத்து பயங்காட்ட முடியும் என்பதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இன்னும், நபியவர்கள் மக்காவிலிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து போனபோது மதினாவில் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்களிடமே ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, நபியவர்களை இறுதித் தூதராக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து, சிறிது  நாட்களிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாகி நபியவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு வந்தது. இஸ்லாமிய ஆட்சியிலிலிருந்த சிறிய தொகை யூதர்கள், முஸ்லிலிம்கள் மீது பொறாமை கொண்டு முஸ்லிலிம்கள் அனைவருக்கும் சூனியம் வைத்துவிட்டோம். இனிமேல் ஒருவருக்கும் பிள்ளை பிறக்காது என்று பயங்காட்டினார்கள். இப்படியெல்லாம் வெற்று வாய்வார்த்தைகளில் மிரட்டினார்கள். இப்போதும் சூனியம் செய்பவர்கள் மக்களைப் பயங்காட்டுவதற்கு, இரத்தம் கக்கி இறப்பாய் என்றும் இப்படி எதாவது ஒன்றைச் சொல்லுவார்கள். அப்படியெல்லாம் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அது நடக்காவிட்டாலும், அவர்கள் சொல்லுகிற வேகத்தைப் பார்த்ததும் நமக்கெல்லாம் பயம் வரத்தான் செய்யும். இப்படித்தான் குரளி வித்தை காட்டுவார்கள். நமது சமுதாயத்திலும்கூட இதுபோன்று மக்களை பயங்காட்டுகிற வேலையைச் செய்யும் பெயர்தாங்கி ஆலிலிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாயத்து வாங்காமல் போனாய் என்றால் உன்னை இரத்தம் கக்க வைத்து சாகடித்து விடுவேன் என்று பயம் காட்டுவார்கள். இதைத் தாண்டி காலடி எடுத்து வைத்தாய் என்றால் அப்புறம் நடப்பதற்கு நான் பொறுப்பு இல்லை என்றெல்லாôம் பயங்காட்டும்போது நாம் பயப்படத்தான் செய்கிறோம். இதுபோன்றே ஸஹாபாக்களையும் அன்றைய காலத்து யூதர்கள் பயங்காட்டியதினால், நமக்கெல்லாம் சூனியம் வைத்துவிட்டர்களாமே! இதுவரைக்கும் பிள்ளைகள் பிறந்ததோடு சரி. இனிமேல் நம்மில் யாருக்குமே பிள்ளையே பிறக்காமல் போய்விடுமாமே? என்றெல்லாம் ஸஹாபாக்கள் பயந்தும் இருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை புகாரியில் பார்க்கலாம்.

மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) குபாவில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப்  பிரசவமாகிவிட்டது. பிறகு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் வைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் உமிழ்நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்லிலிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில்,

அவர்கüடம், யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது எனக் கூறப்பட்டுவந்தது.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலிலி), நூல்: புகாரி 5469

யூதர்கள் முஸ்லிலிம்களுக்குச் சூனியம் வைத்துவிட்டதால் இனிமேல் முஸ்லிம்களுக்குப் பிள்ளை பிறக்காது என்று மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த போதுதான், அஸ்மா (ரலிலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸுபைரைப் பெற்றெடுத்தார்கள். பொதுவாக ஒருவருக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையருக்குத்தான் பெருமகிழ்ச்சி, பிறகு அந்தக் குடும்பத்திற்கே மகிழ்ச்சி என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு ஊரைச் சார்ந்த மக்கள் அனைவரும் சந்தோசப்பட முடியுமா? என்றால் முடியாது. ஆனால்  இந்தச் செய்தியை உன்னிப்பாகப் பார்க்கும் போது, மதினாவிலுள்ள எல்லா முஸ்லிலிம்களும் சந்தோசப்பட்டார்கள் என்று வருகிறது. ஏனெனில், யூதர்கள் யாருக்கும் குழந்தை பிறக்காது என்று சொல்லிலிக் கொண்டிருந்ததை அஸ்மா அவர்கள் குழந்தை பெற்ற செய்தி யூதர்களுக்குச் சரியான மூக்கறுப்பாக ஆக்கிவிட்டது. அதுபோக முஸ்லிம்களுக்கு சூனியத்தின் மூலம் ஒன்றும் செய்யவே முடியாது என்ற நம்பிக்கை வலுப்பெற்றதை கண்கூடாக்க் காணமுடிந்தது. 

இதில் யூதர்கள் சொன்னதைப் போன்று பிள்ளை பிறக்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் எந்த மந்திரமும் மாயமும் செய்யாமல் இறைவனால் பிள்ளை கொடுக்கப்பட்டு, பிள்ளைகளும் பிறந்து கொண்டுதான் இருந்தது என்பதை மேற்சொன்ன சம்பவத்தில் விளங்கிக் கொள்ள முடியும். எனவே ஸிஹ்ர் லி சூனியம் என்பதெல்லாம் வெறுமனே பித்தலாட்டம்தானே தவிர அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் சேர்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். இது முக்கியமான விசயம்தான்.

 

அடுத்ததாக, ஸிஹ்ர்லிசூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிலிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்துவிடுகிற குற்றமாகும்.

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி), நூல்கள்: புகாரி 2766, முஸ்லிலிம் 451

மக்களின் உள்ளத்தில் ஈடுபாடாக பதியவைப்பதற்காக நபியவர்கள் கேள்வியைக் கேட்டு பதில் சொல்லுவார்கள். இப்படிப் பேசுவதும் நபியவர்களின் நடைமுறையில் உள்ளதாகும். முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்லிசூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும்.

ஒன்றிலிருலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றை செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியெனில் சூனியத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்றாலே வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இன்று மக்கள் அப்படியில்லை. அதனால்தான் நபியவர்கள் இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக இதனை எச்சரிக்கிறார்கள்.

இன்னொரு இடத்தில் இரண்டு பாவங்களை மட்டும் குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லும் போது இணைவைத்தலையும் சூனியத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்தி சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி),  நூல்: புகாரி 5764

அப்படியெனில் மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பயங்கரமான குற்றம் என்று சொல்லிலித்தரப்பட்ட விசயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு மக்களை வழிகெடுக்கின்றனர். அறியாத மக்கள் வயிற்று வலிலிக்காகவும் காய்ச்சலுக்காகவும் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு மார்க்க அறிஞர்களிடத்தில் வரும்போது

அவர்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்லாமல், உனக்கு அவர் சூனியம் வைத்துவிட்டார் இவர் சூனியம் வைத்துவிட்டார் என்றெல்லாம் இல்லாத சூனியத்தை வைத்து மக்களை பயங்காட்டி ஏமாற்றி, அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடுவது, சம்பந்தம் செய்த குடும்பங்களிலும் சண்டையை மூட்டிவிட்டு குடும்பங்களை சூனியத்தின் பெயரால் பிரிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினைகள் நடப்பது என்பது எல்லோரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். இது அதிசயம் ஒன்றுமில்லை. இரண்டு மனிதர்களின் உள்ளங்கள் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது எந்தக் காலத்திலும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி எல்லா விசயத்திலும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் தகப்பனும் பிள்ளையுமாக இருந்தாலும் சரியே. அது போன்று கணவன் மனைவிக்கும் அப்படித்தான். விதிவிலக்கெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி முடிவெடுத்தாலும் ஒருவரின் கருத்து ஒருநேரம் மிகைத்தும் ஒருவரின் கருத்து சிலநேரம் மிகைக்காமலும் இருக்கத்தான் செய்யும் என்கிற இந்த சாதாரண விசயத்தைக்கூட புரிந்து கொள்ளாத சிலர், சூனியத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற இந்த மோசடிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

மனைவி, கணவன் என்னைச் சரியாகக் கவனிக்காமல் இருக்கிறார் என்றும் கணவன் மனைவியைப் பற்றி மனைவி எனக்குக் கீழ்படிந்து நடக்காமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லுவார்கள். உடனே அந்தப் பெண்மணியிடம் உனக்கு மாமியார் வீட்டில் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று இல்லாத சண்டையை மூட்டிவிட்டு பெரியளவுக்கு குடும்பங்களில் பிரிவினையை உண்டுபண்ணி விடுவார்கள்.

நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பேச்சுக்காக சூனியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்திகள் குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதால் அவை பலவீனமான செய்தி என்று சொல்லிலி நாம் அந்தச் செய்திகளை மறுக்கிறோம். இருந்தாலும் ஒரு வாதத்திற்காக நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அவர்கள் சொல்லுவதைப் போன்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை அந்த ஹதீஸில் உள்ளபடி எப்படி அறிந்து கொண்டார்கள்.

அந்த ஹதீஸில் நபியவர்களின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு மலக்குமார்கள் அமர்ந்து கொண்டு பேசியபோதுதான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றனர். அதன்படி ஆராய்ந்தால், ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கபட்டிருக்கிறது என்கிற செய்தி இறைவனால் மலக்குமார்களின் மூலமாகத்தான் அறிவிக்கப்பட்டது என்பதை அறிவுடைய யாரும் ஏற்றுக் கொள்வார்கள். மறுக்க மாட்டார்கள்.

விசயம் இவ்வாறு இருக்க, இன்று சமுதாயத்தில் மதரஸாக்களில் ஏழுவருடம் படித்து பட்டம் பெற்ற போலிலித்தனமான உலமாக்கள் என்ற பெயரில் இருந்து கொண்டு, வயிற்றுவலிலிக்காக வருகிற நபரிடம் சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்லமுடியும்?. மலக்கு வந்தல்லவா சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே!. தனக்கு என்ன நடக்கிறது என்பதே நபியவர்களுக்குத் தெரியாமல் குழம்பி இருந்ததாகத்தான் சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகளில் உள்ளது.

முதலிலில் அந்தச் செய்தி சரியில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும்

அதைச் சரியென்று வைத்துக் கொண்டு பேசினாலும், அந்தச் செய்திகளில் உள்ள தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஐம்பது நாட்களாக எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்றெல்லாம் நபியவர்கள் சொன்னதாகவும் அதில் இருக்கிறது. பிறகு தான் இரண்டு வானவர்களில் ஒருவர் நபியவர்களின் தலைமாட்டிலும் இன்னொருவர் கால்மாட்டிலும் உட்கார்ந்து கொண்டு பேசியதின் மூலம் தனக்கு சூனியம் வைக்கப்பட்டது நபியவர்களுக்குத் தெரிகிறது என்று பதிவாகியுள்ளது. வஹீயின் மூலமாக அல்லாஹ்வோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நபியவர்களுக்கே தனக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வானவர்கள் சொன்ன பிறகுதான் நபியவர்களுக்கே சூனியம் வைக்கப்பட்டதென அறிந்து கொண்டார்கள் என்றால் இன்று மந்திரவாதி என்பவர்கள் எப்படி ஒருமனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார்கள். அதுவும் இவர்தான் வைத்தார்கள் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்.

லபீத் இப்னு அஃஸம் என்பவன்தான், இந்தக் கிணற்றில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தான் என்பதையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே நபியவர்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை ஆராயும் போது அந்த ஹதீஸ்கள் சரியென்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்கிற பித்தலாட்டத்திற்கு ஆதாரம் அதில் இல்லவே இல்லை. இதற்கு இப்படியெல்லாம் விளக்குவது, ஹதீஸை சரியென்று நம்புபவர்களுக்குத்தான் சொல்லுகிறோமே தவிர இந்த பிராடுகளுக்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, நபிமார்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு இறைவன் புறத்திலிலிருந்து மலக்குமார்களின் மூலமாக வஹீ வருவதால் அவர்களுக்கு தெரிகிற வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றாவது நம்பலாம். ஆனால் நபிமார்கள் அல்லாத நம்மைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எதுவும் வராது என்பதினால் அதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. எனவே அல்லாஹ்விடம் பொதுவாக பிரார்த்தனை செய்துவிட்டுப் போவதுதான் சரியான வழிமுறையாகும்.

அதனால் இந்த ஸிஹ்ர்லிசூனியத்தை வைத்துக் கொண்டு வஸியம் பண்ணி விட்டார்கள், அதுபண்ணி விட்டார்கள் இது பண்ணி விட்டார்கள், மருந்து கொடுத்து விட்டார்கள், முகம்மாத்து பண்ணிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுவதை நாம் நம்பக்கூடாது என்பதற்காகத்தான் இதை சொல்லுகிறோம்.                       

 

 



சொற்பொழிவு குறிப்புகள்                     தொகுப்பு : இப்னு மர்யம்


அளவற்ற அருளாளன்

மக்களிடம் ஆதாரப்பூர்வமான செய்திகளை அடிப்படையாக கொண்டு சொற்பொழிவுகள் அமைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் சொற்பொழிவாற்றுபவர்கள் ஜும்ஆ, தெருமுனை பிரச்சாரம்,பொதுக்கூட்டம் போன்ற மக்களை நல்வழிப்படுத்தும் இடங்களில் பயன்படுத்துவதற்காக சகோதரர் இப்னு மர்யம் அவர்கள் சிறந்த குறிப்புகளை தொகுத்து தருகிறார்கள். இந்தப் பகுதியை சொற்பொழிவாற்றுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (ஆசிரியர்)

அருள் புரிவதை தன்மீது அவனே கடமையாக்கியுள்ளான்

كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ (54) سورة الأنعام

அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். )அல்குர்ஆன் 6:54)

كَتَبَ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ (12) سورة الأنعام

அருள் புரிவதைத் தன் மீது அவன் கடமையாக்கிக் கொண்டான்.

(அல்குர்ஆன் 6:12)

நினைப்பதற்கும் நன்மை

6491 عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலேலிஅதைச் செயல்படுத்தாவிட்டாலும்லி அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ,

அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலிலி), நூல் : புகாரி (6491

நல் எண்ணத்திற்கு பெரும் கூலிலி

4423 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَعَ مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنْ الْمَدِينَةِ فَقَالَ إِنَّ بِالْمَدِينَةِ أَقْوَامًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَهُمْ بِالْمَدِينَةِ قَالَ وَهُمْ بِالْمَدِينَةِ حَبَسَهُمْ الْعُذْرُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கியபோது, மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அவர்கள் மதீனாவில்தான் இருக்கின்றார்கள்;  அத்தியாவசியக் காரணங்கள்தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்துகொள்ளவிடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்

களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது) என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி), நூல் : புகாரி (4423)

ஸஹீஹ் முஸ்லிலிம் (3872) வது அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

إِلَّا شَرِكُوكُمْ فِي الْأَجْرِ

நன்மையில் உங்களுடன் அவர்களும் இணைந்துகொள்ளாமல் இருப்பதில்லை

கஷ்டத்திற்கும் கவலைக்கும் நன்மை

5642 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக

அவருடைய பாவங்கüலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலிலிலி), நூல் :புகாரி (5641)

மனைவிக்கு உணவூட்டுவதும் நன்மை

1296 عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ... وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ بِهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ رواه البخاري

இறைப்பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி.  அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட உமக்கு நன்மையுண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலிலி), நூல் :புகாரி (1296)

ஹலாலான உடலுறவுக்கும் நன்மை

... وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ قَالَ أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرًا رواه مسلم

உங்களில் ஒருவர் உடலுறவு கொள்வதிலும் தர்மம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், யிஞீஅல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா!

அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலிலி), நூல் : முஸ்லிலிம் (1832)

அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மை

2989 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ سُلَامَى مِنْ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَيُمِيطُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாüலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து

அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி (2989)

மலர்ந்த முகத்துடன் சந்திப்பதும் நன்மை

4760 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحْقِرَنَّ مِنْ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ رواه مسلم

அபூதர் (ரலிலிலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்)

அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே என்று கூறினார்கள்.

(நூல் : முஸ்லிலிம் (5122)

தீமையை தடுப்பதும் நன்மை

119 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ بِاللَّهِ وَالْجِهَادُ فِي سَبِيلِهِ قَالَ قُلْتُ أَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَكْثَرُهَا ثَمَنًا قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ الْعَمَلِ قَالَ تَكُفُّ شَرَّكَ عَنْ النَّاسِ فَإِنَّهَا صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ ... عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَتُعِينُ الصَّانِعَ أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ رواه مسلم

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யிஞீஅல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும் என்று பதிலளித்தார்கள். நான், எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யிஞீதன் எசமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்) என்று பதிலளித்தார்கள். யிஞீஅ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து

என்னால் இயலவில்லையென்றால்...? என்று கேட்டேன். அதற்கு

அவர்கள், யிஞீதொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக என்று சொன்னார்கள். நான்,

அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிலவற்றைக்கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்ளும் ஒரு நல்லறம்தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலிலி),  நூல் : முஸ்லிலிம் (136)

மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.

அவற்றில் (தொழில் செய்பவனுக்கு உதவி செய்க என்பதற்கு பதிலாக) யிபலவீனருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக என இடம்பெற்றுள்ளது.

அநீதி இழைப்பவனுக்கும் மன்னிப்பு வழங்குபவன்

قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ(53) سورة الزمر

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும்

அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

பாவமன்னிப்பு கேட்டால் பெரும் மகிழ்ச்சி கொள்பவன்

4932 أَنَسُ بْنُ مَالِكٍ وَهُوَ عَمُّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَأَيِسَ مِنْهَا فَأَتَى شَجَرَةً فَاضْطَجَعَ فِي ظِلِّهَا قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا قَائِمَةً عِنْدَهُ فَأَخَذَ بِخِطَامِهَا ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடிவிட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.

தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில்

அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை என்று சொல்வதற்குப் பதிலாக) இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன் என்று தவறு தலாகச் சொல்லிலிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி

அடைகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி), 

நூல் : முஸ்லிலிம் (5300)

இறைநம்பிக்கையாளருக்கு அனைத்தும் நன்மையே

5318 عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து

கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும்

அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

அறிவிப்பவர் : ஸுஹைப் (ரலிலிலி),

நூல் : முஸ்லிம் (5726)

 

சொற்பொழிவுகள் தொடரும்...



வானவர்கள்                      தொடர் :4

கருத்தைப் பரிமாறும் மலக்குகள்

              எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்.

சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மைகளைப் போல கொடுக்கப்படும் வேலையை மட்டும் மலக்குகள் செய்துவிட்டு அமைதியாக இருப்பார்கள். மாறாக, மலக்குகள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைப்பது தவறாகும். காரணம், மலக்குகள் மனிதர்களைப் போன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். நமக்கு தெரிந்த விஷயத்தை தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது போல, தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதை போலவே மலக்குகளும் செயல்படுகிறார்கள்.

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது,

அவர்கüடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்கüல் ஒருவர் இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். அதற்கு மற்றொருவர் கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது என்று கூறினார். பின்னர்

அவர்கள் உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள் என்று பேசிக்கொண்டார்கள்.

அப்போது அவர்கüல் ஒருவர் இவர் உறங்குகிறாரே! என்றார். மற்றொருவர் கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது என்றார். பின்னர் அவர்கள் இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாüயின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார்.

அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும் என்றார்கள். அப்போது அவர்கüல் ஒருவர் இவர் உறங்குகிறாரே! என்று சொல்ல, மற்றொருவர் கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது என்றார்.

அதைத் தொடர்ந்து அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாü முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத் (ஸல்)

அவர்கள் மக்களை (நல்லவர், கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள் என்று விளக்கமüத்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). ஆதாரம் : புஹாரி (7281)

துர்வாடையை வெறுக்கும் மலக்குகள்

உயிர்வாழ உணவு உட்கொள்ள வேண்டும்; தூங்க வேண்டும் என்று எல்லா உயிரினங்களுக்கு மத்தியிலும் சில ஒற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நமக்கும் மலக்குகளுக்கும் இடையே ஒரு முக்கியமான ஒற்றுமைகளும் இருக்கின்றன. நாற்றத்தை, மோசமான வாசனையை சுவாசிப்பதை விட்டும் மனிதர்கள் விரண்டோடுவதை போன்றே மலக்குகளும் நடந்து கொள்கிறார்கள். கெட்ட வாடைகளின் மூலம் வானவர்கள் தொல்லையடைகிறார்கள்; அவதியடைகிறார்கள். இதனை பின்வரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே

அவற்றிலிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி), ஆதாரம் : முஸ்லிம் (974)

மலக்குகளும் மறைவான ஞானமும்

மலக்குகள் என்பவர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை என்றதுமே சிலர், மலக்குமார்களை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தி பல்வேறு தவறான விஷயங்களை பரப்புவதற்கு தயாராகிவிடுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், அல்லாஹ்விற்கு மறைவான ஞானம் இருப்பது போன்று மலக்குகளுக்கும் இருக்கிறது என்று சொல்வது. ஆனால் மறைவான ஞானம் என்பது

அல்லாஹ்விற்கு மட்டுமே இருக்கும் ஆற்றல். அது அவனுக்குரிய தனித்தன்மை. அந்த ஆற்றல் அவனைத் தவிர எவருக்கும் எந்த படைப்பினத்திற்கும் இல்லை என்பதுதான் உண்மை. அவ்வகையில் மலக்குகளுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பதை பின்வரும் ஆதாரங்கள் நமக்கு சொல்கின்றன.

 வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன.

அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 16 : 77)

சில முஸ்லிலிம்கள் பின்வரும் வசனத்தை வைத்து கொண்டு மலக்குகளுக்கு மறைவான ஞானம் இருப்பதாக சொல்கிறார்கள். அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? என்று மலக்குகள் கேட்டதை வைத்துக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்கள். இந்த வாதம் தவறானது என்பதற்கு அந்த வசனத்திலேயே சான்று இருக்கிறது.

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன் என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது  அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 2 : 30 லி 32)

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அல்லாஹ கூறிவதிலிலிருந்தும், “”நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை என்று வானவர்கள் வாக்குமூலம் கொடுப்பதிலிருந்தும்

அல்லாஹ் ஒருவனைத் தவிர யாருக்கும் மறைவான ஞானம் அறவே இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஒருவேளை, பூமியில் மனித இனத்தை படைக்கப்போகிற தகவலுடன் சேர்த்து அவர்களின் தன்மையையும் வானவர்களுக்கு

அல்லாஹ் தெரிவித்திருக்கலாம். அதனால் அவர்கள் அவ்வாறு கேள்வியை கேட்டிருக்கலாம் என்று நாம் விளங்கிக் கொள்ளும் போது எந்த கேள்வியும் எழாது.  இல்லையேல் மறைவான ஞானம் எனும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான தன்மையில் அவனுக்கு இணைகற்பித்தவர்களாக ஆகிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடும். மேலும் மலக்குகளுக்கு மறைவான ஞானம்

இல்லை என்ற இக்கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில்  கீழ்க்காணும் ஹதீஸ் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் ஈமான் எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழைய படியே நெஞ்சை) மூடிவிட்டார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், திறங்கள் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், யார் இவர்? எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஜிப்ரீல் என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? எனக் கேட்டார். அவர்கள், ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர்,(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், இவர் யார்? எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்கüல் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள் என்று பதிலüத்தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் திறங்கள் என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலüத்தபின்) அவர் கதவைத் திறந்தார். (நீண்ட ஹதீஸ்)

அறிவிப்பவர் : அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (349) (3207)

வானவர்களுக்கு மறைவான ஞானம் இருந்தால் வானத்தின் காவலராக இருக்கும் வானவர்கள் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் வானுலகத்தின் கதவை

திறந்திருப்பார்கள். மாறாக, யார் இவர்? என்றும், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? என்றும், (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்றும் வானத்தின் காவலர்களாக இருக்கும் வானவர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதிலிலிருந்து அவர்களுக்கு மறைவான ஞானம்

இல்லை என்பதை விளங்க முடிகிறது. இதுபோன்று விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்கும் மற்றொரு செய்தியை இங்கு காண்போம்.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம். திடீரென்று நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள். ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் (சக்கராத்தின்) நேரத்தில் சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் கபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும்

அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலிலிலிலிருந்து வெளியேறிவிடு என கூறுவார். தோல்பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும்.

அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்க அருகாமையில் அந்த உயிரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இவ்வாறு ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்யீனில் பதிவு செய்யுங்கள். அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான். (நீண்ட செய்தியின் ஒரு பகுதி)                        

ஆதாரம் : அஹ்மத் (17803)

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளிúறி வா என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல அவனுடைய உடலிலிலிலிருந்து உயிர் கைப்பற்றப்படும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்கமாட்டார். உடனே கம்பளி துணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தைவிட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறினார்கள்.                   ஆதாரம் : அஹ்மத் (17803)

நன்மை மற்றும் தீமை செய்த ஆத்மாக்கள் வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்கிறார்கள் என்பதிலிலிருந்து  வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை;  அவ்வாறு இல்லாததாலேயே யாருடைய உயிர் கொண்டு வரப்படுகிறது? என்று அவர்களுக்கு தெரியவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

மலக்குகள் அல்லாஹ்வை பார்த்துள்ளார்களா?

 

அல்லாஹ்வை எந்தவொரு மனிதரும் பார்த்ததில்லை. இன்னும் சொல்வதெனில், அவனால் மனிதர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்கள் எனும் புனிதர்களும் அவனைப் பார்த்ததில்லை. ஆதிதூதர் முதல் இறுதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை எவரும் அல்லாஹ்வை பார்த்ததில்லை. மனிதர்கள் மட்டுமல்ல எந்தவொரு படைப்பினமும் அவனைப் பார்த்ததில்லை. இன்னும் சொல்வதெனில், அவனைப் பார்க்கும் தன்மையில் யாருக்கும் கண்கள் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு திருமறையில் இருக்கும் சான்றை பார்ப்போம்.

 

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன் 6 : 102, 103)

 

ஒருவன் மட்டுமே படைப்பாளன். அவனைத் தவிர இருக்கும் அனைத்தும் படைப்பினங்கள். அந்த படைப்பினங்களை அல்லாஹ் பார்க்கிறானே தவிர அவை அவனை பார்ப்பதில்லை என்று மேற்காணும் வசனம் சொல்கிறது. அல்லாஹ்வுடன் வானவர்கள் உரையாடுவார்கள் என்று  இருக்கும் செய்திகளை வைத்துக் கொண்டு அவர்கள் அவனிடம் நேரடியாக பார்த்து பேசுவார்கள் என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. காரணம், அல்லாஹ்வைக் காணும் விதத்தில் எந்தவொரு படைப்பினும் படைக்கப்படவில்லை. இதில் வானவர்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

மலக்குகளைப் பார்க்கும் படைப்பினம்

மிகைத்தவன் தந்திருக்கும்  மகத்தான வேலைகளைச் செய்துமுடிப்பதற்காக மலக்குகள் நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள்; பல்வேறு காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை நம்மால் பார்க்க இயலாது.  ஆனால் சேவல்களுக்கு மட்டும் மலக்குகளை பார்க்கும் தன்மை கொடுக்கப்பட்டுள்ளது. இதை இறைத்தூதரின் இனிய போதனை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து  அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்  : புகாரி (3303)

நபி (ஸல்) அவர்கள், “படைப்பினங்கள்என்று பொதுவாக குறிப்பிடாமல். சேவல்என்று குறிப்பிட்டு சொல்லியிருப்பதன் மூலம் சேவல்கள் மட்டுமே மலக்குகளைப் பார்க்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதுபோல எல்லா வானவர்களும் சேவல்களுக்கு தெரிய மாட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. ஏனெனில் நம்மைச் சுற்றி வானவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று பல செய்திகள் இருக்கின்றன. அவ்வாறு சேவல்கள் மலக்குகள் அனைவரையும் பார்ப்பதாக இருந்தால் எல்லா நேரத்திலும் கூவிக்கொண்டேதான் இருக்க வேண்டும். இவ்வாறு நடைமுறையில் இல்லை. மேலும், “”நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றனஎன்று நபிகளார் சொல்வதிலிருந்து அருளைத் தரும் வானவர்களை மட்டுமே சேவல்கள் பார்க்கின்றன என்று நாம் விளங்கலாம்.

 

மலக்குமார்களின் உணவு என்ன?

பூமியில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் உணவருந்தும் தன்மையில் இருப்பதைப் பார்க்கும் நாம், ஒருவேளை வானவர்களும் அவ்வாறே படைக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரேயடியாக முடிவு செய்துவிடக் கூடாது. காரணம், நமக்கு வானவர்களை பார்க்கும் தன்மை கொடுக்கப்படவில்லை. ஆகையால், இது சம்பந்தமாக புனித குர்ஆனின் வரிகளை புரட்டிப்பார்க்கும் போது, வானவர்களுக்கு பசி, தாகம் போன்ற எந்தவொரு பலவீனங்களும் இயற்கை தேவைகளும் இல்லை. அவர்கள் உணவை உட்கொண்டுதான் உயிர்வாழவேண்டும் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை அழகிய முறையில் அறிந்து கொள்ளலாம்.

 

 

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். “”பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப் பட்டுள்ளோம்என்று அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன் 11 : 69 முதல் 73)

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்றொரு நபியான லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தாரில் இருக்கும் இறைமறுப்பாளர்களுக்கு வரவிருக்கும் வேதனையை,  அழிவைப் பற்றி எச்சரிப்பதற்காக வானவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவ்வாறு வந்த வானவர்கள் தாங்கள் செல்லும் வழியில் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து அவருக்குக் கிடைக்கவிருக்கும் குழந்தை செல்வம் எனும் நற்செய்தியை தெரிவிக்க செல்கிறார்கள். அப்போது நடந்த சம்பவத்தைதான் மேற்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன.  இந்த வசனங்களின் துணையால் வானவர்களின் தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டுவந்த காளைக் கன்றின் இறைச்சியை மலக்குமார்கள் சாப்பிடுவதற்கு நெருக்கவில்லை என்பதன் மூலம் அவர்கள் பசி என்ற பலவீனத்திற்கு, உணவருந்த வேண்டும் என்ற தேவைக்கு எதிரானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.; 

 

மலக்குகளின் பயணம் வேகம்

படைப்பாளனான அல்லாஹ், தமது படைப்பினங்களுக்கு மத்தியிலே பல்வேறான வேறுபாடுகளை வைத்துள்ளான். ஆதலால், அனைத்தும் உயிரினங்களும் தோற்றம், தேவைகள் போன்ற விஷயங்களில் வேறுபட்டு விளங்குவதைப் போன்று, பயணிக்கும் விஷயத்திலும் வேறுபாடுகளை கொண்டுள்ளன. பகுத்தறிவுள்ள மனிதர்களின் பயணத்திற்கும் பகுத்தறிவற்ற பறவைகளின் பயணத்திற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா? இவ்வாறு ஒவ்வொரு வாழ்வினங்களின் பயணத்திற்கும் இடையே மாற்றங்கள் வேறுபாடுகள் இருப்பது போல மலக்குமார்களின் பயணத்திற்கும் நமது பயணத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் காலத்தில் கடந்து செல்லும் நெடுந்தொலைவினை அவர்கள் ஒரு நாளிலேயே கடந்து சென்றுவிடுவார்கள். இதற்குக் கீழ்க்காணும் வசனம் சான்றாக இருக்கிறது.  

வானவர்களும் ஜிப்ரீலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான (பயண வேகத்திலே) ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.

(திருக்குர்ஆன் 70 : 4)

 

மேற்கண்ட வசனம், வானவர்களின் பயண வேகத்தில் ஒரு நாள் தொலைவு என்பது நாம் கணக்கிடும் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு பயணிக்கும் தொலைவுக்கு நிகரானது என கூறுகிறது. இதை சென்ற நூற்றாண்டு முன்னால் வாழ்ந்தவர்களால் விளங்கிக் கொள்ள இயலாது. நாட்கள் என்பது ஒருபோது மாறாது என்றே அவர்கள் நம்பினார்கள். ஆனால், ஒரு நாள் என்பது பயண வேகத்தைப் பொறுத்து வேறுபடும் என்பதை 1905 ஆம் ஆண்டு ஐன்ஸ்டடீன் என்ற அறிவியல் அறிஞர் கண்டறிந்தார். இது ரிலேட்டிவிட்டி என்ற சார்பியல் கோட்பாடு எனப்படுகிறது. உதாரணமாக, இநத பூமியில் இருந்து ஒருவர் ஒளியின் வேகத்தில் விண்ணை நோக்கி பயணம் செய்கிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் (3,00,000) கி.மீ. இந்த பயணவேகத்தில் சென்று ஐம்பது ஆண்டுகளில் செய்கிற காரியங்களை செய்துவிட்டு பூமிக்கு திரும்பி வந்தால் இங்கு சிறிது நேரமே கழிந்திருக்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்வெளி பயணம் சென்று பல வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை ஒரே இரவில் நிறைவேற்றிவிட்டு பூமிக்கு வந்தார்கள். இவ்வாறு சார்பியல் கோட்பாட்டை எழுதப்படிக்காத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளார்கள் என்பதன் மூலம் குர்ஆன் இறைவனின் கூற்றாகதான் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

சிறந்த தம்பதிகள்

யாசர் அரஃபாத், மங்களம்லிதிருப்பூர்

       பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிரிகரித்துக்  கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது  அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாககும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறது. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத் குடும்பங்களிலும் பெருகிய வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன்  சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படை காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.

அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்க்கேற்ப   தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்)பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஆம், இருக்கிறது என்று கூறி விட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டி விட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். உணவுடனா அனுப்பியுள்ளார்? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி லிஸல்லி அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரி டம்), உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி லிஸல்லி அவர்களை முன்சென்று வர வேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முட னிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, உம்மு சுலைமே! உன்னிடமிருப் பதைக் கொண்டு வா! என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ் வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளி யேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

நூல் :புகாரி (3578)

இறைத்தூதர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை கண்ட இந்த தம்பதிகள் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்களுக்காக இருவரும் இணைந்து செய்த தொண்டை இந்த சம்பவத்தில் காணமுடிகிறது.

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் உம்மு சுலைம் (ரலி):

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்க வில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப் பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப் பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனா வுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங் களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

நூல்: புகாரி (2630)

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் அபூ தல்ஹா (ரலி):

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்லிரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங் களில் “”பைரஹாஎனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். “”நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “”அல்லாஹ் தனது வேதத்தில் “”நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது “”பைரஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்என்று சொன்னார்கள். எனவே, அதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (1821)

போர்க்களத்தில் அபூ தல்ஹா (ரலி) அவர்களும் உம்மு சுலைம் (ரலி) அவர்களும்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (த் தனியே) விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல் வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்பு களில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகைள நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல் :புகாரி (3811)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), “”அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம் முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக் கிறார்என்று கூறினார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “”இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற் காகத்தான் அதை வைத்துள்ளேன்என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “”அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றி யின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட் டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்  3697

இந்த தம்பதிகளைப் போன்று நாமும் மறுமை வெற்றியை கவனத்தில் கொண்டு செயல்பட்டு உலக விஷயங்களில் விட்டுக் கொடுத்து பிணக்களை களைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுத்துவோம்.

 


10.04.2012. 08:23

மார்ச் தீன்குலப் பெண்மணி 2012

தலையங்கம்

ஜெயா ஆரசை தாக்கும் மின்சாரம்

இந்தியாவில் அதிக நேரம் மின்வெட்டு செய்யப்படும் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது.
இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டு வர காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்தில் இதற்கு முன்னர் மின் தேவை எவ்வளவு இருந்தது என்பதை கவனித்துப் பாருங்கள்:

1951 லி 1956 லிலி 172 மெகாவாட்
1956 லி 1961 லிலி 301 மெகாவாட்
1961 லி 1969 லிலி 1370 மெகாவாட்
1969 லி 1974 லிலி 1470 மெகாவாட்
1974 லி 1978 லிலி 2254 மெகாவாட்
1978 லி 1980 லிலி 2424 மெகாவாட்
1980 லி 1985 லிலி 2719 மெகாவாட்
1985 லி 1990 லிலி 3344 மெகாவாட்
1990 லி 1991 லிலி 5470 மெகாவாட்
1991 லி 1997 லிலி 6019 மெகாவாட்
1997 லி 2002 லிலி 7924 மெகாவாட்

2002 லி 2007 லிலி 10098 மெகாவாட் என பெருகிக்கொண்டே செல்கிறது.

இப்பட்டியல் 80 களுக்குப் பிறகிலிருந்து, 2000 த்துக்குப் பிறகும் தமிழகத்தின் மின்தேவை பெருமளவு அதிகரித்து, 1990 லி 2010 காலக்கட்டத்தில் 100 சதவீதம் மின்தேவை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.
1997 ஆம் ஆண்டே 2010 வாக்கில் 19579 மெகாவாட் மின்சாரத் தேவை ஏற்படுமென மின்வாரியம் அறிக்கை அளித்தது. ஆனால் அதன்படி மின்உற்பத்தி செய்வதற்குரிய எந்த வழியையும் அரசு செய்யவில்லை.

1957 முதல் 1990 வரையிலும் மின்வளர்ச்சி சீராக இருந்தது. தமிழகம் உபரி மின்சக்தியைக் கொண்டிருக்கும் மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் அதற்கு பிறகு மின் தேவை கடுமையாக அதிகரித்தது. அதை ஈடுகட்டும் வண்ணம் எந்த அரசும் முயற்சி செய்யவில்லை.

மேலும் 1991 இல் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுக்கத் துவங்கின. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தன. இவர்களுக்கு தாராள மின்சாரம் வழங்கி மகிழ்வித்தது தமிழக அரசு. மேலும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தின் மின்தேவை, உற்பத்தி, செலவு, அதன் முழுவிவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
வருடந்தோறும் சுமார் 8 சதவிகிதம் மின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயருதல், குளிர்சாதனங்கள் உள்ளிட்ட மின்உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்தல் ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இதனால் அதிக மின் தேவை ஏற்பட்டும் அதை நிர்வத்தி செய்ய எந்த அரசும் கூடுதல் மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்காததே இப்போது இவ்வளவு பெரிய மின்வெட்டு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

நம் வசம் உள்ள அனல் மற்றும் புனல் (நீர்) மின்நிலையங்கள் மிக பழைமையானவை. எனவே, பல நேரங்களில் அவை படுத்து உறங்கின்றனர்.

இந்த பழைய மின் நிலையங்களுக்கு நவீன கருவிகள் வாங்கி உற்பத்தி செய்தால் மின் இழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம். ஆனால் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு முயன்ற ஆளும் கட்சிகள் மக்கள் பிரச்சினை தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு முந்தைய திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டதும் ஒரு காரணம். தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா கூட, திமுக ஆட்சி மக்களை மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்க செய்துவிட்டது. இந்த ஆட்சி தேவையா? என்று கேள்வியை எழுப்பித்தான் ஆட்சிக்கு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் மின்வெட்டைப் போக்குவேன் என்று வாக்கு கொடுத்தார். ஆனால் இன்னும் மூன்று மாதம் வரவில்லை போலும்.

போன ஆட்சியிலாவது இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது இரண்டு மணிநேரம்தான் மின்சாரமே இருக்கிறது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. மின்வெட்டை குறைக்க முடியாவிட்டாலும் கூட, பழைய நிலையே நீடிக்கக் கூட முயற்சி செய்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் மின்வெட்டின் நேரம் அதிகரித்துக் கொண்டே போவது பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பகலில் மட்டும் இருந்த மின்வெட்டு, இரவிலும் ஏற்பட்டு, தற்போது நள்ளிலிரவிலும் தொடர்கிறது. எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்று தெரியாத அளவுக்கு மின்வெட்டின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.

இதில் ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள். அதிமுக அரசுக்கு பெருவாரியான வாக்குகளைப் பெற்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்ற மாவட்டமான கோவையில்தான் இன்று அரசுக்கு எதிராக போராட்டத்தை கடுமையாக்கியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சி தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. போராட்டங்கள் தொடர்ந்தால் மிகப்பெரிய விலை அதிமுக அரசு கொடுக்க வேண்டிய நிலை வரும் என்பதை கவனத்தில் கொண்டு முதல் வேலையாக இந்த மின்வெட்டுக்கு நிரந்த விடை கொடுக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணம்.

 
கடும் கோபம் கொள்ளும் மலக்குகள்
 
தொடர் : 3 எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்.

மலக்குகள் சிந்திப்பார்களா?

மலக்குகளைப் பற்றி சமுதாயத்தில் பரவியிருக்கும் தவறான கருத்துகளில் ஒன்று, அவர்கள் இயந்திரமனிதனைப் (ரோபோவை) போன்றவர்கள்; சுயமாக சிந்திக்கும் திறன் பெறாதவர்கள் என்பதாகும். வானவர்கள்

அல்லாஹ்வின் கட்டளைக்கு அணுஅளவும் மாறுசெய்யவே மாட்டார்கள் என்பது உண்மைதான். அதற்காக, அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்ததை தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் பேசவும் சிந்திக்கவும் மாட்டார்கள்; எதையும் சுயமாக செய்யவும் விளங்கிக் கொள்ளவும் மாட்டார்கள் என்று தவறுதலாக நினைத்துவிடக்கூடாது. காரணம் வானவர்களோ அறிவாற்றல் கொடுக்கப்பட்டவர்கள்; அடுத்தவரின் சொல்லை புரிந்து கொள்பவர்கள்; பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவர்கள். அதன்படி, ஏன்? எதற்கு? என்று எதைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. அவற்றைக் காண்போம்.

"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான். "நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 2 : 30, 32)

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
(திருக்குர்ஆன் 11 : 69 லி 73)

"பூமியில் ஒரு புதிய தலைமுறையை படைக்க இருப்பதாக அல்லாஹ் வானவர்களிடம் கூறிய போது, அதை செவியேற்ற மலக்குகள்
அல்லாஹ்விடம் பதில் கேள்வி கேட்டதிலிருந்து பிறர் சொல்லும் சொற்களை சுயமாக புரிந்து கொள்ளும் தன்மை அவர்களுக்கு இருப்பதை விளங்கிக் கொள்ளலாம். மேலும் தாம் கொண்டு வந்த உணவை மனித வடிவில் இருக்கும் வானவர்கள் சாப்பிடாததைக் கண்டு இப்ராஹீம் (அலை)
அவர்கள் அச்சப்பட்ட போது அவரை ஆறுதல்படுத்தும் விதமாக வானவர்கள் பேசியதிலிருந்து தாங்கள் பார்க்கும் விஷயத்தை பற்றி சுயமாக புரிந்து கொள்ளும் இயல்பு அவர்களுக்கு இருப்பதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதற்குச் சான்றாக இருக்கும் ஹதீஸ்களை இனி பார்ப்போம்.
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது,

அவர்கüடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்கüல் ஒருவர் "இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் "கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் "உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது அவர்கüல் ஒருவர் "இவர் உறங்குகிறாரே!'' என்றார். மற்றொ ருவர் "கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் "இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாüயின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார்.

அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், "இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்'' என்றார்கள்.

அப்போது அவர்கüல் ஒருவர் "இவர் உறங்குகிறாரே!'' என்று சொல்ல, மற்றொருவர் "கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார்.

அதைத் தொடர்ந்து "அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாü முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத் (ஸல்)

அவர்கள் மக்களை (நல்லவர், கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்'' என்று விளக்கமüத்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
ஆதாரம் : புஹாரி (7281)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (கüமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்கüன் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, "நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகüன் முகமனும் ஆகும்'' என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்கüடம் சென்று), "அஸ்ஸலாமு அலைக்கும் லி உங்கள் மீது சாந்தி பொழியட்டும்'' என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், "உங்கள் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்'' என்று பதில் கூறினார்கள். "இறைவனின் கருணையும் (உங்கள் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்கüன் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்கüன் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன.

அறிவிப்பவர்கள் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி 3326

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது "சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ'' எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சம்மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ரிஃபாஆ பின் ராஃபிஉ (ரலி), ஆதாரம் : புஹாரி (799)

"இவர் உறங்குகிறாரே!'' என்று மலக்குகளில் ஒருவர் கேள்வி கேட்க மற்றொருவர் "கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்று பதிலளிக்கிறார். மற்றொரு செய்தி, ஆதம் (அலை) அவர்கள் சொல்லும் ஸலாமின் அர்த்தத்தை விளங்கிய வானவர்கள் அதற்கு அழகிய முறையில் பதில் சொல்கிறார்கள். இதன் மூலம், ஏன்? என்று காரணம் கேட்கும் தன்மையும் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிக்கும் தன்மையும் மலக்குகளுக்கு இருப்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடுத்து, தொழுகையாளி ஒருவர் செய்த துஆவை எடுத்து செல்ல தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள் என்ற செய்தியின் வாயிலாக அவர்கள் அல்லாஹ்வால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்வதோடு, நன்மையான காரியங்களையும் செய்வார்கள் என்பதை விளங்கலாம்.

கடுங்குணம் கொண்ட மலக்குகள்

மலக்குள் என்று சொன்னாலேய அவர்கள் அனைவரும் மென்மையாக நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர்.

இது தவறாகும். மனிதர்களில் மென்ûமானவர்கள், கடுமையானவர்கள் இருப்பது போல மலக்குகளிலும் இருவகை தன்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள். நரகத்தில பணிபுரிதல், தண்டனையை கொண்டுவருதல், குற்றவாளிகளின் உயிரைக் கைப்பற்றுதல், மண்ணறையில் குற்றவாளிகளை விசாரித்தல் போன்ற பணிகளில் இருக்கும் மலக்குகள் தங்களது பணிக்குத் தோதுவாக கொடூரமான, கடினமான குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?
(அல்குர்ஆன் 47 : 27)

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! (திருக்குர்ஆன் 8 : 50)

ஓர் அடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவருடைய தோழர்கள், திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களது செருப்பின் ஓசையைச் செவியேற்பார். அப்போது இரு மலக்குகள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, " இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக்கொண்டிருக்கிறாய்?'' என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவர் மூமினாயிருந்தால் "இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகிறேன்"'' எனக் கூறுவான். அவரிடம் "(நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உனது இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்'' எனக் கூறப்படும். இரண்டையும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார்லி அவருக்கு அடக்கக்குழி (கப்ரு) விசாலமாக்கப்படும்’என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் "இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?"'' என அவனிடம் கேட்கப்படும்போது "எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்ரிக்கொண்டிருந்ததையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்'' என விடையளிப்பான். உடனே "நீ அறிந்திருக்கவுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை'' என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக (வானவர் மூலம்) அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம் ; புகாரி (1338), (1374)

வெட்கப்படும் மலக்குகள்

மனிதர்களுக்கு இருக்கும் சில தன்மைகள் மலக்குகளுக்கும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று, வெட்கம். அடுத்தவர்களிடம் அந்தரங்கமான விஷயங்களைப் பேசுவதற்கும், பிறரின் அந்தரங்கத்தை அறிந்து கொள்வதற்கும் மனிதர்கள் வெட்கப்படுவது போலவே மலக்குகளும் வெட்கம் கொள்கிறார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் தமது "தொடைகளிலிருந்து' அல்லது "கணுக்கால்களிலிருந்து' (சற்று துணி) விலகியிருந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.

அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனு மதி கேட்டார்கள். அப்படியே படுத்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள்.

அவர்கள் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் உள்ளே வர அனுமதியளித்தார்கள். அப்போதும் அதே நிலையிலேயே (படுத்துக்கொண்டு) இருந்தார்கள். உமர் அவர்களும் (வந்து) பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து) உட்கார்ந்து தமது ஆடையை ஒழுங்குபடுத்தினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் புறப் பட்டுச் சென்றதும் நான், "அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது
அவருக்காக நீங்கள் அசைய வில்லை; அவர்களைப் பொருட்படுத்தவில்லை. (சகஜமாகவே இருந்தீர்கள்.) பிறகு உமர் அவர்கள் உள்ளே வந்தார்கள்.

அப்போதும் நீங்கள் அவர்களுக்காக அசையவில்லை; பொருட்படுத்தவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது (மட்டும்) நீங்கள் (எழுந்து) உட்கார்ந்து உங்கள் ஆடையைச் சரி செய்து கொண்டீர்கள். (ஏன் அவ்வாறு செய்தீர்கள்?)'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரைக் கண்டு வானவர்கள் வெட்கம் கொள்கிறார்களோ அவரைக் கண்டு நான் வெட்கம் கொள்ள வேண்டாமா!'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : முஸ்லிம் (4772)

நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கி விட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள். உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக் கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் "அல்பகீஉ' பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்;
அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக் கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து "ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?'' என்று கேட்டார்கள். நான் "ஒன்றுமில்லை' என்றேன். அதற்கு அவர்கள் "ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்து விடுவான்'' என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு
அர்ப்பணமாகட்டும்!'' என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் "ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வேர்த்தது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்து விடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது
அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். லி(பொதுவாக) நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்லி (எனவே தான், மறைவாக நின்று அவர் என்னை அழைத்தார்.) நான் நீ உறங்கிவிட்டதாக நினைத்தேன். உன்னை எழுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. நீ தனிமையில் இருப்பதை நினைத்து பயந்துவிடுவாய் என்று நான் அஞ்சினேன். (எனவே, உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை.) அப்போது ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்' என்று கூறினார்'' என்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : முஸ்லிம் (1774)
 
வெட்கம்ஆனுமதியும் தடையும்
 
ஜே. முஹம்மத் தாஹா, பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது, இறைவனுக்கு செய்யும் விஷயத்தில் தவறிழைத்துவிட்டால் இறைவனிடத்தில் தம் தவறுகளை தனிமையில் அமர்ந்து வெட்கப்படாமல் சொல்லி மனமுருகி மன்னிப்புத் தேடுவது கூடும். சமுதாயத் தலைவர்களாகவோ அல்லது அரசியல் தலைவர்களாகவோ அல்லது பிரமுகர்களாகவோ அல்லது இயக்கமோ அல்லது பொதுவாழ்வில் ஈடுபடுகிற எதுவோ, எவருமோ செய்த தவறை, மக்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது பயந்துகொண்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ மறைப்பது எந்த விதத்திலும் கூடாது.

நமது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமான பாபரி மஸ்ஜிதை இந்துத்துவ பாசிச வெறியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி இந்தியாவின் இறையாண்மையையும் கட்டுக்கோப்பையும் தகர்த்தெறிந்தனர். அப்போதிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர், நரசிம்மராவ் சிறுபான்மை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதை யாரும் மறந்திருக்கமாட்டோம். மன்னிப்பு மட்டும் கேட்காமல் இடித்த இடத்திலேயே கட்டித் தருவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை நிறைவேற்றவே இல்லை. இருந்தாலும் வெட்கப்படாமல் அல்லது ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்காவது மன்னிப்புக் கேட்டதை தலைப்புக்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், பாபரி மஸ்ஜிதை இடித்த இந்துத்துவ வெறியர்களோ அதன் தலைவர்களோ தார்மீக பொறுப்பேற்று நம்மிடம் செய்த தவறை ஒத்துக்கொண்டு வெட்கப்படாமல் மன்னிப்புக் கேட்டு தவறை ஒத்துக் கொண்டதற்கு அடையாளமாக அதே இடத்தில் பள்ளிவாசலையும் கட்டிக் கொடுத்திருந்தால் அறுபது வருடமாக இருசமூக மக்களிடையே இந்தப் பிரச்சினை இருந்திருக்காது. மேலும் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் இழுக்கு ஏறப்பட்டிருக்காது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அதேபோன்று நம்நாட்டின் அரசியல்வாதிகளும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் செய்த தவறை வெட்கப்படாமல் ஒத்துக் கொண்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலேயே நாட்டில் நடக்கிற சாதிய,மதக் கலவரங்களில் தொண்ணுறு விழுக்காடு பிரச்சினை தீர்ந்துவிடும்.

அதேபோன்று குடும்பத்திலோ இயக்கத்திலோ ஏதேனும் நிர்வாகத்திலோ தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் வெட்கப்படாமல் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால், இன்று இந்தியாவின் வழக்காடு மன்றங்களில் இருக்கிற குடும்பப் பஞ்சாயத்துகள் இன்றே தீர்ந்துவிடும். அதுபோன்றே எந்த நிர்வாகமும் சீராக இயங்குவதற்கு இந்தப் பண்பு மிகவும் அவசியமான ஒன்றுதான் என்பதை அறிவுடைய யாரும் மறுக்கமாட்டார்கள்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 3:135)

மேலும் இதுபோன்று வெளிப்படையாக ஒரு பிரமுகர் செய்த தவறுக்காக அவர் வெளிப்படையாகவே வெட்கமில்லாமல் மன்னிப்புக் கேட்பதினால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருப்பதற்கு இப்பண்பு கேடயமாக அமைந்து விடுகிறது.

பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் இதற்கு சரியான தீர்வைத் தருவதாகவும் நமது ஜமாஅத்தினருக்கு இது மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது.

இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பற்றி ஆராய்ந்து சரியான முடிவைச் சொல்பவர்களுக்கு இரண்டு கூலி இருக்கிறது. தவறாகச் சொன்னாலும்கூட ஒருகூலி இருக்கத்தான் செய்கிறது. தண்டனை எதுவும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே தவறாகச் சொன்னால் அது இறையச்சத்திற்கு உகந்ததில்லை. மேலும் மறுமையில் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவதாகவும் இருக்கும்.

நமது ஆய்வில் சில தவறுகள் ஆங்காங்கே ஏற்படுவதுண்டு. நபிகள் நாயகத்திற்குப் பிறகு அவர்களைத் தவிர இப்படி தவறே ஏற்படாத எந்த மனிதனும் உலகில் இல்லவே இல்லை. அதனால்தான் இமாம்களில்கூட பழைய சொல், புதிய சொல் போன்ற மார்க்கத் தீர்ப்பெல்லாம் நிகழ்ந்துள்ளது.

எனவே இவ்வளவு நாள் ஏன் தவறாகச் சொன்னீர்கள் என்ற கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்விற்கு பயந்து ஆராய்ச்சியின் முடிவு எப்படி இருக்கிறதோ அதை மக்களுக்குப் பயப்படாமல் நமது சுயகவுரவத்தைப் பார்க்காமல் அதாவது வெட்கப்படாமல் சரியானதை சரியென்றும் தவறானதை தவறு என்றும் மாற்றி திருத்திக் கொள்வதே இறையச்சத்திற்கு நெருக்கமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்பது இறைவனது மார்க்கம். இதில் தவறுதலாக விளங்கிவிடுவது நமது குறை என்பதை கட்டாயம் வெட்கமில்லாமல் ஒத்துக் கொள்வதே இஸ்லாத்தில் தூய்மை பேணுவதாக அமையும்.
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம்

அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:159,160)

தாம் செய்த தவறை ஒத்துக் கொண்ட நபித்தோழர்கள்

ஒரு முறை அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தவறிழைத்ததாக எண்ணியதால் உமர் (ரலி) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்கüடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெüயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி லிஸல்லி அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்க üடம் வந்தேன்'' என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் லிரலி அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்கüன் வீட்டிற்குச் சென்று, "அங்கே அபூபக்ர் (ரலி)அவர்கள் இருக்கி றார்களா?'' என்று கேட்க வீட்டார், "இல்லை'' என்று பதிலüத்தார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்கüடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்கüன் மீது மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன்.'' என்று இருமுறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "(மக்களே!) அல்லாஹ் என்னை உங்கüடம் அனுப்பினான். "பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, "நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?'' என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் :புகாரி (3661)

வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு வெட்கப்படக்கூடாது

ஒருவர் தனது திறமையைக் காட்ட வேண்டிய அல்லது தன்னை நிரூபிக்க வேண்டிய தருணத்தை வாய்ப்பைப் பயன்படுத்தாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வாய்ப்பு நம்மைத் தேடிவரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியும். எனவே வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு முஃமினுக்கு வெட்கம் தடைக்கல்லாக இருக்கவே கூடாது என்பதை ஆழமாக நம்பி செயல்படவேண்டும்.

நபிகள் நாயகம் காலத்தில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தும் ஒரு நபித்தோழர் வெட்கத்தினால் தவற விட்டதற்கான ஆதாரங்களையும், அதே நேரத்தில் கிடைத்த அல்லது கிடைக்க இருக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மற்றவர்களிடம் நற்சான்று வாங்கிய சஹாபிகளும் இருக்கி றார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் நம்மால் காணமுடிகிறது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் "அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்க, "அது பேரீச்ச மரம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை "நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: புகாரி 131,4698,6144 முஸ்லிம் 5415,5416

அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாலிரிக் அல்லைஸீலிரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?

அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

அறிவிப்பவர்: அபூவாக்கித் (ரலி), நூல்: புகாரி 66,473,474, முஸ்லிம் 4389

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமüத்து வந்தார்கள். ஆகவே, அவர்கüல் சிலர், "எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்கüல் ஒருவர்'' என்று பதிலüத்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும்
அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.

(அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்கüடம்) உமர் (ரலி) அவர்கள், "இதா ஜாஅ நஸ்ருல்லாஹி..... (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110லிவது "அந்நஸ்ர்')
அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, "இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அவர்கüல் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும் அüக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், "எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்கüல் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், "இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை'' என்றேன். அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், "அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கüன் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள "வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பüப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 4264

கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது

பொதுவாகவே எந்த ஒன்றையும் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படுகிற ஒருவனால் ஒருக்காலும் முன்னேறவே முடியாது.
அதேபோன்று எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று எண்ணுபவன் ஒருக்காலும் முன்னேறவே முடியாது. நம்மில் பலர் சிறுவயதில் குர்ஆனை நன்றாக அரபியில் ஓதக் கற்றிருப்பார்கள். நாளடைவில் அறவே ஓதத் தெரியாதளவிற்கு மறந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் நம்மை யாரும் குர்ஆனைக்கூட ஓதத் தெரியாதவராக இருக்கிறார் என்று தவறாக நினைப்பாரோ என்றெண்ணி வெட்கத்தினால் மீண்டும் ஓதுவதற்கு வெட்கப்படுவார்கள். இவர்களால் ஒருக்காலும் குர்ஆனை ஓதவோ அல்லது மனனம் செய்யவோ முடியாது.

எனவே கல்வியைக் கற்பதற்கு, பிறர் நம்மைத் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்றெண்ணி வெட்கப்படாமல், கற்றால் கண்டிப்பாக அவர் சமூகத்தினராலும் பாராட்டுக்குரியவர். மறுமைப்பேறையும் பெற்றிடுவார் என்பதில் ஐயமில்லை எனவே கற்பதற்கு வெட்கப்படக்கூடாது.

இதற்கு ஆதாரமாக மேற்சொன்ன மூவர்களின் சம்பவமே சரியான சான்றாக அமையும். மேலும் சத்தியத்தை சொல்ல வெட்கம் கூடாது என்கிற தலைப்பிலுள்ள உம்முசுலைம் நபியவர்களிடம் குளிப்புக்கடமை பெண்களுக்கும் ஏற்படுமா? என்று கேள்வி கேட்ட செய்தியையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரிலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், "அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்' என்று லி பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் லி சொன்னேன்.

மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், "தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!'' என்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 552

மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள அறவே வெட்கப்படக் கூடாது

பொதுவான கல்வியைக் காட்டிலும் இம்மை வாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும் மார்க்கக் கல்வியைப் படிப்பதிலும் மார்க்க அறிவைக் கற்பதிலும் பெறுவதிலும் அறவே நம்மிடம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூச்சமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் ரசூலும் மனிதனால் பின்பற்ற முடிந்ததையும் மனிதன் பிறமனிதனுக்கு எடுத்துச் சொல்லத் தகுந்த செய்தியையுமே சொல்லுவார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயத்தில், மார்க்கம் என்ற பெயரில் தனிமனிதக் கருத்துக்களை சொல்வதில் பரிமாறிக் கொள்வதில் இந்தச் சான்றைக் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு மார்க்கம் என்ற பெயரில் குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத மத்ஹபு சட்டங்களையும் அதில் இருக்கும் ஆபாசக் கூற்றுக்களையும் சொல்வதற்கு வேண்டுமானால் வெட்கப்படாலாமே தவிர குர்ஆனையும் நபிவழியையும் சொல்வதற்கு வெட்கப்படத்தேவையில்லை என்பதை உணர வேண்டும். இந்த ஆதாரத்தை சத்தியத்தைச் சொல்ல வெட்கப்படத் தேவையில்லை என்ற தலைப்பிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களிலும்

அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா, அல்லது விந்து வெளிப்பட்டால்தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர். அன்சாரிகள், " "விந்து வெளியானால்தான்' அல்லது "துள்ளல் இருந்தால்தான்' குளியல் கடமையாகும்'' என்று கூறினர். முஹாஜிர்கள், "இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!)'' என்று கூறினர்.
உடனே நான், "இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன்'' என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், " "அன்னையே!' அல்லது "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே!' நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது'' என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம்'' என்றார்கள். நான், "குளியல் எதனால் கடமையாகும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: முஸ்லிம் 579

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா' என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்), நூல்: முஸ்லிம் 580

எனவே மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களை வெட்கப்பட்டு விட்டுவிடாமல் தகுதியுடையவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தும் முக்கிய விஷயமாகும்.
 
 
ஊள்ளும் புறமும் தூய்மையாக

 
தொடர் : 5 எம்.எஸ்.ஜீனத் நிஸா, மேலப்பாளையம்

வெளிப்படையான அந்தரங்கமான வாழ்க்கையில் தூய்மை

நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு') மற்றும் தீமை ("அல்இஸ்மு') பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்'' என்று விடையளித்தார்கள்.

முஸ்லிம் 4992

ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள். முஸ்லிம் 5973

அனைவருக்கும் நலம் நாடுதலில் தூய்மை

நாம் நன்றாக இருக்கு வேண்டும் என்று எண்ணுவதைப் போல் மற்றவர்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதில் தூய்மையுடன் இருக்க வேண்டும்.

தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே "நலம் நாடுவது'தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் 95

இறைவனுக்கு நலம் நாடுவது என்றால் இறைவனை நம்புதல் அவனுக்கு இணைகற்பிக்காமல் இருத்தல் அவனுக்குரிய மகத்தான தன்மைகளை ஏற்று எந்த குறைபாடுகளும் அற்றவன் என நம்புதல் அவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்ட்டு நன்மைகள் புரிந்து தீமைகளைப் புறக்கணித்தல், இறைவனுக்காக நேசித்தல் இறைவனுக்காக கோபித்தல், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துதல், அவனுடைய படைப்புகளிடம் அன்புகாட்டுதல் போன்றவைகளாகும். இறைவேதத்திற்கு நலம் நாடுதல் என்றால் அதை இறைவேதம் என்று நம்பிக்கை கொள்வதுடன் அதிலுள்ள படி நடப்பதும் அதை படித்து விளங்கி மற்றவர்களுக்கும் பரப்புவதும் ஆகும். இறைத்தூதர்களுக்கு நலம் நாடுதல் என்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்பி அவர்களின் போதனைகளின் படி நடப்பதைக் குறிக்கும். மேலும் அவர்களுடைய போதனைகளைப் பரப்புவதும் ஆகும். முஸ்லிம்களின் தலைவர்களுக்கு நலம் நாடுவது என்றால் அவர்கள் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும் அவர்கள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிகாட்டி அவர்களைத் திருத்த முயல்வதும் ஆகும். பொதுமக்களுக்கு நலம் நாடுதல் என்றால் அவர்களின் இம்மை மறுமை நலன்களுக்கு வழிகாட்டுதல், நன்மை புரிதல், தொல்லைகளை
அகற்றுதல், துயர் துடைத்தல், குறைகளை மறைத்தல், அன்பு காட்டுதல், பெரியவர்களை மதித்தல், சிறியவர்களிடம் இரக்கம் காட்டுதல், உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்தல், நல்லுபதேசம் செய்தல் மற்றும் நற்பணிகள் புரிய ஊக்குவித்தல் போன்றவைகளாகும்.

மனைவியிடத்தில தூய்மையாக

திருமண பந்தத்தை வாழ்க்கை ஒப்பந்தமாக இஸ்லாம் கூறுகின்றது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? அல்குர்ஆன் 4 :21

இருவரும் இரண்டறக் கலந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் தன் எதிர்காலத்தை ஒரு ஆணிடம் ஒரு பெண் ஒப்படைக்கின்றாள். இந்த சமயத்தில் அந்த ஆண் அந்த பெண்ணுடைய இளமைப்பருவத்தை ஒரு குறிப்பிட்ட காலம் அனுபவித்துவிட்டு பிறகு அவளை கைவிட்டுவிட்டு இன்னொருத்தியுடன் இஸ்லாம் விரும்பாத முறையில் உறவு வைத்துக்கொள் கின்றான். அந்த பெண்ணின் எதிர்காலமே இந்த ஒழுக்கங்கெட்ட செயல்பாட்டினால் இருண்டு விடுகின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக
அனுப்பப்பட்ட நபியவர்களின் ஒழுக்க வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதை ஒவ்வொரு கணவனும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெண்கüடம் "நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்கüடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அüத்தால் அவர்கüடம் உறுதிமொழி வாங்குங்கள்'' எனும் (60:12ஆவது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)

அவர்களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த்
தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
நூல் : புகாரி :7214

ஒரு பெண்ணின் கற்பின் மீது பழி சுமத்துவது அந்தப் பெண்ணின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அல்லாஹ் கூறுகிறான் :
குழப்பம், கொலையை விடக் கடுமையானது. அல்குர்ஆன் 2:191

மஸ்ரூக் அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கüன் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

நானும் ஆயிஷாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்கüடம், "இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும். இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும்'' என்று கூறியபடி வந்தாள். நான், "ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)'' என்று கேட்டேன். அதற்கு அவள், "(அவதூறுச்) செய்தியைப் பேசியவர்கüல் என் மகனும் ஒருவன்'' என்று பதிலüத்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், "என்ன அது?'' என்று கேட்டார்கள். அவள் இன்னின்னவாறு பேசப்படுகின்றது'' என்றாள். ஆயிஷா (ரலி) அவர்கள், "இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்களா?'' என்று கேட்டார்கள். அவள், "ஆம் (செவியுற்றார்கள்)'' என்று பதில் சொன்னாள். பிறகு, "(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் செவியுற்றார்களா?'' என்று ஆயிஷா கேட்டார்கள். இதற்கும் அவள், "ஆம்'' என்றாள். உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குüர் காய்ச்சலுடன் தான் மூர்ச்சை தெüந்து கண் விழித்தார்கள். நான் ஆயிஷாவின் மீது ஆடையொன்றைப் போர்த்தி மூடிவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, "இவளுக்கென்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். நான், " அல்லாஹ்வின் தூதரே! இவளைக் குüர் காய்ச்சல் பீடித்துள்ளது'' என்று பதிலüத்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒருவேளை இவளைப்பற்றிப் பேசப்பட்டு வரும் செய்தியின் காரணத்தால் (காய்ச்சல் ஏற்பட்டு) இருக்கலாம்'' என்று சொன்னார்கள். நான், "ஆம்'' என்றேன். உடனே ஆயிஷா (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் என்ன தான் (சமாதானம்) சொன்னாலும் நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை, (நபி) யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்கüன் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் லிஅலைலி அவர்கள் சொன்னது போன்றே)
"அல்லாஹ் தான் நீங்கள் (புனைந்து) கூறுபவற்றிற்கெதிராக உதவி கோரத் தகுதியானவன் ஆவான்''' என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு, ஆயிஷா நிரபராதி என (அறிவிக்கும் வசனத்தை) அல்லாஹ் அருüனான். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி லிஸல்லி அவர்கüடம் "(இதற்காக) அல்லாஹ்வையே நான் புகழ்கிறேன்; வேறெ"வரையும் புகழமாட்டேன்; உங்களையும் புகழமாட்டேன்'' என்று சொன்னார்கள்.
புகாரி :4143

மேலும் மார்க்கத்தில் 4 மனைவி வரை திருமணம் முடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு திருமணம் செய்தாலும் அவர்களுக்கு மத்தியில் நீதியாக சமமாக நடக்க வேண்டும் என்ற நிபந்தனையை இஸ்லாம் விதிக்கின்றது. இரண்டு பெண்களை திருமணம் முடித்தவர்கள் இரண்டாவது மனைவியின் பக்கம் சாய்வதை காண்கின்றோம். இதுவும் தவறாகும்.

அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. அல்குர்ஆன் 4:3

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டுவிடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:129

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, "நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?'' என்று எனது (முறைவரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியüத்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை எனது வீட்டிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் எந்த நாüல் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாüல் தான் என் வீட்டில் வைத்து இறப்பெய்தினார்கள். எனது நெஞ்சுக்கும் நுரையீரலுள்ள பகுதிக்கும் இடையே அவர்களது தலை இருந்தபோது, (மிஸ்வாக் குச்சியை என் வாயால் கடித்து மென்மைப்படுத்திக் கொடுத் திருந்ததால்) அவர்கüன் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

புகாரி 5217

நபியவர்கள் மரணத்தருவாயிலும் மற்ற மனைவிமார்களின் அனுமதியுடனே ஆயிஷா (ரலி) வீட்டில் தங்கினார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எவ்வளவு நீதியாக நடந்திருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது.

பெற்றோர்களிடத்தில் தூய்மையாக

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தான் தாய் ஆகிவிட்டோம் தந்தை ஆகிவிட்டோம் என்பதை விட அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம் வேறெதுமிருக்காது. இந்த சந்தோஷத்தை அடைவதற்காக அந்த பெண் மரணத்தின் எல்லைக்கே சென்று வருகின்றாள் என்றால் அது மிகையாது.
மர்யம் (அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் :

பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.

பிரசவவலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர்
கூறினார். அல்குர்ஆன் 19: 22,23

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு அல்குர்ஆன் 31 :14

இந்த பிரசவ வேதனையை விட கொடுமையான ஒன்றிருக்குமானால் அது அந்த குழந்தைகளின் மூலம் அந்த வயது முதிர்ந்த பெற்றோர் அனுபவிக்கின்ற துன்பமாகும். தன்னுடைய வயதான காலகட்டத்தில் தன் மகன் தன்னை பராமரிப்பான் காப்பாற்றுவான் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக
அவர்களை கைவிட்டு அட்ரஸ் இல்லாத அனாதைகளாக மாற்றக்கூடிய கல் நெஞ்சங்கள் பலர் உள்ளனர். இஸ்லாம் பெற்றோர்களுக்கு எவ்வளவு கண்ணியத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கின்றது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.

செலவிட தகுதியானவர்கள் :

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:215

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 17 :23 24

அன்புகாட்ட தகுதியானவர்கள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள்.

அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார் கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள். நூல் : புகாரி 5971

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவராவார். நூல் : புகாரி : 6768

பெற்றோரை புண்படுத்துவது பெரும்பாவம்

அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெரும்பாவங்கüலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்'' என்று சொல்-விட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)'' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் "அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?'' என்றேன். புகாரி 5976

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள்,"ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)''என்றார்கள். புகாரி 5973

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.
புகாரி : 5975
 
ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 9

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா?
 
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
 
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள் :

"சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்'' என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களைத் தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

அந்த ஹதீஸ்கள் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். "எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா'' என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். "இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?'' என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். "இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது'' என்று மற்றவர் விடையளித்தார். "இவருக்குச் சூனியம் செய்தவர் யார்'' என்று முதலாமவர் கேட்டார். "லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான்'' என்று இரண்டாமவர் கூறினார். "எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது'' என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் "சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது'' என்று விடையளித்தார். "எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது'' என்று முதலாமவர் கேட்டார். "தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது'' என்று இரண்டாமவர் கூறினார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். "அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 3268

தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

(புகாரி 5765)

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக முஸ்னத் அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிறது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது'' என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட இறை வேதம்

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது'' என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப் படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.

தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ லி இறை வேதம்லிசந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் "இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்'' என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.

எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் "இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ?'' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

"திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும்'' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். "இது இறைவேதமாக இருக்காது'' என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.

இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம்.

திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ, அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது.

"வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது'' என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.

இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.

ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.
செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.

"முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?'' என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அதை அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.

எனவே அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.

ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது "இவர் சூனியம் செய்கிறார்'' என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.

வேறு சில வேளைகளில் "இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும்'' என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.

பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
"நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்'' என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 26:153
"நீர் சூனியம் செய்யப்பட்டவர்'' என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 26:185

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம்.

அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
திருக்குர்ஆன் 17:101

மற்ற நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். திருக்குர்ஆன் 25:8

"நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்'' என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

"இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்கமாட்டான்.

இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான்.

சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

"இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா?'' என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர்.

அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது. திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது. திருக்குர்ஆன் 17:48

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்'' என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களின் நிலை என்ன? அவை ஆதாரப்பூர்வமானவை அல்லவா? புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா?

இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? என்று சிலருக்கு கேள்வி எழலாம்.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருப்பதாலும், இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கும் போது ஒட்டு மொத்தமாக ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். திருக்குர்ஆனை மறுக்க வேண்டிய நிலை வந்தாலும் கூட அதற்குக் காரணமாக அமைந்த ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ்களைப் பற்றிப் பேசுவதற்கு முன் "குர்ஆனும் நபிவழியும் மார்க்க ஆதாரங்கள்' என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவோம்.

ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!

திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது.

நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொருத்தவரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி "இது என் இறைவனிடமிருந்து வந்தது'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிக பட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர்தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.
எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது "இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது'' என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் முறையாகும்.

"ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது'' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்துவிடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பதுதான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும்.

இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.
 
நூறு ஷஹீத் நன்மை

தெரிந்த செய்திகள், தெரியாத உண்மைகள் தொடர் : 3

حدثنا عبد الله بن محمد بن مسلم حدثنا الحسن بن إبراهيم البياضي ثنا الحسن أبو علي المدائني ثنا عبد الخالق بن المنذر عن بن أبي نجيح عن مجاهد عن بن عباس رفعه قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مائة شهيد قال الشيخ وللحسن بن قتيبة هذا أحاديث غرائب حسان وأرجو انه لا بأس بهலி الكامل في ضعفاء الرجال லி (2 / 327)

என்னுடைய சமுதாயம் சீரழிந்திருக்கும் வேளையில் என்னுடைய வழிமுறையை பின்பற்றுபவனுக்கு நூறு ஷஹீத் (உயிர் தியாகியின்) நன்மை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அல்காமில் ஃபீ லுஅஃபாயிர்ரிஜால், பாகம் :2, பக்கம் :327)
இதே செய்தி இப்னு பஷ்ரான் அவர்களின் அல்அமாலீ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள அல்ஹஸன் பின் குதைபா என்பவர் பலவீனமானவராவார். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் விமர்சனங்களை காண்போம்.

الحسن بن قتيبة المدائني الخياط روى النظار بن سفيان عن ابيه وابى جعفر الرازي وابى قحذم النضر بن معبد والربيع بن صبيح روى عنه سنيد بن داود سمعت ابى يقول ذلك
وسمعته يقول: ليس بقوى الحديث، ضعيف الحديث.லி الجرح والتعديل லி (3 / 33)

இவர் ஹதீஸ் துறையில் பலம் வாய்ந்தவர் இல்லை, பலவீனமானவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் :3, பக்கம் :33)

قال الدارقطني في رواية البرقاني متروك الحديث وقال الأزدي واهي الحديث லி ميزان الاعتدال في نقد الرجال லி (2 / 270)

இமாம் தாரகுத்னீ அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் என்றும் அஸ்தீ அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள் ளனர். (நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 270)

الحسن بن قتيبة المدائني كثير الوهم லி ضعفاء العقيلي லி (1 / 241)

அதிகம் யூகமாக அறிவிப்பவர் என்று உகைலீ அவர்கள் கூறுகிறார்கள். (நூல் : லுஅஃபாவுல் உகைலீ, பாகம் : 1, பக்கம் : 241)

இந்த செய்தியை பதிவு செய்த இமாம் இப்னு அதீ அவர்கள் இவர் பரவாயில்லாதவர் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இதை இமாம் தஹபீ அவர்கள் மறுத்துள்ளார்கள்.

قال ابن عدي أرجو أنه لا بأس به قلت بل هو هالك லி ميزان الاعتدال في نقد الرجال லி (2 / 270)

இப்னு அதீ அவர்கள் இவர் பரவாயில்லாதவர் என்று நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார். இவர் அழிவை ஏற்படுத்துபவர் (பொய்யர்) என்று நான் கூறுகிறேன். (நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 2, பக்கம் : 270)

எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. இதைப் போன்று இன்னொரு செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

5414 லி حدثنا محمد بن احمد بن ابي خيثمة قال حدثنا محمد بن صالح العدوي قال حدثنا عبدالمجيد بن عبد العزيز عن ابيه عن عطاء عن ابي هريرة قال قال النبي صلى الله عليه و سلم المتمسك بسنتي عند فساد امتي له اجر شهيدலி المعجم الأوسط லி (5 / 315)

என்னுடைய சமுதாயம் சீரழிந்திருக்கும் வேளையில் என்னுடைய வழிமுறையை பின்பற்றுபவனுக்கு ஒரு ஷஹீத் (உயிர் தியாகியின்) நன்மை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : தப்ரானீலி அல்அவ்ஸத், பாகம் :1, பக்கம் : 315

இந்த செய்தியில் நூறு ஷஹீத் நன்மை என்பதற்கு பதிலாக ஒரு ஷஹீத் நன்மை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை.

இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் ஸாலிஹ் அல்அதவீ

என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இமாம் ஹைஸமீ கூறியுள்ளார்.

رواه الطبراني في الأوسط وفيه محمد بن صالح العدوي ولم أر من ترجمه وبقية رجاله ثقات லி مجمع الزوائد லி (1 / 418)

இந்த செய்தியை இமாம் தப்ரானீ அல்அவ்ஸத் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதில் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்அத்வீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவருடை விமர்சனத்தை நான் (எங்கும்) பார்க்கவில்லை. (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித், பாகம் :1, பக்கம் : 418)

என்னிடம் சமுதாயம் சீரழிந்திருக்கும் வேளையில் என்னுடைய வழிமுறையை பின்பற்றுபவனுக்கு ஷஹீத் (உயிர் தியாகியின்) நன்மை உண்டு என்ற கருத்தில் வரும் எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அதே நேரத்தில். மக்கள் நபிவழியை புறக்கணிக்கும் நேரத்தில் நபிவழியை உயிர்ப்பித்தால் அதற்கு இறைவனிடம் நன்மை உண்டு என்பதில் எந்த ஐயமில்லை. ஷஹீத் உடைய நன்மை உண்டு என்பதற்குத்தான் ஆதாரம் இல்லை.
 
அல்லாஹ்வை எப்படி நம்புவது? தொடர் :3
எதற்காக நோய் ஏற்படுகிறது?
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

மனிதர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்வில் பலவிதமான நோய்களைச் சந்திக்கி றோம். இவ்வுலகில் நோய்களுக்கு ஆளாகதவர்களைக் காணவே முடியாது. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட பெரிய நபிமார்களாக இருந்தாலும் அவருக்கு நோய் வந்தே தீரும். அவர்கள் சரியே. இப்படி நோய்களுக்கு ஆளாகும் போது அதை எப்படி நாம் எதிர்கொள்வது? எப்படிப்பட்ட ஆளாக இருக்கணும்? அந்த நேரத்தில் நமது நம்பிக்கைளை எவ்வாறு அமைத்துக் கொள்வது? நமது நடவடிக்கைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இஸ்லாம் சொல்லக் கூடிய சில வழிமுறைகளை நாம் ஆராய்வோம்.

நோய் என்பது அல்லாஹ்வால் மனிதனைப் பண்படுத்துவதற்கு கொடுக்கப்படுகின்ற ஒரு எச்சரிக்கையாகும். நோய் மட்டும் மனிதனுக்கு ஏற்படவில்லையென்றால் மிக அதிகமான மனிதர்கள் கடவுள் மறுப்பாளர்களாகவே இருப்பார்கள். நோய் மனிதனைப் படுக்கையில் கிடத்தும் போது மனிதன் அந்த நேரத்தில் தான் தன்னை விடவும் மிஞ்சிய ஒரு சக்தியுள்ளது என்று நினைக்கிறான். அப்போதுதான் கடவுள் இருக்கிறான் அவனது நிவாரணம் எனக்குத் தேவை என்று உணர்கிறான். இதற்காகத்தான் அல்லாஹ் நோயை அவனுக்கு ஒரு கருணையாகவும் அருளாகவும் ஏற்படுத்தியிருக்கிறான்.

இவ்வுலகில் எத்தனையோ பகுத்தறிவாதம் பேசியவர்கள் கூட நோய்நொடிகளுக்கு ஆளாகும் போது நிவாரணங்களை நோக்கி ஓடும் காட்சியை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

கடவுள் நம்பிக்கை என்பது மனிதனுக்கு நோய் வரும் போது மட்டும் தான் ஏற்படுகிறது. உலகம் தான் வாழ்க்கை என்று மூழ்கிப் போய் அல்லாஹ்வை மறக்கும் போது அல்லாஹ் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஏதாவது ஒரு சோதனையைக் கொடுத்து அவனைத் திசை திருப்புகிறான்.

நீ பலவீனமானவன் உனக்கு மேல் உன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் நினைத்தால் உன்னை ஒரு நொடிப்பொழுதில் மரணிக்கச் செய்து விடுவான். எனவே உன்னுடைய வாழ்க்கையை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள். என் இறைவன் விதித்த இந்த நோயை அவனே குணப்படுத்துவான் என்று நீ உன்னைப் படைத்த இறைவன் மீது நம்பிக்கை வை. அவன் நோயை ஏற்படுத்தியதல்லாம்  அவனை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் என்று சொல்லாமல் சொல்லி மனிதனை எச்சரிக்கிறான்.

இவ்வாறு நோய் ஏற்படும் போது நோயின் மூலம் ஏராளமான நன்மைகளை அடைந்து கொள்வதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று அவன் கவனக்குறைவாக இருந்தால் இந்த நோயே அவனை ஒரு இறைமறுப்பாள னாகவும் இணைவைப்பாளனாகவும் கூட மாற்றிவிடும். அதையும் இன்றைய உலகில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்மருத்துவம் செய்ய வேண்டும் அல்லாஹ்வை முழுமையாக நம்பியிருப்போர். நோய் நோடிகள் ஏற்படும் போது அந்த நோய்க்குரிய காரணங்களைக் கண்டு தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது. அதற்கு மாற்றமாக ஆன்மிகம் என்ற பெயரில் அல்லாஹ் இருக்கிறான். அவன் நோயைக்குணப்படுத்துவான் என்று அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டிவிட்டு, நோய்க்கு வைத்தியம் செய்யாமல் இருப்பதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. ஆதாரம் புகாரி (5678)

மற்றொரு ஹதீஸில்

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். ஆதாரம்: முஸ்லிம் (4432)
நோயை ஏற்படுத்திய அல்லாஹ் அதற்குரிய நிவாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான். அந்த மருந்தை முறையாகப் பயன்படுத்தினால் நோய் நீங்கிவிடும். மனிதனுக்குப் பசி ஏற்படும் போது பசியைப் போக்குவதற்கு அல்லாஹ் வழங்கிய உணவை உண்டு பசியைப் போக்குகிறோம். பசியைப் போக்குவதற்கு அல்லாஹ் மனிதனுக்கு எந்த

அளவுகோலை கற்றுக் தந்துள்ளானோ அதே அளவு கோலையே நோய்க்கும் கற்றுத் தந்துள்ளான். இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது.
இந்த உலகில் வாழும் அனைத்து மதத்தவர்களும் இனத்தவர்களும் நோய்க்கு மருத்துவம் செய்கிறார்கள். இதனை யாருக்கும் நாம் சொல்லிக் கொடுத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் ஆன்மிகத்தின் பெயரால் மருத்துவம் பார்க்கக் கூடாது என்ற தவறான கொள்கையில் உள்ள சிலர் மரணத்தைத் தழுவுகின்றனர்.

இன்னும் சிலர் தவறான சடங்கு சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கின்றனர். வைத்தியம் செய்து குணமாகவில்லையென்றால் அந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியத்தின் மீதே நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.

நோயாளியின் உள்ளம் பல விதமான சந்தேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். இந்த நேரத்தில் இது நோய் அல்ல; இது நோய்க்கு அப்பாற்பட்ட ஒன்று; அதற்கு வேறு விதமான சிகிச்சைகள் இருக்கின்றது அதைச் செய்வதன் மூலம் தான் இதனைக் குணப்படுத்த முடியும் என்று கூறும் மூடர்களின் சொல்லைக் கேட்டு பில்லி, சூனியம், கண்ணேறு தான் காரணம் என நம்பி மருத்துவத்தைக் கைவிடுகிறான். தர்காக்களுக்குச் சென்று அங்கு பல நாட்கள் தவம் இருக்கிறான். தாயத்து தகடு பால் கிதாபு சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறான். தட்டுக்களில் எழுதி அதைக் கரைத்துக் குடிக்கிறான். இதனால் அவனுக்கு நோய் அதிகமாவதுடன் இஸ்லாத்திற்கு மாற்றமான அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கக்கூடிய நிரந்தர நரகத்திற்குரிய பாவமான காரியங்களைச் செய்தவனாகவும் ஆகி விடுகிறான்.

இது போன்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் மீது அளவற் நம்பிக்கை கொண்டு இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். அதன் பிறகு இறைவா எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை நீயே குணப்படுத்துபவன், உன்னிடமே நான் ஆதரவு வைத்துள்ளேன், நான் இதில் பொறுமையைக் கைக்கொள்கிறேன், உன்னுடைய விதியை நான் பொருந்திக் கொண்டேன் என்று பொறுமையைக் மேற்கொண்டால்

அதற்குரிய நன்மையை அடைந்து கொள்ள முடியும்.

இதற்கு மாற்றமாக மருத்துவத்தைத் தாண்டி மார்க்கம் காட்டித்தராத வழிமுறைகளைக் கையாளுகின்ற போது ஈமானைப் பறிகொடுக்கும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்.

இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்கு ஏற்படும் நோய் குணமாவதற்கு அவர்களாக ஒரு கால வரையரையை தீர்மானித்து வைத்திருப்பதுதான் அது. அந்தக் கால அளவுக்குள் குணம் ஏற்படாவிட்டால் இதற்கு மருத்துவம் செய்வதனால் பயன் கிடைக்காது; ஏதாவது வேறு வழிகளில் நோய் குணமடைவதற்கு முயற்சி செய்து பார்ப்போம் என்றெண்ணி மாந்திரீகம், தயத்து, தகடு போன்றவைகளில் எழுதி கைகளிலும் உடலின் மற்ற பாகங்களிலும் கட்டிக் கொள்வது அதைக் கரைத்துக் குடிப்பது, போன்ற செயல்களில் இறங்கி விடுகின்றனர்.

இவ்வாறு செய்வதை விடுத்து ஹோமியோபதியோ அலோபதியோ, யூனானியோ சித்த மருத்துவமோ அல்லது வேறு வகையான மருத்துவமோ செய்து கொள்ள வேண்டும்.

எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் மார்க்கத்துக்கு முரண் இல்லாத வகையில் மருத்துவம் செய்வதற்கு நமது மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கு மாற்றமாக மாந்தீரீக வேலைகளில் ஈடுபடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கு முழுமையாக அனுமதி இல்லையன்றாலும் அல்லாஹ் அனுமதித்த குறிப்பிட்ட அளவுக்கு இதில் ஈடுபட அனுமதியுள்ளது. இந்த அனுமதியைத் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக சொல்லிக் காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு இழப்பையே அதிகப்படுத்தும்.
(அல்குர்ஆன் 17:82)

இந்த வசனத்தில் முஃமின்களுக்கு நோய் நிவாரணமும் இந்தக் குர்ஆனில் இறக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆனில் நோய்நிவாரணம் உண்டு என்பது இதில் இருந்து தெரிகிறது. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் வலிமையுமுள்ளது. என்பதை இந்த வசனம் நமக்கு சொல்லிக் காட்டுகிறது.

இந்த வசனத்தில் கூறப்பட்ட நிவாரணம் என்ற சொல்லுக்கு இரண்டு விதமான விளக்கங்களை அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் கூறும் போது ஆத்மிகமான நோயைத்தான் இது குறிக்கிறது. அதற்கு மாற்றமாக மருத்துவ ரீதியான நோயைக் குணப்படுத்தாது என்கின்றனர்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் அவர்களின் வாதங்களுக்கும் விளக்கத்திற்கும் எதிரானதாக உள்ளது.

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.... என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப்பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்டபோது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) ஆதாரம் : புகாரி 2276

நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று அந்த நபித்தோழரிடம் கேட்டார்கள். இதில் இருந்து அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவதன் மூலம் குறிப்பிட்ட சில நோய்கள் நீங்கும் என்று விளங்குகிறது.

இந்த நபிமொழியின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். அதன் காரணமாக நோயும் நீங்கியுமுள்ளது. என்று அறிய முடிகிறது. அது ஷைத்தானின் வேலையால் நீங்கவில்லை மாறாக அந்த அத்தியாயத்திற்கு இப்படியான ஒரு சக்தியுன்டு என்று நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். இதைத் தவறு என்று சொல்லவில்லை ஏன் இப்படி செய்தாய் என்றும் கேட்கவில்லை. நோய் நோடிகளுக்கு ஆளாகும் போது இந்த மாதிரி ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது. அதில் மருத்துவம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது. என்று கூற முடியும். ஆனால் மொத்தக் குர்ஆனையும் இதனால் ஓதிப்பார்க்கக் கூடாது. ஏனென்றால் குர்ஆனில் சில பகுதி என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். சில என்பதை எது என்பதை அல்லாஹ் நமக்கு விளக்கித் தரவில்லை ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கித் தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் இன்னின்ன அத்தியாயங்கள் நோய் நிவாரணமாக அமையும் என்று கற்றுத் தந்துள்ளார்கள் அதில் ஒன்றுதான் சூரத்துல் பாத்திஹா. நோய் ஏற்பட்டுவிட்டால் ஒருவர் மருத்துவத்தையும் செய்து கொண்டு அல்ஹம்து அத்தியாயத்தையும் ஓதினால் அவரின் நோய்க்கு நிவாரணத்தை அது விரைவுபடுத்தும் என்பதை நம்பலாம்.


கேள்வி பதில்

குனூத் ஓதுவது எந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது? அது யாரைச் சபித்து ஓதுவதற்காக உருவானது? எந்தெந்த தொழுகையில் ஓதலாம்? அதன் வரலாற்று பின்னணி என்ன?


குனூத் இரண்டு வகையில் அமைந்துள்ளது. ஒன்று இறைவனிடம் எனக்கு நேர்வழியை காட்டு என்று துவங்கும் குனூத். இரண்டாவது ஒரு சாராருக்கு ஆதரவாக குனூத்து ஓதுவது அல்லது ஒரு சாராரை சபித்து ஓதும் குனூத்.

இதில் முதலாவது குனூத் தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்தி :

நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு சில வார்த்தைகளை எனக்கு கற்றுத் தந்தார்கள். (அவைகள்) அல்லாஹும் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹு லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த.)

அறிவிப்பவர் : ஹஸன் (ரலி), நூல் : நஸாயீ (1725),திர்மிதீ (426),
அபூதாவூத்(1214),இப்னு மாஜா (1168), அஹ்மத் (1625,1631)

இந்த செய்தியில் கூறப்பட்டிருக்கும் குனூத் பின்னணி என்ன? என்ற விவரங்கள் ஹதீஸ் நூல்களில் காண முடியவில்லை.

இரண்டாவதாக உள்ள சபித்து ஓதும் குனூத் தொடர்பாக அதன் பின்னணி ஹதீஸ் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆஸிம் அல்அஹ்வல் அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கüடம் "குனூத்' (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் "(ஆம்) குனூத் இருந்தது'' என்று பதிலüத்தார்கள். நான், "ருகூஉவிற்கு முன்பா அல்லது பின்பா?'' என்றுகேட்டேன். அதற்கு அவர்கள், "ருகூஉவிற்கு முன்புதான்'' என்று பதிலüத்தார்கள். உடனே நான், "தாங்கள் ருகூஉவிற்கு பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே?'' என்று கேட்டேன். அதற்கு, "அவர் தவறாகக் கூறியிருக் கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ராலி திருக்குர்ஆன் அறிஞர்கள் என்றழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபதுபேரை இணைவைப்பவர்கüல் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர்.

அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க அவர்கள் எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் (இடர்காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலüத்தார்கள்.
நூல்: புகாரி (1002)

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம் என்று விளங்குகின்றது. ஆனால் திருக்குர்ஆனின் 3:128வது வசனம் அருளப்பட்டவுடன் இவ்வாறு குனூத் ஓதுவது தடை செய்யப்பட்டதாகவும் இந்த வசனம் இறங்கியது தொடர்பாக வேறு சம்பவமும் சில நபிமொழிகளும் உள்ள சில ஹதீஸ்கள் உள்ளதால் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத் தின் போது தமது தலையை
உயர்த்தி, "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்று சொல்லி விட்டுப் பிறகு, "இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 7346

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. எனினும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உஹதுப் போரின் போது தான் 3:128 வசனம் இறங்கியது என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அவையும் ஆதாரப்பூர்வமானவையாக இருப்பதால் அது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களுடைய தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, "தங்களுடைய நபிக்குக் காயத்தை ஏற்படுத்திய, தங்களது நபியின் முன்பற்களை உடைத்து விட்ட சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்'' என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 3667

ஒரு வசனம் அருளப்பட்டது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இரண்டு சந்தர்ப்பத்திலுமே இந்த வசனம் அருளப்பட்டது என்ற கருத்து உள்ளது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். ஏனெனில் பல தடவை அருளப்பட்ட வசனங்கள் பல தடவை குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது. இந்த ஒரு வசனம் அருளப்பட்டதற்குத் தான் இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும். ஒன்று, நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும். அல்லது உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முஷ்ரிக்குகளைச் சபித்த போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும். இதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

குர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களை, உடன்படிக்கைக்கு மாற்றமாகக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதைக் கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்பு மீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல்தான். இதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

"என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!'' என்று நூஹ் கூறினார்.
(அல்குர்ஆன்71:26)

இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 1496)

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை இதில் இருந்து விளங்க முடிகின்றது. குர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவான அந்தக் காலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட காரிகள் எனும் அறிஞர்களைப் படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்தான். இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

"அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்தச் செயலும் இந்தச் சம்பவத்தில் நடக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது. இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலை நிறுத்துவதாகவே அமைந்துள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன.

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளி வருவதை அல்லாஹ்வும் பொருட்படுத்துவது கிடையாது என்பதை திருக்குர்ஆன் 4:148 வசனத்திலிருந்து அறியலாம்.

ஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றி பெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் "எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?'' என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை
மன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட ஒரு நபிக்குக் கூட உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான். இறைவனுடைய அதிகாரத்தில் தமக்குப் பங்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள்; என்றாலும் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது என்பதை இந்த வசனம் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது, உஹதுப் போர் சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதியதைத் தடை செய்து 3:128 வசனம் அருளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560வது ஹதீஸில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

70 காரிகள் எனும் அறிஞர்கள் கொல்லப்பட்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதவில்லை; பொதுவாக யாருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள் என்று இந்த செய்தி தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்து குனூத் ஓதியதைக் கண்டித்து மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று கூறும் செய்தி புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிமிலும் மற்றும் பல நூல்களிலும் கூறப்படும் காரணம்தான், அதாவது உஹதுப் போரின் போது அருளப்பட்டது என்பதுதான் ஏற்புடையதாக உள்ளது.

மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது.

அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக
இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது'' என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1196 ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்துத்தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.

மஃரிப், பஜ்ர் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் சபித்து குனூத் ஓதினார்கள் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குனூத், மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையில் இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி798)

அபூதாவூதின் அறிவிப்பில் (1231), லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ர் ஆகிய ஐவேளைத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் ரிஃல்,தக்வான்,உஸைய்யா ஆகிய கோத்தினரை சபித்து குனூத் ஓதினார் என்று இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹிலால் பின் கப்பாப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் சில அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஆனால் யஹ்யா பின் மயீன் அவர்கள் அவர் மூளை குழம்பவுமில்லை, தடுமாறவும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

நான் ஹிலால் பின் கப்பாப் இடம் சென்றேன். அவர் மரணத்திற்கு முன்னர் அவர் தடுமாறிவிட்டார் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 11, பக்கம் : 69)

இப்னு மயீன், யஹ்யா பின் அல்கத்தான் ஆகிய இருவரின் கூற்றை கவனத்தால் ஹிலால் பின் கப்பாப் என்பவர் மக்கள் மத்தியில் பரவலாக தெரியும் அளவுக்கு

அவர் தடுமாறி நிலை இருக்கவில்லை. மிக குறைந்தகாலம் அவர் தடுமாறிய நிலையில் இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது.

எனவே ஹிலால் பின் கப்பாப் மரண நெருக்கத்தில் தடுமாறியுள்ளதால் இதை பல அறிஞர்கள் பெரிய குறையாக கருதவில்லை. எனவே இவருடைய செய்தியை ஹஸன் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

21.03.2012. 02:58

பிப்ரவரி தீன்குலப் பெண்மணி

 
தலையங்கம்
மீண்டும் சல்மான் ருஷ்டி?
1947 ஆண்டு மும்பையில் பிறந்த எழுத்தாளர் அஹ்மத் சல்மான் ருஷ்டி, நாவல் எழுதுபவர். இவர் பல இலக்கிய நாவல்களை எழுதி பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு பட்ங் நஹற்ஹய்ண்ஸ்ரீ யங்ழ்ள்ங்ள் (தீ சாத்தானிக் வர்சஸ்) சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதினார்.
இந்த நூலில் இஸ்லாத்தைப் பற்றியும் திருக்குர்ஆனைப் பற்றியும் நபிகளாரை பற்றியும் அவதூறான பல பெய்யான தகவல்களை கூறினார். இதனால் இஸ்லாத்தை கண்மூடி எதிர்ப்பவர்களுக்கு இந்த நூல் பெரும் பரிசாக அமைந்தது.
இந்த நூலின் பெய்யான, அவதூறான செய்திகளை கண்ட முஸ்லிலிம்கள் கொதித்தெழுந்தனர். முஸ்லிலிம்களின் உண்மையான எதிர்ப்பை மதித்த பல நாடுகள் இந்த நூலுக்கு தடை விதித்தனர்.
அன்றைய இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் இந்தியாவிலும் இந்த நூலுக்கு தடைவித்ததார்.
ஆனால் இதை பெறுத்துக் கொள்ள முடியாத அருண்ஷோரி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சல்மான் ருஷ்டி நாவலை ஆதரித்து எழுதினார்.
இதைப் போன்று ராம்ஸ்வர்ப் என்பவர் சல்மான் ருஷ்டியின் நாவலை படித்துவிட்டு அதில் நியாயங்கள் உள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 20.11.1988 அன்று கட்டுரை எழுதினார். இதில் நபிகளார் கூறிய திருக்குர்ஆனில் சாத்தானின் செய்திகள் கலந்துள்ளன. அதை பிரித்து காட்டமுடியாது என்று சில சான்றுகளை எடுத்துரைத்தார்.
இஸ்லாத்தை ஆதாரத்துடன் யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு சரியான பதிலை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் அன்று அல்ஜன்னத் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வேதம் ஓதும் சாத்தான்கள் என்ற ஒரு இலவச இணைப்பை வெளிட்டு சல்மான் ருஷ்டி, ராம்ஸ்வர்ப் போன்றோருக்கு அறிவுப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக பதிலடி கொடுத்தார்.
முழுமையாக அந்த நூலையும் அப்போது எழுதப்பட்ட தலையங்கத்தை அறிய பின்வரும் இணையதள முகவரியில் பார்வையிடவும்.

http://onlinepj.com/books/veetham_othum_sathangal/

http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/sayhanin_vasanagal/

ஓய்ந்து போன சல்மான் ருஷ்டியை தூக்கி பிடிக்க இன்று சில இந்திய எழுத்தாளர்கள் முயற்சி செய்துள்ளனர். ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவிற்கு சல்மான் ருஷ்டி அழைக்கப்பட்டார். ஆனால் அவருடைய உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத்துறை கூறியதால் அவரை வரவேண்டாம் என்று ராஜஸ்தான் காவல்துறை சல்மான் ருஷ்டிக்கு தவகவல் தெரிவித்து. எனவே அவர் வரவில்லை என்று கூறிவிட்டார்.
இதை கண்டித்த, விழா குழுவினர் அவரை ஆதாரிக்கும் விதமாக இலக்கிய விழாவில் கலந்து கொண்ட ஹரி குன்ஸுரு மற்றும் அமிதவ் குமார் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தடைசெய்யப்பட்ட சாத்தானின் கவிதைகள் என்ற புத்தகத்திலிலிருந்து சில பகுதிகளை படித்துக்காட்டியுள்ளனர்.
எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய்களையும் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் எழுவதையும் பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கேட்டால் எழுத்து சுதந்திரம் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் தங்கள் பேச்சில் எழுத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்தைப் பற்றி
அதை அறிந்தவர்களிடம் நேரிடையாக கூறி அதை நிரூபித்துவிட்டு, எழுதட்டும், பேசட்டும். எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கும் அவரின் அறியாமை எழுத்துகளுக்கும் ஆதரவு என்ற பெயரில் பொய்களுக்கு கொடி தூக்க வேண்டாம்.
 
 
ஏன் இறைவனின் இந்த கோபப் (கோர) பிடி?
 
அந்தோ பரிதாபம்! சில காலங்களாக உலக அளவில் மக்கள்
அலைக்கழிக்கப்படுகிறார்கள்; சின்னாபின்னமாக்கப்படுகிறார்கள். பூகம்பகங்கள் சுனாமிகள், சூறாவளிகள், தொடர் மழைகள், மற்றும் பெரும் வெள்ளங்கள் இப்படி பல்வேறு கஷ்டங்களை மனிதர்கள் சமீப காலங்களாக அனுபவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரியை அலைக்கழித்த தானே புயல் ! 30 க்கு மேற்பட்டோர் பலி ! சுனாமியை விட கொடுமையானது தானே புயல் என மக்கள் அலறும் அளவிற்கு புயலின் தாக்கம் !
இப்படி இயற்கை சீற்றங்கள் மனிதனை சின்னாபின்னமாக்கி அலைக்கழித்து வருகின்றன. இந்த மோசமான சூழ்நிலைகள் வந்ததற்கு என்ன காரணம் என்று யாராவது சிந்தித்தார்களா? விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் நம்மால் ஏன் அதைத் தடுக்க முடியவில்லை? என்று ஒரு நொடிப் பொழுதேனும் சிந்தித்தார்களா?
இது இயற்கைச் சீற்றம் அல்ல; படைத்தவனின் ஒரு தண்டனையாக இருக்க முடியாதா? இங்கு வாழும் மக்களை எச்சரிக்கை செய்வதற்காக இந்தப் பேராபத்துகள் ஏற்பட்டிருக்காதா? நம் செயல்பாடுகள் அவ்வாறு அமைந் திருக்கவில்லையா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
இந்த இயற்கை சீற்றங்களைப்பற்றி சிந்திக்க திருக்குர்ஆன் பின்வருமாறு நம்மை தூண்டுகிறது.
அவர்கள் திருந்துவதற்காக இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்கு சுவைக்கச் செய்கிறோம். குர்ஆன்32: 21
ஓரிறைக் கொள்கை மறுப்பு, விபச்சாரம், அளவு மோசடி, துரோகம், ஓரினச்
சேர்க்கை, லஞ்சம், நீதியின்மை, தீவிரவாதம், அமானித மோசடி, கொலை, கொள்ளை, வரதட்சனை, பொய், பித்தலாட்டம், பெண்களுக்கு அநீதி என்று மனித நேயத்திற்கு மனிதனுக்கும் ஒவ்வாத ஏராளமான செயல்களை இந்தச் சமூகம் செய்து வருகிறது. இத்தனை கொடுமைகளும் நடக்கும் போது இந்தச் சீற்றங்கள் ஏன் இறைவனின் தண்டனையாக அல்லது எச்சரிக்கையாக இருந்திருக்காது?
முந்திய காலங்களில் வாழ்ந்து படைத்தவனை மறந்து மன இச்சையின்படி செயல்பட்டவர்கள் இது போன்ற கோரப் பிடிகளுக்கு ஆளானார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பல சமூகத்தினர் இவ்வாறு நடந்த காரணத்தால் அந்தச் சமூகம் அழிக்கப்பட்டதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஓரிறைக் கொள்கை மறுத்தவர்கள்
திருக்குர்ஆனில் ஒரே இறைவனை ஏற்க மறுத்தவர்களின் நிலைகளை பல இடங்களில் வல்ல அல்லாஹ் எடுத்துரைக்கிறான். 950 ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரத்தை செய்த நூஹ் நபி சமுதாயத்தில் ஏகத்துவத்தை ஏற்க மறுத்தோரின் நிலையை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
"உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டது. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர் பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்'' என்று அவர்
கூறினார்.
அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம்.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.       (அல்குர்ஆன் 7:71,72)
படைத்த ஏக இறைவனை வணங்க மறுத்து வாழ்பவர்களும், வல்ல இறைவனுக்கு இருக்கக்கூடிய பண்புகளை அவனுடைய படைப்புகளுக்கு வழங்கி
அப்படைப்புகளை வணங்குபவர்களுக்கும், இப்பேரழிவுகள் ஏன் ஒரு எச்சரிக்கையாக இருக்கக் கூடாது? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அளவில் மோசடி செய்தவர்கள்
உலக வாழ்க்கையை மட்டும் கவனத்தில் கொண்டு நீதி நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டவர்கள் மனிதர்களில் அதிகம். இவ்வகையைச் சார்ந்தவர்கள் இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் எடைகளில் மோசடி செய்தனர். மக்களிடம் கொடுக்கும் போது அளவைக் குறைத் தும், வாங்கும் போது நிறைவாகவும் வாங்கினர். இதன் மூலம் செல்வத்தைப் பெருக்கினர். இந்த மோசடி வாழ்க்கையை இறைத்தூதர் ஷுஐப் (அலை)
அவர்கள் கண்டித்தார்கள், இவ்வாறு செய்வது இறைக் கோபத்தை ஏற்படுத்தும் என்றார்கள். ஆனால் அம்மக்கள் இப்போதனையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் மீது இறைவனின் கோபப் பார்வை ஏற்பட்டது. இதைத் திருக்குர்ஆன் விவரிக்கிறது.
"என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருள்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' (அல்குர்ஆன் 11:85)  
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருள்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர் கூறினார்.    (அல்குர்ஆன் 7:85)
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர் (அதற்கு முன்)
அங்கே வசிக்காதோரைப் போலானார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே நஷ்டமடைந்தோரானார்கள்.     (அல்குர்ஆன் 7: 91,92)
நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அங்கே
வசிக்காதவர்களைப் போல் (ஆனார்கள்). கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர்
(இறையருளை விட்டு) தூரமானது போல் மத்யன் வாசிகளும் தூரமானார்கள்
(அல்குர்ஆன் 11:94,95)
படைத்த ஒரு இறைவனை மறந்து, மறுத்து அளவில் மோசடி செய்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிகழ்வுகள் ஏன் ஒரு எச்சரிக்கையாக இருக்காது? சிந்தித்துப் பாருங்கள்! 
ஒழுக்கக் கேடுகள்
மனிதனுக்கும். மிருகங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வாழ்க்கை முறையில் உள்ளது. அதில் குறிப்பாக மிருகங்களைப் போல் உறவு கொள்ளாமல் ஒரு வரையறை நியமித்து நடக்கவேண்டும் என்று படைத்த இறைவன் நமக்கு வழிகாட்டுகிறான்.
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (அல்குர்ஆன் 25 : 68)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24 : 31)
இவ்வாறு பல அறிவுரைகளை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் மனிதன் இவைகளுக்கு மாற்றமாக ஆடல், பாடல், இசை, டிவி சினிமா ஆகியவற்றில் மதிமயங்கி ஒழுக்கம் கெட்டு மானம் கெட்டு கூச்சம் உணர்வுகள் அற்று ஆடையை அணிந்தும் நிர்வாணிகளாக தோற்றமளிப்பதைக் காண்கிறோம்.
விபச்சாரம் இன்று சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு நாகரீக உலகில் ஒழுக்கம் எவ்வளவு விலை என்று கேட்கும் வண்ணம் மாறிவிட்டது. இவர்களின் செயல்களால் ஏன் முந்திய சமூகங்களுக்கு வந்தது போல் தண்டனை வராது? சிந்தித்துப் பாருங்கள்!
ஒழுக்கக் கேட்டின் உச்சமான ஓரினச் சோர்க்கை இன்று தலைதூக்கியுள்ளது. இந்த ஈன செயலிற்காக ஒரு சமுதாயமே அழிக்கப்பட்ட வரலாறை வல்ல இறைவன் திருக்குர்ஆனில் 11:82லி83 வசனங்களிலும், 7:80லி82 வசனங்களிலும், 15:73லி77 வசனங்களிலும் குறிப்பிடுகிறான். ஆனால், நாகரீக உலகத்தில் வாழ்வதாக பீற்றிக் கொள்ளும் மனிதனோ, இந்த ஓரினச் சேர்க்கை என்கிற இழி செயலிற்கு சட்ட அந்தஸ்தை தருவதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறான்.
இவ்வளவு மோசமான காரியத்திற்காக இறைவன் அனுப்பிய எச்சரிக்கையாக இந்தப் பேரழிவுகள் இருந்திருக்காதா? சிந்தித்துப் பாருங்கள்.
செத்துப் போன மனிதாபிமானம்
மனிதன் என்றால் பகுத்தறிவு படைத்தவன். மற்ற மிருகங்களைப் போன்று உள்ளவன் அல்ல. அவனிடம் இரக்க குணம் இருக்க வேண்டும். நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும். இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
மனிதனுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு இறைவன் இரக்கம் காட்ட மாட்டான் என்று நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    புகாரி 7376)
தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார
உண்பவர் இறை நம்பிக்கையாளராய் இருப்பதில்லை என்று முஹம்மத் நபி
அவர்கள் கூறியுள்ளார்கள்.     (ஆதார நூல் : ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ)
தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் ஒருவர் நம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது என்று முஹம்மத் நபி
அவர்கள் கூறியுள்ளார்கள்.      (ஆதார நூல் : புகாரி 13)
நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! பின்னர் உன் பக்கத்து வீட்டாரைக் கவனித்து அவர்களுக்கு இதில் நல்லமுறையில் கிடைக்கச் செய்! என்று முஹம்மத் நபி அவர்கள் கூறினார்கள்       நூல் : முஸ்லிம் 4759)
இவ்வாறு மனிதாபிமானத்தைப் போதிக்கும் அறிவுரைகள் ஏராளம் இஸ்லாத்தில் உள்ளது. ஆனால் மனிதர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை. அடுத் தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நடந்து கொள்கிறார்கள். கஷ்டமான நேரத்தில் கடன் கேட்டால் கடன் கொடுத்து உதவாமல் அதற்கு வட்டி கணக்கு போட்டு ஏழைகளின் இரத்ததை உறிஞ்சி எடுக்கிறார்கள் இதைப் போன்று ஏராளமான காரியங்களை நாம் உதாரணமாக கூறலாம்.
இவ்வாறு நடப்பவர்களுக்கு இறைவன் தந்த எச்சரிக்கையாக இந்தப் பேரழிவுகளை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? சிந்தித்துப் பாருங்கள்
இறுதியாக இந்தப் பேரழிகள் இயற்கையின் சீற்றம் என்று சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. விஞ்ஞானத்தின் உச்சியில் இருக்கும் நாம் ஏன் இந்தச் சீற்றங்களை தடுக்க முடியவில்லை, ஏராளமான நவீன கருவிகளை வைத்திருக்கும் அமெரிக்காவால் காத்ரீனா, ரீட்டா போன்ற சூறாவளிகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?
உயர்ந்த தரத்துடன் புதிய புதிய கருவிகளை தயாரிக்கும் ஜப்பானாலும் கூட அணு உலைகளின் ஆபத்துகளை விட்டு மக்களை காப்பாற்ற இயலவில்லை. பேரழிவை ஏற்படுத்துகிற சுனாமியை தடுக்க இயலவில்லை. பெரிய பெரிய வல்லரசுகளால் கூட இதைத் தடுக்க முடியவில்லையானால் நம்மை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை நமக்குக் காட்டவில்லையா? அவனை ஏன் நாம் சிந்திப்பதில்லை? அவன் கொடுத்த வேதத்தை ஏன் படிப்பதில்லை?
ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை. (குர்ஆன் 9:126)
எனவே நாம் இயற்கை பேரழிவுகளிலிருந்து பாடம் பெற்று, நம்முடைய வாழ்வை திருக்குர்ஆனும் நபிமொழிகளும் சொன்ன முறைப்படி அமைத்துக் கொண்டு ஈருலுக ஈடேற்றம் அடைய முயற்சிப்போம். வல்ல ரஹ்மான்
அதற்கு துணை புரிவானாக
 
வானவர்கள்           தொடர் :2

 
மலக்குகள் ஆண்களா? பெண்களா?
வானவர்கள் என்று சொன்னதும், அவர்கள் ஆண்களாக இருப்பார்கள் என்று தவறுதலாக நினைத்துவிடக் கூடாது. அதுபோல, அவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் கருதிவிடக் கூடாது. காரணம், வானவர்களுக்குள் ஆண், பெண் என்ற பால்வேற்றுமையிலான பாகுபாடு அறவே கிடையாது. காரணம், ஒருவேளை வானவர்கள் ஆண்களாக இருந்தால் உறுதியாக
அவர்கள் பெண் துணையின் பக்கம் தேவையுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் வானவர்கள் பெண்கள் கிடையாது என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக கூறியுள்ளான்.
"உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா?'' என்று இவர்களிடம் கேட்பீராக! வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
(குர்ஆன் 37 : 149, 150)
அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்துவிட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
(திருக்குர்ஆன் 43 : 19)
உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கிவிட்டு, தனக்கு வானவர்களைப் புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்!     (திருக்குர்ஆன் 17 : 40)
வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது. மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.
(திருக்குர்ஆன் 53 : 26, 27)
இதன் மூலம், வானவர்கள் என்ற படைப்பினம் பெண்களாகவும் இல்லை; அதற்கு எதிர்பாலினமான ஆண்களாகவும் இல்லை என்பதை சந்தேகமற புரிந்து கொள்ளலாம். மேலும், வானவர்கள் பெண்களாக அல்லது ஆண்களாக இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வது மாபெரும் குற்றம் என்றும், அவ்வாறு கற்பனையான கருத்தைத் தெரிவிப்பவர்கள் மறுமையை சரியாக நம்பாதவர்கள் என்றும் அல்லாஹ் கண்டித்திருப்பதை என்றென்றும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறகுகளைக் கொண்ட மலக்குகள்
அல்லாஹ் தமது விருப்பத்தின்படி தமது படைப்பினங்களுக்குப் பல்வேறு விதவிதமான தோற்றங்களை, தகவமைப்புகளைக் கொடுத்துள்ளான். கிளியின் மூக்கு, ஒட்டகத்தின் திமில், மயிலின் தோகை போன்ற அமைப்பை உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் வானவர்கள் என்ற படைப்பினத்திற்கு இறக் கைகளைக் கொடுத்துள்ளான். அதே நேரம், மலக்குகள் அனைவருக்கும் ஒரே விதமான எண்ணிக்கையில் இறக்கைகள் இருக்காது. மாறாக, எண்ணிக்கையில் வேறுபடும் விதத்தில் அவர்களுக்கு இறக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். உதாரணமாக வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு 600 இறக் கைகள் இருக்கின்றன. இதே எண்ணிக்கையில்தான் மற்ற வானவர்களுக்கும் சிறகுகள் இருக்கும் என்று சொல்லக்கூடாது. இந்த தகவல்களைப் பின்வரும் குர்ஆன் வரிகள் மற்றும் ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் (தமது) படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(திருக்குர்ஆன் 35 : 1)
அபூ இஸ்ஹாக் அஷ் ஷைபானீ அவர்கள் கூறியதாவது :
நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் அவர்கüடம், "(வஹீ லி வேத வெüப்பாடு நின்று போயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை நெருங்கி வர) அந்த நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கு இடையிலுள்ள நெருக்கத்தை போல் அல்லது
அதை விடச் சமீபமாக இருந்தது. பிறகு, "அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்' என்னும் (53:9,10) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது
அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவருடைய நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்'' என்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கüடம் தெரிவித்தார்கள் என்று விளக்கினார்கள்.
ஆதாரம் : புகாரி (3232)
மலக்குகளின் நிலைமாறும் வடிவம்
ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் வாழ்விடம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்றவாறு வடிவங்கள் தோற்றங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பறப்பதற்கு ஏற்றவாறு பறவைகளுக்கு இருக்கும் சிறகுகள். நீரில் வாழ்வதற்கு ஏற்றவாறு மீன்களுக்கு இருக்கும் செதில்கள் என்று இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்னும் சொல்வதெனில், ஒரே இனமாக இருந்தாலும் குளிர்பிரதேசம் மற்றும் வெயில் பிரதேசத்தில் வாழ்பவைகளுககு இடையே தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதைப் பார்க்கிறோம். இதுபோலவே, மலக்குகளின் நிலையும் இருக்கிறது. மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குள் பால் வேறற்றுமையிலான வேறுபாடு கிடையாது. அவர்களுக்கு பசி, தாகம் போன்ற பலவீனங்கள் இல்லை. அவர்களுக்கு பிரத்யேக தோற்றமாக சிறகுகள் இருக்கும் என்பது போன்ற பொதுவான அம்சங்கள் மலக்குகளுக்கு இருந்தாலும், அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப வடிவம் கொண்டவர்களாக, சூழ்நிலைக்கு ஏற்ப உருவம் மாறும் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது
அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் "ஹிரா' குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பலவா நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை "ஹிரா' குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, "ஓதுவீராக'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத்தெரிந்தவன் இல்லையே!'' என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்)
அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக'' என்றார். அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக!'' என்றார். அப் போதும் "நான் ஓதத்தெரிந்தவன் இல்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "அலக்' (அட்டை
போன்று ஒட்டிப் பிடித்துத் தொங்கும்) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி!'' எனும் இறைவசனங்களை (96:1 லி5) அவர் ஓதினார்.
அறிவிப்பர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி (3)
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள் : நான் நடந்துபோய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிரிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே, நான் "ஹிரா'வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு நான் அச்சமடைந்தேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி (என் வீட்டாரிடம்) எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்று சொன்னேன். (அவர்களும் போர்த்தி விட்டார்கள்.) அப்போது அல்லாஹ், "போர்த்தியிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளை தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்'' எனும் வசனங்களை (74:1லி5) அருளினான். பின்னர் வேதஅறிவிப்பு (வஹீ) தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : புகாரி (4)
முதலில், ஹிரா குகையில் இருந்த நபி (ஸல்) அவர்களைக் கட்டித் தழுவும் விதத்தில் சிறிய வடிவம் கொண்டவராக ஜிப்ரீல் (அலை)
அவர்கள் வருகிறார்கள். பிறகு மற்றொரு முறை அவர்களே வானம் மற்றும் பூமியின் இடைவெளியை மறைக்கும் பிரமாண்டமான தோற்றத்தில் வருகிறார்கள். இதே ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபிகளாரிடம் மனித வடிவத்திலும் வந்துள்ளார்கள். இவரல்லாத மலக்குமார்களும் தங்களது இயல்பான தோற்றத்தில வராமல் மனித வடிவத்தில் வந்து சென்றுள்ளார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக
அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று
அவர்கள் கூறினர்.
(திருக்குர்ஆன் 11 : 69 முதல் 73)
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக
அவருக்குத் தோற்றமளித்தார். "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 19 : 16/19)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான்.
அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று
அந்த வானவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார். அதற்கு
அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம் (5016)
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில்
(அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஈமான் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஈமான் என்பது,
அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், "இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்'' என்றார்கள்.
அடுத்து "இஹ்ஸான் என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்)''
என்றார்கள்.
அடுத்து அவர் "மறுமை நாள் எப்போது?'' என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (லிஉம்மை விட) மிக அறிந்தவரல்லர். (அது பற்றி எனக்கும் தெரியாது; உமக்கும் தெரியாது. வேண்டுமானால்,) அதன் (சில)
அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்'' என்று கூறிவிட்டு, "உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது...'' எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்)
அவர்கள் "அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள்'' என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இ(ப்போது வந்துபோன)வர்தாம் ஜிப்ரீல். மக்களுக்கு
அவர்களது மார்க்கத்தைக் கற்றுத் தர வந்திருந்தார்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி (50)
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரரிலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சில வேளைகளில் மணியோசையைப் போன்று என்னிடம் வேதஅறிவிப்பு (வஹீ) வரும். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக்கூடியதாக இருக்கும். மணியோசை மூலம் அவர் (வானவர்) கூறியதை நான் மனனமிட்டுக் கொண்ட நிலையில் அது நிறுத்தப்படும். இன்னும் சில வேளைகளில் வானவர் ஒரு மனிதரைப் போன்று எனக்குக் காட்சியளித்து என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி (2)
அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கüடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி (ஸல்)
அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்கüடம், "இவர் யார் (தெரியுமா)?'' என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், "இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா'' என்று பதிலüத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்
திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்பு தான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரிய வந்தது.)'' என்று கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி 4980
இவ்வாறு தங்களது பணிக்கேற்ப வடிவம் கொண்டவர்களாக மலக்குகள் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக அர்ஷை சுமக்கும் மலக்குகளை குறிப்பிடலாம். ஏழு வானங்கள் மற்றும் பூமியை உள்ளடக்கியிருக்கும் அர்ஷை சுமப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் அதற்கேற்ப மாபெரும் வடிவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்குச் சான்றாக, அவர்களைப் பற்றி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதைக் காண்போம்.
அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அ(ர்ஷை சுமக்கும் வான)வரின் காது சேனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளி என்பது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : அபூதாவூத் (4102)
மலக்குகள் அழகானவர்களா?
அல்லாஹ் அழகை விரும்பக்கூடியவன். அவன் அழகிய முறையில் தமது படைப்பினங்களை படைத்துள்ளான். அழகிய முறையில் படைக்கப்பட்ட மனித இனத்தில் வெண்மை, கருப்பு என்று வேறுபாடு இருப்பது போல, மலக்குகள் மத்தியிலும் இதுபோன்ற வேறுபாடு இருக்கின்றது. அழகான தோற்றம் கொண்ட மலக்குமார்கள் இருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் செய்தி நமக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம். திடீரென்று நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் (சக்கராத்தின்) நேரத்தில் சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் கபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு
அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலில் இருந்து வெளியேறிவிடு என கூறுவார். தோல்பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போல அந்த (ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும். அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல்
அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள்.
ஆதாரம் : அஹ்மத் (17803)
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளிúறி வா என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல அவனுடைய உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்படும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்க மாட்டார். உடனே கம்பளி துணியில் வைத்து விடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தைவிட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்பார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக் கப்படாது என்று கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத் (17803)
வளரும் இன்ஷா அல்லாஹ்
 
அல்லாஹ்வை எப்படி நம்புவது?       தொடர் :2
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

நமது வாழ்வில் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும்.
நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் எப்படிப்பட்ட துன்பமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:
பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை
அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 54:04)
அவனால் முடியாதது எதுவுமில்லை. எந்தத் தேவையானாலும் அவனிடம் கேட்கலாம். அவன் நிச்சயமாகத் தருவான் என்ற நம்பிக்கை நபிமார்களுக்கு இருந்தது. நாம் பார்த்த நபிமார்களின் வரலாறுகளை வைத்துக் கொண்டு
அல்லாஹ் பற்றிய நமது நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் அல்லாஹ்விடம் கேட்பதற்குக் கூட கஞ்சத்தனம் செய்கின்றோம். எதெல்லாம் நம்மால் முடியும் என்று தோன்றுகிறதோ அதுதான் அல்லாஹ்வால் முடியும், அது அல்லாதது எதையும் செய்யவோ அல்லது செயல்படுத்தவோ
அல்லாஹ்வால் முடியாது என்று நினைக்கிறோம்.
நாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விதத்தில் நாம் கேட்கவில்லை என்பதற்கு நமது வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறு உதாரணங்களைப் பார்க்க முடியும்.
இருபத்தி ஐந்து வயதுடைய ஒருவர் திருமணம் முடித்து குழந்தைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அவர் முப்பது வயது அல்லது நாற்பது வயது வரை தனக்கு குழந்தை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். நாற்பத்தி ஐந்து வயதை அல்லது அதைவிட அதிகமான வயதை எட்டியவுடன் இதற்குப் பிறகு நமக்கு இனி எப்படிக் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அவர் தீர்மானித்து விடுகிறார். அதன் பின்னர் அல்லாஹ்விடம் அவர் குழந்தையைக் கேட்டு பிரார்த்திப்பதை விட்டு விடுகிறார்.
இந்த செயலில் இருந்து அவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். எனக்கு குழந்தைப் பேறு எப்படிக் கிடைக்கும் என்று நினைப்பதற்குப் பதிலாக என்னால் வேண்டுமானால் முடியாமல் இருக்கலாம். என்னைப் படைத்த அல்லாஹ்வால் முடியும், அவன் தான் சகல ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் அவனால் முடியாத ஒன்று இந்த உலகில் உண்டா என்று நினைக்க வேண்டும்?
ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்வால் எனக்கும் குழந்தைப் பாக்கியத்தைத் தர முடியும். நிச்சயமாக அவன் எனக்கு குழந்தை பாக்கியத்தைத் தருவான் என்று உறுதியாக நம்ப வேண்டும். அதன் பிறகு அதில் முடியுமான அளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினை மட்டுமில்லை இது போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து அவனிடம் நமது முழுப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்.
அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
(அல்குர்ஆன்:65:03)
அவனிடம் உறுதியாகக் கேட்க வேண்டும். எந்த அளவுக்கென்றால் பெரிய குற்றச்சாட்டில் கைதியாகப் பிடிக்கப்பட்டு அடுத்த நாள் தூக்கு மேடை என்றிருந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்சியாளனாகிய அல்லாஹ் எதையாவது செய்து அந்த நேரத்தில் காப்பாற்றுவான்.
(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
(அல்குர்ஆன்:3:54)
நோயாளியாக இருக்கின்றவர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.
அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு அல்லாஹ்விடம் நோயைக் குணப்படுத்தும் படி கேட்கிறார்கள். சாதாரண தலைவலி காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். இதை விடவும் நோய் கடுமையாக அதிகரிக்கும் போது வைத்தியர்களை நாடிச் சென்று அவர்களிடம் அதற்குரிய சிகிச்சைகளைச் செய்தும் பலன் ஏற்படாமல் போய்விடும். இவர் பிழைப்பது நிச்சயமல்ல என்று மருத்துவர்கள் கூறி கைவிடும் போது இனி இவர் எப்படி குணமாவார்? குணப்படுத்தக்கூடிய மருத்துவரும் கையை விரித்து விட்டாரே என்று நம்பிக்கை இழந்து விடுகிறோம்..
அல்லாஹ்விடம் இத்தனை நாட்களாகச் செய்து வந்த பிரார்த்தனையையும் கைவிட்டு அதில் நம்பிக்கை இழந்து விடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் மருத்துவருக்கு வேண்டுமானால் முடியாது போகலாம். என்னுடைய இறைவனால் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாக அல்லாஹ்விடம் நம்பிக்கை வைத்து பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு தான் ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் உறுதியான பிராத்தனை இருந்தது.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன்:26:80)
மரணிக்க இருக்கின்ற மனிதனையும் நோயிலிருந்து குணப்படுத்தி நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல அல்லாஹ்வால் முடியும்.
பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களிடம் நம் தேவையைக் கேட்டால் அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை யாரும் கேட்பதில்லை. அவர்கள் அந்த அளவுக்குத் தரமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வைப் பற்றியும் நமது நிலை இப்படித்தான் இருக்கின்றது. பணக்காரன் எப்படி பெருந்தொகையை தரமாட்டானோ அதை போன்று தான் அல்லாஹ்வும் தரமாட்டான் என்று நினைக்கின்றோம். 
நமது பார்வையிலும் கணிப்பிலும் மனிதர்கள் தான் தர மாட்டார்கள்.
அல்லாஹ் நினைத்தால் அவன் நமக்கு உதவி செய்வது அவனுக்கு சாதாரணமானது என்று நம்புவதில்லை. நமக்கு முன்னால் இறைத்தூதர்கள் வரலாறு இதற்கு படிப்பினையாக இருக்கிறது.
அல்லாஹ்வை உண்மையாக நம்ப வேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எப்படி உறுதியாக நம்புகின்றோமோ, அப்படி சந்தேகமில்லாமல்
அல்லாஹ்வை நம்ப வேண்டும். கண் முன்னால் ஒன்றைப் பார்த்து எப்படி இது மனிதன், இது மிருகம் என்று எவ்வாறு உறுதியாகக் கூறுகின்றோமோ அப்படி நம்ப வேண்டும். நமது கண் முன்னால் நிற்கும் ஒருவரைப் பற்றி இவர் யார் என்று கேட்டால் சற்று பொறுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று யாரும் சொல்ல மாட்டோம். அப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
இரண்டு கால்களும் இரண்டு கைகளும் உடல் உறுப்புக்களும் இருப்பதை எப்படி நம்புகின்றோமோ? அதில் சந்தேகம் வராதோ அதுபோன்று
அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய தூதர்கள், மலக்குகள், வேதங்கள் போன்ற மறைவானவற்றையெல்லாம் நம்பவேண்டும். உறுதியான வேர்களைக் கொண்ட ஆலமரத்தின் விழுதுகள் எப்படி ஆழமாக வேர்களை நிலத்தில் வேரூன்றி இருக்கின்றதோ அப்படி அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையும் உறுதியாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன்:14:24)
மரத்தின் வேர்களைப் போன்று நமது கொள்கை ஆழமாக உள்ளதா? நூற்றக்கு நூறு சதவீதம் நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் மறுமையையும் வேதங்களையும் நம்புகிறோமா?.
இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் நமது வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால்
அவனுடைய வானவர்களின் உதவியும் நிச்சயமாகக் கிடைக்கும். வாழ்க்கையில் துன்பமோ துயரமோ ஏற்படாது. 
இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறிய நிகழ்ச்சி போதுமான ஆதாரமாகும்.
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்' அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்' அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாது'' என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்' என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!'' என்று சொன்னார்கள்.    (நூல் முஸ்லிம்:62)
இதில் இருந்து நாம் விளங்க வேண்டியது அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் எந்தத் தீய பழக்களிலும் நீடித்து நிலைத்து நிற்க மாட்டோம். என்பதுதான் இதில் இருந்து நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
 
ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை    தொடர் : 8
 
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான்.
அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள்.
நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது.
"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலி ன் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டுவந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று
அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று
அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 5:110)
"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட)
அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.
(அல்குர்ஆன் 61:6)
ஈஸா நபியவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நிஜமாகவே செய்யப்பட்டவை தான். ஆனாலும் இது உண்மை அல்ல; இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று அம்மக்கள் கருதினார்கள். இவர் ஸிஹ்ர் செய்கிறார் என்ற சொல் மூலம் அவர்கள் இதைத் தான் கருதினார்கள்.
ஸிஹ்ர் என்றால் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றுதல் தான். உண்மையாக எந்த அதிசயத்தையும் செய்வது அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.
முஹம்மது நபியவர்கள் தமது சமூகத்தில் தம்மைத் தூதர் என்று அறிமுகப்படுத்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சான்றுகளைக் காட்டியவுடன் அப்போது அவர்களின் சமூகம் அவர்களுக்கு எதிராகச் சொன்ன பதில் ஸிஹ்ர் என்றும் ஸாஹிர் (சூனியக்காரர்) என்பதுவும் தான்.
அதாவது நபியை சூனியக்காரர் என்றும் நபி கொண்டுவந்ததை சூனியம் என்றும் சொன்னதாக இறைவன் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம்
அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். "இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.     
(அல்குர்ஆன் 6:7)
"மக்களை எச்சரிப்பீராக'' என்றும், "நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக'' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? "இவர் தேர்ந்த சூனியக்காரர்'' என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
                                      (அல்குர்ஆன் 10:2)
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
(அல்குர்ஆன் 21:3)
நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? "இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே'' என்று கூறுகின்றனர். "அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்'' எனவும் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 28:48)
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் "இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனிதராகவே இருக்கிறார்'' எனக் கூறுகின்றனர். "இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறுதான்'' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 34:43)
இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 37:15)
அவர்களிலி ருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர்.
"இவர் பொய்யர், சூனியக்காரர்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர். (அல்குர்ஆன் 38:4)
அவர்களிடம் உண்மை வந்த போது "இது சூனியம், இதை நாங்கள் மறுப்பவர்கள்'' எனக் கூறினர். (அல்குர்ஆன் 43:30)
இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் "இது தெளிவான சூனியம்'' என்று கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 46:7)
அவர்கள் சான்றைக் கண்டால் "இது தொடர்ந்து நடக்கும் சூனியம்'' எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 54:2)
இதுபோன்ற வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சூனியக்காரர் என்றும் நபியவர்கள் கொண்டு வந்ததை சூனியம் என்றும் மக்கத்து காஃபிர்கள் சொன்னார்கள் என்று இறைவன் திருமறையில் சொல்லுகிறான்.
பொய் என்றும் உண்மையில்லை என்றும் கற்பனை என்றும் சொல்லும் இடத்தில் ஸிஹ்ர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் இருந்தும் ஸிஹ்ர் என்றால் நபிகள் நாயகம் காலத்தில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை அறியலாம்.
நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் கடைசி நேரமானபோது ஒரு தூக்கம் தூங்கினோம். பயணிக்கு அதை
விட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்தத்
தூக்கத்திலிருந்து) எங்களை (காலை நேர) சூரிய வெப்பம்தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னாராவார். அதற்கடுத்து இன்னார். அதற்கடுத்து இன்னார். நான்காவதாக உறக்கத்தி
லிருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி அவர்களாவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண்விழிக்காதவரை அவர்களை உறக்கத்திலி ருந்து யாரும் எழுப்பமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச்செய்தி ஏதேனும் வருகிறதா?) என்று எங்களுக்குத் தெரியாது (அல்லவா?) (எனவேதான் அவர்களை யாரும் எழுப்ப மாட்டார்கள்).
உறக்கத்திலிருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு ஏற்பட்டுவிட்ட (அதிகாலைத் தொழுகை தவறிப்போன துயர) நிலைமையைப் பார்த்தபோது (எல்லோரையும் எழுப்ப) அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று உரத்த குரலில் "தக்பீர்' சொன்னார்கள். லி உமர் (ரலி) அவர்கள் நெஞ்சுரம் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.லி எனவே தொடர்ந்து உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
அவர்களுடைய சப்தத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும் உறக்கத்திலி ருந்து விழித்தெழுந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்," "பரவாயில்லை' அல்லது "எந்தப் பாதிப்புமில்லை' இங்கிருந்து புறப்படுங்கள்!'' என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலி ருந்து இறங்கினார்கள். உளூ செய்வதற்காக தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூ செய்தார்கள். (சுப்ஹுத்) தொழுகைக்காக (பாங்கு சொல்லி)
அழைப்பு விடுவிக்கப்பட்டபின் மக்களுக்கு (நேரம் தவறிவிட்ட அந்த தொழுகையை) நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது
அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள், "இன்னாரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லை?'' என்று கேட்டார்கள். அவர், "எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்துகொள்ளுங்கள். அது போதும் உங்களுக்கு'' என்று சொன்னார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது
அவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்படுவதாக முறையிட்டனர்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இன்னாரை அழைத்தார்கள். (அவருடன்) அலீ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "நீங்கள் இருவரும் சென்று தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப் பாருங்கள்!'' என்றார்கள். அவ்வாறே
அவர்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்த போது தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்ட படி) தமது ஒட்டகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், "தண்ணீர் எங்கே (உள்ளது)?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கி விட்டனர்'' (எங்கள் ஆண்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.) என்று கூறினாள்.
"அப்படியானால் நீ நட!'' என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் "எங்கே?' என்று கேட்டாள். அவர்கள் இருவரும் "அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினர். "மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?'' என்று அப்பெண் கேட்டாள். "நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில்தான்; நட'' என்று கூறிவிட்டு அப்பெண்ணை அவர்களிருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர்.
மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத்திலிருந்து இறங்குமாறு கூறினர்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச்சொல்லி 
அவ்விரு தோல்பைகளின் வாய்வழியாக தண்ணீரை பாத்திரத்தினுள் நிரப்பினார்கள். பிறகு அந்த தோல்பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, தண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய்களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே "தண்ணீர் பருகுங்கள்; பிறர் பருகுவதற்காக எடுத்துக்கொள்ளுங்கள்!'' என அறிவிக்கப்பட்டது. அவ்வாறே
அவர்களும் தண்ணீர் பருகினர். சிலர் பருகினர். சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக் கொண்டனர். இதில் பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கே கடைசியாக ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி (இந்தத் தண்ணீரை எடுத்துச்) சென்று, உங்கள் மீது ஊற்றிக்(குளித்துக்) கொள்ளுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தனது தண்ணீரை என்(னென்)ன
செய்யப்படுகிறது என்று பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தண்ணீர் எடுத்து முடிந்தபோது அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிட கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல்பையிலி ருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது) அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருட்களை) திரட்டுங்கள்!'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங்கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (தாரளமான) உணவுப் பண்டங்களை திரட்டி(க் கொண்டுவந்து), அதை ஒரு துணியிலிட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்திலமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர்.
பிறகு அப்பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள், "தெரிந்துகொள்! உனது
தண்ணீரிலிருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கியதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்கு தண்ணீர் பருகச் செய்தான்'' என்று கூறி னார்கள்.
பிறகு அப்பெண் தன்வீட்டாரிடம் நேரம் பிந்திப்போனபோது
அவர்கள், "இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழிந்து வருகிறாய்?'' என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண், "ஓர் அதிசயம் (என்னை சீக்கிரமாக வரவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டது.) இரு ஆடவர்கள் என்னைச் சந்தித்து "மதம் மாறியவர்' என்று கூறப்படுகிறதே அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார்'' என்று கூறிவிட்டு, அப்பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையேயுள்ளவர்களில் மிக வசீகரமான ஒரு மனிதராக அவர் இருந்தார்' அல்லது "உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்' என்று கூறினாள்.
அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணைவைப்பவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே போர் நடந்தபோது அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே ஒரு நாள் அப்பெண் தம் கூட்டத்தாரிடம், "இந்த மக்கள் வேண்டுமென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகி றார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு அபிப்ராயம் உண்டா?'' என்று கேட்டாள். அவர்கள் அனைவரும்
அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி 344,3571
 "அஸ்து ஷனூஆ' எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்று கறுப்புக்காக ஓதிப் பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "முஹம்மத் ஒரு மனநோயாளி' என்று கூறுவதை அவர் செவியுற்
றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்'' என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்று கறுப்புக்காக நான் ஓதிப்பார்த்து வருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு
அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்;
அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்தி விட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறுஇறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!'' என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) ளிமாத், "நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்'' என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறி னார்கள். இதைக் கேட்ட ளிமாத், "நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்'' என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டார்கள். அப்போது "உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் "என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)'' என்று கூறினார்.
பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், "இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?'' என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், "(ஆம்) நான் ஒரு குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்'' என்றார். அதற்கு "அதைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)'' என்று கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 1576
அனைத்து நபியின் சமூகமும் நபிமார்களின் அற்புதங்களை நம்ப மறுத்ததற்குக் காரணமாக கூறுவது ஸிஹ்ர் என்ற காரணத்தைத் தான். அதாவது இவர் எந்த அற்புதமும் செய்யவில்லை. ஏதோ வித்தை செய்து காட்டுகிறார் என்பதை தான் ஸிஹ் என்ற சொல் மூலம் தெரிவித்தார்கள்.
இஸ்லாத்தை மறுக்கும் காஃபிர்களுக்கே சூனியம் என்ற வார்த்தையை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது விளங்கியிருக்கும் போது குர்ஆனைக் கற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமூகம் சூனியத்திற்கு தவறான விளக்கம் கொடுப்பதை நம்மால் சகித்துக் கொள்ளவே முடியாது. எல்லா நபிமார்களும் செய்த அற்புதங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மை. அதில் எந்தப் பொய்யுமோ கற்பனையுமோ மதிமயக்கமோ கிடையாது என்று உறுதியாக நாம் நம்பவேண்டும்.
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.
(அல்குர்ஆன் 51:52)
நாம், இன்னும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர்லிசூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிற விஷயத்திற்குள் நுழையவே இல்லை. பிறகு எதற்கு இதையெல்லாம் சொல்லுகிறோம் என்றால், சூனியம் சம்பந்தமாக நாம் அலசி ஆராய்கிறபோது எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் முழுவதுமாக பார்த்துவிடுவது நல்லது. அதாவது சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நம் ஆய்வின் முடிவுகள் சரியாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பீடிகையை நாம் கொடுக்கி
றோம்.
ஸிஹ்ர் என்றால் கற்பனை, பொய், மாயை என்பது தான். அதில் எள்ளளவும் உண்மை இல்லை ஸிஹ்ர் சம்பந்தமாக இதுவரை பார்த்த பொதுவான தகவலின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
 
 
இமாம்களின் மாற்றுக்கருத்துகள்

இமாம்கள் ஒரு கருத்தைக் கூறிவிட்டால் அதை மறுத்து ஆய்வு செய்யக் கூடாது என்று மத்ஹபை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் பின்பற்றும் மத்ஹப் நூல்களில் ஒரு இமாமின் கூற்றை இன்னொரு இமாம் மறுத்து கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆசிரியரின் கருத்தையே மாணவர்கள் மறுத்து கூறியுள்ள செய்திகள் ஏராளம் மத்ஹப் நூல்களில் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக தமிழக அரபிக் கல்லூரியில் பாடத்திட்டத்தில் உள்ள ஹனஃபி மத்ஹப் நூலான முக்தஸர் அல்குதூரி என்ற நூலில் இடம்பெற்றுள்ள சில செய்திகளை மட்டும் இங்கே தருகிறோம். இதில் அபூஹனீஃபா இமாமின் பிரசித்தி பெற்ற மாணவர்களான அபூயூசுஃப், முஹம்மத் ஆகியோர் தம் ஆசிரியருக்கு எத்தனை விஷயங்களில் மாற்றுக் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பதை கவனியுங்கள்.
           ...                          (     : 8)
கிணற்றில் எலியோ அல்லது மற்றவைகளோ பெற்றுக் கொள்ளபட்டு அது எப்போது (கிணற்றில்) விழுந்தது என்று தெரியவில்லையானால் ... அது ஊதிப்போய் இருந்தாலோ அல்லது வெடித்திருந்தாலோ (அதில் உளூச் செய்து தொழுதவர்கள்) மூன்று பகல், மூன்று இரவு தொழுகையை திரும்பத் தொழவேண்டும். இது அபூஹனீஃபாவின் கூற்றாகும். எப்போது விழுந்தது என்று உறுதியாகும் வரை அவர்கள் மீது எதையும் திரும்ப தொழுதல் இல்லை. இது அபூயூஃசுப், முஹம்மதின் கருத்தாகும்.
 (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 8)
                            (     : 10)
அபூஹனீஃபா, முஹம்மத் அவர்களின் கருத்துப்படி மண்ணின் இனத்தில் ஆன மண், மணல், கல், சாந்து, சுண்ணாம்புகல், சுருமா, (பலநிற) கற்கள் போன்ற பொருள்களில் எந்த ஒன்றிலும் தயம்மும் செய்வது கூடும். அபூயூசுஃப் அவர்களின் கருத்துப்படி மண், மணல் இவற்றைக் கொண்டே தவிர மற்றவைகளில் கூடாது.             (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 10)
                        (     : 11)
அபூஹனீஃபா, முஹம்மத் அவர்களின் கருத்துப்படி பயணத்தில் தண்ணீர் (இருப்பதை) மறந்துவிட்டு தயம்மும் செய்து தொழுதுவிட்ட பின்னர் தண்ணீர் (இருப்பது) நினைவுக்கு வந்தால் அவர் தொழுகையை திரும்ப தொழமாட்டார். அபூயூசுஃப் கருத்துப்படி திரும்ப தொழுவார். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 11)
                              (     : 19-20)
லுஹர் தொழுகையின் முதல் நேரம், சூரியன் சாயும் போது, அதன் இறுதி நேரம், ஒரு பொருளின் நிழல் அது போன்று இரு மடங்கு மாறும் வரையாகும். இது அபூஹனீஃபாவின் கருத்தாகும். (லுஹரின் இறுதி நேரம்) ஒரு பொருளின் நிழல் அதுபோன்று மாறும் வரையாகும். இது அபூயூசுஃப், முஹம்மதின் கருத்தாகும். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 19,20)
                             (     : 20-21)
மஃரிப் தொழுகையின் முதல் நேரம், சூரியன் மறையும் போது, அதன் கடைசி நேரம், செம்மேகம் மறையும் போது. (செம்மேகம்) என்பது (சூரியன் மறைந்து) சிவப்பு நிறத்திற்கு பிறகு அடிவானத்தில் பார்க்கப்படும் வெண்மை நிறமாகும். இது அபூஹனீஃபாவின் கருத்தாகும். (சூரியன் மறைந்து) சிவப்பு நிறம் (மட்டுமே) என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்கள். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 20,21)
            (    : 22)
அந்த தொழுகையின் நேரம் வருவதற்கு முன்னர் பாங்கு சொல்வது கூடாது. பஜ்ர் தொழுகையைத் தவிர. இது அபூயூசுஃப் அவர்களின் கருத்தாகும். (மற்ற இரு இமாம்கள் இந்த கருத்தை கூறவில்லை)
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 22)
                     (     : 24)
(ஸஜ்தா செய்யும் போது) தன் மூக்கு, நெற்றியை (தரையில் வைத்து) ஸஜ்தா செய்வார். இந்த இரண்டில் ஒன்றை மட்டும் (கொண்டு ஸஜ்தா செய்வதை) சுருக்கிக் கொண்டால் அபூஹனீஃபா கருத்துப்படி கூடும். (அபூயூசுஃப், முஹம்மத் ஆகிய) இருவர் கருத்துப்படி கூடாது. (நூல்:முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 24)
                            (     : 28)
தொழுகையில் ஓதுவதில் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவானது, குர்ஆன் என்று சொல்லுமளவுக்கு இருப்பதாகும் என்று அபூஹனீஃபா கூறுகிறார். சிறிய அல்லது நீளமான ஆயத்துகளில் மூன்றுக்கு குறைவானது கூடாது என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 28)
                         (     : 25)
(பெண்கள் பள்ளிவாசலில்) ஜமாஅத்தில் கலந்து கொள்வது வெறுக்கப்பட்டதாகும். (என்றாலும்) பஜ்ர், மஃரிப், இஷா தொழுகைக்கு (கலந்து கொள்ள) கிழவி செல்வதில் தவறில்லை. இது அபூஹனீஃபாவின் கருத்தாகும். அனைத்து தொழுகையிலும் கிழவி (கலந்து கொள்ள) செல்லலாம் என்று அபூ யூசுஃப், முஹம்மத் கூறுகிறார்கள். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 25)
                          (     : 31)
இரவில் உபரியான தொழுகைகளை ஒரே ஸலாத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடும். அதற்கு மேல் அதிகப்படுத்துவது வெறுக்கப்பட்டதாகும் என்று அபூஹனீஃபா கூறுகிறார். ஒரே ஸலாத்தில் இரண்டு ரக்அத்களுக்கு மேல் அதிகப்படுத்தக்கூடாது என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 31)
                 (     : 35-36)
அபூஹனீஃபா கருத்துப்படி கப்பலில் அமர்ந்த வண்ணம் எந்த நிலையிலும் தொழுவது கூடும். இடையூறு இருந்தால் தவிர (அமர்ந்து தொழுவது) கூடாது. இது அபூயூசுஃப், முஹம்மதின் கருத்தாகும்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ, பக்கம் : 35,36)
                      (     : 36)
(ஜும்ஆவில்) தூய்மையான நிலையில் நின்ற வண்ணம் குத்பா கொடுப்பார். அல்லாஹ்வை நினைவு கூர்வதுடன் சுருக்கிக் கொண்டால் அபூஹனீஃபாவின் கருத்துப்படி கூடும். குத்பா என்று சொல்லப்படும் அளவிற்கு நீளமான உரை இருப்பது அவசியமாகும். என்று அபூயூசுஃப், முஹம்மத் கூறுகிறார்கள். (நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 36)
          ( ) (     : 37)
அபூஹனீஃபாவின் கருத்துப்படி (பெருநாள் அன்று) திடல் வழியில் தக்பீர் கூறமாட்டார். அபூயூசுஃப், முஹம்மத்தின் கருத்துப்படி தக்பீர் கூறுவார்.
(நூல் : முக்தஸர் அல்குதூரீ,பக்கம் : 35,36)
மனிதனின் கருத்துகளில் நிச்சயம் தவறுகள் இருக்கும். அதை திருக்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து சரியானதை ஏற்று நடப்பதே சரியான வழியாகும். இதையே இமாம் ஷாஃபி அவர்களும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
141                                           
ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள் '' நான் இந்த புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் '' அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் '' என்று தன் திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்த புத்தகங்களிலே திருமறை குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பி விட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்).
(முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)
 
 
வெட்கம் - ஆனுமதியும் தடையும்

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது.
ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், உறவினர்களிடத்தில், அண்டை வீட்டாரிடத்தில், இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் எல்லாரிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதைப் பற்றியும் எதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. இந்த வகையில் இஸ்லாமே மனிதனுக்கான நேரான வழிகாட்டுதலாகும். மனிதனுக்குத் தேவையான அனைத்தையுமே இஸ்லாம் கற்றுக் கொடுக்கும்.
அந்த வகையில், மனிதனிடம் இருக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் இயல்புகளைப் பற்றியும் மிக விரிவாகவே அலசுகிறது. இப்படி மனித இயல்புகளைப் பற்றியும் குணாதிசயங்களைப் பற்றியும் பேசும்போது மனிதனால்
பின்பற்ற முடியாதவற்றை நம்மிடம் ஒருக்காலும் இந்த மார்க்கம் திணிக்காது. இதிலிருந்து. இஸ்லாம் எதைச் சொன்னாலும் மனிதனால் பின்பற்றக்கூடியதையே சொல்லும், பின்பற்றத் தகாததை சொல்லாது என்பதை நாம் நம்பவேண்டும்.
இப்படி மனித குணங்களில் ஒன்றாக உள்ள வெட்கத்தைப் பற்றி நாம்
அலசுவோம்.
 பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கத்தில் வெட்கப்படுவதைப் பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் நாம் அதைப் பற்றி இதில் அதிகமாக எழுதமாட்டோம். மாறாக வெட்கப்படக்கூடாத காரியங்கள், செயல்கள், இடங்கள், சந்தர்ப்பங்கள் என்னென்ன? என்பதை அலசுகிறோம். எனவே வெட்கம் சம்பந்தமான சில அடிப்படைகளைப் பார்த்துவிட்டு வெட்கப்படக்கூடாத காரியங்களைத் தொடர்வோம்.
முதலில் வெட்கம் என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். வெட்கம், வெட்கப்படுதல் போன்றவைகளை விளங்காமல் வெட்கப்படக் கூடாத காரியங்களை விளங்கிக் கொள்ளமுடியாது. எனவே வெட்கம் பற்றி அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்வோம். வெட்கம் என்பதை அரபி மொழி
அகராதியில் அல்ஹயா ()என்பார்கள்.
வெட்கம் என்பது பெயர்ச் சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.
மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1. நாணம் லி ள்ட்ஹ்ய்ங்ள்ள், க்ஷஹள்ட்ச்ன்ப்ய்ங்ள்ள் லி திறமையை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது, பெண் மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கப்படுவது போன்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 2. அவமானம் லி ள்ட்ஹம்ங், க்ண்ள்ஞ்ழ்ஹஸ்ரீங் லி தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது.
பார்க்க: கிரியாவின் தமிழ் அகராதி
மேற்சொன்ன கருத்தில்தான், அரபி மொழியின் பிரபலமான, ஆதாரத்திற்கு ஏற்கத் தகுந்த லிஸானுல் அரப் என்ற அகராதியிலும் வெட்கத்திற்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
லிஸானுல் அரப்: பாகம் 11, பக்கம் 200
பிறர் பழிப்பிற்கு பயந்து ஒன்றிலிருந்து தன்னை விடுவித்து விலக்கிக் கொள்வது அல்லது விலகிக் கொள்வது. (அல்முன்ஜித்: பக்கம் 165)
மேலும் ஹயா என்பதற்கு உயிர்வாழ்தல் என்று கூட பொருள் உண்டு. அதனால்தான் நாம்கூட மானம் இழப்பின் உயிர்வாழ்தல் உடமையா? என்றுகூட கேட்கிறோம். எனவே உயிர்வாழ்வதின் அர்த்தமே மானத்தோடும் மரியாதையோடு வாழ்தலாகும். இதுதான் வெட்கம்.
மார்க்க ரீதியாக வெட்கத்தைப் பற்றிய சில அடிப்படையான செய்திகளைப் பார்த்துவிட்டு தலைப்புக்குள் சென்றுவிடுவோம்.
வெட்கம் ஈமானின் கிளை
வெட்கப்படுவது ஈமானின் ஒருமுக்கிய கிளையாகும். ஏனெனில் வெட்கம் கெட்டுவிட்டால் நமது வெளிப்படையான உள்ரங்கமான ஈமானின் பிற
அம்சங்களையும் இது இரும்பைத் துரு அரிப்பதைப்போன்று அரித்துவிடும். வெட்கப்படுகிற குணம் நம்மிடம் இல்லையெனில் நம்மில் அதிகமானோர்
அருவறுக்கத்தக்க ஆபாசங்களை சர்வசாதாரணமாக செய்துவிடுவோம். வெட்கம் என்பது இருப்பதினால்தான் நம்மை அனைத்து விஷயங்களிலும் அடக்கிக் கொண்டு இருக்கிறோம். எனவே வெட்கம் ஈமானில் மிகமுக்கியம் என்பதினால்தான் நபியவர்கள் ஈமானுக்கு எத்தனை கிளை இருக்கிறது என்பதைச் சொல்லும்போது வெட்கத்தையும் அத்தோடு சேர்த்தே குறிப்பிடுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் (நாணமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.
அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 9
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது "அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் (வெட்கமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 58,59
வெட்கத்தின் முக்கியத்துவம்
பொதுவாகவே வெட்கம் இல்லையென்றால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்றாகிவிடும். இதற்குச் சிறந்த உதாரணமாக, திரைத் துறையினரை சொல்லலாம். காசுபணம் சம்பாதிப்பதற்காக கூத்தடிக்கும் வேலைகளை, அதுவும் கணவன் மனைவி செய்யவேண்டிய அந்தரங்கக் காரியங்களை காட்சியாக்கி அசிங்கமாகவும் ஆபாசமாகவும் வெளியில் பிறருக்குக் காட்டுவதற்குக் காரணம், வெட்கம் கெட்டுவிடுவதினால்தான். எதார்த்தத்தில் இதை யாரும் விரும்புவதில்லை. அப்படி விரும்பினால் அவனிடமும் வெட்கம் கெட்டு விட்டது என்று அர்த்தம்.
அதே போன்று சிலர், வெட்கமில்லாமல் எதையும் பத்திரிக்கையிலே எழுதுவார்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில்கூட நக்கீரன் கோபால் தனது பத்திரிக்கையிலே தமிழக முதலமைச்சரைப் பற்றி தவறாக வெட்கமில்லாமல் எழுதியைச் சொல்லலாம். நக்கீரனைப் போன்று பல பத்திரிக்கைகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறு செய்திகளை வெட்கமில்லாமல்தான் சொல்லுகிறார்கள் என்பதை சாதாரண அறிவுள்ள எவராலும் விளங்கிக் கொள்ளமுடியும்.
அதேபோன்று இன்றைய அரசியல்வாதிகள் மக்களிடத்தில் பொய்வாக்குறுதிகளைச் சொல்லி வெட்கமில்லாமல் மானங்கெட்டு ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் அத்தனை வாக்குறுதிகளையும் மீறுவார்கள். இதுவும்கூட வெட்கங்கெட்ட செயலாகும்.
அதேபோன்று நமது சமுதாயத் தலைவர்களிலும்கூட பல கழிசடைகள்
அரசியலுக்காவும் உலக ஆதாயத்திற்காகவும் வெட்கங்கெட்டு இஸ்லாத்தை அடகுவைக்கிற காட்சிகளை சாட்சிகளோடு செய்வதையும் கண்கூடாக நாம் அன்றாட வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்படி, எந்த மனிதனிடத்தில் வெட்கம் கெட்டுவிடுகிறதோ அவன் எந்தத் தவறையும் செய்வான் என்பதை நபியவர்கள் நமக்கு எச்சரிக்கிறார்கள். மேலும் எல்லா நபிமார்களும் சில அடிப்படையான கொள்கை கோட்பாடுகளை ஒரே மாதிரியாகவே சொல்லுவார்கள். அதே போன்று ஆதமிலிருந்து ஆரம்பித்து நூஹ், இத்ரீஸ், இப்ராஹீம் என்று இறுதி நபி முஹம்மது அவர்கள் வரைக்கும், இப்படி எல்லா நபிமார்களுமே இந்த வெட்கம் கெட்டால் ஒருவன் எதனையும் செய்வான் என்பதையும் சொல்லியுள்ளார்கள் என்பதிலிருந்து வெட்கத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்கிற முக்கியத்துவம் விளங்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்கüன் சொற்கüலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகüல்) ஒன்றுதான், "நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்'' என்பதும்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 3483,3484,6120
வெட்கம் எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கவேண்டும் என்பதை யாருமே மறுப்பதற்கில்லை. வெட்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு இதுவே போதுமானதாகும். நமது தலைப்பு வெட்கப்படக்கூடாத விஷயங்களைப் பற்றியதுதான். இனி வெட்கப்படக்கூடாதவைகளைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கம் கூடாது
இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான இந்த சத்தியப் பிரச்சாரக் கொள்கையை எவரிடமும் எடுத்துச் சொல்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. அப்படி சத்தியப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும்போது வெட்கம் தடையாக இருப்பின், அல்லது ஆள்பார்த்து ஆளுக்குத் தகுந்தமாதிரியெல்லாம் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் நாம் வழிகெட்டு விடுவோம். எனவே யார் முகத்தையும் பாராமல் தயவுதாட்சண்யமின்றி ஒளிவுமறைவு இல்லாமல் காய்தல் உவத்தலின்றி சொல்லவேண்டிய செய்தியை இறைவனுக்குப் பயந்து சொல்லிவிட வேண்டியதுதான். இதுதான் சத்தியப் பிரச்சாரம் செய்கிற, சத்தியக் கொள்கையைக் கடைபிடிக்கிற ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு. இதில் வெட்கப்படுவது நூறு சதம் தவறானதாகும்.
இப்படித்தான் நம்முடன் இருந்தவர்களில் எத்தனையோ பேர் வெட்கப்பட்டோ அல்லது தயவுதாட்சண்யத்திற்காகவோ அல்லது ஒருமாதிரியாக இருப்பதற்காகவோ சத்தியத்தை மறைத்ததினால் இன்று வழிகேட்டில் இருப்பதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று நிர்வாகத்திலோ குடும்பத்திலோ ஒரு தவறு நடப்பதை வெட்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ தட்டிக்கேட்காமல் இருந்தால், நாளடைவில் அந்தத் தவறை நாமும்கூட செய்துவிடுவோம். அல்லது நமது மேற்பார்வையிலேயே அந்த தவறு நடைபெறுவதற்கு உறுதுணையாகிவிடுவதையும் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கத்தான் செய்கிறோம்.
எனவே சத்தியத்தைச் சொல்வதற்கு, உண்மையை உரைப்பதற்கு எவரும் வெட்கப்படவே கூடாது.
கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக்கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை. (அல்குர்ஆன் 2:26)
மேற்சொன்ன வசனத்தில் இறைவன் கொசுவையோ அதைவிட அற்பமானதேயோ உதாரணம் கூறுவதற்கு வெட்கப்படமாட்டான் என்று சொல்வதிலிருந்தே இறைவன் சத்தியத்தை எடுத்துரைக்க தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. எனவே நாமும் சத்தியக் கருத்தை உண்மையைச் சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும்? வெட்கப்படவேண்டும்? எனவே வெட்கப்படக்கூடாது. இறைவன் நபிக்குச் சொன்னதைப் போன்று ஏவப்பட்டதைப் போட்டு உடைத்துவிட வேண்டியதுதான்
(பார்க்க: அல்குர்ஆன் 15:94).
சில இயக்கத்தவர்களும் தனிமனித வழிபாட்டை ஆதரிப்பவர்களும் இப்படி தயவு தாட்சண்யம் என்கிற வெட்கத்தினால்தான் நன்மையை மட்டும் ஏவினால்
போதும். தீமை தானாகவே ஓடி ஒளிந்துவிடும் என்று ஏகவசனம் பேசுகி
றார்கள். இதற்கெல்லாம் காரணம் வெட்கம்தான் தடையாக நிற்கிறது. அல்லது வேறெதாவது காரணமாக இருக்கும். எந்தக் காரணமாக இருந்தாலும் தவறு தவறுதான். இதை சரியென வாதிடுவது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும்.
மேலும் நபியவர்களின் வாழ்விலும்கூட இதற்கு சான்றுகள் இருக்கின்றன.
(அபூதல்ஹா ரலி அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலிரி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமைதான்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, "பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி),
நூல்: புகாரி 130,282,3328, முஸ்லிம் 520,521,522,523,524
சில விஷயங்களில் பிறர் வருத்தம் பாராமல் வெட்கமில்லாமல் நடந்து கொள்வது
பொதுவாக அந்தஸ்து, உயர்வு அல்லது ஏற்றத்தாழ்வு இப்படி ஏதேனும் ஒன்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு பிறர் மனம் நோகாமல் பழகவேண்டும் என்று சொல்லிக் கொண்டு, யானை தன்மீது மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டதைப் போல் சிலர் தனக்குத்தானே தர்ம சங்கடத்தை விலைகொடுத்து வாங்குவதைப் பார்க்கிறோம். இதுவெல்லாம் தேவையில்லாத வீண்சிரமத்தை தனக்காகவே ஏற்படுத்திக் கொள்வதாகும்.
எனவே பிற மனம் நோகுமே என்று எல்லா இடத்திலும் வெட்கப்பட்டுக் கொண்டு தேவையற்ற சிரமத்தை அனுபவிக்க வேண்டியதில்லை. யாராக இருந்தாலும் தெளிவாக விஷயத்தைச் சொல்லிவிட்டு இடத்தைக் காலிபண்ணிவிட வேண்டியதுதான். இல்லையெனில் நமது நேரமும் நமது உழைப்பும் நமது வாய்ப்புகளும் வீணாகி பாழாகிவிடும்.
இதை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். நாம் முக்கியமான அவசரமான பிரயாண நேரத்திலோ அல்லது வேலையிலோ இருக்கிற போது நம்மால் மறுத்துப் பேச முடியாத சிலர் நம்மிடம் மிகமுக்கிய விஷயத்தை சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால்
அந்த நேரம் நமக்கான மிகமுக்கிய நேரமாக இருக்கும். அது அவருக்குத் தெரியாது. அவர் எப்போதும் போலவே நம்மை அணுகுவார். இந்தநேரத்தில் நீங்கள் எப்படி அவரிடம் நமது தேவையை அல்லது அவசரத்தைச் சொல்வது என்று வெட்கப்படுவீர்களானால் அதனால் ஏற்படுகிற இழப்புக்கு நீங்கள்தான் காரணம். அவரைக் குறைகூற முடியாது. எனவே இதுபோன்ற சந்தர்பங்களில் உண்மை நிலையை சொல்லி அந்த அறுவை கேசிடமிருந்து நகர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம். இல்லையேல் தேவையற்ற கஷ்டங்களை
அனுபவிப்பீர்கள். என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பிறரது முக்கியத்தை உணர்ந்து இதுபோன்று பேசுவதையும் சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக் கொள்வது மிகவும் நல்ல பண்பாகும்.
எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெட்கப்படக் கூடாது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
அபூ உஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ü வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் என்னிடம், "அல் லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பüப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!'' என்று சொன்னார்கள். அதற்கு நான், "(அவ் வாறே) செய்யுங்கள்!'' என்று அவர்கüடம் கூறினேன். ஆகவே, அவர்கள் பேரீச்சம்பழம், நெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றை எடுத்து "ஹைஸ்' எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள். அதை என்னிடம் கொடுத்து நபி (ஸல்) அவர்கüடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி நடந்(துசென்று கொடுத்)தேன். அப் போது அவர்கள் என்னிடம், "அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்களைத் தம(து மண விருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கின்றவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து(முடித்து)விட்டு, நான் திரும்பிவந்தேன்.
அப்போது (நபியவர்கüன்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்தனைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப்பேராக அழைக்கலானார்கள். அவர்கüடம், "அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!'' என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்கüல் வெüயே சென்றுவிட்டவர்கள் போக ஒருசிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்து விட்டனர். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (வழக்கம் போல் தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். "(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்'' என்று நான் கூறினேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்து ஸைனப் (ரலி) அவர்களது அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (33:53ஆவது) வசனத்தை ஓதினார்கள்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்கüல் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியüக்கப்பட்டாலும்,
அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை
அüக்கின்றது. ஆயினும், இதனை உங்கüடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (சிறுவயதில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன். புகாரி 5163
இந்தச் செய்தி புகாரியிலும் முஸ்லிமிலும் (பார்க்க: 2796,2798,2802,2083) பல்வேறு அறிவிப்புகளில் பல வார்த்தைகளில் பதிவாகியுள்ளது. முஸ்லிம் அறிவிப்பில் இன்னும் தெளிவாகவே உள்ளது. பலமுறை நபியவர்கள் பேசிக் கொண்டிருந்த ஸஹாபாக்களை எழுந்துபோகச் சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லாமலே செயலில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு அல்லாஹ்வே இதுகுறித்து வசனம் இறக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதில் நபியவர்கள் ஸஹாபாக்களிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு ஏதேதோ செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காக இன்னும் சில அறிவிப்புக்களைத் தருகிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸைனப் பின்த் ஜஹ்ஷ்' (ரலி)
அவர்களை மணமுடித்துக் கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே
அமர்ந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பல முறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை.
அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்து விடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர்.
ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்கüடம் செல்லப் போனார்கள்.
அப்போதும் அவர்கள் அமர்ந்து (கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி, நூல்: புகாரி 4791
...அப்போது நபி (ஸல்) அவர்கள் ("வலீமா' விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக்கொண்டே
அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெüயே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போது தான் அல்லாஹ்" இறைநம்பிக்கை கொண்டவர்களே!.. 33:53 வது வசனத்தை
அருளினான்.   நூல் : புகாரி 4792
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர்... ஆனால், மூன்றுபேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள்.
நான் சென்று, அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என நபி (ஸல்)
அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள்...
நூல் : முஸ்லிம் 2801
...அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இருக்க, நீண்ட நேரம் பேசிக்கொண்டே (அமர்ந்து) இருந்தனர். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) ஏதேனும் கூற நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டார்கள். எனவே, அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில்
(அழைப்பின்றி) நுழையாதீர்கள்'' என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை
அருளினான்.
நூல் : முஸ்லிம் 2804
வளரும் இன்ஷா அல்லாஹ்
 
 
தூய்மை                     தொடர் :4
 
ஒருவரை பார்க்கும் பொழுதே பல கெட்ட எண்ணங்களுடன் அவர்களுடன் பழகுபவர்களையும் உதட்டில் தேனும் உள் நாக்கில் விஷமும் வைத்து வாழ்பவர்களும் இரட்டை வேடம் போடுபவர்களும் மக்களில் ஏராளம் உள்ளனர். மனிதர்களிடத்தில் நற்பேறு வாங்குவதற்காக நல்லவர்களாக நடிப்பவர்களோ இறைவனிடத்தில் உண்மையாளர்களாக இருப்பதில்லை. மனிதர்களால் வெளிப்படையானதை மட்டும் தான் பார்க்க இயலும். ஏனெனில் கெட்டதை செய்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் பார்வையில் நல்லவர்களாகவும் நல்லதை செய்ய நினைத்து முடிவு கெட்டதாக அமைந்து மனிதர்களின் பார்வையில் கெட்டவர்களாகவும் காட்சி கொடுக்கலாம். இறைவனோ அவனுடைய வெளித்தோற்றத்தை பார்க்காமல் உள்மனதை பார்க்கின்றான்.
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார்.                           அல்குர்ஆன் 91 :7லி10
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக,
உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்
கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (5012)
அஹ்னஃப் பின் கைஸ் அவர்கள் கூறியதாவது: (ஜமல் போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ(ரழி)அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரழிரி) அவர்கள் என்னைச் சந்தித்து "எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவிசெய்திடச் செல்கிறேன்'' என்றேன். அதற்கு
அபூபக்ரா (ரழி) அவர்கள் "நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரண்டு முஸ்லிரிம் மக்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக்கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்'' என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் "அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசைகொண்டிருந்தார்' என்று சொன்
னார்கள்'' என்றார்கள்.
 நூல் : புகாரி : 31
அனைத்து சூழ்நிலைகளிலும் தூய்மையை மேற்கொள்ளுதல் :
ஒரு மனிதன் அவனுடைய எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையான அந்தரங்கமான வாழ்க்கையிலும் படைத்த இறைவன் முதல் தன் குழந்தைகள் வரை உண்மையானவனாக வாழ்வதும் தூய்மையாகும். இதைத் தான் மக்களுக்கு மத்தியில் இறைவனிடத்தில் தூய்மையானவனாக
நடந்து கொள்பவர்களுக்கு இறையச்சவாதி என்றும், வியாபாரத்தில் நேர்மையாக நடப்பவர்களுக்கு கை சுத்தம் என்றும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவர்களுக்கு வாய் சுத்தம் என்றும், கற்பொழுக்கத்துடன் நடப்பவர்களுக்கு கற்புக்கரசி என்றும் மக்களுக்கு மத்தியில் கூறுகின் றனர்.
இறைவனிடத்தில் தூய்மையாக
இறைவன் கொடுத்த அருட்கொடைகளை அனுபவிக்கும் மனிதன் அதை அனுபவித்துக்கொண்டே புறக்கணிக்கின்றான். இறைவன் தனக்கு மட்டும் தான் சோதனையை கொடுத்தது போலவும் தன்னை விட இவ்வுலகில் துர்பாக்கியசாலி இல்லை எனவும் நினைக்கின்றனர். இவ்வுலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாலோ பொருளாதாரத்தாலோ என ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இது தான் எதார்த்த நிலையாகும். மனிதன் இத்துன்பத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றான். இறைவனை சபிக்கின்றானா? அல்லது பொறுமையாக இருக்கின்றானா? என்பதை இறைவன் சோதிக்கின்றான். இதை புரிந்துகொள்ளாத மனிதன் அந்த சோதனையில் தோல்வியை தழுவுகின்றான்.
இறைவன் நல்லதை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்பவன், சோதனை தரும் போது கோபித்துக் கொண்டால் அவன் இறைவனிடம் தூய்மையாக நடக்கவில்லை என்று பொருள்.
உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும்
அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு    ஏற்பட்டால்
அவனிடமே முறையிடுகின்றீர்கள்.
பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.
அல்குர்ஆன் 16 :53 லி55
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடைவீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:20
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்''எனக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 89 :15 ,16
இறைவன் துன்பத்தை கொடுக்கும் போது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும்.
மேலும் அத்துன்பத்தின் போது இறைவனை நினைவுகூராமல்
அவனை பிராத்திக்காமல் இஸ்லாம் அனுமதிக்காத ஒப்பாரி, தர்ஹாவிற்குச் சென்று பிரார்த்தித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆறுதல் தேடி எத்தனையோ நபர்களிடம் கஷ்டங்களை சொல்லி அழும் பெண்கள் இறைவனிடத்தில் சொல்லி அழுவதில்லை. இறைவனால் நீக்க முடியாததை இவர்கள் நீக்கிவிடுவார்களா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நான் இறைவனிடம் பிரார்த்தித்தும் எனக்கு
இறைவன் தரவில்லை என்று இறைவனின் வல்லமையை ஆற்றலை இவர்கள் இழிவுபடுத்துகின்றார்கள்.
மேலும் அவனுக்கு செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளிலும் தூய்மையற்ற முறையில் அவனை நெருங்குகின்றனர். தர்மம், நோன்பு, தொழுகை, ஹஜ், குர்பானி கொடுத்தல் மற்றும் இன்னபிற விஷயங்களில் பிறர் மெச்சுவதற்காக இந்த காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவும் முற்றிலும் தவறான செயலாகும்.
மஹ்மூது இப்னு லபீது (ரலி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் அதிகம் அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள்
அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முகஸ்துதி (பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்தல்) என்று கூறினார்கள்.
அஹ்மத் :22528
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் "யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர்(உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாüல்) விளம்பரப்படுத்துவான்.யார்முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாüல்)
அம்பலப்படுத்துவான்''என்று கூறியதைக் கேட்டேன்.
நூல் : புகாரி 6499
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தமக்கு அல்லாஹ் வழங்கியதை (நல் வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும்? அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:38,39)
அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும்
அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
நூல் : புகாரி 4919
நாம் எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற தூய்மையான எண்ணப்போக்குடன் செய்யவேண்டும்.
 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஈமான் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், "இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்துவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்'' என்றார்கள்.
அடுத்து "இஹ்ஸான் என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்)'' என்றார்கள். நூல் : புகாரி : 50
வளரும் இன்ஷா அல்லாஹ்
 
சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம்
 
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இதில் எது சரி? எது தவறு? என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காமல் செயல்படுபவர்கள் ஏராளம். இவ்வாறு செயல்படுபவர்களைப் பார்த்ததால்தான் கண் போன போக்கில் கால் போகலாமா? கால் போன போக்கில் மனம்
போகலாமா? மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? என்று பாட்டெழுதுகி றார்கள்.
மனம் போன போக்கில் போனதனால்தான் இன்றைக்கு பல பிரச்சினைகளை மனிதன் தன் நெஞ்சில் சுமக்கிறான். அதே அவனுக்கு மன நோய்களைத் தந்து கொண்டிருக்கிறது.
சந்தேகம் எனும் சாத்தான்
தெருவில் ஜோடியாக செல்லும் ஆணையும் பெண்ணையும் பார்த்தவுடன் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றுவதுண்டு அண்ணன் தங்கையாக இருப்பார்களா? அல்லது கணவன் மனைவியாக இருப்பார்களா என்று எண்ணுவதைவிட கள்ளக்காதல் ஜோடியாக இருப்பார்களா? என்று எண்ணுபவர்கள்தான் அதிகம்.
வேலைக்குச் செல்லும் கணவனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்குமா?
நல்லவரான நம் கணவனை வேறு பெண்கள் தன் வலையில் சிக்க வைத்து விடுவார்களோ? என்று மனைவி சந்தேகம் கொள்கிறாள். கடையில் வேலைக்கு இருப்பவர் கல்லாப் பெட்டியில் கைவைத்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கடையில் தொழிலாளி பொய் கணக்கு எழுதியிருப்பாரோ என்று முதலாளிக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.
பள்ளிவாசல் நிர்வாகம் செய்யக் கூடியவர்களைப் பார்த்து பைத்துல்மால் பணத்தை கையாடல் செய்திருப்பார்களா? நம்மைப் பற்றி ஏதாவது கூட்டாகப் பேசி சதி திட்டம் தீட்டியிருப்பார்களா? என்று பல தவறான எண்ணங்கள் பலரிடம் ஏற்படுகிறது.
கல்லூரிக்குச் செல்லும் பிள்ளை முறையாக செல்கிறானா? மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் முஸ்லிம் பெண்மணி அங்குதான் செல்கிறாளா? பக்கத்து வீட்டுப் பெண்மணி எங்கே போகிறாள்? எதற்காகப் போகிறாள்? யாரைப் பார்க்கப் போகிறாள்? இப்படி நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் பேசப்படும் பேச்சுகளும் நடத்தைகளும் நமக்கு சந்தேகம் ஏற்படுத்தும். சந்தேகங்கள் அனைத்தும் உண்மையாகுமா? அல்லது இவ்வாறு சந்தேகப் படலாமா? திருக்குர்ஆன் கூறுவதைப் படியுங்கள்
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?
அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.         அல்குர்ஆன் (49:06)
நாம் சந்தேகப்படுவதில் சிலது பாவங்களாகவும் இருக்கக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்.
எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனும திக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே.
ஆதாரம் புகாரி (50)
நாம் சந்தேகப்படுவதில் சில விஷயங்கள் சரியானதாக இருக்கும். சில தீமைகளைத் தரக்கூடியதாக இருக்கும். அப்படியென்றால் நாம் எண்ணுவது நன்மையைத் தருமா? என்பதை எவ்வாறு தீர்மானிப்பது அதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
ஆதாரம் இல்லாமல் யாரையும் நாம் சந்தேகம் கொள்ளக்கூடாது. பொதுவாக அனைவரையும் நல்லவராகவே எண்ண வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருüன்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (6066)
மனதில் தவறாக கூறிவிட்டோமோ என்ற நெருடல் வந்துவிட்டால் அது பாவமான காரியமாகும் என்பதையும் மனதில் கொள்க.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு') மற்றும் தீமை ("அல்இஸ்மு') பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி, நூல் : முஸ்லிம் (4992)
நபி (ஸல்) அவர்கள் கூறிய படி நடந்து கொண்டால் நமது உள்ளமும் மனதும் தூய்மையாகும். நம்முடைய ஒவ்வொரு வெளிப்படையான செயலுக்கும் அடிப்படையாக அமைவது உள்ளமாகும். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலில் உள்ள கை, கால், கண் போன்ற அனைத்தும் சரியாக இயங்குவதற்கும் தவறான வழியில் செல்வதற்கும் உள்ளமே மூல காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிக: உடரில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல் : புகாரி:52

20.02.2012. 04:21

தீன்குலப்பெண்மணி ஜனவரி 2012

தீன்குலப்பெண்மணி ஜனவரி 2012

தலையங்கம்

பிப்ரவரி 14 என்றவுடன் காதலர் தினமே மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் வரும் பிப்ரவரி 14 அன்று இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்கள், ஆட்சியாளர்களை கண்டிக்கும் தினமாக அமையும்.

தேர்தல் வரும் போது முஸ்லிம்களை பார்ப்பவர்கள், வெற்றி பெற்றவுடன் முஸ்லிம்களையும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் தொடர் போராட்டங்கள் மூலம்  முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற முடிந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் விலைபோகிவிடாமல் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலை கும்பகோணத்தில் பிரமாண்டமாக காட்டியபோது இடஒதுக்கீடுக்கு ஜெயலலிதா ஆணையம் அமைத்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதியும் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினார். அதிலும்கூட சரிவர செயல்படுத்தாமல் இருந்தபோது பெரும் போராட்டம் நடத்தி, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி மூலமே முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்தது உண்மைதான் என்பதை வெளிப்படுத்தினோம்.

முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை.

அதை கூடுதலாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தது. யார் இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவார்களோ அவர்களுக்குத்தான் முஸ்லிம்களின் ஓட்டு. அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று கூறியபோது ஜெயலலிதா எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ கூறாத காரணத்தாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய காரணத்தாலும் திமுகவை கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் (இறைவனின் நாட்டம்) திமுக தோல்வி அடைந்தது அதிமுக வெற்றியடைந்தது.

தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்த ஜெயலலிதா முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்பதை காலம் கடந்து உணர்ந்தவர், திருச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த மர்யம் பிச்சையை ஆதரித்து திருச்சியில் நடந்த பிரச்சாரகூட்டத்தில். . .

தி.மு.., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்து ஒன்பது மாதங்கள்ஆகிவிட்டது ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஜெயலலிதாவை ஆதரித்து கூட்டணி வைத்த மமக, அன்று ஜெயலலிதா முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி தர வாக்குறுதி அளித்துள்ளார் என்று கூறி அதன் வீடியோ கிளிப்பையும் தனது இணைதளத்தில் பதிவு செய்ததோடு சரி வேறு எதையும் செய்யவில்லை. தற்போது பிடித்து வைத்த பிள்ளையாரைப்போன்று இரண்டு நபர்களும் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

இவர்கள் இப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ள நாம் இருக்க முடியாது. ஆட்சியாளர்களை தட்டிக் கேட்டு இடஒதுக்கீட்டு

அளவை தமிழகத்தில் உயர்த்தவும். தொடர்ந்து ஏமாற்றி வரும் காங்கிரஸ் அரசு மத்தியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் மாபெரும் வாழ்வுரிமை போராட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. அதில் பெருந்திரளாக நாம் கலந்து கொண்டு ஆட்சியாளர்களை அசைத்து, நமது வாழ்வுரிமையை பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை       தொடர் : 7

சூனியமா? தந்திரமா?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ   முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

இந்த வசனத்தின் விளக்கத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஸிஹ்ர்-சூனியம் சம்பந்தமாக அக்குவேறாக ஆணிவேராக பார்ப்பது மிகவும் நல்லது. இனிவரும் காலங்களில் இந்த வசனத்தைத் தவறாக விளங்கிவிடாத அளவுக்கு நாம் சூனியத்தை விரிவாக அலசவேண்டும். இந்த வசனத்தை யார் யார் எப்படி எப்படியெல்லாம் தவறாக விளங்கியும் விளக்கியும் உள்ளனர் என்பதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதின் மூலம் நமது ஈமானுக்கு பாதுகாப்பாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்.

எனவே தற்போது இந்த வசனத்தை நிறுத்திவைத்துவிட்டு சூனியத்திற்குள் நுழைந்துவிட்டு அதில் தெளிவு பெற்றபிறகு இந்தவசனத்தை விளக்கினால் மிகஎளிதாக விளங்கிட முடியும். ஷைத்தானின் தூண்டுதலில் இருந்தும் இலகுவாக தப்பித்துக் கொள்வதற்கு சரியான வழியாக இருக்கும் என்பதை கூறிக் கொண்டு சூனியத்திற்குள் நுழைவோம்.

முதலில் ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அலச வேண்டும். தற்போது, ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு பில்லி, சூனியம், மாயமந்திரம் போன்ற அர்த்தங்களில் இன்று உலமாக்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தை நாமாக தீர்மானிக்கக்கூடாது. ஒரு வார்த்தையின் நேரடியான பொருளை,

அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு அந்த மொழியின் அகராதியைப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் ஸிஹ்ர் என்பதற்கு நேரடிப் பொருள் (கவனத்தை) ஈர்த்தல், (கவர்தல்) என்று பொருள்.

உதாரணமாக ஒருவர் தனது பேச்சினால் மக்களைக் கவர்ந்து ஈர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குப் பெயர் ஈர்க்குதல் (ஸிஹ்ர்) என்று பெயர். தெருவில் செல்லுகிற ஒரு அழகான பெண்ணை ஒருவன் ஒரு மாதிரியாக பார்க்கிறான் என்றால் அவள் அவனை ஈர்க்கிறாள் (ஸிஹ்ர்) என்று பெயர். அதே போன்று, ஒருவன் ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக எடுக்கிறான். ஆனால் அதன் கடைசிப் பக்கம் வரைக்கும் கீழே வைக்காமல் படித்து முடிக்கிறான் என்றால் அந்தப் புத்தகம் அவனை ஈர்க்கிறது என்று பொருள். அதாவது பேச்சினாலோ அல்லது எழுத்தாலோ அல்லது நடவடிக்கையாலோ அல்லது காட்சியாலோ இப்படி எந்த ஒன்றாலும் மற்றொன்றைக் ஈர்த்தால் அவை அத்தனைக்கும் ஸிஹ்ர்-வயப்படுத்துதல், கவர்தல் என்று தான் அரபிமொழி  அகராதியில் அர்த்தம் உள்ளது. இதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் நபிமொழியிலிருந்தும் ஏராளமான ஆதாரங்களைக் காட்டலாம்.

நபிமார்கள் தங்களது சமுதாயங்களில் பிரச்சாரம் செய்யும் போது அந்த மக்களால் சொல்லப்பட்ட வார்த்தைகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

وَقَالُوا مَهْمَا تَأْتِنَا بِهِ مِنْ آيَةٍ لِتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ(132) 7

"எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர்.                                        (அல்குர்ஆன் 7:132)

இந்த வசனத்தில் (لِتَسْحَرَنَا) -தஸ்ஹரனா என்ற வார்த்தைக்கு பொருள், ஈர்க்குதல், மயக்குதல், வயப்படுத்துதல், வெற்றிபெறுதல், கவர்தல், கையில் எடுத்துக் கொள்வது போன்ற அர்த்தங்கள் உண்டு.

அதேபோன்று அல்லாஹ் இன்னொரு இடத்தில் சொல்லும்போது, நபிமார்கள் அவர்களது சமுதாயங்களுக்கு தங்களது செய்தி இறைவனிடமிருந்து தான் வந்தது என்பதை நிரூபிக்க அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்கள் சிலதை நடத்திக் காட்டுவார்கள். அப்படி அற்புதங்களைக் கண்கூடாகக் கண்டபிறகும்கூட அந்த அற்புதமும் தங்களை மயக்குவதாகச் சொல்வார்கள்.

لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ(15) سورة الحجر

அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்'' என்றே கூறுவார்கள்.       

(அல்குர்ஆன் 15:15)

எங்களது பார்வைகள் கட்டப்பட்டுவிட்டது என்றும், இல்லை.. இல்லை.. எங்களது சிந்தனை மதிமயக்கப்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். அதில் இறைவன் பயன்படுத்தும் வார்த்தை ????

ஸிஹ்ரிலிருந்து வந்த மஸ்ஹூர் என்ற வார்த்தையாகும். இதற்கு மதிமயக்கப்பட்டு விட்டோம் என்று பொருள்.

قُلْ لِمَنْ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(84)سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ(85)قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(86)سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ(87)قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(88)سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّا تُسْحَرُونَ(89) سورة المؤمنون

"பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! "ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா;?'' என்று கேட்பீராக! "பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!

 (அல்குர்ஆன் 23:84...89)

மேற்கூறிய 23:89 வசனத்தில் تُسْحَرُونَ துஸ்ஹரூன் என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ஸிஹ்ர் என்பதிலிருந்து வந்தவார்த்தையாகும். இதற்கு மதிமயக்கப்படுதல் என்று பொருள் ஆகும்.

மேலும் ஹதீஸ்களில் ஆராய்ந்து பார்த்தால், பேசுவதில் கூட ஸிஹ்ர் இருக்கிறது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், சிலபேர் இலேகியம் விற்பார்கள். இலேகியம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அவன் பேசுவது நன்றாயிருக்கும். ஆளுக்குத்தகுந்த மாதிரி ஒவ்வொருவரின் மனநிலைக்குத் தக்கவாறு (சைக்காலஜிக்) பேசி நம்மை நம்ப வைத்து விடுவான். ஒருவனுக்கு மனைவி மூலம் பிரச்சனை இருக்கலாம். இன்னொ ருவனுக்கு மனக்கவலை இருக்கலாம். அனைத்திற்கும் இந்த இலேகியத்தில் மருந்து இருக்கிறது என்பான். அந்த இலேகியத்தை வாங்கிச் செல்பவர்கள் மூன்று நபர்கள் இருந்தால். இலேகிய வியாபாரியைச் சுற்றி முந்நூறு பேர் நிற்பார்கள். இதற்குக் காரணம் அவனது பேச்சில் இருக்கிற ஈர்ப்புத்தான்.

இதுபோன்று நபிகள் காலத்தில் வெளியூரிலிருந்து வியாபாரத்திற்கு வந்த இரண்டு பேர்கள் தங்களது சரக்குகளை (பொருட்களை) விற்பதற்காக அழகாக சொற்பொழிவாற்றுகிறார்கள். அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டமிடுவதைப் பார்த்த நபியவர்கள் பேச்சில் சொற்பொழிவில் ஈர்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பயன்படுத்திய வார்த்தை ஸிஹ்ர் என்பதாகும்.

5146 قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا رواه البخاري

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து (எங்கüடையே சொற்பொழிவும், கருத்துச் செறிவும் மிக்கதோர்)  சொற்பொழிவு நிகழ்த்தி னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாகப் பேச்சில் சிஹ்ரில் கவர்ச்சி உள்ளது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 5146

5767  عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ قَدِمَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا أَوْ إِنَّ بَعْضَ الْبَيَانِ لَسِحْرٌ رواه البخاري

இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றி னார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சில சொற்பொழிவில் ஸிஹ்ர் கவர்ச்சி உள்ளது' அல்லது "சொற்பொழிவுகüல் சில ஸிஹ்ர் கவர்ச்சியாகும்' '' என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல்: புகாரி 5767

மேற்கூறிய ஹதீஸில் மாயமோ மந்திரமோ அவர்கள் செய்யவில்லை. பயான் பண்ணுகிறார்கள். அவ்வளவுதான். ஆனால் மக்கள் ஒன்றுகூடி நின்று கேட்கிறார்கள். அதைப் பார்த்துத்தான் ஸிஹ்ர் என்றார்கள் நபியவர்கள்.

எனவே மேற்சொன்ன குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் ஆராய்ந்து பார்த்தாலேயே, ஒன்றை ஒருவன் கவருகிற மாதிரி அல்லது ஈர்க்கிற மாதிரி செய்தால் அதற்குத்தான் அரபி அகராதியில் ஸிஹ்ர் என்று பொருள் என்பதை யாரும் விளங்கிக் கொள்ளமுடியும். பேச்சில் ஸிஹ்ர் என்றால் பிறரைக் கவரும் விதத்தில் பேசியிருக்கிறார் என்று அர்த்தம். அதேபோன்று ஒரு நாடகத்தை வைத்த கண் வைக்காமல் அதாவது கண்சிமிட்டாமல் மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அந்த நாடகம் அவர்களை ஈர்த்திருக்கிறது என்று அர்த்தம்..

ஆனால் தற்போது மக்கள் ஸிஹ்ர் (சூனியம்) என்ற வார்த்தையை மாயமந்திரம், பில்லி, சூனியம் போன்ற தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். ஒருவன் இன்னொருவனது கைகால்களை முடக்குவது, முறிப்பது, நோயை உண்டாக்குவது, கிறுக்கனாக்குவது, கனவன் மனைவியைப் பிரிப்பது, இன்னும் கூடுதலாகச் சென்று பிள்ளைக் கொடுப்பதுவும், பிள்ளை இல்லாமல் அவதிப்பட வைப்பதுவும், கொடுத்த பிள்ளையை ஊமையாக்குவது, முடக்குவது என்று எல்லாத்தையுமே நேரடியாகவோ அல்லது ஆயுதத்தாலோ இல்லாமல் மந்திரத்தால் மந்திரவாதி செய்வார் என்று ஸிஹ்ரைப் பற்றி தவறாக நம்புகின்றனர்.

எனவே இதுபற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கொண்டு ஆராய்ந்தால், ஸிஹ்ர் என்பதற்கு தந்திரம் என்று பொருள். அதாவது தந்திரமான வித்தைகள் செய்வது என்ற பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி தந்திரத்தால் எதைச் செய்தாலும் அது வெறுமனே ஒன்றுமில்லாத கண்கட்டி வித்தைதான் காட்டும்போது இருக்கிற மாதிரி (நிஜம் மாதிரி) தெரியும். ஆனால் உண்மையில் இருக்காது என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

அல்லாஹ் மூஸா நபியை ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனிடத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச் சொல்ல அனுப்புகிறான். அவன் மூஸா நபியிடம் நீர் தூதர் என்பதை நிரூபிக்கிற அற்புதம் ஏதும் உம்மிடம் இருக்கிறதா? என்று கேட்கும்போது, மூஸா நபி அவர்கள் இறைவனின் அனுமதியுடன் தமது கையிலுள்ள கைத்தடியைப் போட்டு பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். உடனே ஃபிர்அவ்ன், மூஸா நபியிடம் நானும் எனது மந்திரவாதிகள் மூலமாக இதைப்போன்று செய்யமுடியும். எனவே நமக்குள் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு பந்தயம் வைத்துக் கொள்வோம் என்று பேசுகிறான்.

மூஸா நபியும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். குறித்த நாளில் பந்தயம் தயாரானது. மூஸா நபி ஒருபுறமும் அவர்களுக்கு எதிராக ஃபிர்அவ்ன் திரட்டிய மந்திரவாதிகள் எதிரணியாக எதிர்புறமும் நிற்கிறது. முதலில் ஃபிர்அவ்னால் அழைத்துவரப்பட்ட மந்திரவாதிகள் தங்களது பொருட்களைப் போட்டு மக்களின் கண்களை வயப்படுத்தி னார்கள். இதை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116) سورة الأعراف

"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.         

(அல்குர்ஆன்: 7:116)

ஃபிர்அவ்னால் அழைத்து வரப்பட்ட மந்திரவாதிகள் மக்களின் கண்களை மயக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் உண்மையில் அவர்கள் பாம்புகளாக மாற்றவில்லை. ஆனால் மூஸா நபியவர்கள் கண்கட்டிவித்தையாக அற்புதத்தை செய்யவில்லை. மாறாக உண்மையிலேயே கைத்தடியை பாம்பாக மாற்றினார்கள். ஒரு வாதத்திற்காக இன்றைக்கு மூஸா நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்டாலும், அவர்கள் கைத்தடியைப் பாம்பாக மாற்றினால் அதை இன்றுள்ள டி.என். சோதனை உட்பட எந்த மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினாலும் அது உண்மையிலேயே பாம்பாகத்தான் இருக்கும். உண்மையான பாம்புக்கு என்னவெல்லாம் இருக்குமோ அதுவெல்லாம் இருக்கும். இது தான் நபிமார்களின் அற்பு தங்களுக்கும் பிற மந்திரவாதிகளான மேஜிக் செய்பவர்களுக்குமுள்ள வித்தியாசம்.

கைத்தடிதான். நமது கண்களுக்கு மட்டும் பாம்பாகத் தெரிகிறது. உண்மையில் பாம்பு என்று நிரூபிக்க முடியாது. இப்படி இருந்தால் அது கண்கட்டி வித்தை. அதாவது மேஜிக். தந்திர வேலை.

அவர்கள் செய்து காட்டியது பெரிய ஸிஹ்ர் என்று அல்லாஹ் கூறுகிறான். பெரிய ஸிஹ்ர் செய்தும் கூட அவர்களால் பாம்பாக மாற்ற முடியவில்லை. மாறாக பாம்பைப் போன்ற போலித் தோற்றத்தைதான் ஏற்படுத்த முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இன்னும் தெளிவாக இறைவன் 20 அத்தியாயத்தில் 66 ஆவது வசனத்தில் சொல்லுகிறான்.

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى(66) 20

"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

(அல்குர்ஆன் 20:66)

இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகிற வார்த்தை يُخَيَّلُ  யுகைய்யலு என்பதாகும். அதாவது அவர்கள் கயிறுகளாலும் கைத்தடிகளாலும் காட்டிய வித்தை மூஸாவுக்கு சீறுவதைப்போன்று கற்பனையாகத் தோற்றமளித்தது. இந்த யுகைய்யலு என்ற வார்த்தை கியால் என்ற சொல்லிருந்து  பிறந்தது. இந்த வார்த்தை உருதுமொழியிலும் ஃபார்சி மொழியிலும்கூட இருக்கிறது. இதன் பொருள் பொய்யாக கற்பனையாக தோற்றமளித்தல் என்பதாகும். அப்படியெனில் மூஸா நபிக்குக் கற்பனையாகப் பொய்தோற்றமளித்தது. உண்மையிலேயே சீறவில்லை என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

ஆனாலும் மூஸா நபியவர்கள் பயந்துவிட்டார்கள் என்பதாகவும் அல்லாஹ் பதிவுசெய்கிறான்.

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். "அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்'' என்று கூறினோம்.             

(அல்குர்ஆன் 20:67,68)

இந்த வித்தையின் மூலம் கழுதையை குதிரையாகக் காட்டலாமே தவிர இதார்த்தத்தில், அதாவது உண்மையில் குதிரையாக ஆக்க முடியாது. இதுதான் மந்திரத்தின் வேலை. இதற்கு சரியான அர்த்தம் மேஜிக் என்பதாகும்.

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى(69) سورة طه

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான்'' (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன் 20:69)

இன்னும் தெளிவாக அடுத்த வசனத்தில் சொல்லுகிறான். இப்படி கயிறுகளும் கைத்தடிகளும் சீறுவதாக மாறியது சூனியக்காரர்களின் சூழ்ச்சி. இங்கு சூழ்ச்சி என்பதைக் குறிப்பிடுவதற்கு இறைவன் பயன்படுத்தும் வார்த்தை கைத் என்பதாகும். சூழ்ச்சி என்றாலேயே உண்மையிருக்காது என்று அர்த்தம். அதனால்தான் அதற்கு அடுத்தாகவே சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்பதையும் அல்லாஹ் சேர்த்துச் சொல்லுகிறான்.

அப்படியெனில் சூனியக்காரர்களால் இல்லாததை இருப்பதாகக் காட்டத்தான் முடியுமே தவிர உண்மையிலேயே இருக்காது என்பதையும் சொல்லுகிறான். சூனியத்தால் இரத்த வாந்தி எடுக்க வைத்து விடுவேன், வயிற்றுவலியை வரவழைத்து விடுவேன், அதைச் செய்துவிடுவேன் இதைச் செய்துவிடுவேன் என்று யாராவது சொல்வார்களானால் தாராளமாக வைக்கச் சொல்லுங்கள், அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். மாறாக தோல்வியைத்தான் தழுவுவார்கள் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

மூஸா நபியின் போட்டியை இன்னும் தெளிவாக இறைவன் சொல்லுகிறான்.

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ(117) 7

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன் 7:117)

فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ(45) سورة الشعراء

உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.

(அல்குர்ஆன் 26:45)

இந்த வசனத்தில் அல்லாஹ் அவர்கள் பொய்யாக கற்பனையாக வித்தை செய்ததை மூஸா நபியின் பாம்பு விழுங்கிவிட்டது என்று பயன்படுத்துவதற்கு யஃஃபிகூன் என்ற வார்த்தையைக் கையாளுகிறான். இந்த யஃஃபிகூன் என்ற வார்த்தை இஃப்க் என்பதிலிருந்து வந்தது. இஃப்க் என்றால் பொய், இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். இதை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் நபியின் மனைவியும் அபூபக்கரின் மகளுமான ஆயிஷா ரலியையும் இன்னொரு ஸஹாபியையும் சேர்த்து தவறாக முனாபிக்குகள் இட்டுக்கட்டினார்களே அதற்கு அல்லாஹ் குர்ஆனில் இஃப்க் என்று சொல்லிக்காட்டுகிறான். நபியவர்களின் ஹதீஸிலும் இஃப்க் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக இந்த வசனங்களின்படி மூஸா நபிக்கு எதிராக திரண்ட மந்திரவாதிகள் என்றழைக்கப்பட்ட சூனியக்காரர்கள் சிஹ்ர் செய்பவர்கள் பொய்யாக காட்டியதை மூஸா நபியின் உண்மை அற்புதமாக விளங்கிய பாம்பு விழுங்கிவிட்டது. எனவே ஸிஹ்ர் என்பது முழுவதும் பொய் என்பதை அல்லாஹ் பதிவுசெய்கிறான்.

மூஸா நபி காலத்தில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தை விளங்கிக் கொள்வதற்கு இன்று நம்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் மேஜிக் ஷோக்களை (மந்திரதந்திர நிகழ்ச்சிகளை) உதாரணமாகக் கொள்ளலாம். சின்னசின்ன அளவுக்கு நடப்பதைக் காட்டிலும் பெரிய அளவுக்கு, நாமே உண்மையென்று நம்பிக் கொள்கிற அளவுக்கு நடத்தப்படுகிற பி.சி. சர்க்கார் போன்றவர்களின் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

இந்த மேஜிக் ஷோவில் விமானம் நின்றால் எப்படியிருக்குமோ அதைப்போன்று அந்தரத்தில் ஒருநபரை நிறுத்திவிடுவார்கள். அவர் அந்தரத்தில் நிற்கிறார் என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக அவரது உடலுக்குக் கீழாக கையை வைத்துத் அங்கும்இங்குமாகத் தடவிக்காட்டுவார்கள். உண்மையில் இப்படி அந்தரத்தில் நிற்க இயலுமா? என்றால், ஒருக்காலும் எவனா லும் நிற்க இயலாது. ஆனால் அந்தரத்தில் நிற்பதைப் போன்று காட்ட இயலும். இப்படி மேஜிக் செய்பவர்களை பரிசோதனை செய்தால் உண்மை வெளியே வந்துவிடும். இது உண்மையில் உள்ளது இல்லை. தந்திர வேலைதான் என்பதை மேஜிக் செய்பவர்களே சொல்லிவிட்டுத்தான் செய்கின்றனர்.

உண்மையிலேயே ஒருமனிதரை அந்தரத்தில் நிறுத்த முடியும் என்றால், எந்த லைட்டும் இல்லாமல் மேடையும் இல்லாமல் எந்த செட்டிங்கும் (முன்நடவடிக்கை) இல்லாமல் எந்த இடத்திலும் சாதாரணமாக நம்மை நிறுத்த முடியுமா? முடியவே முடியாது. அப்படியெனில் உண்மையிலேயே அந்தரத்தில் யாரையும் நிற்க வைக்கமுடியாது. ஆனால் அப்படி நிற்பதைப் போன்று பொய்யாகக் காட்டமுடியும்.

இதே போன்று, ஒரு மனிதனை இரண்டாக அறுப்பார்கள். நான்காக அறுப்பார்கள். கை தனியாக கால் தனியாக அறுத்தெடுத்து விடுவார்கள். அதற்குப்பிறகு 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து ஒட்டவைத்த பிறகு முழுமனிதாக எழுந்து வருவான். இது உண்மையிலேயே நடக்குமா? ஒருவனது கைகால்களை அறுத்தால் இரத்தம் வரவேண்டும். ஆனால் மேஜிக் ஷோவில் இரத்தம் வராது. அப்படி இரத்தம் வந்தால் 20 நிமிடங்களில் அவனது உடலிலுள்ள இரத்தம் அனைத்தும் வெளியேறி அந்த மனிதன் இறந்து போய்விடுவான். அப்படியெனில் மேஜிக் ஷோவில் மனிதனை இரண்டாக அறுப்பதைப் போன்றோ நான்கு பக்கமும் தலையில் கத்தியால் ஒருபக்கம் குத்தி மறுபக்கம் வழியாக கத்தியை வெளியே எடுப்பது போன்றோ காட்டுவது பொய்யானது.

அறுப்பதைப் போன்றோ குத்துவதைப் போன்றோ காட்டத்தான் முடியுமே தவிர உண்மையில் அறுக்கவும் குத்தவும் முடியாது.

அறுத்த உறுப்புக்கள் தானா சேர்ந்த கொள்ளுமெனில் மெடிக்கல் காலேஜ் எதற்கு? மருந்து மாத்திரைகள் எதற்கு? ஆபரேசன் செய்வது ஏன்? கை துண்டானால் மேஜிக் செய்பவனிடம் கொண்டுவந்து சரிசெய்து விடலாமே? இன்னும் சொல்லப்போனால் இதெல்லாம் முடியும் என்றால் அவன் ஏன் நம்மிடம் 50 என்றும் 100 என்றும் டிக்கட் வாங்கி பிழைப்பு நடத்தவேண்டும்? எனவே கண்ணுக்குத்தான் அறுப்பது தெரியுமே தவிர உண்மையில் இல்லை என்பதை நம்பவேண்டும்.

இதேபோன்று மண்ணை அள்ளிப்போட்டு தங்கத்தை உருவாக்கிக் காட்டுவார்கள். இதெல்லாம்கூட பொய்தான். உண்மையிலேயே மண்ணை அள்ளிப்போட்டு தங்கத்தை உருவாக்குவதற்கு ஆற்றல் பெற்றவனாக இருந்தால், நம்மிடம் டிக்கட்டுகாக காசுபணம் வாங்கி ஏன் பிழைப்பு நடத்தவேண்டும்? அவன் மண்ணை அள்ளிப்போட்டு தங்கமாக ஆக்கிக் கொள்ளவேண்டியதுதானே. ஆக இதுவெல்லாம் பொய். உண்மையில்லை என்று நம்பவேண்டும்.

உண்மையில் மண்ணைக்கூட தங்கமாக ஆக்கலாம். இப்படி ஒருடப்பாவில் மண்ணை அள்ளிப்போட்டு மூடி திறந்தவுடன் தங்கமாக ஆகாது.

அணுவைப் பிளக்கும் அறிவு மனிதனுக்கு வந்த பின்னர் எந்த உலோகத்தையும் இன்னொரு உலோகமாக மாற்றமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். உதாரணத்திற்கு இரும்பை தங்கமாக மாற்றலாம். எப்படியெனில், அதற்கான அணுக்களை சரியான விகிதத்தில் கலந்தோமானால் இரும்பு தங்கமாக மாறும். ஆனால் இப்படி இரும்பைத் தங்கமாக மாற்றுவதற்கு ஆகுகின்ற செலவு, நேரடியாக தங்கம் வாங்கும் செலவைவிட அதிகமானதாகும்.

எனவே இந்த முறையில் இல்லாமல் வெறுமனே டப்பாவிற்குள் மண்ணைப்போட்டு குளுக்கிவிட்டு டப்பாவைத் திறந்தால் தங்கமாக மாறிவிடும் என்று நம்புவது மடமையும் அறிவீனமுமாகும். அப்படியெனில் மேஜிக்மேன் மண்ணைத் தங்கமாகக் காட்டுகிறானே தவிர உண்மையில் மண் தங்கமாக மாறியது என்ற கருத்தில் இல்லை. இப்படி மேஜிக்மேன் எதைச் செய்து காட்டினாலும் அது உண்மையாக இருக்கவே முடியாது என்று ஆழமாக நம்பவேண்டும். அவையெல்லாம் ஸிஹ்ர் (சூனியம்) என்று நம்பவேண்டும். இதைத்தான் அல்லாஹ் மூஸா நபியின் காலத்தில் ஃபிர்அவ்னால் அழைத்து வரப்பட்ட மேஜிக்காரர்கள் செய்தார்கள் இதைத்தான் இறைவன் ஸிஹ்ர் அதாவது சூனியம் என்று குறிப்பிடுகிறான்.

இந்த விசயத்தில் இன்னொரு கோணத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ், நமது நபிக்கு முன் பல்வேறு தூதர்களை அனுப்பினான். அவர்களும் தங்களது சமூகத்திற்குத் தம்மைத் தூதர் என்று சொல்லுவார். ஆனால் அந்த சமூக மக்கள் நபிமார்களை ஏற்காமாட்டார்கள். உடனே அல்லாஹ் அவரை நபி என்று நிரூபிக்க அவர்களுக்கு ஏதேனும் அற்புதங்களைக் கொடுத்து மக்களிடத்தில் காட்டச் சொல்லுவான். இப்படி மூஸா ஈஸா, லூத், நூஹ் போன்ற தூதர்கள் இறைவனது அற்புதங்களைச் செய்தவுடன் நபிமார்களை எதிர்த்த அந்தந்தச் சமூக மக்கள், என்ன சொல்லி கேலிகிண்டல் செய்தார்கள் என்பதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லுகிறான். ஏனெனில் ஸிஹ்ரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அதில் விளக்கம் இருக்கிறது.

மூஸா நபியின் சமூகம் அளித்த பதில்

قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ(109) سورة الأعراف

"இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார்'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 7:109)

மூஸா நபி இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதத்தைச் செய்து காட்டியதும் அந்த சமூக மக்கள் அவரை திறமையான சூனியக்காரர் என்று சொன்னர்கள். அப்படியெனில் மூஸாவை நபியாக ஏற்பதற்கு இந்த வார்த்தையைச் சொல்லவில்லை. மாறாக அவரை மறுப்பதற்காகத்தான் திறமைமிக்க சூனியக்காரன் என்றார்கள். அப்படியெனில் ஸாஹிர் என்றால் இல்லாததை இருப்பதாகக் காட்டுபவர் என்று சொல்லி அந்தசமூகம் மூஸா நபியை மறுக்கிறது. ஆனால் மூஸா நபி செய்தது உண்மை.

அவர்கள் இல்லாததை இருப்பதாகக் காட்டவில்லை. மூஸா நபி செய்தது உண்மையென நம்பியவர்கள் மூஸாவை நபி என்று ஏற்றுக் கொள்வார்கள். மூஸா நபி செய்தது பொய். இல்லாததை இருப்பதாகக் காட்டும் சூனியக்காரர் என்று நம்பியவர்கள் அவரை ஏற்க மறுத்தார்கள்.

இன்னும் பல்வேறு வசனங்களில் ஸிஹ்ர் என்ற வார்த்தையை நபி மூஸா அவர்களை மறுப்பதற்காக அந்த சமூகம் சொன்னது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் சொல்லுகிறான்.

فَلَمَّا جَاءَهُمْ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَذَا لَسِحْرٌ مُبِينٌ(76)قَالَ مُوسَى أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ أَسِحْرٌ هَذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ(77) سورة يونس

நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது "இது தெளிவான சூனியம்'' என்றனர். "உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்                                                  

 (அல்குர்ஆன் 10:76,77)

"இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 26:34)

فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ(36)  سورة القصص

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.                              

 (அல்குர்ஆன் 28:36)

وَفِي مُوسَى إِذْ أَرْسَلْنَاهُ إِلَى فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُبِينٍ(38) فَتَوَلَّى بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ(39) سورة الذاريات

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். "இவர் சூனியக்காரரோ பைத்தியக்காரரோ'' எனக் கூறினர்.                      

(அல்குர்ஆன் 51:38,39)

فَلَمَّا جَاءَتْهُمْ آيَاتُنَا مُبْصِرَةً قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ(13) سورة النمل

நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது "இது தெளிவான சூனியம்'' என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 27:13)

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ(23)إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ(24) سورة غافر

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர் அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று அவர்கள் கூறினர்.

 (அல்குர்ஆன் 40:23,24)

மூஸா நபி உண்மையிலேயே அற்புதம் தான் செய்தார்கள் என்று நம்பியிருந்தால் அவரை ஈமான் கொண்டிருப்பார்கள் இதற்கு ஆதாரமாக மூஸா நபிக்கும் சூனியக்காரர்களுக்கும் போட்டி நடக்கிறது. போட்டியில் மூஸா நபியின் பாம்பு, சூனியக்காரர்களால் பாம்புகளாகக் காட்டப்பட்ட கயிறுகளையும் தடிகளையும் சாப்பிட்டுவிட்டது. உடனே இது உண்மைதான் என்பதை உணர்ந்த சூனியக்காரர்கள், அதுவும் ஃபிர்அவ்னால் கூலிக்கு அமர்த்தப்பட்ட சூனியக்காரர்கள் மூஸா நபியையும் அவர் சொன்ன கடவுள் கொள்கையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:117...122)

எனவே மூஸா நபியவர்கள் உண்மையாகவே அற்புதத்தைச் செய்துகாட்டி னாலும் அதனை மறுப்பவர்கள், இது கற்பனை, கடைந்தெடுத்த சூனியம், இல்லாததை இருப்பாதகக் காட்டுதல் அல்லது இருப்பதை இல்லாததாகக் காட்டுதல் என்ற அர்தத்தில் ஸிஹ்ர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள் என்று அறியமுடிகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

அல்லாஹ்வை எப்படி நம்புவது?

அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை

உரை : பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை????

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.

ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை.

அப்படியே நம்பினா லும் அந்த நம்பிக்கையில்  குறை செய்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே நமது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மார்க்க விசயங்களில் தொழுகை போன்ற வணக்கங்களில் அல்லாஹ் சொன்னபடி அவனுடைய தூதர் சொன்னபடி தொழுகிறோம். ஆனால் நமது வாழ்வில் பல விஷயங்களில் நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்றால் நடப்பதில்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.

திருமணம் இறுதிச் சடங்கு இதரசடங்கு, சம்பிரதாயங்கள், வீடு கூடிபோகுதல், வியாபாரம், தொழில் துறைகள் என்று வரும் போது இவ்வாறு நாம் நடந்து கொள்வதில்லை. மார்க்கக் கடமைகளில்  சரியாகச் செய்யும் நாம் உலகக் காரியங்களில் மார்க்க நெறியை அலட்சியம் செய்பவர்களாக இருக்கிறோம், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எவ்வாறு சொன்னார்களோ அதை செய்வதற்கு தெரிந்து கொண்டே பின்வாங்குகிறோம். அது மாத்திரமின்றி நமது அடிமனதில் மார்க்க விசயங்களை மட்டும் தான் அல்லாஹ் பார்க்கிறான். அது அற்பாற்பட்ட செயல்களை அவன் பார்ப்பதில்லை என்ற ஒரு தப்பான எண்ணம் நம்முடைய உள்ளத்தில் இருப்பதனால் தான் நாம் உறுதியான முறையில் அல்லாஹ்வை நம்புவதில்லை.

 அல்லாஹ்வை உறுதியாக நம்புகிற விசயத்தில் இஸ்லாமியர்கள்  மத்தியில் இரு சாரார்கள் இருப்பதாக திருமறைக்குர்ஆனில்

அல்லாஹ்வே நமக்கு சொல்கிறான்.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக் கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சி யடையுங்கள்!'' எனக் கூறுவார்கள்.                                            

அல்குர்ஆன் (41:31)

அல்லாஹ்வுடைய வானவர்களின் உதவி உறுதியான நம்பிக்கையில் இருப்போருக்கு கிடைக்கிறது. அல்லாஹ்வை வாயளவில் இறைவன் என்று நம்பி இருப்போருக்கு இப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறவில்லை.

அல்லாஹ்வின் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நமக்கு உதவி செய்வார்கள் என அல்லாஹ் கூறுவதால் அந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கும் போது மனிதர்களின் உதவி எதற்கு? என்ற எண்ணம் தானாக நமக்கு வந்து விடும். நம்முடைய நல்ல, கெட்ட, எல்லாவற்றுக்கும் வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். நாம் பிராத்தனை செய்யும் போது  அவர்கள் ஆமீன் சொன்னால் அல்லாஹ் நமது பிராத்தனைகளை  ஏற்றுக் கொள்வான் அதே போன்று அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசினால் அந்தப் பரிந்துரையையும் அல்லாஹ் எற்றுக்கொள்கிறான். இப்படி நாம் எண்ணி நமது   உள்ளத்தில் இந்த நம்பிக்கையை ஆழமாக பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் தான் நமது உள்ளத்தைப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்கு திருமறைக்குர்ஆனில் பல்வேறு இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அல்லாஹ் படிப்பினையாக சொல்லிக் காட்டுகிறான்.

எது நடக்க முடியாது என்று நாம் நம்புகிறோமோ அது அல்லாஹ்வால் நடத்த முடியும் என்று நம்புவது தான் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை நமது உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். ஆனால்  இந்த நம்பிக்கைதான் முஸ்லிம்களாகிய நம்மிடம் இன்று குறைந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். திருமறைக்குர்ஆனில் வரலாறுகளைப் படித்து நமது ஈமான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இறைத்தூதர்களின் வாழ்கை வரலாற்றைக் கூறுகிறான்.

மூஸா (அலை) அவர்களும் பிர்அவ்னுடைய படையும்

மூஸா (அலை) அவர்கள், பிர்அனுக்கு பல வருடங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை போதனை செய்து கொண்டிருந்தார்கள். இனி முடியாது இங்கு  இருந்தால் பிர்அவ்ன் நம்மை அழித்து விடுவான் என்ற நிலை வந்த போதுதான் ஊரை விட்டு வேளியேறுகிறார்கள். இதனை அறிந்த பிர்அவ்னுடைய பட்டாளங்கள்  பிர்அவ்னிடம் சென்று மூஸாவும் அவரோடு இருப்போரும் தப்பிச் செல்கிறார்கள்.

பிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும் மூஸா (அலை) அவர்களையும் பனூஇஸ்ரவேலர்களையும் பூண்டோடு அழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு  என்று தன்னுடைய படையுடன் விரட்டிக் கொண்டு வருகிறார்கள். மூஸா (அலை) அவர்களும் பனூ இஸ்ரவேலர்களும் எப்படியாது இவனுடைய இந்த அநியாயத்தில் இருந்த தப்பிக் வேண்டும் என்று திக்குத் திசையில்லாமல் ஓடுகிறார்கள்  கடைசியில் அவர்கள் சங்கமித்த இடம் கடலாகும்.

  பின்னால் பிர்அவ்னுடைய படையும் முன்னால் கடலும். இப்போது தான் அல்லாஹ் பற்றிய உறுதியான நம்பிக்கையும் சங்கமிக்கிறது.

அப்போது அவர்களை ஏற்றுக் கொண்ட  பனூ இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து நாம் மூழ்கடிக்கப்படுவோம் இன்று தப்ப முடியாத நாள், வசமாக மாட்டிக் கொண்டோம்  மூஸாவே! என்று சொன்னபோது அப்படி நடக்காது.  உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களே இதுதான் உங்களின் ஈமான் இது தான் உங்களுக்கு எனக்கும் உள்ள வித்தியாசம். சகல வல்லமையும் பொருந்திய என்னுடைய இறைவனால் இது முடியும். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று கூறி மூஸா (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையை அப்போது வெளிப்படுத்தி னார்கள். அப்போது அல்லாஹ் அவர்ளுக்கு வழிகாட்டினான். இது பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.  உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (26:62-68)

அல்லாஹ் எதற்கு இந்தச் சம்பவத்தை நமக்கு கூறிக் காட்டுகிறான்.

திக்கற்ற நிலையில் நாம் இருந்தாலும் சரி என்னுடைய இறைவனுக்கு முடியும் என்று நினைக்க வேண்டும். உளப்பூர்வமாக நம்ப வேண்டும் அதுதான் ஈமானிய உறுதியும் அல்லாஹ் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும்.

இது முடியுமா எப்படி சாத்தியப்படும்? என்று தப்பாக நினைத்து சில விசயங்களில் போடுபோக்குத் தனத்தை வெளிப்படுத்துகிறோம்.

அல்லாஹ்வின் வல்லமை பற்றி மூஸா (அலை) அவர்கள் எப்படி உறுதியாக நம்பினார்களோ அப்படி நம்ப வேண்டும். அவனால் முடியாதது எதுவுமே இல்லை அவன் நமக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறான். எப்போது அவனிடம் நம்முடைய ஈமானிய உறுதியை வெளிப்படுத்துகிறோமோ அப்போது இது போன்ற அற்புத ஆற்றலுடைய அல்லாஹ்வின் உதவியைக் காணமுடியும்.

இறைத்தூதர்களுக்கு  இப்படியான நிலை ஏற்பட்ட போதல்லாம் இன்றைய இஸ்லாமியர்கள் நடந்து கொள்வது போன்று அவர்கள் நடந்து கொள்ளவில்லை. எத்தனை இடர்களையும் கஷ்டங்கயையும் துன்பங்களையும் அவர்கள் சந்தித்த போதும் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அவர்கள் இழக்கவில்லை அதே நிலையை நாம் அடைந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதற்கு  மற்றொரு நிகழச்சியைப் பார்ப்போம்.

குழந்தைப் பேறு இல்லாத ஸகரிய்யா (அலை) அவர்களின் நம்பிக்கை ஸகரிய்யா (அலை) அவர்கள் தம்முடைய தள்ளாத வயதிலும் குழந்தைப் பாக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இறுதி வரை  அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அவர்களின் அபரிதமான இந்த முயற்சியை அல்லாஹ் எற்றுக் கொண்டு குழந்தைப் பாக்கியத்தை கொடுத்ததை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மறந்து விடலாகாது.

பிள்ளைப் பேறு என்பதைப் பொறுத்தவரை இன்று உலகத்தில் அறியப்பட்ட நியதிகளில் ஒன்றுதான். ஒரு கூறிப்பிட்ட ஒரு வயதுக்குள் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்காது. அவர்களின் ஹார்மோன்கள் அந்தத் தன்மையை இழந்து விடுகின்றன. இதுதான் உலக நியதி  ஆனால் அல்லாஹ் நாடினால் எந்த ஒன்றும் அவனுக்கு முடியாதது இல்லை என்பதற்கு ஸகரிய்யா (அலை) அவர்களின் வரலாறு நமக்கு மிகப் பெரிய படிப்பினையாகும்.

 நாம் இன்று பிள்ளைப் பேறு அற்றவர்களைப்  பார்க்கிறோம்  ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி நமக்கு  குழந்தை பெறும் தன்மை என்ற இருக்கின்றதா? இது சாத்தியமா? என்று ஏங்கித் தவிப்பதைப் பார்க்கின்றோம். குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் சமுகத்தினால் ஒரு விதமான  சந்தேகப் பார்வையினால் நோக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த வயதில் பிள்ளைப் பேறா? இது சாத்தியமா? இது உங்களுக்கு கொஞ்சம் அதிமாகத் தெரியவில்லையா? என்றல்லாம் இவர்கள் பழிக்கப்படுகிறார்கள்.

இந்த சமுதாயத்தில் முஸ்லிம்கள் என்று சொல்லக் கூடிய நாம் இப்படியானவர்களை ஏளனம் செய்கிறோம்  இதுதான் நாம் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு

அல்லாஹ்வை நம்பியுள்ளோம் அவன் எங்களுக்குப் போதுமானவன் அவனால் இதுவும் முடியும். எங்கள் இறைவன் நினைத்தால் இதையும் செய்து காட்டுவான் என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிறவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்று திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

அல்குர்ஆன் (65:03)

திருமறையில் ஸகரிய்யா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை நீ எனக்கு வழங்குவாயாக அவர் எனக்கும், யஃகூபின் குடும் பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப் பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.) "ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம்.  அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத் தியதில்லை'' (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்'' என்று அவர்  கூறினார்.

அல்குர்ஆன் (19:1-8)

அல்லாஹ் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு செய்த அருளைப் பற்றி மேற் கூறப்பட்ட வசனத்தில்  கூறுகிறான் அவருடைய வயதை இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவர் வயது முதிந்தவராகி, தலையும் நரைத்து எழும்புகள் எல்லாம் பலமிழந்த நிலையிலும் அவர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. அல்லாஹ்விடம் கேட்பதில் அவர் துர்ப்பாக்கியசாலியாக இருக்கவில்லை. இந்த தள்ளாத வயதிலும் நான் என் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. அதே நேரம் என் மனைவியும் மலடியாக இருக்கிறாள்  இறைவா உன்னால் முடியும் உன்னால் முடியாத ஒன்றை நான் கேட்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக  இறுதிவரை போராடினார். இதனால் அவருக்கு நடந்தது என்ன?

அல்லாஹ் அவருக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்தது மாத்திரமின்றி அந்தக் குழந்தைக்கு யஹ்யா என்ற பெயரையும் சூட்டினான். இது தான் அல்லாஹ்வை நம்புவதற்குரிய அடையாளமும் ஆகும்.

வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்

தூய்மை         தொடர் : 3

எம்.எஸ்.ஜீனத் நிஸா, மேலப்பாளையம்

நாய் பயன்படுத்திய பாத்திரத்தை தூய்மை செய்யவேண்டும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் :471

உணவுப்பாத்திரங்களைத் தூய்மையாகவும் இரவு நேரங்களில் மூடியும் வைக்கவேண்டும் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

 அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : புகாரி 5623

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.

 நூல்: புகாரி 5624

போதைப் பொருட்களை பயன்படுத்தகூடாது

உண்பதில் தூய்மையானதை தேர்வு செய்வதைப் போன்று உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மது, கஞ்சா, பான்பராக், அபின் போன்ற போதை தரக்கூடிய பொருட்களையும் தேர்வு செய்யக்கூடாது. பயன்படுத்தக்கூடாது.

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "உபரியானதை' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2: 219

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் ("விடைபெறும்' ஹஜ்ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு) அனுப்பியபோது எங்கள் இருவரிடமும், "(மார்க்க விஷயங்கüல் மக்கüடம்) üதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற் செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள். (தீர்ப்பüக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள் (பிளவு பட்டுவிடாதீர்கள்)'' என்று சொன்னார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் "அல்பித்உ' எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர்' என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது

(அவற்றின் சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்) ஆகும்'' என்று பதிலüத்தார்கள்.                         

நூல் : புகாரி 6124

மக்கள் சுவையான உணவுகளை விரும்பி ஹோட்டல்களுக்கு செல்கின்றனர்.

பெரும்பாலான ஹோட்டல்களிலும் சில வீடுகளிலும் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய அஜினமோட்டோ போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதையும் தவிர்க்க வேண்டும்.

இடங்களை தூய்மையாக வைத்தல் :

நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலர் தாம் பயன்படுத்தக்கூடிய பாலிதின் கவர்களையும் வாழைப் பழத் தோல்களையும் கண்ட இடங்களில் எறிந்துவிடுகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் சாலையோரங்கள் மருத்துவமனைகள் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. மேலும் மக்கள் நடமாடக்கூடிய ஒய்வெடுக்கக்கூடிய இடங்களில் பல ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

1. பொது இடங்களில் எல்லோரும் பார்க்கும் வகையில் சிறுநீர் கழிப்பது.

2. பொது கட்டணகழிப்பிடங்களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு அசுத்தப்படுத்துவது.

3. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தெரு ஓரங்களில் தங்கள் குழந்தைகளை மலம் ஜலம் கழிக்க வைப்பது.

4. தங்கள் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை கார்ப்பரேஷன் வண்டியில் கொட்டாமல் தெரு ஒரங்களில் ஒதுக்கிவைப்பது.

பொது இடங்களில் எவ்வாறு நாகரீகமாக நடக்க வேண்டும் என்ற முறையை இஸ்லாம் மக்களுக்கு உபதேசிக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய  அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள் அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்

நூல் : முஸ்லிம் : 448

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரு சவக்குழிகளைக் கடந்து சென்றார்கள். அப்போது "இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீரிரிருந்து (தம் உடலையும் உடையையும்) மறைக் காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லிரித் திரிந்துகொண்டிருந்தார்'' என்று கூறினார்கள். பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையைப் பெற்று அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின்மீதும் ஒன்றை ஊன்றினார்கள். அது பற்றி மக்கள், "ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். "இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி : 218

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : முஸ்லிம் 565

இறையில்லங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

"எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல் குர்ஆன் : 22:26

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

 அல்குர்ஆன் 2:125

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசரில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் "நிறுத்து! நிறுத்து!' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அழைத்து "இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகிய வற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்'' என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம்  கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் (480)

பாதையில் உள்ள தொல்லை தரும் பொருட்களை அகற்றுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாüலும் தர்மம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி ; 2989

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். (தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

 நூல் : புகாரி ; 652

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

மக்கள், "சாலையின் உரிமை என்ன?'' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமரிருப்பதும், முகமனுக்கு (சலாம்) பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிரிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்'' என்று பதிலளித் தார்கள்.

 நூல் : புகாரி 2465

செருப்பை பயன்படுத்துதல் :

நாம் வெளியே செல்லும் போது பல அசுத்தங்களை காலில் மிதிக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது . மேலும் நம்முடைய வீட்டிலேயே கழிவறை, சமையல் அறைகளுக்கு அதற்கென்றே தனி செருப்புகளை பயன்படுத்துவதின் மூலம் கிருமிகளிலிருந்து காலை பாதுகாக்கலாம். நபி (ஸல்) அவர்கள் காலணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

முடிகளையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத செருப்புகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 166

வளரும் இன்ஷா அல்லாஹ்

பழுத்ததும் புழுத்ததும்

அவ்லியாக்களின் ஆற்றலை மிகைப்படுத்தி காட்ட முயன்ற நூல் ஆசிரியர் அவ்லியாக்கள் கைப்பட்டால் புழுத்த பழங்கள் கூட பழுத்த பழங்களாக மாறிவிடுமாம். அதே நேரத்தில் அவ்லியா அல்லாதவர்கள் கைபட்டால் அந்த பழங்கள் புழுத்துவிடுமாம். இதற்கு பின்வரும் கதை கூறுகிறார் நூலாசியர்.

இன்னொரு தடவை கலீபா அபுல் முஜப்பர் என்பவர் ஆண்டகை அவர்களின் சமுகத்துக்கு வந்திருந்தார். அவர் தமக்கு ஓர் அத்தாட்சி காட்டப்பட வேண்டும் என்று கேட்டார். என்ன அத்தாட்சி வேண்டும் என்று ஆண்டகை அவர்கள் கேட்கவும், இரண்டு மாதுளம் பழங்கள் வேண்டுமென்றார். அக்காலமோ மாதுளை காய்க்காத காலமாய் இருந்தது. ஆனால் கலீபா மாதுளை வேண்டும் என்றதுமே ஆண்டகை அவர்கள் தங்கள் கரத்தை உயரே நீட்டினார்கள். அதில் இரண்டு மாதுளம் பழங்கள் வந்திருந்தன. அவற்றில் ஒன்றைக் கலீபாவிடம் கொடுத்து உடைக்கச் சொல்லிவிட்டு, மற்றதைத் தம் கரத்தால் உடைத்தார்கள், ஆண்டகை அவர்கள் உடைத்த மாதுளம் பழம் மதுரமானதாய் இருந்தது. கலீபா உடைத்த பழத்தில் புழுக்கள் நெளிந்தன. இதன் காரணம் என்ன என்று கலீபா கேட்டதும்  ஆண்டகை அவர்கள் சொன்னார்கள் : அநியாயக்காரர் கை பட்ட பழம் புழுத்திருக்கிறது, அல்லாஹ்வின் அடியான் கைபட்ட பழம் பழுத்திருக்கிறது என்று

(மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் : 1, பக்கம் : 54)

அநியாயம் செய்யும் மனிதன் கை பட்டால் பழம் புழுத்துவிடும் என்றால் ஓரிறைக் கொள்கை ஏற்காத அநியாயம் செய்யும் எத்தனையே நபர்கள் இன்று சுவையான நல்ல பழங்களை எப்படி சாப்பிடுகிறார்கள்?

மேலும் யாருக்கும் கிடைக்காத பொருட்கள் அவ்லியா நினைத்தால் அவருக்கு கிடைக்கும் அரிய ஆற்றல் உண்டு என்ற கருத்தை விதைக்கவும் இந்த கதை புனையப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பசியால் வீட்டில் எதுவும் கிடைக்காமல் வெளியேறி தம் தோழர்களிடம் உணவு வேண்டியதையும் இந்த கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்' அல்லது "ஓர் இரவு' (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?'' என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!'' என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்) தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது'' என்று கூறி விட்டு, "எழுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்'' என்று பதிலளித்தார்.அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை'' என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்'' என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிரிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (4143)

கேட்டது எல்லாம் கிடைக்கும் என்றால் முதலில் நபிகளாருக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தாங்க முடியாத பசி ஏற்பட்டு அடுத்தவரின் உதவியை நாடும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்றால் அப்துல் காதிர் ஜீலானிக்கு மட்டும் எப்படி கேட்டவுடன் அக்காலத்தில் கிடைக்காத பொருள் கிடைத்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்லியாக்கள் எதையும் செய்வார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டவே இந்த கற்பனை கதை.

பாம்புக்கு பயப்படாத இறைநேசர்

ஒரு நான் ஆண்டகை அவர்கள் விதியைப் பற்றிய் பேசும்போது அவனன்றி ஓர் அணுக்கூட அசையாது என்று கூறி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படியே சகலமும் நடக்கும் என்று நம்பும் முஸ்லிம்கள், அத்தருணத்திலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது, பயத்துக்கோ பீதிக்கோ இதயத்தில் இடந்தரக்கூடாது என்று போதித்துக் கொண்டிருக்கையில் மேல் முகப்பிலிருந்து திடீரென பாம்பு ஒன்று ஆண்டகை அவர்களின் தலைப்பாகையின் மீது விழுந்தது. அதைக் கண்ணுற்ற சபையினரிடையே பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஆனால் ஆண்டகை அவர்கள் கொஞ்சமும் கலக்கமோ தயக்கமோ இன்றித் தமது உபந்நியாசத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாம்பு அவர்கள் உடலைச் சுற்றிக் கீழே வந்தது. அது தரையில்  இறங்கும் வரை ஒருவரும் மூச்சுக்கூட விடவில்லை. ஆண்டகை அவர்கள் மட்டும் தங்கள் உபந்நியாசத்தை நிறுத்தவே இலலை. சர்ப்பம் அவர்களை விட்டு விலகிச் சுவர்ப்பக்கமாகச் சென்ற பிறகு, அவர்கள் அதைச் சுட்டிக்காட்டி. கேவலம் ஒரு சிருஷ்டிப் பொருளான இப்பாம்பு அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தாலன்றி என்ன செய்ய இயலும்? என்று கூறி அங்கிருந்தோர்களின் ஈமானை (மெய்யுறுதியை) இன்னும் அதிகப் பலமுள்ளதாக்கினார்கள்.

(மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் : 1, பக்கம் : 63)

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால்

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எந்த பாம்பிற்கும் அஞ்சா நெஞ்சராக சித்தரிக்கிறது இந்த கதை. விதியை நம்புபவன் இது போன்ற கொடிய விசஜந்துகளுக்கு பயப்படக்கூடாது என்று அறிவுருத்துகிறார் அப்துல் காதிர் ஜீலானி. ஆனால் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை கவனியுங்கள்.

"மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று இறைவன் கேட்டான். "இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன'' என்று அவர் கூறினார். "மூஸாவே! அதைப் போடுவீராக!'' என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. "அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 20:17-21)

கைத்தடி பாம்பாக மாறிய போது பயந்து போன மூஸாவை பார்த்து அல்லாஹ் பயப்படவேண்டாம். அதை கைத்தாடிய மாற்றிவிடுவோம் என்று கூறியுள்ளான்.

பயந்த மூஸா (அலை) அவர்களைப் பார்த்து விதி நம்பும் நீ எப்படி பயப்படலாம் என்று அல்லாஹ் கேட்கவில்லை. பாம்பை பார்க்கும் எவரும் பயப்படத்தான் செய்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை. விதி நம்புபவன் பாம்பால் ஏது நேர்ந்துவிடக்கூடாது என்பதற்கு எச்சரிக்கையாக இருப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதல்ல.

நம்மை நோக்கி பாம்பு வந்தால் விதி என்று சொல்லிக் கொண்டு

அமைதியாக இருக்கச் சொல்லவில்லை நபிகளார். மாறாக அதை கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

நாங்கள் நபி (ஸல்)  அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம்.  அப்போது "வல்முர்ஸலாத்'' எனும்  (77ஆவது) அத்தியாயம் அவர்களுக்கு அருளப்பெற்றது.  அதை நான் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது.  அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது.  உடனே நபி (ஸல்)  அவர்கள், "அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள்.  நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது.  அப்போது நபி (ஸல்)  அவர்கள் "அதன் தீங்கிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டது போன்றே உங்கள் தீங்கிலிருந்து அதுவும் காப்பாற்றப்பட்டுவிட்டது!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),

நூல் ; புகாரி 1830

பாம்பை கொல்லுமாறு கட்டளையிட்ட நபிகளார் விதியை நம்பாதவர்களா? அதை அடிக்கச் சென்ற நபித்தோழர்களும் விதியை நம்பாதவர்களா?

ஹஜ் என்ற கடமையை செய்ய செல்பவர் பாம்பு போன்ற விசஜந்துக்களை பார்த்தால் அதை கொல்லலாம். அதை கொல்வது குற்றம் இல்லை என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.

இஹ்ராம் அணிந்தவர் எந்த உயிரனத்தையும் கொல்லக்கூடாது என்ற விதியிருந்தும் நம் உயிருக்க பாதிப்பை ஏற்படுத்தும் உயிரனங்களை கொல்வதை நபிகளார் அனுமதித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எரிலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (2254)

விசஜந்துக்களை கொல்ல கட்டளையிட்ட நபிகளாரின் வழிகாட்டுதலை புறக்கணித்துவிட்டவர் எப்படி இறைநேசராக இருக்க முடியும்?

எந்த நோயையும் குணப்படுத்தும் அவ்லியா

இரண்டு பணியாட்கன் ஒரு கூடையைக் கொண்டவந்து அவர்கள் முன் வைத்தனர். ஆண்டகை அவர்கள் அக்கூடையைத் திறக்க உத்தரவிட்டார்கள். அதனுள் வீட்டுக்காரரின் நோய்வாய்ப்பட்ட மகன் இருந்தான். குஷ்டமும் வாத நோயும் கண் குருடும் உடையவனாய் அவன் இருந்தான். ஆண்டகை அவர்கள் அல்லாஹ்வின் ஆணணை கொண்டு ஆரோக்கியம் பெறுவாயாக என்று கூறியதும் அச்சிறுவனின் சகல ரோமங்களும் மறைந்து கண்பார்வை உண்டாகி அவன் எழுந்து வெளியில் வந்தான். இதைக் கண்டவர்கள் அடைந்த வியப்புக்கு அளவில்லை.

(மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் :1 , பக்கம் : 65)

அன்றைய காலத்தில் குணப்படுத்த முடியாத நோயாக குஷ்ட நோய் இருந்தது. அந்த நோயைக்கூட அவ்லியாவால் குணப்படுத்த முடியும். எனவே எந்த நோயாக இருந்தாலும் அவ்லியாக்களிடம் செல்லுங்கள் என்று சொல்வதற்காக இந்த கதை புனையப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் நோயாளிகள் வரும் போது அவர்கள் இறைத் தூதராக இருந்தும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்களே தவிர அல்லாஹ்வின் ஆணைப்படி விலகிவிடு என்று அவர்கள் கட்டளை போடவில்லை.

இறைநேசர்கள் இவ்வாறு கட்டளை போட்டால் போய்விடும் என்று அல்லாஹ்வே நபிகளாரோ கூறவும் இல்லை.

இந்த கதை நோய்கள் எதுவானாலும் அவ்லியா கட்டளைபோட்டால் அது நீங்கிவிடும் என்ற நம்பிக்கை ஊட்டவே இந்த கதை சொல்லப்படுகிறது. இவை திருக்குர்ஆனுக்கும் நபிபோதனைகளுக்கு எதிரானதாகும்.

உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவ்லியாவுக்கு

வயோதிகப் பெண்பொருத்தி தன் மகனை ஆண்டகை அவர்களின் மதரஸாவில் கொண்டுவிட்டு அவனுக்கு மார்க்கப் பயிற்சி அளிக்குமாறு அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் தன் மகனைப் பார்க்க வந்தாள். அவன் மெலிந்து இருப்பதையும் காய்ந்த ரொட்டித் துண்டுகளைத் தின்று கொண்டிருப்பதையும் கண்டாள். ஆண்டகை அவர்களின் சமுகத்துக்கு அவள் வந்த சமயம், அவர்கள் பொறித்த கோழிக் கறியை உண்டு கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அப்பேதைப் பெண், தாங்கள் பொறித்த கோழியை உண்ணும்போது என் பிள்ளைக்குக் காய்ந்த ரொட்டியைத் தரலாமா? என்று அவர்களிடம் வினவினாள். அது கேட்ட ஆண்டகை அவர்கள் புன்னகையுடன் கோழியின் எலும்புகளையும் உயிர்ப்பிக்கக்கூடிய அல்லாஹ்வின் ஆணை கொண்டு எழுந்திரு என்று கூறினார்கள். உடனே கோழி எழுந்து கொக்கரிக்கத் தொடங்கிற்று. உன் மகன் இத்தகைய காரணத்தை அடைந்துவிட்டால், பிறகு அவன் வேண்டியதை உண்ணத் தடையில்லை என்று அப்பெண்மணிடங் கூறினார்கள்.

 (மபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் : 1, பக்கம் : 67)

அவ்லியாக்கள் நாடினால் இறந்து போனவற்றைக்கூட உயிர்ப்பிக்க முடியும். அது மட்டுமல்ல அவர்களிடம் பயிற்சி பெற்ற முரீதுகள் கூட உயிர்ப்பிக்கும் ஆற்றலை பெறமுடியும் என்ற இந்த கதை கூறுகிறது. ஆனால் திருக்குர்ஆனில் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உயிப்பிக்கும் ஆற்றல் உண்டு என்று கூறுகிறது.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.

அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

(அல்குர்ஆன் 9:116)

அவன் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். பூமி செத்த பிறகு அதற்கு உயிரூட்டுகிறான். இவ்வாறே நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.                                     

(அல்குர்ஆன் 30:19)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

இறந்தவற்றை உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவனுக்கு தவிர வேறு எவருக்கும் இல்லை என்று இறைவன் சுட்டிக்காட்டிருக்கும் போது இறைவனின் தனிப்பற்ற ஆற்றலை மனிதர்களுக்கு வழங்கி இணை வைப்புக் கொள்கை மக்களிடம் கொண்டு சென்று பெரும்பாவிகளாக மக்களை மாற்றும் முயற்சியில் இது போன்ற கதைகள் கொண்டு செல்கின்றன இஸ்லாமிய சமுதாயம் இது போன்ற கதைகள் விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

கேள்வி பதில்

திருக்குர்ஆனின் 32 அத்தியாயமான ஹாமீம் ஸஜ்தா அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை காலை சுப்ஹுத் தொழுகையில் ஓதகக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் புகாரியில் நபிகளார் ஓதியதாக ஒரு நபிமொழி உள்ளதாமே உண்மையா?

 சாஜித், புதுக்கோட்டை

வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் 32 அத்தியாயத்தை ஓதக்கூடாது என்றும் நாம் கூறவில்லை. அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற சட்டம் இல்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை என்றே கூறுகிறோம். நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் ஓதியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாüல் ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்  அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் "ஹல் அத்தா அலல் இன்ஸான் (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.          

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : புகாரி (891, 1068).முஸ்லிம் (1594, 1595, 1596)

வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் 32 வது அத்தியாயத்தை ஓதுவது தவறில்லை. நபிகளார் ஓதி தொழுவித்துள்ளார்கள். ஆனால் அந்த அத்தியாயத்தின் 15 வசனத்தில் ஸஜ்தா செய்தவதற்கு ஆதாரம் இல்லை. இது தொடர்பாக வரும் அனைத்து செய்திகளும் ஆதாரமற்றவையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும் என்றும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான்  15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.

"நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங்களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்'' என்று அபூ தர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்'' என்று அபூதர்தா (ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.

இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.

ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் நான்கு இடங்களில் ஸஜ்தா செய்வதற்குதான் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்துத் தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, "இவ்வாறு செய்வது எனக்குப் போதும்'' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரீ 1067, 1070

இதே கருத்து புகாரீயில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டு தான் இருப்பேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு

நூல்: புகாரீ 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்: முஸ்லிம் 905, 906

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்), ஸாத் (38வது அத்தியாயம்), இன்ஷிகாக் (84வது அத்தியாயம்), அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தாச் செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரீ 1072, 1073

எனவே 32 அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் ஓதலாம். ஆனால் அதில் 15 வது வசனத்தில் ஸஜ்தா செய்வதற்கு ஆதாரம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்த வேண்டுமா?               

ஆமினா, காயல்

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.

739 عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنْ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

நாபிஃஉ  அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' எனக் கூறும்போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும்போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி (739)

பெண்கள் மஞ்சளை முகம், கை, கால்களில் பூசிக் கொள்ளலாமா?

எம்.மைதீன் பல்கீஸ்,சத்திரப்பட்டி

பெண்களுக்கு முகத்தில் முடி வளரும் போதும் அதை தடுப்பதற்கு மஞ்சளை பெண்கள் பயன்படுத்தகிறார்கள். இதைப்போன்று உடலில் ஏற்படும் கட்டிகளை உடைக்கவும் சில தோல் நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற மருத்துவக் காரணத்திற்காக மஞ்சளை பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. மஞ்சள் பூசுவது புனிதம் என்ற நோக்கில் இருந்தால் அது கூடாது.

பயிரிடப்பட வேண்டிய காலம்

இப்னு சாபிரா, பேரணாம்பட்டு

மனித வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை இழப்போம், சிலவற்றை பெறுவோம்.  ஆனால், ஒரே ஒரு இறைவனின் அருள் மட்டுமே இழந்தால், மீண்டும் பெற முடியாமல் போய் விடுகிறது.  அது தான் காலம் என்பதை நாமெல்லாம் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம்.  எனவே தான் மனிதன் மிகவும் மதிக்கும் செல்வமான பொன்னோடும், கண்ணோடும் ஒப்பிட்டு, காலம் பொன் போன்றது எனவும், கண் போன்றது எனவும் சித்தரிப்பதை பார்க்கிறோம்.

பல நாட்கள் செய்து கொண்டிருந்த பணிகளை சில நோடி பொழுதுகளில் செய்யக்கூடியளவிற்கு காலத்தை சுருக்கி விட்ட நவீன உலகத்தில், தினங்களை கொண்டாடுவதில் தான் காலத்தை கழிக்கின்றனர். பெரும்பாலோர். அனுதினமும் ஏதாவது ஒரு பெயரில் தினங்களை கொண்டாடும் மனிதர்கள், இந்த காலத்தை உரிய வகையில் பயன்படுத்தாவிட்டால் திண்டாடும் நிலை தான் ஏற்படும் என்பது தான் நிதர்சனம்.

காலத்தின் சுழற்சியால் நடைபெறும் வருட பிறப்புகளில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. புது வருட கொண்டாட்டங்கள் அறிவுப்பூர்வமானதும் இல்லை. ஏதாவது ஒன்றை கஷ்டப்பட்டு மனிதன் அடைந்தால் அதை கொண்டாடலாம்.  மாறாக பகல் மற்றும் இரவை மாறி மாறி அடைந்து நாட்களை கழிப்பதிலும், மனிதனுடைய வயது உயருவதை கொண்டாடுவது பகுத்தறிவிற்கு முரணானது தான்.  இவ்வாறு புது வருட பிறப்பை கொண்டாடுவது இஸ்லாமிய வழிமுறையல்ல. மாறாக கிருத்துவர்களின் நடைமுறையாகும்.  மாற்றார்களின் நடை

முறையை பின்பற்றுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி),

நூல் : முஸ்னத் பஸ்ஸார் 2573

எனவே, இந்த காலத்தை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வீணடிக்காமால், அரிய காலத்தை எவ்வாறு பயன்படுத்த நமக்கு இஸ்லாமிய மார்க்கம் அறிவுறுத்துகிறது என பார்ப்போம்.

நல்லறங்களை செய்வதில் காலத்தை கழிப்போம்

காலத்தின் அருமையை கருத்தில் கொண்டு, நம்முடைய மரணம் வருவதற்கு முன்பாகவே நமக்கு கிடைக்கின்ற காலங்களை நல்லறங்கள் செய்வதிலே விரைவுபடுத்த வேண்டும். இதைத் தான் இறை நம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாக இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:114)

அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:90)

சிறந்த மற்றும் நிரந்தர மாளிகையை பெற காலத்தை செலவழிப்போம்

உலகில் ஒரு வீடு கட்டுவதற்கு (அதுவும் கூட நமக்கு நிரந்தரமல்ல) நாம் எவ்வளவு உழைப்பையும், காலத்தை செலவழிக்கிறோம்.  ஆனால், உலக மாளிகைகளை காட்டிலும் பல கோடி மடங்கு உயர்ந்ததாகவும், சிறப்பிற்குரியதாகவும் மறுமையில் கிடைக்க போகும் நிரந்தர சொர்க்கம் இருக்கும் என திருக்குர்ஆனின் மற்றும் நபிமொழிகளின் வாயிலாக நாம் அறிந்தும், அந்த உயர்ந்த பாக்கியத்தை அடைய நாம் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.  நம்முடைய காலங்களை இறைவனுடைய மன்னிப்பையும், அந்த உயர்ந்த மாளிகைகளையும் பெற முயற்சிக்க வேண்டும் என வல்ல அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 3:133)

தேவை எதிர்கால திட்டம்

நம்முடைய வாழ்வில் நமக்காகவும், நம்முடைய குடும்பத்திற்காகவும் எப்படி எதிர்கால திட்டங்களை தீட்டுகிறோமோ அதைப்போலவே நிரந்தர மறுமை வாழ்விற்காக நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என சிந்தித்து அதற்கேற்றார் போல நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என வல்ல அல்லாஹ் திருமறையில் போதனை செய்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொரு வரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 59:18)

வேண்டாம் வீண் பொழுதுபோக்கு

பொழுது போக்கிற்காக, குறிப்பிட்ட நேரம் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் நம்முடைய நேரங்களில் சில துளிகளை ஒதுக்குவதை இஸ்லாமிய மார்க்கம் தடை செய்யவில்லை.  ஆனால், பொழுதை போக்குவதே கேளிக்கைகளிலும், ஆபாச நிகழ்ச்சிகளிலும் தான் என்கிற போக்கை இஸ்லாமிய மார்க்கம் கண்டிக்கிறது.  இவ்வாறு தங்களுடைய நேரங்களை வீணடிப்பவர்கள் காலத்தின் அருமையை உணராதவர்கள். 

"(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்'' என கூறுவீராக!

(அல் குர்ஆன் 63:11)

காலத்தை வீணடிப்பவர்கள் குற்றவாளிகள்

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

(அல்குர்ஆன் 104வது அத்தியாயம்)

தமக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாழ்நாட்களில் நல்லறங்கள் செய்து நன்மைகளை சேர்க்காமல் அவற்றை வீணாக்குபவன் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட அத்தியாயத்தில் இறைவன் நமக்கு உணர்த்துகிறான். இவ்வுலக வாழ்க்கையில் நம்மை ஈர்க்கின்ற இந்த வீணான மனோ இச்சைகளில் அளவு கடந்து வீழ்வது தான் நம்முடைய மறுமையின் தோல்விக்குக் காரணமாக அமைகின்றது.

இறுதி நேர அவலம்

தங்களுடைய வாழ்வை வல்ல அல்லாஹ் சொன்னது போல அமைத்துக்கொள்ளாமல் மரணிக்க நேரிடுபவர்களுக்கு இறுதி நேரத்தில் (மரண தருவாயில்) ஏற்படப்போகும் அவலத்தை திருமறை குர்ஆன் படம் பிடித்து காட்டுகிறது.

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு  நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே! என்று அப்போது (மனிதன்) கூறுவான். அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 63 : 10, 11)

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:99,100)

காலம் கடந்த ஞானம்

மரணத்தருவாயில் வாய்ப்பு மறுக்கப்பட்டது போல், மறுமையிலும் அந்த உன்னத வாய்ப்பு மறுக்கப்படும் என வல்ல அல்லாஹ் எச்சரிக் கிறான்.

"எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். "படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன் 35:37)

(முஹம்மதே!) அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப் பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள் கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா?

(அல்குர்ஆன் 14 : 44)

இழப்பில்லாத முதலீடு

காலத்தை நாம் நல்ல காரியங்களில் பயன்படுத்தினால், மரணத்திற்கு பின்பும் பலனை அடையலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது.

அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே  அவருடன் தங்கி விடும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), 

நூல் : புகாரி (6514)

கோட்டை விட்டால் கோட்டை (சொர்க்கம்) இல்லை

எவ்வித சிரமுமின்றி வல்ல இறைவன் கொடுத்த காலம் என்ற கொடையை நம் சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டால் மறுமையிலே நமக்கு சொர்க்கம் என்ற கோட்டை கிடைக்காமல் போய்விடும். இவ்விஷயத்தில் மக்களில் அதிகமானோர் கவனமற்று இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்துள்ளார்கள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம் 2. ஓய்வு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: புகாரி (6412)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "இது என்ன?'' என்று கேட்டார்கள். "வீடு பாழடைந்து விட்டது.

அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், "(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது'' என்று கூறினார்கள்.                              

நூல்: திர்மிதி (2257)

எனவே நம்முடைய அதிகமான கால நேரங்களை நல்லமல்கள் அதிகம் செய்வதில் ஈடுபடுத்துவோம். இறைவன் நம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி அருள்புரிவானாக.

தகவல் களஞ்சியம்

யார் இவர்?

1 தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

2 இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.

3 இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள்

4 இவருடைய குலத்தவர்கள் தங்களிடம்  உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்.

5 நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்திற்கு இரவுத் தொழுகைக்கு முறை வைத்துச் செல்லக்கூடியவர்களில் ஒருவராக  இவர்கள் இருந்தார்கள்.

6 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் இவர்களையம் யமன் நாட்டிற்கு நபிகளார் அனுப்பி வைத்தார்கள்.

7 இவர் நபி (ஸல்) அவர்களை இவர்களும், இவருடன் இருவரும் சந்திக்கச் சென்றபோது அவரோடு இருந்த ஒருவர் பதவி  கேட்டார். அப்போது நபியவர்கள் பதவி கேட்போருக்கு நாங்கள் பதவி கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

8 இவரிடம்  நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய நாடியுள்ளீரா? எனக் கேட்டார்கள்.

 9 ஒரு இடத்திற்கு சென்று மூன்று முறை அனுமதி கேட்டு பதில் வரவில்லையானால் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என்ற நபிமொழியை உமர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தியவர்

  10 நபியவர்கள் எப்படி பல் துலக்குவார்கள் என்ற செய்தியை அறிவித்தவர்.

யார் இவர்? விடை

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்

1 ஆதாரம் புகாரி 5048                           2 ஆதாரம் புகாரி:5467

3 ஆதாரம் புகாரி 2486                           4 ஆதாரம் புகாரி:2486

5 ஆதாரம் புகாரி 567                              6 ஆதாரம் புகாரி4341

7 ஆதாரம் புகாரி 2261                           8 ஆதாரம் புகாரி 1795

9 ஆதாரம் புகாரி  2062          10 ஆதாரம் புகாரி 244

வானவர்கள்

எம். முஹம்மது சலீம், எம்..எஸ்.சி, மங்கலம்.

மலக்குகள் எனும் புதிய படைப்பு

அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ், தாம் படைத்துப் பரிபாலிக்கும் இந்தப் பரந்து விரிந்த பிரஞ்சத்திலே தமது விருப்பத்திற்கேற்ப பல்வேறு விதமான படைப்பினங்களைப் படைத்துள்ளான். இன்னும் ஏன்? நம்மைப் படைத்தவனும் அவன்தான். இவ்வகையில், வானங்கள் மற்றும் பூமி முழுவதும் பரவியிருக்கும் படைப்பினங்களின் மொத்த எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர அறிந்தவர் எவருமில்லை.

நீர் வாழ்வன, நில வாழ்வன, காற்றில் வாழ்வன என்று பெரும் பட்டியல் போடும் மனிதர்களின் தேடல் பார்வையில் பட்டிருப்பதோ ஒட்டுமொத்தப் படைப்பினங்களின் தொகையில் சொற்பத்திலும் சொற்பம்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இவ்வாறு நாம் அறிந்துள்ளதை, தலைநிமிர்ந்து நிற்கும் சிகரத்தில் இருக்கும் ஒற்றைத்துகள் என்று குறிப்பிட்டாலும் மிகையாகாது. இப்படியிருக்க, நமது ஐம்புலன்களுக்கு தெரியாத இடத்திலும் விதத்திலும் எத்தனை விதமான படைப்புகள் இருக்கும் என்று கொஞ்சம் கற்பனைக் குதிரையை விரட்டிப்பாருங்கள்; சிந்தனைச் சாட்டையை சுழற்றிப்பாருங்கள். இப்படி, நம்மால் பார்க்க முடியாத விதத்தில் இருக்கும் வாழ்வினங்களுள் ஒன்று, மலக்குகள் என்ற இனம்.

இந்த இனத்தைப் பற்றி இஸ்லாம் சொல்லும் விஷயங்களை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வானவர்களை நம்புதல்

"மனித இனத்தைப் படைப்பதற்கு முன்பாகவே மலக்குகள் என்ற ஒரு இனத்தை அல்லாஹ் படைத்துள்ளான்' என்று முஸ்லிம்களாகிய நாம் கண்டிப்பாக நம்பவேண்டும். அப்போதுதான் நாம் முழுமையான இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்க முடியும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களைப் பின்பற்றும் மக்களும் மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று இறைவன் தமது இறைமறையில் தெரிவித்துள்ளான். அவ்வாறு நாம் நம்பவில்லை எனில் பாரதூரமான வழிகேட்டில் விழுந்தவர்களாக மாறிவிடுவோம் என்றும் அவன் நம்மை எச்சரித்துள்ளான். இப்போது இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கைக் கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல் லாஹ்வையும், மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். 

(திருக்குர்ஆன் 2 : 285)

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்! அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

(திருக்குர்ஆன் 4 : 136)

கிழக்கையோ மேற்கையோ நோக்கி உங்களுடைய முகங்களைத் திருப்புவது (மட்டும்) நற்பணி அன்று. ஆயினும், நற்செயல்புரிவோர் (இவர்களே. அவர்கள்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் மலக்குகளையும் வேதங்களையும் நபிமார்களையும் உறுதியாக நம்புவர். 

(திருக்குர்ஆன் 2 : 177)

மலக்குகளை நம்பிக்கைக் கொள்வது கட்டாயம் என்பதை முன்சென்ற மூன்று வசனங்களின் மூலம் தெரிந்துகொண்டோம். அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளும் இறைவிசுவாசிகளான முஸ்லிம்கள் அவனால் படைக்கப்பட்ட மலக்குமார்களையும் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் நமக்கு நன்முறையில் போதித்துள்ளார்கள். அவ்வாறு அறிவுரை வழங்கியதோடு நின்றுவிடாமல் தமது சொல்லுக்கு முன்மாதிரியாக திகழும் விதத்தில் நபிகளாரும் மலக்குமார்களை நம்பியவர்களாக இருந்தார்கள். இந்தப் பேருண்மைகளைப் பின்வரும் ஹதீஸ்களைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஈமான் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புகாரி (50)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் மதீனாவின் வீதியொன்றில் அவனை (இப்னு ஸய்யாதை)ச் சந்தித்தார்கள். அவனிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைவனின் தூதர் என நீ சாட்சியம் அளிக்கிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவன், "நான் இறைவனின் தூதர் என நீர் சாட்சியம் அளிக்கிறீரா?'' என்று (திருப்பிக்) கேட்டான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் நம்பிக்கைக் கொண்டேன். நீ என்ன காண்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், "தண்ணீரின் மீது சிம்மாசனம் ஒன்றைக் காண்கிறேன்'' என்று சொன்னான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ கடல்மீதுள்ள இப்லீஸின் சிம்மாசனத்தையே காண்கிறாய்'' என்று கூறிவிட்டு, "இன்னும் என்ன காண்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அல்லாஹ்விடமிருந்து செய்திகளைக் கொண்டுவரும்) இரு உண்மையாளர்களையும் ஒரு பொய்யரையும், அல்லது இரு பொய்யர்களையும் ஓர் உண்மையாளரையும் நான் காண்கிறேன்'' என்று சொன்னான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"அவ னுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவனை விட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

ஆதாரம் : முஸ்லிம் (5606)

மலக்குகள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொள்ளும் முஸ்லிம்கள், தங்களது சிந்தனைகளில் தோன்றும் விதங்களிலெல்லாம் அவர்களைப் பற்றி கண்மூடித்தனமாக கற்பனைச் செய்துவிடக்கூடாது. மாறாக, அல்லாஹ்வும் அவனது தூதரும் மலக்குகளைப் பற்றி சொன்ன விதத்தில் மட்டும்தான் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஆகவே, குர்ஆன் ஹதீஸ்களின் வாயிலாக மலக்குகளைப் பற்றி இனிக் காண்போம்.

மலக்குகளின் மூலக்கூறு

மனிதர்களின் ஆதிபிதாவான ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் களிமண்ணால் படைத்தான். ஜின்கள் என்ற மற்றொரு படைப்பினத்தை நெருப்பால் படைத்தான் என்பதை நாம் அறிந்துள்ளோம். இதுபோல, அல்லாஹ் வானவர்கள் என்ற இனத்தை ஒளியால் படைத்துள்ளான். மனிதர்களாகிய நாம் அவர்களை பார்க்க இயலாது. ஆனால், அவர்களோ நம்மைப் பார்க்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான சான்றுகளை இப்போது பார்ப்போம்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பின் மூலம் படைக்கப்பட்டனர். (ஆதிமனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

ஆதாரம் : முஸ்லிம் (5722)

மலக்குகள் எங்கே இருக்கிறார்கள்?

பூமியில் மட்டும் வசிக்கும் விதத்தில் பல உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? அவைகளும் நீர்வாழ்வன, நிலவாழ்வன என்று தங்களின் வாழ்விடத்தின் மூலம் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் நிலத்தில் வாழ்பவைகளின் பட்டியலிலே அங்கம் வகிக்கிறோம். நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் என்று வேறுபாடு காணப்படுகிறது. இத்துடன் வாழ்விடத்தின் வாயிலாக உயிரினங்களுக்கு மத்தியில் வரும் வித்தியாசம் முடிந்துவிடவில்லை. இந்த வரிசையில் மலக்குகள், பரந்து விரிந்த வானத்தை வாழ்விடமாக கொண்டிருக்கும் படைப்பினமாக இருக்கிறார்கள். அதனால்தான்

அவர்களை வானவர்கள் என்றும் நாம் அழைக்கிறோம். இதோ திருக்குர்ஆன் கூறுவதை கேளுங்கள்.

 வானங்களில் எத்தனையோ மலக்குகள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.

(திருக்குர்ஆன் 53 : 26)

 முன்கண்ட வேதவரிகளின் மூலம் மலக்குகள் என்ற இனத்தினர் வானத்தில் வாழ்பவர்கள் என்பதை சந்தேகமற அறிந்துக் கொண்டோம். அதேசமயம், அவர்கள் எப்போதும் எதற்காகவும் பூமிக்கு வரமாட்டார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. பூமிக்கு சென்றுவரும்படி அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டால் அவர்கள் பூமிக்கும் வருவார்கள்; படைத்தவன் கொடுத்தப் பணியை குறையின்றி நிறைவேற்றுவார்கள் என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இந்த செய்திக்குச் சான்றாக இருக்கும் இறைச் செய்திகளைப் பாருங்கள்.

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர, (நாங்கள் பூமிக்கு) இறங்கி வரமாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப் பவனாக இல்லை.                                              

(திருக்குர்ஆன் 19 : 64)

நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், "நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?'' என்று கேட்டார்கள். அப்போதுதான் "(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்கும் இடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்'' எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

 புகாரி (4731).

வஹீ அல்லாத மற்ற பணிகள்

மலக்குகள் பூமிக்கு வருவார்கள் என்று சொன்னதுமே அவர்கள் வஹீ எனும் இறைசெய்தியை கொண்டுவருவதற்காக மட்டுமே இங்கு வருவார்கள் என்று நினைப்பதும் தவறு. அதல்லாத வேறு காரியங்களை செய்வதற்கும் பூமிக்கு சென்று வருமாறு மலக்குகளுக்கு அல்லாஹ் கட்டளையிடுவான். பிரச்சனையை தீர்த்தல், தூதர்களுக்கு உதவுதல், நல்லடியார்களுக்கு நற்செய்தி சொல்லுதல், மறுப்பாளர்களுக்கு தண்டனையை கொண்டு வருதல். நற்காரியங்களை பதிவு செய்தல் என்பது போன்ற பற்பலப் பணிகளை நிறைவேற்ற வானவர்கள் வந்து செல்வார்கள். இதற்கான ஆதாரங்களுள் ஒன்றை மட்டும் இப்போது காண்போம்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்'' என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்கமாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர்.

அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது, அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதி இழைத்தோரை அறிந்தவன். "தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான்.

தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார். "அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு சான்று உள்ளது'' என்று அவர் (நபி) கூறினார்.

 (அல்குர்ஆன் 2 : 246,248)

"தாலூத்துக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, மக்களிடம் ஓர் அலங்காரப் பெட்டியை வானவர்கள் சுமந்து வருவார்கள் என்பதன் மூலம் வஹீ அல்லாத மற்ற மற்ற பணிகளைச் செய்வதற்கும் வானவர்கள் பூமிக்கு வந்து செல்வார்கள் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

07.01.2012. 12:10




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
25 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி