65-திருக்குர்ஆன் விளக்கவுரை1

அத்தியாயம் : 65

65-திருக்குர்ஆன் விளக்கவுரை1

(பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதிலுள்ள) அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அர்ரஹீம் (நிகரற்ற அன்புடை யோன்) ஆகிய இரு சொற்களும் ரஹ்மத் (கருணை) எனும் (வேர்ச்) சொல்லிலிருந்து பிறந்த இரு பெயர்ச் சொற்களாகும்.2 அர்ரஹீம், அர்ராஹிம் ஆகிய இரண்டும் ஒரே பொருளு டையவைதாம். இவை, (பொருள் தருவதில்) ஆலிம் மற்றும் அலீம் (அறிந்தவன்) எனும் சொற்களைப் போன்றவையாகும்.3

பாடம் : 1

குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை.

இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகின்றது. தொழுகையிலும் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகின்றது.4

(இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் மா-கி யவ்மித்தீன் என்பதில் இடம்பெற்றுள்ள) தீன் எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்பட விருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி என இவ்வசனத்தின் பொருள் அமையும்.) கமா ததீனு துதானு (நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் தீன் எனும் சொல்லில் தொனிக் கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகின்ற பிரதிபலனை இச்சொல் குறிக்கின்றது.)

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள்5 கூறுகின்றார்கள்:

அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) தீனை நீங்கள் நம்ப மறுக்கி றீர்கள் எனும் குர்ஆனின் (82:9ஆவது) வசனத்தில் உள்ள தீனை என்பதற்குச் செயல் களுக்கான விசாரணையை என்று பொருள்.

(56:86ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) மதீனீன் எனும் சொல்லுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் என்று பொருள்.6

4474 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாச-ல் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7 பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களி லேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாச-லிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொல்ல வில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்து-ல்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

 

பாடம் : 2

(அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர் களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும் 1:7ஆவது இறைவசனம்).9

4475 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வ லள்ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற(நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

பாடம் : 1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடை யோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் (எனும் 2:31 ஆவது வசனத் தொடர்).2

4476 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!) என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள்.3 நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென் றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று சொல்வார்கள்.

உடனே, இறை நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனி டத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படு வார்கள்.4 பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் ளஇப்ராஹீம் (அலை) அவர் களிடம்ன செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, இறை நம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள்.5 பிறகு, நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவி டம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும் போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும் போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், குர்ஆன் தடுத்து விட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப் பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.6

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர் ஆனில் யாரைக் குறித்து), நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிட் டுள்ளானோ அவர்களையே குர்ஆன் தடுத்து விட்டவர்கள் எனும் சொற்றொடர் குறிக்கிறது.

இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.

பாடம் : 2

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:7

(2:14ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களுடைய தோழர்கள் என்று பொருள்.

(2:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹீத்துன் பில் காஃபிரீன் (இந்த நிராகரிப்போரை அல்லாஹ் சூழ்ந்து கொண் டிருக்கின்றான்) எனும் சொற்றொடருக்கு, இறை மறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர் களால் தப்ப முடியாது) என்று பொருள்.

(2:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸிப்ஃகத் (வர்ணம்) எனும் சொல்லுக்கு தீன் - மார்க்கம் என்று பொருள்.

(2:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலல் காஷியீன் (உள்ளச்சமுடையோர் மீது) எனும் சொற்றொடருக்கு உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது என்று பொருள்.

(2:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பிகுவ்வத்தின் (உறுதியாக) எனும் சொல் லுக்கு, வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள் என்று பொருள்.

அபுல் ஆ-யா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:8

(2:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மரள் (நோய்) எனும் சொல்லுக்குச் சந்தேகம் என்று பொருள்.

(2:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வமா கல்ஃபஹா (பின்னால் உள்ளவர்களுக்கு) எனும் சொல்லுக்கு, அவர்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் (படிப்பினையாக நாம் ஆக்கினோம்) என்று பொருள்.

(2:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா ஷியத்த (மறு இல்லாதது) எனும் சொல் லுக்கு, வெண்மையில்லாதது என்று பொருள்.

அபுல்ஆ-யா (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(2:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யசூமூனக்கும் (கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்) எனும் சொல் லுக்கு, உங்களை ஆட்டிப் படைத்துக் கொண் டிருந்தனர் என்று பொருள். (இப்பொருளின் மூலச் சொல்லான) அல்வலாயா எனும் சொல், அல்வலாஃ என்பதன் வேர்ச் சொல்லாகும். இதற்கு இறையாண்மை என்று பொருள். அல்விலாயா என்று அதனை வாசித்தால், அதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள்.

(2:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபூம் (கோதுமை) எனும் சொல், உண்ணப்படுகின்ற தானியங்கள் அனைத்தையுமே குறிக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.9

(2:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப பாஊ (இறைமுனிவுக்கு ஆளாகிவிட் டார்கள்) எனும் சொல்லுக்கு, அவர்கள் (இறை முனிவுடன்) திரும்பினார்கள் என்று பொருள்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:

(2:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஸ்தஃப்திஹூன (வெற்றியளிக்கும்படி வேண்டினர்) எனும் சொல்லுக்கு, உதவி தேடினர் என்று பொருள்.

(2:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள வாங்கினார்கள் என்ற சொற்பொருள் கொண்ட) ஷரவ் எனும் சொல்லுக்கு, விற்றார்கள் என்று பொருள்.

(2:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ராஇனா எனும் சொல், ருஊனத் (மடமை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவர்கள் ஒரு மனிதனை மடையனாக்க விரும்பினால் அவனை நோக்கி, ராஇனா (மடையனே) என்று சொல்வார்கள்.

(2:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள போதாது எனும் சொற்பொருள் கொண்ட) லா தஜ்ஸீ எனும் சொல்லுக்குப் பயனளிக்க முடியாது என்று பொருள்.

(2:168ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள எட்டுகள் எனும் சொற்பொருள் கொண்ட) குத்வாத் எனும் சொல், கத்வ் எனும் (மூலச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்குக் கால் சுவடுகள் என்று பொருள்.

(2:124ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள கஷ்டம் கொடுத்தான் எனும் சொற்பொருள் கொண்ட) இப்தலா எனும் சொல்லுக்குச் சோதித்தான் என்று பொருள்.

பாடம் : 3

ஆகவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளைக் கற்பிக்காதீர்கள் எனும் (2:22ஆவது) வசனத் தொடர்.

4477 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் விடம் பாவங்களில் மிகப் பெரியது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு, பிறகு எது? என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது என்று சொன்னார்கள்.10

பாடம் : 4

மேலும், நாம் உங்கள் மீது மேகத்தை நிழ-டும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள் (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக் கொன்றும் அவர்கள் தீங்கி ழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள் எனும் (2:57ஆவது) இறைவசனம்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.11

4478 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (தானாக வளர்வதில்) மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.12

இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

 

பாடம் : 5

மேலும், (அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பன வற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயி-ல் சிரம் தாழ்த்தியவர் களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்து விடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்குவோம் என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள் (எனும் 2:58ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ரஃகதன் (தாரளமாக) எனும் சொல்லுக்கு விசாலமாகவும் அதிகமாகவும் என்று பொருள்.

4479 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயி-ல் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள் (2:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.13

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 6

(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ் வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற் செய்தியாகவும் நேர்வழியாகவும் விளங்குகிறது எனும் (2:97ஆவது) இறை வசனம்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.14

(ஜிப்ரயீல், மீக்காயில், இஸ்ராஃபீல் ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக் கத்திலுள்ள) ஜப்ர், மீக், சராஃப் ஆகியன அடிமை எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள ஈல் எனும் சொல்லுக்கு அல்லாஹ் என்று பொருள். (அதாவது அல்லாஹ்வின் அடியார் என்பது இவற்றின் பொருளாகும்.)15

4480 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார் என்று கூறினார்கள். பிறகு, 1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாய-ல், அல்லது தாயின் சாய-ல் இருப்பது எதனால்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளிக்க, வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே! என்று அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார் எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த்துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்க வாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாய-ல், அல்லது தாயின் சாய-ல் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனது சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலைப் பெறுகின்றது என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். ளஉடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.ன பிறகு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்? என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வரு மாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் சலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக! என்று சொன்னார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறெவரு மில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார் என்று அப்துல்லாஹ் பின் சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள்.16

பாடம் : 7

எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? எனும் (2:106ஆவது) இறைவசனம்.17

4481 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞான முடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன் என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றி விட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளான்.18

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன் (எனும் 2:116ஆவது வசனத் தொடர்).19

4482 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகன் (-மனிதன்-) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, எனக்குக் குழந்தை உண்டு என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக் கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன் என்று அல்லாஹ் கூறினான்.20

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 9

மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்றுகூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம் எனும் (2:125ஆவது) வசனத் தொடர்.

(இவ்வசனத்தின் மூலத்தில் ஒன்றுகூடும் இடம் என்ற பொருளைக் குறிக்கும்) மஸாபத்தன் எனும் சொல்லுக்கு மீளுமிடம் என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸுபூன எனும் சொல்லுக்கு மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள் என்று பொருள்.21

4483 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ் வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன் அல்லது என் இறைவன் மூன்று விஷயங் களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான். நான் ளநபி (ஸல்) அவர்களிடம்ன அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும் போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே! என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக் கொள்ளும்படி அல்லாஹ் வும் வசனத்தை அருளினான்.) மேலும் நான், (அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றார்கள். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே! என்று கேட்டேன். உடனே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, நீங்கள் ளநபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதைன நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான் என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்ற போது, உமரே! தம்முடைய துணைவியருக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்! என்று கேட்டார். அப்போது அல்லாஹ், இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்-மான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம் எனும் (66:5ஆவது) வசனத்தை அருளினான்.22

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 10

மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத் தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவாய் (எனப் பிரார்த்தித்தார்கள்) எனும் (2:127ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கவாஇத் (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: காஇதா ஆகும். (மாதவிடாய் நின்று போன முதிய) பெண்களைக் குறிக்கின்ற அல்கவாஇத் எனும் சொல்லின் ஒருமை, காஇத் என்பதாகும்.

4484 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்,) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களை விடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா? எனக் கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்) என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற் சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப் படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.23

பாடம் : 11

(நம்பிக்கை கொண்டவர்களே!) அல்லாஹ் வையும் எங்களுக்கு அருளப்பெற்ற(இவ் வேதத்)தையும், மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபி மார்கள்) மீது அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்ட வற்றையும், (இதர) அனைத்து இறைத் தூதர்களுக்கும் தங்களுடைய இரட்சகனிட மிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையி லும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர் களாக இருக்கின்றோம் என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்).

4485 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோ ருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த வர்களாக இருக்கிறோம் (2:136) என்று கூறினார்கள்.24

பாடம் : 12

அவர்கள் முன்னர் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தமது கிப்லா - தொழும் திசையிலிருந்து அவர்களைத் திருப்பியது எது? என மக்களில் அறிவீனர்கள் வினவுவார்கள். (நபியே) நீர் கூறுவீராக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுகின்ற வர்களை அவன் நேரான வழியில் செலுத்து வான் (எனும் 2:142ஆவது இறைவசனம்).

4486 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள்(ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர் களின் விருப்பமாக இருந்தது. (ஆகவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144ஆவது வசனத்தை அருளினான்.) உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன் னோக்கி)த் தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர் களுடன் தொழுதிருந்தவர்களில் ஒரு மனிதர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாச-ல் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்த வர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்தனர். அவர், அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கின்றேன். நான், நபி (ஸல்) அவர்களு டன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல, அவர்கள், அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்து விட்டிருந்தனர் அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்கு கின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனு மாவான் எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

பாடம் : 13

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (எனும் 2:143ஆவது வசனத் தொடர்.)

4487 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், இதோ வந்து விட்டேன்; என் இறைவா! கட்ளையிடு; காத்திருக்கிறேன் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், (நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத் துரைத்து விட்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அவர்கள், ஆம் (எடுத்துரைத்து விட்டேன்) என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், உங்க ளுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத் தாரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், உங்களுக்கு சாட்சியம் சொல் கின்றவர் யார்? என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே இவ்வாறே, உங்களை நாம் நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது.

நடுநிலையான (வசத்) என்பதற்கு நீதியான என்று பொருள்.26

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 14

இறைத்தூதரைப் பின்பற்றுகின்றவர் யார்; தம் குதிகால் புறமாகத் திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி(பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களுக்கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. மேலும் அல்லாஹ் உங்களது நம்பிக்கையை வீணாக்குகின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர் களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான் (எனும் 2:143ஆவது வசனத் தொடர்).

4488 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் சுப்ஹுத்தொழுகையை மஸ்ஜிது குபாவில் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, கஅபாவை (த்தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான் என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அம் மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக் கொண்டனர்.27

பாடம் : 15

(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புங்கள். மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பட்டவர்கள் அது தங்களுடைய இறைவனி டமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். மேலும், அவர்கள் செய்கின்ற வற்றைப்பற்றி அல்லாஹ் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:144ஆவது இறைவசனம்).

4489 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுத வர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28

 

பாடம் : 16

(நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர் களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோ ராயும் இல்லை. எனவே, உங்களுக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் சுயவிருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் அக்கிரமக் காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர்கள் (எனும் 2:145ஆவது இறைவசனம்).

4490 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையில் இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட)உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.29

பாடம் : 17

எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கின் றோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளை களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் அதை/அவரை (-கஅபாவை அல்லது நபி முஹம்மதை-) நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கி றார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனி டமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிடவேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்).

4491 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் ஒருவர் வந்து, சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவி லுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்க ளுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள் என்று சொன்னார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசை யான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

பாடம் : 18

ஒவ்வொரு(மதத்த)வருக்கும் அவரவர் திரும்பக் கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கி ருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன் றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்).30

4492 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31

 

 

பாடம் : 19

மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள பாதி எனும் சொற்பொருள் கொண்ட) ஷத்ர் எனும் சொல்லுக்கு நோக்கி (திசையில்) என்று பொருள்.

4493 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையிலிருந்த போது, ஒரு மனிதர் வந்து, சென்ற இரவுளநபி (ஸல்) அவர்களுக்குன குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32

பாடம் : 20

மேலும், (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமேத் திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத் தொடர்).33

4494 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையில் இருந்த போது ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

பாடம் 21

நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர் மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக அறிபவனுமா வான் எனும் (2:158 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஷஆயிர் (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு அடையா ளங்கள் என்று பொருள். அதன் ஒருமை ஷஈரா என்பதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸஃப்வான் எனும் சொல்லுக்கு கற்கள் என்று பொருள்.

எதையும் முளைக்கவிடாத வழுக்குப் பாறைகளும் ஸஃப்வான் எனப்படுவதுண்டு. இதன் ஒருமை ஸஃப்வானா என்பதாகும். இதுவும் ஸஃபாவும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) ஸஃபா என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

4495 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கின் றார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமி டையே சுற்றி வருவது குற்றமில்லை என்ற (2:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருது கிறீர்கள்? எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா (ரலி), (என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த முஷல்லல் எனும் குன்றில் உள்ள) மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) குதைத் எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்த போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகின்றோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போது தான் அல்லாஹ், நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை என்ற (2:158) இந்த வசனத்தை அருளினான்.34

4496 ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின் போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். ஆகவே, இஸ்லாம் வந்த போது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில் லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்விரண்டுக்குமி டையே சுற்றிவருவதில் குற்றமில்லை எனும் (2:158ஆவது) இவ்வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள்.35

பாடம் : 22

அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர் எனும் (2:165 ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அன்தாத் (இணைகள்) எனும் சொல்லுக்கு நேர் எதிரானவைகள் (அள்தாத்) என்று பொருள். இதன் ஒருமை நித்து என்பதாகும்.

4497 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார் என்று கூறினார்கள். (அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்து விடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார் என்று நான் சொன்னேன்.36

பாடம் : 23

இறை நம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாக வும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் யாராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உஃபிய (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு விட்டுக் கொடுக்கப் பட்டால் என்று பொருள்.

4498 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்து விடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் ளமுஹம்மத் (ஸல்) அவர்களின்ன இந்தச் சமுதாயத்திற்கு, கொலை செய்யப்பட்டவர்களுக்ககாகப் பழிவாங்குவது உங்க ளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும் என்று கூறுகிறான்.

மன்னிப்பளித்தல் (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.

இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள் மீது கடைமையாக்கப் பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகின்றானோ அவனுக்கு- அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கின் றானோ அவனுக்கு- துன்புறுத்தும் வேதனை உண்டு. (2:178)

இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4499 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொலைக் குற்றத்தில்)அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.37

4500 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரி (அத்தை) ருபய்யிஉ (பின்த் நள்ர்) அவர்கள் ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்து விட் டார்கள். ஆகவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினர். அவர்கள் (மன்னிக்க) மறுத்து விட்டனர். ஆகவே, என் அத்தையின் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்து விடவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்கு வதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்து விட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரது முன்பல் உடைக்கப் படக்கூடாது என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்கு வதாகும் என்று சொன்னார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்து விட்டனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு(எதை யேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறை வேற்றி (மெய்யாக்கிக் காட்டி)விடுகின்றான் என்று கூறினார்கள்.38

பாடம் : 24

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்க ளுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக் கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும்பொருட்டு (எனும் 2:183ஆவது இறைவசனம்).

4501 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமை யான போது நபி (ஸல்) அவர்கள், (ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகின்றவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் அதை விட்டுவிடலாம் என்று சொன்னார்கள்.

4502 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையான போது விரும்பியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டு விட்டனர்.39

4503 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்த போது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே! என்று (நான் நோன்பு நோற்கா மல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், ரமளான் (நோன்பு) கடமை யாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையான போது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கை விடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள் என்று சொன்னேன்.

4504 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்த போது அந்நாளில் தாமும் ƒநான்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையான போது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்க மாகி, ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆகிவிட்டது.40

பாடம் : 25

(நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில் தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளவேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவ ளிப்பது கடமையாகும். ஆனால், எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம்.

அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப் பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் விட்டுவிடலாம் என்று அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்.41

ஹஸன் அல்பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42

(குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கார்ப்பிணிப்பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம்.

தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பை விட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்து விட்ட பின்னால், ஓராண்டு அல்லது ஈராண்டுகள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக் கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள்.

(இந்த 2:184ஆவது வசனத்திலுள்ள சிரமப்படுகின்றவர்கள் எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் யுதீகூனஹு என்றே ஓதுகிறார்கள். இதுவே பெரும்பான்மை(குர்ஆன் அறிஞர்களின் நிலை)யாகும்.43

4505 அதாஉ பின் அபீ ரபாஹ்-(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வஅலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத் துன் தஆமு மிஸ்கீன் ளரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்ன எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று சொன்னார்கள்.

பாடம் : 26

உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத் தொடர்).

4506 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், (2:184ஆவது வசனத்தில் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்பதன் மூலத்தை) ஃபித்யத்து தஆமி மஸாகீன என்று (ஏழைகள் எனப் பன்மை யாக) ஓதிக்காட்டி இது, சட்டம் மாற்றப்பட்டு விட்ட வசனமாகும் என்று கூறினார்கள்.

4507 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்ட போது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்! என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.44

அபூ அப்துல்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் பின்அபீ உபைத் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்து விட்டார்கள்.45

பாடம் : 27

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியி ழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும் விட்டான். ஆதலால், இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) ஒன்று கூடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக் கொள்ளுங்கள் (எனும் 2:187ஆவது வசனத் தொடர்).

4508 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாத நோன்பு கடமையான போது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ், (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்து விட்டான் எனும் (2:187ஆவது) வசனத்தை அருளினான்.46

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

 

 

பாடம் : 28

இன்னும் இருள் ரேகையிலிருந்து விடிய-ன் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல் களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும் போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடி விடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புக ளாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்கு கிறான் எனும் (2:187ஆவது) வசனத் தொடர்.

இஃதிகாஃப் இருப்பவர் என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள்.

4509 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இந்த 2:187ஆவது வசனம் அருளப்பட்ட வுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலை யானதும் ளநபி (ஸல்) அவர்களிடம் சென்று,ன அல்லாஹ்வின் தூதரே! என் தலையணையின் கீழே (இந்த இரு கயிறுகளையும்) வைத்திருந் தேன். (ஆயினும் இரண்டையும் பிரித்தறிய முடியவில்லையே?!) என்று சொன்னேன். அதற்கு அவர்கள், வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.47

4510 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை என்ற (2:187ஆவது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள்தாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந் தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்)தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, (அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பக-ன் வெண்மையுமாகும் என்று கூறினார்கள்.

4511 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பத்தில்) வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள் எனும் (2:187ஆவது வசனத்தின்) தொடர் விடிய-ன் (மினல் ஃபஜ்ர்) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக் கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், மினல் ஃபஜ்ர் (விடிய-ன்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும்தான் இது குறிக்கிறது என்று அறிந்து கொண்டார்கள்.48

 

 

 

பாடம் : 29

நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் (எனும் 2:189ஆவது வசனத் தொடர்).

4512 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டி ருந்தார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள் எனும் (2:189ஆவது) வசனத்தை அருளினான்.49

பாடம் : 30

குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள். அவர்கள் (குழப்பத்திலிருந்து) விலகிக் கொண்டால் அப்பால் அநீதி இழைப்போர் மீதேயன்றி போர்தொடுத்தல் என்பது இல்லை (எனும் 2:193ஆவது இறைவசனம்).

4513 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப(வருட)த்தில் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இரு மனிதர்கள் வந்து, மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர் (ரலி) அவர்களின் புதல்வரும் நபி (ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது? என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும்,

 குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள் என்று (2:193ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூற வில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ளஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்ன குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாக ஆனது. ஆனால் (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகின் றீர்கள்! என்றார்கள்.50

4514 நாஃபிஉ (ரஹ்) அவர்கள்கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், (காரி ஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு ஹஜ் செய்கின்றீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கை விட்டுவிடுகின்றீர்களே, ஏன்?அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்! என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது. 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர் இறையில்ல மான) கஅபாவில் ஹஜ் செய்தல் என்றார்கள்.

அந்த மனிதர், அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தனது வேதத்தில் இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்புமீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ் வுடைய கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள் என்றும் (49:9), குழப்பம் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள் என்றும் (2:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் செவியுறமாட்டீர்களா? என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், (நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின்படி) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட) தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட) ஒருவர் தமது மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்தினர். முடிவில், இஸ்லாம் அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆன போது குழப்பம் ஏதும் இருக்கவில்லை என்றார்கள்.

4515 அந்த மனிதர், அலீ (ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான் (ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின் போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்து விட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள்தாம் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி (ஸல்) அவர்களின் மருமகனுமாவார் என்று கூறியவாறே, (நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கின்றீர்களே இது தான் அலீ அவர்களின் வீடாகும் என்று தமது கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

பாடம் : 31

மேலும், நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர் களை நேசிக்கின்றான் எனும் (2:195ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) தஹ்லுகா (அழிவு) எனும் சொல்லும் ஹலாக் எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் அழிவு எனும் பொருள் கொண்ட வேர்ச் சொற்களேயாகும்.)

4516 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் செல விடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள் எனும் (2:195ஆவது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.51

 

 

பாடம் : 32

ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இரு(ந்து பலியிடுவதற்கு முன்பே தலை முடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலிகொடுத்தல் ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).

4517 அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளிவாச-ல் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாச-ல் - கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று கூறிவிட்டு, உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ஸாவு உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும் என்று சொன்னார்கள்.52

பாடம் : 33

எவரேனும் உம்ரா(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப்பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாத வர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமை யான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).53

4518 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தமத்துஉ (ஹஜ் தொடர்பான இந்த 2:196ஆவது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே, நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடைசெய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைத் தமது (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

முஹம்மது பின் இஸ்மாயீல் புகாரீ யாகிய நான் கூறுகிறேன்: அவர் உமர் (ரலி) அவர்கள்தாம் என்று சொல்லப்படுகின்றது.54

பாடம் : 34

(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது (எனும் 2:198ஆவது வசனத் தொடர்).

4519 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். ஆகவே, ஹஜ் பருவத்தில், உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது எனும் (2:198ஆவது) வசனத் தொடர் அருளப்பட்டது.55

 

பாடம் : 35

பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (அரஃபாத் எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத் தொடர்).

4520 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்த-ஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள் எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்து விட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள் எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.56

 

4521 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது தமத்துஉ ஹஜ் செய்கின்ற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுத லாக) இறையில்லம் கஅபாவை அவர் தவாஃப் செய்யலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகிவிட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்கவேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானிப் பிராணி கிடைக்க வில்லையென்றால் ஹஜ் நாட்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்து விட் டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ருத் தொழுகையிலிருந்து இரவின் இருள்படரும் வரைத் தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல் லாம் புறப்பட்டு திரும்பிச் செல்லும் போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்த-ஃபாவில் கழிக்கட்டும். பிறகு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரட்டும்! (அவர் மட்டுமன்றி) நீங்கள் (அனைவரும்) விடியும் வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும், லாஇலாஹா இல்லல்லாஹு (வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்து தான் திரும்பிக் கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கருணையுள்ளவனும் ஆவான்(2:199)

(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறியும் வரை (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.)

 

பாடம் : 36

(அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவு கூரும் மக்கள் உள்ளனர்.) அவர்களில் சிலர், எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக! எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 2:201ஆவது இறைவசனம்).

4522 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக? எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

 

பாடம் : 37

அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத் தொடர்).

(2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஸ்ல் எனும் சொல்லுக்கு உயிரினம் என்று பொருள் என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

4523 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத் தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்பவனே யாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.57

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடம் : 38

உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனை யான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்து விடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங் களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட் டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது (எனும் 2:214ஆவது இறைவசனம்).

4524 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது எனும் (12:110ஆவது) வசனத்தில் (குஃத்திபூ -இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள்- என்று வாசிக்காமல்) குஃதிபூ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்) என்று வாசித்து விட்டு அவ்வசனத்திலிருந்து, இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அலைக் கழிக்கப்பட்டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது) எனும் (2:214ஆவது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள்.58

பிறகு நான் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் ளகுஃதிபூ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்ன அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.

4525 அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்த தில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற் படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன என்று சொன்னார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், வ ழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் குஃத்திபூ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.59

பாடம் : 39

உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர் கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள்தாம் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம்.

4526 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேச மாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக் கொண்டேன். அவர்கள் அல்பகரா அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்றேன். அதற்கு அவர்கள், இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.60

4527நாஃபிஉ(ரஹ்)அவர்கள் கூறியதாவது:

 ஆகவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள் எனும் (2:223ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர் (ரலி) அவர்கள், மனைவியிடம் அவளுடைய ..... கணவன் புணரலாம் என்று குறிப்பிட்டார்கள்.61

 

4528 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, உங்கள் பெண்கள் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம் இறங்கியது.62

 

 

பாடம் 40

நீங்கள் (உங்களுடைய) மனைவியரை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா)தவணையின் இறுதியை அடைந்து விட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம் (எனும் 2:232 ஆவது வசனத் தொடர்).

4529 மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டு வந்தனர்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் விவாகரத்துச் செய்து இத்தா காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். ளஆகவே, இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.ன பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்ப மிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்து விட்டார்கள்.

அப்போது தான் , அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம் எனும் (2:232 ஆவது) வசனம் இறங்கிற்று.63

பாடம் 41

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்து கொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர் களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்).

(2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யஅஃபூன (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு அன்பளிப் பாகக் கொடுத்தால் என்று பொருள்.

4530 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டால் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான் எனும் (2:240 ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங் களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்? அல்லது இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன் என்று பதிலளித்தார்கள்.64

4531 அப்துல்லாஹ் பின் அபீ நஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களு டைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப் பார்கள் (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(கணவன் இறந்துபோன) அந்தப் பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த இத்தாவைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் உங்களில் மனைவி யரை விட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப் பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப) மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால்(நான்கு மாதம் பத்து நாட்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத் தான் வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார் களாக. ஆயினும், அவர்களாகவே வெளி யேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) இத்தா கால வரம்பு கணவனை இழந்த கைம் பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65

(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிட மிருந்து இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் இத்தா இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருப்பாள். இதையே (தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக எனும் இந்த இறைவசனத் தொடர் குறிக்கின்றது.

ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்ன அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் இத்தா இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெயியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் சாசனம் செய்து தர வேண்டுமென்ற முறை)யை மாற்றி விட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66

இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற் சொன்ன கருத்தைப் போலவே அதாஉ அவர்கள் வழியாக இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

4532 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67 அப்போது அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்ட தில்லையே என்று சொன்னார்.

உடனே நான் உரத்த குரலில், கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்ச லுடையவன்தான் என்று சொன்னேன்.68 பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) மாலிக் பின் ஆமிர் அல்லது மாலிக் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னை விட்டு (கணவன்) இறந்து விட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது? என்று கேட்டேன். அதற்கவர், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (கணவன் இறந்து விட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள அல்பகரா எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (அத்தலாக் எனும்) சிறிய அத்தியாயம் இறங்கிற்று என்று கூறினார்கள்.69

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், (வழியில்) நான் அபூ அதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன் என்று (சந்தேகமின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது.

பாடம் : 42

(நம்பிக்கை கொண்டவர்களே!) அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள் (எனும் 2:238ஆவது வசனத் தொடர்).

4533 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறு களையும் நெருப்பால் நிரப்புவானாக! என்று சொன்னார்கள்.70

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத்துடன் (அல்லது அவர்களுடைய வயிறுகளையும் என்று) சொன்னார்கள்.71

 

 

 

 

பாடம் : 43

மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் (எனும் 2:238ஆவது வசனத் தொடர்).

(இதன் மூலத்திலுள்ள) கானித்தீன் எனும் சொல்லுக்குக் கீழ்படிந்தவர்களாக என்று பொருள்

4534 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். அனைத்துத் தொழுகை களையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் எனும் (2:238 ஆவது) வசனம் இறங்கும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் இறங்கியவுடன் பேசாம-க்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72

பாடம் : 44

நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனத்தில் இருந்தவர்களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்த பிரகாரம் அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள் (எனும் 2:239ஆவது இறை வசனம்).

இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:73

(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) குர்சிய்யுஹு (அவனது அரசாட்சி) எனும் சொல்லுக்கு அவனது அறிவு என்று பொருள்.

(2:247ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பஸ்தத்தன் (அதிகம்) எனும் சொல்லுக்கு கூடுதல், சிறப்பு என்று பொருள்.

(2:250ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃப்ரிஃக் (பொழிவாயாக!) எனும் சொல்லுக்கு இறக்கியருள் என்று பொருள்.

(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) வலா யஊதுஹு (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு (வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம் பெற்றுள்ள) ஆதனீ என்பதற்கு எனக்குப் பளுவாகிவிட்டது என்று பொருள். ஆது என்பதற்கும் அய்த் என்பதற்கும் பலம் என்று பொருள்.

(அதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) சினா எனும் சொல்லுக்குச் சிற்றுறக்கம் என்று பொருள்.

(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.

(2:258ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃப புஹித்த (வாயடைத்துப் போனான்) என்பதற்கு அவனது ஆதாரம் போய்விட்டது என்று பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காவியா (விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, மக்கள் சஞ்சாரமற்ற என்று பொருள். உரூஷிஹா (முகடுகள்) என்பதற்கு அதன் கட்டடங்கள் என்று பொருள்.

 (2:259ஆவது வசனத்தின் மூலத்தில்

ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) நுன்ஷிருஹா எனும் சொல்லுக்கு அதை வெளிப்படுத்துகிறோம் என்று பொருள்.

(2:266ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) இஃஸார் (சூறாவளி) எனும் சொல்லுக்குத் தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகின்ற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்:

(2:264ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸல்த் (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப்பாறை) என்று பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(2:265ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வாபில் என்பது பெருமழையும் அத்தல்லு என்பது தூறலும் ஆகும். இது இறை நம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும்.

(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) என்பதற்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.

4535 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:

(முத-ல்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப் பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்து விட்டால், சலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாத வர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இது வரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுது கொள்வர்.

பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக,

இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுது விட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.

இதன் அறிவிப்பாளரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருது கிறேன் என்று நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.74

பாடம் : 45

உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார் களாக! (எனும் 2:240ஆவது வசனத் தொடர்).

 

4536 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்ப வர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக! எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறை வசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவிடு! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்ற மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.75

பாடம் 46

இப்ராஹீம் (இறைவனை நோக்கி,) இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு! எனக் கூறிய போது, அவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். (அதற்கு) ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று அவர் கூறினார். (அதற்கு இறைவன்) நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உங்களிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தை, ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு அவற்றை நீங்கள் அழையுங்கள்! அவை உங்களிடம் விரைந்து வந்து சேரும். திண்ணமாக அல்லாஹ், வல்லோனும் நுண்ணறிவு உள்ளோனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்றான் (எனும் 2:260 ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுர்ஹுன்ன (அவற்றை உங்களிடம் வைத்து) எனும் சொல்லுக்கு அவற்றைப் பல துண்டுகளாக்கி என்று பொருள்.

4537 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம்கொள்ள அதிகத் தகுதியுடைவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்க வில்லை.) ஏனெனில், என் இறைவா! மரித்த வர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர்கள், ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.76

பாடம் : 47

நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக் கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந் தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகை யான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடைகிறது. வலு வில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலையில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்து போவதை உங்களில் எவரேனும் விரும்பு வாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான் எனும் (2:266 ஆவது) இறைவசனம்.

4538 (அப்துல் அஸீஸ் பின் அப்தில் ம-க்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுலைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிட மிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:

உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் நபித் தோழர்களிடம், நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து... (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்? என்று கேட்க, அவர்கள், அல்லாஹ்வே அறிந்தவன் என்று பதிலளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் கோபமடைந்து, எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டி லொன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள் என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அதைப் பற்றி என் உள்ளத்தில் ஞானம் உள்ளது. இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்ப மாகக் கருதிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், என்ன செயல்? என்று கேட்க, இப்னு அப்பாஸ், ஒரு செயலுக்கு என்று (மீண்டும்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மகத்துவமுமிக்க அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்து வந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்து விட்டது; (அதைத் தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்) என்று சொன்னார்கள்.77

பாடம் : 48

(பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் தடுத்துவைக்கப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் நடமாட இயலாதவர்கள். அவர்கள் இரவாததால், அறியாதோர் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமைத்) தோற்றத்தைக் கொண்டு அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத் தொடர்).

(தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான் என்று சொல்வதற்கு அல்ஹஃப அலய்ய என்று (அரபுகள்) கூறுவர். இச் சொல்லின் வேர்ச் சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் இல்ஹாஃப் (வற்புறுத்தல்) என இடம் பெற்றுள்ளது.

4539 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட் டார்கள் எனும் (இந்த 2:273ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 49

வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர்கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே எனக் கூறியதனாலேயாம். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 2:275ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்மஸ்ஸு (தீண்டல்) எனும் சொல்லுக்குப் பைத்தியம் என்று பொருள்.

4540 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி

வாச-ல் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.78

 

 

 

பாடம் : 50

அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கின் றான் (எனும் 2:276ஆவது வசனத் தொடர்).

(அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்து விடுகின்றான்.

4541 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாச-ல் (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

 

 

 

பாடம் : 51

(வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விட மும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும் 2:279ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃபஃதனூ எனும் சொல்லுக்கு அறிந்து கொள்ளுங்கள் என்று பொருள்.79

4542 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ல் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பாடம் : 52

(உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகின்றவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின், தர்மமாக வழங்கிவிடுவதே மிகவும் மேலான தாகும் (எனும் 2:280ஆவது இறைவசனம்).

4543 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.80

 

 

 

பாடம் : 53

ஒரு நாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்தவற்றுக்கு நிறைவாக(ப் பிரதிபலன்) அளிக்கப்படுவான். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 2:281 ஆவது இறைவசனம்).

4544 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81

 

 

பாடம் : 54

உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 2:284ஆவது வசனத் தொடர்).

4545 மர்வான் அல் அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் - உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் எனும் இந்த (2:284 ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.82

பாடம் : 55

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்.) (இவர்கள்) யாவரும், அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங் களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்றுச் சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்ட மாட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம்; வழிப்பட்டோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது என்றும் வேண்டுகிறார்கள் (எனும் 2:285 ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(2:286ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இஸ்ரன் (பளு, சுமை) எனும் சொல்லுக்குப் பொறுப்பு என்று பொருள்.

30.11.2009. 03:16




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
32 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி