65-திருக்குர்ஆன் விளக்கவுர16

பாடம் : 1

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(65:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வபால் (விளைவு) எனும் சொல்லுக்கு தண்டனை என்று பொருள்.

4908 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரை விவாகரத்துச் செய்து விட்டார்கள். அப்போது அவர்களுடைய துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட் டார்கள். பிறகு, அவர் (அப்துல்லாஹ் பின் உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரைத் தம் மனைவியாகவே வைத்துக் கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்து விட்டால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மை யாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும் என்றும் கூறினார்கள்.2

பாடம் : 2

மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவரது காரியத்தை அவன் எளிதாக்குகின் றான் (எனும் 65:4ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) உலாத்துல் அஹ்மால் (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை ஃதாத்து ஹம்ல் (கர்ப்பிணி) என்பதாகும்.

4909 அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண் (ணின் இத்தா பிரசவத்தோடு முடிந்து விடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள் என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இரு தவணைகளில் பிந்தியது என்று கூறினார்கள்.3

உடனே நான் ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,ன கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும் (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் குரைப் என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்முசலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா -ரலி) இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு இத்தா பிரசவம் வரையில்தான்.)

4910 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மார்க்க அறிஞர்) அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் இருந்த அவையில் இருந்து கொண்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்து விட்ட கர்ப்பிணியின் இத்தா காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், இரு தவணைகளில் பிந்தியது என்று கூறினார்கள். உடனே நான், அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கிடைத்த சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்களுடைய நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர்.

நான் அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். ஆகவே, நான் அப்துல்லாஹ் பின் உத்பா (தற்போது) கூஃபாவில்தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவர் மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன் என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகைசெய்தவர்) கூச்சப்பட்டார். மேலும், அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா அவர்கள் ஆனால், அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுடைய தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்ஊத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே! என்று சொன்னார். ஆகவே நான் அபூ அத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), இது குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர் களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒருபெண் விஷயத்தில் இத்தா காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர் களா? அவளுக்குச் சலுகை காட்டக்கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (அத்தலாக் எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தொடர்பான (அல்பகரா எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது. (பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இது தான் :) மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும் (65:4)4

66ன அத்தஹ்ரீம் அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

பாடம் : 1

நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்? அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான் (எனும் 66:1ஆவது இறைவசனம்).

4911 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றை சத்தியமிட்டு) விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக் கிறது எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.2

4912ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள்

முத-ல் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர் களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறிட வேண்டும்.

(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே! என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)

பாடம் : 2

அல்லாஹ் நீங்கள் செய்யும் சத்தியத்தி(ன் கட்டுப்பாட்டி)லிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித்துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறி வாளன் (எனும் 66:2ஆவது இறைவசனம்).

4913 இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.

(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக் கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர் களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள்.3

உடனே நான், அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை என்று சொன்னேன். அப்போது (இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன் என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்து ரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த போது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப்பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார்.

உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றார். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே! என்று (அறிவுரை) சொன்னேன்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, ளநபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவி யாரானன உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.4

இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்து விட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்து விட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.

மேலும், அன்சாரிகளில் எனக் கொரு நண்பர் இருந்தார். நான் ளநபி (ஸல்) அவர்களது அவையில்ன இல்லாத போது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாத போது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டி ருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். திறங்கள், திறங்கள் என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான்,ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்து விட்டானா? என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள் என்றார்.

உடனே நான், ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், இந்த உமர் பின் கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்! என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்து விட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமி டையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கு மிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந் தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர் களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ஏன் அழுகிறீர்கள்? என்றார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அ(ம்மன்ன) வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள்.5

பாடம் : 3

நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். (ஆனால்,) அதை அந்தத் துணைவி (மற்றொரு துணைவிக்கு) தெரிவித்து விடவே, நபிக்கு அல்லாஹ் அதை வெளிப்படுத்தினான். அப்போது, நபி அதில் சிலவற்றை (அந்தத் துணைவியிடம்) சொல்லிக்காட்டிவிட்டு சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார். இவ்வாறு (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் துணைவியிடம் தெரிவித்த போது தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்? என்று அந்தத் துணைவி கேட்டார். அதற்கு நபி அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான் என்று பதிலளித்தார் (எனும் 66:3ஆவது இறைவசனம்).

இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்.6

4914 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டி ருந்தேன். ஆகவே, (வாய்ப்புக் கிடைத்த போது அவர்களிடம்) இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல் பட்ட இரு துணைவியர் யார்? என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள் ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.7

பாடம் : 4

நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், (அது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில்,) உங்களிருவரின் இதயங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து விட்டிருக்கின்றன எனும் (66:4ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃகத் எனும் சொல்லுக்குப் பிறழ்தல் என்று பொருள். (இதன் தன்மை வினைச் சொற் களான) ஸஃகவ்த்து மற்றும் அஸ்ஃகைத்து ஆகியவற்றுக்கு நான் சாய்ந்தேன் என்று பொருள். (6:113ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) - தஸ்ஃகா எனும் சொல்லுக்கு அவை சாய்வதற்காக என்று பொருள். தழாஹரூன எனும் சொல்லுக்குக் கூடிப் பேசிச் செயல் படுதல் என்று பொருள். ழஹீர் எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(66:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கூ அன்ஃபுசக்கும் வஅஹ்லீக்கும் (உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்பதன் கருத்தாவது: இறையச்சத்தைக் கைக் கொள்ளுமாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் அறிவுரை பகர்வதுடன், அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பியுங்கள்.

4915 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார்? என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடு நாட்களாக) எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்து விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஒருமுறை) நான் ஹஜ்ஜுக்காக உமர் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான் எனுமிடத்தில் இருந்த போது உமர் (ரலி) அவர்கள் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது உளூ (அங்கசுத்தி) செய்தவற்கான தண்ணீரை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காகத் தண்ணீர்க் குவளையை எடுத்து வந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இது தான் ) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்ன கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்? என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் (அவர்கள் இருவரும்)! என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

பாடம் : 5

நபி (தம் துணைவியராகிய) உங்களை விவாகரத்துச் செய்து விடுவாராயின், உங்களுக்கு பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்கிட முடியும். அவர்கள் (வாய்மையான) முஸ்லிம்களாய், இறை நம்பிக்கையுள்ளோராய், கீழ்ப்படிப வர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர் களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயும், கன்னிகளாயும் இருப்பார்கள் (எனும் 66:5ஆவது இறை வசனம்).

4916 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5ஆவது) இறைவசனம் இறங்கிற்று.8

பாடம் : 1

(அவன்) இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல் லாம் நபியே! நீங்கள் அடங்கிவிடாதீர்கள் (எனும் 68:13ஆவது இறைவசனம்).

4917முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(68:13ஆவது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அவன் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனா வான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பது போல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது என்று கூறினார்கள்.2

 4918 ஹாரிஸா பின் வஹ்ப் அல் ஃகுஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீன மானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

பாடம் : 2

கா-ன் திரை அகற்றப்ப(ட்)டு (இறைவன் காட்சியளிக்கு)ம் அந்த (மறுமை) நாளில் (மக்களெல்லாம் தாமாகவே) சிரவணக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போது கூட (இறைமறுப்பாளர்களான) இவர்கள் (அதற்கு) சக்திபெற மாட்டார்கள் (எனும் 68:42ஆவது இறைவசனம்).

4919 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத் தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கை யுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கை யுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 1

(உங்கள் தெய்வங்களாகிய) வத், சுவாஉ, யஃகூஸ், யஊக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை(க் கேட்பாரற்று) விட்டுவிடாதீர்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டனர் (எனும் 71:23ஆவது இறைவசனம்).

4920 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் (காலத்து) மக்களிடையே (வணங்கப்பட்டுக் கொண்டு) இருந்த சிலைகள், பின்பு அரபுகளி டையே இருந்தன. வத் என்பது, தூமத்துல் ஜந்தல் எனும் இடத்திலிருந்த கல்ப் குலத்தாரின் சிலையாகும்.2 சுவாஉ என்பது பனூஹுஃதைல் குலத்தாரின் சிலையாகும்.3 யஃகூஸ் என்பது பனூமுராத் குலத்தாரின் சிலையாக இருந்தது. பின்னர், ஸபஉ சமுதாயத்தாருக்கு அருகில் (யமனிலுள்ள) ஜவ்ஃப் எனுமிடத்தில் வசித்துவந்த பனூ ஃகுதைஃப் குலத்தாருக்குச் சொந்தமானது. யஊக் என்பது பனூ ஹமதான் குலத்தாரின் சிலையாகும். நஸ்ர் என்பது (யமனின் பழங் குடியரான) ஹிம்யர் மக்களின் சிலையாகும். இவர்கள் துல்கிலாஃ என்பவருடைய சந்ததியினராவர். (தெய்வச் சிலைகளாகக் கற்பிக்கப்பட்ட) இவை (ஐந்தும்) நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்து நல்ல மனிதர்களின் பெயர்களேயாகும். பின்னர் இவர்கள் மரணமடைந்தபொழுது இவர்களுடைய மக்களின் மனத்தில் ஷைத்தான், அ(ந்த நல்ல)வர்கள் அமர்ந்து வந்த அவைகளில் சிலைகளை நிறுவுங்கள். (அவர்களின் நினைவாக) அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்! என்று எண்ணச் செய்தான். (அதன்படியே) அவர்களும் செய்தனர். அப்போது அந்த சிலைகள் வணங்கப்படவில்லை. ஆனால், (தங்களின் பெரியவர்களை நினைவுகூர்வதற்காகச் சிலை நிறுவிய) அந்த மக்களும் இறந்து, (அந்தச் சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணம் குறித்த) அறிவும் மங்கிவிட்ட போது அச்சிலைகள் வணங்கப்படத் தொடங்கின.

 பாடம் : 1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (72:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) -பத் எனும் சொல்லுக்கு உதவியாளர்கள் என்று பொருள்.

4921 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்தி ருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்தி ருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திக ளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.

திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண் டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத் தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, (நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்... என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி வஹியின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.2

பாடம் : 1

4922 யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் போர்த்தியி ருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். நான் (நபியே!) படைத்த உங்கள் இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு அபூ சலமா அவர்கள், நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப்பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காண வில்லை. ஆகவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன்.2 ஆகவே, நான் (என் துணைவியா ரான) கதீஜாவிடம் சென்று, எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்! என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும் விட்டார்கள்; என் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய் யுங்கள். மேலும், உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.3

பாடம் : 2

எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள் எனும் (74:2ஆவது) இறைவசனம்.

4923 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஹிரா மலைக் குகையில் தங்கியி ருந்தேன். (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸ் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாடம் : 3

உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்திடுங்கள் (எனும் 74:3ஆவது இறை வசனம்).

4924 யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான் (நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ சலமா (ரஹ்) அவர்கள், நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் எனும் (74:1ஆவது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக் எனும் (96:1ஆவது) வசனம்தான் (முதன் முத-ல் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப்போவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் ஹிரா மலைக் குகையில் தங்கியி ருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவி டம் சென்று எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்! என்று கூறினேன். மேலும் எனக்கு, போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன.4

பாடம் : 4

மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மை யாக வைத்திருங்கள் (எனும் 74:4ஆவது இறைவசனம்).

4925 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின் வருமாறு) கூறினார்கள்:

நான் நடந்து போய் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ஹிராவில் இருந்த போது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள் ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என்துணைவியாரான) கதீஜாவிடம், எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று சொன்னேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், போர்த்தியிருப்ப வரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்தி லிருந்து விலகியிருங்கள் எனும் (74:1-5) வசனங்களைத் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.5

(மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.

பாடம் : 5

அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் (எனும் 74:5ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் எனும் சொல்லுக்கும் அர்ரிஜ்ஸ் எனும் சொல்லுக்கும் வேதனை என்று பொருள் எனக் கூறப்படுகின்றது.

4926 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வஹீ (வேத அறிவிப்பு) நின்றுபோயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள் ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்து விட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றேன். அப்போது, போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடை களைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் எனும் (74:1-5) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் (அசுத்தம்) எனும் சொல், சிலைகளைக் குறிக்கும். (மேற்கண்ட வசனம் அருளப்பெற்ற) பின்னர் வஹீ தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.6

 பாடம் : 1

(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் (எனும் 75:16ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுதா எனும் சொல்லுக்கு, வெறுமனே என்று பொருள்.

(75:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) - யஃப்ஜுர அமாமஹு (எதிர்காலத்திலும் தீமை செய்து கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்லிக் கொண்டே பாவங்களைச் செய்ய விரும்புகிறான் என்று பொருள்.

(75:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா வஸர எனும் சொல்லுக்கு, எந்தப் புக-டமும் இருக்காது என்று பொருள்.

4927 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது, நபி (ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்து விடப்போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தமது நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்- அப்போது, (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

பாடம் : 2

அதனை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் (எனும் 75:17ஆவது இறை வசனம்).

4928 மூசா பின் அபீ ஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டி ருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் எனும் (75:17ஆவது) வசனத்திற்கு நாமே உங்களது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்று சேர்ப்போம். நீங்கள் அதனை ஓதும்படி செய்வோம் என்று பொருள்.

நாம் இதனை ஓதிவிட்டோமாயின்... எனும் (75:18ஆவது) வசனத்திற்கு, ஜிப்ரீல் மூலமாக உங்களுக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்... என்று பொருள்.

நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள். பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும் எனும் (75:19ஆவது) வசனத்திற்கு, உங்களுடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும் என்று பொருள்.

பாடம் : 3

(நபியே! நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் (எனும் 75:18ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாம் இதனை விவரிக்கும் போது அதன்படி செயல்படுங்கள் என்று இவ்வசனத்திற்குப் பொருள் எனக் கூறியுள்ளார்கள்.

4929 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வஹீயைக் கொண்டுவரும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா என்று தொடங்கும் (75ஆவது அத்தியாயத்திலுள்ள) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக் காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16,17) வசனங்களை அருளினான்.

அதாவது, உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எமது பொறுப்பாகும் என்று இறைவன் கூறினான். மேலும், நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் என்ற (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, நாம் (வானவர் மூலம்) அருளும் போது, அதனைக் கவனத்து டன் கேளுங்கள் என்று கூறினான். பின்னர், அதனை விளக்குவதும் எமது பொறுப் பாகும் எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும் என்று கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டுவரும் போது,) தலையைத் தாழ்த்தி ளஅருளப்படுவதை நபி (ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டுனக் கொண்டிருப் பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான் எனும் (75:34ஆவது) வசனம் ஓர் எச்சரிக்கையாகும்.

பாடம் : 1

4930 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தனது புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தனது புற்றுக்குள் நுழைந்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற் றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.3

4931அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு, வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தனது புற்றிலிருந்து) வெளிப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு (தனது புற்றுக்குள் புகுந்து) விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப் பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 2

அந்த நெருப்பு , மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும் எனும் (77:32ஆவது) இறைவசனம்.

4932 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள கஸ்ர் எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

நாங்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் கஸர் எனப் பெயரிட்டழைத்துவந்தோம்.4

பாடம் : 3

அது (குமுறி எழும் போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப்போல் இருக்கும் எனும் (77:33ஆவது) இறைவசனம்.

4933 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள்கூறியதாவது:

அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குளைக் கக்கும் எனும் (77:32ஆவது) இறை வசனத்திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்:

நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக் கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர்காலத்திற்காக நாங்கள் எடுத்து வைப்போம். அவற்றுக்கு அல்கஸர் எனப் பெயரிட்டு அழைத்து வந்தோம்.

(77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜுமாலத்துன் ஸுஃப்ர் எனும் சொல், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்பு களைப் போல் (பருமனாக) மாறும் அளவிற்கு திரிக்கப்படும்.

பாடம் : 4

இது, அவர்கள் (ஏதும்) பேச முடியாத நாளாகும் (எனும் 77:35ஆவது இறைவசனம்).

4934 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ளி வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அதைக் கொல்லுங்கள்! என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளரான உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது என்று என் தந்தையாரிட மிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன்.

பாடம் : 1

ஸூர் எனும் எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக (கிளம்பி) வருவீர்கள் (எனும் 78:18ஆவது இறைவசனம்).

இதன் மூலத்திலுள்ள அஃப்வாஜ் எனும் சொல்லுக்குக் கூட்டங்கள் என்று பொருள்.

4935 அபூசா-ஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். ளஅபூ ஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,ன (அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா? என்று கேட்டனர். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், (நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன் என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், நாற்பது மாதங் களா? என்று கேட்டனர். அதற்கும் நான் விலகிக் கொள்கிறேன் என அபூஹுரைரா கூறினார்கள். வருடங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன் என்று சொன்னார்கள். பின்னர், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர! அது தான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும் என்று மேலும் சொன்னார்கள்.2

பாடம் : 1

4936 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பட்டுள்ளோம் என்று கூறக் கேட்டேன்.

(79:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்தாம்மா (அமளி) எனும் சொல்லுக்கு அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது என்று பொருள்.

4937 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க (ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

பாடம் : 1

(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் (எனும் 83:6 ஆவது இறைவசனம்).

4938 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (அது) அகிலத் தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் எனும் (83:6ஆவது) இறை வசனத்தை ஓதிவிட்டு, அன்று தம் இரு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார் என்று கூறினார்கள்.2

பாடம் : 1

எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும் (எனும் 84:8ஆவது இறைவசனம்).

4939 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார் என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!

எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும் என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின் போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான் என்று கூறினார்கள்.2

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாடம் : 2

திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்வீர்கள் (எனும் 84:19ஆவது இறைவசனம்).

4940 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (84:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபக்கன் அன் தபக்கின் எனும் சொற்றொடருக்குத் திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது என்று பொருள் என்று கூறிவிட்டு, இந்த வசனம் உங்களுடைய நபி (ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது என்று சொன்னார்கள்.3

 4941 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் முத-ல் வந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும், இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும்தாம்.

 அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தரலானார்கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் ( கொண்ட குழு) உடன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகை யா ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள் என்று கூறி(மகிழலாயி) னர். நான், ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்க ளுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.2

4942 அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரை யாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்கள், ளஇறைத்தூதர் ஸா-ஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்டன ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிலுள்ள துர்பாக்கிய சா- ஒருவன் முன்வந்த போது... எனும் (91:12ஆவது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, அபூ ஸம்ஆவைப் போன்று ஸா-ஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசா-யுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான் என்று சொன்னார்கள்.2

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உட-லிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, (அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செய-ற்காக (அதே செயலைப் பிறர் செய்யும் போது) ஏன் சிரிக்கிறார்? என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.

இன்னோர் அறிவிப்பில்,(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் பின் அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ ஸம்ஆவைப் போல (செல்வாக்குமிக்கவனாக) இருந்தான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 1

ஒளிரும் பக-ன் மீது சத்தியமாக! (எனும் 92:2ஆவது இறைவசனம்).

4943 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது, நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது (குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா? என்று கேட்டார்கள். நாங்கள், ஆம் என்று சொன்னோம். சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள்,ஓதுங்கள்! என்று (என்னிடம்) கூறினார்கள்.

உடனே நான், வல்லை- இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல் உன்ஸா என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன். அபுத் தர்தா (ரலி) அவர்கள், இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர் களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியேற்றீர் களா? என்று கேட்டர்கள். நான், ஆம் என்று கூறினேன்.

(இப்படித் தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓத-லுள்ள வமா கலக்கஃத் தகர வல் உன்ஸா என்றே ஓத வேண்டும் என்று கூறுகின் றார்கள்) என்று சொன்னார்கள்.2

பாடம் : 2

ஆணையும், பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (எனும் 92:3ஆவது இறை வசனம்).

4944 இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்த) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.

பிறகு, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்? என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், நாங்கள் அனைவரும்தாம் என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ளஇப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையைன நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்? என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். வல்லை- இஃதா யஃக்ஷா எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா (ரஹ்) அவர்கள், வஃத்தகரி வல் உன்ஸா என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், நான் சாட்சியம் கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள் ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களை நான் பின்பற்றமாட்டேன் என்று கூறினார்கள்.3

பாடம் : 3

எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கி றாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:5-7) இறை வசனங்கள்.

4945 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு நாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்களுடன் பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். உடனே மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் செயலாற் றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பிறகு, எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சிவாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக் கிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். எவர் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதி லுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகின்றாரோ, அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்கிவைப்போம் எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.4

பாடம் : 4

மேலும், நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:6,7) இறை வசனங்கள்.

. . . ..அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம் என்று தொடங்கி, மேற்கண்ட (4945ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.

 பாடம் : 5

அவருக்கு, இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகைசெய்வோம் (எனும் 92:7ஆவது இறைவசனம்).

4946 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், தமது இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள்(இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,நீங்கள் செயலாற் றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பிறகு, எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக் குகிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம் எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

 பாடம் : 6

எவர் கஞ்சத்தனம் செய்து, (தம் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்து கொண்டு நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகின் றாரோ அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்குவோம் எனும் (92:8-10) வசனங்கள்.

4947 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நாங்கள் (ஜனாஸா ஒன்றிற்காக) நபி (ஸல்) அவர்களுடன் (பகீஉல் ஃகர்கத் எனும் மதீனாவின் பொது மைய வாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பிறகு, எவர் (இறை வழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்கு கிறாரோ, அவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாடம் : 7

நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகிறாரோ எனும் (92:9ஆவது) இறைவசனம்.

4948 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு நாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) பகீஉல் ஃகர்கதில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச்சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்று கோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு, உங்களில் எவரும், பிறந்து விட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது துர்பாக்கிய

சா-யா, அல்லது நற்பாக்கியசா-யா என்று எழுதப்பட்டிராமல் இல்லை என்று சொன்னார்கள். ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்து விடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பாக்கியம் பெற்றவரோ அவர் நற்பாக்கியசா-யாக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) துர்பாக்கியசா-யோ அவர் துர்பாக்கியசா-களின் செயலுக்கு மாறுவார் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும் என்று கூறினார்கள். பிறகு எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள்.

 பாடம் : 8

அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்குவோம் (எனும் 92:10ஆவது இறைவசனம்).

4949 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பகீஉல் ஃகர்கத் மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதனைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்க லானார்கள். மேலும் அவர்கள், தமது இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிட மாட்டோமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொருவருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகை செய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர் களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழி காணப்படும் என்று கூறிவிட்டு, எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங் களை மெய்யாக்குகிறாரோ எனும் (92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.5

பாடம் : 1

(நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை (எனும் 93:3ஆவது இறைவசனம்).

4950 ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது இரண்டு இரவுகள் அல்லது மூன்று இரவுகள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால் தான்) இரண்டு இரவுகளாக அல்லது மூன்று இரவுகளாக உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை என்று கூறினாள்.2 அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், முற்பக-ன் மீது சத்திய மாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.3

பாடம் : 2

(நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை எனும் (93:3ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள சொல்லை) மா வத்தஅக்க என அழுத்தத்து டனும், மா வதஅக்க என அழுத்தமின்றியும் ஓதப்படுகிறது. பொருள் ஒன்றே! உங்களைக் கைவிடவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் பொருளாவது:) உங்களை உங்கள் இறைவன் கைவிடவுமில்லை; உங்கள் மீது கோபங்கொள்ளவுமில்லை.

4951 ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத் தான் வந்துள்ளார் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.4 அப்போது தான், (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங் கொள்ளவும் இல்லை எனும் (93:3ஆவது) இறைவசனம் இறங்கிற்று.

பாடம் : 1

4952 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனி யை ஓதினார்கள்.2

(95:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தக்வீம் எனும் சொல்லுக்குப் படைப்பு என்று பொருள்.

பாடம் : 1

4953 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக்கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ஹிராக் குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட் டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒரு நாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ஓதுவீராக! என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக! என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனல்லவே! என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டிய ணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக! என்று சொன்னார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனல்லவே! என்று கூறினேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.

பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபிய வர்கள் நுழைந்தார்கள். எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்க ளுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு,) கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது?எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன் றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தை சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டிய தில்லை) என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான வராக்கா பின் நவ்ஃபல் என்பாரிடம் சென்றார்கள்.-வரக்கா அறியாமைக் காலத்தி லேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்! என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த வற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட வரக்கா, (நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு, (மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளி யேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திர மானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே! என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்த தில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன் என்று சொன்னார். அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்து விட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப் பட்டார்கள்.3

4954 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக் காலம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ஹிராவில் இருந்த போது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்தி ருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சிய டைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள் என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடை களைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) அர்ருஜ்ஸ் (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.-

இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.4

பாடம் : 2

அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான் எனும் (96:2ஆவது) இறை வசனம்.

4955 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்மு டைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.5

பாடம் : 3

(நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி எனும் (96:3ஆவது) இறைவசனம்.

4956 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்மு டைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற் றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.

பாடம் : 4

அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான் (எனும் 96:4ஆவது இறைவசனம்).

4957ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹிராக் குகையிலிருந்து), கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று சொன்னார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுவதுமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.

 பாடம் : 5

அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றிமுடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறிழைத்த- பொய்யுரைத்த அந்த நெற்றியை! எனும் (96:15,16 ஆகிய) இறைவசனங்கள்.

4958 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅபா அருகில் முஹம்மது தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூ ஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப் பார்கள் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 1

4959 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு லம் யகுனில்லஃதீன கஃபரூ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான் என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதார்கள்.2

பாடம் : 2

4960 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், உங்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான் என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு லம் யகுனில்லஃதீன கஃபரூ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது என்றார்கள்.

பாடம் : 3

4961 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தர விட்டுள்ளான் என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா? என (பெருமி தத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட் டேனா? என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.

பாடம் : 1

ஆகவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (மறுமையில்) அதனையும் கண்டுகொள்வார் எனும் (99:7ஆவது) இறைவசனம்.

(99:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அவ்ஹா லஹா (வஹீ மூலம் அதற்கு அறி வித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், அவ்ஹா இலைஹா எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச் சொற்களான) வஹா லஹா , வஹா இலைஹா ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.

4962 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்றுவகையான விளைவுகளைத் தருவ தாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடிய தாகும். இன்னொரு மனிதருக்கு பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகப் பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு அந்தப் பசும் புல்வெளியில் அல்லது அந்தத் தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிருமுறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும் போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனு டைய பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காத வர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக மாறிவிடுகின்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார் எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர என்று சொன்னார்கள்.2

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

பாடம் : 2

எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந் தாரோ அவர் அதனையும் கண்டுகொள்வார் (எனும் 99:8ஆவது இறைவசனம்).

4963 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை என்று கூறிவிட்டு, எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற் பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார் எனும் (99:7,8) இறை வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாடம் : 1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:

(108:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷானிஅக்க எனும் சொல்லுக்கு உங்களு டைய பகைவன் என்று பொருள்.

4964 தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ஜிப்ரீலே, இது என்ன? என்று கேட்டேன்.

இது அல்கவ்ஸர் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

4965 அபூ உபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்,

(நபியே!) நாம் உங்களுக்கு அல் கவ்ஸரை அருளினோம் எனும் (108:1ஆவது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், (அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப் படவுள்ளது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4966 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(108:1ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) அல்கவ்ஸர் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், அது, நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும் எனத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், மக்கள் அல்கவ்ஸர் என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்ற னரே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும் என்று கூறினார்கள்.

பாடம் : 1

4967 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து... எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின் சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை.

பாடம் : 2

4968 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதி லும் அதிகமாக சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின் றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.2

பாடம் : 3

மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும் போது (எனும் 110:2ஆவது இறைவசனம்).

4969 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.:

உமர் (ரலி) அவர்கள், (நபியே! உங்க ளுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து... எனும் (110ஆவது) அத்தியாயம் குறித்து (பத்ருப் போரில் கலந்து கொண்ட) நண்பர்களிடம் கேட்டார்கள். நண்பர்கள் பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றிகொள்வது (குறித்துத் தான் இந்த வசனம் முன்னிறிவிப்புச் செய்கிறது) என்று கூறினர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். (இது,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களது இறப்புச் செய்தி முன்னறிப்புச் செய்யப்பட்டுள்ளது என்று (விளக்கம்) கூறினேன்.3

பாடம் : 4

உங்கள் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதியுங்கள்! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பாவமன்னிப்பைப் பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான் எனும் (110:3ஆவது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) தவ்வாப் எனும் சொல்லுக்கு, அடியார்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன் என்று பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவ ருக்கும் தவ்வாப் என்று கூறப்படுவதுண்டு.

4970 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய் கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான் என்றார்கள். பின்னர் ஒரு நாள் (எங்களை) உமர் (ரலி) அவர்கள் (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து விட்டால்... எனும் (110:1ஆவது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம் என்று (அவ் வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதி யாயிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகின்றீர்களா? எனக் கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். நான், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் (முடிந்து விட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து விட்டால்... அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்து விட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.அவன் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்க மாகும்) என்று பதிலளித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகின்றேன் என்று சொன்னார்கள்.4

பாடம் : 1

4971 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது,) தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், யார் இவர்? என்று கூறியவாறு நபியவர் களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர் களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித் தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்த தில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படி யென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன் என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூ லஹப், உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்கா கத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா? என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும் எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் கத் எனும் இடைச் சொல்லை இணைத்து) வ கத் தப்ப (அவன் அழிந்தும் விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.2

பாடம் : 2

அவனும் நாசமாகிவிட்டான். அவனது செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2ஆவது இறைவசனம்).

4972 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ஸஃபா எனும்) அந்த மலை மீதேறி, யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் உங்களிடம் காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள் என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்! என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ஆம் (நம்பவே செய்வோம்) என்று பதிலளித் தனர். நபி (ஸல்) அவர்கள், அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என உங்களை எச்சரிக்கை செய்கின்றேன் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், உனக்கு அழிவுண்டா கட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்று திரட்டினாயா? என்று கேட்டான். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள் என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

பாடம் : 3

அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழைவான் எனும் (111:3ஆவது) இறைவசனம்.

4973 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்! என்று ளநபி (ஸல்) அவர்களைப் பார்த்துன அபூலஹப் கேட்டான். அப்போது அழியட்டும், அபூலஹபின் இரு கரங்கள்... எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

பாடம் : 4

அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்).

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஹம் மாலத்தல் ஹதப் எனும் சொல்லுக்குப் புறம் பேசித் திரிகின்றவள் (முஸ்லிம்களுக்கும் இணை வைப்பாளர்களுக்குமிடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள்.

(111:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மசத் எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கி-யைக் குறிக்கும்.

பாடம் : 1

4974 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முத-ல் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்க மாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்ப மாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்து விட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.) அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான் என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்ற வனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2

பாடம் : 2

அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில் லாதவன் எனும் (112:2ஆவது) இறைவசனம்.

 அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை அஸ்ஸமத் என்று அழைக்கின்றனர்.

அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே அஸ்ஸமத் எனப்படுவார்.

4975 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்க மாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்ப தாகும். அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான் என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்ற வன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (ஆகவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளு மில்லை). தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை (112:3,4)

(112:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) குஃப்வ் எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (நிகரானவன் என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

4976 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் முஅவ்வஃதத்தைனி (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114ஆவது அத்தியா யங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம் (நபியே! கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன் என்று சொன்னார்கள்.

ளஅறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன

ஆகவே, நாங்களும் (நானும் உபை பின் கஅபும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.2

4977 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் அபூ முன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இப்படி இப்படி சொல்கிறாரே? என்று கேட்டேன்.2 அதற்கு உபை (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும் நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன் என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:)

ஆகவே, நாங்கள் (நானும் உபை அவர் களும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3

02.11.2009. 04:25

65-திருக்குர்ஆன் விளக்கவுர15

பாடம் : 1

(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங் களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணை காட்டுப வனும் ஆவான் எனும் (39:53ஆவது) இறை வசனம்.

4810 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை முத-ய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது, (ரஹ்மானின் உண்மை யான அடியார்களான) அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை... எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், (நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்... எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

பாடம் : 2

அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.

4811 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

 

பாடம் : 3

மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையான வன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.

4812 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு, நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்? என்று கேட்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 பாடம் : 4

மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பின்னர் மற்றொருமுறை எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் எனும் (39:68ஆவது) இறைவசனம்.2

4813 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர் களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்டபோதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களா; அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)? என்று எனக்குத் தெரியாது.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

4814 அபூசா-ஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அந்த இரு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது என்று கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நண்பர்கள், அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா? என்று கேட்டனர். (இதற்கு பதில் சொல்வதை விட்டும்) நான் விலகிக் கொள்கிறேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர்கள், வருடங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன் என்று பதில் சொன்னார்கள். நண்பர்கள், மாதங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது) என்று கூறிவிட்டு, மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனது (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் என்று சொன்னார்கள்.

4815 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து, அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்தவிடாமல் தடுத்து,) என் இறைவன் அல்லாஹ்தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்(40:28) என்று கேட்டார்கள்.4

பாடம் : 1

(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்த போது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்க வில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல் களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணியி ருந்தீர்கள் (எனும் 41:22ஆவது இறைவசனம்).

4816 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். அவர் களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான் என்று பதிலளித்தார். மற்றொருவர் நமது பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்ப தானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான் என்று கூறினார். அப்போது தான் , (உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது.

பாடம் : 2

உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களது இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. ஆகவே, நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகி விட்டீர்கள் (என்று அவர்களின் தோல்கள் கூறும் எனும் 41:23ஆவது இறைவசனம்).

4817அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் அல்லது ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும் (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். மற்றொருவர், நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், நாம் சப்தமிட்டுப் பேசும் போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத் தான் செய்வான் என்று கூறினார். அப்போது அல்லாஹ், (உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை எனும் வசனங்களை (41:22-24) அருளினான்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

 46ன அல்அஹ்காஃப் அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(46:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஃபீளூன எனும் சொல்லுக்கு நீங்கள் கூறுவதை என்று பொருள்.

சிலர் கூறுகின்றனர்: (46:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸாரத் எனும் சொல்லுக்கும் (இன்ன பிற ஓதல்களில் வந்துள்ள) உஸ்ரத், அஸரத் ஆகிய சொற்களுக்கும் எஞ்சியுள்ள ஏதேனும் ஞானம் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(46:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பித்அம் மினர் ருசு- எனும் சொற்றொடருக்கு நான் ஒன்றும் முதன் முதலாய் வந்த இறைத்தூதர் அல்லன் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்:

(46:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அ ரஅய்த்தும் (நீங்கள் கவனித்தீர்களா?) என்பதிலுள்ள (வினாப் பொருளைத் தரும்) அ எனும் இடைச் சொல், (அல்லாஹ் அல்லாத கற்பனைக் கடவுள்களை வணங்குவது நியாயம்தான் என்று வாதிட்டு வந்த மக்கா நகர இறை மறுப்பாளர்களுக்கு) எச்சரிக்கையாகவே கூறப்பட்டுள்ளது: (மறுப்பாளர்களே!) உங்களது வாதம் உண்மை என வைத்துக் கொண்டாலும் அந்தக் கடவுள்கள் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர். (படைத்தவனே வணங்குவதற்குத் தகுதியானவன் ஆவான். படைக்கப்பட்ட பொருள்கள் அல்ல.)என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

அரஅய்த்தும் (நீங்கள் கவனித்தீர்களா) என்பதற்கு நீங்கள் கண்ணால் கண்டீர்களா? என்பது பொருளன்று. நீங்கள் வணங்கிவரும் அல்லாஹ் அல்லாதவை ஏதேனும் ஒன்றைப் படைத்தன என்பதை நீங்கள் அறிவீர்களா? (நிலைமை இவ்வாறிருக்க, அந்த இயக்கமற்ற கற்பனைக் கடவுள்களை வணங்கிவரும் நீங்கள் அநியாயக்காரர்கள் அல்லவா? உங்களது இந்தப் பகுத்தறிவற்ற நிலையை நீங்களே யோசித்துப் பார்த்ததுண்டா?) என்றே பொருள்.

பாடம் : 1

ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே!) என்று கூறுகிறான். பெற்றோர் இருவரும் (மகனுக்காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது என்று கூறகின்றார்கள். ஆனால், அவனோ இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை என்று கூறுகின்றான் (எனும் 46:17ஆவது இறைவசனம்).

4827 யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் பின் அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா (ரலி) அவர்களுடைய புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் மர்வானுக்கு (மறுப்புத் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் அவரைப் பிடியுங்கள்! என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். ஆகவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான் ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?... எனும் (46:17ஆவது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில்தான் அல்லாஹ் அருளினான் என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திரைக்கப்பால் இருந்து கொண்டு, ளஅபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினராகியன எங்கள் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருள வில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 2

ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும் என்று கூறினார்கள். அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டி ருந்தீர்களோ அது தான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு (எனக் கூறப்பட்டது) எனும் (46:24 ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்தி லுள்ள) ஆரிள் எனும் சொல்லுக்கு மேகம் என்று பொருள்.

4828 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.2

 4829 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர் களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான், அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்க லாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.

பாடம் : 1

மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவு களைத் துண்டித்து விட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத் தொடர்.)

4830 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், என்ன? என்று கேட்டான். அதற்கு உறவு, உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன் என்று கூறியது. உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு, ஆம் (திருப்தியே) என் இறைவா! என்று கூறியது. அல்லாஹ் இது (அவ்வாறுதான்) நடக்கும் என்று கூறினான்.

அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் (நயவஞ்ச கர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

4831 சயீத் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, நீங்கள் விரும்பினால், (நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் (47:22ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.

4832 மேற்சொன்ன இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆசின் எனும் சொல்லுக்கு மாறுகின்ற என்று பொருள்.

பாடம் : 1

நபியே! நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்).

4833 அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்க வில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே என்று கூறினார்கள்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள் இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.2

4834 கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) நாம் உங்களுக்கு பகிரங்க மான வெற்றியை அளித்துள்ளோம் எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபிய்யா உடன்படிக்கையையே குறிக்கிறது என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3

4835 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியா யத்தைத் தர்ஜீஉ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4

பாடம் : 2

(நபியே!) உங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்து, உங்களுக்கு நேர் வழியைக் காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்) எனும் (48:2ஆவது) இறைவசனம்.

4836 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?) என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள்.5

4837 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள்.6

 பாடம் : 3

(நபியே!) திண்ணமாக நாம் உங்களை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்).

4838 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) திண்ணமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே தவ்ராத் வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

நபியே! நிச்சயமாக நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாது காவலராகவும் நாம் அனுப்பியிருக்கின்றோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (முத்தவக்கில்) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடைய வராகவோ, முரட்டுத்தனம் கொண்டவரா கவோ, கடைவீதியில் கூச்ச-ட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்க மாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காண மாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7

பாடம் : 4

அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4ஆவது வசனத் தொடர்).

4839 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.

அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்த போது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டு கொண்டிருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது என்று கூறினர்கள்.8

 பாடம் : 5

(நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் உங்களிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்த போது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி அடைந்து கொண்டான் எனும் (48:18ஆவது) வசனத் தொடர்.

4840 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9

4841 அந்த மரத்தினடியில் நடைபெற்ற (பைஅத்துர் ரிள்வான் எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல் முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) கத்ஃப் எனும் கல்சுண்டு விளையாட்டிற்குத் தடைவிதித்தார்கள்.10

4842 உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். ளநபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.ன11

4843 அபூ கிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்(தடியில் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12

 4844 ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (காரிஜிய்யா எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

நாங்கள் ஸிஃப்பீன் எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (அப்துல்லாஹ் பின் அல்கவ்வா என்றழைக் கப்படும்) ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படு கின்றவர்களை நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடை பெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும் போது நம் வீரர்கள் சொர்கக்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணை வைப்பாளர்கள் மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? என்று ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றேன கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13

பாடம் : 1

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும் எனும் (49:2ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்திலுள்ள) நீங்கள் அறியாத நிலையில் என்பது (மூலத்திலுள்ள) லா தஷ்உரூன் எனும் சொல்லின் பொருளாகும். இதனடிப்படையில்தான் அஷ்ஷாஇர் (கவிஞர்) எனும் சொல்லுக்கு அறிஞர் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.

4845 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது என்று அறிவிப்பாளர் களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, இறை நம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

4846 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர் அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், (எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரக வாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே என்று சொல்! என்று கூறினார்கள்.3

பாடம் : 2

(நபியே! உங்கள்) அறைகளுக்கு வெளியே இருந்து உங்களை இரைந்து கூப்பிடுவோரில் பெரும்பாலோர் விவரமில்லாதவர்களே! (எனும் 49:4ஆவது இறைவசனம்.)

4847அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினர்.) அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள் என்று (யோசனை) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்! என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, எனக்கு மாறு செய்வதை அல்லது எனக்கு எதிராக மாறு செய்வதையே நீங்கள் விரும்பினீர்கள் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு எதிராகப் பேசுவது எனது நோக்கமன்று என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்ட போது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்து விட்டன. இது தொடர்பாகவே இறை நம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான் எனும் (49:1ஆவது) இறை வசனம் முழுவதும் இறங்கிற்று.4

பாடம் : 3

(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும் எனும் (49:5ஆவது) வசனத் தொடர்.5

 பாடம் : 1

இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும் எனும் (50:30ஆவது) வசனத் தொடர்.

4848 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படு வார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத் தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும்.2

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

4849 முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பி விட்டதா? என்று கேட்கப்படும். அது, இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும்.

 இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ சுஃப்யான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள்.

4850 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக் காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் என்று சொன்னது. சொர்க்கம், எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையி னருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள் என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், நீ எனது அருள். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன் என்று கூறினான். நரகத்திடம் நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும்வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும் போது நரகம் போதும்! போதும்! என்று கூறும். அப்போது தான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க் கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

பாடம் : 2

(நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் (எனும் 50:39ஆவது வசனத் தொடர்).

4851 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது:

ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3

 4852 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்... எனும் (50:40ஆவது) இறை வசனத்தின் கருத்தாகும்.

 54ன இக்தரபத்திஸ் ஸாஅத் (அல்கமர்) அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தமிர் எனும் சொல்லுக்கு நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற என்று பொருள்.

(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தஜர் எனும் சொல்லுக்கு உச்சகட்ட எச்சரிக்கை என்று பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்துஜிர் என்பதற்கு, இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது என்று பொருள்.

(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஸுர்  எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரிப் பாகங்களைக் குறிக்கும்.

(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) -மன் கான குஃபிர் எனும் சொற்றொடருக்கு அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது என்று பொருள்.

(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹ்தளர் எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வர வேண்டும் என்பதைக் குறிக்கும்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹ்திஈன (ஓடிக் கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவதைக் குறிக்கும்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபதஆத்தா எனும் சொல்லுக்குத் தமது கரத்தால் அறுத்து விட்டார் என்று பொருள்.

(54:31ஆவது வசனத்தின் மூலத்திலள்ள) அல் முஹ்தழிர் எனும் சொல்லுக்குக் கரிந்து போன மரத்துண்டைப் போல என்று பொருள்.

(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்துஜிர எனும் சொல்லுக்குக் கண்டித்து விரட்டப்பட்டார் என்று பொருள்.

(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) குஃபிர் (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவ மரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.

(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தகிர் எனும் சொல்லுக்கு நிலையான வேதனை என்று பொருள்.

(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஷிர் எனும் சொல்லுக்கு அகந்தையும் ஆணவமும் உள்ளவன் என்று பொருள்.

பாடம் : 1

4853 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நோயுற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக! என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.2

 4854 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். (படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதி யான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர் களா? எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங் களை நபி அவர்கள் ஓதிய போது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தூர் அத்தியாயத்தை ஓதினார்கள் என்று முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ஜுபைர் பின் முத் இம்)யிடமிருந்து அறிவித்தார்கள் என்பதை மட்டுமே ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை.

பாடம் : 1

4855 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சி-ர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமி ருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்ட வற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்... எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.4

பாடம் : 2

(வளைந்த) வில்-ன் இருமுனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9ஆவது இறைவசனம்).

வில்-ல் நாண் இருக்கும் இடத்தை இது குறிக்கும்.

4856 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(வளைந்த) வில்-ன் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல் லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.5

பாடம் : 3

பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:10ஆவது) இறைவசனம்.

4857 அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், (வளைந்த) வில்-ன் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையி லான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மது (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 4

உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் (எனும் 53:18ஆவது இறைவசனம்).

4858 அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் எனும் (53:18ஆவது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்துக் கொண்டு விட்டிருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.6

பாடம் : 5

(நீங்கள் வழிபட்டுவரும் சிலைகளாகிய) லாத் மற்றும் உஸ்ஸா ஆகியன பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? (எனும் 53:19ஆவது இறைவசனம்).

4859 அபுல் ஜவ்ஸா அவ்ஸ் பின் அப்தில்லாஹ் அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

லாத், உஸ்ஸா... எனும் (53:19ஆவது) வசனத்திலுள்ள லாத் என்பது, ஹாஜிகளுக்காக மாவு பிசைந்து தந்து கொண்டிருந்த ஓரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7

4860 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், வா சூது விளையாடுவோம் என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.8

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 பாடம் : 6

மேலும், மூன்றாவதான மனாத் (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும் 53:20ஆவது இறைவசனம்.)

4861 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், முஷல்லல் எனும் குன்றில் இருந்த மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போது தான் நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்... எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர் என்று சொன்னார்கள்.

(இதன்அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) குதைத் எனும் இடத்தில் முஷல்லல் எனும் குன்றிலிருந்த சிலையாகும் என்று கூறினர்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும், ஃகஸ்ஸான் குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் மனாத் சிலைக்காக, இஹ்ராம் கட்டி வந்தனர் என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயிருந்த மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டி வந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்... என்று கூறினர் எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.9

பாடம் : 7

ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62ஆவது இறைவசனம்).

4862 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம் களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.10

 இப்னு உலைய்யா (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை(அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11

4863 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஓதலுக்குரிய) சஜ்தா அருளப்பெற்ற முதல் அத்தியாயம் அந்நஜ்ம் ஆகும். அதை ஓதிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!

அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் போரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12

பாடம் : 1

சந்திரன் பிளந்து விட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக் கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்).

4864 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2

4865 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்த போது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று (இரு முறை) கூறினார்கள்.

4866 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3

 4867அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் ளநபி (ஸல்) அவர்களிடம்ன ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4

4868 அனஸ் (பின் மாலிக் (ரலி)) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களது காலத்தில்ன சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

பாடம் : 2

எவர் (அவர்களால்) அவமரியாதை செய்யப்பட்டுவந்தாரோ அவருக்குப் பிரதிபலனாக நம் கண்முன்னே அது (-மரக்கலம்-) மிதந்து சென்று கொண்டிருந்தது. அதனை நாம் (எதிர் காலத்திற்கு) ஒரு சான்றாக விட்டுவைத்தோம். (இதன் மூலம்) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:14, 15 ஆகிய இறை வசனங்கள்.)

நூஹ் (அலை) அவர்களது மரக்கலத்தை அல்லாஹ் அப்படியே விட்டுவைத்தான். அதனை இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் கண்டனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.5

4869 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஃபஹல் மின்(ம்) முத்தகிர் எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (முஸ்தகிர் என்றோ, முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6

பாடம் : 3

(மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40 ஆகிய வசனங்கள்.)

இந்த வசனத்தின் மூலத்திலுள்ள யஸ்ஸர்னா எனும் சொல்லுக்கு இந்தக் குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கியுள் ளோம் என்று பொருள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

4870அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஃபஹல் மின்(ம்) முத்தகிர் எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ஃஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (முஸ்தகிர் என்றோ, முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.

பாடம் : 4

வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப் போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்து விட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும் 54:20,21 ஆகிய வசனங்கள்).

4871 அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ஃபஹல் மின் (ம்) முத்தகிர் என்று ஓத வேண்டுமா? அல்லது முஃதக்கிர் என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார். அதற்கவர்கள், ஃபஹல் மின் முத்தகிர் என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என தால் (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 5

உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31,32 ஆகிய வசனங்கள்).

4872அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என்றே ஓதினார்கள்.

 பாடம் : 6

அதிகாலையில் ஒரு நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. அப்போது, நான் அனுப்பிய வேதனையையும் எச்சரிக்கை யையும் சுவையுங்கள் (என்று நாம் கூறினோம் எனும் 54:38,39 ஆகிய வசனங்கள்).

4873 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தி யாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர் என்றே ஓதினார்கள்.

 பாடம்...

உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51ஆவது இறைவசனம்).

4874 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!) என்றார்கள்.7

 பாடம் : 7

அதிவிரைவில் இக்குழுவினர் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர் எனும் (54:45 ஆவது) இறைவசனம்.

4875 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப் போரின் போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறை வேற்றித்தரும்படி) உன்னிடம் நான் கோருகி றேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழி படுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, இந்த (இறை நிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர் எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8

பாடம் : 8

தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அமர்ரு (மிகவும் கசப்பானது) எனும் சொல், மாராரத் (கசப்பு) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

4876 யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், நான் விளையாடும் சிறுமியாக இருந்த போது, மக்காவில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது என்று கூறினார்கள்.

4877 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, (இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடு வோர் இனி ஒரு போதும் (உலகில்) இருக்கப் போவதில்லை என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:45,46) வசனங் களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9

பாடம் : 1

அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும் எனும் (55:62ஆவது) இறைவசனம்.

4878 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியினால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்தி ரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2 அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3

இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 பாடம் : 2

கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகை களி)ல் தங்கவைக்கப்பெற்ற ஹூர் எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்திலுள்ள) ஹூர் எனும் சொல்லுக்குக் கன்னங்கரு விழியாள் என்று பொருள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மக்ஸூராத் எனும் சொல்லுக்குத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்களுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டும் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.

4879அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறை நம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒருமூலையி லுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறை நம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4

 4880 மேலும், இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட் களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங் களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை. அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.

இதை அப்துல்லாஹ் பின் கைஸ் ளஅபூ மூசா அல்அஷ்அரீ (ரலி)ன அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

பாடம் : 1

(படர்ந்து விரிந்த) நீண்ட நிழ-லும் அவர்கள் இருப்பார்கள் எனும் (56:30ஆவது) இறை வசனம்.

4881 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழ-ல் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால் (படர்ந்து விரிந்த) நீண்ட நிழ-லும் அவர்கள் இருப்பார்கள் எனும் (56:30ஆவது) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

பாடம் : 1

4882 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அத்தவ்பா எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், அல்அன்ஃபால் எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பத்ருப் போர் குறித்து அது அருளப்பெற்றது என்று பதிலளித்தார்கள். நான் அல்ஹஷ்ர் எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது என்று பதிலளித்தார்கள்.2

4883 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (59ஆவது அத்தியாயத்தின் பெயரை) அல்ஹஷ்ர் அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள் அந்நளீர் அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.3

பாடம் : 2

நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியது... எனும் (59:5ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லீனத் எனும் சொல் அஜ்வா (எனும் அடர்த்தியான பேரீச்ச மரம்) மற்றும் பர்ணீ (எனும் சிவப்பு-மஞ்சள் நிற பேரீச்ச மரம்) அல்லாத (ம-வான) பேரீச்ச மரத்தைக் குறிக்கும்.

4884 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.4

பாடம் : 3

அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களிடமி ருந்து (விடுவித்து,) தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ (என்று தொடங்கும் 59:6ஆவது இறைவசனம்).

4885 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.5

 பாடம் : 4

இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத் தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் (எனும் 59:7ஆவது வசனத் தொடர்).

4886 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்? என்று கூறினார்கள்.6 இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, உம்மு யஅகூப் எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர் களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், (குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே! என்று கேட்டார். அதற்கு அவர்கள், நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள் எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லையா? என்று கேட்டார்கள். அந்தப் பெண், ஆம் (ஓதினேன்) என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன் என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்! என்று கூறினார்கள். ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறினார்கள்.

4887அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

 பாடம் : 5

மேலும், (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர் களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் பூமியில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும் என்று தொடங்கும் 59:9ஆவது இறைவசனம்).

4888 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அபூ லுஃலுஆ ஃபைரோஸ் என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர் (ரலி) அவர்கள், (இஸ்லாத்தில்) முன்னவர் களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்) கொள்ள வேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) கலீஃபாவுக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், நபி(ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறை நம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக் கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிட மிருந்து (அவரது நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்திட வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு உபதேசம் செய்கிறேன் என்றார்கள்.7

பாடம் : 6

மேலும், தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள் எனும் (59:9ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) கஸாஸா (தேவை) எனும் சொல்லுக்கு வறுமை என்று பொருள்.

முஃப்-ஹூன் (வெற்றியாளர்கள்) எனும் சொல்லுக்கு, நிரந்தர வெற்றியாளர்கள் என்று பொருள். (இதன் வேர்ச் சொல்லான) ஃபலாஹ் என்பதற்கு, நிரந்தர வாழ்க்கை என்று பொருள். (தொழுகை அழைப்பில் இடம்பெற்றுள்ள) ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்கு நிரந்தரத்தை நோக்கி விரைந்து வாருங்கள் என்று பொருள்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், (இதே வசனத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள) ஹாஜத் (தேவை) எனும் சொல்லுக்குப் பொறாமை என்று பொருள் எனக் கூறினார்கள்.

4889 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான் என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே! என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, (இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே! என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை என்று பதிலளித்தார். அவர், (நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்து விடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம் என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் வியப்படைந்தான் அல்லது (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண் டான் என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கு கிறார்கள்... எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான்.8

பாடம் : 1

(இறை நம்பிக்கை கொண்டவர்களே!) எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள் ளாதீர்கள் (எனும் 60:1ஆவது வசனத் தொடர்).

4890 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும் நீங்கள் ரவ்ளத்து காக் எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ நமது இரகசியத் திட்டங்களை எழுதித் தெரி வித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்! என்று கூறியனுப்பினார்கள்.

உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ரவ்ளத்து காக் எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், கடிதத்தை வெளியே எடு! என்று சொன்னோம். அதற்கு அவள், என்னிடம் கடிதம் ஏதுமில்லை என்று பதிலளித்தாள். நாங்கள், ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உனது) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும் என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம்.

அதில் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது? என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் (தம் குற்றத்தை ஒப்புக் கொண்டு), அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன்.

தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும், சொத்து களையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மையே சொன்னார் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.

ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் விஷயத்தில்தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என்று தொடங்கும் (60:1ஆவது) வசனம் இறங்கிற்று என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ளஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:ன இந்த இறைவசனம் ளஅலீ (ரலி) அவர்களின்ன அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் பின் தீனார் அவர்களின் (அறிவிப்பின் போது வந்த) சொல்லா என்று எனக்குத் தெரியாது.2

..... அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் தொடர்பாகத் தான் இவ்வசனம் (60:1) இறங்கிற்றா? என்று கேட்கப்பட்டது. சுஃப்யான் (ரஹ்) அவர்கள், இப்படித் தான் மக்களின் அறிவிப்புகளில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். அதில் ஒரு வார்த்தையைக் கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் அவர்களிடமிருந்து இதனை நன்கு நினைவில் நிறுத்திக் கொண்டதாக நான் கருதவில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 2

இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் (நாடு துறந்து) ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (என்று தொடங்கும் 60:10ஆவது இறை வசனம்).

4891 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன் என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண் டேன் என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.3

 இது இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிராமணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்).

4892 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிராமணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்க மாட்டார்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழவேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்கை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தமது கையை பின்வாங்கிக் கொண்டார். மேலும், அவர் இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவளிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.

4893 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எந்த ஒரு நற்செய-லும், (நபியே!) உங்களுக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தி(ன், விளக்கவுரையி)ல், இதுவும் பெண்கள் மீது அல்லாஹ் விதித்த நிபந்தனை களில் ஒன்றாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4

4894 உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அல்லாஹ்விற்கு எதையும்

இணை கற்பிக்க மாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா? என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

சுஃப்யான் பின் உயையனா (ரஹ்) அவர்களின் அதிகமான அறிவிப்பில் அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள் என்றே காணப்படுகிறது. (பெண்கள் பற்றிய வசனம் என்று காணப்படவில்லை.) தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையவாது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படு கின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று சொன்னார்கள்.5

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாவும் வந்துள்ளது.

4895 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெரு நாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன்பிறகே உரை நிகழ்த்து வார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் (மிம்பர்- மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தமது கையால் அமரச்செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்து கொண்டு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.

அப்போது நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்க மாட்டார்கள் என்றும், திருட மாட்டார்கள் என்றும், விபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செய-லும் உமக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிட மிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்ப வனும், கருணைபுரிபவனுமாய் இருக்கின் றான் எனும் (60:12ஆவது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்து விட்டு, இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா? என்று கேட்டார்கள்.

ஒரேயொரு பெண்மணி மட்டும், ஆம் (நீடிப்போம்), அல்லாஹ்வின் தூதரே! என்றார். அவரைத்தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) ஹஸன் பின்

முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரிய வில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தர்மம் செய்யுங்கள்! என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.6

பாடம் : 1

எனக்குப் பிறகு அஹ்மத் எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈசா கூறினார்) எனும் (61:6ஆவது) வசனத் தொடர்.

4896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்ப வர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

பாடம் : 1

இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்) எனும் (62:3ஆவது) வசனத் தொடர்.

(62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஃபஸ்அவ் இலா ஃதிக்ரில்லாஹ் -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ஃபம்ளூ இலா ஃதிக்ரில்லாஹ் (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதினார்கள்.

4897அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு அல்ஜுமுஆ எனும் (62ஆவது) அத்தியாயத்தில் இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பி யுள்ளான்) எனும் (3ஆவது வசனம் அருளப் பெற்றது. அப்போது, அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறை நம்பிக்கை இருந்தாலும் சில மனிதர்கள் அல்லது இவர்களில் ஒருவர் அதனை அடைந்தே தீருவார் என்று கூறினார்கள்.2

4898 அபுல் ஃகைஸ் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

பாடம் : 2

அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு

வேடிக்கையையோ பார்த்து விட்டால், அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின் றனர் (எனும் 62:11ஆவது வசனத் தொடர்).

4899 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.3

 பாடம் : 1

(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின் றனர். திண்ணமாக, நீங்கள் தன்னுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான் எனும் (63:1ஆவது) இறை வசனம்.

4900 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறினான். அவன் கூறியதை (நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம் அல்லது உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்த போது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) நாங்கள் அதைச் சொல்லவேயில்லை என்று அவர்கள் சாதித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்து விட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ் நாளில் ஓரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண் டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறினார்கள். அப்போது, இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது என்று தொடங்கும் இந்த (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்) என்று கூறினார்கள்.

பாடம் : 2

இவர்கள் தாங்கள் செய்யும் சத்தியங்களை (தங்களைத் தற்காத்துக் கொள்ளும்) கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் (எனும் 63:2ஆவது வசனத் தொடர்).

4901 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள் என்று சொல்வதையும், மேலும், நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணிய வான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட் டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களி டம் வருகின்றபோது என்று தொடங்கி ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் என்று கூறினார்கள்.

பாடம் : 3

இவை (அனைத்துக்கும் காரணம்,) இவர்கள் (முத-ல்) நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்து விட்டது தான் . இதனால் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனும் (63:3ஆவது) இறைவசனம்.

4902 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:.

(நயவஞ்கர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவழிக்காதீர்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ...என்றும் கூறிய போது, அதனை நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் பின் உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். ஆகவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே, நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், (ஸைதே!) அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் என்று கூறினார்கள். மேலும், இவர்கள்தாம் இறைத்தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள் என்று கூறினார்கள்... எனும் (63:7ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் நபி (ஸல்) அவர்களி டமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 4

(நபியே!) நீங்கள் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடல் அமைப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர்கள். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக் கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள் தாம் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர்? (எனும் 63:4ஆவது இறைவசனம்.)

4903 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம், அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர் என்றும் சொன்னான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார் என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சென்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.

அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது... என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) குஷுபும் முசன்னதா (சாய்த்துவைக்கப் பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்ட மானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

பாடம் : 5

வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப் பட்டால், (அவர்கள்) தங்களது தலையைத் திருப்பிக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்து வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள் எனும் (63:5ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லவ்வவ் (தலையைத் திருப்பிக் கொண்டார்கள்) எனும் சொல், தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கின்றது. (இதே சொல்லை இன்னோர் ஓத-ல்) லவய்த்து எனும் வினைச்சொல்லிருந்து அழுத்தமில்லாமல் (லவவ் என்று) ஓதப்படுகிறது.

4904 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவர் என்று கூறுவதை நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரி டம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ் வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்(து விசாரித்)தார்கள். நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத் தேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தனர். ளஅவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.ன என்னை நம்ப மறுத்து விட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஓரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன்மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர் எனும் (63:1ஆவது) வசனத்தை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர் களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று கூறினார்கள்.3

பாடம் : 6

(நபியே!) நீங்கள் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோரா விட்டாலும் இவர்களைப் பொறுத்துச் சமம் தான். அல்லாஹ் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான் எனும் (63:6ஆவது) இறைவசனம்.

4905 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் அல்லது ஒரு படையில் இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்.4 அப்போது (அடி வாங்கிய) அன்சாரி அன்சாரிகளே! (உதவுங்கள்.) என்று கூறினார். அந்த முஹாஜிர் முஹாஜிர்களே! உதவுங்கள்! என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரி களில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டு கின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந் தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று (அன்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, என்னை விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள். மக்காவாசி க(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளைவிட அதிகமாகி விட்டனர்.

மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டி ருந்தோம் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

பாடம் : 7

அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிடமிருந்து) அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள் என்று சொல்கின்றவர்கள் இவர்கள்தாம். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ் வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனும் (63:7ஆவது) இறைவசனம்.

(இதன் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யன்ஃபள்ளூ எனும் சொல்லுக்குப் பிரிந்து விடுவார்கள் என்று பொருள்.

4906 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்ஹர்ராப் போரில் கொல்லப் பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப் பட்டேன்.5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.

அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா? இல்லையா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்த போது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் பின் அர்கம் பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்து விட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளிய போது) இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்து விட்டான் என்று இவர் தொடர்பாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள்.

பாடம் : 8

மேலும் அவர்கள் நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர் என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாள ருக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் (எனும் 63:8ஆவது இறைவசனம்).

4907 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் இருந்து கொண்டி ருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, அன்சாரிகளே! (உதவுங்கள்) என்று கூறினார். முஹாஜிர், முஹாஜிர்களே! (உதவுங்கள்) என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்து விட்டான். நபி (ஸல்) அவர்கள், இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், முஹாஜிர் களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். உடனே, அன்சாரி அன்சாரிகளே, (உதவுங்கள்) என்று கூற, முஹாஜிரும், முஹாஜிர்களே, (உதவுங்கள்) என்று கூறினார் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல் களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்து விட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந் தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி ) அவர்கள், என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசி விடக்கூடாது என்று சொன்னார்கள்.6

02.11.2009. 04:21

65-திருக்குர்ஆன் விளக்கவுர14

பாடம் : 1

நரகத்தை நோக்கி எவர் தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருக்கின் றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும் எனும் (25:34 ஆவது) இறைவசனம்.

4760 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமனிதர் அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச்செல்லப்படுவானா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் அவனை இருகால் களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா? என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வ-மையின் மீதாணையாக! என்று சொன்னார்கள்.

பாடம் : 2

மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்ப தில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வ தில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றேதீருவான் எனும் (25:68ஆவது) இறைவசனம்.

4761 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்) என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது? என்று கேட்டேன். அவர்கள், உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான் பிறகு எது? என்று கேட்க, அவர்கள் உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான் எனும் இந்த (25:68ஆவது) இறை வசனம் இறங்கிற்று.2

4762 காசிம் பின் அபீபஸ்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர் களிடம், இறை நம்பிக்கையாளரை வேண்டு மென்றே கொலைசெய்தவனுக்குப் பாவ மன்னிப்பு உண்டா? என்று கேட்டுவிட்டு, மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை.... எனும் (25:68ஆவது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதைக் கேட்ட சயீத் (ரஹ்) அவர்கள், இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியது போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், இது (25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற அந்நிஸா அத்தியாயத்தி லுள்ள ஒரு வசனம் (4:93) மாற்றிவிட்டது என்று பதிலளித்தார்கள்.3

4763 சயீத் பின் ஜுபைர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளரை (வேண்டு மென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக் குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆகவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி பயணம் மேற் கொண்டேன். அவர்கள், இது (4:93) இறுதியாக இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். இதை எந்த வசனமும் மாற்றவில்லை என்று பதிலளித்தார்கள்.4

4764 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான், அவனுக்குரிய தண்டனை நரகம்தான் எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் அவனுக்குப் பாவ மன்னிப்புக் கிடையாது என்று சொன்னார்கள். புகழுயர்ந்த இறைவனின் மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை எனும் (25:68ஆவது) வசனத்தைக் குறித்துக் கேட்டதற்கு, இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றிய தாகும் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.5

பாடம் : 3

மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான் எனும் (25:69ஆவது) இறைவசனம்.

4765 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்... எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றியும், மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று தொடங்கி பாவமன்னிப்புக்கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர என்று முடியும் (25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நான் தான் அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இந்த வசனங்கள் (25:63-69) இறங்கிய போது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர் களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (ஆகவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்) என்று கூறிக் கொண்டனர். ஆகவே அல்லாஹ், அவர்களில் எவர் மன்னிப்புக் கோரி, இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப் போனும், கருணையுடையோனும் ஆவான் எனும் (25:70ஆவது) வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 4

அவர்களில் எவர் மன்னிப்புக் கோரி, இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார் களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான் (எனும் 25:70ஆவது இறைவசனம்).

4766 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம் தான்... என்று தொடங்கும் (4:93ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட் டார்கள். (அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இந்த (4:93ஆவது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை என்று சொன்னார்கள். அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை என்று தொடங்கும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இது இணைவைப்போர் விஷயத்தில் அருளப்பெற்றது என்று பதிலளித்தார்கள்.6

பாடம் : 5

அதன் வேதனை உங்களைப் பிடித்தே தீரும்! (எனும் 25:77ஆவது வசனத் தொடர்.)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) -ஸாம் எனும் சொல்லுக்கு அழிவு என்று பொருள்.

4767 மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இந்த 25:77ஆவது வசனத்தில் -ஸாமன் எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, ரோமர்கள் (வெற்றி கொள்ளப்பட்டு, மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனு டைய வேதனையும் என்று சொன்னார்கள்.7

பாடம் : 1

மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார் எனும் 26:87 ஆவது இறைவசனம்.)

4768 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற் றுள்ள) அல்ஃகபரா, அல்கத்தரா ஆகிய சொற்களுக்கு (புழுதி எனும்) ஒரே பொருள் ஆகும்.

4769 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது இறைவா! மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்த மாட்டாய் என எனக்கு வாக்களித்தாயே! என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன் என்று பதிலளிப்பான்.4

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் (எனும் 26:214ஆவது இறைவசனம்).

மேலும், (26:215ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வக்ஃபிள் ஜனாஹக்க எனும் வாசகத்திற்கு, உங்களைப் பின்பற்றும் இறை நம்பிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று பொருள்.

4770 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே! என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்க, மக்கள் ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், நான் கடும் வேதனை யொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன் என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கூறினான். அப்போது தான் அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்...... என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.5

4771 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) வசனத்தை அருளிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, குறைஷிக் கூட்டத்தாரே! அல்லது இது போன்ற ஒரு வார்த்தையைக் கூறியழைத்து, உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்)கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்த-பின் புதல்வரான (என் பெரிய தந்தை) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விட மிருந்து ஒரு சிறிதும் என்னால் கப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்தி லிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது என்று சொன்னார்கள்.6

இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 1

(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் எனும் (28:56 ஆவது) வசனத் தொடர்.

4772 முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தைன அபூ தா-ப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் பெரிய தந்தையே! லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரு மில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன் என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் அபூ தா-பே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தா-ப் கடைசியாக அவர்களிடம் பேசியது, நான் (என் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தில் இருக்கிறேன் என்பதாகவே இருந்தது. லாஇலாஹா இல்லல்லாஹ் எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது தான் , இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதா-ப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ் (நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர் வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.2

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உ-ல் குவ்வத்தி (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால் கூட சுமக்க முடியாது. ல தனூஉ எனும் சொல்லுக்குச் சிரமமாக மாறும் என்று பொருள்.

(28:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபாரிஃகா எனும் சொல்லுக்கு (மூசாவுடைய தாயாரின் உள்ளம்) மூசாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது என்று பொருள்.

(28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபரிஹீன் எனும் சொல்லுக்கு ஆணவம் கொண்டோர் என்று பொருள். (இச்சொல் லுக்குப் பூரிப்படைவோர் என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(28:11ஆவது வசனத்திலுள்ள) அவரை நீ பின்தொடர்ந்து செல் எனும் பொருள் மூலத்திலுள்ள குஸ்ஸீஹி எனும் சொல்

லுக்குரியதாகும். சில நேரங்களில் சம்பவத்தை எடுத்துரைத்தல் எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) அன் ஜுனுபின் எனும் சொல்லுக்கு தூரத்திலிருந்து என்று பொருள். (இச்சொல்லும்) அன் ஜனாபத்தின் எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. அன் இஜ்தினாப் எனும் சொல்லும் அவ்வாறே!.

(28:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யப்திஷ (தாக்க) எனும் சொல் யப்துஷ என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.

(28:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஃதமிரூன எனும் சொல்லுக்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர் என்று பொருள்.

(28:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்உத்வான் எனும் சொல்லும், அல் அதாஉ எனும் சொல்லும், அத்தஅத்தீ எனும் சொல்லும் (வரம்பு மீறல் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(28:29ஆவது வசனத்திலுள்ள) கண்டார் எனும் பொருள், மூலத்திலுள்ள ஆனஸ எனும் சொல்லுக்குரியதாகும்.

(28:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்ஜஃத்வா எனும் சொல்லுக்குத் தீக் கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி என்று பொருள். (27:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஷ்ஷிஹாப் எனும் சொல்லுக்குத் தீக் கொழுந்து உள்ள எரிகொள்ளி என்று பொருள்.

(28:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜான் எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். அஃபாஈ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் அசாவித் (கரு நாகம்) ஆகியவற்றையும் (20:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்யத் (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.

(28:34ஆவது வசனத்திலுள்ள) உதவியாளர் எனும் பொருள், மூலத்திலுள்ள ரித்ஃ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் யுஸத்திக்குனீ (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (மற்ற சிலர் யுஸத்திக்னீ என்று ஓதியுள்ளார்கள்.)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(28:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸ நஷுத்து எனும் சொல்லுக்கு, உமக்கு நாம் உதவி புரிவோம் என்று பொருள். (ஸ நஷுத்து அளுதக்க என்பதற்கு உமது கரத்தை நாம் வலுப்படுத்துவோம் என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்குக் கரமாக ஆகிவிடுகிறாய்! ளஅதனால், இங்கு கரம் அல்லது கொடுங்கை (அளுத்) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.ன

(28:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மக்பூஹீன் எனும் சொல்லுக்கு நாசமடைந்த வர்கள் என்று பொருள்.

(28:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல எனும் வாக்கியத்திற்கு (நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தி னோம் என்று பொருள்.

(28:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஜ்பா எனும் சொல்லுக்குக் கொண்டுவரப்படுகிறது என்று பொருள்.

(28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பத்திரத் எனும் சொல்லுக்கு அடாவடித்தனம் புரிந்தனர் என்று பொருள்.

(28:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உம்மிஹா (அதன் தலைநகர்) என்பது மக்கா வையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும்.

(28:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துகின்னு எனும் சொல்லுக்கு (உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) அக்னன்த்து என்பதற்கு மறைத்தேன் என்று பொருள். (இதையே) கனன்த்து என்று சொன்னால் மறைத்தேன் என்றும், வெளிப்படுத்தினேன் என்றும் (எதிரிடைப்) பொருள் வரும்.

(28:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வை கஅன்ன எனும் சொல், அலம் தர (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு என்ன நேர்ந்தது என்றும், ஆச்சரியம் என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) யப்சுத்து எனும் சொல்லுக்குத் தாரளமாக வழங்குகிறான் என்றும், யக்திரு எனும் சொல்லுக்குச் சுருக்கிவிடுகின்றான் என்றும் பொருள்.

பாடம் : 2

(நபியே!) இந்தக் குர்ஆனை உங்களுக்குச் சட்டமாக்கியவன் உங்களை நீங்கள் திரும்ப வேண்டிய இடத்திற்கு மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கவிருக்கிறான் (எனும் 28:85 ஆவது வசனத் தொடர்).

4773 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (28:85ஆவது வசனத்திலுள்ள) நீங்கள் திரும்பவேண்டிய இடம் (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள்.

 

4774 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கிந்தா3 எனும் இடத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப் புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக் கொள்ளும். இறை நம்பிக்கையாள ருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றி ருக்கும் என்று சொன்னார். (இதைக் கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்து கொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சொல்லுங்கள்: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன் என்று (38:86) கூறியுள்ளான். மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் குறைஷியருக்கெ திராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்! என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்து போனார்கள். மேலும் பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்கு மிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். இந்நிலையில் அபூ சுஃப்யான் வந்து, முஹம்மதே! நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர். உம் சமுதாயத்தினரோ அழிந்து கொண்டிருக் கிறார்கள் ஆகவே, நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நபியே!) வெளிப்படை யானதொரு புகை வானத்திலுருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனையாகும் என்று தொடங்கி, மெய்யாகவே, (நீங்கள் உணர்ச்சிபெறக் கூடுமென்று) அவ்வேத னையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள் என்பது வரையிலான (44:10-15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். ளநபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும்,ன மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப் படவாபோகிறது? (இல்லை. பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்புக்கே திரும்பிவிட்டனர். இதைத் தான் அல்லாஹ், மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம் என்று (44:16ஆவது வசனத்தில்) பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும், வ -ஸாமன் (தண்டனை உங்களைப் பிடித்தே தீரும்) என்று (25:77 ஆவது வசனத்தில்) அதே பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகின்றான்.

மேலும், அ-ஃப். லாம். மீம். (நபியே!) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான். (30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்து விட்டது.4

பாடம் : 1

அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது எனும் (30:30ஆவது வசனத் தொடர்).

(இந்த 30:30ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) கல்கில்லாஹ் (அல்லாஹ்வின் படைப்பு) என்பதற்கு, அல்லாஹ்வின் நெறி என்று கருத்து. ஃபித்ரத் (இயற்கை) என்பதற்கு இஸ்லாம் என்று பொருள். (இதைப் போன்றே, ஓர் ஓத-ன்படி 26:137 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கல்குல் அவ்வலீன் என்பதற்கு முந்தையவர்களின் வழி என்று பொருள்.

4775அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர் களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூஹுரைரா

(ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது எனும் (30:30ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.5

பாடம் : 1

என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! இணைவைப்பது மாபெரும் அநியாயமாகும் (என்று லுக்மான் கூறினார் எனும் 31:13ஆவது வசனத் தொடர்).

4776 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவர் இறை நம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறை நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள், எங்களில் எவர்தாம் தம் இறை நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் (கலப்பற்ற இறை நம்பிக்கைமிக்க வராய்) இருக்கின்றார்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது அப்படியல்ல; (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் இணைவைப்பது மாபெரும் அநியாயமாகும் என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்க வில்லையா?என்று சொன்னார்கள்.2

பாடம் : 2

நிச்சயமாக மறுமை(நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது எனும் (31:34 ஆவது) வசனத் தொடர்.

4777அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, அல்லாஹ்வின் துதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன? என்று கேட்டார். அவர்கள், ஈமான் (இறை நம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் (அடி பணிதல்) என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்கா மலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவ தும், கடைமையான ஸக்காத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும் என்றார்கள். அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான் (நன்மை புரிதல்) என்றால் என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டி ருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதா கும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதா கும்.) என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:

ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 கா-ல் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவ தில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றை யெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமான வன் (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்! என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி (ஸல்) அவர்கள் இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார் என்று சொன்னார்கள்.4

4778 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும் என்று கூறிவிட்டு, பிறகு நிச்சயமாக, மறுமை(நாள் எப்போது வரும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ் விடமே உள்ளது என்று தொடங்கும் (31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.5

பாடம் : 1

அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் எனும் (32:17ஆவது) இறைவசனம்.

4779 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க் கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் என்று கூறுகின்றான்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால், அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.2

மற்றோர் அறிவிப்பிலும் இவ்வாறே காணப்படுகிறது. அதில் (கூடுதலாக:) அறிவிப் பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?) என வினவப்பட, அன்னார் (இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன? என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இன்னுமோர் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் (32:17ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள குர்ரத் (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) குர்ராத் என(ப் பன்மை யாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.

4780 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உயர்வான அல்லாஹ், என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க் கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும் எனக் கூறுகின் றான் என்று சொல்லிவிட்டு, பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஒதினார்கள்.

பாடம் : 1

திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர் களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார் (எனும் 33:6ஆவது வசனத் தொடர்).

4781 நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

எந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார் எனும் (33:6ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஒரு நம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தை வழி உறவினர்கள் -அவர்கள் எவ்வகையினராயினும் சரி -அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! எவர் (இறக்கும் போது) ஒருகடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கின்றாரோ, அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச் செல்கின்றாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

பாடம் : 2

வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத் தொடர்).

4782 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மத் (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.3

 

பாடம் : 3

அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடையவேண்டும் என்ற) தம் நோக்கத்தை அடைந்து விட்டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தம் வாக்குறுதியை ஒரு போதும் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை (எனும் 33:23ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) நஹ்பஹு எனும் சொல்லுக்குத் தம் வாக்குறுதி என்று பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.)

(33:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அக்தாரிஹா எனும் சொல்லுக்கு அதன் பல பாகங்கள் என்று பொருள். அல்ஃபித் னத்த லஆத்தவ்ஹா எனும் சொற்றொடருக்கு குழப்பத்தைத் தந்திருப்பார்கள் என்று பொருள்.

4783 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள் என்று தொடங்கும் (33:23ஆவது) வசனம், அனஸ் பின் நள்ர்

(ரலி) அவர்கள் விஷயத்தில் அருளப்பெற்ற தென்றே நாங்கள் கருதுகிறோம்.4

 

4784 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ளஉஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,ன குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்த போது அல்அஹ்ஸாப் எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்க வில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள்.5 (அந்த வசனம் இது தான் :) இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மை யாக நடந்து கொண்டார்கள். (33:23)6

பாடம் : 4

நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன் (எனும் 33:28ஆவது இறைவசனம்).

மஅமர் பின் அல் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(33:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்தபர்ருஜ் எனும் சொல், ஒரு பெண் தன் அழகை (அந்நிய ஆடவர்களுக்கு) வெளிக் காட்டுவதைக் குறிக்கும்.

(33:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுன்னத்தல்லாஹ் எனும் சொல்லுக்கு அல்லாஹ்வின் வழிமுறை (மரபு) என்று பொருள். (இதன் வினைச்சொல்லான) இஸ்தன்ன என்பதற்கு வழிமுறையாக்கினான் என்று பொருள்.

4785 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்து விடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்ட போது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7 என்னிடம்தான்

முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: (ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம் என்று சொன்னார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர் களைப் பிரிந்து விடும்படி எனக்கு உத்தரவிடப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்க ளுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள் என்று தொடங்கும் (33:28, 29) இரு வசனங்களை முழுமையாகச் சொன்னார்கள். அப்போது நான், இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்பு கிறேன் என்று நபியவர்களிடம் சொன்னேன்.8

பாடம் : 5

ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனைத் தயார் செய்து வைத்துள்ளான் எனும் (33:29ஆவது) இறைவசனம்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், ஞான (வாக்கிய)ங் களையும் நினைவில் வையுங்கள் எனும் (33:34ஆவது வசனத்திலுள்ள) இறைவசனங்கள் என்பது குர்ஆனையும், ஞானங்கள் என்பது நபி வழியையும் குறிக்கிறது.

4786 நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்து விடலாம் என) உரிமையளித் திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிடப்பட்ட போது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: (ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரி டம் அனுமதி கேட்டுக் கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம் என்று சொன்னார்கள். என் பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்து விடும்படி உத்தரவிடப்போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், நபியே! உங்கள் துணைவி யரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களது வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர் களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர் களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்துவைத்துள்ளான் எனும் (33:28, 29) வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன் என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.9

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 6

(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களது உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். மேலும், நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், அல்லாஹ்தான் நீங்கள் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன் எனும் (33:37ஆவது) வசனத் தொடர்.

4787 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களது உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்... எனும் இந்த (33:37ஆவது) வசனம் ளநபி (ஸல்) அவர்களின் அத்தை மகளானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் ளநபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனானன ஸைத் பின் ஹாரிஸா

(ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப் பெற்றது.10

பாடம் : 7

(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை எனும் (33:51ஆவது) வசனத் தொடர்.11

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) துர்ஜீ எனும் சொல்லுக்கு ஒதுக்கி வைக்கலாம் என்று பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ளதுமான) அர்ஜிஹி எனும் சொல்லுக்கு அவரை விட்டுப் பிடி என்று பொருள்.

4788 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டி ருந்தேன். மேலும் நான், ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா? என்று சொல்லிக் கொண்டேன். (நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர் களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள்மீது குற்றம் ஏதுமில்லை எனும் (33:51ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன் என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.12

4789 முஆதா பின்த் அப்தில்லாஹ் அல் அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர் களில் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை எனும் (33:51 ஆவது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மûனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக் கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான், அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! (வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக் கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந் தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன் என்று சொல்வேன் என்றார்கள்.13

இதே ஹதீஸ் வேறுவழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 8

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும் போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டி ருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவி யரிடம் நீங்கள் ஏதேனும் ஒருபொருளை (அவசியப்பட்டு)கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்கு தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவி யரை நீங்கள் மணந்து கொள்வதும் ஒரு போதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவ மாகும் எனும் (33:53ஆவது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) இனாஹு எனும் சொல்லுக்குத் தயாராதல் என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)

உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும் எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.

(இவ்வசனத்தில் சமீபமாக என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) கரீப் எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய சாஅத் எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) கரீபத் என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.

4790 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.14

4791 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்ட போது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள்.15 மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக் கொண்டே அமர்ந்து விட் டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பல முறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்க வில்லை. அதைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்து விடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து(பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ளஸைனப் (ரலி) அவர்களிடம்ன செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து( கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள் . நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்து விட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப்போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான்.

4792அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக் கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டா லும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும் போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்ப தில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள் எனும் (33:53ஆவது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டனர்.

4793 அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக, மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள். புறப்பட்டுவிடுவார்கள். பிறகு, மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள். போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது வரை நான் மக்களை அழைத்தேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை என்றேன். அவர்கள், உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்று பேர் மட்டும் வீட்டில் பேசிக் கொண்டே இருந்து விட்டனர். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், வ அலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத் துல்லாஹ் (தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!) என்று (மண வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது போன்றே (பிரதி முகமனும், மணவாழ்த்தும்) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ளபுதுமணப் பெண் ஸைனப் (ரலி) அவர்களிடம்ன திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களோ அதிக வெட்க(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். ஆகவே, (அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல்,) ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை நோக்கி நடந்தபடி (மீண்டும்) புறப்பட்டார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள் என்று நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா? அல்லது, (மற்றவர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா? என்று எனக்குத் தெரியவில்லை. (இதைக் கேட்ட உடன்) நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்கு) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒருகாலை வாசற்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்த போது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட் டார்கள். (அப்போது தான் ) பர்தா (சட்டம்) தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

4794 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது வலீமா (மணவிருந்து) கொடுத்தார்கள். மக்களுக்கு ரொட்டியும், இறைச்சியும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். பிறகு, துணைவியாருடன் தாம்பத்தியத்தைத் தொடங்கும் நாளின் காலையில் வழக்கமாகத் தாம் செய்து வந்ததைப் போல (தம் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களுடைய அன்னை யரின் அறைகளுக்கு (அன்றும்) சென்றார்கள். அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். துணைவியரும் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் (பிரதி முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். ளஸைனப் (ரலி) அவர்களிருந்தன தம் இல்லத்திற்குத் திரும்பி வந்த போது, இரண்டு பேர் பேசிக் கொண்டி ருப்பதைப் பார்த்தார்கள். அவ்விருவரைக் கண்டதும் அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றதைப் பார்த்த போது, வேகமாக (வெளியே) சென்றுவிட்டனர். அவ்விருவரும் வெளியே சென்றுவிட்டதாக நானே நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேனா, அல்லது அவர்களுக்கு (இச் செய்தி வேறு யார் மூலமும்) தெரிவிக்கப்பட்டதா? என்று எனக்குத் தெரியவில்லை. (இதையறிந்த) உடனே, நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று, (அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற) எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட் டார்கள். அப்போது தான் பர்தா தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்தே வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4795 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்து விட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத் தெரியாம-ல்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்! என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்து விடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.16

பாடம் : 9

நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்தாலும் திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (நபியின் துணைவியரான) அவர்கள் மீது தம்முடைய தந்தையர், தம்முடைய புதல்வர்கள், தம்முடைய சகோதரர்கள், தம்முடைய சகோதரர்களின் புதல்வர்கள், தம்முடைய சகோதரிகளின் புதல்வர்கள், தம்முடைய (மார்க்கத் தோழியரான) பெண்கள் மற்றும் தம் வலக்கரம் உடைமையாக்கிக் கொண்ட வர்கள்(ஆன அடிமைகள்) ஆகியோர் விஷயத்தில் (பர்தாவைக் கைவிடுவதில்) குற்றமில்லை. அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் எனும் (33:54, 55) வசனங்கள்.

4796 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாதவரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று கூறிவிட்டேன். ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அபுல் குஅய்ஸின் சகோரரான அஃப்லஹ் என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காத வரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்து விட்டேன் என்றேன். நபி (ஸல்) அவர்கள் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கரம் மண்ணாகட்டும் என்று சொன்னார்கள்.17

(இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதனால்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், பிறப்பினால் (ஏற்படும் நெருங்கிய உறவு களில்) யாரை மணப்பதற்குத் தடை விதிக்கிறீர்களோ, அவர்களை மணக்கப் பால்குடி உறவினாலும் தடைவிதியுங்கள் என்று கூறுவார்கள்.

பாடம் : 10

அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள் எனும் (33:56ஆவது) இறை வசனம்.

அபுல் ஆ-யா பின் மிஹ்ரான் அர்ரியாஹீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபியின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதன் பொருளாவது, வானவர்களிடம் அவன் நபியைப் புகழ்ந்து பேசுகின்றான் என்பதாகும். வானவர்களின் ஸலவாத் என்பது (நபிக்காக அவர்கள் இறைவனிடம்) வேண்டுவதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) யுஸல்லூன எனும் சொல்லுக்கு நபியின் சுபிட்சத்திற்காகப் பிரார்த்திக்கிறார்கள் என்று பொருள்.

(33:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல நுஃக்ரியன்னக்க எனும் சொல்லுக்கு நாம் உம்மை ஏவி விடுவோம் என்று பொருள்.

 4797 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது சலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம்.18 (தங்கள் மீது) ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின், வ அலா ஆ- முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்! என பதிலளித்தார்கள்.19

 

 

4798அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! இது (தங்கள் மீது) சலாம் கூறும் முறை. (தொழுகையில் ஓதப்படும் அத்தஹிய்யாத் மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்கள் மீது நாங்கள் ஸலவாத் சொல்வது எப்படி? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூ-க்க கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்ம தின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம என்று சொல்லுங்கள் என்றார்கள்.20

மற்றோர் அறிவிப்பில், கமா பாரக்த்த அலா ஆ- இப்ராஹீம ளஇப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்கத்தை வழஙகியதைப்போன்றுன என்று காணப்படுகிறது.

..... யஸீத் பின் ஹாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது:

கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வஆ- முஹம்மதின், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆ- இப்ராஹீம ளஎன்று சொல்லுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ன

 

 

பாடம் : 11

மூசாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் எனும் (33:69ஆவது) வசனத் தொடர்.

4799 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள் மூசாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ் விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார் எனும் (33:69ஆவது) இறைவசனம் அதைத் தான் குறிக்கின்றது.21

பாடம் : 1

(தீர்ப்பு நாளன்று) மக்களின் உள்ளங்களிலிருந்து அச்சம் அகற்றப்படும் போது (பரிந்துரை புரிபவர்களிடம்), உங்களுடைய இறைவன் என்ன (பதில்) சொன்னான்? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனும் பெரியவனாகவும் இருக்கிறான் என்று கூறுவார்கள் (எனும் 34:23ஆவது வசனத் தொடர்).

4800 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்து விட்டால், வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கி-யை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும் போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) நம் இறைவன் என்ன சொன்னான்? என்று வினவுகின்றார்கள்.

அதற்கு அவர்கள் வினவியோரிடம், (நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்- என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்து கொண்டு செவியேற்று விடுகின்றனர்.

இதைக் கூறும் போது (அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக் காட்டினார்கள்.

ஆக, முத-ல் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிட மும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிட மும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்கார னின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்.

சில நேரங்களில் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முத-ல் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்து விடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர்(குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா? என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார்.3

 இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

(இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46ஆவது வசனத் தொடர்).

4801 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்குன்றின் மீது ஏறி, யா ஸபாஹா! (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!) என்று கூறினார்கள்.4 உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், எதிரிகள், காலையிலோ அல்லது மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார்கள். ஆம் (நம்புவோம்) என்று அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்ப வனாவேன் என்று சொன்னார்கள். உடனே அபூலஹப், உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத் தான் எங்களை (இங்கே) ஒன்றுகூட்டினாயா? என்று கேட்டான். உடனே அல்லாஹ், அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்... எனும் (111:1ஆவது) வசனத்தை அருளினான்.5

பாடம் : 1

சூரியனும் (நமது வல்லமையைப் பறை சாற்றும் பிறிதொரு சான்றாகும்). அது தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும், பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும் எனும் (36:38ஆவது) இறைவசனம்.

4802 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாச-ல் இருந்தேன். அப்போது அவர்கள், சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா, அபூதர்ரே? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், அது அர்ஷுக்கு (இறைவனின் அரியாசனத்திற்கு)க் கீழே சிரவணக்கம் (சஜ்தா) செய்வதற்காகச் செல்கின்றது. இதைத் தான், சூரியன், தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண் டிருக்கின்றது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை) வனின் நிர்ணயமாகும் எனும் (36:38ஆவது) இறைவசனம் குறிக்கின்றது என்று சொன்னார்கள்.2

4803 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களிடம், சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனும் (36:38 ஆவது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது என்று கூறினார்கள்.3

 

பாடம் : 1

நிச்சயமாக யூனுஸும் (இறைத்) தூதர்களாக அனுப்பப்பட்டவர்களில் ஒருவராவார் எனும் (37:139ஆவது) இறைவசனம்.

4804 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர் என வாதிடுவது தகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

4805 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவர் என்று எவர் (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகின்றாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்.2

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 1

4806 அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ்ஷை பானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ஸாத் அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்ட போது அதற்கு அன்னார், (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்ட வர்கள். அவர்களுடைய வழியினையே நீங்களும் பின்பற்றிச் செல்லுங்கள்... என்ற (6:90ஆவது) வசனத்தை பதிலாகச் சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வது வழக்கம்.2

4807 அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ்ஷை பானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ஸாத் அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய)சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும் என்று தொடங்கி, (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களு டைய வழியினையே நீங்களும் பின்பற் றுங்கள்... என்று முடியும் (6:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்ததோ அத்தகையவர்களில் தாவூத் (அலை) அவர்களும் ஒருவராவார். எனவே ளநபி தாவூத் (அலை) அவர்களைப் பின்பற்றின அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (ஸாத் அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்தார்கள். (எனவே, நாமும் ஸாத் அத்தியாயத்தில் நன்றிக்காக சஜ்தா செய்ய வேண்டும்) என்று பதிலளித்தார்கள்.3

(38:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உஜாப் எனும் சொல்லுக்கு வியப்புக்குரியது என்று பொருள்.

(38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்கித்து எனும் சொல்லுக்கு (பொதுவாக) ஏடு என்று பொருள். ஆனால், இங்கு நற்செயல்களின் பதிவேடு என்று பொருள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(38:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஸ்ஸத் எனும் சொல்லுக்கு ஆணவம் கொண்டவர்கள் என்று பொருள்.

(38:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்மில்லத்துல் ஆகிரா (வேறு சமுதாயம்) எனும் சொல், குறைஷியர் சமுதாயத்தைக் குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) இக்திலாக் எனும் சொல்லுக்குப் பொய் என்று பொருள்.

(38:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அஸ்பாப் எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(38:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜுன்த் (படையினர்) எனும் சொல் குறைஷியரைக் குறிக்கிறது.

(38:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உலாயிகல் அஹ்ஸாப் (அந்தக் கூட்டத்தி னர்) என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்.

(38:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபவாக் (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு (உலகின்பால்) திரும்புதல் என்று பொருள்.

(38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கித்தனா எனும் சொல்லுக்கு எங்களின் வேதனையை என்று பொருள்.

(38:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இத்தகஃத்னாஹும் சிக்ரிய்யா (நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந் தோமா?) என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர் களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா?

(38:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்ராப் எனும் சொல்லுக்கு வயதொத்த வர்கள் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(38:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அய்த் எனும் சொல்லுக்கு வணக்க வழிபாட்டில் செயலாற்றல் என்றும், அல் அப்ஸார் எனும் சொல்லுக்கு அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை என்றும் பொருள்.

(38:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுப்பல் கைரி அன் ஃதிக்ரி ரப்பீ எனும் சொற்றொடரிலுள்ள அன் எனும் இடைச் சொல்லுக்கு மின் எனும் இடைச்சொல்லின் பொருளாகும். (இதன்படி,) என்னுடைய இறைவனை நினைக்காமல் இந்த நல்ல (குதிரைச்) செல்வங்களில் லயித்து விட்டேன் என்று இவ்வசனத்திற்குப் பொருள் அமையும்.

(38:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஃபிக்க மஸ்ஹன் என்பதற்கு அவற்றின் கணைக் கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுக்கலானார் என்று பொருள்.4

(38:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அஸ்ஃபாத் எனும் சொல்லுக்கு விலங்குச் சங்கி- என்று பொருள்.

பாடம் : 2

(இறைவா!) எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன் (என்று சுலைமான் கூறினார்) எனும் (38:35ஆவது) வசனத் தொடர்.

4808 நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்:

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது -என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள்- அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.

ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஆகவே, அதை நான் விரட்டி அடித்து விட்டேன் என்றும் இடம் பெற்றுள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

பாடம் : 3

(நபியே! கூறுக:) நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன் எனும் (38:86ஆவது) வசனத் தொடர்.

4809 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், மக்களே! ஒன்றை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறட்டும்! ஏனெனில் ஒருவர் தாம் அறியாததைக் குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் (எனக்குத் தெரியாது) என்று சொல்வதும் அறிவின்பாற் பட்டதாகும். வல்லவனும் மாண்புடையோனு மாகிய அல்லாஹ், (நபியே!) கூறுக: நான் இதற்காக உங்களிடம் கூலி எதையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனைசெய்வோரில் ஒருவனும் அல்லன் என்று தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கூறியுள்ளான். (38:86) இதோ (கிந்தா எனுமிடத்தில் ஒருவர் பேசிவரும்) புகையைக் குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன் (கேளுங்கள்): அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை இஸ்லாத்திற்கு (வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அவர்கள் அதில் காலம் தாழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைவா! (இவர்களைத் திருத்த உன் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் காலத்து ஏழு (பஞ்சம் நிலவிய) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்! எனப் பிரார்த்தித்தார்கள். எனவே, அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்து விட்டது. எந்த அளவிற்கென்றால், (பஞ்சத்தின் கோரப் பிடியினால்) அவர்கள் பிணத்தையும், (பிராணிகளின்) தோல்களையும் உண்டார்கள். மேலும், கடும் பசியினால் (கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் தமக்கும் வானத்திற்கு மிடையே புகையைத் தான் காண்பார்.

அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும். (44:10, 11)

உடனே குறைஷியர், எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக் கின்றோம் என்று வேண்டினர். (44:12)

(ஆனால், அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுணர்ச்சி எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) வெளிப்படையான தூதர் அவர்களிடம் வந்தே இருக்கின்றார். எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து (அவரைப் பற்றி, இவர்) எவராலோ பயிற்று விக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தாம் என்று கூறினர்.

மெய்யாகவே (நீங்கள் திருந்தக் கூடுமென்று) அவ்வேதனையை (இன்னும்) சிறிது (காலத்திற்கு) நீக்கிவைத்தோம். (எனினும்,) நிச்சயமாக நீங்கள், (பாவம் செய்யவே) மீளுகின்றீர்கள். (44:13-15)

ளநபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது.ன ஆனால், மறுமை நாள் வேதனை (அவர்களை விட்டு) அகற்றப்படவா போகிறது? ஆக, பஞ்சம் அகற்றப்பட்டது. பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பிவிட்ட னர். ஆகவே, அல்லாஹ் அவர்களை பத்ர் போரின் போது (கடுமையாகப்) பிடித்தான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். (44:16)6

02.11.2009. 04:18

65-திருக்குர்ஆன் விளக்கவுர13

பாடம் : 1

(நபியே!) துக்கத்திற்குரிய அந்த (மறுமை) நாளைக் குறித்து இவர்களை எச்சரியுங்கள் (எனும் 19:39ஆவது வசனத் தொடர்.)

4730அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அறிவிப்புச் செய்பவர், இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்பார். அவர்கள், ஆம்! இது தான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.

பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்பார். அவர்கள், ஆம் (அறிவோம்); இது தான் மரணம் என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ள னர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை என்று கூறுவார்.

இதை அறிவித்த அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றிநீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். ஆதலால் இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட் டார்கள் எனும் (19:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ள னர். ஆகவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.

பாடம்: 2

(வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும்.! (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன் எனும் (19:64ஆவது) இறைவசனம்.

4731 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன? என்று கேட்டார்கள்.2 அப்போது தான் (நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன் எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாடம் : 3

(நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா? எனும் (19:77ஆவது) இறைவசனம்.

4732 கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்பவர்3 எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன் என்று அவர் சொன்னார். நான், நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன் எனக் கூறினேன். அவர் நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா? என்று கேட்டார். நான் ஆம் என்று பதிலளித்தேன். அதற்கவர், அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்திவிடுகிறேன் என்று சொன்னார். அப்போது தான் (நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா? எனும் (19:77ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது.4

பாடம் : 4

மறைவானவற்றை அவன் அறிந்து கொண்டானா? அல்லது கருணையாள னிடத்தில் அவன் உறுதிமொழி ஏதேனும் வாங்கியுள்ளானா? எனும் (19:78ஆவது) இறைவசனம்.

4733 கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். அப்போது ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர் அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன் என்று சொன்னார். நான், உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதற்கவர் என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்கு செல்வமும் சந்ததியும் இருக்கும் என்று சொன்னார். உடனே அல்லாஹ்: நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்து கொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (19:77,78) வசனங்களை அருளினான்.

பாடம் : 5

இல்லை, அவன் சொல்வதை நாம் எழுதி வைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம் (எனும் 19:79ஆவது இறைவசனம்).

4734 கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. நான் திருப்பித் தரும் படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர் நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனக்குத் தரமாட்டேன் என்று சொன்னார். நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ மறுமையில் உயிரூட்டப்பட்டு எழுப்பப்படும் வரை நான் முஹம்மது (ஸல்) அவர்களை நிராகரிக்க மாட்டேன் என்றேன். அவர், அப்படியாயின், நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை என்னை விட்டு விடு! பின்பு மறுமையில், எனக்குச் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படும். அப்போது நான் உனது கடனைச் செலுத்துவேன் என்று சொன்னார். அப்போது தான் நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்து கொண் டானா? அல்லது கருணையாளனிடம் உறுதி மொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (19:77, 78ஆவது) வசனங்கள் இறங்கின.

பாடம் : 6

அவன் (தன் உடைமைகள் எனப் பெருமை யடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியன வாகிவிடும். அவன் தனியாகவே நம்மிடம் வருவான் எனும் (19:80ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(19:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தகிர்ருல் ஜிபாலு ஹத்தா எனும் வாக்கியத்திற்கு மலைகள் இடிந்து சரிந்து விழக்கூடும் என்று பொருள்.

4735 கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறயதாவது :

நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன் என்று சொன்னார். நான், நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒரு போதும் நிராகரிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதற்கவர் இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும் போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன் என்று சொன்னார். அப்போது தான் நம் வசனங் களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவானவற்றை அறிந்து கொண்டானா? அல்லது, கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் (செல்வம் சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான் எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.5

பாடம் : 1

(மூசாவே!) எனக்காக உங்களை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன் எனும் (20:41 ஆவது) இறைவசனம்.

4736 அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர் களிடம், நீங்கள்தாம் மக்களைத் துர்பாக்கிய வான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா? என்று கேட் டார்கள். ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், அல்லாஹ் தன் தூதர் பதவிக்காவும் தனக்காவும் தேர்ந்தெடுத்துக் கொண்டு தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி நான் செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா? என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள் ஆம் (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(20:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல் யம்மு எனும் சொல்லுக்குக் கடல் என்று பொருள்.5

பாடம் : 2

நாம் மூசாவிற்கு வஹீ (செய்தி) அனுப்பினோம்: நீர்இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு சென்று, கட-ல் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ எனச் சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை; (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டிய தில்லை. ஃபிர் அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. ஃபிர் அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை (எனும் 20:77-79 வசனங்கள்).

4737 இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் இது தான் மூசா (அலை) அவர்கள் ஃபிர் அவ்னை வெற்றி கொண்ட நாள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களைவிட மூசா (அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். ஆகவே, நீங்கள் இந்நாளில் நோன்பு வையுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.6

 

பாடம் : 3

ஆதமே! இவன் (-இப்லீஸ்-) உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். ஆதலால், இவன் உங்களிருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட (இடமளிக்க)வேண்டாம்; (அப்படி வெளி யேற்றிவிட்டால்) நீங்கள் இன்னலுக்குள்ளாகி விடுவீர்கள் என்று நாம் கூறினோம் எனும் (20:117ஆவது) இறைவசனம்.

4738 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசா-களாய் ஆக்கியவர்கள் நீங்கள்தாமே! என்று மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் மூசா! தன்தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரை யாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள்தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் எழுதிவிட்ட அல்லது விதித்து விட்ட ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத் தோற்கடித்து விட்டர்கள் என்று சொன்னார்கள்.

 இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

பாடம் : 1

4739 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங் களில் உள்ளவையாகும்.2

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(21:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜுஃதாதன் எனும் சொல்லுக்குத் துண்டு துண்டாக்கினார் என்று பொருள்.

(21:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபலக் எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதனதன் நீள்வட்டப் பாதையில் நீந்திச் செல்கின்றன) என்று சொன்னார்கள். யஸ்பஹூன் எனும் சொல்லுக்குச் சுற்றுகின்றன என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(21:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஃபஷத் எனும் சொல்லுக்கு மேய்ந்தது என்று பொருள்.

(21:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள வலா ஹும் மின்னா) யுஸ்ஹபூன் எனும் சொல்லுக்கு (எமது வேதனையிலிருந்து) அவர்கள் தடுக்கப்பட மாட்டார்கள் என்று பொருள்.

(21:92ஆவது வசனத்திலுள்ள) நீங்கள் யாவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர் களே என்பதற்கு நீங்கள் யாவரும் ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்று பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(21:98ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹஸப் எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் விறகு என்று பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:

(21:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஹஸ்ஸூ (உணர்ந்தனர்) எனும் சொல்லுக்கு அதை எதிர்பார்த்தனர் என்று பொருள். இச்சொல் அஹஸஸ்த்து (இஹ்ஸாஸன்) எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (இதற்கு ஐம்புலன்களால் உணர்ந்தேன் என்று பொருள்.)

(21:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காமிதீன் எனும் சொல்லுக்கு அணைந்து போனவர்கள் என்று பொருள். ஹஸீத் எனும் சொல்லுக்கு வேரோடு அறுவடை செய்யப்பட்டது என்று பொருள். இச் சொல்லே ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்று நிலைகளுக்கும் பொருந்தும்.

(21:19ஆவது வசனத்திலுள்ள) அவர்கள் சோர்வடைய மாட்டார்கள் எனும் பொருள், மூலத்திலுள்ள லா யஸ்தஸ்ஹிரூன் எனும் சொல்லுக்குரியதாகும். ஹஸீர் (சோர்வடைந் தவன்), ஹஸர்த்து பஈரீ (என் ஒட்டகத்தைக் களைப்படையச் செய்தேன்) ஆகிய சொற்கள் இதில் அடங்கும்.

(அடுத்த அத்தியாயத்தில் வரும் 22:27 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அமீக் எனும் சொல்லுக்குத் தொலைவு என்று பொருள்.

(21:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுகிசூ எனும் சொல்லுக்கு அவர்கள் மீண்டும் (இறைமறுப்பின் பக்கமே) திருப்பப்பட்டனர் என்று பொருள். (இச்சொல்லுக்கு வெட்கத்தால் தலை குனிந்தனர் என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(21:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஸன்அத்த லபூஸ் எனும் சொல்லுக்குக் கவசங்கள் தயாரிப்பு என்று பொருள்.

(21:93ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தகத்தஊ அம்ரஹும் எனும் வாக்கியத்திற்குத் தங்களின் (மார்க்க) விஷயங்களில் பிளவுபட்டனர் என்று பொருள்.

(21:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்ஹஸீஸ் எனும் சொல்லும் அல்ஹிஸ்ஸு, அல்ஜர்ஸ், அல்ஹம்ஸ் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவையாகும். இவற்றுக்கு மெல்-ய சப்தம் என்று பொருள்.

(21:109ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆஃதன்த்துகும் எனும் சொல்லுக்கு உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன் என்று பொருள். (இதைப் போன்றே 41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆஃதன்னாக்க எனும் சொல்லுக்கு உமக்கு நாங்கள் அறிவிக் கிறோம் என்று பொருள். ஒளிவு மறைவின்றி நீயும் எதிராளியும் சம நிலையில் இருக்கும் வகையில் போர்ப் பிரகடனம் செய்வதை இது (21:109ஆவது வசனம்) குறிக்கும்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(21:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லஅல்லக்கும் துஸ்அலூன் எனும் சொற் றொடருக்கு நீங்கள் (மற்றவர்களால்) புரிந்துக் கொள்ளப்படலாம் என்று பொருள்.

(21:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இர்தளா எனும் சொல்லுக்கு அவன் விரும்பினான் (ரளிய) என்று பொருள்.

(21:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்தமாஸீல் எனும் சொல்லுக்குச் சிலைகள் என்று பொருள்.

(21:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்ஸிஜில்லு எனும் சொல்லுக்கு ஏடு என்று பொருள்.

பாடம் : 2

முத-ல் (அவர்களை) நாம் படைத்தது போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும் (எனும் 21:104ஆவது வசனத் தொடர்).

4740 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் (செருப்பணியாத) வெறுங்காலுடையவர்களாக, உடையணியாத வர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாத வர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள் என்று கூறிவிட்டு, முத-ல் நாம் (அவர் களைப்) படைத்தது போன்றே (மறுமை நாளில்) நாம் அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதி யாகும். நாம் இதனைச் செய்தே தீருவோம் எனும் (21:104ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு, மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் (இறைத் தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம். அறிந்து கொள்ளுங்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலபேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள் என்று சொல்வேன். அதற்கு, இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல் நான் அவர்களிடையே (வாழ்ந்து கொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய் என்று பதிலளிப்பேன். அதற்கு, இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள் என்று கூறப்படும்.3

பாடம் : 1

மேலும், (மறுமை நாளில்) மக்களை போதையுற்றோராய்க் காண்பீர். (உண்மையில்) அவர்கள் போதையில் இருக்க மாட்டார்கள். ஆயினும், (அந்த அளவு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும் (எனும் 22:2ஆவது வசனத் தொடர்).

4741 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) ஆதமே! என்பான். அதற்கு அவர்கள், என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன் என்று கூறுவார்கள். அப்போது நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான் என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம் (அலை) அவர்கள், எத்தனை நரக வாசிகளை? என்று கேட்பார்கள். அதற்கு அவர், ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்) என்று பதிலளிப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரை குறையாகப்) பிரசவித்து விடுவாள்; பாலகன் கூட நரைத்து(மூப்படைந்து)விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீங்கள் காண்பீர்கள். ஆனால் அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், (அந்த அளவிற்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்.

நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்களின் முகங்கள் நிறம் மாறிவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள் என்று கூறிவிட்டு பிறகு, நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போலத் தான் அல்லது கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போலத் தான் (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று கூறினார்கள். பின்னர் (என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்க

வாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மகிழ்ச்சியூட்டும் இந்த நற்செய்தி கேட்டு) அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்கள், சொர்க்க வாசிகளில் நீங்கள் மூன்றில் ஒருபங்கினராக இருக்கவேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) அல்லாஹு அக்பர் என்று கூறினோம். பிறகு நபியவர்கள், சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) அல்லாஹு அக்பர் என்று கூறினோம்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலும் இவ்வாறே காணப்படுகிறது.

ஜரீர் பின் அப்தில் ஹமீத், ஈசா பின் யூனுஸ், அபூ முஆவியா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (இந்த 22:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள சுகாரா எனும் சொல்லுக்கு பதிலாக) சக்ரா என்று காணப்படுகிறது. (பொருள் ஒன்றே)

பாடம் : 2

மேலும், மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மன நிறைவுகொள்கின் றார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்து விட்டார்கள். இது தான் பகிரங்க மான நஷ்டமாகும் (எனும் 22:11, 12 ஆகிய இறைவசனங்கள்).

(முதல் வசனத்தின் மூலத்திலுள்ள) ஹர்ஃப் (விளிம்பு) என்பதற்குச் சந்தேகம் என்பது நோக்கப் பொருளாகும்.

(அடுத்த அத்தியாயத்தில் 23:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்ரஃப்னாஹும் என்பதற்கு ஆடம்பரமான வாழ்க்கையை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம் என்று பொருள்.

4742 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர் எனும் (22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர் களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம் என்று கூறுவார்கள். அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லை யென்றால், இது கெட்ட மார்க்கம் என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது) என்று சொன்னார்கள்.

பாடம் : 3

இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்ட இரு பிரிவினர் ஆவர் எனும் (22:19ஆவது) வசனத் தொடர்.

4743 கைஸ் பின் உபாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (ரலி) அவர்கள் இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரு பிரிவினர் ஆவர் எனும் இந்த (22:19 ஆவது) வசனம், பத்ருப் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களுடைய இரு நண்பர்கள் (அலீ, உபைதா) விஷயத்திலும், (இறைமறுப்பாளர் களான) உத்பா மற்றும் அவருடைய இரு நண்பர்கள் (ஷைபா, வலீத்) விஷயத்திலுமே அருளப்பெற்றது எனச் சத்தியமிட்டுக் கூறி வந்தார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.3

4744 அலீ பின் அபீ தா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.

அறிவிப்பாளர் கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இவர்களைக் குறித்தே, இவர்கள் தங்களுடைய இறைவ னின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரு பிரிவினர் ஆவர் எனும் (22:19ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ருப் போரின் போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம் களான) அலீ, ஹம்ஸா, உபைதா (ரலி) ஆகியோரும் (மறுப்போரான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோரும் ஆவர்.4

 

பாடம் : 1

யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாக தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தாம் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கவேண்டும் எனும் (24:6ஆவது) இறைவசனம்.

4745 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ அஜ்லான் குலத்தாரின் தûலைவ ராயிருந்த ஆஸிம் பின் அதீ (ரலி) அவர் களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) உவைமிர் என்பவர்3 வந்து தன் மனைவியுடன் வேறொரு அன்னிய ஆடவன் (தகாத உறவு கொண்ட படி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அன்னிய ஆடவனைக் கொன்று விடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழி வாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் என்று சொன்னார். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்து கொண்டு திரும்பி வந்து விட்டார்). நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆஸிம் (ரலி) அவர் களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் கேட்க, அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்ப வில்லை; மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அசிங்கமாகக் கருதுகிறார்கள் என்று பதில் சொன்னார்கள். உடனே உவைமிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அன்னிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான் என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள (-ஆன் எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.4 அவ்வாறே, தம் மனைவிமீது (குற்றம்சாட்டி) உவைமிர் (ரலி) அவர்கள் -ஆன் செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (விவாகரத்துச் செய்யாமல் என் மனைவி யாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகிவிடுவேன் எனறு கூறிவிட்டு, அவளை விவாகரத்துச் செய்து விட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப் பின் -ஆன் செய்யும் கணவன் மனைவியருக்கு முன் மாதிரியாகிவிட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கண் பாவையும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே நான் கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசிய தாகவே நான் கருதுவேன் என்று சொன்னார்கள். பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளயைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே (இன்னவளின் மகன் என்று) அழைக்கப்படலாயிற்று.

பாடம் : 2

மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்! என்று கூறவேண்டும் (எனும் 24:7ஆவது இறைவசனம்).

4746 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர் களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர் பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள -ஆன் எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் -ஆன் செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்து விட்டார். (அன்றி லிருந்து) அந்த நிகழ்ச்சியே -ஆன் செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது. அப்பெண் கருவுற்றி ருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (தனக்குரியது என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

பாடம் : 3

(தன் மீது தன்னுடைய கணவன் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) அவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டும் அகற்றி விடும் (எனும் 24:8ஆவது இறைவசனம்).

4747 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக் கொண்டு செல்லவேண்டும்? என்று கேட்டார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென் றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு ஹிலால்

(ரலி) அவர்கள், தங்களைச் சத்திய(மார்க்க)த் துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான் என்று சொன்னார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்களுக்கு யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி என்று தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.5

நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவ மன்னிப்புக்கோரி (தவறு தன்னுடயது தான் என்று ஒப்புக் கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி இது (பொய்யான சத்திய மாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!) என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கி விடுவார் என்றே எண்ணினோம். ஆனால் பிறகு அவர், காலமெல்லாம் என் சமுதாயத் தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவ தில்லை என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ஷரீக் பின் சஹ்மாவுக்கே உரியதாகும்என்று சொன்னார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள், இது பற்றிய இறைச்சட்டம் (-ஆன் விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்.

பாடம் : 4

ஐந்தாவது தடவை, அவன் (தனது குற்றச் சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் சாட்சியம் அளிக்கவேண்டும் எனும் (24:9ஆவது) இறைவசனம்.

4748 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (சாப அழைப்புப் பிரமாணம் செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (-ஆன் எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி (ஸல்) அவர்கள் குழந்தை அப் பெண்ணிற்குரியது என்று தீர்ப்பளித்து, -ஆன் செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள்.

பாடம் : 5

அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம். அதை உங்களுக்குத் தீங்காகக் கருதாதீர்கள். அது உங்களுக்கு நன்மையானதே! (அவதூறு கற்பித்த) அவர்களில் ஒவ்வொருவருக்கும், அவர் சம்பாதித்த பாவம் உண்டு. அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு எனும் (24:11ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள இஃப்க் எனும் சொல்லின் மிகைச் சொல்லான) அஃப்பாக் எனும் சொல்லுக்கு மகா பொய்யன் (பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்) என்று பொருள்.

4749 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு எனும் (24:11ஆவது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பானைக் குறிக்கிறது.

பாடம் : 6

நீங்கள் இதனைச் செவியுற்றபோதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி நல்லெண்ணம் கொண்டு, இது ஓர் அப்பட்டமான அவதூறு என்று கூறியிருக்கவேண்டாமா? அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்கவேண்டாமா? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர் (எனும் 24:12,13 ஆகிய வசனங்கள்.)

4750 இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் உர்வா பின் ஸுபைர், சயீத் பின் முஸய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறிய வர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன வற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென்று இறைவன் (தனது வேதத்தில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக் கொரு பகுதியினை அறிவித்தனர். அவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மற்றவரின் அறிவிப்பு அமைந்திருந்தது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்ததாக உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு செல்வார்கள்.

இவ்வாறே அவர்கள் தாம் மேற் கொண்ட (பனூ முஸ்த-க் என்ற) ஒரு போரின் போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட் டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப் பயணத்தின் போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன்.

நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்த போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.

அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து(விழுந்து)விட்டது. ஆகவே நான் (திரும்பிச் சென்று) எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டி ருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்து விட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டிவிட்டனர்.

அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மெ-ந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்க வில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகை யைத் தூக்கிய போது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமற்போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்ப வரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மே-ட்டுவிட நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.

அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டு கொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.

அவர் என்னை அறிந்து கொண்டு இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கி யால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவி யேற்கவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங் கால்களை (தமது காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக் கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.

இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டி ருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்று விட்டேன்.

மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.

நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு எப்படி இருக்கிறாய் என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் சென்று விடுவார்கள். அவ்வளவுதான். இது தான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்கு முன்) எனக்குத் தெரியாது.

நோயிலிருந்து குணமடைந்த பின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூ ருஹ்ம் (பின் முத்த-ப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா (பின் அப்பாத் பின் முத்த-ப்) ஆவார்.

(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தனது ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்கள்? என்று கூறினேன். அதற்கு அவர், அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்டார். என்ன சொன்னார்? என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்த போது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள். அப்போது நான் என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரி டமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்.

என் தாயாரிடம், அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கி றார்கள்? என்று கேட்டேன். என்தாயார், என் அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும் என்று கூறினார்.

உடனே நான், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசி விட்டார்கள்! என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலை வரை நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.

(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தா-ப் அவர்களையும், உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வஹீ (வேத அறிவிப்பு- தாற்கா-கமாக) நின்றுபோயிருந்தது.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார் மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியாரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை என்று அப்போது உஸாமா சொன்னார்கள்.

அலீ அவர்களோ ளநபி (ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாகன அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்க ளுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடுவந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விபரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்.

அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரி டம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும் போது தான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை) என்று கூறினார்கள்.

உடனே (பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம் என்று கூறினார்கள்.

உடனே சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவராவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் சஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் மீதணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது என்று கூறினார்.

உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் சஅத் பின் உபாதா அவர்களிடம் நீர்தாம் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்கர்களின் சார்பாக வாதிடுகின்றீர்! என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை மேடைமீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகி விட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓய வில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுது விட்டிருந்தேன். என் ஈரல் பிளந்து விடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

நான் அழுது கொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்த போது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு, அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விட மிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி, இறைவனைப் புகழ்ந்து விட்டு, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்து விடுவான். (ஒருக்கால்) நீ குற்றமே தும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான் என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.

அப்போது நான் என் தந்தையார் ளஅபூபக்ர் (ரலி) அவர்கள்ன இடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு பதில் கூறுங்கள்! என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பதில் கூறுங்கள்! என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். அதற்கு நான், நானோ வயது குறைந்த இளம் பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்து போய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன். ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள்என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் -அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும் (12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப்படுத்துக் கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வஹீயை (வேத அறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வேர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கி விட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை ஆயிஷா! மாண்பும் மகத்துவமுமிக்க அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விட்டான் என்பதாகவே இருந்தது.

உடனே என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்! என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன் என்று சொன்னேன்.

(அப்போது) அல்லாஹ், அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம் என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்ற மற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளிய போது (என் தந்தை) அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட் டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடை யோனுமாய் இருக்கின்றான் எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னார்கள்.

(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம்முடைய இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்? அல்லது பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு ளஅழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்ன போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ள லானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.6

பாடம் : 7

உங்கள் மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக, உங்களுக்குப் பெரும் வேதனை நேர்ந்திருக் கும் எனும் (24:14ஆவது) இறைவசனம்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தலக்கவ்னஹு (அதை எடுத்துக் கொண்டி ருந்தீர்கள்) என்பதற்கு உங்களில் சிலர் சிலருக்கு அறிவித்துக் கொண்டிருந்தீர்கள் என்று பொருள்.

(25:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள அஃபள்த்தும் எனும் சொல்லின் எதிர்கால வினைச்சொல்லும் 10:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) துஃபீளூன் என்பதன் பொருள் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்பதாகும்.

4751ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம் மீது அவதூறு கூறப்பட்ட போது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சை யடைந்து கீழே விழுந்து விட்டார்.7

பாடம் : 8

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவற்றைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக் கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதி விட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப் பெரிய விஷயமாய் இருந்தது (எனும் 24:15ஆவது இறைவசனம்).

4752 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இஃத் தலக்கவ்னஹு (உங்கள் நாவுகளால் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தைன ஆயிஷா (ரலி) அவர்கள் இஃத் த-கூனஹு (நீங்கள் பொய் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை நான் செவியேற்றேன்.8

பாடம் : 9

நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று; சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் தூய்மையானவன்!பெரும் அவதூறாயிற்றே இது! என்று நீங்கள் கூறியிருக்கவேண்டாமா? (எனும் 24:16 ஆவது இறைவசனம்.)

4753 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள் ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை அவர் புகழ்ந்து பேசி விடுவாரோ என அஞ்சுகிறேன் என்றார்கள். அப்போது (வந்திருப்பவர்) நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் புதல்வரும் முஸ்லிம்களில் முக்கியமானவரும் ஆவார் என்று சொல்லப்பட்டது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள் என்று சொன்னார்கள். (அன்னார் உள்ளே வந்ததும்,) உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன் என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாவீர்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணம் புரியவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று என்று (புகழ்ந்து) சொன்னார்கள். (அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன் என்று சொன்னார்கள்.

4754 காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

காசிம் (ரஹ்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவித்துள்ளார்கள். அவர்கள் தம் அறிவிப்பில், மறக்கப்பட்டு விட்டவளாக என்பதைக் கூறவில்லை.

பாடம் : 10

நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒரு போதும் இதுபோன்ற தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான் எனும் (24:17ஆவது) இறைவசனம்.

4755 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்த போது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் (அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறீர்கள்? என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா? என்று கூறினார்கள். ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (கடைசி காலத்தில்) கண்பார்வை இழந்து விட்டதையே ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற் கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ளஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து கவிதைன பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், ஆனால், நீங்கள் (அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தாம் நீங்கள்) என்று கூறினார்கள்.9

பாடம் : 11

(இவ்வாறு) அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் நுண்ணறிவாள னும் ஆவான் (எனும் 24:18ஆவது இறை வசனம்).

4756 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போது) வந்து, நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப் பாற்பட்டவர்; (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர் என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் (ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே! என்று சொன்னார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகின்றீர்களா? அல்லாஹ்வோ இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர்களுக்குப் பெரும் வேதனை உண்டு என்று (24:11ஆவது வசனத்தில்) கூறுகின்றானே! என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறேது? என்று கேட்டு விட்டு, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பாக (அவர்கள் மீது வசைக் கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார் என்று சொன்னார்கள்.10

பாடம் : 12

இறை நம்பிக்கை கொண்டோரிடையே மானக் கேடான செயல் பரவிட வேண்டுமென யார் விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிகின்றான்; நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் உங்கள் மீது இல்லாதி ருந்து, அல்லாஹ் மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாய் இல்லாமலுமிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் (எனும் 24:19, 20 ஆகிய இறைவசனங்கள்).

(24:19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) தஷீஅ எனும் சொல்லுக்கு வெளிப்படுவது என்று பொருள்.

உங்களில் செல்வமும் தயாளகுணமும் உள்ளவர்கள் (தங்களுடைய) உறவினர்க ளுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு வருத்தம் ஏதேனும் ஏற்பட்டி ருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப் போனும் கருணையுடையோனும் ஆவான் (எனும் 24:22ஆவது இறைவசனம்).

4757 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தொடர்பாக அவதூறு பேசப்பட்ட போது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைத் தக்கபடி போற்றிவிட்டு, என் மனைவியின் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார் என்று சொன்னார்கள். உடனே, சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து, அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். கஸ்ரஜ் குலத்தாரி டையேயிருந்து ஒரு மனிதர் எழுந்து, பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர் என்று சொன்னார். -ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களு டைய தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.- (அவர்களி டையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றி விட்டதென்றால்) அவ்ஸ் குலத்தாருக்கும் கஸ்ரஜ் குலத்தாருக்குமிடையே பள்ளிவாச-லேயே குழப்பமும், கைகலப்பும் மூண்டுவிடப் பார்த்தது. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.

அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரது கால் (அவரது கம்பளி அங்கியால்) இடறியது. அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று சொன்னார். நான், என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்? என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று சொன்னார். நான், உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்? என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று சொன்னார். நான் அவரை அதட்டினேன். அவர் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத் தான் திட்டுகிறேன் என்று சொன்னார். நான், எனது எந்த விஷயத்திற்காக? என்று கேட்டேன். அப்போது தான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், இப்படியா நடந்தது? என்று கேட்டேன். அவர் ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித் தான் நடந்தது) என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பது கூட எனக்கு நினைவில்லாதது போலாகி விட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில் விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத் தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவிற்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன் மீது (பெரிதாக்கிக் கொள் ளாமல்) இலேசாக்கிக் கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பல பேர் இருக்க, அவர்கள் அவள் மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறை கூறுவதும் இயல்பு தான் என்று சென்னார்கள். எனக்கு ஏற்பட்ட அளவிற்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா? என்று கேட்டேன். தாயார் ஆம் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு...? என்று கேட்டேன். ஆம் அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் ஓதிக் கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் இவள் விஷயம் என்ன? என்று கேட்டார்கள். என் தாயார், அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது என்று சொன்னார். உடனே அபூ பக்ர் (ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், என் அன்பு மகளே! நீ உன் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்து விட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப் பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து அவர்கள் பிசைந்து வைத்த மாவை அல்லது அவர்கள் குழைத்து வைத்த மாவைத் தின்று விட்டுச் செல்லும் அளவிற்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடமிருந்து) அறியவில்லை என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர் களில் ஒருவர் அவளை அதட்டி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்! என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் அல்லாஹ்வின் மீதாணையாக, பொற் கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமறுவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன் என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அன்னியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே! என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைந்தார்.11 என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுது விட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்த போது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப்பக்கமும், (மற்றவர்) என் இடப்பக்கமும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, போற்றி விட்டு, ஆயிஷா! நீ தீய செயல் ஏதும் புரிந்தி ருந்தால் அல்லது அநீதியிழைத்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார் களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து வாச-ல் அமர்ந்திருந்தாள். நான், ளநபி (ஸல்) அவர்களிடம்,ன இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா? என்று கேட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, இவர்களுக்கு பதில் சொல்லுங்கள் என்றேன். அவர்கள் நான் என்ன பதில் சொல்வது? என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்! என்றேன். அவர்கள், நான் என்ன சொல்வேன்? என்று கேட்டார்கள். அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழிகூறி , அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது தகுதிக்கேற்ப அவனைப் போற்றி விட்டு, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வ-வும் உயர்வும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான்.- அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும் விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் -நான் அப்படிச் செய்ய வில்லை என்பதை அல்லாஹ் அறிவான்- தனக்குத் தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டாள் என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக நான் காண்கிறேன் -அப்போது (யூசுஃப் அவர்களுடைய தந்தை) யஅகூப் (அலை) அவர்களின் பெயரை நினைவு படுத்திப் பார்த்தேன். ஆனால் நினைவுக்கு வரவில்லை- (இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ் விடமே நான் பாதுகாப்புக்கோருகிறேன் என யஅகூப் (அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.12

அந்த நேரத்தில் அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள் மீது, (குர்ஆன் வசனங்கள்) அருளப்பெற்றன. ஆகவே நாங்கள் மௌனமாக இருந்தோம். வஹீ (வேத அறிவிப்பு அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்ட போது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான் என்று சொன்னார்கள். நான் அன்று கடுங் கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்! என்று கூறினர். அதற்கு, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என் மீதான) அவதூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை என்று சொன்னேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுத-ன் காரணத்தினால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்குபெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே சொன்னார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறு பேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்துபோனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் பின் ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பிய வர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும் கூட.

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு போதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்க ளுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழை களைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப் பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான் எனும் (24:22ஆவது) இறைவசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்) உலுல் ஃபள்ல் (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாக்கீன் (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள்,

ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போலவே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.

பாடம் : 13

(நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31 ஆவது வசனத் தொடர்.)

4758 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! எனும் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள்.13

4759 ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும் எனும் (24:31ஆவது) வசனம் இறங்கிய போது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

02.11.2009. 04:16

65-திருக்குர்ஆன் விளக்கவுர12

பாடம் : 1

ஒவ்வொரு கர்ப்பிணியும் (தன் கருப்பையில்) சுமந்து கொண்டிருப்பவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக் கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான் எனும் (13:8ஆவது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) தஃகீளு எனும் சொல்லுக்குக் குறைகின்ற என்று பொருள்.

4697 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ் வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். மழை எப்போதுவரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

 பாடம் : 1

நல்ல வார்த்தை(க-மா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும்.அதன் வேர் பூமியில் ஆழப் பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது எனும் (14:24, 25) இறைவசனங்கள்.

4698 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், ஒரு முஸ்-மான மனிதரை ஒத்திருக்கும் அல்லது (அவரைப்) போன்றிருக்கும் ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி... இப்படி... இப்படி யெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்) என்று சொன்னார்கள். அப்போது என் மனத்தில் இது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது. அபூபக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் பேசவிரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாமே) அது பேரீச்ச மரம் என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்த போது நான் உமர் (ரலி) அவர்களிடம், என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது என்றேன். அதற்கு அவர்கள், (அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்? என்று கேட்டார்கள். நான், நீங்கள் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள், நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன(செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமான தாய் இருந்திருக்கும் என்று சொன்னார்கள்.2

பாடம் : 2

நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்து கின்றான் (எனும் 14:27ஆவது வசனத் தொடர்.)

4699 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர் வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இது தான் (இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகின்றான் எனும் (14:27ஆவது) இறை வசனத்தின் கருத்தாகும்.

இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

 பாடம் : 3

அல்லாஹ்வின் அருட்கொடையை (அடைந்த பின் அதனை) நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தங்கள் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை நீர் பார்க்க வில்லையா? (எனும் 14:28ஆவது இறை வசனம்.)

(இவ்வசனத்திலுள்ள) நீர் பார்க்க வில்லையா? (அலம் தர) எனும் சொற்றொட ருக்கு நீர் அறியவில்லையா? என்று பொருள். அலம் தர கைஃப (14:24; 89:6; 105:1) மற்றும் அலம் தர இலல்லஃதீன கரஜூ (2:243) ஆகிய வசனங்களிலும் இதே பொருள்தான்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) அல்பவார் எனும் சொல்லுக்கு அழிவு என்று பொருள். (25:18; 48:12 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) கவ்மன் பூரா என்பதன் பொருள் அழிந்து விடும் சமுதாயம் என்பதாகும்.

4700 அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்கால் மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளி விட்டவர்களை (நபியே!) நீங்கள் பார்க்க வில்லையா? எனும் (14:28ஆவது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்த இறைமறுப்பாளர் களைக் குறிக்கிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4

பாடம் : 1

விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் வான்வெளியை நாம் காத்தோம். (ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது;) எதையேனும் ஒட்டுக் கேட்பவர் தவிர! (அப்படி அவர் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச் சுவாலை அவரைப் பின்சென்று விரட்டும் (எனும் 15:17, 18 ஆகிய வசனங்கள்).

4701 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்து விட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர் களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கி-யை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ளசுஃப்யான் (ரஹ்) அல்லாதன மற்றவர்களின் அறிவிப்பில், (அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான் என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

(இறைக்கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டு பீதி அகற்றப்படும் போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், நம் இறைவன் என்ன சொன்னான்? என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், (நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன் என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக்கேட்கின்றனர்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தமது வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.

அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ள வரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்து விடுகிறார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகின்றான். (இதைக் கேட்கும்) மக்கள், இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காண வில்லையா? என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவ-னாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல் மதீனி (ரஹ்) கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனாரிடம் கேட்ட போது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூஹுரைரா (ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா? என வினவினேன். அதற்கு சுஃப்யான் ஆம் என்று பதிலளித்தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம் இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ஃபுஸ்ஸிஅ (பீதி அகற்றப்படும் போது) எனும் சொல்லை நபி (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (ஃபுஸ்ஸிஅ என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்ட தாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?) என்று வினவினேன். அதற்கு அன்னார் அம்ர் பின் தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிட மிருந்து) இவ்வாறுதான் செவிமடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே எங்களது ஓதல் முறையாகும் என்று பதிலளித்தார்கள்.2

பாடம் : 2

ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள் எனும் (15:80ஆவது) இறைவசனம்.

4702 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து, இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும் போது அழுது கொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப்போவதில்லை யென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டிவிடாமலிருக்க அவர் (களின் வசிப்பிடங்)களைக் கடந்து செல்லா தீர்கள் என்று சொன்னார்கள்.3

பாடம் : 3

திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம் எனும் (15:87ஆவது) இறைவசனம்.

4703 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், (நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு, நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அப்போது அவர்கள், இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, நீ பள்ளிவாச-லிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாய மொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா? என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-லிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம் தான்.)அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும் என்று சொன்னார்கள்.4

4704 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 4

அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள் எனும் (15:91ஆவது) இறைவசனம்.

(15:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முக்தஸிமீன் எனும் சொல்லுக்குச் சத்தியம் செய்தவர்கள் என்று பொருள்.5 இதே இனத்தில் உள்ளது தான் (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா உக்ஸிமு எனும் சொல்லும். இதற்குச் சத்தியம் செய்கிறேன் என்று பொருள். இதனை ல உக்ஸிமு (உறுதி யாக சத்தியம் செய்கிறேன்) எனவும் ஓதலாம்.

(7:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காஸமஹுமா எனும் சொல்லுக்கு, (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரிடமும் ஷைத்தான் சத்தியம் செய்தான். ஆனால், அவ்விருவரும் அவனிடம் சத்தியம் செய்யவில்லை என்று பொருள்.6

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(27:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தகாஸமூ எனும் சொல்லுக்கு ஒருவருக் கொருவர் சத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று பொருள்.

4705 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள் எனும் (15:91ஆவது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாகப் பிரித்துக் கொண்டு, அதில் (தமக்கு இசைவான) சிலவற்றை நம்பி ஏற்றுக் கொண்டார்கள். (இசைவில்லாத) சிலவற்றை ஏற்க மறுத்து விட்டார்கள்.

இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4706 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர் மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே எனும் (15:90ஆவது) வசனம் (வேதக்காரர் களான)யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தம் வேதத்தில்) சில வற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள்.

இதை அபூ ழப்யான் ஹுஸைன் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

உறுதி உங்களிடம் வரும் வரை (நபியே!) நீங்கள் உங்கள் இறைவனை வணங்கி வாருங்கள் எனும் (15:99ஆவது) இறைவசனம்.

இவ்வசனத்திலுள்ள உறுதி (யகீன்) எனும் சொல் இறப்பைக் குறிக்கின்றது என்று சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(23:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சாபிகூன் (ஒருவரையொருவர் முந்திக் கொள்பவர்கள்) என்பதற்கு (அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு நற்கதி முந்திவிட்டிருக்கிறது. (எனவே, அவர்கள் நன்மையான காரியங்களில் போட்டியிட்டு ஒருவரையொருவர் முந்துகின்றனர்) என்று பொருள்.

(23:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஜிலத் குலூபுஹும் எனும் சொற்றொடருக்கு அஞ்சுபவர்கள் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(23:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்ஹாத்த, ஹய்ஹாத்த எனும் சொற்றொடருக்கு வெகுதூரம், வெகுதூரம் (அசாத்தியம்) என்று பொருள்.

(23:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஆத்தீன் (கணக்கு வைத்திருப்பவர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கின்றது.

(23:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல நாக்கிபூன் எனும் சொல்லுக்குப் புறக்கணித்த வர்கள் என்று பொருள்.

(23:104ஆவது வசனத்திலுள்ள) முகம் விகாரமானவர்கள் எனும் பொருள் மூலத்திலுள்ள கா-ஹுன் எனும் சொல்லுக்குரியதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(23:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுலாலத் (சத்து) என்பதில் (மனிதனிலிருந்து பிரியும்) விந்தும், (அதிலிருந்து உருவாகும்) குழந்தையும் அடங்கும்.2

(23:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜின்னத் எனும் சொல்லும், அல் ஜுனூன் எனும் சொல்லும் (பைத்தியம் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(23:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகுஸாஃ எனும் சொல்லுக்கு வெள்ளத்தின் மேலே செல்லும் நுரை மற்றும் பயனற்ற குப்பை கூளங்கள் என்று பொருள்.

(23:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஜ்அரூன் எனும் சொல்லுக்கு மாடு போலக் கத்துவார்கள் என்று பொருள்.

(23:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலா அஉகாபிக்கும் எனும் சொல்லுக்குப் புறங்காட்டி (வந்த வழியே) சென்றான் என்று பொருள்.

(23:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சாமிர் (நிலவொளியில் இராக்கதை பேசுபவர்) எனும் சொல் சமர் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். பன்மை: சும்மார். சாமிர் எனும் இச்சொல் இந்த வசனத்தில் பன்மையின் இடத்தில் ஆளப்பட்டுள்ளது.

(23:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஸ்ஹரூன் எனும் சொல்லுக்கு அறிவை இழந்து விட்டிருக்கின்றீர்கள் என்று பொருள். இச்சொல் சிஹ்ர் (சூனியம்) எனும் மூலச் சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

24ன அந்நூர் அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(24:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மின் கிலா-ஹி (அதற்கிடையிலிருந்து) என்பதற்கு அடுக்கடுக்கான மேகங்களுக்கிடையேயிருந்து என்று கருத்து.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) சனா பர்கிஹி எனும் சொல்லுக்கு (மின்) ஒளி என்று பொருள்.

(24:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஃத்இனீன் எனும் சொல்லுக்குப் பணிந்தவர்களாக என்று பொருள்.

(24:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஷ்த்தாத் எனும் சொல்லும் ஷத்தா, ஷதாத்,

ஷத்து எனும் சொற்களும் (தனித் தனியானவை எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சூரத்துன் அன்ஸல்னாஹா எனும் சொற்றொடருக்கு நாமே இதனை (இறக்கி)த் தெளிவுபடுத்தினோம் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்:

பல அத்தியாயங்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதனால்தான் குர்ஆனுக்கு குர்ஆன் (ஒன்று சேர்க்கப்பட்டது) என்று பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயத்திற்கு சூரா (பிரிக்கப்பட்டது) என்று பெயரிடப்படக் காரணம், ஓர் அத்தியாயத்திலிருந்து மற்றோர் அத்தியாயம் தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதேயாகும். (தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட அத்தியாயங்களில்) ஒன்றை ஒன்றோடு சேர்த்த போது குர்ஆனுக்கு அல்குர்ஆன் (ஒன்று சேர்க்கப்பட்டது) என்று பெயர் வழங்கப்பட்டது.

சஅத் பின் இயாள் அஸ்ஸுமாலீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:2

(24:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மிஷ்காத் எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் மாடம் என்று பொருள்.

(75:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ குர்ஆனஹு எனும் சொல்லுக்கு அதில் ஒன்றை மற்றொன்றுடன் சேர்ப்பது என்று பொருள். (75:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபஇதா கரஃனாஹு எனும் சொற்றொடருக்கு, அதனை நாம் ஒருங்கிணைத்து ஒன்று சேர்த்தால் என்று பொருள். ஃபத்தபிஉ குர்ஆனஹு எனும் வாக்கியத்திற்கு அதில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதன்படி செயலாற்று; (அதாவது) அல்லாஹ் உனக்கிட்டுள்ள கட்டளைப்படி செயலாற்று; அவன் தடை விதித்துள்ளனவற்றைவிட்டும் விலகியிரு! என்று பொருள்.

அவனது கவிதையில் குர்ஆன் இல்லை என்றால், ஒருங்கிணைப்பு இல்லை என்று பொருள். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பாகுபடுத்திக்காட்டுவதனால்தான் (குர்ஆனுக்கு) ஃபுர்கான் (பாகுபடுத்தக்கூடியது) என்று பெயர் வந்தது.

ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்க்கவில்லை என்பதைக் குறிக்க மா கரஅத் எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

(24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஃபரள்னாஹா என்னும் சொல் மற்றோர் ஓத-ல் ஃபர்ரள்னாஹா என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ஃபர்ரள்னாஹா எனும் சொல்லுக்கு இதில் நாம் பல்வேறு விதமான விதிகளை அருளியுள்ளோம் என்று பொருள். (அதே சொல்லை) ஃபரள்னாஹா என்று ஓதியவர்கள், உங்களுக்கும் விதியாக்கினோம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் விதியாக்கினோம் என்று (பொருள்) கூறுகின்றார்கள்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(24:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அவித் திஃப்-ல்லஃதீன லம் யழ்ஹரூ அலா அவ்ராத்தின்னிஸா எனும் சொற்றொடர், வயது சிறியதாயிருப்பதனால் பெண்களின் மறைவான உறுப்புகள் குறித்து அறிந்திராத சிறுவர்களைக் குறிக்கிறது.

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகைரி உ-ல் இர்பத் எனும் சொல், பெண் தேவையற்ற (வயோதிகர்கள், பாலுணர்வற்றவர்கள் போன்ற) ஆண்களைக் குறிக்கிறது.

முஜாஹித் (ரஹ்) அவர்கள், தம் வயிற்றைக் குறித்த எண்ணத்தைத் தவிர (உணவைத் தவிர) வேறு எண்ணம் வராத (இவனால் பெண்களுக்குப் பா-யல் தொல்லை ஏதும் நேருமோ என்று) பெண்கள் விஷயத்தில் அஞ்சப்படாத ஆணைக் குறிக்கும் எனக் கூறுகின்றார்கள்.

தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பெண் வேட்கையற்ற வெகுளியே ஃகைரு உ-ல் இர்பத் ஆவான்.

அர்ரஜ்ல் எனும் சொல்லுக்குக் காலாட் படை என்று பொருள். இதன் ஒருமை அர்ராஜில் என்பதாகும். இது ஸாஹிப் (நண்பன்), ஸஹ்ப் (நண்பர்கள்) என்பனவற்றையும், தாஜிர் (வியாபாரி), தஜ்ர் (வியாபாரிகள்) என்பனவற்றையும் போன்றதாகும்.

(17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாஸிப் எனும் சொல்லுக்குக் கடுமையாக வீசும் புயல் காற்று என்று பொருள். காற்று வாரியிறைக்கும் பொடிக் கற்களுக்கும் ஹாஸிப் என்பர். இதிலிருந்து வந்தது தான் ஹஸபு ஜஹன்னம் (நரகத்தின் எரிபொருள்) என்ற சொல்லும். நரகத்தில் வீசப்படும் பொருள்களையே இது குறிக்கிறது. பூமிக்குள் செல்வது ஹஸப எனப்படும். ஹஸப் எனும் சொல், ஹஸ்பாஉ (பொடிக் கற்கள்) எனும் சொல்லிலிருந்து மருவியதாகும்.

(17:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாரத் எனும் சொல்லுக்கு மீண்டும் ஒரு முறை என்று பொருள். தியரத், தாராத் ஆகியன இதன் பன்மைகளாகும்.

(17:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல அஹ்த்தனிக்கன்ன எனும் சொல்லுக்கு அவர்களை நான் (வழிகெடுத்து) வேரறுத்து விடுவேன் என்பது பொருளாகும். இஹ்தனக்க என்பதற்கு, ஒருவர் மற்றவரிடமிருந்து எல்லா அறிவையும் தமதாக்கிக் கொண்டார் என்று (மொழி வழக்கில்) பொருள்கொள்ளப்படும்.

(17:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாயிரஹு எனும் சொல்லுக்கு அவனுக்குரிய பங்கு என்று பொருள். (இச்சொல்லுக்கு செயல்கள் பற்றிய குறிப்பு, செயல், சகுனம் ஆகிய பொருள்களும் உண்டு.)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

குர்ஆனில் எங்கெல்லாம் சுல்த்தான் எனும் சொல் ஆளப்பட்டுள்ளதோ அங்கெல் லாம் ஆதாரம் (அல்லது அதிகாரம்) என்றே பொருள்கொள்ளப்படும்.3

(17:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ-ய்யும் மினஃத்துல்- என்பதன் கருத்தாவது: (இடர் ஏற்பட்டு, அதிலிருந்து தன்னைக் காக்க) அவன் யாரையும் நண்பராக்கிக் கொள்வதில்லை. (காரணம், இறைவனுக்கு இடர் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.)

பாடம் : 3

அல்லாஹ் தூயவன். அவன் தன்னுடைய அடியாரை (க் கஅபாவாகிய) புனிதப் பள்ளி வாச-லிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் மக்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் எனும் (17:1ஆவது) வசனத் தொடர்.

4709 அபூஹுரைரா (ரலி) அவர்கள், கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈ-யா (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக் கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும் என்று சொன்னார்கள்.4

4710 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்க லானேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், இரவில் நான் பைத்துல் மக்திஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் குறைஷியர் என்னை நம்பமறுத்தனர். (அப்போது நான் ஹிஜ்ர் பகுதியில் நின்றிருந்தேன்.) என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

(17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காஸிஃப் எனும் சொல்லுக்கு எல்லாவற்றையும் பிடுங்கி எறியும் பலத்த காற்று என்று பொருள்.

பாடம் : 4

(17:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கர்ரம்னா எனும் சொல்லும் (இதே வகையிலான) அக்ரம்னா எனும் சொல்லும் (கண்ணியப்படுத்தினோம் என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(17:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ளிஉஃபல் ஹயாத்தி வ ளிஉஃபல் மமாத்தி எனும் சொற்றொடருக்கு உலக வாழ்விலும் இரு மடங்கு வேதனை, மரணத்திற்குப் பின்பும் இரு மடங்கு வேதனை என்று பொருள்.

(17:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகிலாஃபக்க எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படியான) கல்ஃபக்க எனும் சொல்லும் (உமக்குப் பின்னர் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(17:83ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஆ எனும் சொல்லுக்கு ஒதுங்கிக் கொண்டான் என்று பொருள்.

(17:84ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷாகிலத்திஹி எனும் சொல்லுக்குத் தன் தரப்பில் என்று பொருள். இச்சொல் ஷக்ல் (நிகர்) எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும்.

(17:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸர்ரஃப்னா எனும் சொல்லுக்கு முன் வைத்துள்ளோம் என்று பொருள்.

(17:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கபீல் எனும் சொல்லுக்கு நேரடியாக; கண்ணெதிரே என்று பொருள். (இச்சொல்லிலிருந்து பிறந்ததே) அல்காபிலா (பிரசவப் பெண் மருத்துவர்) எனும் சொல்லும். ஏனெனில், இந்தப் பெண் மருத்துவர், பிரசவிக்கும் பெண்ணுக்கெதிரில் இருந்து அவளுடைய குழந்தையை எதிர்நோக்கு கின்றார்.

(17:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கஷ்யத்தல் இன்ஃபாக் எனும் சொல்லுக்குச் செலவாகிவிடுமோ என்ற அச்சம் என்று பொருள். இன்ஃபாக் என்பதற்கு வறுமை என்றும், நஃபிக என்பதற்குப் போய்விட்டது என்றும் பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) கத்தூர் எனும் சொல்லுக்குக் கஞ்சன் என்று பொருள்.

(17:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அஃத்கான் எனும் சொல்லுக்கு முகத் தாடைகள் இரண்டும் இணையுமிடங்கள் (முகவாய்கள்) என்று பொருள். இதன் ஒருமை ஃதகன் என்பதாகும்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(17:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மவ்ஃபூர் (நிறைவாக்கப்பட்டது) எனும் (செயப்பாட்டு எச்சவினைப் பெயர்ச்) சொல்லுக்கு (வினையாலணையும் பெயரான) வாஃபிர் (நிறைவானது) என்பதன் பொருளாகும்.

(17:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபீஉன் எனும் சொல்லுக்குப் பழிவாங்குப வன் என்று பொருள். இப்னு அப்பாஸ்

(ரலி) அவர்கள், உதவியாளர் எனப் பொருள் கொள்கிறார்கள். (இதற்குக் குற்றம் சாட்டு வோர், விசாரணை செய்யக்கூடியவர் என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.)

(17:97ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கபத் எனும் சொல்லுக்குத் தணிந்தது என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(17:26ஆவது வசனத்திலுள்ள) வீண் செலவு செய்ய வேண்டாம் என்பதன் கருத்தாவது: (மார்க்கம் அனுமதிக்காத) தீய வழியில் செலவு செய்யவேண்டாம்.

(17:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ரஹ்மத் (அருள்) எனும் சொல், (வாழ்க்கைக்குத் தேவைப்படும்) வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.

(17:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மஸ்பூர் எனும் சொல்லுக்கு சபிக்கப்பட்ட வன் என்று பொருள்.

(17:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா தக்ஃபு எனும் சொல்லுக்குப் பேசாதீர்கள் என்று பொருள்.

(17:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப ஜாஸு எனும் சொல்லுக்குத் திட்ட மிட்டனர் என்று பொருள்.

(17:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஸ்ஜீ எனும் சொல்லுக்குச் செலுத்து கின்றான் என்று பொருள்.

(17:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அஃத்கான் எனும் சொல்லுக்கு முகங்கள் என்று பொருள்.

பாடம்

(அக்கிரமக்காரர்கள் வாழ்கின்ற) ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க விரும்பினால், அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அதில் அவர்கள் பாவம் இழைக்கின்றார்கள். அதையடுத்து அவ்வூரின் மீது நமது ஆணை உறுதியாகி, அதனை நாம் அடியோடு அழித்து விடுகின் றோம் எனும் (17:16ஆவது) இறைவசனம்.

4711 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில், ஒரு குலத்தாரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், அமிர பனூ ஃபுலான் (இன்ன குலத்தார் எண்ணிக்கையில் பெருகிவிட்டனர்) என்று கூறிவந்தோம்.

மற்றோர் அறிவிப்பில் (அமிர என்பதற்கு பதிலாக) அமர என்று காணப்படுகிறது.6

 பாடம் : 5

நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்களே நீங்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகவே திகழ்ந்தார் (எனும் 17:3ஆவது இறைவசனம்).

4712 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்து கொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, பொறுத்துக் கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்க மாட்டீர்களா? என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், (உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.

ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம் கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒரு போதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது என்று கூறிவிட்டு நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள் ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள் ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒரு போதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்து விட்டேன்.8 நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! என்று கூறிவிட்டு, நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள் என்பார்கள்.

ளஅவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,ன இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம் கொண்டுள் ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒரு போதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெ வரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் சென்று மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள் ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்து விட்டிருக்கிறேன்.10 நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் களிடம் சென்று, ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டி யுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம் என்பேன். அதற்கு முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம் என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (யமனிலுள்ள) ஹிம்யர் எனும் ஊருக்கும் இடையிலுள்ள அல்லது மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும் என்று கூறினார்கள்.11

பாடம் : 6

மேலும், நாம் தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம் எனும் (17:55ஆவது) வசனத் தொடர்.

4713 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம்- முழுவதையும் ஓதிவிடுவார்கள்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12

 பாடம் : 7

(நபியே!) இவர்களிடம் கூறுக: அல்லாஹ்வை விடுத்து (உங்கள் தேவைகளை நிறேவேற்றும் கடவுளர்களாய்) யாரை நீங்கள் கருதுகிறீர் களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர் களால் அகற்றிவிடவோ மாற்றிவிடவோ முடியாது (எனும் 17:56ஆவது இறைவசனம்).

4714 அபூ மஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களுடைய (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனது நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டி ருக்கிறார்கள் எனும் (17:57ஆவது) வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் ஜின் இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண் டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தமது (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் 17:56ஆவது வசனம் குறித்து விளக்கமளிக்கையில்... என்று காணப்படுகிறது.

பாடம் : 8

இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களுடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் எனும் (17:57ஆவது) இறைவசனம்.

4715 அபூ மஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாய்) அழைக்கின்ற னரோ அவர்களே கூடத் தங்களுடைய (உண்மையான) இறைவனது நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக் கொண் டிருக்கின்றனர் எனும் (17:57ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: ஜின் இனத்தாரில் சிலர் (மனிதர்கள் சிலரால்) வணங்கப்பட்டுவந்தனர். பின்னர் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

பாடம் : 9

(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்)காட்சியையும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப் பதையும் இம் மக்களுக்கு ஒரு சோதனை யாகவே ஆக்கியுள்ளோம் (எனும் 17:60ஆவது வசனத் தொடர்).

4716 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம் எனும் (17:60ஆவது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா விலிருந்து பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. சபிக்கப்பட்ட மரம் என்பது சப்பாத்திக்கள்ளி மரத்தைக் குறிக்கிறது.13

பாடம் : 10

திண்ணமாக அதிகாலையில் ஓதுவது சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும் எனும் (17:78ஆவது) வசனத் தொடர்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அதிகாலையில் ஓதுவது என்பது அதிகாலை (ஃபஜ்ர்)த் தொழுகையைக் குறிக்கும்.

4717 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனியாகத் தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலைத் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால், (நபியே!) அதிகாலையில் ஓதுவதைக் கடைப் பிடியுங்கள். (ஏனெனில்,) அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும் எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.14

 பாடம் : 11

இரவில் தஹஜ்ஜுத் எனும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. இது உமக்கு அதிகப் படியான தொழுகையாகும். உம்முடைய இறைவன் உம்மை (மகாமு மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம் எனும் (17:79ஆவது) இறைவசனம்.

4718 இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

 மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ் விடம்) பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக் கொண்டே வர) இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். ளநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.ன நபியவர் களை அல்லாஹ் (மகாமு மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும்.15

4719 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தைத்தைக் கேட்(டு முடிக்)கும் போது இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதி யே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக! என்று எவர் பிரார்த்திக்கி றாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.16

பாடம் : 12

மேலும் (நபியே!) சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக்கூடியதே! என்று கூறுவீராக! (எனும் 17:81ஆவது இறைவசனம்.)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஹக எனும் சொல்லுக்கு அழிந்தது என்று பொருள்.

4720 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருந்த நிலையில், நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். தமது கரத்திலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தியபடி, சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதே! என்றும் உண்மை வந்து விட்டது; அசத்தியம் புதிதாக ஒன்றையும் செய்து விடவுமில்லை; (இனி) அது மீண்டும் ஒருமுறை பிறக்கப்போவது மில்லை என்றும் கூறலானார்கள்.17

பாடம் : 13

(நபியே!) உயிர் (ரூஹ்) குறித்து உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள் (எனும் 17:85 ஆவது வசனத் தொடர்).

4721 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள் என்றார். மற்றவர், உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்) என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) அவரிடம் கேளுங்கள் என்றனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹை)ப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என அறிந்து கொண்டேன். ஆகவே, நான் எனது இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கிய போது, அவர்கள், (நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையினால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது எனும் (17:85ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.18

பாடம் : 14

(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கு மிடையில் ஒரு வழியை(-மிதமான தொனியை-)க் கடைப்பிடியுங்கள் (எனும் 17:110ஆவது வசனத் தொடர்).

4722 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (நபியே)! உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம் தொடர்பாகக் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரி களின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தம் தோழர்களுடன் மறைந்து தொழும் போது குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்கள். அதை இணைவைப்பவர்கள் கேட்கும் போது, குர்ஆனையும் அதை இறக்கியருளிய இறைவனையும், அதை (மக்கள் முன்) கொண்டு வந்த(நபிய)வர்களையும் ஏசுவார்கள். ஆகவே, உயர்ந்தவனாகிய அல்லாஹ் தன் நபியிடம் நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அதாவது உரத்த குரலில் ஓதாதீர்கள். (ஏனெனில்,) இணைவைப்போர் அதைக் கேட்டுவிட்டு குர்ஆனை ஏசுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு ஒரேயடி யாகக் குரலைத் தாழ்த்தவும் செய்யாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே, மிதமான போக்கைக் கைக் கொள்ளுங்கள் என்று கூறினான்.

4723 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த (17:110ஆவது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.19

பாடம் : 1

மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் எனும் (18:54ஆவது) வசனத் தொடர்.

4724 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா? என்று கேட்டார்கள்.2

(18:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ரஜ்மம் பில் ஃகைப் (மறைவான விஷயங் களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர் களைப் போல்) என்பதன் கருத்தாவது: (குகைவாசிகள் எத்தனை பேர் என்பது பற்றிய உண்மை நிலை) அவர்களுக்குத் தென்பட வில்லை.

(18:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபுருத் எனும் சொல்லுக்குக் கவலைக்குரியது என்று பொருள்.

(18:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுராதிக் எனும் சொல்லுக்கு (நரகத்தின் ஜுவாலை) கூடாரங்களையும், கூடாரங்களால் சூழப்பட்ட அறையையும் போல (அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்) என்று பொருள்.

(18:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஹாவிருஹு (அவனிடம் பேசிக் கொண் டிருக்கின்றான்) எனும் சொல் முஹாவரா (உரையாடல்) எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும்.

(18:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லாகின்ன ஹுவல்லாஹு ரப்பீ எனும் தொடருக்கு லாகின் அன ஹுவல்லாஹு ரப்பீ (நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னைப் படைத்துப் பராமரிப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன்) என்று பொருள்.

(18:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கிலாலஹுமா எனும் சொல்லுக்கு அவ் விரண்டுக்கும் இடையே என்று பொருள்.

(18:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)

ஸலக் எனும் சொல்லுக்கு யாரும் காலூன்றி நிற்கமுடியாத அளவுக்கு வழுவழுப்பானது என்று பொருள்.

(18:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல் வலாயா (அதிகாரம்) எனும் சொல், அல்வல்யு எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். (இதே வசனத்திலுள்ள) உக்பன் எனும் சொல்லும் ஆகிபத், உக்பா, உக்பத் ஆகிய சொற்களும் ஒன்றாகும். இவற்றுக்கு முடிவு என்று பொருள்.

(18:55ஆவது வசனத்தின்மூலத்திலுள்ள) குபுல் மற்றும் (இன்ன பிற ஓதல் முறைகளில் வந்துள்ள) கபல், கிபல் ஆகிய சொற்களுக்குக் (கண்) எதிரில் என்று பொருள்.

(18:56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) -யுத்ஹிளூ எனும் சொல்லுக்கு வீழ்த்தி விடுவதற்காக என்று பொருள். (இச்சொல்) வழுக்கிவிடுதல் எனும் பொருள் கொண்ட தஹள் எனும் வேர்ச் சொல்லிலிருந்து வந்ததாகும்.

பாடம் : 2

மூசா தம் பணியாளரிடம் நான் இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அடைந்தே தீருவேன்; அல்லது (இப்படியே) நீண்ட காலம் நடந்து கொண்டேயிருப்பேன் என்று கூறியதை (நபியே!) நினைவுகூருக! (எனும் 18:60ஆவது இறைவசனம்.)

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுகுப் எனும் சொல்லுக்கு (நீண்ட) காலம் என்று பொருள். இதன் பன்மை அஹ்காப்.

4725 சயீத் பின் ஜுபைர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் களிர் (அலை) அவர்களுடைய தோழரான மூசா, இஸ்ரவேலர்களின் இறைத்தூதரான மூசா (அலை) அல்லர். (அவர் வேறொரு மூசா) என்று (பேச்சாளரான) நவ்ஃப் அல்பிகா-3 கூறுகிறாரே! என்று கேட்டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் விரோதி பொய் உரைத்து விட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவிமடுத்ததாக எமக்கு அறிவித்துள்ளார்கள்:

(ஒரு முறை) மூசா (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், நான்தான் என்று பதிலளித்து விட்டார்கள்.

ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித் தான். ஏனெனில் மூசா (அலை) அவர்கள் (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, (இல்லை;) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர் என்று அறிவித்தான்.

மூசா (அலை) அவர்கள், என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்!) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகின்றீர் களோ அங்கேதான் அவர் இருப்பார் என்று சொன்னான்.

எனவே, மூசா (அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக் கொண்டு நடந்தார்கள். தம்முடன் தம் உதவியாளர் யூஷஉ பின் நூனையும் அழைத்துக் கொண்டார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினார்கள்.

கூடையிலிருந்த அந்த மீன் கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கட-ல் விழுந்தது. கட-ல் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக் கொண்டு (செல்லத்தொடங்கி)விட்டது. நீரோட்டத்தை மீனைவிட்டு அல்லாஹ் தடுத்து விடவே அதைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது.

மூசா (அலை) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்த போது அன்னாருடைய தோழர் (யூஷஉ) மீனைப் பற்றி அன்னாருக்குத் தெரிவிக்க மறந்து விட்டார். எஞ்சிய பக-லும் இரவிலும் அவர்கள் (தம் பயணத்தில் தொடர்ந்து) நடந்தனர். மறு நாள் ஆன போது மூசா தம் உதவியாளரை நோக்கி, நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வாரும்! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று சொன்னார்கள். (18:62)

அல்லாஹ் தமக்குக் கட்டளையிட்ட (இடத்)தை தாண்டிச் செல்லும் வரை, மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.

அவர்களுடைய உதவியாளர் நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கி னோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கட-ல் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது என்று கூறினார். (18:63)

-அது மீனுக்குப் பாதையாகவும் மூசா (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய உதவியாளருக்கும் வியப்பாகவும் அமைந்தது.-

அதற்கு மூசா (அலை) அவர்கள் அது தான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம் என்று கூறினார்கள். உடனே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள். அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் மூடிக் கொண்டபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் (களிர்) உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)? என்று வினவினார்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் தான் மூசா என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், பனூ இஸ்ராயீல்களின் (இறைத் தூதரான) மூசாவா? என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ஆம் என்று பதிலளித்து விட்டு, உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறினார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன் என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறுசெய்ய மாட்டேன் என்று சொன்னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாக உமக்கு அதனை அறிவிக்கும் வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கலாகாது என்று கூறினார்.

பிறகு (மூசா, களிர்) இருவரும் கடற்கரை யோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் (மூவரும்) தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக் காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்கள்) களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை(த் தங்கள் மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.

இருவரும் மரக்கலத்தில் ஏறியது தான் தாமதம்; களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றால் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை களில் ஒன்றைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் திடுக்குற்றார்கள்.

உடனே மூசா (அலை) அவர்கள், களிரை நோக்கி, கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக் கொண்ட மக்களின் மரக் கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கி விட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்து விட்டீர்கள் என்று கூறினார்கள்.

அதற்கு களிர், என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து, என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள் என்று கூறினார்கள்.

-அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினா லாகும்.-

(அப்போது) சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின்மீது விழுந்து, தன் (சின்னஞ்சிறு அலகால்) கட-ல் ஒரு முறை உறிஞ்சி (நீர் அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள் உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பி டுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் கட-லிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு) என்று சொன்னார்கள்.

பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து வெளியேறி, கடலோரமாக நடந்து கொண்டி ருந்த போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்ட களிர் (அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்களிடம், ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்து விட்டீர்கள்! என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களுக்கு நான் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இம்முறை களிர் (அலை) அவர்கள் கூறியது முதல்முறை கூறியதைவிட (சற்று)க் கடுமை யானதாகும் என்று கூறினார்கள்.4-

அதற்கு மூசா (அலை) அவர்கள், இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்து விட்டது என்றார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர் (அலை) அவர்கள் அந்தச் சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள்.

அப்போது மூசா (அலை) அவர்கள், இந்த மக்களிடம் நாம் வந்து(உணவு கேட்டு)ம், இவர்கள் நமக்கு உணவளிக்கவு மில்லை; உபசரிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே! என்றார்கள்.

களிர் (அலை) அவர்கள், இது தான் நானும் நீங்களும் பிரியவேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன் என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூசா பொறுமையாக இருந்திப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகளை) நமக்கு இறைவன் அறிவித்திருப்பான் என்று நாம் விரும்பினோம் என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79ஆவது வசனத்தின் மூலத்தில்) வகான அமாமஹும் ம-க்குன் யஃகுஃது குல்ல சஃபீனத்தின் ஸா-ஹத்தின் ஃகஸ்பா என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக் கொண்டி ருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தில்) வஅம்மல் ஃகுலாமு ஃபகான காஃபிரன் வகான அபவாஹு முஃமினைனி என்று ஓதுவார்கள். (பொருள்: அச்சிறுவன் இறைமறுப்பாளனாகவும் அவனுடைய தாய் தந்தை நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர்)5

 பாடம் : 3

பிறகு இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது, தங்கள் மீனை மறந்து விட்டார்கள். அது கட-ல் (சுரங்கம் போல்) பாதை அமைத்துக் கொண்டு (தப்பித்துச் சென்று)விட்டது எனும் (18:61ஆவது) இறைவசனம்.

இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) சரப் எனும் சொல்லுக்கு வழி என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸ்ருபு என்பதற்கு நடப்பான் என்று பொருள். இச்சொல்லிலிருந்து தான் (13:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சாரிபும் பின்னஹார் (பக-ல் சுற்றித் திரிபவன்) எனும் சொற்றொடர் வந்தது.

4726 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் இல்லத்தில் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், என்னிடம் (ஏதேனும் விளக்கம் கேட்க நினைத்தால்) கேளுங்கள்! என்றார்கள்.

நான், அபூ அப்பாஸ்6 அவர்களே!- அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்!- (இராக்கிலுள்ள) கூஃபா நகரில் கதை சொல்லும் மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு நவ்ஃப் என்று சொல்லப்படும். அவர், ளகளிர் (அலை) அவர்களின் தோழரானன மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்(; அவர் வேறொரு மூசா தாம்) என்று கூறுகிறார் என்று சொன்னேன்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்துள்ளார்கள்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் மூசா (அலை) அவர்கள் (தம் சமுதாய) மக்களுக்கு, (இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருட் கொடைகளை) நினைவூட்டிக் கண்கள் ததும்ப இதயங்கள் நெகிழ்ந்துருகும் அளவுக்கு உபதேசித்து விட்டுத் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து சேர்ந்து, அல்லாஹ்வுடைய தூதரே! பூமியில் உங்களைவிட அறிந்தவர் எவரேனும் உண்டா? என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, மூசா (அலை) அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என பதிலளிக்காமல் விட்டுவிட்டார்கள். எனவே, மூசா (அலை) அவர்களிடம், இல்லை. (உம்மைவிட அறிந்த வர் ஒருவர் பூமியில் இருக்கிறார்) என்று (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) சொல்லப்பட்டது. மூசா (அலை) அவர்கள், என் இறைவா! எங்கே (அவர் இருக்கிறார்)? என்று கேட்க, இறைவன், இரு கடல்கள் சங்கமிக்குமி டத்தில் (அவர் இருக்கிறார்) என்றான்.

மூசா (அலை) அவர்கள், என் இறைவா! நான் அவரைப் புரிந்து கொள்ள அடையாள மொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக! என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மீன் உங்களைவிட்டுப் பிரிகின்ற இடத்தில் (அவர் இருப்பார்) என அல்லாஹ் கூறினான் என்று அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் என்னிடம் கூறினார்கள்.

உயிரற்றமீன் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்; அதற்கு உயிரூட்டப்படும் இடமே (அவர் இருக்கும் இடமாகும்) என அல்லாஹ் கூறினான் என்று யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

ஆக, மூசா (அலை) அவர்கள் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு (யூஷஉ பின் நூன் எனும்) தம் உதவியாளரிடம், மீன் உம்மை விட்டுப் பிரிந்து விடும் இடத்தை நீர் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தச் சிரமத்தையும் உமக்கு நான் தரமாட்டேன் என்றார்கள்.

உதவியாளர், (எனக்கு) நீங்கள் அதிகமான சிரமத்தைத் தரவில்லை என்றார். மூசா தம் உதவியாளரை நோக்கி... என்று தொடங்கும் (18:60ஆவது) இறைவசனம் இதையே குறிப்பிடுகிறது. உதவியாளர் என்பது யூஷஉ பின் நூனைக் குறிக்கிறது. அவரது பெயர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை.

மூசா (அலை) அவர்கள் ஈரப்பசை மிகுந்த ஓரிடத்தில் பாறையொன்றின் நிழ-ல் இருந்து கொண்டிருந்த சமயம் அந்த மீன் (உயிர் பெற்றுக் கட-ல்) துள்ளிக் குதித்தது. அப்போது மூசா (அலை) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உதவியாளர், தாமாக விழித்தெழும் வரை நான் இவர்களை எழுப்ப மாட்டேன் என்று சொல்லிக் கொண்டார். இறுதியில் (மீன் உயிர் பெற்றுவிட்ட செய்தியை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்து விட்டார். மீன் (கூடையிலிருந்து) துள்ளிக் குதித்துக் கட-னுள் நுழைந்து கொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட் டத்தை அல்லாஹ் தடுத்து விட, மீன் சென்ற அடையாளம் கல்-ல் பதிந்தது போலானது.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், அந்த மீன் சென்ற (வழியின்) அடையாளம் வளையம் போலாகிவிட்டது என்று கூறியவாறு தம்மிரு பெருவிரல்களையும் அவற்றை அடுத்துள்ள இரு (ஆட்காட்டி) விரல்களையும் வளையமிட்டு இவ்வாறெனக் காட்டினார்கள்.

ளமீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். மறுநாள் புலர்ந்த போது, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா!ன நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று சொன்னார்கள்.

அதற்கு உதவியாளர், ளமூசா (அலை) அவர்களிடம்,னஅல்லாஹ் உங்களிடமிருந்து களைப்பை அகற்றிவிட்டான் என்று கூறினார்.

இத்தகவல் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை.

உடனே அவர்கள் இருவரும் (வந்த வழியே) திரும்பிய போது களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள்.

அறிவிப்பாளர் உஸ்மான் பின் அபீ சுலைமான் (ரஹ்) அவர்கள், களிர் (அலை) அவர்கள் கடல் நடுவி(லிருந்த தீவி)ல் பசுமையான விரிப்பொன்றின் மீது வீற்றிருந்தார்கள் என்று என்னிடம் கூறினார்கள்.

(தொடர்ந்து) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

களிர் (அலை) அவர்கள், தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடிக் கொண்டு (அமர்ந்து) இருந்தார்கள். ஆடையின் ஓர் ஓரத்தைத் தம் கால்களுக்குக் கீழேயும் மற்றோர் ஓரத்தைத் தம் தலைக்குக் கீழேயும் வைத்திருந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் அன்னாருக்கு சலாம் (முகமன்) கூற, அவர் (பதில் சலாம் கூறிவிட்டு) தமது முகத்திலிருந்து (அந்த ஆடையை) விலக்கி, எனது இந்தப் பகுதியில் (இவ்வாறு) சலாம் கூறும் வழக்கமும் உண்டா? நீங்கள் யார்? என்று கேட்டார்கள்.

மூசா (அலை) அவர்கள், நான்தான் மூசா என்று பதிலளித்தார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசாவா? என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ஆம் என்றார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், என்ன விஷயம்? எனக் கேட்க, உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன் என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்.

உங்கள் கரங்களிலுள்ள தவ்ராத் வேதமும் உங்களுக்கு இறைச்செய்தி (வஹி) வந்து கொண்டிருப்பதும் உங்களுக்குப் போதாதா? மூசாவே! (அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு என்னிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்து கொள்வது உங்களுக்கு அவசியமாகாது. (இதைப் போன்றே அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு உங்களிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்து கொள்வது எனக்கு முறையாகாது என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள்.7

அப்போது பறவை ஒன்று (பறந்து வந்து) தன் அலகால் கட-லிருந்து (நீரை உறிஞ்சி) எடுத்தது.

களிர் (அலை) அவர்கள் ளமூசா (அலை) அவர்களிடம்,ன அல்லாஹ்வின் .மீதாணையாக! இந்தப்பறவை தன் அலகால் இந்தக் கட-லுருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில் என் அறிவும் உங்கள் அறிவும் உள்ளது என்றார்கள்.

அவர்கள் இருவரும் மரக்கலத்தில் (ஏறி) பயணம் செய்த போது சிறு சிறு மரக் கலங்களைக் கண்டனர். அவை இக்கரைக் காரர்களை அக்கரைக்காரர்களிடம் ஏற்றிச் சென்று கொண்டிருந்தன. அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் புரிந்து கொண்டு, (இவர்) அல்லாஹ்வின் நல்லடியார்; இவரிடம் நாம் கட்டணம் கேட்கக்கூடாது என்று கூறினர்.

-அறிவிப்பாளர் ஒருவர் கூறுகின்றார்:

நாங்கள் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், அவர் களிர் (அலை) அவர்கள் தாமே? என்று கேட்டோம். சயீத் (ரஹ்) அவர்கள், ஆம் என்றார்கள்.-

அப்போது களிர் (அலை) அவர்கள் (வாய்ச்சியின் உதவியால்) மரக் கலத்தின் ஒரு பலகையைக் கழற்றி அந்த இடத்தில் ஒரு முளைக்குச்சியை வைத்(து அறைந்)தார்கள். (இதைக் கண்ணுற்ற) மூசா (அலை) அவர்கள் (களிர் அவர்களிடம்), (கட்டணம் இல்லாம லேயே நம்மை ஏற்றி வந்தவர்களின்) மரக் கலத்தை ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்து விட்டீர்கள்! என்று கூறினார்கள்.

-அபாயமானது என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள இம்ர் எனும் சொல்லுக்கு வெறுக்கப்பட்டது என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.-

களிர் (அலை) அவர்கள், உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் உங்களுக்கு (ஏற்கெனவே) சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.

ளகளிர் (அலை) அவர்களின் நடவடிக்கைகள் குறித்து மூசா (அலை) அவர்கள்ன முதல் தடவை பொறுமையிழந்தது மறதியினாலாகும். இரண்டாம் தடவை பொறுமையிழந்தது சார்பு நிலை (ஷர்த்) ஆகும். மூன்றாம் முறை பொறுமையிழந்தது வேண்டுமென்றேயாகும்.8

மூசா (அலை) அவர்கள்,நான் மறந்து விட்டதை வைத்து என்னைத் தண்டித்து என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள். என்று சொன்னார்கள். பிறகு இருவரும் (நடந்தனர். வழியில்) ஒரு சிறுவனைச் சந்திக்கவே, களிர் (அலை) அவர்கள் அவனைக் கொன்றுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

களிர் (அலை) அவர்கள், (வழியில்) விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டார்கள். உடனே (அவர்களில்) இறை மறுப்பாளனாகவும் அழகாகவும் இருந்த சிறுவன் ஒருவனைப் பிடித்துப்படுக்கவைத்துக் கத்தியால் அறுத்து விட்டார்கள் என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது மூசா (அலை) அவர்கள் ளகளிர் (அலை) அவர்களிடம்,ன ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? என்று கூறினார்கள்.

-(ஒரு பாவமும் அறியாத என்பதைக் குறிக்க குர்ஆன் மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ஸகிய்யத் எனும் சொல்லை மற்றோர் ஓதல் முறையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஸாக்கியத் என்று ஓதுவார்கள். அதற்குக் கீழ்ப்படிகின்றவன் என்று பொருள். ஃகுலாமன் ஸாக்கியா (கீழ்ப்படியும் சிறுவன்) என்பதைப் போல.-

மீண்டும் இருவரும் நடந்தார்கள். (இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள்.)

அந்த ஊரில் கீழே விழவிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள்.அதைக் கண்ட உடனே, களிர் (அலை) அவர்கள் அந்தச் சுவரை நிலை நிறுத்தினார்கள்.

-இதைக் கூறும் போது சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், தம் கையால் இவ்வாறு என சாடைசெய்து காட்டினார்கள்.-

யஅலா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

களிர் (அலை) அவர்கள், தமது கையால் சுவரைத் தடவ, அது நேராக நின்று கொண்டது என்று சயீத் பின் ஜுபைர் கூறியதாகவே நான் கருதுகின்றேன்.

மூசா (அலை) அவர்கள், நீங்கள் இதற்குக் கூலி வாங்கிக் கொண்டிருக்கலாமே என்றார்கள்.

நாம் சாப்பிடுவதற்காக(வாவது) கூலி வாங்கியிருக்கலாமே என்று மூசா (அலை) அவர்கள் கூறியதாக சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(18:79ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வகான வராஅஹும் ம-க் (அவர்களுக் கப்பால் ஓர் அரசன் இருந்தான்) என்பதை வகான அமாமஹும் ம-க் (அவர்களுக்கு முன்னால் ஓர் அரசன் இருந்தான்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியுள் ளார்கள்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், அ(ம்மன்ன)வன் (பெயர்) ஹுதத் பின் புதத் என்றும், கொல்லப்பட்ட அச்சிறுவன் (பெயர்) ஜைஸூர் என்றும் கருதுகின்றனர்.

அந்த மரக்கலம் கட-ல் (கூலி) வேலை பார்க்கும் ஏழைகள் சிலருக்குரியது. அதனைப் பின்னப்படுத்தவே நான் அவ்வாறு செய்தேன். (ஏனென்றால், அம்மரக்கலம் செல்லும் மார்க்கத்தில்) இவர்களுக்கு முன் ஓர் (கொடுங்கோல்) அரசன் இருக்கிறான். அவன் (தான் காணும் நல்ல) மரக்கலங்கள் யாவற்றையும் அக்கிர மமாக அபகரித்துக் கொள்வான் என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள். (18:79)

அதாவது பின்னமான மரக்கலங்கள் அவனைக் கடந்து சென்றால் அதிலுள்ள பின்னத்தைக் கண்டு அதனை அவன் விட்டு விடுவான். மரக்கலக்காரர்கள் அவனைக் கடந்து சென்றதும் அதனைப் பழுது பார்த்து பயன் பெற்றுக் கொள்வர். (அவர்களுடைய கையிலிருந்து மரக்கலம் போகாது).

அறிவிப்பாளர்களில் சிலர், (மரக்கலத்தில் ஏற்பட்ட) ஓட்டையைக் கண்ணாடியால் அவர்கள் அடைத்து விட்டனர் என்பர். வேறு சிலர், அதைத் தாரினால் அடைத்து விட்டனர் என்பர்.

(கொல்லப்பட்ட சிறுவனுடைய விஷயம் என்னவெனில்,) அவனுடைய தாய் தந்தையர் இருவரும் (நல்ல) இறை நம்பிக்கையாளர் களாய் இருந்தனர். (ஆனால்,) அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான். அவன் (வா-பத்தை அடைந்து) அவ்விருவரையும் அக்கிரமம் செய்யும்படியும் (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவான் என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.

அதாவது அவன் மீதுள்ள பாசம் அவனது (பொய்மையான) மதத்தைப் பின்பற்றும்படி அவர்களைத் தூண்டிவிடுமோ என்றஞ்சி னோம். அவ்விருவருக்கும் இறைவன், இவனைவிட நல்லவனையும் பரிசுத்தமான வனையும் (பெற்றோர் மீது) அதிக அன்பு கொள்ளக்கூடியவனையும் பிரதியாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம். என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? என்று மூசா (அலை) அவர்கள் வினவியதற் கேற்பவே இவ்வாறு களிர் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

(18:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அக்ரப ருஹ்மா எனும் சொற்றொடருக்கு களிர் (அலை) அவர்கள் கொன்ற முதல் (சிறு)வனைவிட (பெற்றோரான) அவர்கள் இருவர் மீதும் மிகவும் அன்பு பாராட்டுபவன் என்று பொருள். (அவனுக்குப்) பிரதியாக ஒரு பெண் மகவு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அல்லாதவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.

அ(ச்சிறுவனுக்குப் பிரதியாக வழங்கப்பட்ட)து பெண் மகவாகும் என (அறிஞர்) பலர் வாயிலாக தாவூத் பின் அபூ ஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 4

அவ்விருவரும் (அவ்விடத்தைக்) கடந்து சென்றபோது மூசா தம் பணியாளரிடம் நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று கூறினார். அதற்குப் பணியாளர் நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்குதான் நான் மீனை மறந்து(தவறவிட்டு)விட்டேன் என்று சொன்னார் எனும் (18:62, 63 ஆகிய) இறை வசனங்கள்.

(18:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுன்உ எனும் சொல்லுக்குச் செயல் என்று பொருள்.

(18:108ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹிவல் எனும் சொல்லுக்குத் திரும்புதல் என்று பொருள்.

(18:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இம்ர் எனும் சொல்லுக்கும் (18:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுக்ர் எனும் சொல்லுக்கும் அதிர்ச்சியளிப்பது என்று பொருள்.

(18:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யன்கள்ள எனும் சொல்லும், யன்காளு எனும் சொல்லும் (விழுந்து விடுகின்ற நிலையில் உள்ளது எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். யன்காளுஸ் ஸின்னு (பல் விழப்போகிறது) என்பதைப் போல.

இதே வசனத்தின் மூலத்திலுள்ள) லத்தக்கஃத்த எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ல தகிஃத்த எனும் சொல்லும் (பெறுதல் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(18:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ருஹ்ம் (அதிக பாசமிக்கவர்) எனும் சொல் ரஹ்மத் (அன்பு) எனும் சொல்லைவிட மிகையான பொருளைக் கொண்டதாகும். இது ரஹீம் (நிகரிலா அன்புடையோன்) எனும் சொல்லிலிருந்து வந்தது எனவும் கருதப்படுகிறது. இறையருள் பொழிவதால் மக்கா நகர் உம்மு ருஹ்ம் (அருளின் அன்னை) என அழைக்கப்படுவதுண்டு.

4727 சயீத் பின்ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இறைத்தூதரான மூசா (அலை) அவர்கள், களிரைச் சந்தித்த மூசா அல்லர்(; அவர் வேறொரு மூசா) என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகா- கூறுகிறார் என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து எமக்கு அறிவித்துள்ளார்கள்:

(ஒரு முறை) மூசா (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், மக்களில் மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், நான்தான் என்று பதிலளித்து விட்டார்கள்.

ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித் தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று சொல்லாமல் விட்டுவிட் டார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, இல்லை; இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர் என்று அறிவித்தான்.

மூசா (அலை) அவர்கள்,என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு (எனக்கு) வழி எப்படி? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்.)நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகின்றீர்களோ அங்கேதான் அவர் இருப்பார். அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள் என்று சொன்னான்.

எனவே, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூனுடன் அந்த மீன் சகிதமாகப் புறப்பட்டு (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்து அதனருகில் ஓய்வெடுத்தனர். உடனே மூசா (அலை) அவர்கள் தம் தலையை வைத்து (படுத்து) உறங்கியும் விட்டார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அம்ர் பின் தீனார் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், மேலும் அந்தப் பாறைக்கடியில் ஒரு நீரூற்று இருந்தது. அதற்கு ஜீவ நீரூற்று எனப்படும். அதன் நீர் பட்ட எந்தப் பொருளும் உயிர் பெறாமல் இருக்காது. அவ்வாறே அந்த மீனின் மீதும் அந்த ஊற்றின் நீர் பட்டது என்று காணப்படுகிறது.

உடனே, அந்த மீன் (உயிர் பெற்று) அசைந்து, கூடையிலிருந்து நழுவி கடலுக்குள் புகுந்தது.

மூசா (அலை) அவர்கள் கண் விழித்த போது தம் உதவியாளரை நோக்கி, நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று சொன்னார்கள். (18:62)

தமக்குக் கட்டளையிடப்பட்ட (இடத்) தைத் தாண்டிச் செல்லும்வரை மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.

உதவியாளர் யூஷஉ பின் நூன் மூசா (அலை) அவர்களிடம், நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து(தவறவிட்டு)விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கட-ல் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது என்று கூறினார். அதற்கு மூசா, நாம் தேடி வந்த இடம் அது தான் என்று கூறினார். (18:63, 64)

ஆகவே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். (மீன் நழுவிய பாறைக்கு அருகிலிருந்த கடற்பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது) மீன் (நீந்திச்) சென்ற இடத்தில் (இருந்த தண்ணீர்) வளையம் போலிருக்கக் கண்டனர்.

மூசா (அலை) அவர்களின் உதவியாளருக்கு அது வியப்பாகவும், மீனுக்கு அது (தப்பும்) வழியாகவும் இருந்தது.

அவர்கள் இருவரும் அந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் (போர்த்தி) மூடிக் கொண்டபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)? என்று வினவினார்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் தான் மூசா என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், பனூ இஸ்ராயீல்களின் (இறைத் தூதரான) மூசாவா? என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ஆம் என்று பதிலளித்து விட்டு, உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வரட்டுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், மூசா (அலை) அவர்களிடம், மூசாவே! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறினார்கள்.

(மீண்டும்) மூசா (அலை) அவர்கள், இல்லை; நான் உங்களைத் தொடர்ந்து வருவேன் என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், நீர் என்னைப் பின் தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், நானாக உமக்கு அதனை அறிவிக்கும் வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று) கேட்க லாகாது என்று கூறினார்.

பிறகு (மூசா, களிர்) இருவரும் கடற்கரை யோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு அவர் களை தங்கள் மரக்கலத்தில் அவர்கள் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர். அவர்களிருவரும் மரக்கலத்தில் பயணம் மேற் கொண்டனர்.

அப்போது சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின்மீது விழுந்து, தன் (சின்னஞ் சிறிய) அலகைக் கட-ல் அமிழ்த்தி (ஓரிரு திவலை நீர் அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள் உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும், (ஏன்) படைப்பினங்கள் யாவற்றின் அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகை (கடலுக்குள்) அமிழ்த்தி(நீர் எடுத்தி)ட்ட அளவுதான் என்று சொன்னார்கள்.

மூசா (அலை) அவர்கள் மரக்கலத்தில் ஏறிச் சிறிது நேரம்தான் கழிந்திருக்கும்; களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றை எடுத்து மரக்கலத்தை ஓட்டையாக்கி (அதை முளைக் குச்சியால் அடைத்து)விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிரை நோக்கி, கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்து விட்டீர்கள் என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி,) நடந்து, சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கருகில் சென்றனர். அப்போது களிர் (அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்து துண்டாக்கி(த் தனியே எடுத்து)விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்களிடம், ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்க வில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்து விட்டீர்கள்! என்று கூறினார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று முன்பே நான் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால், என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்க ளுக்குத் தக்க காரணம் கிடைத்து விட்டது என்றார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர் (அலை) அவர்கள் இவ்வாறு தமது கரத்தால் அதை நிலை நிறுத்தினார்கள்.

அப்போது மூசா (அலை) அவர்கள் களிரிடம், இந்த ஊருக்குள் நாம் வந்து(உணவு கேட்டு)ம், இவர்கள் நம்மை உபசரிக்க வில்லை; நமக்கு உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களது சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே! என்றார்கள்.

களிர் (அலை) அவர்கள், இது தான் நானும் நீங்களும் பிரியவேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன் என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூசா பொறுமையாக இருந்திப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்று நாம் விரும்பினோம் என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79ஆவது வசனத்தின் மூலத்தில்) வகான அமாமஹும் ம-க்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸா-ஹத்தின் ஃகஸ்பா என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக் கொண்டி ருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தில்) வ அம்மல் ஃகுலாமு ஃபகான காஃபிரன் என்று ஓதுவார்கள். (பொருள்: அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)9

பாடம் : 5

தம் செயல்களில் பெரும் இழப்பிற்கு ஆளான வர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே!) கேளுங்கள் எனும் (18:103ஆவது) இறைவசனம்.

4728 முஸ்அப் பின் சஅத் பின் அபீ வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீ வக்காஸ்) அவர்களிடம் இந்த (18:103ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.10 அதற்கு அவர்கள், (ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறிஸ்தவர்களும்தாம் அவர்கள். யூதர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்தவர்களோ சொர்க்கத்தை நிராகரித்தார்கள்; அங்கு உணவோ, பானமோ கிடையாது என்று சொன்னார்கள்.11 ஹரூரிய் யாக்களோ, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அல்லாஹ்வுடன் தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள் என்று சொன்னார்கள்.

(என் தந்தை) சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்களை பாவிகள் என்று குறிப்பிட்டு வந்தார்கள். (இறைமறுப் பாளர்கள் என்று கூறுவதில்லை.)

பாடம் : 6

அவர்கள்தாம் தம் இறைவனின் வசனங் களையும் (மறுமையில்) அவனது சந்திப்பையும் ஏற்க மறுத்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்களின் செயல்கள் வீணாகிவிட்டன. மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்க மாட்டேம் எனும் (18:105ஆவது) இறைவசனம்.

4729 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெற மாட்டான். மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்க மாட்டோம் எனும் (18:105ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

02.11.2009. 04:14

65-திருக்குர்ஆன் விளக்கவுரை11

பாடம் : 1

இதற்கு முன்னர் உம்முடைய மூதாதைய ராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உம் மீதும், யஅகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவுசெய்வான் எனும் (12:6ஆவது) வசனத் தொடர்.

4688 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

பாடம் : 2

திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன எனும் (12:7 ஆவது) இறைவசனம்.

 

4689 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மக்களி லேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ் வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தாம் என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள் நாங்கள் தங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், அப்படி யென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் அவர்கள்தாம் என்று பதிலளித்தார்கள். மக்கள், இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், அரபுகளின் சுரங்கங்கள் (எனப்படும் அரபுகளின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள் ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்த வர்களாயிருந்தவர்கள்தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் என்று பதிலளித்தார்கள்.

இதே நபிமொழி இன்னோர் அறிவிப் பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.3

பாடம் 3

இல்லை; உங்கள் மனம் ஒரு (மா பாவச்) செயலை(க் கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கி விட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று) எனும் (12:18ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சவ்வலத் எனும் சொல்லுக்கு அலங்கரித்துக் காட்டியது என்று பொருள்.

4690 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கற்பித்த வர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருந்த போது ஆயிஷா குற்றமற்ற வர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா பின் ஸுபைர், சயீத் பின் முஸய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடமிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ளஆயிஷா (ரலி) அவர்களிடம்ன நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ் விடம்தான் உதவி கோரவேண்டும் (12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் இந்த அவதூற்றைப் புனைந்து கொண்டு வந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்... என்று (தொடங்கும் 24:11 முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.4

4691 ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்த போது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், (அவரைப் பற்றிப்) பேசப்பட்டு வரும் பேச்சின் காரணத்தினால் (காய்ச்சல்வந்து) இருக்கலாம்! என்று கூறினார்கள். நான் ஆம்! (அப்படித் தான்) என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப் (அலை) அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவிகோர வேண்டும் (12:18) என்று சொன்னார்கள்.

பாடம் : 4

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத்துத் தாழிட்டுவிட்டு, வாரும் என்று அழைத்தாள் எனும் (12:23ஆவது) வசனத் தொடர்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்த்தலக்க என்பதற்கு ஹவ்ரானியா எனும் (சிரியா) மொழியில் இங்கே வா! என்று பொருள்.

இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் வா! என்பது தான் என்று கூறுகிறார்கள்.

4692 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(12:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காலத் ஹைத்த லக்க எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள் ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(12:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மஸ்வாஹு எனும் சொல்லுக்கு இவரது அந்தஸ்து என்று பொருள்.

(12:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்ஃபயா எனும் சொல்லுக்கு அவர்கள் இருவரும் கண்டனர் என்று பொருள்.

(37:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள அல்ஃபவ் ஆபாஅஹும் என்பதற்கு அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள் என்று பொருள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (37:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள பல்அஜிப்த்த வ யஸ்கரூன் என்பதை) பல் அஜிப்த்து வ யஸ்கரூன் (நான் ஆச்சரியப்படுகின்றேன்; அவர்களோ பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள்.

4693 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்திய போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிட மிருந்து பாதுகாத்திடு என்று (அவர்களுக் கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்து விட்டது. எந்த அளவிற்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண்பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகைபோன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகின்றான்: இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும் (44:10). மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) மீள்கிறீர்கள். (44:15) இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களை விட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப்போவதில்லை.) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்து விட்டது; பத்ருப் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்து விட்டது.5

பாடம் : 5

அரசர், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். (அரசரின்) தூதுவர் யூசுஃபிடம் வந்த போது, யூசுஃப் அவரிடம் நீர் உம் எஜமானிடம் திரும்பிச் சென்று, தம் கரங்களை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று? என்று கேட்டு வாரும். திண்ணமாக, என் இறைவன் அப் பெண் களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான் என்று கூறினார். பிறகு அரசர் அப்பெண் களிடம் நீங்கள் யூசுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? என்று வினவினார். அதற்கு அப்பெண்கள், அல்லாஹ் தூய்மையானவன்! நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை என்று கூறினர் எனும்

(12:50, 51 ஆகிய) வசனங்கள்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாஷ மற்றும் ஹாஷா ஆகிய சொற்களுக்கு தூயவன்என்றும் தவிர என்றும் (அரபி மொழி வழக்கில்) பொருள்.

ஹஸ்ஹஸ எனும் சொல்லுக்குத் தெளிவாகிவிட்டது என்று பொருள்.

4694 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதிபெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அவர்களிடம் அல்லாஹ், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்ட போது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத் தான் செய்கிறது.) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத் தான் (இறந்து போனதை உயிர்ப்பித்துக் காட்டும் படி) கேட்டேன் என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

 

 

பாடம் : 6

(முந்தைய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால், மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், (மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்து விட்டார்கள்; மேலும், தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி அவர்களை வந்தடைந்தது எனும் (12:110ஆவது) வசனத் தொடர்.

4695 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், (நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறைஉதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நமது உதவி அவர்களை வந்தடைந்தது என்று அல்லாஹ் கூறுகின்றான். (12:110). இவ்வசனத்தின் மூலத்தில் (பொய்யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருத லானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது குஃதிபூ (மக்கள் தங்களிடம் பொய் யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்கவேண்டுமா? என்று நான் கேட்டேன்.

குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருத லானார்கள்) என்றுதான் வாசிக்க வேண்டுமென ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

உடனே, தங்களுடைய சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், ழன்னூ- நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப்பொருள் கொள்ளமுடியும்?) என்று நான் கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், ழன்னூ என்பதற்கு நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது) என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அவர்களிடம் நான், கத் குஃதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டு விட்டது என்று நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ! என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை என்றார்கள்.

உடனே நான், இந்த வசனம் (கூறும் பொருள்)தான் என்ன? என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், இறைத்தூதர் களைப் பின்பற்றிய சமுதாயத்தினர் தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன்பிறகு (தாம் ஏற்றுக் கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே போய், இறை உதவியும் தள்ளிப் போய்க் கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள்,தம் சமுதாயத்தினரில் தமது செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்து விட்டவர்களைக் குறித்து நிராசையடைந்து விட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும், துன்பமும் துயரமும் நீண்டு கொண்டே சென்ற காரணத்தாலும்) நமது செய்தியைப் பொய்யென்று கருதுகின் றார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போது தான் நமது உதவி அவர்களை வந்தடைந்தது (என்பதே அந்த வசனத்தின் பொருள்) என பதிலளித்தார்கள்.7

4696 உர்வா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், ளஆயிஷா (ரலி) அவர்களிடம்ன அது அழுத்தல் குறி இல்லாமல் குஃதிபூ என்றிருக்கலாம் அல்லவா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் காப்பாற்றட்டும் என்று மேற்கண்டபடி சொன்னார்கள்.

02.11.2009. 04:11

65-திருக்குர்ஆன் விளக்கவுரை10

பாடம் : 1

இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்: இவர்கள் ஆடை களால் தங்களைமூடி மறைத்துக் கொண்ட போதிலும் அவர்கள் மறைக்கின்றவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும் 11:5ஆவது இறை வசனம்).

(11:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாக்க எனும் சொல்லுக்கு இறங்கியது என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஹீக்கு என்பதற்கு இறங்கும் என்று பொருள்.

(11:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஊஸுன் (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து பஃஊல் எனும் வாய்பாட்டில் வந்ததாகும்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(11:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தப்தயிஸ் எனும் சொல்லுக்குக் கவலைப்படுதல் என்று பொருள்.

(11:5ஆவது வசனத்திலுள்ள) அவனிட மிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங் களைத் திருப்பிக் கொள்கிறார்கள் என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமி ருந்து மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம்கொள்கி றார்கள்.

4681 முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த (11:5ஆவது) வசனத்தை அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும் என ஓத நான் கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும் போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து)கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.

4682 முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும் என்று இந்த (11:5ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள் என்பதன் பொருள் என்ன? என்று கேட்டேன். அவர்கள், சிலர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள விரும்பும் போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும் போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகின்றதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.

4683 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள் எனும் (11:5ஆவது) இறைவசனத்தை (பிரபல ஓத-ன்படி) அலா இன்னஹும் யஸ்னூன ஸுதூரஹும் என்றே ஓதினார்கள்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களல்லாத மற்ற சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அறிவிக்கின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யஸ்தஃக்ஷூன எனும் சொல்லுக்கு அவர்கள் தங்கள் தலைகளை மூடிக் கொள்கிறார்கள் என்று பொருள்.

(11:77ஆவது வசனத்தின் மூலத்திலள்ள) சீஅ பிஹிம் என்பதற்கு லூத் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரைக் குறித்த நல்லெண்ணத்தை இழந்தார்கள் என்று பொருள். ளாக்க பிஹிம் என்பதற்குத் தம் விருந்தினர்களைக் குறித்து (அவர்களைத் தம் தீய செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தம்

 

4ன அந்நிஸா அத்தியாயம்1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(4:172ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள யஸ்தன்கிஃப் (குறைவாக/இழிவாகக் கருதுகிறார்) எனும் சொல்லுக்கு (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்து) அகந்தை கொள்கிறார் என்று பொருள்.

(4:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கிவா(யா)ம் (ஆதாரமான/அடிப்படையான) எனும் சொல்லுக்கு உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான என்று பொருள்.

(4:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லஹுன்ன சபீலா (அவர்களுக்கு ஒரு வழியை) எனும் சொற்றொடரில் உள்ள சபீல் (வழி) என்பது, (விபசாரம் செய்த) கன்னி கழிந்த பெண்ணைக் கல்லெறிந்து கொல்வதையும், கன்னிப்பெண்ணுக்கு (நூறு) கசையடி வழங்குவதையும் குறிக்கிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதவர்கள் கூறுகின்றனர்:

(4:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) மஸ்னா, வ ஸுலாஸ, வ ருபாஅ எனும் சொற்களுக்கு இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக என்று பொருள். ருபாஉ (நான்கு நான்காக) என்பதைத் தாண்டி (குமாஸ் - ஐந்து ஐந்தாக, சுதாஸ்-ஆறு ஆறாக என்றெல்லாம்) அரபுகள் சொல்வதில்லை.

சமுதாயத்தார் முயல்வார்களோ எனும்) சங்கடம் லூத் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது என்று பொருள்.

(11:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பிகித்இம் மினல் லைல் என்பதற்கு இரவின் இருட்டு இருக்கும்போதே என்று பொருள்.

(11:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இலைஹி உனீப் எனும் வாக்கியத்திற்கு அவன் பக்கமே நான் திரும்புகிறேன் என்று பொருள்.

பாடம் : 2

(அப்போது) அவனது அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது எனும் (11:7ஆவது) வசனத் தொடர்.

4684 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வ-வும் உயர்வும் கொண்ட அல்லாஹ், நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவுசெய்வேன் என்று சொன்னான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவ தில்லை. அது இரவிலும் பக-லும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக் கின்றது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனது கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்து விடவில்லை பார்த்தீர்களா! (வானங் களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனது கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; உயர்த்துகின்றான்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(11:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஉதராக்க எனும் சொல் அரவ்த்துஹு எனும் (வினைச்) சொல்லிலிருந்து இஃப்த அல்த்த எனும் வாய்பாட்டு வினை

யெச்சத்தில் அமைந்துள்ளது. அரவ்த்துஹு என்பதற்குஅவனுக்கு நான் கேடு உண்டாக்கி னேன் என்று பொருள். இ(ந்த மூலத்)திலிருந்து தான் யஉரூஹு (அவனுக்குப் பாதிப்பை உண்டாக்குவான்), இஉதரானீ (எனக்கு அவன் பாதிப்பை உண்டாக்கினான்) ஆகிய வினைச்சொற்கள் பிறந்தன.

ஒவ்வோர் உயிரினத்தின் குடுமியும் அவனது பிடியிலேயே இருக்கிறது எனும் (11:56ஆவது) வசனத்தின் கருத்தாவது: அவனது ஆட்சியதிகாரத்திலேயே உள்ளது.

(11:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அநீத் எனும் சொல்லும் (அதே போன்ற) அநூத், ஆநித் ஆகிய சொற்களும் (இறுக்க மான பிடிவாதக்காரன் என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(11:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யகூலுல் அஷ்ஹாத் (சாட்சியாளர்கள் கூறுவர்) என்பதன் ஒருமை ஷாஹித்; அஸ்ஹாப் என்பதன் ஒருமை ஸாஹிப் (நண்பன்) என்பதைப் போல.

(11:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஸ்தஉமரக்கும் எனும் சொல்லுக்கு உங்களை (அதில்) வசிப்பவர்களாக ஆக்கினான் என்று பொருள். இதே வகையைச் சேர்ந்ததே அஉமர்த்துஹுத் தார என்பதும். இதன் பொருள்: அவனுக்கு இவ்வீட்டை (அவன் வாழ்நாள் முழுவதும்) உடைமை யாக்கிக் கொடுத்தேன்.

(11:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நகிரஹும் எனும் சொல்லும், (அதே போன்ற) அன்கரஹும், இஸ்தன்கரஹும் ஆகிய சொற்களும் (அவர்களைப்பற்றிச் சந்தேகம் கொண்டார் என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(11:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹமீதுன் மஜீத் என்பதில் மஜீத் (மாட்சிமை மிகுந்தவன்) எனும் சொல் மாஜித் எனும் (வினையாலணையும் பெயர்ச்) சொல்லில் இருந்து ஃபஈல் எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும். ஹமீத் (புகழுக்குரியவன்) எனும் சொல் ஹமித எனும் (வினைச்) சொல்லிலிருந்து செயப்பாட்டு எச்சவினையின் (மஹ்மூத்) பொருள் கொண்டதாகும்.

(11:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சிஜ்ஜீல் எனும் சொல்லுக்குக் கெட்டியான, பெரிய என்று பொருள். சிஜ்ஜீல், சிஜ்ஜீன் இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இச்சொற்களின் இறுதியிலுள்ள) லாம், நூன் ஆகிய எழுத்துகள் (உச்சரிப்பில்) நெருக்கமானவையாகும்.

(கவிஞர்) தமீம் பின் முக்பில் கூறினார்:

எத்தனையோ காலாட் படையினர் முற்பகல் வேளையில் தலைக் கவசங்களில் மிகக் கடுமையாகத் தாக்கிவிடுகின்றனர்;

(அது சாதாரணத் தாக்குதல் அல்ல! அதை) மாபெரும் வீரர்கள் கூட தமது இறுதி உபதேசத்தில் குறிப்பிடுவர்.3

பாடம் : 3

மத்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக நியமித்தோம்.) (எனும் 11:84ஆவது வசனத் தொடர்.)

அதாவது மத்யன்வாசிகளுக்கு (நாம் நியமித்தோம்) என்று பொருள். ஏனென்றால், மத்யன் என்பது ஓர் ஊராகும்.

இதைப் போன்றுதான் (12:82ஆவது வசனத்திலுள்ள) அந்த ஊரைக் கேளுங்கள்; அந்த ஓட்டகக் கூட்டத்தைக் கேளுங்கள் என்பதற்கு அந்த ஊர்வாசிகளையும் ஒட்டகக் கூட்டத்தினரையும் (கேளுங்கள்) என்று பொருள்.

(11:92ஆவது வசனத்திலுள்ள) நீங்கள் அவனைப் புறக்கணித்து விட்டீர்கள் என்பதற்கு இறைவனின் பக்கம் நீங்கள் திரும்ப வில்லை என ஷுஐப் (அலை) அவர்கள் (அந்த மத்யன்வாசிகளிடம்) சொன்னார்கள் என்று பொருள்.

(இதன் மூலத்திலுள்ள ழிஹ்ரிய்யு என்பதற்கு முதுகுக்கப்பால் என்று பொருள். பொதுவாக) ஒரு மனிதன் தன் தேவை நிறைவேறாத போது ழஹர்த்த பி ஹாஜத்தீ (என் தேவையைப் புறக்கணித்து விட்டாய்) என்றும், வ ஜஅல்த்தனீ ழிஹ்ரிய்யன் (என்னை முதுகுக்கப்பால் ஆக்கிவிட்டாய்) என்றும் கூறுவதுண்டு. ஒரு வாகனப் பிராணியை, அல்லது ஒரு பையை உதவிக்காக உடன் எடுத்துச் செல்வதற்கும் ழிஹ்ரிய்யு என்பர்.

(11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அராஃதில் எனும் சொல்லுக்குத் தரம் தாழ்ந்தோர் என்று பொருள்.

(11:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஜ்ராமீ (என் குற்றம்) என்பது அஜ்ரம்த்து எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லா கும். ஜரம்த்து எனும் (வினைச்) சொல்(-ன் வேர்ச் சொல்) என்றும் சிலர் கூறுகின்றனர்.

(11:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல் ஃபுல்க் எனும் சொல்லே ஒருமைக்கும் பன்மைக்கும் உரியதாகும். பொருள்: மரக் கலம், மரக்கலங்கள்.

(11:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஜ்ராஹா எனும் சொல்லுக்கு அது ஓடுகின்றபோது என்று பொருள். இச்சொல் அஜ்ரைத்து எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லாகும். ளஇதிலுள்ள முர்ஸாஹா (நிறுத்தும் போது) எனும் சொல்ன அர்ஸைத்து எனும் (வினைச்) சொல்லின் (வேர்ச் சொல்லா கும். இதன்) பொருள்: நிறுத்தினேன்.

(இதே சொல் இன்னோர் ஓதல் முறையில்) மர்ஸாஹா என்றும் ஓதப்படுகிறது. (இப்போது அச்சொல்) ரஸத் ஹிய (அது அசையாமல் நின்றது) என்ற வினைச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும் மஜ்ராஹா என்பது ஜரத் ஹிய (அது ஓடியது) என்பதிலிருந்து பிரிந்ததாகும்.

முஜ்ரீஹா, முர்ஸீஹா எனும் சொற்கள், செயப்பாட்டு வினைச் சொற்களாகும்.

அர் ராஸியாத் எனும் சொல்லுக்கு அசையாத என்று பொருள்.4

பாடம் : 4

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிடக் கொடிய அக்கிரமக் காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவ னின் திருமுன் கொண்டுவரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் இவர்கள்தாம் தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்து ரைத்தவர்கள் என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் எனும் (11:18ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அஷ்ஹாத் (சாட்சியாளர்கள்) எனும் சொல்லின் ஒருமை ஷாஹித் என்பதாகும். இது (வாய்பாட்டில்) ஸாஹிப், அஸ்ஹாப் (தோழர்கள்) போன்றதாகும்.

4685 ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, அபூ அப்திர்ரஹ்மானே! அல்லது இப்னு உமரே! (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள் ளீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார். அல்லது இறை நம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்து விடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக் கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்(று கேட்)பான். அவர், (ஆம்) அறிவேன். என் இறைவா! என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகின்றேன் என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும். மற்றவர்கள் அல்லது இறை மறுப்பாளர்கள் சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, இவர்கள்தாம், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந் துரைத்தவர்கள் என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.5

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 5

மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித் தானிருக்கும். திண்ணமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானது மாகும் எனும் (11:102ஆவது) இறைவசனம்.

(11:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர் ரிஃப்த் எனும் சொல்லுக்கு உதவி என்று பொருள். அல் மர்ஃபூத் எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள். (அதன் இறந்த கால வினைச் சொல்லான) ரஃபத்துஹு எனும் சொல்லுக்கு அவனுக்கு நான் உதவிபுரிந்தேன் என்று பொருள்.

(11:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தர்கனூ எனும் சொல்லுக்குச் சாய்ந்து விடுதல் என்று பொருள்.

(11:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப லவ் லா கான எனும் சொற்றொடருக்கு இருந்திருக்க வேண்டாமா என்று பொருள். உத்ரிஃபூ (ஆசாபாசங்களைப் பின்பற்றி) அழிந்து போயினர் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(11:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃபீர் எனும் சொல்லுக்குக் கடுமையான (கூச்சல்) என்று பொருள். ஷஹீக் எனும் சொல்லுக்குப் பலவீனமான குரல் என்று பொருள்.

4686 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்து விட்டால் அவனை விடவே மாட்டான் என்று கூறிவிட்டு, பிறகு,மேலும் அக்கிரமம் புரிந்து கொண் டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். திண்ணமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும் எனும் (19:102 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பாடம் : 6

பக-ன் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும் எனும் (11:114 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுலஃப் எனும் சொல்லுக்கு ஒரு நேரத்திற்குப்பின் ஒரு நேரம் என்று பொருள். ஸுலஃப் எனும் சொல்லிலிருந்து தான் அல் முஸ்த-ஃபா (இரவில் சிறிது நேரம் மக்கள் கூடுமிடம்) என்ற பெயர் (மக்காவிலுள்ள ஓரிடத்திற்கு) வந்தது.

அஸ்ஸுலஃப் எனும் இச்சொல்லுக்கு ஒரு நிலைக்குப்பின் ஒரு நிலை என்ற பொருளும் உண்டு. (38:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுல்ஃபா என்பது நெருக்கம் என்ற பொருள் கொண்ட வேர்ச் சொல்லாகும். இஸ்தலஃபூ எனும் சொல்லுக்கு ஒன்று கூடினர் என்று பொருள். (26:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்லஃப்னா எனும் சொல்லுக்கு நாம் ஒன்று கூட்டினோம் என்று பொருள்.

4687 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது பக-ன் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும் எனும் (11:114ஆவது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான் என்று பதிலளித்தார்கள்.6

02.11.2009. 04:10

65-திருக்குர்ஆன் விளக்கவுரை9

பாடம் : 1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(10:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபக்த்தலத்த (அது கலந்தது) என்பதன் கருத்தாவது: அந்த (மழை) நீரினால் பல்வேறு நிறங்களில் (மனிதனும் மிருகமும் புசிக்கின்ற புற்பூண்டுகளாக) முளைத்தன.

(அல்லாஹ் கூறுகின்றான்:) அல்லாஹ்வுக்கு சந்ததி உண்டென்று அவர்கள் கூறுகின் றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததி முத-யவற்றின்) தேவையற்றவன். (10:68)

ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(10:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கதம ஸித்கின் எனும் சொல் முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கிறது.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(கதம ஸித்கின் எனும்) இச்சொல்லுக்கு, (முன்னேற்பாடாகச் செய்த) நன்மை என்று பொருள்.

(10:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தில்க்க ஆயாத் (இவை இவ்வேதத்தின் வசனங்களாகும்) எனும் வாக்கியத்திற்கு இவை இவ்வேதத்தின் குறியீடுகளாகும் என்று பொருள்.2

இதைப் போன்றே (10:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜரைன பிஹிம் (அவர்களை நடத்திச் சென்றது) என்பதற்கு பிக்கும் (உங்களை நடத்திச் சென்றது) என்று பொருள்.

(10:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஅவாஹும் எனும் சொல்லுக்கு அவர்களது பிரார்த்தனை என்று பொருள்.

(10:22ஆவது வசனத்தில்) நிச்சயமாக நாம் (அலைகளால் நாலாபக்கங்களிலிருந்தும்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம் என்பதற்கு அழிவை நெருங்கிவிட்டோம் என்று பொருள். (அல்லாஹ் கூறுகின்றான்:) அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது (2:81)

(10:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபஅத்பஅஹும் எனும் சொல்லும் (அதே வேர்ச் சொல்லில் இருந்து வந்த) ஃபத்தபஅ ஹும் எனும் சொல்லும் (அவர்களைப் பின்தொடர்ந்தனர் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) அத்வ் எனும் சொல் உத்வான் (வரம்பு மீறல்) எனும் சொல் வகையைச் சேர்ந்ததாகும்.

முஜாஹித் ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

மனிதர்கள் நன்மையைப் பெற அவசரப்படுவதைப் போல், (அவர்கள் அவசரப்பட்டுக் கோரும்) தீமையை அல்லாஹ் அவர்களுக்கு அவசரமாக வழங்கினால், அவர்களின் ஆயுள் அவர்களுக்கு (என்றோ) முடிக்கப்பட்டிருக்கும் எனும் (10:11ஆவது) வசனத்தின் கருத்தாவது: மனிதன் கோபப்படுகின்றபோது தன் குழந்தை மற்றும் தன் செல்வத்தைப் பார்த்து அல்லாஹ்வின் சாபம் இதன் மீது உண்டாகட்டும்! இதில் வளம் (பரக்கத்) இல்லாமல் போகட் டும்! என்று பிரார்த்திக்க, அதை அல்லாஹ் அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தினால், யாருக்கெதிராக இது கூறப்பட்டதோ அவர் (உடனுக்குடன்) அழிக்கப்பட்டிருப்பார்; அவரை அல்லாஹ் இறக்கச் செய்திருப்பான்.

நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும் எனும் (10:26ஆவது) வசனத்தின் கருத்தாவது: நன்மை செய்தவர்களுக்கு அதுபோன்ற நன்மையும், அதைவிடக் கூடுதலாகப் பாவமன்னிப்பும் கிடைக்கும்.

மற்றவர்கள் கூறுகிறார்கள்: அதைவிடக் கூடுதலாக அல்லாஹ்வின் தரிசனமும் கிடைக்கும்.

(10:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்கிப்ரியாஉ எனும் சொல், ஆட்சியதி காரத்தைக் குறிக்கும்.

பாடம் : 2

மேலும், நாம் இஸ்ராயீ-ன் வழித் தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர் அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர் அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கிய போது இஸ்ராயீ-ன் வழித் தோன்றல்கள் எந்த இறைவன்மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும், (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன் என்று கூறினான் (எனும் 10:90ஆவது இறைவசனம்).

(10:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுன்ஜீக்க (அல்லது நுனஜ்ஜீக்க) எனும் சொல்லுக்கு உன்னை (பூமியின்) மேடான ஓரிடத்தில் எறிவோம் என்று பொருள்.

4680 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாள்) நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், இது மூசா (அலை) அவர்கள் ஃபிர் அவ்னை வெற்றி கொண்ட நாள் என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் களிடம், (யூதர்களான) இவர்களைவிட மூசா (அலை) அவர்களுக்கு நீங்கள்தாம் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக! என்று சொன்னார்கள்.3

02.11.2009. 04:09

65-திருக்குர்ஆன் விளக்கவுரை8

பாடம் : 1

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குவோரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர் களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் எனும் (9:1ஆவது) இறைவசனம்.

(9:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதான் எனும் சொல்லுக்கு அறிவிப்பு என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(9:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உதுனு (யுஃமினு) எனும் சொற்றொடருக்கு (அல்லாஹ்வை) உண்மை என நம்பும் செவி என்று பொருள்.

(9:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள தூய்மைப்படுத்துகின்ற எனும் ஒரே பொருள் கொண்ட) துதஹ்ஹிருஹும் மற்றும் துஸக்கீஹிம் போன்ற இரு சொற்களைப் பயன்படுத்துவது (அரபுகள் வழக்கில்) மிகுதி யாக உண்டு.

(துஸக்கீஹிம் என்பதன் வேர்ச் சொல்லான) ஸகாத் எனும் சொல்லுக்குக் கீழ்ப்படிதல்; மனத் தூய்மை ஆகிய பொருள்கள் உண்டு.

(இதே ஸகாத் எனும் சொல் இடம் பெற்றுள்ள 41:7ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) லாயுஃத்தூனஸ் ஸகாத்த (ஸகாத் வழங்காதவர்கள்) என்பதன் கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவ ருமில்லை என்று உறுதி கூறாதவர்கள்.

(9:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள யுளாஹிஊன எனும் சொல்லின் மற்றோர் ஓதல் முறையான) யுளாஹுன எனும் சொல் லுக்கு ஒத்திருக்கிறார்கள் என்று பொருள்.

4654 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) உங்களிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்து விடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அல்லாஹ் அத்தகையவர்கள் குறித்து உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீங்கள் கூறுங்கள் எனும் (4:17ஆவது) இறை வசனம்தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.

(9ஆவது அத்தியாயமான) பராஅத் (அத்தவ்பா) அத்தியாயமே கடைசியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2

பாடம் : 2

ஆகவே, (இணைவைப்பவர்களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) சுற்றித் திரியுங்கள். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர்களை இழிவுபடுத்து வான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் எனும் (9:2ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) சீஹூ எனும் சொல்லுக்குச் சுற்றித் திரியுங்கள் என்று பொருள்.

4655 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளஅபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் ஹஜ்ஜத்துல் வதாவிற்கு முந்தைய ஆண்டு நடந்தன அந்த ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த ஆண்டிற்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்ய(வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ளஅபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்ன அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பா ளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய துதரும்) விலகிக் கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளன்று மினாவாசிகளிடையே (இணைவைப்போரிட மிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக் கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்ய மாட்டார் என்றும், இறையில் லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.3

பாடம் : 3

மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொதுஅறிவிப்பு என்னவெனில், இறைவ னுக்கு இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் திண்ணமாக விலகிவிட்டார்கள். ஆகவே, (இறைமறுப்பிலிருந்தும் ஒப்பந்த மீற-லிருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத் தான் நல்லது. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான தண்டனை உண்டெனும் நற்செய்தியை இறை மறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக எனும் (9:3ஆவது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) அதான் எனும் சொல்லுக்கு அறிவிப்பு என்று பொருள்.

4656 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின் போது துல்ஹஜ் மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாண மானவர் எவரும் சுற்றி வரக்கூடாது என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் ளஅபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்ன அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணை வைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக் கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.

ஆகவே, எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளன்று மினாவாசிகளிடையே (இணைவைப்போரிட மிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக் கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக்கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.4

பாடம் : 4

...ஆயினும், இணைவைப்பாளர்களில் எவருடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது உடன் படிக்கையை நிறைவேற்றுவதில்) உங்களுக்கு எந்தக் குறைபாடும் வைக்காமலும் உங்க ளுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக் கின்றார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு (எனும் 9:4ஆவது இறைவசனம்).

4657 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது என்றும், நிர்வாண மானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக் கூடாது என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பி வைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹுமைத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில் (துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும் என்று சொல்லிவந்தார்கள்.

பாடம் : 5

(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களது மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர் களோடு போர் புரியுங்கள். ஏனென்றால், அவர்களுக்கு சத்தியங்கள் (என்பதெல்லாம்) கிடையாது. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்க ளிலிருந்து) ஒதுங்கியிருக்கக் கூடும் (எனும் 9:12ஆவது இறைவசனம்).

4658 ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், இந்த இறைவசனத்தில் (9:12) குறிப்பிடப்பட்டுள்ள(இறைமறுப்பாளர் களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்க வில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை என்று கூறினார்கள்.5 அப்போது கிராமவாசி ஒருவர், முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர் தரமான பொருள்களைத் திருடிச் செல்கின்ற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே என்று கேட்டார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், அவர்கள் பாவிகளே! (இறைமறுப்பாளர் களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவிற்கு முதியவ ரென்றால்,) குளிர்ந்த நீரைப் பருகினால்கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது என்று கூறினார்கள்.

பாடம் : 6

எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் நற்செய்தியினை (நபியே!) நீர் அறிவிப்பீராக எனும் (9:34ஆவது) வசனத் தொடர்.

4659 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களது கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

 

 

4660 ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள)ரபதா எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரண மென்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் ஷாம் நாட்டில் இருந்தோம். அப்போது நான், எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் நற்செய்தியினை (நபியே!) நீர் அறிவிப்பீராக எனும் (9:34ஆவது) இறைவசனத்தை ஓதினேன். அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா (ரலி) அவர்கள், இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்கள் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத் தான்) அருளப்பட்டது என்று சொன்னார்கள். நான், இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிக்கை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன் என பதிலளித்தார்கள்.7

பாடம் : 7

(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரகநெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடுபோடப்படும். இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் சுவையுங்கள் (என்று சொல்லப்படும்) எனும் (9:35ஆவது) இறைவசனம்.

4661 கா-த் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென் றோம். அப்(பயணத்தின்) போது அவர்கள், (3:95ஆவது இறைவசனத்தைப் பற்றி) இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப் பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப்படுத்தக் கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான் என்று கூறினார்கள்.8

பாடம் : 8

உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங் களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவாகும். இது தான் சரியான நெறிமுறையாகும் எனும் (9:36ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அல்கய்யிம் எனும் சொல்லுக்கு நிலையான என்று பொருள்.

4662 (ஹஜ்ஜத்துல் வதாவில் உரையாற்றிய போது) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர்புரிவது விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ் ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ரஜப் மாதம் ஆகும்.9

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 9

அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிட மிருந்து மன அமைதியை அருளினான் எனும் (9:40ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சகீனா (மனஅமைதி) எனும் சொல் சுகூன் எனும் வேர்ச் சொல்லிலிருந்து ஃபஈலா எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.

4663 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) நபி (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர் எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவானே! என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்? என்று கேட்டார்கள்.10

4664 இப்னு அபீ முலைக்கா

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்ட போது நான் ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,ன இப்னு ஸுபைருடைய தந்தை ஸுபைர் (ரலி) அவர் களும், அவர்களுடைய தாயார் அஸ்மா (ரலி) அவர்களும், அவர்களுடைய சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டி ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஆயிற்றே! ளஇத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக் கூடாது? என்று கேட்டேன்.11

4665 இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குமிடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் காலையில் சென்று, நீங்கள் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும்தாம் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கின்றவர்களாக அல்லாஹ் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் (என்னிடம்) இப்னு ஸுபைர் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். நான், இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவருடைய தந்தையோ நபி (ஸல்) அவர்களின் பிரத்தியேக உதவியாளரா வார். -ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர் களையே குறிப்பிடுகிறார்கள்- அவருடைய பாட்டனாரோ ளநபி (ஸல்) அவர்களின்ன குகைத்தோழர் ஆவார். -அபூபக்ர் (ரலி) அவர் களையே குறிப்பிடுகிறார்கள்- அவருடைய தாயாரோ கச்சுடையாள் ளஎன்று நபி (ஸல்) அவர்களால் பட்டப் பெயர் சூட்டப்பெற்ற வர்ன ஆவார். -அஸ்மா (ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்- அவர்களுடைய சிறிய தாயாரோ இறை நம்பிக்கையாளர்களின் அன்னையாவார். -ஆயிஷா (ரலி) அவர் களையே குறிப்பிடுகிறார்கள்- அவர்களுடைய அத்தையோ நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார். -கதீஜா (ரலி) அவர் களையே குறிப்பிடுகிறார்கள்.- நபி (ஸல்) அவர்களின் அத்தையோ அவருடைய பாட்டியாவார். -ஸஃபிய்யா (ரலி) அவர் களையே குறிப்பிடுகிறார்கள்- மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி தவறாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தினால் உறவாடுகிறார்கள்.12 எனக்கு அவர்கள் ஆட்சியாளர்களானால் அதற்குத் தகுதியுடை யோராயும் சிறந்த பாரம்பரியமுடையோரா யுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியி ருந்தும் நான் அவர்களைத் கைவிட்டு, இப்னு ஸுபைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதிபூண்டேன். ஆனால்) அவரோ துவைத்களுக்கும், உசாமாக்களுக்கும், ஹுமைதாக்களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்து விட்டார். (இப்னு ஸுபைருடைய குலத்தினரான) பனூ அஸத் குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடு கின்றார்கள்.13 இப்னு அபில் ஆஸ் -அப்துல் ம-க் பின் மர்வான்- அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ -இப்னு ஸுபைரோ- பின்னடைவுக்கு ஆளாகிவிட்டார்.

4666 இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேரவேண்டு மென்று) இப்னு ஸுபைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படைய வில்லையா? நான் இப்னு ஸுபைருக்காக (அவருக்கு ஆதரவு கொடுப்பதா வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவிற்கு) நான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்காகவோ உமர் (ரலி) அவர்களுக்காகவோ வாதாடியதில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸுபைரைவிட அனைத்து நன்மைகளுக்கும் தகுதிவாய்ந் தோராய் இருந்தனர் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன்.

இப்னு ஸுபைர் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூபக்ர் (ரலி) அவர் களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸுபைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) உடைய புதல்வரும் ஆவார் என்று (மக்களிடம்) கூறினேன். ஆனால், இப்னு ஸுபைரோ, தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு என்னை விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

மேலும், நானாக முன்வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தால் அதனை அவர் ஏற்கவே செய்வார் என்றே நான் கருதியிருந்தேன். (இனியும் எனக்கு) அவர் நன்மை ஏதேனும் செய்வார் என்று நான் கருதவில்லை. (அப்படி) அவர் (தன் நிலையில்) உறுதியாக இருப்பாரென்றால், (பனூ உமய்யா) என் மீது ஆட்சிசெலுத்துவதே மற்றவர்கள் (பனூ அஸத்) என் மீது ஆட்சிசெலுத்துவதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும் என்று நான் எண்ணிக் கொண்டேன்.

பாடம் : 10

உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக் கும் (ஸகாத் எனும் தானம் உரியதாகும்) எனும் (9:60ஆவது) வசனத் தொடர்.

நன்கொடை மூலம் மக்களை ஈர்ப்பவர் களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

4667 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும் இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்க மாக்குகிறேன் என்று சொன்னார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒரு மனிதர் நீங்கள் நீதி செய்யவில்லை என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உட-லிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகின்ற கூட்டத்தினர் தோன்றுவர் என்று கூறினார்கள்.14

பாடம் : 11

(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகை யோரென்றால், இறை நம்பிக்கையாளர் களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசு கின்றார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு எனும் (9:79ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யல்மிஸூன எனும் சொல்லுக்குக் குறை பேசுகிறார்கள் என்று பொருள்.

ஜுஹ்தஹும் என்பதற்கு அவர்களால் முடிந்ததை-சக்திக்குட்பட்டதை என்று பொருள்.

4668 அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது நாங்கள் கூலிவேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்று (குறை) சொன்னார்கள். அப்போது தான் (நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறை வழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.15

4669 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்)அவர்கள்கூறியதாவது:

அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் தர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரு கையளவு (தானியம் தர்மமாகக்) கொண்டு வருவதற்குக் கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார்/திர்ஹம்) உள்ளது என்று- தம்மைப் பற்றியே குறிப்பிடு வதைப் போன்று- கூறினார்கள்.16

 

 

பாடம் : 12

(நபியே!) இந்த நயவஞ்சகர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது பாவமன்னிப்புக் கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) எழுபது தடவை இவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான். ஏனென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இவர்கள் மறுத்து விட்டார்கள். பாவம் புரியும் மக்களை அல்லாஹ் நேர்வழியில் சேர்ப்பதில்லை எனும் (9:80ஆவது) இறைவசனம்.

4670 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடு வதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள்.17 நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைவித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான் என்று கூறிவிட்டு, (நபியே!) நீங்கள் அவர்களுக்காப் பாவ மன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோரா மலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், இவர் நயவஞ்சக ராயிற்றே! என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்கவேண்டாம் எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.18

4671 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்து விட்ட போது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்த போது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, அல்லாஹ்வின் தூதரே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகின்றீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படி யெல்லாம் சொன்னாரே! என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைபுரிந்து விட்டு, ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே! என்று சொன்னார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், இவருக்காகப் பாவமன்னிப்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந் தெடுத்துக் கொண்டேன்.) நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவரு மாயின் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுவித்து விட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் பராஅத் (9ஆவது) அத்தியாத்திலிருந்து அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள் எனும் (9:84, 85 ஆகிய) இரு வசனங்கள் அருளப்பெற்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.

பாடம் : 13

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்க வேண்டாம் எனும் (9:84ஆவது) வசனத் தொடர்.

4672 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் பின் உபையை அதில் கஃபனிடும்படி உத்தரவிட் டார்கள். பிறகு அவருக்கு (ஜனாஸா)த் தொழுவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு, நயவஞ்ச கராயிருந்த இவருக்கு நீங்கள் தொழுவிக் கிறீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம் அல்லது கோரமலும் இருக்கலாம் என்று) எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்து கொள்ள அனுமதியளித்துள்ளான் அல்லது அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான் என்று கூறி, (நபியே!) நீங்கள் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கேராமல் இருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர் களுக்காக நீங்கள் எழுபது முறை பாவ மன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் எனும் (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காக அல்லாஹ் விடம்) பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவருக்கு (ஜனாஸா)த் தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ் அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென் றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள் எனும் (9:84ஆவது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான்.

பாடம் : 14

நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும் போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டி ருந்த(தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனா கும் எனும் (9:95ஆவது) இறைவசனம்.

4673 அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை நான் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்து கொள்ளாதது குறித்து வினவிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர் களைப் போல) பொய்யுரைக்காமல் உண்மை பேசியது தான் . அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போல நானும் அழிந்து போயிருப்பேன். நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும் போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னி லையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த(தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்கள் மீது ஒரு போதும் திருப்திகொள்ள மாட்டான் எனும் வசனங்கள் (9:95, 96) அருளப்பெற்ற போது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்.19

பாடம்

நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்கள் மீது ஒரு போதும் திருப்தி கொள்ள மாட்டான் எனும் (9:96ஆவது) இறைவசனம்.20

பாடம் : 15

மேலும், தம் குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலுடன் தீயசெயலையும் கலந்து விட்டிருக்கின் றார்கள். (ஆயினும்,) அல்லாஹ் அவர்(களின் குற்றங்)களை மன்னித்து விடலாம். நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான் (எனும் 9:102 ஆவது இறைவசனம்).

4674 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

இன்றிரவு என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்து என்னை (தூக்கத்திலிருந்து) எழுப்பி (அழைத்து)ச் சென்றார்கள். அவர்கள் இருவரும் தங்கச் செங்கல்லாலும் வெள்ளிச் செங்கல்லாலும் கட்டப்பெற்றிருந்த ஒரு நகரத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது எங்களைச் சில மனிதர்கள் எதிர் கொண்டார்கள். அவர்களின் உடலமைப்பில் பாதி நீ பார்த்த திலேயே மிக அழகானதாயும், மற்றொரு பாதி நீ பார்த்ததிலேயே மிக அருவருப்பானதாயும் இருந்தது. அ(ந்த வான)வர்கள் இருவரும் அந்த மனிதர்களிடம், நீங்கள் சென்று அந்த ஆற்றில் விழுங்கள் என்று கூற அவர்களும் அவ்வாறே அதில் விழுந்தனர். பிறகு எங்களிடம் திரும்பி வந்தனர். (அதற்குள்) அந்த அருவருப்பான தோற்றம் அவர்களை விட்டுச் சென்றுவிட்டிருந்தது. அவர்கள் மிக அழகான தோற்றமுடையவர்களாக மாறி விட்டிருந்தனர். (என்னை அழைத்துச் சென்ற) அந்த இருவரும் என்னிடம் இது தான் அத்ன் எனும் சொர்க்கம். இது தான் உங்கள் தங்குமிடம் என்று கூறிவிட்டு பிறகு, பாதி (தோற்றம்) அழகானதாயும் பாதி (தோற்றம்) அருவருப்பானதாயும் இருந்தவர்கள் (உலக வாழ்வில்) நற்செயலையும் வேறு தீய செயலையும் கலந்து விட்டவர்கள். அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான் என்று (விளக்கம்) சொன்னார்கள்.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 16

இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகி விட்ட பின்னர் - அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் நம்பிக்கையாளர்களுக் கும் உரிமையில்லை எனும் (9:113ஆவது) இறைவசனம்.

4675 முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தைன அபூதா-புக்கு மரணவேளை வந்த போது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, என் பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன் என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உமய்யாவும், அபூதா-பே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்த-ப் அவர் களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது தான் , இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரக வாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகி விட்ட பின்னரும்- அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் கூட- அவர் களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை எனும் (9:113 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.21

பாடம் : 17

திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்கள் மீதும் (அருள்புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவி னருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டி ருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான் எனும் (9:117 ஆவது) இறைவசனம்.

4676 அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அந்திமக் காலத்தில்) கண் பார்வையற்றிருந்த போது அவர்களைக் கைப் பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்த அன்னாருடைய புதல்வரான (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் தாம் கலந்து கொள்ளாததைப் பற்றிய) தம் செய்தியை விவரித்த போது எவரது விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அவர்களது குற்றத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று தொடங்கும் (9:118ஆவது) இறைவசனம் குறித்துச் சொன்னவற்றை நான் செவியுற்றேன்.

கஅப் (ரலி) அவர்கள் தமது பேச்சின் இறுதியில் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதரே!) என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான (எனது) உரிமையை விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்து விடுகிறேன் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது என்று சொன்னார்கள்.22

பாடம் : 18

மேலும், எவரது விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்ததோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகிவிட்டிருந்ததெனில்) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகிவிட்டி ருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புக-டம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனு மாயிருக்கிறான் (எனும் 9:118ஆவது இறை வசனம்).

4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்உஸ்ரா (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பக-ல் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற் கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும் போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முத-ல் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப் படி அன்றும் தொழுது விட்டு, தபூக் போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களி டமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்து விட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்து விடு வார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போது தான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்த போது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முசலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்முசலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக் கட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்து விட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்து விடுவார்கள்என்றார்கள்.

ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். -நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும் போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்து விட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்கு களைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமை யாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

(நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒரு போதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட் டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப் படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)23

பாடம் : 19

இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்க ளுடன் இருங்கள் (எனும் 9:119ஆவது இறை வசனம்).

4678 அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்து விட்ட செய்தியை அறிவித்த போது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்:

அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்த தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இந்த நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்:

திண்ணமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்கள் மீதும் (அருள்புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண் டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.

மேலும் எவரது விவகாரத்தில்

தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகிவிட்டிருந்ததெனில்,) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர் களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகி விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விட மிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புக-டம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அல்லாஹ்தான் மிக மன்னிப் போனும், கருணையுடையோனுமாயிருக் கிறான். இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (9:117-119)

பாடம் : 20

உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார் எனும் (9:128ஆவது) இறைவசனம்.

4679 ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி) -அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார்- அவர்கள் கூறியதாவது:

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரச் சொன்)னார்கள்.24 (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப் பாளர்களுடன் போர்நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராள மான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென நான் கருதுகின்றேன் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்? என்று உமர் அவர் களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான் என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வ-யுறுத்திக் கொண்டேயி ருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் கூறிய போது) உமர் (ரலி) அவர்கள் (ஏதும்) பேசாமல் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

(பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) நீங்கள் புத்திசா-யான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள்.25

அல்லாஹ்வின் மீதாணையாக! மலை களில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள்,

அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை (யான பணி)தான் என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவ ரிடமும்) வ-யுறுத்திக் கொண்டிருந்தேன்.

முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) ஆகவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுத் தோல்கள், அகலமான எலும்புகள், பேரீச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர் களுடைய நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிய போது) அத்தவ்பா எனும் (9ஆவது) அத்தியாயத்தின் (கடைசி) இரு வசனங்களை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி) அவர்களிட மிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமி ருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.

(அவை:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடை யோராகவும் இருக்கின்றார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கின் றான். (9:128, 129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப் பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.26

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (அவ்விரு வசனங்கள்) குஸைமா (ரலி) அல்லது அபூ குஸைமா

(ரலி) அவர்களிடம் இருந்தன என (ஐயப் பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

02.11.2009. 04:08

65-திருக்குர்ஆன் விளக்கவுரை7

பாடம் : 1

திண்ணமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர் (எனும் 8:22ஆவது இறைவசனம்).

4646 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திண்ணமாக சிந்தித்துணராத செவிடர் களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ் விடத்தில் மிகவும் இழிவான விலங்குக ளாவர் எனும் (8:22ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில் பனூ அப்தித்தார் குலத்தைச் சேர்ந்த சிலர் தாம் அவர்கள் என்று சொன்னார்கள்.2

பாடம் : 2

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள். அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ண மாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படு வீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் (எனும் 8:24ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இஸ்தஜீபூ எனும் சொல்லுக்கு பதிலளியுங்கள் என்று பொருள். -மா யுஹ்யீக்கும் (உங்களுக்கு வாழ்வளிக்கின்ற) என்பதற்கு உங்களைச் சீராக்குகின்ற என்று பொருள்.

4647 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்துசென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், இறை நம்பிக்கை கொண்டவர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள் என்று கூற வில்லையா? எனக் கேட்டார்கள். பிறகு, நான் (பள்ளிவாச-லிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கி றேன் என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாச-லிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், அது அல்ஹம்து -ல்லாஹி ரப்பில் ஆலமீன் எனும் (அல்ஃபாத்திஹா அத்தியா யத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தாம் என்று சொன்னார்கள்.3

இதே ஹதீஸை நபித் தோழர் அபூசயீத் பின் முஅல்லா (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று வேறு அறிவிப்பாளர்களும் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

 மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதையும் (நபியே!) நினைத்துப் பாருங்கள்: இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம்தான் என்றிருப்பின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா! எனும் (8:32 ஆவது) இறைவசனம்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

குர்ஆனில் அல்லாஹ் மத்தர் எனக் குறிப்பிட்டிருப்பது (பெரும்பாலும்) வேதனை யையே குறிக்கும். (மழையைக் குறிக்காது.) மழையைக் குறிக்க அரபுகள் அல்ஃகைஸ் எனும் சொல்லையே பயன்படுத்துவர். அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னரும் அவனே மழையைப் பொழிவிக்கின்றான் எனும் (42:28ஆவது) வசனத்தில் இவ்வாறே (மழை என்பதைக் குறிக்க அல்ஃகைஸ் எனும் சொல்லே) ஆளப்பட்டுள்ளது.

4648 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல் இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்பு றுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா! என்று சொன்னான். அப்போது (நபியே!) நீர் அவர்களுக் கிடையே இருக்கும் போது அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைசெய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக் கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள் எனும் வசனங்கள் (8:33, 34) அருளப்பெற்றன.

பாடம் : 4

(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும் போது அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவ மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை எனும் (8:33ஆவது) இறைவசனம்.

4649 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா! என்று சொன்னான். அப்போது (நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும் போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவ தில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள் எனும் வசனங்கள்

(8:33, 34) அருளப்பெற்றன.

பாடம் : 5

(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகி விடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத் தொடர்).

4650 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் என்னிடம் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின் வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்க வில்லையா? என்று கேட்டார். இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்குமிடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ் வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதி வான்களை நேசிக்கின்றான் (49:9). இந் நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ள படி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்? என்றும் கேட்டார். நான், என் சகோதரர் மகனே! இந்த (49:9ஆவது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம் களில் ஒரு பிரிவினருக்குக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்து விடுவது, ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டு மென்றே கொலைசெய்து விட்டால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்து கிடப்பான். மேலும் அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும் மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார்செய்து வைத்துள் ளான் என்ற (4:93ஆவது) வசனத்திற்கு சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப் பானதாயிருக்கும் என்று கூறினேன்.4 அந்த மனிதர் (பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக் கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் (8:39) என்று அல்லாஹ் கூறுகின்றானே! என்று கேட்டார். நான், (இதை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்தி விட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) ஒரு மனிதர் தமது மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக் கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்றுவிடுவார்கள். அல்லது அவரைக் கட்டிவைத்து விடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்த போது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை என்று பதிலளித்தேன். தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும்,

அலீ (பின் அபீதா-ப்) மற்றும் உஸ்மான் (பின் அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார். நான், அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இது தான் :) உஸ்மான் (ரலி) அவர் களை அல்லாஹ்வே மன்னித்து விட்டான். ஆனால் அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனுமாவார்கள் என்று கூறினேன்.5

 ளஇதன்அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன

இப்னு உமர் (ரலி) அவர்கள் இதோ நீங்கள் காண்கின்ற இந்த இடத்தில் உள்ளது தான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா வின்) இல்லமாகும்- என்று தம் கரத்தால் சைகை செய்தவாறு- கூறினார்கள்.

4651 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), நீங்கள் (இந்த முஸ்லிம்களுக் கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், குழப்பம் (ஃபித்னா) என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களுடன் போரிட்டு வந்தார்கள். இணைவைப்பவர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக் கொள்வார் என்று பதிலளித்து விட்டு, அவர்களது போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களது போரைப் போன்று இருந்ததில்லை என்றும் கூறினார்கள்.

பாடம் : 6

நபியே! இறை நம்பிக்கையாளர்களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் (இத்தகையோர்) உங்களில் நூறு பேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள் (எனும் 8:65 ஆவது இறைவசனம்).

4652 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் எனும் (8:65ஆவது) இறைவசனம் இறங்கிய போது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண் டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது. இதையே இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் பலமுறை தெரிவித்தார்கள். அதன் பிறகு எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கின்றது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு, தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்தி விட்டான். ஆகவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேர்களை வெற்றி கொண்டுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வெற்றி கொண்டுவிடுவார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் எனும் (8:66ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. (அதன் மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.

ஒரு முறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இவ்வசனம் (8:65) குறித்துக் கூறிய போது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஈயு மான அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும் கூட நான் இது போன்றே கருதுகின்றேன் என்று கூறினார் என்றும் அதிகப்படியாக அறிவித்தார்கள்.

பாடம் : 7

எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கின் றது என்பதை அறிந்து கொண்டு தற்போது (அதனை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்தி விட்டான் எனும் (8:66ஆவது) இறைவசனம்.

4653 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்லிம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்ட போது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. ஆகவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது. அதில் அல்லாஹ், எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கின்றது என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். ஆகவே, உங்களில் (நிலை குலையாத) பொறுமை சா-கள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றிகொள்வார்கள் எனும் வசனம் (8:66) அருளப்பெற்றது. (எதிரிகளைச் சமாளிக் கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்து விட்ட போதே அதே அளவுக்கு சகிப்புத் தன்மையையும் அவன் குறைத்து விட்டான்.

02.11.2009. 04:06

65-திருக்குர்ஆன் விளக்கவுரை4

பாடம் : 1

அல்மாயிதா அத்தியாயத்தின் பதவுரை

(5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஹுரும் (இஹ்ராம் கட்டிய வர்கள்) எனும் சொல்லின் ஒருமை ஹராம் என்பதாகும்.

(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)

ஃபபிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும் என்பதற்கு அவர்கள் தம் வாக்குறுதியை முறித்து விட்ட காரணத்தால் என்று பொருள்.

(5:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்லத்தீ க(த்)தபல்லாஹு எனும் வாக்கியத்திற்கு அல்லாஹ் உங்களுக்காக அமைத்து(வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்) என்று பொருள்.

(5:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபூஅ எனும் சொல்லுக்கு நீயே சுமந்து கொண்டு என்று பொருள்.

(5:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாயிரத்துன் எனும் சொல்லுக்கு ஏதேனும் துன்பம் என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(5:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஃக்ரய்னா (ஊட்டினோம்) எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) இஃக்ராஃ என்பதற்குச் சாட்டுதல் என்று பொருள்.

(5:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உஜூரஹுன்ன எனும் சொல்லுக்கு அப்பெண்களுக்குரிய மஹ்ர்(விவாகக் கொடை)களை என்று பொருள்.

(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின் எனும் சொல்லுக்கு அல்அமீன்-நம்பகமான காவலன் என்று பொருள். அதாவது இந்தக் குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது.

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

குர்ஆனிலுள்ள வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற் றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுங்கள் எனும் (5:68) வசனத்தை விட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை.2

(5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மஃக்மஸா எனும் சொல்லுக்குப் பசி என்று பொருள்.

(5:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மன் அஹ்யாஹா (எவன் ஓர் உயிரை வாழ வைக்கின்றானோ...) என்பதற்கு முறையின்றியே தவிர ஓர் உயிரைக் கொலைசெய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றவன் மக்கள் அனைவரை யுமே வாழவைத்தவன் ஆவான் என்பது நோக்கப் பொருளாகும்.

(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷிர் அத்தன் வ மின்ஹாஜன் என்பதற்கு பாதை மற்றும் நடைமுறை என்று பொருள்.

(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப இன் உஸிர எனும் சொல்லுக்கு வெளிப் பட்டால், - தெரியவந்தால் என்று பொருள்.

(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அவ்லயானி(அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை (அல்) அவ்லா என்பதாகும்.

பாடம் : 2

இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் எனும் (5:3ஆவது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மஃக்மஸா எனும் சொல்லுக்குப் பசி என்று பொருள்.

4606 தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம் என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ்-9ஆம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.3

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இன்று உங்ளது மார்க்கத்தை உங்க ளுக்காக நான் முழுமையாக்கி விட்டேன் எனும் (5:3ஆவது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக் கிழமையாக) இல்லையா என்று நான் (தீர் மானிக்கமுடியாமல்) சந்தேகப்படுகின்றேன்.4

பாடம் : 3

நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்து விட்டு) கழிப்பிடத்தி- ருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் தயம்மும் செய்து கொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங்களைப் பதித்து முகங்களிலும், கரங்களிலும் தடவிக் கொள்ளுங்கள் எனும் (5:6ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) தயம்மமூ எனும் சொல்லுக்கு நாடுங்கள் என்று பொருள்.

(5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆம்மீன் எனும் சொல்லுக்கு நாடியவர்க ளாக என்று பொருள். அம்மம்த்து என்பதும் தயம்மம்த்து என்பதும் (நாடினேன் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தி தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஃ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.5

4607 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனூ முஸ்த-க் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்த போது எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்க வில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்து விட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்து விட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப்படுத்து) இருந்தது தான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதி காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை.அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்(சமுதாய நலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன.) என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பிய போது, அதன் அடியில் (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.6

4608 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பனூ முஸ்த-க் போர் முடிந்து) மதீனாவிற்கு வந்து கொண்டிருந்த போது (மதீனாவுக்கருகில் உள்ள) பைதா எனுமி டத்தில் என் கழுத்து மாலையொன்று (அவிழ்ந்து) விழுந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் அங்கே தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, எனது மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, ஒரு கழுத்து மாலைக்காக (பயணத்தைத் தொடரவிடாமல்) மக்களைத் தடுத்து நிறுத்தி விட்டாயே என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் மடிமீது தலைவைத்துப்படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)று இருந்து விட்டேன். அதனால் எனக்குக் கடும் வேதனை ஏற்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள். சுப்ஹுத் தொழுகை (நேரம்) வந்து விட்டது. உளூ (அங்க சுத்தி) செய்வதற்காகத் தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்கவில்லை. அப்போது தான் , இறை நம்பிக்கை கொண்ட வர்களே! தொழுகைக்காகச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக் கொள் ளுங்கள் என்று தொடங்கி தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்று கூறும் (5:6ஆவது) வசனம் இறங்கிற்று. அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள் வளம் பொழிந்துள்ளான், அபூபக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான் என்று சொன்னார்கள்.

பாடம் : 4

(மூசா!) நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் (என்று பனூ இஸ்ராயீல் கூறினர்) எனும் (5:24ஆவது) வசனத் தொடர்.

4609 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மிக்தாத் (ரலி) அவர்கள், பத்ருப் போரின் போது, அல்லாஹ்வின் தூதரே! பனூ இஸ்ராயீல்கள் மூசா (அலை) அவர்களிடம், நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் என்று சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்ல மாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம் என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது.

இதே ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில்,

மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் சொன்ன போது நான் இருந்தேன் என்று தொடங்குகிறது.7

இன்னும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பாடம் : 5

எவர் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான் : அவர்கள் கொல்லப் படவேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களின் மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் (எனும் 5:33ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) அல்லாஹ்வுடன் போரிடுதல் என்பதற்கு, அவனை மறுத்தல் என்பது கருத்தாகும்.

4610 அபூ கிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (உமய்யா கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து அல்கஸாமா எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அதுபற்றி) மக்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் சொன்னார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந் திருந்த என் பக்கம் திரும்பி, அப்துல்லாஹ் பின் ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அல்லது அபூகிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?என்று கேட்டார்கள். நான், திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதனையும், அல்லது உயிருக்கு பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவனையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவனையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை என்று சொன்னேன். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், என்னிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அல்கஸாமா மற்றும் உரைனா சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள் என்று சொன்னார்கள்.

நான் சொன்னேன்:

அனஸ் (ரலி) அவர்கள் என்னிடம் கூட (இப்படிச்) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர் களிடம் ஒரு சமுதாயத்தார் (உக்ல் மற்றும் உரைனா குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், இந்த பூமி (மதீனா) எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டோம்) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், இதோ, எங்களின் (தர்மத்திற்குரிய) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்றுடன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந் துங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய் நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின் மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றுவிட்டனர்.

 ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர்புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த) வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா, என்ன?

அப்போது அன்பஸா (ரஹ்) அவர்கள், (வியப்புத் தெரிவிப்பது போல) சுப்ஹானல் லாஹ் - அல்லாஹ் தூயவன் என்று சொன்னார்கள்.

நான், என்னை நீங்கள் சந்தேகப்படு

கின்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இல்லை) இதை எங்களுக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறிவிட்டு, இந்த ஊர் (ஷாம்) வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர்களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும் வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள் என்று சொன்னார்கள்.8

பாடம் : 6

(குற்றவியல் தண்டனையில்) காயங்களுக் கும் பழிவாங்கல் உண்டு எனும் (5:45ஆவது) வசனத் தொடர்.

4611 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரிலிருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி)-ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்து விட்டார். அப்பெண் ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட் டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, அல்லாஹ்வின் தூதரே! என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும் (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்) என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றுக் கொண்டனர். (ருபய்யிஉவை பழி வாங்காமல் மன்னித்து விட்டனர்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடு வார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான் என்று சொன்னார்கள்.9

பாடம் : 7

(எம்) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற(வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் (எனும் 5:67ஆவது வசனத் தொடர்).

4612 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற(வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ (எம்) தூதரே! உங்கள் இறை வனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! என்று கூறுகிறான்.10

 

 

 

பாடம் : 8

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்கு வதில்லை எனும் (5:89ஆவது) வசனத் தொடர்.

4613 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை எனும் (5:89ஆவது) இறை வசனம் லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

4614 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ளஅபூபக்ர் (ரலி) அவர்கள்ன சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர் பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெ டுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன் என்று சொன்னார்கள்.11

 

பாடம் : 9

இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள் எனும் (5:87ஆவது) வசனத் தொடர்.

4615 கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண் டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்து கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். என்று கூறிவிட்டுப் பிறகு, இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி(ஹரா மாக்கி)க் கொள்ளாதீர்கள் எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.12

பாடம் : 10

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும் எனும் (5:90ஆவது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்அஸ்லாம் என்பது (அறியாமைக் கால மக்கள்) தங்கள் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்தி வந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13

நுஸுப் என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

அல்அஸ்லாம் என்பதன் ஒருமையான அஸ்ஸலம் என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும்.

இஸ்திக்ஸாம் (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப்போட்டு, வேண்டாம் எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், செய் எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும்.

அம்புகளில் (செய்யலாம், செய்ய வேண்டாம்; செய்தால் நல்லது, செய்யா விட்டால் கேடு நேரிடும் என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறி பார்த்து வந்தார்கள். இதிலிருந்து ஃபஅல்(த்)து எனும் வாய்பாட்டில் கஸம்து எனும் கடந்த கால வினையும் குஸூம் எனும் வேர்ச் சொல்லும் வரும்.

4616 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது பானத்தைத் தடைசெய்யும் இறை வசனம் இறங்கிய காலகட்டத்தில் ஐந்து வகையான மதுபானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.14

 

 

4617 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் ஃபளீக் என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் ளநபி (ஸல்) அவர்கள் காலத்தில்ன எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்)அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, உங்களுக்குச் செய்தி எட்டியதா? என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், என்ன அது? என்று கேட்டனர். அவர், மது தடை செய்யப்பட்டுவிட்டது என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள் என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.

4618 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் சிலர், உஹுதுப் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.15

 

4619 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களின் உரைமேடையிலிருந்தபடி, (இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத் தடை(ச் சட்டம்) இறங்கிவிட்டது. திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற் கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மது தான் என்று கூறினார்கள்.16

 

 

 

பாடம் : 11

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது. (ஆனால், இனி தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து) அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்ப வர்களாகவும், நற்செயல்கள் புரிகின்றவர் களாகவும், இன்னும் (எந்த எந்தப் பொருள் களைவிட்டுத் தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து) விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச் சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்ப வர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் (இத்தகைய) நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான் (எனும் 5:93ஆவது இறை வசனம்).

4620 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.

அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்ததாவது:

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் இறங்கிற்று. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட் டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார். இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா) எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்து விட்டுத் திரும்பி வந்து), இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கிறார் என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், நீ போய், இதைக் கொட்டிவிடு! என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், (உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே! என்று கூறினர். அப்போது தான் இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17

பாடம் : 12

இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப் பட்டால் அவை உங்களுக்கு மனவருத் தத்தை ஏற்படுத்தும். எனும் (5:101ஆவது) இறைவசனம்.

4621 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக் கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இன்னார் என்று சொன்னார்கள். அப்போது தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் எனும் இந்த (5:101ஆவது) இறை வசனம் இறங்கிற்று.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

 

4622 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் ளநபி (ஸல்) அவர்களிடம்ன, என் தந்தை யார்? என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய் விட்ட இன்னொருவர் என் ஒட்டகம் எங்கே? என்று கேட்டார். அப்போது தான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின் றான். (5:101)

பாடம் : 13

(கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்கு களான) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, மறுப்பாளர்கள் தாம் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கை களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர் (எனும் 5:103ஆவது இறைவசனம்).

(5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ இஃத் காலல்லாஹ் எனும் சொற்றொட ரில் உள்ள கால (சொன்னான்) எனும் (இறந்த கால வினைச்) சொல்லுக்குச் சொல்வான் என்று (எதிர்கால வினையின்) பொருளாகும்.

இந்த வசனத்திலள்ள இஃத் எனும் சொல் சொல்லிடை இணைப்புக் குறி (ஸிலா) ஆகும்.

(5:112ஆவது வசனத்திலுள்ள வினை யாலணையும் பெயரான) அல்மாயிதா எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொருத்தவரை விருந்தாக்கப்படும் உணவு எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். ஈஷத்துன் ராளியா (திருப்தியான வாழ்க்கை), தத்லீக் கத்துல்பாயினா (இறுதிசெய்யப்பட்ட விவாகரத்து) ஆகிய சொற்றொடர்களைப் போல.

(இதன்படி அல்மாயிதா என்பதன்) சொற்பொருள் விருந்தாளிக்கு அளிக்கப்படும் நல்ல உணவு என்பதாகும்.

(இஷ்திகாக் எனும் சொல் திரிபு வேறுபாட்டில் இச்சொல்லை ஃபஅல, யஃப்இலு எனும் வாய்பாட்டில்) மாத, யமீது (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முத்தவஃப்பீக்க எனும் சொல்லுக்கு உம்மை இறக்கச் செய்வோம் என்பது கருத்தாகும்.18

4623 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பஹீரா என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்க மாட்டார்கள்.

சாயிபா என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்ற வேண்டுத-ல்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டுவந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீ ரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்க மாட்டார்கள்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக சாயிபா (ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்துத்) திரியவிட்டவர் அவர்தாம்.19

வஸீலா என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டியிடுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டு வந்தனர். இரண்டு(ஈற்று)க்கு மத்தியில் ஆண்குட்டியிடாமல் ஒன்றையடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதனால் (இதனைத் தொடர்ந்து வரக்கூடியது எனும் பொருளில்) வஸீலா என்று அழைத்தனர்.

ஹாம் என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல்கொள்ளச் செய்த (பொ-) ஒட்டகமாகும். இவ்வாறு சூல்கொள்ளச் செய்த பின் அந்த (பொ-) ஒட்டகத்தை (அறியாமைக்கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்பட வில்லை. இதனை ஹாமீ(தன் முதுகைப் பாதுகாத்துக் கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர்.

இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்சொன்ன விளக்கமும் ஹதீஸும் வந்துள்ளன.

4624 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து)த் திரியவிட்டவர் அவர் தாம்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 14

(மர்யமின் மைந்தர் ஈசா கூறினார்:) மேலும், நான் அவர்களுடன் இருந்தவரையில், அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! நீயோ அனைத்தையும் கண்காணிப்பனாக இருக்கின்றாய் (எனும் 5:117ஆவது வசனத் தொடர்).

4625 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப் படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முத-ல் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம் எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.

பிறகு, அறிந்து கொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம்.

அறிந்து கொள்ளுங்கள்: என் சமுதாயத் தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன். அதற்கு இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்ன வெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ளஈசா (அலை) அவர்கள்ன சொன்னதைப் போன்று, நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! என்று பதிலளிப்பேன். அதற்கு, இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள் என்று கூறப்படும்.20

பாடம் : 15

(இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவு டையவனுமாய் இருக்கின்றாய் (என்றும் மர்யமின் மைந்தர் ஈசா கூறுவார்) எனும் (5:118ஆவது) இறைவசனம்.

4626 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப் படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத் (திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ளஈசா (அலை) அவர்கள்ன சொன்னதைப் போல், நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந் தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண் காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித் தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனு மாய் இருக்கின்றாய் (5:117,118) என்று சொல்வேன்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

02.11.2009. 04:03

65-திருக்குர்ஆன் விளக்கவுரை3

பாடம் : 1

அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக் கொள்ளலாம் (எனும் 4:3 ஆவது வசனத் தொடர்).

4573 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. ஆகவே அவர் விஷயத்தில்தான் அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம் எனும் (4:3ஆவது) வசனம் இறங்கிற்று.

அறிவிப்பாளர் (ஹிஷாம் பின் யூசுஃப், அல்லது ஹிஷாம் பின் உர்வா-ரஹ்) கூறுகிறார்:

(இதை அறிவித்த போது) உர்வா (ரஹ்) அவர்கள், அந்தப் பேரீச்ச மரத்திலும் அவரது செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள் என்று அறிவித்தார் என்று நான் எண்ணுகிறேன்.2

4574 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன் றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம் எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கின்ற- அவருடைய செல்வத்தில் கூட்டாக இருக் கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் - அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புகின் றார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.

இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர் என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான்.

மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (4:127) உயர்வுக்குரிய அல்லாஹ் மேலும் யாரை நீங்கள் மணந்து கொள்ள விரும்புவ தில்லையோ... என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும் போது அவளை (மணந்து கொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.

அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும் போது அவர்களை மணந்து கொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.3

பாடம் : 2

(அநாதைகளைப் பராமரிப்பவராகிய) அவர் செல்வராக இருந்தால் (பராமரிப்புக்கான சன்மானம் எதையும் பெறாமல்) தவிர்த்து விடட்டும்! அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! அநாதைகளிடம் அவர்களுடைய செல்வங்களை நீங்கள் ஒப்படைக்கும் போது அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ் போதுமானவன் (எனும் 4:6ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பிதாரன் எனும் சொல்லுக்கு அவசரமாக என்று பொருள்.

(4:18ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதத்னா எனும் சொல்லுக்குத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்று பொருள். இச்சொல் இதாத் (ஆயத்தம்) எனும் மூலச்சொல்லிலிருந்து அஃப்அல்னா எனும் வாய்பாட்டில் வந்ததாகும்.

4575 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதை களின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! எனும் (4:6ஆவது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதனைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இது தான் அதன் பொருள்.)4

பாடம் : 3

பாகப்பிரிவினை செய்து கொள்ளும் போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்து விட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி(அனுப்பி)விடுங்கள் (எனும் 4:8ஆவது இறைவசனம்).

4576 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாகப்பிரிவினை செய்து கொள்ளும் போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்து விட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி(அனுப்பி)விடுங்கள் எனும் (4:8ஆவது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசன மாகும்; சட்டம் மாற்றப்பட்ட வசனமன்று.5

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.6

 

பாடம் : 4

அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்... (என்று தொடங்கும் 4:11ஆவது வசனம்.)

4577 ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என்) பனூச-மா குலத்தாரி டையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்! என்று கேட்டேன். அப்போது தான் அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரி வினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகின்றான் என்று தொடங்கும் (4:11ஆவது) வசனம் இறங்கிற்று.7

பாடம் : 5

(இறந்து போன) உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப் பங்கு உங்களுக் குரியதாகும் (எனும் 4:12ஆவது வசனத் தொடர்).

4578 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) மரணசாசனம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்து வந்தது.

அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பியதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரு பெண்களின் பங்கை நிர்ணயித்துத் தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றிலொரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டிலொரு பங்கையும் நான்கி லொரு பங்கையும் கணவனுக்குப் பாதிப் பங்கையும் நான்கிலொரு பங்கையும் நிர்ணயித்தான்.8

பாடம் : 6

இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் எனும் (4:19ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4: 19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) லா தஃளுலூ ஹுன்ன எனும் சொல்லுக்கு அவர்களைப் பலவந்தப்படுத் தாதீர்கள் என்று பொருள்.

(4:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுப் எனும் சொல்லுக்குப் பாவம் என்று பொருள்.

(4:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஊலூ (பேதம் பாராட்டுவது/நீதி தவறுவது) எனும் சொல்லுக்கு (ஓர வஞ்சனையாக) நீங்கள் சாய்ந்து விடுவது என்று பொருள்.

(4:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நிஹ்லா எனும் சொல்லுக்கு மஹ்ர் (மணாளன் மணாளிக்கு வழங்க வேண்டிய விவாகக் கொடை) என்று பொருள்.

4579 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசு களான) அவர்கள்தாம் அவள் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போது தான் இது தொடர்பாக இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண் களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் எனும் (4:19ஆவது) வசனம் இறங்கிற்று.

பாடம் : 7

தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக் காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள் ளீர்களோ அவர்களுக்கும் அவர்களது பங்கை அளித்து விடுங்கள். திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் எனும் (4:33ஆவது) இறைவசனம்.

மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:9

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மவா-ய எனும் சொல்லுக்கு வாரிசுகள் எனும் நேசர்கள் என்று பொருள்.

ஆகதத் அய்மானுக்கும் (நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்கள்) என்பது நேச ஒப்பந்தப்படி அமையும் வாரிசுகளைக் குறிக்கின்றது.

(மவா- என்பதன் ஒருமையான) மவ்லா என்பது தந்தையின் சகோதரர் மகனையும் குறிக்கும்; (அடிமையை) விடுதலைசெய்து, உபகாரம் புரியும் எஜமான்; விடுதலை செய்யப்பட்ட அடிமை; அரசன் ஆகியோரையும் குறிக்கும். மார்க்கத் தோழன் என்ற பொருளும் உண்டு.

4580 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (4:33ஆவது) வசனத்தின் மூலத்தி லுள்ள மவா-ய எனும் சொல்லுக்கு வாரிசுகள் என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:

முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்த போது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்து விட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொரு வருக்கும் ஏற்படுத்தியுள்ளோம் எனும் (4:33ஆவது) வசனம் இறங்கிய போது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.

பின்னர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவிபுரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதாம் உள்ளன. உடன்படிக்கை செய்து கொண்டவருக்காக மரணசாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.10

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.11

பாடம் : 8

திண்ணமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான் (எனும் 4:40ஆவது வசனத் தொடர்).

அதாவது அணுவின் எடையளவு கூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ, பாவங்களுக்கான தண்டனையைக் கூட்டியோ) அநீதி இழைக்க மாட்டான்.

4581 அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?என்று கேட்டார்கள். மக்கள், இல்லை என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமு மிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:

மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பா ளர் ஒருவர் ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த வர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்த வர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ் வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக் காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக் காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந் தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள் எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையி லுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் ( கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டி ருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து

வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்).12 அப்போது எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்ற னரே! என்று கேட்கப்படும். அவர்கள், உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவை களைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர் களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறை வனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், நானே உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.13

பாடம் : 9

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர் களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? (எனும் 4:41ஆவது இறைவசனம்.)

(4:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முக்தால் எனும் சொல்லும், (இதே மூலத்திலிருந்து வந்த) கத்தால் எனும் சொல்லும் (கர்வம் பிடித்தவன் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(4:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நத்மிஸ வுஜூஹன் (முகங்களை மாற்றி விடுவோம்) எனும் சொற்றொடருக்கு அவர் களுடைய பிடரியைப் போல முகங்களையும் (தடவி) சம மட்டமாக மாற்றிவிடுவோம் என்று பொருள்.

(இதன் இறந்தகால வினைச் சொல்லான) தமஸல் கி(த்)தாப என்பதற்கு எழுத்தை அழித்தான் என்று பொருள்.

(4:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள சஈர் (கொழுந்து விட்டெரிகின்ற) எனும் சொல்லுக்கு எரிபொருள் என்று அர்த்தம்.

4582 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். நான், தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக்காட்டி னேன். ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக் கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியி ருக்கும்? எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள், நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.14

பாடம் : 10

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் (மலஜலம் கழித்து விட்டுக்) கழிப்பிடத்திலிருந்து வந்தால், அல்லது பெண்களை நீங்கள் தீண்டியிருந்தால் (இந்நிலைகளிலெல்லாம் துப்புரவு செய்ய) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணால் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களின் முகங்களிலும் கைகளிலும் (அதைத்) தடவிக் கொள் ளுங்கள் எனும் (4:43ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸஈதன் (மண்) எனும் சொல் பூமியின் மேல் பரப்பைக் குறிக்கின்றது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

4:60ஆவது வசனத்தில்-அவர்கள் தாஃகூத்தை (விஷமியை) நிராகரித்து விட வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டிருக்க, அந்த தாஃகூத்திடமே தீர்ப்புக்கேட்க அவர்கள் விரும்புகின்றனர் என்பதில்-உள்ளன தாஃகூத் எனும் சொல் சோதிடனைக் குறிக்கும். (அன்றைய அரபுகளில்) ஜுஹைனா குலத்தாரிடையே ஒருவனும், அஸ்லம் குலத்தாரிடையே ஒருவனும், ஒவ்வொரு குலத்தாரிடையே ஒருவனுமாகப் பல சோதிடர்கள் இருந்தனர். அவர்கள் மீது (குறிசொல்லும்) ஷைத்தான் இறங்குவான். இத்தகைய தாஃகூத்களிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்டுவந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4:51ஆவது வசனத்திலுள்ள) ஜிப்த் எனும் சொல் சூனியத்தையும், தாஃகூத் என்பது ஷைத்தானையும் குறிக்கும்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஜிப்த் என்பது அபிசீனிய(ர்களின்) மொழியில் ஷைத்தானைக் குறிக்கும்; தாஃகூத் என்பது சோதிடனைக் குறிக்கும் என்று கூறினார்கள்.

4583 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிடமி ருந்து) தொலைந்து விட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்து விட்டது. அப்போது அவர்கள் உளூவுடன் (அங்க சுத்தியுடன்) இருக்கவில்லை. (உளூ செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, உளூ இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்- தயம்மும் (பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை- அருளினான்.15

பாடம் : 11

இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர்.)

4584 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோ ருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக எனும் (4:59ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப் பிரிவினருடன் அனுப்பிய போது இறங்கியது.16

 

பாடம் : 12

இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட(சண்டை சச்சரவு முத-ய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள் (எனும் 4:65 ஆவது இறைவசனம்).

4585 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஹர்ரா எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ஸுபைரே! (முத-ல் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரித் தோழர், அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்த-பின்) மகன் ஆயிற்றே! (அதனால்தான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கின்றீர்கள்) என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ளஸுபைர் (ரலி) அவர்களைப் பார்த்துன, ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக் காரருக்குத் தண்ணீரை விட்டு விடுங்கள் என்று சொன்னார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபப்படுத்திய போது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட் டார்கள். அதற்கு முன் அவர்கள் இருவருக் குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட(சண்டை சச்சரவு முத-ய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும்கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர் களாக மாட்டார்கள் எனும் (4:65ஆவது) வசனம் இது தொடர்பாக இறங்கிற்று என்றே நான் எண்ணுகிறேன்.17

பாடம் : 13

யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள்தாம் சிறந்த தோழர்கள் (எனும் 4:69ஆவது இறைவசனம்).

4586 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறுதியாக) நோயுற்றுவிடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப் படாமல் இருந்ததில்லை என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நபி (ஸல்)அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின் போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடை களைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னை சொர்க்கத்தில் சேர்த்தருள்) என்று சொல்லிக் கொண்டிருந் ததை நான் கேட்டேன். (இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.18

பாடம் : 14

(அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ எங்கள் இறைவனே! அக்கிரமக் காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிடுவாயாக! இன்னும் எங்களுக்குப் பாதுகாவலரையும் உதவியாளரையும் உன்னிடமிருந்து வழங்கு வாயாக! எனப் பிராத்தித்துக் கொண்டிருக் கின்றனர் எனும் (4:75ஆவது) இறைவசனம்.

4587 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர்களாயிருந்தோம்.19

4588 இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், எந்த உத்தியையும் கையாளமுடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர எனும் (4:98ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, (ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம் என்று சொன்னார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹஸிரத் (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, (அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக் கொண்டன என்று பொருள்.

(4:135ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தல்வூ (தவறாக சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு நீங்கள் (உண்மைக்குப் புறம்பாக) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால் என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(4:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முராஃகம் எனும் சொல்லுக்கு ஹிஜ்ரத் செல்லுமிடம் (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த காலவினைச் சொல்லான) ராஃகம்த்து எனும் சொல்லுக்கு நான் என் சமுதாயத்தைத் துறந்து விட்டேன் என்று பொருள்.

(4:103ஆவது வசனத்தின்மூலத்திலுள்ள) மவ்கூத் எனும் சொல்லுக்கு அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை) என்று பொருள்.

பாடம் : 15

உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகி விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (தீய) வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் (எனும் 4:88ஆவது வசனத் தொடர்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்கஸ எனும் சொல்லுக்குப் பிரித்துத் தனித் தனியாக அவர்களின் கூட்டமைப்பைச் சிதற அடித்து விட்டான் என்று பொருள்.

ஃபிஅத் எனும் சொல்லுக்குக் குழுவினர் என்று பொருள்.

4589 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது:

(உஹுதுப் போருக்காக) நபி (ஸல்) அவர் களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்து விட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், (நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!) என்று கூறினர். மற்றொரு பிரிவினர் (வெளிப் படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம் என்று கூறினர். அப்போது தான் , உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழு வினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் எனும் (4:88ஆவது) இறைவசனம் இறங்கிற்று.

மேலும், நபி (ஸல்) அவர்கள், மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப் போல் அது தீமையை அகற்றிவிடும் என்று சொன்னார்கள்.20

அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதனை அவர்கள் பரப்பிவிடுகின் றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப் பார்கள் (எனும் 4:83ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதாஊ எனும் சொல்லுக்குப் பரப்பிவிடுவார்கள் என்று பொருள். யஸ்தன்பித்தூன் எனும் சொல்லுக்கு ஆராய்ந்து முடிவு செய்கின்றார்கள் என்று பொருள்.

(4:86ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹசீப் எனும் சொல்லுக்குப் போதுமானவன் என்று பொருள்.

(4:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இனாஸ்எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். மரீத் எனும் சொல்லுக்கு (தீமையில்) பிடிவாதமாக இருப்பவன் என்று பொருள்.

(4:119ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபல்யுபத்திகுன்ன எனும் சொல்லுக்கு அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள் என்று பொருள்.

(4:122ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கீல் எனும் பதமும் கவ்ல் எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(4:155ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள தபஅ எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) துபிஅ எனும் சொல்லுக்கு முத்திரையிடப்பட்டது என்று பொருள்.

பாடம் : 16

ஓர் இறை நம்பிக்கையாளரை வேண்டு மென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும் (எனும் 4:93ஆவது வசனத் தொடர்).

4590 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இது (4:93ஆவது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண் டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், ஓர் இறை நம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமே யாகும் எனும் இந்த (4:93ஆவது) வசனம் இறங்கியது. இது தான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடல்லை என்று கூறினார்கள்.21

பாடம் : 17

(தம்மை இறை நம்பிக்கையாளர் என்று உங்களுக்குக் காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறை நம்பிக்கை கொண்ட வன் அல்லன் என்று சொல்லாதீர்கள் (எனும் 4:94ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சலாம் எனும் சொல்லும் (இன்னும் இரு வகையான ஓதுதல் முறையில் வந்துள்ள) சில்ம், சலம் ஆகிய சொற்களும் (சாந்தி எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

4591 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது:

ஒரு மனிதர் தனது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த)

முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறை வழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லா தீர்கள். (4:94) (இங்கே உலகப் பொருள் என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22

அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் சலாம் எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.)

பாடம் : 18

இறை நம்பிக்கையாளர்களில் -இடையூறு உள்ளவர்கள் தவிரலி அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத் தொடர்).

4592 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் ஹகமைப் பள்ளி வாச-ல் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொரு ளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக் காட்டிக் கொண்டிருக்கும் போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன் என்று சொன்னார்கள். அவர் கண் பார்வை யற்றவராக இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி (ஸல்) அவர்களுடைய தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு அந்நிலை அகன்றது. அப்போது தான் அல்லாஹ் இடையூறு உள்ளவர்களைத் தவிர எனும் சொற் றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.23

4593 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளா லும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) இறைவசனம் இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைக்க அவர் (வந்து) அதனை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து தமது ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போது தான் அல்லாஹ் இடையூறு உள்ளவர்களைத் தவிர எனும் சொற்றொடரை அருளினான்.24

4594 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) இறை வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் பலகையையும் அல்லது அகலமான எலும்பையும் தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் கண்பார்வையற்றவன் ஆயிற்றே! என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில் இறை நம்பிக்கையாளர் களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் என்ற இவ்வசனம் (4:95 முழுமையாக) இறங்கிற்று.

4595 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளா லும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் வசனம் (4:95) பத்ருப் போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

 

 

பாடம் : 19

(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, (அவர்களை நோக்கி, மார்க்கக் கடமைகளை நிறைவேற்றமுடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள், பூமியில் நாங்கள் பல வீனர்களாய் இருந்தோம் என பதிலளிப் பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமான தாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து(ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவு வார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிட மாகும் எனும் (4:97ஆவது) இறைவசனம்.

4596 முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.25 அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:

ளநபி (ஸல்) அவர்களது காலத்தில்ன முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர் களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந் த)னர். ஆகவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர் பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (4:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றமுடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண் டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது (அவர்களை நோக்கி இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள், பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந் தோம் என பதிலளிப்பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்க வில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவுவார்கள். இவர் களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.26

இதை அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களிட மிருந்து ஸைத் பின் சஅத் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 20

ஆனால்,எவ்வித உபாயத்தையும் மேற் கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையிலேயே இயலாதவர் களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98ஆவது வசனம்.)27

4597 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! எனும் (4:98ஆவது) இறைவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயி ருந்தார்.28

பாடம் : 21

அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக் கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும்,மன்னிப்பு வழங்குபவனும் ஆவான் எனும் (4:99ஆவது) இறைவசனம்.

4598 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்த போது, சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, இறைவா! (மக்காவில் சிக்கிக் கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர் களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று வாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்து வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.29

பாடம் : 22

(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங் களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கை யாகவே இருங்கள் எனும் (4:102ஆவது) இறைவசனம்.

4599 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால்,அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை எனும் (4:102 ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது, அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது) என்று சொன்னார்கள்.

பாடம் : 23

(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் அவர்கள் கோருகின்றனர். நீங்கள் கூறுங்கள்: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், எந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட(மஹ்ர் போன்ற)வற்றை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றீர்களோ அந்தப் பெண்கள் விஷயத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டுவருகின்ற சட்டமும் (உங்களுக்குத் தீர்ப்பளிக்கின்றது.) எனும் (4:127ஆவது) வசனத் தொடர்.

4600 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். பேரீச்ச மரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக் கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்றவ) னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்துவந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போது தான் ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும் எனும் (4:128ஆவது) வசனம் இறங்கியது.30

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4:35ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஷிகாக் எனும் சொல்லுக்குப் பரஸ்பரப் பிணக்கு என்று பொருள்.

பாடம் : 24

 மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக) உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஷ்ஷுஹ்ஹு எனும் சொல், மனிதன் ஒன்றின் மீது பேராசை கொண்டு அதிகமாக விரும்புவதைக் குறிக்கும்.

(4:129ஆவது வசனத்திலுள்ள) கல்மு அல்லகா (அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போல) எனும் சொல், அவள் விதவையாகவும் இல்லாமல் கணவன் உடைய வளாகவும் இல்லாமல் இருக்கும் (தொங்கு) நிலையைக் குறிக்கும்.

(4:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுஷுஸ் (நல்ல விதமாக நடந்து கொள்ளாமை) எனும் சொல்லுக்குச் சினம்கொள்ளல் என்று பொருள்.

4601 ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக் கொரு வர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேது மில்லை எனும் (4:128ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில், தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்து விட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்) என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) இறங்கிற்று என்று குறிப்பிட்டார்கள்.31

பாடம் : 25

நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒரு போதும் நீங்கள் காணமாட்டீர்கள் (எனும் 4:145ஆவது வசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அத் தர்க்குல் அஸ்ஃபல் எனும் சொல்லுக்கு நரகத்தின் கீழ்த்தட்டு என்று பொருள்.

(6:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஃபக் (சுரங்கப் பாதை) எனும் சொல்லுக்கு வழி என்று பொருள்.

4602 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு, உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப் (பட்டு சோதிக்கப்)பட்டது என்று சொன்னார்கள். நான், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே என்று சொல்ல, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் புன்னகைத்தார்கள்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் பள்ளி வாச-ன் ஒரு மூலையில் அமர்ந்து கொண் டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்து நிற்க, அவர்களுடைய தோழர்கள் கலைந்து சென்று விட்டனர். உடனே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் பொடிக் கற்களை என் மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்து கொண்டார்கள். உங்களை விடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தினர் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அல்லாஹ் அவர்களுடைய குற்றங்களை மன்னித்து விட்டான் என்றார்கள்.32

பாடம் : 26

 (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததைப் போன்றே திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் மற்றும் யஅகூப் உடைய வழித் தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம் எனும் (4:163ஆவது) இறைவசனம்.

4603 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இறைத் தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

 

4604 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.

 இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

பாடம் : 27

(நபியே!) கலாலா (-அதாவது மூல வாரிசுகளோ, கிளை வாரிசுகளோ இல்லாத நிலை-)பற்றி உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: கலாலா பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசா வான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும் (எனும் 4:176ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) கலாலா எனும் சொல், யாருக்கு வாரிசாகத் தந்தையோ, மகனோ இல்லையோ அவரைக் குறிக்கும். இது தகல்லலஹுந் நஸபு (வமிசாவளி அற்றவன்) எனும் வினைச் சொல்லின் வேர்ச் சொல்லாகும்.

4605 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களுக்குன இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் பாராஅத் எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் (நபியே!) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள் எனும் (இந்த 4:176ஆவது) வசனமாகும்.34

02.11.2009. 04:02

65-திருக்குர்ஆன் விளக்கவுரை2

பாடம் : 1

 இ(ந்தவேதத்)தில் தெளிவான கருத்துள்ள வசனங்களும் இருக்கின்றன (எனும் 3:7ஆவது வசனத் தொடர்).

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

 (தெளிவான கருத்துள்ள வசனங்கள் என்பது) ஹலால், ஹராம் (அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்) ஆகும்.

(3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ உகரு முதாஷாபிஹாத் (ஒன்றையொன்று ஒத்த வேறுவசனங்களும் உள்ளன) எனும் தொடருக்கு ஒன்றினையொன்று உறுதிப்படுத்துகின்ற வசனங்கள் என்று பொருள்.

எடுத்துக்காட்டாக, இன்னும் துன்மார்க் கர்களைத் தவிர (எவரையும்) அவன் வழி தவறச் செய்வதில்லை என்று (ஒரு வசனத்தில் -2:26) அல்லாஹ் கூறுகின்றான். (மற்றொரு வசனத்தில்-10:100) சிந்தித்துணராதவர்கள் மீதே அவன் பாவச் சுமையை வைக்கின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (இன்னுமொரு வசனத்தில்-47:17) எவர் நேர்வழி பெற்றிருக் கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியை இன்னும் அதிகமாக அளிக்கின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (இவ்வசனங் களில் ஒன்று மற்றொன்றின் கருத்தை வ-யுறுத்துகின்றன.)3

(3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸைஃக் (கோணல்) எனும் சொல்லுக்குச் சந்தேகம் என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) இப்திஃகாஅல் ஃபித்னத் எனும் சொல்லுக்குக் குழப்பம் செய்ய விரும்புதல் என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) அர்ராஸிகூன ஃபில் இல்மி எனும் தொடரின் பொருளாவது: அறிவில் முதிர்ந்தவர்களும் அவற்றின் விளக்கத்தை அறிவார்கள். இவற்றை நாங்கள் நம்பினோம் என்றும் கூறுவார்கள்.4

4547ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் கோணல் உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்ய விரும்பி யதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வை யன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர் களோ இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளி களன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை எனும் (3:7ஆவது) வசனத்தை ஓதிவிட்டு, முத ஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கை யாயிருங்கள் என்று சொன்னார்கள்.5

பாடம் : 2

இன்னும் நான் இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன் (என இறைவனை வேண்டினார் இம்ரானின் துணைவியார்- எனும் 3:36ஆவது வசனத் தொடர்).6

4548 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எது வாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டு வதால் அக்குழந்தை உடனே கூக்குரலெ ழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால், இந்தக் குழந்தையையும் இதன் வழித் தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத் தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்) எனும் (3:36ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.7

பாடம் : 3

அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவு மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்க ளுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு (எனும் 3:77ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தில் ஃபஈல் எனும் வாய் பாட்டில் அமைந்த துன்பம் தரும் என்ற பொருளைக் குறிக்கும்) அலீம் எனும் சொல்லுக்கு முஃப்இல் வாய்பாட்டில் அமைந்த முலீம் என்பதன் பொருளாகும். (அதாவது) துன்புறுத்துகின்ற (என்று பொருள்.)

4549 & 4550 அபூ வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 ஒரு முஸ்-மான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண(வாக்குமூல)த்தின் போது துணிவு டன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ், அவர்களிடம் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவு மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்பால், அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து, அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்கிறார்? என்று கேட்க, நாங்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள் என்று பதிலளித்தோம்.

(அதற்கு) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத் தான் அந்த (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. ளஅந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம்.ன நபி (ஸல்) அவர்கள், உனது (இரு) சாட்சி(கள்); அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ் வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.) என்று சொன்னார்கள்.

உடனே நான், அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,எவர் ஒரு பிரமாண(வாக்குமூல)த்தின் போது அதன் மூலம் ஒரு முஸ்-மான மனிதரின் சொத்தை (அநியாயமாகப்) பறித்துக் கொள் வதற்காகத் திட்டமிட்டுப் பொய் சத்தியம் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார் என்று சொன்னார்கள்.8

4551 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது அல்லாஹ்வின் உடன்படிக் கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை எனும் (3:77 ஆவது) இறைவசனம் இறங்கியது.9

4552 இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இரு பெண்கள் ஒரு வீட்டில் அல்லது ஓர் அறையில் (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டுவிட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும் என்று சொன்னார்கள் எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலை யைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை எனும் (3:77ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள், பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும் என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

பாடம் : 4

(நபியே!) கூறுக: வேதக்காரர்களே! எங்களுக் கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வை யன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர் களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற வர்கள்-) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள் (எனும் 3:64ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) சவாஇன் (பொதுவான) எனும் சொல்லுக்கு நடுநிலையான என்று பொருள்.

4553 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் தம் வாய்ப்பட எனக்கு அறிவித்ததாவது:

(குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருப மொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து திஹ்யா அல் கல்பீ அவர்கள் கொண்டு வந்து, புஸ்ராவின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக் ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்)தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக் கொண்டி ருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கின்றார்களா? என்று கேட்டார். அதற்கவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். ஆகவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரச வையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். அதற்கு நான், நான்(தான் நெருங்கிய உறவினன்) என்று சென்னேன். ஆகவே, அவரது முன்னிலையில் என்னை அமர்த்தி னர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினர். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சென்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல் என்றார். அல்லாஹ்வின் மீது சத்திய மாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்து விடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் ளமுஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றின நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள் என்று சென்னார். நான், அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவ ராவார் என்று பதிலளித்தேன்.

ஹெராக்ளியஸ் அவருடைய முன்னோர் களில் அரசர் எவராவது இருந்திருக்கின் றாரா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் அவர் தம்மை நபி என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக் கிறீர்களா? என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன். அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா? என்று கேட்டார். நான், இல்லை; பலவீனமான வர்கள்தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்றேன். அவர், அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றனரா? என்று கேட்டார்.

நான் இல்லை; அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர் என்று சொன்னேன். அவர், அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா? என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன்.

அவர், அவருடன் நீங்கள் போர் புரிந்த துண்டா? என்று கேட்டார். நான், உண்டு என்று சொன்னேன். அவர், அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன? என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம் என்று சொன்னேன்.

அவர், அந்த மனிதர் வாக்கு மீறுகின் றாரா? என்று கேட்டார்.நான், இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இதில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

(பிறகு) அவர், இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை நபி என) வாதித்ததுண்டா? என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்க ளிடையே அவருடைய குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்றீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று நான் கூறியிருப்பேன்.

மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமான வர்களா? என்று அவரைப் பின்பற்றுபவர் களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்று கின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தாம் இறைத்தூர்களைப் பின்பற்று வோர் ஆவர். நான் உம்மிடம் அவர் தம்மை நபி என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த்துணியாத‌த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்து கொண்டேன். உம்மிடம் நான் அவரது மார்க்கத்தை ஏற்றுக் கொண் டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டேன். அதற்கு இல்லை என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்து விடும் போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படைய மாட்டார்.) உம்மிடம் நான் அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா? என்று கேட்டேன், நீர் அதிகரித்தே வருகின்றனர் என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான் . அது முழுமையடையும் வரை (அதிகரித்துக் கொண்டே செல்லும்). மேலும் உம்மிடம் நான் அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள்தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித் தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். அவர் வாக்கு மீறுகின்றாரா? என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், அவர் வாக்கு மீறுவதில்லை என்று கூறினீர். இறைத் தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை.

நான் இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன்வைத்ததுண்டா? என்று உம்மிடம் கேட்ட போது நீர் இல்லை என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின் பற்றிச் செல்கின்ற ஒரு மனிதர் இவர் என நான் சொல்லியிருப்பேன் என்று சொன்னார்.

பிறகு ஹெராக்ளியஸ், என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகின் றார்? என்று கேட்டார். நான், தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்க மாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.

ஹெராக்ளியஸ், அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர்தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும் என்று சொன்னார்.

பிறகு ஹெராக்ளியஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

அளவிலா அருளும் நிகரிலா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்பட்ட நிருபம்:)

நேர் வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக் கொண்டால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்க ளான) விவசாயிகளின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சாரும். வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர் களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், திண்ணமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற வர்கள்-) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்.

ஹெராக்ளியஸ் அந்த நிருபத்தைப் படித்து முடித்த போது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.

நாங்கள் வெளியே வந்த போது, நான் என் சகாக்களிடம் இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வ-மை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (-ரோமரின்-) மன்னரே அவருக்கு அஞ்சுகி றாரே! என்று சொன்னேன். (அன்று முதல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதி கொண்டவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.

ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் (தம் அறிவிப்பில்) கூறியிருப்பதாவது: பிறகு ஹெராக்ளியஸ் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களை தமது மாளிகை ஒன்றில் ஒன்றுகூட்டி அவர்களிடையே அந்திமக் காலத்தில் உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்களது ஆட்சி உங்களிடமே நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? (அப்படியானால் இந்த இறுதித் தூதரை நம்புங்கள்) என்று பேசினார். இதைக் கேட்டவுடனேயே காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவது போல வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடி, வாசல் அருகில் சென்றதும், அவை தாளிடப் பட்டிருக்கக் கண்டனர். அப்போது மன்னர் ஹெராக்ளியஸ் அவர்களை என்னிடம் திருப்பிக் கொண்டு வாருங்கள் என அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (அவ்வாறே அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம்) நீங்கள் உங்கள் மதத்தின் மீது எவ்வளவு பிடிப்புக் கொண்டுள்ளீர்கள் என்பதை நான் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். நான் விரும்பியதை இப்போது ஐயமற அறிந்து கொண்டேன் என்று அவர் கூறியதும், அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர்.10

பாடம் : 5

நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒரு போதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள். மேலும், நீங்கள் எப்பொருளை தானம் செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான் (எனும் 3:92ஆவது இறைவசனம்).

4554 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளி லேயே அபூ தல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த பீருஹா (அல்லது பைருஹா) எனும் தோட்டம் தம் சொத்துகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள நல்ல(சுவையான) நீரைப் பருகும் வழக்க முடையவராய் இருந்தார்கள்.

நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒரு போதும் நீங்கள் (நிறைவான) பலனை அடைய மாட்டீர்கள் எனும் (3:92ஆவது) இறைவசனம் அருளப்பட்ட போது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விருமபுகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒரு போதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்து களில் எனக்கு மிகவும் விருப்பமானது பீருஹா (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நல்லது. அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அதைத் தர்மம் செய்து, மறுமைக்குச் சேமிப்பாக்கிக் கொள்வது நல்லது தான் .) என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட் டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர் களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன் என்றார்கள்.

அபூ தல்ஹா (ரலி) அவர்கள், அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.

ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அது அழிந்துபோய்விடும் செல்வம்தானே! என்பதற்கு பதிலாக) அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே என்று (நபிகளார் கூறியதாக) இடம் பெற்றுள்ளது.11

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அது (அழிந்து) போய்விடும் செல்வம்தானே என்று வாசித்துக் காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.)

4555 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆகவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் ளஅபூ தல்ஹா (ரலி) அவர்கள் தர்மமாகன வழங்கி விட்டார்கள். ஆனால், நான்தான் (அவ் விருவரையும் விட) அவருக்கு நெருங்கிய உறவினராய் இருந்தேன். அதிலிருந்து எனக்கு அவர் சிறிதும் கொடுக்கவில்லை.12

பாடம் : 6

(நபியே!) கூறுக: (யூதர்களாகிய) நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக் காட்டுங்கள் (எனும் 3:93ஆவது வசனத் தொடர்).

4556 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட் டார்கள். அவர்கள் நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், (உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) ரஜ்ம் (சாகும் வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா? என்று கேட்க, யூதர்கள், (அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காண வில்லை என்று பதிலளித்தனர். உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர் களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.) அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் ரஜ்ம் தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக் கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்து விட்டு, இது என்ன? என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்த போது, இது ரஜ்முடைய வசனம் என்று சொன்னார்கள். ஆகவே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.

அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள் மீது கவிழ்ந்து கொள்வதை நான் பார்த்தேன்.13

பாடம் : 7

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப்பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர் (எனும் 3:110ஆவது வசனத் தொடர்).

4557 அபூஹாஸிம் சுலைமான் அல் அஷ்ஜஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப் பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர் களாவீர் எனும் (3:110ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் நீங்கள் மக்களில் சிலரை (போர்க் கைதிகளாகச் சிறைபிடித்து) அவர்களின் கழுத்தைச் சங்கி-களில் பிணைத்துக் கொண்டுவருகிறீர்கள். (இந்நிலையிலும் மனம் திருந்தி) முடிவாக அவர்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர். (இவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும் நீங்களே) மக்களிலேயே சிறந்தவர்களாவீர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.14

பாடம் : 8

உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரிய மிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!) இறை நம்பிக்கையாளர்கள் (எந்நேர மும்) அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (எனும் 3:122ஆவது இறைவசனம்.)

4558 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!) எனும் (3:122 ஆவது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் விஷயத்திலேயே இறங்கியது. பனூ ஹாரிஸா மற்றும் பனூச-மா குலத்தாரான நாங்கள்தாம் அந்த இரு பிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) இறங்காமலிருந் திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்ப மாட்டோம். ஏனெனில், அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான் என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கும் போது, இது இறங்காமலிருந்திருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது என்று சொன்னார்கள்.15

பாடம் : 9

அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (எனும் 3:128ஆவது இறைவசனம்).

4559 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது, சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்த் (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கிறான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! என்று (சில எதிரி களுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது அல்லாஹ், அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (3:128 ஆவது) வசனத்தை அருளினான்.16

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4560 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த் என்று சொன்ன பின்பு, இறைவா! வலீத் பின் வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக!17 இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கு வாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள்.18 அதை சப்தமாகச் சொல்வார்கள். தமது ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்ப தால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (3:128 ஆவது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள்.19

பாடம் : 10

இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்). இதனால் (அல்லாஹ்) உங்களுக்கு துக்கத்திற்கு மேல் துக்கத்தைக் கொடுத்தான் எனும் (3:153ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உக்ராக்கும் (உங்கள் பின்னால்) எனும் சொல், ஆகிரிக்கும் எனும் சொல்லின் பெண்பாலாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(உஹுதுப் போர் குறித்துப் பேசும் 9:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஹ்தல் ஹுஸ்னயைன் (இவ்விரு நன்மை களில் ஒன்றை) எனும் சொற்றொடர் வெற்றி அல்லது வீர மரணத்தைக் குறிக்கின்றது.

4561 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத் தான் இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டி ருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனும் இந்த (3:153ஆவது) இறைவசனம் குறிப்பிடு கின்றது. அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.20

பாடம் : 11

பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகின்ற சிற்றுறக்கத்தை அவன் உங்களுக்கு அருளினான் எனும் (3:154 ஆவது) வசனத் தொடர்.

4562 அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போர் நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்த போது எங்களைச் சிற்றுறக்கம் ஆட் கொண்டது. அதனால் எனது வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன்.21

 

 

பாடம் : 12

அவர்கள் (எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப்படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு எனும் (3:172ஆவது) இறைவசனம்.22

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கர்ஹ் எனும் சொல்லுக்குப்படுகாயம் என்று பொருள். இஸ்தஜாபூ (இணங்கினர்) எனும் சொல்லுக்கு பதிலளித்தார்கள் என்று பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸ்தஜீபு என்பதற்கு, பதிலளிப்பார் என்று பொருள்.

பாடம் : 13

இவர்களிடம் நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக் கியது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் இவர்கள் கூறினார்கள் எனும் (3:173ஆவது) இறைவசனம்.

4563 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்ட போது அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள் என மக்கள் (சிலர்) கூறிய போது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிக மாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போது மானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் அவர்கள் கூறினார்கள்.23

4564 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது, எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் (ஹஸ்பியல்லாஹ் வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது.

 

பாடம் : 14

அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன் எனும் (3:180ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சயு(த்) தவ்வக்கூன (அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும்) எனும் சொற்றொடர் தவ்வக் துஹு பிதவ்கின் (நான் அவனுக்கு மாலையிட் டேன்) எனும் வாக்கியத்திற்கு நிகரானதாகும்.

4565 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லை யாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை -அதாவது அவரது இரு தாடைகளைப்- பிடித்துக் கொண்டு, நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம் என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு, அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும்.அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரிய தாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை (யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன் எனும் இந்த (3:180ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.24

பாடம் : 15

(இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர் களிடமிருந்தும், இணைவைத்தோரிடமி ருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும் (எனும் 3:186ஆவது வசனத் தொடர்).

4566 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபதக் நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத் தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக் கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந் தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தி ருந்த போது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, எங்கள் மீது புழுதி கிளப்பாதீர் என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் ளநபி (ஸல்) அவர்களிடம்ன மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம் என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

 பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார் என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந் தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இது தான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம் என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக் கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர் களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர் களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர் களிடமிருந்தும் இணைவைத்தோரிடமி ருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமைகாத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அது தான் உறுதி மிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறை நம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர் களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர் களை) நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். திண்ணமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109)

அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக் கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணைவைப்பா ளர்களும், சிலைவணங்கிகளும் (இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த(இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள் என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.

பாடம் : 16

தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு (எனும் 3:188ஆவது இறைவசனம்).

4567 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர் களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கி விடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடை வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும் போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டு மென்றும் விரும்புவார்கள் அப்போது தான் தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் (3:188ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

4568 அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மதீனா ஆளுநர்) மர்வான் பின் ஹகம்25 தம் காவலரிடம் ராஃபிஉ! நீ இப்னு

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று,

தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத(சாதனைகள் முத-ய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டு மென்று விரும்புகின்ற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப் பின் நாம் அனைவருமே வேதனை செய்யப் படவேண்டிவருமே! என்று (நான் வினவிய தாகக்) கேள் என்று சொன்னார். ளஅவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போதுன உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்து விட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவ-)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப்பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்து விட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதி மொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினை வூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண் டது மிக மோசமானதாகும். தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (3:187, 188)26.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 17

திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன எனும் (3:190ஆவது) இறைவசனம்.

4569 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் ளஅவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாருமானன மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள். இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்த போது (எழுந்து) அமர்ந்து கொண்டு வானத்தை நோக்கியவாறு திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன எனும் (3:190ஆவது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) உளூ (அங்க சுத்தி) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்ன போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) சுப்ஹு தொழுதார்கள்.27

பாடம் : 18

அவர்கள் நின்றவர்களாகவும், அமர்ந்தவர் களாகவும், ஒருக்களித்துப்படுத்தவர் களாகவும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (சிந்தித்து விட்டு இவ்வாறு பிரார்த்திக்கின் றார்கள்:) எங்கள் இரட்சகனே! இதை (யெல்லாம்) நீவீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே, நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக! (எனும் 3:191ஆவது இறைவசனம்.)

4570 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் ளஅவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாருமானன மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் நிச்சயம் (இன்று) அல்லாஹ்வின் தூதர்

(ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன் என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீள வாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் 3ஆவது அத்தியாயமான) ஆலு இம்ரானிலிருந்து கடைசிப் பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்க விடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து உளு (அங்கசுத்தி) செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போலவே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் தமது (வலக்) கரத்தை என் தலை மீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத்திருகி(உஷார் படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு, பிறகு வித்ர் தொழுதார்கள்.28

பாடம் : 19

எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைய வைக்கின்றாயோ, நிச்சயமாக அவனை நீ இழிவுக்குள்ளாக்கிவிட்டாய். மேலும் (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிவோர் எவருமிலர் (எனும் 3:192 ஆவது இறைவசனம்).

4571 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கி னேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் இரு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து உளு (அங்கசுத்தி) செய்தார்கள். தமது உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்தது போன்றே நானும் செய்து விட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத்திருகினார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.பிறகு வித்ர் தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவ ரான பிலால் அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.

பாடம் : 20

எங்கள் இரட்சகனே! உங்கள் இறைவனை நம்புங்கள்- என்று இறை நம்பிக்கைக்கு அழைப்பு விடுத்த ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்று, உறுதியாக நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் எங்களைவிட்டுத் தீமைகளை அகற்றுவாயாக! மேலும் நல்லோருடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக! எனும் (3:193ஆவது இறைவசனம்.)

4572 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கி னேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர் களுடைய வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்க லானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை(3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப் பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள்.

அவர்கள் செய்தது போன்றே நானும் செய்து விட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத் திருகலானார்கள்.

(பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழ லானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் 4577 ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் அவர்களும் (எனது) பனூச-மா குலத் தாரிடையே நான் (நோயுற்றுத்) தங்கியிருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) எதையும் விளங்க முடியாமல் இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்! என்று கேட்டேன். அப்போது தான் அல்லாஹ் உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடு கின்றான்:

ஓர் ஆணிண் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச்சமமானது. (இறந்து போன வருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இருபங்கு அவர்களுக்குரியதாகும். ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்)பாதி அவளுக்குரிய தாகும்.

இறந்து போனவருக்குக் குழந்தைகள் இருப்பின் அவருடைய பெற்றோரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு.

அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்.

அவருக்கு சகோதர சகோதரிகளு மிருந்தால், தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள்.

இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரணசாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான்(சொத்துகள் பங்கீடு செய்யப்பட வேண்டும்).

உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்க ளுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான்.

திண்ணமாக அல்லாஹ்(உண்மை நிலைகள் யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்த வனாகவும் இருக்கின்றான் (ஆகையால், அவன் நிர்ணயித்த பிரகாரமே பாகப் பிரிவினை செய்து கொள்ளுங்கள்) என்னும் (4:11-ஆம்) வசனம் இறங்கியது.

தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ர் தொழுதார்கள்.

பிறகு பாங்கு சொல்பவர் ளதொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டுத்ன தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.29

02.11.2009. 04:00

65-திருக்குர்ஆன் விளக்கவுரை1

அத்தியாயம் : 65

65-திருக்குர்ஆன் விளக்கவுரை1

(பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதிலுள்ள) அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அர்ரஹீம் (நிகரற்ற அன்புடை யோன்) ஆகிய இரு சொற்களும் ரஹ்மத் (கருணை) எனும் (வேர்ச்) சொல்லிலிருந்து பிறந்த இரு பெயர்ச் சொற்களாகும்.2 அர்ரஹீம், அர்ராஹிம் ஆகிய இரண்டும் ஒரே பொருளு டையவைதாம். இவை, (பொருள் தருவதில்) ஆலிம் மற்றும் அலீம் (அறிந்தவன்) எனும் சொற்களைப் போன்றவையாகும்.3

பாடம் : 1

குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை.

இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகின்றது. தொழுகையிலும் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகின்றது.4

(இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் மா-கி யவ்மித்தீன் என்பதில் இடம்பெற்றுள்ள) தீன் எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்பட விருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி என இவ்வசனத்தின் பொருள் அமையும்.) கமா ததீனு துதானு (நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் தீன் எனும் சொல்லில் தொனிக் கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகின்ற பிரதிபலனை இச்சொல் குறிக்கின்றது.)

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள்5 கூறுகின்றார்கள்:

அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) தீனை நீங்கள் நம்ப மறுக்கி றீர்கள் எனும் குர்ஆனின் (82:9ஆவது) வசனத்தில் உள்ள தீனை என்பதற்குச் செயல் களுக்கான விசாரணையை என்று பொருள்.

(56:86ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) மதீனீன் எனும் சொல்லுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் என்று பொருள்.6

4474 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாச-ல் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7 பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களி லேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாச-லிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொல்ல வில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்து-ல்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

 

பாடம் : 2

(அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர் களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும் 1:7ஆவது இறைவசனம்).9

4475 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வ லள்ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற(நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

பாடம் : 1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடை யோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் (எனும் 2:31 ஆவது வசனத் தொடர்).2

4476 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!) என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள்.3 நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென் றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று சொல்வார்கள்.

உடனே, இறை நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனி டத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படு வார்கள்.4 பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் ளஇப்ராஹீம் (அலை) அவர் களிடம்ன செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, இறை நம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள்.5 பிறகு, நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவி டம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும் போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும் போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், குர்ஆன் தடுத்து விட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப் பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.6

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர் ஆனில் யாரைக் குறித்து), நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிட் டுள்ளானோ அவர்களையே குர்ஆன் தடுத்து விட்டவர்கள் எனும் சொற்றொடர் குறிக்கிறது.

இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.

பாடம் : 2

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:7

(2:14ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களுடைய தோழர்கள் என்று பொருள்.

(2:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹீத்துன் பில் காஃபிரீன் (இந்த நிராகரிப்போரை அல்லாஹ் சூழ்ந்து கொண் டிருக்கின்றான்) எனும் சொற்றொடருக்கு, இறை மறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர் களால் தப்ப முடியாது) என்று பொருள்.

(2:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸிப்ஃகத் (வர்ணம்) எனும் சொல்லுக்கு தீன் - மார்க்கம் என்று பொருள்.

(2:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலல் காஷியீன் (உள்ளச்சமுடையோர் மீது) எனும் சொற்றொடருக்கு உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது என்று பொருள்.

(2:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பிகுவ்வத்தின் (உறுதியாக) எனும் சொல் லுக்கு, வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள் என்று பொருள்.

அபுல் ஆ-யா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:8

(2:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மரள் (நோய்) எனும் சொல்லுக்குச் சந்தேகம் என்று பொருள்.

(2:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வமா கல்ஃபஹா (பின்னால் உள்ளவர்களுக்கு) எனும் சொல்லுக்கு, அவர்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் (படிப்பினையாக நாம் ஆக்கினோம்) என்று பொருள்.

(2:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா ஷியத்த (மறு இல்லாதது) எனும் சொல் லுக்கு, வெண்மையில்லாதது என்று பொருள்.

அபுல்ஆ-யா (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(2:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யசூமூனக்கும் (கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்) எனும் சொல் லுக்கு, உங்களை ஆட்டிப் படைத்துக் கொண் டிருந்தனர் என்று பொருள். (இப்பொருளின் மூலச் சொல்லான) அல்வலாயா எனும் சொல், அல்வலாஃ என்பதன் வேர்ச் சொல்லாகும். இதற்கு இறையாண்மை என்று பொருள். அல்விலாயா என்று அதனை வாசித்தால், அதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள்.

(2:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபூம் (கோதுமை) எனும் சொல், உண்ணப்படுகின்ற தானியங்கள் அனைத்தையுமே குறிக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.9

(2:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப பாஊ (இறைமுனிவுக்கு ஆளாகிவிட் டார்கள்) எனும் சொல்லுக்கு, அவர்கள் (இறை முனிவுடன்) திரும்பினார்கள் என்று பொருள்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:

(2:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஸ்தஃப்திஹூன (வெற்றியளிக்கும்படி வேண்டினர்) எனும் சொல்லுக்கு, உதவி தேடினர் என்று பொருள்.

(2:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள வாங்கினார்கள் என்ற சொற்பொருள் கொண்ட) ஷரவ் எனும் சொல்லுக்கு, விற்றார்கள் என்று பொருள்.

(2:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ராஇனா எனும் சொல், ருஊனத் (மடமை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவர்கள் ஒரு மனிதனை மடையனாக்க விரும்பினால் அவனை நோக்கி, ராஇனா (மடையனே) என்று சொல்வார்கள்.

(2:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள போதாது எனும் சொற்பொருள் கொண்ட) லா தஜ்ஸீ எனும் சொல்லுக்குப் பயனளிக்க முடியாது என்று பொருள்.

(2:168ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள எட்டுகள் எனும் சொற்பொருள் கொண்ட) குத்வாத் எனும் சொல், கத்வ் எனும் (மூலச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்குக் கால் சுவடுகள் என்று பொருள்.

(2:124ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள கஷ்டம் கொடுத்தான் எனும் சொற்பொருள் கொண்ட) இப்தலா எனும் சொல்லுக்குச் சோதித்தான் என்று பொருள்.

பாடம் : 3

ஆகவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளைக் கற்பிக்காதீர்கள் எனும் (2:22ஆவது) வசனத் தொடர்.

4477 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் விடம் பாவங்களில் மிகப் பெரியது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு, பிறகு எது? என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது என்று சொன்னார்கள்.10

பாடம் : 4

மேலும், நாம் உங்கள் மீது மேகத்தை நிழ-டும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள் (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக் கொன்றும் அவர்கள் தீங்கி ழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள் எனும் (2:57ஆவது) இறைவசனம்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.11

4478 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (தானாக வளர்வதில்) மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.12

இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

 

பாடம் : 5

மேலும், (அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பன வற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயி-ல் சிரம் தாழ்த்தியவர் களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்து விடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்குவோம் என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள் (எனும் 2:58ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ரஃகதன் (தாரளமாக) எனும் சொல்லுக்கு விசாலமாகவும் அதிகமாகவும் என்று பொருள்.

4479 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயி-ல் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள் (2:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.13

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 6

(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ் வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற் செய்தியாகவும் நேர்வழியாகவும் விளங்குகிறது எனும் (2:97ஆவது) இறை வசனம்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.14

(ஜிப்ரயீல், மீக்காயில், இஸ்ராஃபீல் ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக் கத்திலுள்ள) ஜப்ர், மீக், சராஃப் ஆகியன அடிமை எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள ஈல் எனும் சொல்லுக்கு அல்லாஹ் என்று பொருள். (அதாவது அல்லாஹ்வின் அடியார் என்பது இவற்றின் பொருளாகும்.)15

4480 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார் என்று கூறினார்கள். பிறகு, 1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாய-ல், அல்லது தாயின் சாய-ல் இருப்பது எதனால்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளிக்க, வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே! என்று அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார் எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த்துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்க வாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாய-ல், அல்லது தாயின் சாய-ல் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனது சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலைப் பெறுகின்றது என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். ளஉடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.ன பிறகு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்? என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வரு மாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் சலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக! என்று சொன்னார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறெவரு மில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார் என்று அப்துல்லாஹ் பின் சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள்.16

பாடம் : 7

எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? எனும் (2:106ஆவது) இறைவசனம்.17

4481 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞான முடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன் என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றி விட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளான்.18

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன் (எனும் 2:116ஆவது வசனத் தொடர்).19

4482 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகன் (-மனிதன்-) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, எனக்குக் குழந்தை உண்டு என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக் கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன் என்று அல்லாஹ் கூறினான்.20

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 9

மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்றுகூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம் எனும் (2:125ஆவது) வசனத் தொடர்.

(இவ்வசனத்தின் மூலத்தில் ஒன்றுகூடும் இடம் என்ற பொருளைக் குறிக்கும்) மஸாபத்தன் எனும் சொல்லுக்கு மீளுமிடம் என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸுபூன எனும் சொல்லுக்கு மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள் என்று பொருள்.21

4483 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ் வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன் அல்லது என் இறைவன் மூன்று விஷயங் களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான். நான் ளநபி (ஸல்) அவர்களிடம்ன அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும் போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே! என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக் கொள்ளும்படி அல்லாஹ் வும் வசனத்தை அருளினான்.) மேலும் நான், (அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றார்கள். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே! என்று கேட்டேன். உடனே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, நீங்கள் ளநபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதைன நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான் என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்ற போது, உமரே! தம்முடைய துணைவியருக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்! என்று கேட்டார். அப்போது அல்லாஹ், இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்-மான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம் எனும் (66:5ஆவது) வசனத்தை அருளினான்.22

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 10

மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத் தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவாய் (எனப் பிரார்த்தித்தார்கள்) எனும் (2:127ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கவாஇத் (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: காஇதா ஆகும். (மாதவிடாய் நின்று போன முதிய) பெண்களைக் குறிக்கின்ற அல்கவாஇத் எனும் சொல்லின் ஒருமை, காஇத் என்பதாகும்.

4484 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்,) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களை விடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா? எனக் கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்) என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற் சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப் படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.23

பாடம் : 11

(நம்பிக்கை கொண்டவர்களே!) அல்லாஹ் வையும் எங்களுக்கு அருளப்பெற்ற(இவ் வேதத்)தையும், மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபி மார்கள்) மீது அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்ட வற்றையும், (இதர) அனைத்து இறைத் தூதர்களுக்கும் தங்களுடைய இரட்சகனிட மிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையி லும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர் களாக இருக்கின்றோம் என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்).

4485 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோ ருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த வர்களாக இருக்கிறோம் (2:136) என்று கூறினார்கள்.24

பாடம் : 12

அவர்கள் முன்னர் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தமது கிப்லா - தொழும் திசையிலிருந்து அவர்களைத் திருப்பியது எது? என மக்களில் அறிவீனர்கள் வினவுவார்கள். (நபியே) நீர் கூறுவீராக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுகின்ற வர்களை அவன் நேரான வழியில் செலுத்து வான் (எனும் 2:142ஆவது இறைவசனம்).

4486 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள்(ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர் களின் விருப்பமாக இருந்தது. (ஆகவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144ஆவது வசனத்தை அருளினான்.) உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன் னோக்கி)த் தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர் களுடன் தொழுதிருந்தவர்களில் ஒரு மனிதர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாச-ல் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்த வர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்தனர். அவர், அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கின்றேன். நான், நபி (ஸல்) அவர்களு டன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல, அவர்கள், அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்து விட்டிருந்தனர் அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்கு கின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனு மாவான் எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

பாடம் : 13

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (எனும் 2:143ஆவது வசனத் தொடர்.)

4487 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், இதோ வந்து விட்டேன்; என் இறைவா! கட்ளையிடு; காத்திருக்கிறேன் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், (நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத் துரைத்து விட்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அவர்கள், ஆம் (எடுத்துரைத்து விட்டேன்) என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், உங்க ளுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத் தாரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், உங்களுக்கு சாட்சியம் சொல் கின்றவர் யார்? என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே இவ்வாறே, உங்களை நாம் நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது.

நடுநிலையான (வசத்) என்பதற்கு நீதியான என்று பொருள்.26

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 14

இறைத்தூதரைப் பின்பற்றுகின்றவர் யார்; தம் குதிகால் புறமாகத் திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி(பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களுக்கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. மேலும் அல்லாஹ் உங்களது நம்பிக்கையை வீணாக்குகின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர் களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான் (எனும் 2:143ஆவது வசனத் தொடர்).

4488 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் சுப்ஹுத்தொழுகையை மஸ்ஜிது குபாவில் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, கஅபாவை (த்தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான் என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அம் மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக் கொண்டனர்.27

பாடம் : 15

(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புங்கள். மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பட்டவர்கள் அது தங்களுடைய இறைவனி டமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். மேலும், அவர்கள் செய்கின்ற வற்றைப்பற்றி அல்லாஹ் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:144ஆவது இறைவசனம்).

4489 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுத வர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28

 

பாடம் : 16

(நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர் களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோ ராயும் இல்லை. எனவே, உங்களுக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் சுயவிருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் அக்கிரமக் காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர்கள் (எனும் 2:145ஆவது இறைவசனம்).

4490 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையில் இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட)உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.29

பாடம் : 17

எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கின் றோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளை களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் அதை/அவரை (-கஅபாவை அல்லது நபி முஹம்மதை-) நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கி றார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனி டமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிடவேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்).

4491 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் ஒருவர் வந்து, சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவி லுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்க ளுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள் என்று சொன்னார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசை யான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

பாடம் : 18

ஒவ்வொரு(மதத்த)வருக்கும் அவரவர் திரும்பக் கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கி ருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன் றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்).30

4492 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31

 

 

பாடம் : 19

மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள பாதி எனும் சொற்பொருள் கொண்ட) ஷத்ர் எனும் சொல்லுக்கு நோக்கி (திசையில்) என்று பொருள்.

4493 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையிலிருந்த போது, ஒரு மனிதர் வந்து, சென்ற இரவுளநபி (ஸல்) அவர்களுக்குன குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32

பாடம் : 20

மேலும், (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமேத் திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத் தொடர்).33

4494 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையில் இருந்த போது ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

பாடம் 21

நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர் மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக அறிபவனுமா வான் எனும் (2:158 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஷஆயிர் (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு அடையா ளங்கள் என்று பொருள். அதன் ஒருமை ஷஈரா என்பதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸஃப்வான் எனும் சொல்லுக்கு கற்கள் என்று பொருள்.

எதையும் முளைக்கவிடாத வழுக்குப் பாறைகளும் ஸஃப்வான் எனப்படுவதுண்டு. இதன் ஒருமை ஸஃப்வானா என்பதாகும். இதுவும் ஸஃபாவும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) ஸஃபா என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

4495 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கின் றார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமி டையே சுற்றி வருவது குற்றமில்லை என்ற (2:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருது கிறீர்கள்? எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா (ரலி), (என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த முஷல்லல் எனும் குன்றில் உள்ள) மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) குதைத் எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்த போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகின்றோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போது தான் அல்லாஹ், நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை என்ற (2:158) இந்த வசனத்தை அருளினான்.34

4496 ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின் போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். ஆகவே, இஸ்லாம் வந்த போது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில் லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்விரண்டுக்குமி டையே சுற்றிவருவதில் குற்றமில்லை எனும் (2:158ஆவது) இவ்வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள்.35

பாடம் : 22

அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர் எனும் (2:165 ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அன்தாத் (இணைகள்) எனும் சொல்லுக்கு நேர் எதிரானவைகள் (அள்தாத்) என்று பொருள். இதன் ஒருமை நித்து என்பதாகும்.

4497 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார் என்று கூறினார்கள். (அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்து விடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார் என்று நான் சொன்னேன்.36

பாடம் : 23

இறை நம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாக வும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் யாராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உஃபிய (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு விட்டுக் கொடுக்கப் பட்டால் என்று பொருள்.

4498 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்து விடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் ளமுஹம்மத் (ஸல்) அவர்களின்ன இந்தச் சமுதாயத்திற்கு, கொலை செய்யப்பட்டவர்களுக்ககாகப் பழிவாங்குவது உங்க ளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும் என்று கூறுகிறான்.

மன்னிப்பளித்தல் (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.

இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள் மீது கடைமையாக்கப் பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகின்றானோ அவனுக்கு- அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கின் றானோ அவனுக்கு- துன்புறுத்தும் வேதனை உண்டு. (2:178)

இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4499 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொலைக் குற்றத்தில்)அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.37

4500 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரி (அத்தை) ருபய்யிஉ (பின்த் நள்ர்) அவர்கள் ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்து விட் டார்கள். ஆகவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினர். அவர்கள் (மன்னிக்க) மறுத்து விட்டனர். ஆகவே, என் அத்தையின் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்து விடவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்கு வதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்து விட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரது முன்பல் உடைக்கப் படக்கூடாது என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்கு வதாகும் என்று சொன்னார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்து விட்டனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு(எதை யேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறை வேற்றி (மெய்யாக்கிக் காட்டி)விடுகின்றான் என்று கூறினார்கள்.38

பாடம் : 24

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்க ளுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக் கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும்பொருட்டு (எனும் 2:183ஆவது இறைவசனம்).

4501 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமை யான போது நபி (ஸல்) அவர்கள், (ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகின்றவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் அதை விட்டுவிடலாம் என்று சொன்னார்கள்.

4502 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையான போது விரும்பியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டு விட்டனர்.39

4503 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்த போது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே! என்று (நான் நோன்பு நோற்கா மல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், ரமளான் (நோன்பு) கடமை யாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையான போது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கை விடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள் என்று சொன்னேன்.

4504 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்த போது அந்நாளில் தாமும் ƒநான்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையான போது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்க மாகி, ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆகிவிட்டது.40

பாடம் : 25

(நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில் தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளவேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவ ளிப்பது கடமையாகும். ஆனால், எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம்.

அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப் பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் விட்டுவிடலாம் என்று அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்.41

ஹஸன் அல்பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42

(குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கார்ப்பிணிப்பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம்.

தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பை விட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்து விட்ட பின்னால், ஓராண்டு அல்லது ஈராண்டுகள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக் கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள்.

(இந்த 2:184ஆவது வசனத்திலுள்ள சிரமப்படுகின்றவர்கள் எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் யுதீகூனஹு என்றே ஓதுகிறார்கள். இதுவே பெரும்பான்மை(குர்ஆன் அறிஞர்களின் நிலை)யாகும்.43

4505 அதாஉ பின் அபீ ரபாஹ்-(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வஅலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத் துன் தஆமு மிஸ்கீன் ளரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்ன எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று சொன்னார்கள்.

பாடம் : 26

உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத் தொடர்).

4506 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், (2:184ஆவது வசனத்தில் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்பதன் மூலத்தை) ஃபித்யத்து தஆமி மஸாகீன என்று (ஏழைகள் எனப் பன்மை யாக) ஓதிக்காட்டி இது, சட்டம் மாற்றப்பட்டு விட்ட வசனமாகும் என்று கூறினார்கள்.

4507 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்ட போது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்! என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.44

அபூ அப்துல்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் பின்அபீ உபைத் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்து விட்டார்கள்.45

பாடம் : 27

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியி ழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும் விட்டான். ஆதலால், இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) ஒன்று கூடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக் கொள்ளுங்கள் (எனும் 2:187ஆவது வசனத் தொடர்).

4508 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாத நோன்பு கடமையான போது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ், (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்து விட்டான் எனும் (2:187ஆவது) வசனத்தை அருளினான்.46

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

 

 

பாடம் : 28

இன்னும் இருள் ரேகையிலிருந்து விடிய-ன் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல் களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும் போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடி விடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புக ளாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்கு கிறான் எனும் (2:187ஆவது) வசனத் தொடர்.

இஃதிகாஃப் இருப்பவர் என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள்.

4509 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இந்த 2:187ஆவது வசனம் அருளப்பட்ட வுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலை யானதும் ளநபி (ஸல்) அவர்களிடம் சென்று,ன அல்லாஹ்வின் தூதரே! என் தலையணையின் கீழே (இந்த இரு கயிறுகளையும்) வைத்திருந் தேன். (ஆயினும் இரண்டையும் பிரித்தறிய முடியவில்லையே?!) என்று சொன்னேன். அதற்கு அவர்கள், வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.47

4510 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை என்ற (2:187ஆவது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள்தாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந் தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்)தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, (அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பக-ன் வெண்மையுமாகும் என்று கூறினார்கள்.

4511 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பத்தில்) வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள் எனும் (2:187ஆவது வசனத்தின்) தொடர் விடிய-ன் (மினல் ஃபஜ்ர்) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக் கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், மினல் ஃபஜ்ர் (விடிய-ன்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும்தான் இது குறிக்கிறது என்று அறிந்து கொண்டார்கள்.48

 

 

 

பாடம் : 29

நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் (எனும் 2:189ஆவது வசனத் தொடர்).

4512 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டி ருந்தார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள் எனும் (2:189ஆவது) வசனத்தை அருளினான்.49

பாடம் : 30

குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள். அவர்கள் (குழப்பத்திலிருந்து) விலகிக் கொண்டால் அப்பால் அநீதி இழைப்போர் மீதேயன்றி போர்தொடுத்தல் என்பது இல்லை (எனும் 2:193ஆவது இறைவசனம்).

4513 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப(வருட)த்தில் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இரு மனிதர்கள் வந்து, மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர் (ரலி) அவர்களின் புதல்வரும் நபி (ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது? என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும்,

 குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள் என்று (2:193ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூற வில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ளஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்ன குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாக ஆனது. ஆனால் (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகின் றீர்கள்! என்றார்கள்.50

4514 நாஃபிஉ (ரஹ்) அவர்கள்கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், (காரி ஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு ஹஜ் செய்கின்றீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கை விட்டுவிடுகின்றீர்களே, ஏன்?அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்! என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது. 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர் இறையில்ல மான) கஅபாவில் ஹஜ் செய்தல் என்றார்கள்.

அந்த மனிதர், அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தனது வேதத்தில் இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்புமீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ் வுடைய கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள் என்றும் (49:9), குழப்பம் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள் என்றும் (2:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் செவியுறமாட்டீர்களா? என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், (நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின்படி) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட) தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட) ஒருவர் தமது மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்தினர். முடிவில், இஸ்லாம் அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆன போது குழப்பம் ஏதும் இருக்கவில்லை என்றார்கள்.

4515 அந்த மனிதர், அலீ (ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான் (ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின் போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்து விட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள்தாம் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி (ஸல்) அவர்களின் மருமகனுமாவார் என்று கூறியவாறே, (நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கின்றீர்களே இது தான் அலீ அவர்களின் வீடாகும் என்று தமது கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

பாடம் : 31

மேலும், நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர் களை நேசிக்கின்றான் எனும் (2:195ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) தஹ்லுகா (அழிவு) எனும் சொல்லும் ஹலாக் எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் அழிவு எனும் பொருள் கொண்ட வேர்ச் சொற்களேயாகும்.)

4516 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் செல விடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள் எனும் (2:195ஆவது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.51

 

 

பாடம் : 32

ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இரு(ந்து பலியிடுவதற்கு முன்பே தலை முடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலிகொடுத்தல் ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).

4517 அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளிவாச-ல் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாச-ல் - கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று கூறிவிட்டு, உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ஸாவு உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும் என்று சொன்னார்கள்.52

பாடம் : 33

எவரேனும் உம்ரா(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப்பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாத வர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமை யான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).53

4518 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தமத்துஉ (ஹஜ் தொடர்பான இந்த 2:196ஆவது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே, நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடைசெய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைத் தமது (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

முஹம்மது பின் இஸ்மாயீல் புகாரீ யாகிய நான் கூறுகிறேன்: அவர் உமர் (ரலி) அவர்கள்தாம் என்று சொல்லப்படுகின்றது.54

பாடம் : 34

(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது (எனும் 2:198ஆவது வசனத் தொடர்).

4519 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். ஆகவே, ஹஜ் பருவத்தில், உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது எனும் (2:198ஆவது) வசனத் தொடர் அருளப்பட்டது.55

 

பாடம் : 35

பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (அரஃபாத் எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத் தொடர்).

4520 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்த-ஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள் எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்து விட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள் எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.56

 

4521 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது தமத்துஉ ஹஜ் செய்கின்ற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுத லாக) இறையில்லம் கஅபாவை அவர் தவாஃப் செய்யலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகிவிட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்கவேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானிப் பிராணி கிடைக்க வில்லையென்றால் ஹஜ் நாட்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்து விட் டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ருத் தொழுகையிலிருந்து இரவின் இருள்படரும் வரைத் தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல் லாம் புறப்பட்டு திரும்பிச் செல்லும் போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்த-ஃபாவில் கழிக்கட்டும். பிறகு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரட்டும்! (அவர் மட்டுமன்றி) நீங்கள் (அனைவரும்) விடியும் வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும், லாஇலாஹா இல்லல்லாஹு (வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்து தான் திரும்பிக் கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கருணையுள்ளவனும் ஆவான்(2:199)

(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறியும் வரை (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.)

 

பாடம் : 36

(அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவு கூரும் மக்கள் உள்ளனர்.) அவர்களில் சிலர், எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக! எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 2:201ஆவது இறைவசனம்).

4522 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக? எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

 

பாடம் : 37

அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத் தொடர்).

(2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஸ்ல் எனும் சொல்லுக்கு உயிரினம் என்று பொருள் என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

4523 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத் தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்பவனே யாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.57

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடம் : 38

உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனை யான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்து விடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங் களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட் டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது (எனும் 2:214ஆவது இறைவசனம்).

4524 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது எனும் (12:110ஆவது) வசனத்தில் (குஃத்திபூ -இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள்- என்று வாசிக்காமல்) குஃதிபூ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்) என்று வாசித்து விட்டு அவ்வசனத்திலிருந்து, இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அலைக் கழிக்கப்பட்டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது) எனும் (2:214ஆவது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள்.58

பிறகு நான் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் ளகுஃதிபூ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்ன அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.

4525 அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்த தில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற் படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன என்று சொன்னார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், வ ழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் குஃத்திபூ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.59

பாடம் : 39

உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர் கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள்தாம் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம்.

4526 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேச மாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக் கொண்டேன். அவர்கள் அல்பகரா அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்றேன். அதற்கு அவர்கள், இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.60

4527நாஃபிஉ(ரஹ்)அவர்கள் கூறியதாவது:

 ஆகவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள் எனும் (2:223ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர் (ரலி) அவர்கள், மனைவியிடம் அவளுடைய ..... கணவன் புணரலாம் என்று குறிப்பிட்டார்கள்.61

 

4528 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, உங்கள் பெண்கள் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம் இறங்கியது.62

 

 

பாடம் 40

நீங்கள் (உங்களுடைய) மனைவியரை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா)தவணையின் இறுதியை அடைந்து விட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம் (எனும் 2:232 ஆவது வசனத் தொடர்).

4529 மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டு வந்தனர்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் விவாகரத்துச் செய்து இத்தா காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். ளஆகவே, இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.ன பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்ப மிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்து விட்டார்கள்.

அப்போது தான் , அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம் எனும் (2:232 ஆவது) வசனம் இறங்கிற்று.63

பாடம் 41

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்து கொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர் களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்).

(2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யஅஃபூன (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு அன்பளிப் பாகக் கொடுத்தால் என்று பொருள்.

4530 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டால் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான் எனும் (2:240 ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங் களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்? அல்லது இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன் என்று பதிலளித்தார்கள்.64

4531 அப்துல்லாஹ் பின் அபீ நஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களு டைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப் பார்கள் (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(கணவன் இறந்துபோன) அந்தப் பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த இத்தாவைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் உங்களில் மனைவி யரை விட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப் பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப) மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால்(நான்கு மாதம் பத்து நாட்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத் தான் வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார் களாக. ஆயினும், அவர்களாகவே வெளி யேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) இத்தா கால வரம்பு கணவனை இழந்த கைம் பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65

(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிட மிருந்து இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் இத்தா இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருப்பாள். இதையே (தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக எனும் இந்த இறைவசனத் தொடர் குறிக்கின்றது.

ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்ன அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் இத்தா இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெயியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் சாசனம் செய்து தர வேண்டுமென்ற முறை)யை மாற்றி விட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66

இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற் சொன்ன கருத்தைப் போலவே அதாஉ அவர்கள் வழியாக இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

4532 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67 அப்போது அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்ட தில்லையே என்று சொன்னார்.

உடனே நான் உரத்த குரலில், கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்ச லுடையவன்தான் என்று சொன்னேன்.68 பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) மாலிக் பின் ஆமிர் அல்லது மாலிக் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னை விட்டு (கணவன்) இறந்து விட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது? என்று கேட்டேன். அதற்கவர், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (கணவன் இறந்து விட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள அல்பகரா எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (அத்தலாக் எனும்) சிறிய அத்தியாயம் இறங்கிற்று என்று கூறினார்கள்.69

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், (வழியில்) நான் அபூ அதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன் என்று (சந்தேகமின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது.

பாடம் : 42

(நம்பிக்கை கொண்டவர்களே!) அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள் (எனும் 2:238ஆவது வசனத் தொடர்).

4533 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறு களையும் நெருப்பால் நிரப்புவானாக! என்று சொன்னார்கள்.70

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத்துடன் (அல்லது அவர்களுடைய வயிறுகளையும் என்று) சொன்னார்கள்.71

 

 

 

 

பாடம் : 43

மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் (எனும் 2:238ஆவது வசனத் தொடர்).

(இதன் மூலத்திலுள்ள) கானித்தீன் எனும் சொல்லுக்குக் கீழ்படிந்தவர்களாக என்று பொருள்

4534 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். அனைத்துத் தொழுகை களையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் எனும் (2:238 ஆவது) வசனம் இறங்கும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் இறங்கியவுடன் பேசாம-க்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72

பாடம் : 44

நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனத்தில் இருந்தவர்களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்த பிரகாரம் அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள் (எனும் 2:239ஆவது இறை வசனம்).

இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:73

(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) குர்சிய்யுஹு (அவனது அரசாட்சி) எனும் சொல்லுக்கு அவனது அறிவு என்று பொருள்.

(2:247ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பஸ்தத்தன் (அதிகம்) எனும் சொல்லுக்கு கூடுதல், சிறப்பு என்று பொருள்.

(2:250ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃப்ரிஃக் (பொழிவாயாக!) எனும் சொல்லுக்கு இறக்கியருள் என்று பொருள்.

(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) வலா யஊதுஹு (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு (வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம் பெற்றுள்ள) ஆதனீ என்பதற்கு எனக்குப் பளுவாகிவிட்டது என்று பொருள். ஆது என்பதற்கும் அய்த் என்பதற்கும் பலம் என்று பொருள்.

(அதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) சினா எனும் சொல்லுக்குச் சிற்றுறக்கம் என்று பொருள்.

(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.

(2:258ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃப புஹித்த (வாயடைத்துப் போனான்) என்பதற்கு அவனது ஆதாரம் போய்விட்டது என்று பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காவியா (விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, மக்கள் சஞ்சாரமற்ற என்று பொருள். உரூஷிஹா (முகடுகள்) என்பதற்கு அதன் கட்டடங்கள் என்று பொருள்.

 (2:259ஆவது வசனத்தின் மூலத்தில்

ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) நுன்ஷிருஹா எனும் சொல்லுக்கு அதை வெளிப்படுத்துகிறோம் என்று பொருள்.

(2:266ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) இஃஸார் (சூறாவளி) எனும் சொல்லுக்குத் தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகின்ற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்:

(2:264ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸல்த் (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப்பாறை) என்று பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(2:265ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வாபில் என்பது பெருமழையும் அத்தல்லு என்பது தூறலும் ஆகும். இது இறை நம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும்.

(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) என்பதற்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.

4535 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:

(முத-ல்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப் பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்து விட்டால், சலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாத வர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இது வரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுது கொள்வர்.

பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக,

இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுது விட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.

இதன் அறிவிப்பாளரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருது கிறேன் என்று நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.74

பாடம் : 45

உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார் களாக! (எனும் 2:240ஆவது வசனத் தொடர்).

 

4536 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்ப வர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக! எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறை வசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவிடு! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்ற மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.75

பாடம் 46

இப்ராஹீம் (இறைவனை நோக்கி,) இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு! எனக் கூறிய போது, அவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். (அதற்கு) ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று அவர் கூறினார். (அதற்கு இறைவன்) நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உங்களிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தை, ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு அவற்றை நீங்கள் அழையுங்கள்! அவை உங்களிடம் விரைந்து வந்து சேரும். திண்ணமாக அல்லாஹ், வல்லோனும் நுண்ணறிவு உள்ளோனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்றான் (எனும் 2:260 ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுர்ஹுன்ன (அவற்றை உங்களிடம் வைத்து) எனும் சொல்லுக்கு அவற்றைப் பல துண்டுகளாக்கி என்று பொருள்.

4537 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம்கொள்ள அதிகத் தகுதியுடைவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்க வில்லை.) ஏனெனில், என் இறைவா! மரித்த வர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர்கள், ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.76

பாடம் : 47

நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக் கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந் தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகை யான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடைகிறது. வலு வில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலையில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்து போவதை உங்களில் எவரேனும் விரும்பு வாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான் எனும் (2:266 ஆவது) இறைவசனம்.

4538 (அப்துல் அஸீஸ் பின் அப்தில் ம-க்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுலைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிட மிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:

உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் நபித் தோழர்களிடம், நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து... (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்? என்று கேட்க, அவர்கள், அல்லாஹ்வே அறிந்தவன் என்று பதிலளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் கோபமடைந்து, எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டி லொன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள் என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அதைப் பற்றி என் உள்ளத்தில் ஞானம் உள்ளது. இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்ப மாகக் கருதிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், என்ன செயல்? என்று கேட்க, இப்னு அப்பாஸ், ஒரு செயலுக்கு என்று (மீண்டும்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மகத்துவமுமிக்க அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்து வந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்து விட்டது; (அதைத் தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்) என்று சொன்னார்கள்.77

பாடம் : 48

(பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் தடுத்துவைக்கப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் நடமாட இயலாதவர்கள். அவர்கள் இரவாததால், அறியாதோர் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமைத்) தோற்றத்தைக் கொண்டு அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத் தொடர்).

(தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான் என்று சொல்வதற்கு அல்ஹஃப அலய்ய என்று (அரபுகள்) கூறுவர். இச் சொல்லின் வேர்ச் சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் இல்ஹாஃப் (வற்புறுத்தல்) என இடம் பெற்றுள்ளது.

4539 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட் டார்கள் எனும் (இந்த 2:273ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 49

வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர்கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே எனக் கூறியதனாலேயாம். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 2:275ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்மஸ்ஸு (தீண்டல்) எனும் சொல்லுக்குப் பைத்தியம் என்று பொருள்.

4540 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி

வாச-ல் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.78

 

 

 

பாடம் : 50

அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கின் றான் (எனும் 2:276ஆவது வசனத் தொடர்).

(அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்து விடுகின்றான்.

4541 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாச-ல் (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

 

 

 

பாடம் : 51

(வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விட மும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும் 2:279ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃபஃதனூ எனும் சொல்லுக்கு அறிந்து கொள்ளுங்கள் என்று பொருள்.79

4542 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ல் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பாடம் : 52

(உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகின்றவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின், தர்மமாக வழங்கிவிடுவதே மிகவும் மேலான தாகும் (எனும் 2:280ஆவது இறைவசனம்).

4543 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.80

 

 

 

பாடம் : 53

ஒரு நாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்தவற்றுக்கு நிறைவாக(ப் பிரதிபலன்) அளிக்கப்படுவான். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 2:281 ஆவது இறைவசனம்).

4544 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81

 

 

பாடம் : 54

உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 2:284ஆவது வசனத் தொடர்).

4545 மர்வான் அல் அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் - உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் எனும் இந்த (2:284 ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.82

பாடம் : 55

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்.) (இவர்கள்) யாவரும், அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங் களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்றுச் சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்ட மாட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம்; வழிப்பட்டோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது என்றும் வேண்டுகிறார்கள் (எனும் 2:285 ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(2:286ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இஸ்ரன் (பளு, சுமை) எனும் சொல்லுக்குப் பொறுப்பு என்று பொருள்.

02.11.2009. 03:16




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
122 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி