65-திருக்குர்ஆன் விளக்கவுர16
பாடம் : 1
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(65:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வபால் (விளைவு) எனும் சொல்லுக்கு தண்டனை என்று பொருள்.
4908 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரை விவாகரத்துச் செய்து விட்டார்கள். அப்போது அவர்களுடைய துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட் டார்கள். பிறகு, அவர் (அப்துல்லாஹ் பின் உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரைத் தம் மனைவியாகவே வைத்துக் கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்து விட்டால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மை யாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும் என்றும் கூறினார்கள்.2
பாடம் : 2
மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவரது காரியத்தை அவன் எளிதாக்குகின் றான் (எனும் 65:4ஆவது வசனத் தொடர்).
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) உலாத்துல் அஹ்மால் (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை ஃதாத்து ஹம்ல் (கர்ப்பிணி) என்பதாகும்.
4909 அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண் (ணின் இத்தா பிரசவத்தோடு முடிந்து விடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள் என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இரு தவணைகளில் பிந்தியது என்று கூறினார்கள்.3
உடனே நான் ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,ன கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும் (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் குரைப் என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்முசலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா -ரலி) இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு இத்தா பிரசவம் வரையில்தான்.)
4910 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மார்க்க அறிஞர்) அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் இருந்த அவையில் இருந்து கொண்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்து விட்ட கர்ப்பிணியின் இத்தா காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், இரு தவணைகளில் பிந்தியது என்று கூறினார்கள். உடனே நான், அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கிடைத்த சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்களுடைய நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர்.
நான் அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். ஆகவே, நான் அப்துல்லாஹ் பின் உத்பா (தற்போது) கூஃபாவில்தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவர் மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன் என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகைசெய்தவர்) கூச்சப்பட்டார். மேலும், அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா அவர்கள் ஆனால், அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுடைய தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்ஊத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே! என்று சொன்னார். ஆகவே நான் அபூ அத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), இது குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர் களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒருபெண் விஷயத்தில் இத்தா காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர் களா? அவளுக்குச் சலுகை காட்டக்கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (அத்தலாக் எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தொடர்பான (அல்பகரா எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது. (பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இது தான் :) மேலும் கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும் (65:4)4
ள66ன அத்தஹ்ரீம் அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
பாடம் : 1
நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்? அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான் (எனும் 66:1ஆவது இறைவசனம்).
4911 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றை சத்தியமிட்டு) விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக் கிறது எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.2
4912ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள்
முத-ல் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர் களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறிட வேண்டும்.
(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே! என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)
பாடம் : 2
அல்லாஹ் நீங்கள் செய்யும் சத்தியத்தி(ன் கட்டுப்பாட்டி)லிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித்துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறி வாளன் (எனும் 66:2ஆவது இறைவசனம்).
4913 இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.
(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக் கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர் களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள்.3
உடனே நான், அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை என்று சொன்னேன். அப்போது (இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன் என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்து ரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)
(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த போது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப்பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார்.
உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றார். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே! என்று (அறிவுரை) சொன்னேன்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, ளநபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவி யாரானன உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.4
இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்து விட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்து விட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.
மேலும், அன்சாரிகளில் எனக் கொரு நண்பர் இருந்தார். நான் ளநபி (ஸல்) அவர்களது அவையில்ன இல்லாத போது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாத போது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.
(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டி ருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். திறங்கள், திறங்கள் என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான்,ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்து விட்டானா? என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள் என்றார்.
உடனே நான், ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், இந்த உமர் பின் கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்! என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்து விட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமி டையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கு மிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந் தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர் களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ஏன் அழுகிறீர்கள்? என்றார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அ(ம்மன்ன) வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள்.5
பாடம் : 3
நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். (ஆனால்,) அதை அந்தத் துணைவி (மற்றொரு துணைவிக்கு) தெரிவித்து விடவே, நபிக்கு அல்லாஹ் அதை வெளிப்படுத்தினான். அப்போது, நபி அதில் சிலவற்றை (அந்தத் துணைவியிடம்) சொல்லிக்காட்டிவிட்டு சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார். இவ்வாறு (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் துணைவியிடம் தெரிவித்த போது தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்? என்று அந்தத் துணைவி கேட்டார். அதற்கு நபி அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான் என்று பதிலளித்தார் (எனும் 66:3ஆவது இறைவசனம்).
இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்.6
4914 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் (ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டி ருந்தேன். ஆகவே, (வாய்ப்புக் கிடைத்த போது அவர்களிடம்) இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல் பட்ட இரு துணைவியர் யார்? என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள் ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.7
பாடம் : 4
நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், (அது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில்,) உங்களிருவரின் இதயங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து விட்டிருக்கின்றன எனும் (66:4ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃகத் எனும் சொல்லுக்குப் பிறழ்தல் என்று பொருள். (இதன் தன்மை வினைச் சொற் களான) ஸஃகவ்த்து மற்றும் அஸ்ஃகைத்து ஆகியவற்றுக்கு நான் சாய்ந்தேன் என்று பொருள். (6:113ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) - தஸ்ஃகா எனும் சொல்லுக்கு அவை சாய்வதற்காக என்று பொருள். தழாஹரூன எனும் சொல்லுக்குக் கூடிப் பேசிச் செயல் படுதல் என்று பொருள். ழஹீர் எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
(66:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கூ அன்ஃபுசக்கும் வஅஹ்லீக்கும் (உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்பதன் கருத்தாவது: இறையச்சத்தைக் கைக் கொள்ளுமாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் அறிவுரை பகர்வதுடன், அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பியுங்கள்.
4915 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார்? என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடு நாட்களாக) எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்து விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஒருமுறை) நான் ஹஜ்ஜுக்காக உமர் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான் எனுமிடத்தில் இருந்த போது உமர் (ரலி) அவர்கள் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது உளூ (அங்கசுத்தி) செய்தவற்கான தண்ணீரை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காகத் தண்ணீர்க் குவளையை எடுத்து வந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இது தான் ) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்ன கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்? என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் (அவர்கள் இருவரும்)! என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாடம் : 5
நபி (தம் துணைவியராகிய) உங்களை விவாகரத்துச் செய்து விடுவாராயின், உங்களுக்கு பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்கிட முடியும். அவர்கள் (வாய்மையான) முஸ்லிம்களாய், இறை நம்பிக்கையுள்ளோராய், கீழ்ப்படிப வர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர் களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயும், கன்னிகளாயும் இருப்பார்கள் (எனும் 66:5ஆவது இறை வசனம்).
4916 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5ஆவது) இறைவசனம் இறங்கிற்று.8
பாடம் : 1
(அவன்) இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல் லாம் நபியே! நீங்கள் அடங்கிவிடாதீர்கள் (எனும் 68:13ஆவது இறைவசனம்).
4917முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(68:13ஆவது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அவன் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனா வான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பது போல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது என்று கூறினார்கள்.2
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீன மானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
பாடம் : 2
கா-ன் திரை அகற்றப்ப(ட்)டு (இறைவன் காட்சியளிக்கு)ம் அந்த (மறுமை) நாளில் (மக்களெல்லாம் தாமாகவே) சிரவணக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போது கூட (இறைமறுப்பாளர்களான) இவர்கள் (அதற்கு) சக்திபெற மாட்டார்கள் (எனும் 68:42ஆவது இறைவசனம்).
4919 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத் தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கை யுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கை யுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 1
(உங்கள் தெய்வங்களாகிய) வத், சுவாஉ, யஃகூஸ், யஊக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை(க் கேட்பாரற்று) விட்டுவிடாதீர்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டனர் (எனும் 71:23ஆவது இறைவசனம்).
4920 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் (காலத்து) மக்களிடையே (வணங்கப்பட்டுக் கொண்டு) இருந்த சிலைகள், பின்பு அரபுகளி டையே இருந்தன. வத் என்பது, தூமத்துல் ஜந்தல் எனும் இடத்திலிருந்த கல்ப் குலத்தாரின் சிலையாகும்.2 சுவாஉ என்பது பனூஹுஃதைல் குலத்தாரின் சிலையாகும்.3 யஃகூஸ் என்பது பனூமுராத் குலத்தாரின் சிலையாக இருந்தது. பின்னர், ஸபஉ சமுதாயத்தாருக்கு அருகில் (யமனிலுள்ள) ஜவ்ஃப் எனுமிடத்தில் வசித்துவந்த பனூ ஃகுதைஃப் குலத்தாருக்குச் சொந்தமானது. யஊக் என்பது பனூ ஹமதான் குலத்தாரின் சிலையாகும். நஸ்ர் என்பது (யமனின் பழங் குடியரான) ஹிம்யர் மக்களின் சிலையாகும். இவர்கள் துல்கிலாஃ என்பவருடைய சந்ததியினராவர். (தெய்வச் சிலைகளாகக் கற்பிக்கப்பட்ட) இவை (ஐந்தும்) நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்து நல்ல மனிதர்களின் பெயர்களேயாகும். பின்னர் இவர்கள் மரணமடைந்தபொழுது இவர்களுடைய மக்களின் மனத்தில் ஷைத்தான், அ(ந்த நல்ல)வர்கள் அமர்ந்து வந்த அவைகளில் சிலைகளை நிறுவுங்கள். (அவர்களின் நினைவாக) அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்! என்று எண்ணச் செய்தான். (அதன்படியே) அவர்களும் செய்தனர். அப்போது அந்த சிலைகள் வணங்கப்படவில்லை. ஆனால், (தங்களின் பெரியவர்களை நினைவுகூர்வதற்காகச் சிலை நிறுவிய) அந்த மக்களும் இறந்து, (அந்தச் சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணம் குறித்த) அறிவும் மங்கிவிட்ட போது அச்சிலைகள் வணங்கப்படத் தொடங்கின.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (72:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) -பத் எனும் சொல்லுக்கு உதவியாளர்கள் என்று பொருள்.
4921 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்தி ருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்தி ருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திக ளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண் டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத் தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, (நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்... என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி வஹியின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.2
பாடம் : 1
4922 யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் போர்த்தியி ருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். நான் (நபியே!) படைத்த உங்கள் இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு அபூ சலமா அவர்கள், நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப்பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காண வில்லை. ஆகவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன்.2 ஆகவே, நான் (என் துணைவியா ரான) கதீஜாவிடம் சென்று, எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்! என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும் விட்டார்கள்; என் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய் யுங்கள். மேலும், உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.3
பாடம் : 2
எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள் எனும் (74:2ஆவது) இறைவசனம்.
4923 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஹிரா மலைக் குகையில் தங்கியி ருந்தேன். (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸ் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்திடுங்கள் (எனும் 74:3ஆவது இறை வசனம்).
4924 யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான் (நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ சலமா (ரஹ்) அவர்கள், நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் எனும் (74:1ஆவது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக் எனும் (96:1ஆவது) வசனம்தான் (முதன் முத-ல் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப்போவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் ஹிரா மலைக் குகையில் தங்கியி ருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவி டம் சென்று எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்! என்று கூறினேன். மேலும் எனக்கு, போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன.4
பாடம் : 4
மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மை யாக வைத்திருங்கள் (எனும் 74:4ஆவது இறைவசனம்).
4925 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின் வருமாறு) கூறினார்கள்:
நான் நடந்து போய் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ஹிராவில் இருந்த போது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள் ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என்துணைவியாரான) கதீஜாவிடம், எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று சொன்னேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், போர்த்தியிருப்ப வரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்தி லிருந்து விலகியிருங்கள் எனும் (74:1-5) வசனங்களைத் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.5
(மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.
பாடம் : 5
அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் (எனும் 74:5ஆவது இறைவசனம்).
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் எனும் சொல்லுக்கும் அர்ரிஜ்ஸ் எனும் சொல்லுக்கும் வேதனை என்று பொருள் எனக் கூறப்படுகின்றது.
4926 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வஹீ (வேத அறிவிப்பு) நின்றுபோயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள் ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்து விட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றேன். அப்போது, போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடை களைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் எனும் (74:1-5) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் (அசுத்தம்) எனும் சொல், சிலைகளைக் குறிக்கும். (மேற்கண்ட வசனம் அருளப்பெற்ற) பின்னர் வஹீ தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.6
(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் (எனும் 75:16ஆவது இறைவசனம்).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுதா எனும் சொல்லுக்கு, வெறுமனே என்று பொருள்.
(75:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) - யஃப்ஜுர அமாமஹு (எதிர்காலத்திலும் தீமை செய்து கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்லிக் கொண்டே பாவங்களைச் செய்ய விரும்புகிறான் என்று பொருள்.
(75:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா வஸர எனும் சொல்லுக்கு, எந்தப் புக-டமும் இருக்காது என்று பொருள்.
4927 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது, நபி (ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்து விடப்போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தமது நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்- அப்போது, (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2
பாடம் : 2
அதனை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் (எனும் 75:17ஆவது இறை வசனம்).
4928 மூசா பின் அபீ ஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டி ருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.
அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் எனும் (75:17ஆவது) வசனத்திற்கு நாமே உங்களது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்று சேர்ப்போம். நீங்கள் அதனை ஓதும்படி செய்வோம் என்று பொருள்.
நாம் இதனை ஓதிவிட்டோமாயின்... எனும் (75:18ஆவது) வசனத்திற்கு, ஜிப்ரீல் மூலமாக உங்களுக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்... என்று பொருள்.
நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள். பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும் எனும் (75:19ஆவது) வசனத்திற்கு, உங்களுடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும் என்று பொருள்.
பாடம் : 3
(நபியே! நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் (எனும் 75:18ஆவது இறைவசனம்).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாம் இதனை விவரிக்கும் போது அதன்படி செயல்படுங்கள் என்று இவ்வசனத்திற்குப் பொருள் எனக் கூறியுள்ளார்கள்.
4929 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வஹீயைக் கொண்டுவரும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா என்று தொடங்கும் (75ஆவது அத்தியாயத்திலுள்ள) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக் காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16,17) வசனங்களை அருளினான்.
அதாவது, உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எமது பொறுப்பாகும் என்று இறைவன் கூறினான். மேலும், நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் என்ற (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, நாம் (வானவர் மூலம்) அருளும் போது, அதனைக் கவனத்து டன் கேளுங்கள் என்று கூறினான். பின்னர், அதனை விளக்குவதும் எமது பொறுப் பாகும் எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும் என்று கூறினான்.
(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டுவரும் போது,) தலையைத் தாழ்த்தி ளஅருளப்படுவதை நபி (ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டுனக் கொண்டிருப் பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.
(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான் எனும் (75:34ஆவது) வசனம் ஓர் எச்சரிக்கையாகும்.
பாடம் : 1
4930 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தனது புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தனது புற்றுக்குள் நுழைந்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற் றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.3
4931அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு, வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தனது புற்றிலிருந்து) வெளிப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு (தனது புற்றுக்குள் புகுந்து) விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.
இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப் பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அந்த நெருப்பு , மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும் எனும் (77:32ஆவது) இறைவசனம்.
4932 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள கஸ்ர் எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:
நாங்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் கஸர் எனப் பெயரிட்டழைத்துவந்தோம்.4
பாடம் : 3
அது (குமுறி எழும் போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப்போல் இருக்கும் எனும் (77:33ஆவது) இறைவசனம்.
4933 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள்கூறியதாவது:
அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குளைக் கக்கும் எனும் (77:32ஆவது) இறை வசனத்திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்:
நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக் கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர்காலத்திற்காக நாங்கள் எடுத்து வைப்போம். அவற்றுக்கு அல்கஸர் எனப் பெயரிட்டு அழைத்து வந்தோம்.
(77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜுமாலத்துன் ஸுஃப்ர் எனும் சொல், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்பு களைப் போல் (பருமனாக) மாறும் அளவிற்கு திரிக்கப்படும்.
பாடம் : 4
இது, அவர்கள் (ஏதும்) பேச முடியாத நாளாகும் (எனும் 77:35ஆவது இறைவசனம்).
4934 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ளி வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அதைக் கொல்லுங்கள்! என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளரான உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது என்று என் தந்தையாரிட மிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன்.
பாடம் : 1
ஸூர் எனும் எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக (கிளம்பி) வருவீர்கள் (எனும் 78:18ஆவது இறைவசனம்).
இதன் மூலத்திலுள்ள அஃப்வாஜ் எனும் சொல்லுக்குக் கூட்டங்கள் என்று பொருள்.
4935 அபூசா-ஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். ளஅபூ ஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,ன (அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா? என்று கேட்டனர். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், (நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன் என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், நாற்பது மாதங் களா? என்று கேட்டனர். அதற்கும் நான் விலகிக் கொள்கிறேன் என அபூஹுரைரா கூறினார்கள். வருடங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன் என்று சொன்னார்கள். பின்னர், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர! அது தான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும் என்று மேலும் சொன்னார்கள்.2
பாடம் : 1
4936 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பட்டுள்ளோம் என்று கூறக் கேட்டேன்.
(79:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்தாம்மா (அமளி) எனும் சொல்லுக்கு அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது என்று பொருள்.
4937 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க (ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
பாடம் : 1
(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் (எனும் 83:6 ஆவது இறைவசனம்).
4938 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (அது) அகிலத் தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் எனும் (83:6ஆவது) இறை வசனத்தை ஓதிவிட்டு, அன்று தம் இரு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார் என்று கூறினார்கள்.2
பாடம் : 1
எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும் (எனும் 84:8ஆவது இறைவசனம்).
4939 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார் என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!
எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும் என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின் போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான் என்று கூறினார்கள்.2
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்வீர்கள் (எனும் 84:19ஆவது இறைவசனம்).
4940 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (84:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபக்கன் அன் தபக்கின் எனும் சொற்றொடருக்குத் திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது என்று பொருள் என்று கூறிவிட்டு, இந்த வசனம் உங்களுடைய நபி (ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது என்று சொன்னார்கள்.3
நபித் தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் முத-ல் வந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும், இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும்தாம்.
அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தரலானார்கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் ( கொண்ட குழு) உடன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகை யா ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள் என்று கூறி(மகிழலாயி) னர். நான், ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்க ளுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.2
4942 அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரை யாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்கள், ளஇறைத்தூதர் ஸா-ஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்டன ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிலுள்ள துர்பாக்கிய சா- ஒருவன் முன்வந்த போது... எனும் (91:12ஆவது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, அபூ ஸம்ஆவைப் போன்று ஸா-ஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசா-யுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான் என்று சொன்னார்கள்.2
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உட-லிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, (அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செய-ற்காக (அதே செயலைப் பிறர் செய்யும் போது) ஏன் சிரிக்கிறார்? என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.
இன்னோர் அறிவிப்பில்,(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் பின் அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ ஸம்ஆவைப் போல (செல்வாக்குமிக்கவனாக) இருந்தான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 1
ஒளிரும் பக-ன் மீது சத்தியமாக! (எனும் 92:2ஆவது இறைவசனம்).
4943 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது, நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது (குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா? என்று கேட்டார்கள். நாங்கள், ஆம் என்று சொன்னோம். சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள்,ஓதுங்கள்! என்று (என்னிடம்) கூறினார்கள்.
உடனே நான், வல்லை- இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல் உன்ஸா என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன். அபுத் தர்தா (ரலி) அவர்கள், இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர் களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியேற்றீர் களா? என்று கேட்டர்கள். நான், ஆம் என்று கூறினேன்.
(இப்படித் தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓத-லுள்ள வமா கலக்கஃத் தகர வல் உன்ஸா என்றே ஓத வேண்டும் என்று கூறுகின் றார்கள்) என்று சொன்னார்கள்.2
பாடம் : 2
ஆணையும், பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (எனும் 92:3ஆவது இறை வசனம்).
4944 இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்த) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.
பிறகு, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்? என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், நாங்கள் அனைவரும்தாம் என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ளஇப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையைன நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்? என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். வல்லை- இஃதா யஃக்ஷா எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா (ரஹ்) அவர்கள், வஃத்தகரி வல் உன்ஸா என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், நான் சாட்சியம் கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள் ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களை நான் பின்பற்றமாட்டேன் என்று கூறினார்கள்.3
பாடம் : 3
எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கி றாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:5-7) இறை வசனங்கள்.
4945 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்களுடன் பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். உடனே மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் செயலாற் றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பிறகு, எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சிவாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக் கிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். எவர் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதி லுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகின்றாரோ, அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்கிவைப்போம் எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.4
பாடம் : 4
மேலும், நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:6,7) இறை வசனங்கள்.
. . . ..அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம் என்று தொடங்கி, மேற்கண்ட (4945ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.
அவருக்கு, இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகைசெய்வோம் (எனும் 92:7ஆவது இறைவசனம்).
4946 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், தமது இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள்(இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,நீங்கள் செயலாற் றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பிறகு, எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக் குகிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம் எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
எவர் கஞ்சத்தனம் செய்து, (தம் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்து கொண்டு நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகின் றாரோ அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்குவோம் எனும் (92:8-10) வசனங்கள்.
4947 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் (ஜனாஸா ஒன்றிற்காக) நபி (ஸல்) அவர்களுடன் (பகீஉல் ஃகர்கத் எனும் மதீனாவின் பொது மைய வாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பிறகு, எவர் (இறை வழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்கு கிறாரோ, அவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
பாடம் : 7
நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகிறாரோ எனும் (92:9ஆவது) இறைவசனம்.
4948 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) பகீஉல் ஃகர்கதில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச்சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்று கோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு, உங்களில் எவரும், பிறந்து விட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது துர்பாக்கிய
சா-யா, அல்லது நற்பாக்கியசா-யா என்று எழுதப்பட்டிராமல் இல்லை என்று சொன்னார்கள். ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்து விடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பாக்கியம் பெற்றவரோ அவர் நற்பாக்கியசா-யாக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) துர்பாக்கியசா-யோ அவர் துர்பாக்கியசா-களின் செயலுக்கு மாறுவார் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும் என்று கூறினார்கள். பிறகு எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள்.
அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்குவோம் (எனும் 92:10ஆவது இறைவசனம்).
4949 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பகீஉல் ஃகர்கத் மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதனைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்க லானார்கள். மேலும் அவர்கள், தமது இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிட மாட்டோமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொருவருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகை செய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர் களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழி காணப்படும் என்று கூறிவிட்டு, எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங் களை மெய்யாக்குகிறாரோ எனும் (92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.5
பாடம் : 1
(நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை (எனும் 93:3ஆவது இறைவசனம்).
4950 ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது இரண்டு இரவுகள் அல்லது மூன்று இரவுகள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால் தான்) இரண்டு இரவுகளாக அல்லது மூன்று இரவுகளாக உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை என்று கூறினாள்.2 அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், முற்பக-ன் மீது சத்திய மாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.3
பாடம் : 2
(நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை எனும் (93:3ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள சொல்லை) மா வத்தஅக்க என அழுத்தத்து டனும், மா வதஅக்க என அழுத்தமின்றியும் ஓதப்படுகிறது. பொருள் ஒன்றே! உங்களைக் கைவிடவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்த வசனத்தின் பொருளாவது:) உங்களை உங்கள் இறைவன் கைவிடவுமில்லை; உங்கள் மீது கோபங்கொள்ளவுமில்லை.
4951 ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத் தான் வந்துள்ளார் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.4 அப்போது தான், (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங் கொள்ளவும் இல்லை எனும் (93:3ஆவது) இறைவசனம் இறங்கிற்று.
பாடம் : 1
4952 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனி யை ஓதினார்கள்.2
(95:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தக்வீம் எனும் சொல்லுக்குப் படைப்பு என்று பொருள்.
பாடம் : 1
4953 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக்கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ஹிராக் குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட் டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒரு நாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ஓதுவீராக! என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக! என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனல்லவே! என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டிய ணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக! என்று சொன்னார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனல்லவே! என்று கூறினேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.
பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபிய வர்கள் நுழைந்தார்கள். எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்க ளுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு,) கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது?எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன் றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தை சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டிய தில்லை) என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான வராக்கா பின் நவ்ஃபல் என்பாரிடம் சென்றார்கள்.-வரக்கா அறியாமைக் காலத்தி லேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்! என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த வற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட வரக்கா, (நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு, (மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளி யேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திர மானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே! என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்த தில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன் என்று சொன்னார். அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்து விட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப் பட்டார்கள்.3
4954 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக் காலம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ஹிராவில் இருந்த போது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்தி ருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சிய டைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள் என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடை களைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) அர்ருஜ்ஸ் (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.-
இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.4
பாடம் : 2
அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான் எனும் (96:2ஆவது) இறை வசனம்.
4955 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்மு டைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.5
பாடம் : 3
(நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி எனும் (96:3ஆவது) இறைவசனம்.
4956 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்மு டைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற் றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.
அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான் (எனும் 96:4ஆவது இறைவசனம்).
4957ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹிராக் குகையிலிருந்து), கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று சொன்னார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுவதுமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.
அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றிமுடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறிழைத்த- பொய்யுரைத்த அந்த நெற்றியை! எனும் (96:15,16 ஆகிய) இறைவசனங்கள்.
4958 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கஅபா அருகில் முஹம்மது தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூ ஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப் பார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 1
4959 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு லம் யகுனில்லஃதீன கஃபரூ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான் என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதார்கள்.2
பாடம் : 2
4960 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், உங்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான் என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு லம் யகுனில்லஃதீன கஃபரூ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது என்றார்கள்.
பாடம் : 3
4961 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தர விட்டுள்ளான் என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா? என (பெருமி தத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட் டேனா? என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.
ஆகவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (மறுமையில்) அதனையும் கண்டுகொள்வார் எனும் (99:7ஆவது) இறைவசனம்.
(99:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அவ்ஹா லஹா (வஹீ மூலம் அதற்கு அறி வித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், அவ்ஹா இலைஹா எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச் சொற்களான) வஹா லஹா , வஹா இலைஹா ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.
4962 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்றுவகையான விளைவுகளைத் தருவ தாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடிய தாகும். இன்னொரு மனிதருக்கு பாவச் சுமையாகும்.
அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகப் பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு அந்தப் பசும் புல்வெளியில் அல்லது அந்தத் தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிருமுறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும் போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.
இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனு டைய பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காத வர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.
மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக மாறிவிடுகின்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார் எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர என்று சொன்னார்கள்.2
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
பாடம் : 2
எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந் தாரோ அவர் அதனையும் கண்டுகொள்வார் (எனும் 99:8ஆவது இறைவசனம்).
4963 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை என்று கூறிவிட்டு, எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற் பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார் எனும் (99:7,8) இறை வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
பாடம் : 1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:
(108:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷானிஅக்க எனும் சொல்லுக்கு உங்களு டைய பகைவன் என்று பொருள்.
4964 தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ஜிப்ரீலே, இது என்ன? என்று கேட்டேன்.
இது அல்கவ்ஸர் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4965 அபூ உபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்,
(நபியே!) நாம் உங்களுக்கு அல் கவ்ஸரை அருளினோம் எனும் (108:1ஆவது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், (அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப் படவுள்ளது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4966 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(108:1ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) அல்கவ்ஸர் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், அது, நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும் எனத் தெரிவித்தார்கள்.
(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், மக்கள் அல்கவ்ஸர் என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்ற னரே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும் என்று கூறினார்கள்.
பாடம் : 1
4967 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து... எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின் சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை.
பாடம் : 2
4968 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதி லும் அதிகமாக சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின் றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.2
பாடம் : 3
மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும் போது (எனும் 110:2ஆவது இறைவசனம்).
4969 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.:
உமர் (ரலி) அவர்கள், (நபியே! உங்க ளுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து... எனும் (110ஆவது) அத்தியாயம் குறித்து (பத்ருப் போரில் கலந்து கொண்ட) நண்பர்களிடம் கேட்டார்கள். நண்பர்கள் பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றிகொள்வது (குறித்துத் தான் இந்த வசனம் முன்னிறிவிப்புச் செய்கிறது) என்று கூறினர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். (இது,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களது இறப்புச் செய்தி முன்னறிப்புச் செய்யப்பட்டுள்ளது என்று (விளக்கம்) கூறினேன்.3
பாடம் : 4
உங்கள் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதியுங்கள்! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பாவமன்னிப்பைப் பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான் எனும் (110:3ஆவது) இறைவசனம்.
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) தவ்வாப் எனும் சொல்லுக்கு, அடியார்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன் என்று பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவ ருக்கும் தவ்வாப் என்று கூறப்படுவதுண்டு.
4970 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய் கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான் என்றார்கள். பின்னர் ஒரு நாள் (எங்களை) உமர் (ரலி) அவர்கள் (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து விட்டால்... எனும் (110:1ஆவது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம் என்று (அவ் வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதி யாயிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகின்றீர்களா? எனக் கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். நான், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் (முடிந்து விட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து விட்டால்... அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்து விட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.அவன் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்க மாகும்) என்று பதிலளித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகின்றேன் என்று சொன்னார்கள்.4
பாடம் : 1
4971 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது,) தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், யார் இவர்? என்று கூறியவாறு நபியவர் களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர் களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித் தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்த தில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படி யென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன் என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூ லஹப், உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்கா கத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா? என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும் எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் கத் எனும் இடைச் சொல்லை இணைத்து) வ கத் தப்ப (அவன் அழிந்தும் விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.2
பாடம் : 2
அவனும் நாசமாகிவிட்டான். அவனது செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2ஆவது இறைவசனம்).
4972 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ஸஃபா எனும்) அந்த மலை மீதேறி, யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் உங்களிடம் காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள் என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்! என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ஆம் (நம்பவே செய்வோம்) என்று பதிலளித் தனர். நபி (ஸல்) அவர்கள், அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என உங்களை எச்சரிக்கை செய்கின்றேன் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், உனக்கு அழிவுண்டா கட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்று திரட்டினாயா? என்று கேட்டான். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள் என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான்.
பாடம் : 3
அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழைவான் எனும் (111:3ஆவது) இறைவசனம்.
4973 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்! என்று ளநபி (ஸல்) அவர்களைப் பார்த்துன அபூலஹப் கேட்டான். அப்போது அழியட்டும், அபூலஹபின் இரு கரங்கள்... எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
பாடம் : 4
அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்).
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஹம் மாலத்தல் ஹதப் எனும் சொல்லுக்குப் புறம் பேசித் திரிகின்றவள் (முஸ்லிம்களுக்கும் இணை வைப்பாளர்களுக்குமிடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள்.
(111:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மசத் எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கி-யைக் குறிக்கும்.
பாடம் : 1
4974 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முத-ல் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்க மாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்ப மாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்து விட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.) அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான் என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்ற வனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2
பாடம் : 2
அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில் லாதவன் எனும் (112:2ஆவது) இறைவசனம்.
அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை அஸ்ஸமத் என்று அழைக்கின்றனர்.
அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே அஸ்ஸமத் எனப்படுவார்.
4975 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்க மாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்ப தாகும். அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான் என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்ற வன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (ஆகவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளு மில்லை). தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை (112:3,4)
(112:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) குஃப்வ் எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (நிகரானவன் என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.
4976 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதவது:
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் முஅவ்வஃதத்தைனி (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114ஆவது அத்தியா யங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம் (நபியே! கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன் என்று சொன்னார்கள்.
ளஅறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன
ஆகவே, நாங்களும் (நானும் உபை பின் கஅபும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.2
4977 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் அபூ முன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இப்படி இப்படி சொல்கிறாரே? என்று கேட்டேன்.2 அதற்கு உபை (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும் நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன் என்று சொன்னார்கள்.
(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:)
ஆகவே, நாங்கள் (நானும் உபை அவர் களும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3
02.11.2009. 04:25
65-திருக்குர்ஆன் விளக்கவுர15
பாடம் : 1
(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங் களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணை காட்டுப வனும் ஆவான் எனும் (39:53ஆவது) இறை வசனம்.
4810 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை முத-ய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது, (ரஹ்மானின் உண்மை யான அடியார்களான) அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை... எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், (நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்... எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
பாடம் : 2
அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.
4811 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
பாடம் : 3
மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையான வன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.
4812 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு, நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்? என்று கேட்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பின்னர் மற்றொருமுறை எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் எனும் (39:68ஆவது) இறைவசனம்.2
4813 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர் களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்டபோதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களா; அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)? என்று எனக்குத் தெரியாது.
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3
4814 அபூசா-ஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், அந்த இரு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது என்று கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நண்பர்கள், அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா? என்று கேட்டனர். (இதற்கு பதில் சொல்வதை விட்டும்) நான் விலகிக் கொள்கிறேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர்கள், வருடங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன் என்று பதில் சொன்னார்கள். நண்பர்கள், மாதங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது) என்று கூறிவிட்டு, மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனது (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் என்று சொன்னார்கள்.
4815 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து, அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்தவிடாமல் தடுத்து,) என் இறைவன் அல்லாஹ்தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்(40:28) என்று கேட்டார்கள்.4
பாடம் : 1
(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்த போது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்க வில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல் களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணியி ருந்தீர்கள் (எனும் 41:22ஆவது இறைவசனம்).
4816 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். அவர் களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான் என்று பதிலளித்தார். மற்றொருவர் நமது பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்ப தானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான் என்று கூறினார். அப்போது தான் , (உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது.
பாடம் : 2
உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களது இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. ஆகவே, நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகி விட்டீர்கள் (என்று அவர்களின் தோல்கள் கூறும் எனும் 41:23ஆவது இறைவசனம்).
4817அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் அல்லது ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும் (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். மற்றொருவர், நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், நாம் சப்தமிட்டுப் பேசும் போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத் தான் செய்வான் என்று கூறினார். அப்போது அல்லாஹ், (உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை எனும் வசனங்களை (41:22-24) அருளினான்.
இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(46:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஃபீளூன எனும் சொல்லுக்கு நீங்கள் கூறுவதை என்று பொருள்.
சிலர் கூறுகின்றனர்: (46:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸாரத் எனும் சொல்லுக்கும் (இன்ன பிற ஓதல்களில் வந்துள்ள) உஸ்ரத், அஸரத் ஆகிய சொற்களுக்கும் எஞ்சியுள்ள ஏதேனும் ஞானம் என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(46:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பித்அம் மினர் ருசு- எனும் சொற்றொடருக்கு நான் ஒன்றும் முதன் முதலாய் வந்த இறைத்தூதர் அல்லன் என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்:
(46:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அ ரஅய்த்தும் (நீங்கள் கவனித்தீர்களா?) என்பதிலுள்ள (வினாப் பொருளைத் தரும்) அ எனும் இடைச் சொல், (அல்லாஹ் அல்லாத கற்பனைக் கடவுள்களை வணங்குவது நியாயம்தான் என்று வாதிட்டு வந்த மக்கா நகர இறை மறுப்பாளர்களுக்கு) எச்சரிக்கையாகவே கூறப்பட்டுள்ளது: (மறுப்பாளர்களே!) உங்களது வாதம் உண்மை என வைத்துக் கொண்டாலும் அந்தக் கடவுள்கள் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர். (படைத்தவனே வணங்குவதற்குத் தகுதியானவன் ஆவான். படைக்கப்பட்ட பொருள்கள் அல்ல.)என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.
அரஅய்த்தும் (நீங்கள் கவனித்தீர்களா) என்பதற்கு நீங்கள் கண்ணால் கண்டீர்களா? என்பது பொருளன்று. நீங்கள் வணங்கிவரும் அல்லாஹ் அல்லாதவை ஏதேனும் ஒன்றைப் படைத்தன என்பதை நீங்கள் அறிவீர்களா? (நிலைமை இவ்வாறிருக்க, அந்த இயக்கமற்ற கற்பனைக் கடவுள்களை வணங்கிவரும் நீங்கள் அநியாயக்காரர்கள் அல்லவா? உங்களது இந்தப் பகுத்தறிவற்ற நிலையை நீங்களே யோசித்துப் பார்த்ததுண்டா?) என்றே பொருள்.
பாடம் : 1
ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே!) என்று கூறுகிறான். பெற்றோர் இருவரும் (மகனுக்காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது என்று கூறகின்றார்கள். ஆனால், அவனோ இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை என்று கூறுகின்றான் (எனும் 46:17ஆவது இறைவசனம்).
4827 யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா (ரலி) அவர்களுடைய புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் மர்வானுக்கு (மறுப்புத் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் அவரைப் பிடியுங்கள்! என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். ஆகவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான் ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?... எனும் (46:17ஆவது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில்தான் அல்லாஹ் அருளினான் என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திரைக்கப்பால் இருந்து கொண்டு, ளஅபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினராகியன எங்கள் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருள வில்லை என்று கூறினார்கள்.
பாடம் : 2
ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும் என்று கூறினார்கள். அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டி ருந்தீர்களோ அது தான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு (எனக் கூறப்பட்டது) எனும் (46:24 ஆவது) இறைவசனம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்தி லுள்ள) ஆரிள் எனும் சொல்லுக்கு மேகம் என்று பொருள்.
4828 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.2
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர் களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான், அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்க லாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.
பாடம் : 1
மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவு களைத் துண்டித்து விட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத் தொடர்.)
4830 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், என்ன? என்று கேட்டான். அதற்கு உறவு, உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன் என்று கூறியது. உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு, ஆம் (திருப்தியே) என் இறைவா! என்று கூறியது. அல்லாஹ் இது (அவ்வாறுதான்) நடக்கும் என்று கூறினான்.
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் (நயவஞ்ச கர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
4831 சயீத் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, நீங்கள் விரும்பினால், (நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் (47:22ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.
4832 மேற்சொன்ன இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.
(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆசின் எனும் சொல்லுக்கு மாறுகின்ற என்று பொருள்.
பாடம் : 1
நபியே! நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்).
4833 அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்க வில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே என்று கூறினார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள் இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.2
4834 கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) நாம் உங்களுக்கு பகிரங்க மான வெற்றியை அளித்துள்ளோம் எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபிய்யா உடன்படிக்கையையே குறிக்கிறது என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3
4835 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியா யத்தைத் தர்ஜீஉ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்)அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4
பாடம் : 2
(நபியே!) உங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்து, உங்களுக்கு நேர் வழியைக் காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்) எனும் (48:2ஆவது) இறைவசனம்.
4836 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?) என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள்.5
4837 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள்.6
(நபியே!) திண்ணமாக நாம் உங்களை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்).
4838 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) திண்ணமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே தவ்ராத் வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:
நபியே! நிச்சயமாக நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாது காவலராகவும் நாம் அனுப்பியிருக்கின்றோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (முத்தவக்கில்) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).
(என் தூதரான) அவர் கடின சித்தமுடைய வராகவோ, முரட்டுத்தனம் கொண்டவரா கவோ, கடைவீதியில் கூச்ச-ட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்க மாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காண மாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7
பாடம் : 4
அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4ஆவது வசனத் தொடர்).
4839 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித் தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.
அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்த போது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டு கொண்டிருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது என்று கூறினர்கள்.8
(நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் உங்களிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்த போது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி அடைந்து கொண்டான் எனும் (48:18ஆவது) வசனத் தொடர்.
4840 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபிய்யா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9
4841 அந்த மரத்தினடியில் நடைபெற்ற (பைஅத்துர் ரிள்வான் எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல் முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) கத்ஃப் எனும் கல்சுண்டு விளையாட்டிற்குத் தடைவிதித்தார்கள்.10
4842 உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். ளநபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.ன11
4843 அபூ கிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்(தடியில் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12
நான் அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (காரிஜிய்யா எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:
நாங்கள் ஸிஃப்பீன் எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (அப்துல்லாஹ் பின் அல்கவ்வா என்றழைக் கப்படும்) ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படு கின்றவர்களை நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடை பெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும் போது நம் வீரர்கள் சொர்கக்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணை வைப்பாளர்கள் மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? என்று ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றேன கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13
பாடம் : 1
இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும் எனும் (49:2ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்திலுள்ள) நீங்கள் அறியாத நிலையில் என்பது (மூலத்திலுள்ள) லா தஷ்உரூன் எனும் சொல்லின் பொருளாகும். இதனடிப்படையில்தான் அஷ்ஷாஇர் (கவிஞர்) எனும் சொல்லுக்கு அறிஞர் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.
4845 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது என்று அறிவிப்பாளர் களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, இறை நம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.
4846 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர் அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், (எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரக வாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே என்று சொல்! என்று கூறினார்கள்.3
பாடம் : 2
(நபியே! உங்கள்) அறைகளுக்கு வெளியே இருந்து உங்களை இரைந்து கூப்பிடுவோரில் பெரும்பாலோர் விவரமில்லாதவர்களே! (எனும் 49:4ஆவது இறைவசனம்.)
4847அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினர்.) அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள் என்று (யோசனை) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்! என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, எனக்கு மாறு செய்வதை அல்லது எனக்கு எதிராக மாறு செய்வதையே நீங்கள் விரும்பினீர்கள் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு எதிராகப் பேசுவது எனது நோக்கமன்று என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்ட போது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்து விட்டன. இது தொடர்பாகவே இறை நம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான் எனும் (49:1ஆவது) இறை வசனம் முழுவதும் இறங்கிற்று.4
பாடம் : 3
(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும் எனும் (49:5ஆவது) வசனத் தொடர்.5
இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும் எனும் (50:30ஆவது) வசனத் தொடர்.
4848 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படு வார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத் தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும்.2
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
4849 முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பி விட்டதா? என்று கேட்கப்படும். அது, இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும்.
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ சுஃப்யான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள்.
4850 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக் காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் என்று சொன்னது. சொர்க்கம், எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையி னருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள் என்று கூறியது.
அல்லாஹ் சொர்க்கத்திடம், நீ எனது அருள். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன் என்று கூறினான். நரகத்திடம் நீ வேதனை(க்காகத்) தான். உன் •மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும்வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும் போது நரகம் போதும்! போதும்! என்று கூறும். அப்போது தான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க் கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.
பாடம் : 2
(நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் (எனும் 50:39ஆவது வசனத் தொடர்).
4851 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது:
ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3
எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்... எனும் (50:40ஆவது) இறை வசனத்தின் கருத்தாகும்.
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தமிர் எனும் சொல்லுக்கு நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற என்று பொருள்.
(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தஜர் எனும் சொல்லுக்கு உச்சகட்ட எச்சரிக்கை என்று பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்துஜிர் என்பதற்கு, இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது என்று பொருள்.
(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஸுர் எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரிப் பாகங்களைக் குறிக்கும்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) -மன் கான குஃபிர் எனும் சொற்றொடருக்கு அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது என்று பொருள்.
(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹ்தளர் எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வர வேண்டும் என்பதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹ்திஈன (ஓடிக் கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்:
(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபதஆத்தா எனும் சொல்லுக்குத் தமது கரத்தால் அறுத்து விட்டார் என்று பொருள்.
(54:31ஆவது வசனத்தின் மூலத்திலள்ள) அல் முஹ்தழிர் எனும் சொல்லுக்குக் கரிந்து போன மரத்துண்டைப் போல என்று பொருள்.
(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்துஜிர எனும் சொல்லுக்குக் கண்டித்து விரட்டப்பட்டார் என்று பொருள்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) குஃபிர் (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவ மரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.
(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தகிர் எனும் சொல்லுக்கு நிலையான வேதனை என்று பொருள்.
(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஷிர் எனும் சொல்லுக்கு அகந்தையும் ஆணவமும் உள்ளவன் என்று பொருள்.
பாடம் : 1
4853 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக! என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.2
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். (படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதி யான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர் களா? எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங் களை நபி அவர்கள் ஓதிய போது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தூர் அத்தியாயத்தை ஓதினார்கள் என்று முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ஜுபைர் பின் முத் இம்)யிடமிருந்து அறிவித்தார்கள் என்பதை மட்டுமே ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை.
பாடம் : 1
4855 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சி-ர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமி ருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்ட வற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்... எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.4
பாடம் : 2
(வளைந்த) வில்-ன் இருமுனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9ஆவது இறைவசனம்).
வில்-ல் நாண் இருக்கும் இடத்தை இது குறிக்கும்.
4856 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(வளைந்த) வில்-ன் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல் லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.5
பாடம் : 3
பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:10ஆவது) இறைவசனம்.
4857 அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், (வளைந்த) வில்-ன் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையி லான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மது (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 4
உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் (எனும் 53:18ஆவது இறைவசனம்).
4858 அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் எனும் (53:18ஆவது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்துக் கொண்டு விட்டிருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.6
பாடம் : 5
(நீங்கள் வழிபட்டுவரும் சிலைகளாகிய) லாத் மற்றும் உஸ்ஸா ஆகியன பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? (எனும் 53:19ஆவது இறைவசனம்).
4859 அபுல் ஜவ்ஸா அவ்ஸ் பின் அப்தில்லாஹ் அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
லாத், உஸ்ஸா... எனும் (53:19ஆவது) வசனத்திலுள்ள லாத் என்பது, ஹாஜிகளுக்காக மாவு பிசைந்து தந்து கொண்டிருந்த ஓரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7
4860 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், வா சூது விளையாடுவோம் என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.8
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மேலும், மூன்றாவதான மனாத் (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும் 53:20ஆவது இறைவசனம்.)
4861 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், முஷல்லல் எனும் குன்றில் இருந்த மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போது தான் நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்... எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர் என்று சொன்னார்கள்.
(இதன்அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) குதைத் எனும் இடத்தில் முஷல்லல் எனும் குன்றிலிருந்த சிலையாகும் என்று கூறினர்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும், ஃகஸ்ஸான் குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் மனாத் சிலைக்காக, இஹ்ராம் கட்டி வந்தனர் என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.
ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயிருந்த மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டி வந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்... என்று கூறினர் எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.9
பாடம் : 7
ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62ஆவது இறைவசனம்).
4862 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம் களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.10
இப்னு உலைய்யா (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை(அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11
4863 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஓதலுக்குரிய) சஜ்தா அருளப்பெற்ற முதல் அத்தியாயம் அந்நஜ்ம் ஆகும். அதை ஓதிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!
அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் போரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12
பாடம் : 1
சந்திரன் பிளந்து விட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக் கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்).
4864 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2
4865 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்த போது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று (இரு முறை) கூறினார்கள்.
4866 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3
மக்காவாசிகள் ளநபி (ஸல்) அவர்களிடம்ன ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4
4868 அனஸ் (பின் மாலிக் (ரலி)) அவர்கள் கூறியதாவது:
ளநபி (ஸல்) அவர்களது காலத்தில்ன சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.
பாடம் : 2
எவர் (அவர்களால்) அவமரியாதை செய்யப்பட்டுவந்தாரோ அவருக்குப் பிரதிபலனாக நம் கண்முன்னே அது (-மரக்கலம்-) மிதந்து சென்று கொண்டிருந்தது. அதனை நாம் (எதிர் காலத்திற்கு) ஒரு சான்றாக விட்டுவைத்தோம். (இதன் மூலம்) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:14, 15 ஆகிய இறை வசனங்கள்.)
நூஹ் (அலை) அவர்களது மரக்கலத்தை அல்லாஹ் அப்படியே விட்டுவைத்தான். அதனை இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் கண்டனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.5
4869 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஃபஹல் மின்(ம்) முத்தகிர் எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (முஸ்தகிர் என்றோ, முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6
பாடம் : 3
(மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40 ஆகிய வசனங்கள்.)
இந்த வசனத்தின் மூலத்திலுள்ள யஸ்ஸர்னா எனும் சொல்லுக்கு இந்தக் குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கியுள் ளோம் என்று பொருள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
4870அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஃபஹல் மின்(ம்) முத்தகிர் எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ஃஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (முஸ்தகிர் என்றோ, முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.
பாடம் : 4
வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப் போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்து விட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும் 54:20,21 ஆகிய வசனங்கள்).
4871 அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ஃபஹல் மின் (ம்) முத்தகிர் என்று ஓத வேண்டுமா? அல்லது முஃதக்கிர் என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார். அதற்கவர்கள், ஃபஹல் மின் முத்தகிர் என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என தால் (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 5
உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31,32 ஆகிய வசனங்கள்).
4872அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என்றே ஓதினார்கள்.
அதிகாலையில் ஒரு நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. அப்போது, நான் அனுப்பிய வேதனையையும் எச்சரிக்கை யையும் சுவையுங்கள் (என்று நாம் கூறினோம் எனும் 54:38,39 ஆகிய வசனங்கள்).
4873 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தி யாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர் என்றே ஓதினார்கள்.
உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51ஆவது இறைவசனம்).
4874 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!) என்றார்கள்.7
அதிவிரைவில் இக்குழுவினர் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர் எனும் (54:45 ஆவது) இறைவசனம்.
4875 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரின் போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறை வேற்றித்தரும்படி) உன்னிடம் நான் கோருகி றேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழி படுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, இந்த (இறை நிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர் எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8
பாடம் : 8
தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அமர்ரு (மிகவும் கசப்பானது) எனும் சொல், மாராரத் (கசப்பு) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
4876 யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், நான் விளையாடும் சிறுமியாக இருந்த போது, மக்காவில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது என்று கூறினார்கள்.
4877 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, (இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடு வோர் இனி ஒரு போதும் (உலகில்) இருக்கப் போவதில்லை என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:45,46) வசனங் களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9
பாடம் : 1
அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும் எனும் (55:62ஆவது) இறைவசனம்.
4878 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியினால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்தி ரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2 அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகை களி)ல் தங்கவைக்கப்பெற்ற ஹூர் எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்த வசனத்திலுள்ள) ஹூர் எனும் சொல்லுக்குக் கன்னங்கரு விழியாள் என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மக்ஸூராத் எனும் சொல்லுக்குத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்களுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டும் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.
4879அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறை நம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒருமூலையி லுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறை நம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் ளஅபூ மூசா அல்அஷ்அரீ (ரலி)ன அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
பாடம் : 1
(படர்ந்து விரிந்த) நீண்ட நிழ-லும் அவர்கள் இருப்பார்கள் எனும் (56:30ஆவது) இறை வசனம்.
4881 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழ-ல் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால் (படர்ந்து விரிந்த) நீண்ட நிழ-லும் அவர்கள் இருப்பார்கள் எனும் (56:30ஆவது) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
பாடம் : 1
4882 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அத்தவ்பா எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள் என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், அல்அன்ஃபால் எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பத்ருப் போர் குறித்து அது அருளப்பெற்றது என்று பதிலளித்தார்கள். நான் அல்ஹஷ்ர் எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது என்று பதிலளித்தார்கள்.2
4883 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (59ஆவது அத்தியாயத்தின் பெயரை) அல்ஹஷ்ர் அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள் அந்நளீர் அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.3
பாடம் : 2
நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியது... எனும் (59:5ஆவது) வசனத் தொடர்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லீனத் எனும் சொல் அஜ்வா (எனும் அடர்த்தியான பேரீச்ச மரம்) மற்றும் பர்ணீ (எனும் சிவப்பு-மஞ்சள் நிற பேரீச்ச மரம்) அல்லாத (ம-வான) பேரீச்ச மரத்தைக் குறிக்கும்.
4884 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.4
பாடம் : 3
அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களிடமி ருந்து (விடுவித்து,) தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ (என்று தொடங்கும் 59:6ஆவது இறைவசனம்).
4885 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.5
இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத் தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் (எனும் 59:7ஆவது வசனத் தொடர்).
4886 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்? என்று கூறினார்கள்.6 இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, உம்மு யஅகூப் எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர் களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், (குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே! என்று கேட்டார். அதற்கு அவர்கள், நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள் எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லையா? என்று கேட்டார்கள். அந்தப் பெண், ஆம் (ஓதினேன்) என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன் என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்! என்று கூறினார்கள். ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறினார்கள்.
4887அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
மேலும், (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர் களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் பூமியில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும் என்று தொடங்கும் 59:9ஆவது இறைவசனம்).
4888 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அபூ லுஃலுஆ ஃபைரோஸ் என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர் (ரலி) அவர்கள், (இஸ்லாத்தில்) முன்னவர் களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்) கொள்ள வேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) கலீஃபாவுக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், நபி(ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறை நம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக் கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிட மிருந்து (அவரது நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்திட வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு உபதேசம் செய்கிறேன் என்றார்கள்.7
பாடம் : 6
மேலும், தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள் எனும் (59:9ஆவது) வசனத் தொடர்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) கஸாஸா (தேவை) எனும் சொல்லுக்கு வறுமை என்று பொருள்.
முஃப்-ஹூன் (வெற்றியாளர்கள்) எனும் சொல்லுக்கு, நிரந்தர வெற்றியாளர்கள் என்று பொருள். (இதன் வேர்ச் சொல்லான) ஃபலாஹ் என்பதற்கு, நிரந்தர வாழ்க்கை என்று பொருள். (தொழுகை அழைப்பில் இடம்பெற்றுள்ள) ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்கு நிரந்தரத்தை நோக்கி விரைந்து வாருங்கள் என்று பொருள்.
ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், (இதே வசனத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள) ஹாஜத் (தேவை) எனும் சொல்லுக்குப் பொறாமை என்று பொருள் எனக் கூறினார்கள்.
4889 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான் என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே! என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, (இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே! என்று சொன்னார்.
அதற்கு அவர் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை என்று பதிலளித்தார். அவர், (நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்து விடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம் என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் வியப்படைந்தான் அல்லது (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண் டான் என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கு கிறார்கள்... எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான்.8
பாடம் : 1
(இறை நம்பிக்கை கொண்டவர்களே!) எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள் ளாதீர்கள் (எனும் 60:1ஆவது வசனத் தொடர்).
4890 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும் நீங்கள் ரவ்ளத்து காக் எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ நமது இரகசியத் திட்டங்களை எழுதித் தெரி வித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்! என்று கூறியனுப்பினார்கள்.
உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ரவ்ளத்து காக் எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், கடிதத்தை வெளியே எடு! என்று சொன்னோம். அதற்கு அவள், என்னிடம் கடிதம் ஏதுமில்லை என்று பதிலளித்தாள். நாங்கள், ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உனது) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும் என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம்.
அதில் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது? என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் (தம் குற்றத்தை ஒப்புக் கொண்டு), அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன்.
தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும், சொத்து களையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மையே சொன்னார் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.
ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் விஷயத்தில்தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என்று தொடங்கும் (60:1ஆவது) வசனம் இறங்கிற்று என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ளஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:ன இந்த இறைவசனம் ளஅலீ (ரலி) அவர்களின்ன அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் பின் தீனார் அவர்களின் (அறிவிப்பின் போது வந்த) சொல்லா என்று எனக்குத் தெரியாது.2
..... அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் தொடர்பாகத் தான் இவ்வசனம் (60:1) இறங்கிற்றா? என்று கேட்கப்பட்டது. சுஃப்யான் (ரஹ்) அவர்கள், இப்படித் தான் மக்களின் அறிவிப்புகளில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். அதில் ஒரு வார்த்தையைக் கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் அவர்களிடமிருந்து இதனை நன்கு நினைவில் நிறுத்திக் கொண்டதாக நான் கருதவில்லை என்று கூறினார்கள்.
பாடம் : 2
இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் (நாடு துறந்து) ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (என்று தொடங்கும் 60:10ஆவது இறை வசனம்).
4891 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.
இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன் என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண் டேன் என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.3
இது இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 3
நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிராமணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்).
4892 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிராமணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்க மாட்டார்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழவேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்கை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தமது கையை பின்வாங்கிக் கொண்டார். மேலும், அவர் இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவளிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.
4893 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எந்த ஒரு நற்செய-லும், (நபியே!) உங்களுக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தி(ன், விளக்கவுரையி)ல், இதுவும் பெண்கள் மீது அல்லாஹ் விதித்த நிபந்தனை களில் ஒன்றாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4
4894 உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அல்லாஹ்விற்கு எதையும்
இணை கற்பிக்க மாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா? என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
சுஃப்யான் பின் உயையனா (ரஹ்) அவர்களின் அதிகமான அறிவிப்பில் அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள் என்றே காணப்படுகிறது. (பெண்கள் பற்றிய வசனம் என்று காணப்படவில்லை.) தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையவாது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படு கின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று சொன்னார்கள்.5
இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாவும் வந்துள்ளது.
4895 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெரு நாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன்பிறகே உரை நிகழ்த்து வார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் (மிம்பர்- மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தமது கையால் அமரச்செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்து கொண்டு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.
அப்போது நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்க மாட்டார்கள் என்றும், திருட மாட்டார்கள் என்றும், விபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செய-லும் உமக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிட மிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்ப வனும், கருணைபுரிபவனுமாய் இருக்கின் றான் எனும் (60:12ஆவது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்து விட்டு, இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா? என்று கேட்டார்கள்.
ஒரேயொரு பெண்மணி மட்டும், ஆம் (நீடிப்போம்), அல்லாஹ்வின் தூதரே! என்றார். அவரைத்தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) ஹஸன் பின்
முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரிய வில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தர்மம் செய்யுங்கள்! என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.6
பாடம் : 1
எனக்குப் பிறகு அஹ்மத் எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈசா கூறினார்) எனும் (61:6ஆவது) வசனத் தொடர்.
4896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்ப வர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
பாடம் : 1
இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்) எனும் (62:3ஆவது) வசனத் தொடர்.
(62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஃபஸ்அவ் இலா ஃதிக்ரில்லாஹ் -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ஃபம்ளூ இலா ஃதிக்ரில்லாஹ் (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதினார்கள்.
4897அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு அல்ஜுமுஆ எனும் (62ஆவது) அத்தியாயத்தில் இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பி யுள்ளான்) எனும் (3ஆவது வசனம் அருளப் பெற்றது. அப்போது, அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறை நம்பிக்கை இருந்தாலும் சில மனிதர்கள் அல்லது இவர்களில் ஒருவர் அதனை அடைந்தே தீருவார் என்று கூறினார்கள்.2
4898 அபுல் ஃகைஸ் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
பாடம் : 2
அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு
வேடிக்கையையோ பார்த்து விட்டால், அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின் றனர் (எனும் 62:11ஆவது வசனத் தொடர்).
4899 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.3
(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின் றனர். திண்ணமாக, நீங்கள் தன்னுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான் எனும் (63:1ஆவது) இறை வசனம்.
4900 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறினான். அவன் கூறியதை (நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம் அல்லது உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்த போது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) நாங்கள் அதைச் சொல்லவேயில்லை என்று அவர்கள் சாதித்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்து விட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ் நாளில் ஓரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண் டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறினார்கள். அப்போது, இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது என்று தொடங்கும் இந்த (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்) என்று கூறினார்கள்.
பாடம் : 2
இவர்கள் தாங்கள் செய்யும் சத்தியங்களை (தங்களைத் தற்காத்துக் கொள்ளும்) கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் (எனும் 63:2ஆவது வசனத் தொடர்).
4901 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள் என்று சொல்வதையும், மேலும், நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணிய வான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட் டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களி டம் வருகின்றபோது என்று தொடங்கி ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் என்று கூறினார்கள்.
பாடம் : 3
இவை (அனைத்துக்கும் காரணம்,) இவர்கள் (முத-ல்) நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்து விட்டது தான் . இதனால் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனும் (63:3ஆவது) இறைவசனம்.
4902 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:.
(நயவஞ்கர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவழிக்காதீர்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ...என்றும் கூறிய போது, அதனை நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் பின் உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். ஆகவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே, நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், (ஸைதே!) அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் என்று கூறினார்கள். மேலும், இவர்கள்தாம் இறைத்தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள் என்று கூறினார்கள்... எனும் (63:7ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் நபி (ஸல்) அவர்களி டமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 4
(நபியே!) நீங்கள் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடல் அமைப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர்கள். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக் கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள் தாம் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர்? (எனும் 63:4ஆவது இறைவசனம்.)
4903 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம், அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர் என்றும் சொன்னான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார் என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சென்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.
அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது... என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) குஷுபும் முசன்னதா (சாய்த்துவைக்கப் பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்ட மானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.
பாடம் : 5
வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப் பட்டால், (அவர்கள்) தங்களது தலையைத் திருப்பிக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்து வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள் எனும் (63:5ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லவ்வவ் (தலையைத் திருப்பிக் கொண்டார்கள்) எனும் சொல், தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கின்றது. (இதே சொல்லை இன்னோர் ஓத-ல்) லவய்த்து எனும் வினைச்சொல்லிருந்து அழுத்தமில்லாமல் (லவவ் என்று) ஓதப்படுகிறது.
4904 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவர் என்று கூறுவதை நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரி டம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ் வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்(து விசாரித்)தார்கள். நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத் தேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தனர். ளஅவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.ன என்னை நம்ப மறுத்து விட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஓரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன்மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர் எனும் (63:1ஆவது) வசனத்தை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர் களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று கூறினார்கள்.3
பாடம் : 6
(நபியே!) நீங்கள் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோரா விட்டாலும் இவர்களைப் பொறுத்துச் சமம் தான். அல்லாஹ் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான் எனும் (63:6ஆவது) இறைவசனம்.
4905 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் அல்லது ஒரு படையில் இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்.4 அப்போது (அடி வாங்கிய) அன்சாரி அன்சாரிகளே! (உதவுங்கள்.) என்று கூறினார். அந்த முஹாஜிர் முஹாஜிர்களே! உதவுங்கள்! என்று கூறினார்.
இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரி களில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டு கின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள்.
அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந் தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று (அன்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, என்னை விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள். மக்காவாசி க(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளைவிட அதிகமாகி விட்டனர்.
மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டி ருந்தோம் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
பாடம் : 7
அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிடமிருந்து) அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள் என்று சொல்கின்றவர்கள் இவர்கள்தாம். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ் வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனும் (63:7ஆவது) இறைவசனம்.
(இதன் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யன்ஃபள்ளூ எனும் சொல்லுக்குப் பிரிந்து விடுவார்கள் என்று பொருள்.
4906 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்ஹர்ராப் போரில் கொல்லப் பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப் பட்டேன்.5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.
அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா? இல்லையா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்த போது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் பின் அர்கம் பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்து விட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளிய போது) இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்து விட்டான் என்று இவர் தொடர்பாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள்.
பாடம் : 8
மேலும் அவர்கள் நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர் என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாள ருக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் (எனும் 63:8ஆவது இறைவசனம்).
4907 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் இருந்து கொண்டி ருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, அன்சாரிகளே! (உதவுங்கள்) என்று கூறினார். முஹாஜிர், முஹாஜிர்களே! (உதவுங்கள்) என்று கூறினார்.
இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்து விட்டான். நபி (ஸல்) அவர்கள், இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், முஹாஜிர் களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். உடனே, அன்சாரி அன்சாரிகளே, (உதவுங்கள்) என்று கூற, முஹாஜிரும், முஹாஜிர்களே, (உதவுங்கள்) என்று கூறினார் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல் களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்து விட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந் தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி ) அவர்கள், என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசி விடக்கூடாது என்று சொன்னார்கள்.6
02.11.2009. 04:21
65-திருக்குர்ஆன் விளக்கவுர14