62-நபித் தோழர்களின் சிறப்புகள்2

 பாடம் : 8

(கலீஃபா உஸ்மான் -ரலி- அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்ட) சத்தியப் பிரமாண நிகழ்ச்சி, உஸ்மான் (ரலி) அவர்களுடைய (தகுதி முன்னுரிமை) விஷயத்தில் ஒருமித்த கருத்து மற்றும் உமர் (ரலி) அவர்கள் கொலையுண்ட நிகழ்ச்சி.

3700 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன் மதீனாவில் அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்களுக்கும், உஸ்மான் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களுக்கும் அருகில் நின்று கொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்?64 அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்தி விட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித் தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச் சுமையை சுமத்தி விட்டீர்களா?•என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள்என்றார்கள். அந்த இருவரும், இல்லை. (அதன் சக்திக்கேற்பவே வரி சுமத்தினோம்) என்று பதிலளித்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில் தான் விட்டுச் செல்வேன் என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாட்கள் கூட சென் றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர் (ரலி)அவர்கள் குத்தப்பட்டு விட் டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண் டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்கு முன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), சீராக நில்லுங்கள் என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக் கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் யூசுஃப் அத்தியாயம் அல்லது நஹ்ல் அத்தியாயம் அல்லது அது போன்ற(வேறோர் அத்தியா யத்)தை, மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரகஅத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். என்னை நாய் கொன்று விட்டது ....அல்லது தின்று விட்டது.... என்று கூறினார்கள் (அப்போது அபூ லுஃலுஆ ஃபைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்).65 உடனே, அந்த இல்ஜ் (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந் தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய போது தன்னைத் தானே அறுத்துக் ( கொண்டு தற்கொலை செய்து) கொண்டான். மேலும், (தொழுவித்துக் கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுவிப் பதற்காகத் தம்மிடத்தில்) முன்னிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர் (ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளி வாச-ன் மூலைகளில் (தொழுது கொண்டு) இருந்த வர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுவித்துக் கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்ட போது அவர்கள் சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுவித்தார்கள். மக்கள் (தொழுது முடித்து) திரும்பிய போது உமர் (ரலி) அவர்கள், இப்னு அப்பாஸ் அவர் களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள் என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வந்து, முகீராவின் அடிமை தான் (உங்களைக் குத்தியது) என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அந்தத் திறமையான தொழிற் கலைஞனா? என்று கேட்டார்கள். ஆம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அல்லாஹ் அவனைக் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத் தானே நான் உத்தரவிட்டேன்! (ஆனால், என்னையே அவன் கொன்று விட்டானே!) தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரது கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்து விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபுகள் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபுகள் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக்கூடியவர்களாக இருந்தீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்களிடையே அப்பாஸ் (ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (உமர் -ரலி- அவர்களை நோக்கி), நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபுகளல்லாத தொழிற் கலைஞர்கள் அனைவரையும்) கொன்று விடுகிறோம் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், நீங்கள் (இந்த எண்ணத்தினால்) தவறிழைத்து விட்டீர்கள். உங்களது மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களது கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே ஹஜ்ஜு செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப்போகிறீர்கள்?)என்று கேட்டார்கள். பிறகு, (குற்றுயிராயிருந்த) உமர் (ரலி) அவர்களை அவர்களது வீட்டுக்கு சுமந்து செல்லப்பட்டது. அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராதது போல மக்கள் (கடுந் துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், அவருக்கு ஒன்றும் ஆகி விடாது என்கிறார். மற்றொருவர், அவருக்கு (மரணம் சம்பவித்து விடும் என்று) நான் அஞ்சுகிறேன் என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டு வரப்பட்டது. அதை உமர் (ரலி) அவர்கள் அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகு படுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறி விட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்து விட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்

(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப் பதவியேற்று (குடிமக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்ய விருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள் என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் இவை யெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லா விட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்கு) சாதகமாக வும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்பு கிறேன் என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும் என்று கூறினார்கள். (பிறகு தம் மகனை நோக்கி), உமரின் மகன் அப்துல்லாஹ்வே! என் மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் கணக் கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்/தீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர் (ரலி) அவர்கள், இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்து விடு. அவ்வாறு போது மானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத் தாரான) அதீ பின் கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்) கொள். அவர்களது செல்வமும் போதுமானதாக இல்லா விட்டால் (நமது குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்) கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய) பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்து விடு!. (பிறகு) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார் என்று கூறு. விசுவாசிகளின் தலைவர் என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவ னல்லன். மேலும், (அன்னை ஆயிஷா -ரலி- அவர்களிடம்) உமர் தம்முடைய இரு தோழர்கள் (நபி -ஸல்- மற்றும் அபூபக்ர் -ரலி- அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களது அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார் என்று சொல் எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (உமர்--ரலி- அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது, அவர் அவர்களைப் பார்த்து, (என் தந்தை) உமர் பின் கத்தாப் தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம்முடைய இரு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார் என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட அவருக்கே முத-டம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்) என்று கூறினார்கள். பிறகு அவர் (உமர் -ரலி- அவர்களிடம் ) திரும்பி வந்த போது, இதோ, உமர் அவர்களின் மகன்அப்துல்லாஹ் வந்து விட்டார் என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப்படுத்திருந்த) உமர் (ரலி) அவர்கள், என்னைத் தூக்கி உட்கார வையுங்கள் என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் மகனை நோக்கி), உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?என்று கேட்டார்கள். நீங்கள் விரும்பியது தான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா-ரலி) அனுமதித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் கூறினார்கள். (அப்போது) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இது தான் எனக்கு கவலை யளித்துக் கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்து விட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டு செல்லுங்கள். பிறகு, ஆயிஷா அவர்களுக்கு நீ சலாம் சொல்லி, (அவர் களிடத்தில்) உமர் பின் கத்தாப் (தம்முடைய இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார் என்று (மீண்டும் ஒரு முறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (மண்ணறைகள் அமைந்திருக்கும் பொது) அடக்கத்தலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள் என்று கூறினார்கள். (உமர் -ரலி- அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறை நம்பிக்கையாளர் களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்ட போது நாங்கள் எழுந்து விட்டோம். உமர் (ரலி) அவர்களிடத்தில் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடத்தில் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உடனே அவர்களுக்குள்ள நுழை விடம் ஒன்றில் நுழைந்து கொண்டார்கள். உள்ளேயிருந்து அவர்கள் அழுகின்ற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம். (அங்கிருந்த ஆண்கள் உமர் -ரலி- அவர்களை நோக்கி), இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர்...அல்லது அந்தக் குழுவினர்... தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள். என்று கூறி விட்டு, அலீ (ரலி), உஸ்மான் (ரலி), ஸுபைர் (பின் அவ்வாம் - ரலி), தல்ஹா (ரலி), சஅத் (பின் அபீவக்காஸ்-ரலி), அப்துர் ரஹ்மான் ( பின் அவ்ஃப்-ரலி)••ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும் உமர் (ரலி) அவர்கள்,•உமரின் மகன் அப்துல்லாஹ் வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமில்லை - இதை மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆறுதல் போலக் கூறினார்கள்.- தலைமைப் பதவி சஅத் அவர்களுக்கு கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர் தாம். அவ்வாறு அவருக்கு கிடைக்கவில்லையாயின், உங்களில் எவர் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறாரோ அவர் (சஅத் பின்அபீ வக்காஸ்) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நான் சஅத் அவர்களை, அவர் இயலாதவர் என்பதாலோ அல்லது மோசடி செய்து விட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை. மேலும், (இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமை களை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், (நபி-ஸல்- மற்றும் நபித் தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தமது இருப்பிடமாகக் கொண்டு, இறை நம் பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக் கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரது நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்படவேண்டும். (இதே போல) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும்படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர். நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களது வீரத்தாலும் பெரும் எண்ணிக்கை யாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவைகளுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதையும் அவர்களின் சம்மதத்துடன் தான் எடுக்க வேண்டும்.

மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்வீக அரபிகளும், இஸ்லாத்தின் அடிப்படையும் ஆவார்கள். அவர்களுடைய செல்வத்தில் ம-வானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர் களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வுடைய பொறுப் பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்-மல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறை வேற்றப்பட வேண்டுமெனவும் (அவர் களுடைய எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டு மெனவும், (காப்பு வரி விதிக்கும் போது) அவர்களது சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது எனவும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.66

(கத்திக்குத்துக்கு உள்ளாகி மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். பிறகு அவர்களை (எடுத்து)க் கொண்டு (அவர்களது இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா -ரலி- அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஆயிஷா -ரலி- அவர்களுக்கு) சலாம் சொன்னார்கள். பிறகு, (உங்களுக்குரிய அறையில் தம் இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் பின் கத்தாப் அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். உடனே அவர்களை உள்ளே கொண்டு செல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களுடைய இரு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவர்களை அடக்கம் செய்து முடித்த போது அந்த (ஆறுபேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் (பின் அவ்ஃப் - ரலி) அவர்கள், (கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களது உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், எனது அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன் என்று கூறினார்கள். பிறகு தல்ஹா (ரலி) அவர்கள், எனது அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன் என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள், எனது அதிகாரத்தை நான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன் என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அலீ -ரலி- அவர்களையும், உஸ்மான் -ரலி- அவர்களையும் நோக்கி), உங்கள் இருவரில் எவர் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறாரோ அவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும் இஸ்லாமும் அவர் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்)களும் மௌன மாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கின் றீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான் என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்) என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவ ருடைய (-அலீ -ரலி- அவர்களுடைய-) கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்

(ரலி) அவர்கள் பிடித்துக் கொண்டு உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக் கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள் என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் (-உஸ்மான் -ரலி- அவர்களிடம்-) தனியே வந்து அலீ (ரலி) அவர்களிடம் கூறியதைப் போலவே (அவர் களிடமும்) கூறினார்கள். (இரு மூத்தவர் களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், உஸ்மான் அவர்களே! தங்களது கையைத் தாருங்கள் என்று கூறி (உஸ்மான் -ரலி- அவர்களது கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.

பாடம் : 9

அபுல் ஹஸன் அலீ பின் அபீதா-ப் அல்குறஷீ அல்ஹாஷிமீ-ரலியல்லாஹு அன்ஹு- அவர்களுடைய சிறப்புகள்.67

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன் என்று சொன்னார்கள்.68 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தியுடனிருந்த நிலையில் இறந்தார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.69

3701 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான் என்று சொன்னார்கள். ஆகவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந் தனர். காலையானதும் மக்களில் ஒவ்வொரு வரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், அலீ பின் அபீதா-ப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், அவருக்குக் கண்வ-, அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வ-யே இருந்த தில்லை என்பதைப் போன்று அவர்கள் (வ- நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர் களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமை யாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.70

3702 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின் தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வ- ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் புறப்பட்டு (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் (இரவுக்கு முந்தைய) மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலலாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற...அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற... ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப்போகிறேன்... அல்லது அத்தகைய ஒரு மனிதர் இக் கொடியைப் பிடித்திருப்பார்... என்று சொல்லிவிட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ

(ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ, அலீ அவர்கள்! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர் களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.71

3703 அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் வந்து , இன்னவர் - அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் பின் ஹகம்) அலீ (ரலி) அவர்களை மிம்பருக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைக்கிறார் என்று சொன்னார். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், அவர் (அப்படி) என்ன சொன்னார்? என்று கேட்க அம்மனிதர், அபூ துராப் (மண்ணின் தந்தை) என்று அழைக் கிறார் என்று பதிலளித்தார். இதைக் கேட்டு சஹ்ல் (ரலி) அவர்கள் சிரித்து விட்டு, அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அலீ அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ அவர்களுக்கு அதை விடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லும்படி நான் சஹ்ல் (ரலி) அவர்களிடம் கேட்டுக் கொண்டு, அபுல் அப்பாஸ் (சஹ்ல் பின் சஅத்) அவர்களே! அது எப்படி? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ-ஃபாத்திமா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாச-ல் படுத்துக் கொண்டார்கள். (அப்போது ஃபாத்திமா அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி (ஸல்) அவர்கள், உன் பெரிய தந்தையின் மகன் (அலீ) எங்கே என்று கேட்க அவர்கள், பள்ளிவாச-ல் இருக்கிறார் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களிடம் சென்ற போது அவர்களுடைய மேல்துண்டு அவர்களுடைய முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருப்பதையும் (தரையிலுள்ள) மண் அவர்களுடைய முதுகில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டு அவர்களுடைய முதுகிலிருந்து மண்ணைத் துடைக் கலானார்கள். அப்போது, (எழுந்து) அமருங்கள், அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே! என்று (நபி -ஸல்- அவர்கள்) இருமுறை சொன்னார்கள்.72

3704 சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவரிகளின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த மனிதரி டம், நான் சொன்னவை உனக்கு எரிச்ச லூட்டியிருக்குமே! என்று சொன்னார்கள். (ஏனெனில் அந்த மனிதர் குறை காணும் நோக்கத்துடன் வந்திருந்தார்.) அதற்கு அந்த மனிதர், ஆம் என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண் படியச் செய்யட்டும் என்று சொன்னார்கள். பிறகு அந்த மனிதர் அலீ (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் நற்செயல்களைத் எடுத்துரைத்து விட்டு, அவர்கள் அவ்வாறு தான்; அவர்களது இல்லம் நபி (ஸல்) அவர்களுடைய (குடும்பத்தாரின்) வீடுகளுக்கு நடுவில் இருந்தது என்று கூறினார்கள். பிறகு, நான் சொன்னது உனக்கு எரிச்சலூட்டியிருக்குமே! என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், அப்படி யென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண் படியச் செய்யட்டும். போ! போய் (நான் இப்படி உண்மையைச் சொன்னதற்காக என்னை நீ தண்டிக்க விரும்பினால்) எனக் கெதிராக உன்னால் ஆனதைச் செய் என்று சொன்னார்கள்.

3705 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை; ஆயிஷா (ரலி) அவர்களைத்தாம் அங்கே கண்டார். ஆகவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்த போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபி -ஸல்- அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்து கொண்டார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களுடைய கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி)தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை அல்லாஹூ அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை அல்ஹம்து -ல்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.73

3706 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், (நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர்-நபி) மூசா அவர் களிடம் எந்த அந்தஸ்து இருந்ததோ அதே அந்தஸ்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா? என்று கேட்டார்கள்.74

3707 அபீதா பின் அம்ர் அஸ் ஸல்மானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் (இராக் வந்திருந்த போது இராக் அறிஞர்களிடம் உம்முல் வலதை விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் விரும்பாத போது), நீங்கள் முன்பு (உமர் -ரலி- அவர்களின் கருத்துப்படி உம்முல் வலதை விற்கக் கூடாது என்று) தீர்ப்பளித்து வந்ததைப் போன்றே இனி மேலும் தீர்ப்பளித்து வாருங்கள். ஏனெனில், (மக்களிடையே சச்சரவுகளுக்குக் காரணமாய் அமையும் வகையில் அறிஞர்களுக்கிடையிலான) கருத்து வேறுபாடுகளை (பகிரங்கமாக்குவதை) நான் விரும்பவில்லை.75 மக்கள் அனைவரும் (ஒத்த கருத்துடைய) ஒரே குழுவினராய் ஆகும் வரை, அல்லது என் தோழர்கள் இறந்து விட்டதைப் போல் நானும் இறந்து விடும் வரை நான் இவ்வாறே (கருத்து வேறுபாடுகளை பகிரங்கப்படுத்த விரும்பாதவனாக) இருப்பேன் என்று சொன்னார்கள்.

அலீ (ரலி) அவர்களிடமிருந்து (வந்ததாக ஷியாக்கள் மூலம்) அறிவிக்கப்படு கின்றவற்றில் பெரும்பாலானவை பொய்கள் தாம் என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.76

பாடம் : 10

ஜஅஃபர் பின் அபீ தா-ப் அல் ஹாஷிமீ -ரலியல்லாஹு அன்ஹு-அவர்களின் சிறப்புகள்.77

இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், நீங்கள் என் குணத்திலும் என் தோற்றத்திலும் (என்னை) ஒத்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.78

3708 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபிமொழிகளை) அதிகமாக அபூ ஹுரைரா அறிவிக்கிறாரே என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடனேயே எப்போதும் இருந்து வந்தேன். புளித்து உப்பிய (உயர் தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை அணிவது மில்லை. இன்னவனோ, இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண் டிருந்தேன். என்னை ஒரு மனிதர் (தன் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்து வ)தற்காக (எனக்கு விருந்தளியுங்கள் என்ற பொருள் கொண்ட அக்ரினீ என்னும் சொல்லை சற்று மாற்றி) அக்ரிஃனீ-எனக்கு ஓர் இறை வசனத்தை ஓதிக்காட்டுங்கள்- என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும்.79 ஜஅஃபர் பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் ஏழைகளுக்கு மிகவும் உதவி செய்பவர்களாயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத (கா-யான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக் கொண்டு) இருப்பதை நக்கி உண்போம்.

3709 ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால் இரு சிறகுகள் உடையவரின் மகனே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று சொல்வார்கள்.80

அபூ அப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இரு சிறகுகள் என்பது இரு பக்க(பல)ங்களைக் குறிக்கும்.

பாடம் : 11

அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் - ரலியல்லாஹுஅன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.81

3710 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும் போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழை கோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர் (ரலி) அவர்கள், இறைவா! நாங்கள் எங்கள் நபி (-ஸல்- உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்ததன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரி வந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்து வந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை (அப்பாஸ் -ரலி- அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக! என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.82

பாடம் : 12

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (-அவர்கள் மீது சாந்தி நிலவட்டும்-) அவர்களின் சிறப்பும்.84

நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார் என்று சொன்னார்கள்.85

3711 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ஃபய்உ செல்வத்திலிருந்து தமக்கு நபி (ஸல்) அவர்களிட மிருந்து வரவேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா ஆளனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற நிலத்தையும் ஃபதக் பிரதேசத்திலிருந்த நிலத்தையும் கைபரில் கிடைத்த குமுஸ் நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார்.86

3712 அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான் என்று சொன்னார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இந்தச் செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான். அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் தர்மப் பொருட்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழி முறைப் படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்ற மாட்டேன். அவற்றின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறே நான் நடந்து கொள்வேன் என்று சொன்னார்கள். உடனே, அலீ அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்து விட்டு, அபூபக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கின்றோம் என்று சொன்னார்கள். -மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களுடைய உரிமையையும் எடுத்துரைத்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என் உறவினர்களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்து கொள்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள்.87

3713 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3714 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88

3715 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். (நபி -ஸல்- அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார். நான் அதைப் பற்றி (நபி -ஸல்- அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.89

3716 அதற்கு ஃபாத்திமா, நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசிய மாகப் பேசிய போது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வ-யிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசிய போது அவர்களுடைய குடும்பத்தாரில் நான் தான் அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள்.90

பாடம் : 13

ஸுபைர் பின் அவ்வாம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.91

(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (ஹவாரீ) பிரத்தியேக உதவியாளர் ஆவார் என்று இப்னு அப்பாஸ்

(ரலி) அவர்கள் சொன்னார்கள்.92

(ஈசா -அலை- அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.

3717 மர்வான் பின் ஹகம் அவர்கள் கூறியதாவது:

சில்லு மூக்கு நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில்93 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்கும் கடுமையான சில்லு மூக்கு இரத்த நோய் ஏற்பட்டது. எந்த அளவிற் கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்து விட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து) விட்டார்கள். அப்போது குறைஷிகளில் ஒரு மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து, (உங்களுக்குப் பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள் என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், மக்கள் (இப்படி நியமிக்கச்) சொன்னார் களா? என்று கேட்க அம்மனிதர், ஆம் என்றார். எவரை நியமிப்பது? என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார். அப்போது இன்னொரு மனிதர் வந்தார். -அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் (பின் ஹகம்) என்று நான் நினைக்கிறேன் -அவரும், (உஸ்மான்-ரலி- அவர்களே! உங்களுக்குப் பின்) ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள் என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், மக்கள் (இப்படிச்) சொன்னார்களா? என்று கேட்க அவர், ஆம் என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், யாரை நியமிப்பது? என்று கேட்க. அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்து விட்டார். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர்கள் ஸுபைர் அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம் என்று சொல்ல, அந்த மனிதர், ஆம் என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் அவர்களே மக்களில் சிறந்தவர். ( எவரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை சொன்னார்களோ) அவர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஸுபைர் தாம் என்று சொன்னார்கள்.

3718 மர்வான் பின் ஹகம் அவர்கள் கூறியதாவது:

நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, (உங்களுக்குப் பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள் என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா? என்று கேட்க அம்மனிதர், ஆம்; ஸுபைர் (ரலி) அவர்களைத் தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்) என்று பதில் சொன்னார். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று மூன்று முறை கூறினார்கள்.94

3719 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் பின் அவ்வாம் ஆவார்.95

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96

3720 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நானும் உமர் பின் அபீ சலமா (ரலி) அவர்களும் (நபி -ஸல்- அவர்களின் வீட்டுப்) பெண்களி டையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்கள் தன் குதிரையின் மீது (சவாரி செய்தபடி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு ...அல்லது மூன்று... முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்த போது, என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை நான் பார்த்தேன் என்று சொன்னேன். அவர்கள், என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே! என்று கேட்டார்கள். நான், ஆம் (பார்த்தேன்) என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களுடைய செய்தியைக் கொண்டு வருபவர் யார்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களுடைய செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையர் இருவரையும் சேர்த்து, என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பண மாகட்டும் எனக் கூறினார்கள் என்று சொன்னார்கள்.

3721 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது,97 நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ் விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்த போது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன்.

பாடம் : 14

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.98

நபி (ஸல்) அவர்கள் தல்ஹா அவர் களைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.99

3722 & 3723 தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர் களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாட்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்க வில்லை.100

இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி) மற்றும் சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக் கிறார்கள்.

3724 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(உஹுதுப் போரின் போது) நபி (ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா (ரலி) அவர்களுடைய கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக நான் பார்த்தேன்.

பாடம் : 15

சஅத் பின் அபீ வக்காஸ் அஸ் ஸுஹ்ரீ

(ரலி) அவர்களுடைய சிறப்புகள். (அவர்களுடைய குலமான) பனூ ஸுஹ்ரா குலத்தார் நபி (ஸல்) அவர்களுடைய தாய் வழி உறவினர்கள் ஆவர். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களே சஅத் பின்

மாலிக் (ரலி) ஆவார்கள்.101

3725 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(எனது வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும் எனச்) சொன்னார்கள் என்று சஅத் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

3726 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக என்னை நான் கண்டேன்.102

3727 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தைத் தழுவிடவில்லை.103 நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாட்கள் (வரை) இருந்தேன்104 என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

 இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3728 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகளில் நானே முதலாமவன் ஆவேன்.105 எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புனிதப் போர் புரிந்து வந்தோம். எனவே, நாங்கள் ஒட்டகங்களும் ஆடுகளும் கெட்டிச் சாணியிடுவதைப் போன்று ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) பனூ அஸத் குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் விஷயத்தில் என்னைக் குறை கூறலானார்கள். (அப்படி யானால், இது வரை) நான் செய்து வந்த வழிபாடு வீணாகி, நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என்று வருந்தினேன்). அதைக் குறித்து அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் புகார் செய்திருந்தார்கள், இவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று (உமர் -ரலி- அவர்களிடம்) சொன்னார்கள்.106

பாடம் : 16.

நபி (ஸல்) அவர்களுடைய மருமகன்கள் பற்றிய குறிப்பு .107

அவர்களில் அபுல் ஆஸ் பின் ரபீஉ

(ரலி) அவர்களும் ஒருவராவார்.108

3729 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் (ஃபாத்திமா இருக்கவே,) அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேள்விப் பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். என்று கருதுகின்றது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூஜஹ்லு டைய மகளை மணக்கவிருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, நிற்க, அபுல்ஆஸ் பின் ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவ தாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக் கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது109 என்று சொன்னார்கள்.

எனவே, அலீ (ரலி) அவர்கள் (அபூஜஹ் லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், மிஸ்வர் (ரலி) அவர்கள் அதிகப்படியாகக் கூறியிருப் பதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவு கூர்ந்து அவர் (அவருடைய மாமனாரான) தன்னுடன் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள்.

அப்போது அவர்கள், அவர் என்னிடம் பேசினார். (பேசிய படி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார் என்று சொன்னார்கள்.

பாடம் : 17

நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் சிறப்புகள்.110

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் எம் சகோதரரும் எம்(மால் விடுதலை செய்யப்பட்ட) அடிமையுமாவீர் என்று நபி (ஸல்) அவர்கள் (ஸைத் -ரலி- அவர்களிடம்) சொன்னார்கள்.111

3730 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்...(இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரது தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள்.112 அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரது மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார் என்று சொன்னார்கள்.

3731 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உஸாமா பின் ஸைத் அவர் களும், ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் அப்போது ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். அந்த மனிதர் (இருவரின் கால்களையும் பார்த்து), இந்தக் கால்கள் (ஒன்றுக் கொன்று உறவுள்ளவை;) ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை என்று சொன்னார். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்குத் தெரிவித்தார்கள்.113

பாடம் : 18

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.114

3732 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(திருட்டுக் குற்றத்தின் காரணமாக கைவெட்டும் தண்டனைக்கு உள்ளாகவிருந்த) மக்ஸூமீ குலத்துப் பெண்ணொருத்தியின் விஷயம் குறைஷிகளைக் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உஸாமா அவர்களைத் தவிர வேறெவர் அவர்களிடம் துணிச்சலுடன் (தண்டனை யைத் தளர்த்துவது குறித்துப்) பேச முடியும் என்று (தமக்குள்) பேசிக் கொண்டார்கள்.115

3733 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடி விட்டாள். மக்கள், அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி பரிந்து) பேசுவது யார்? என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவாகளிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பனூ இஸ்ராயீல் குலத்தார் தம்மிடையேயுள்ள வ-யவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரது கையைத் துண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரது கையை நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்.116

3734 அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் பள்ளிவாச-ல் இருந்த பொழுது பள்ளி

வாச-ன் ஒரு மூலையில் தன் ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே, இவர் யார் என்று பார். இவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே (நான் இவருக்கு புத்திமதி சொல்லியிருப்பேனே) என்று சொன்னார்கள். அவர்களிடம் ஒரு மனிதர், அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர்) அவர்களே! இவரை உங்களுக்குத் தெரியாதா? இவர் தான் உஸாமா (ரலி) அவர்களின் மகன் முஹம்மது என்று சொன்னார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் கையால் தரையில் (கொத்துவது போல்) தட்டிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்தால் இவரை நேசிப்பார்கள் என்று சொன்னார்கள்.117

3735 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள்(சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள்.

3736 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாச-ல் தொழுது கொண்டிருந்த போது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமலிருப்பதைக் கண்டு இப்னு உமர்

(ரலி) அவர்கள், மீண்டும் தொழுங்கள் என்று சொன்னார்கள்.

உம்மு அய்மனின் மகனான அய்மன், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராய் இருந்தார்; மேலும் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார்

3737 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்த போது ஹஜ்ஜாஜ் பின் அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்ற வில்லை. ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜை நோக்கி), திரும்பத் தொழுங்கள் என்று சொன்னார்கள். அவர் திரும்பிச் சென்ற போது என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், யார் இவர்? என்று கேட்டார்கள். நான், உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர் என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், இவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள் என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், (உஸாமா-ரலி- அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் சுலைமான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) கூறுகிறார்கள்:

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.

பாடம் : 19

அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப்

-ரலியல்லாஹு அன்ஹுமா- அவர்களின் சிறப்புகள்.118

3738 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஒரு மனிதர் கனவொன்றைக் காண்பாராயின் நபி (ஸல்) அவர்களிடம் அதை விவரித்துச் சொல்வார். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் விவரித்துச் சொல்வதற்காகக் கனவொன்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளி வாச-ல் நான் உறங்குவது வழக்கம். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்: வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரு பக்கங்களிலுமுள்ள கல்தூண்களைப் போன்று இரு தூண்கள் அதற்கும் இருந்தன. அப்போது அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான், நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் நான் கோருகின்றேன். நரகத்திலிருந்து பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் நான் கோருகின்றேன் என்று பிரார்த்திக்கலானேன். அப்போது (என்னை அழைத்து வந்த) அந்த வானவர்கள் இருவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், இனி ஒரு போதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள் என்று சொன்னார். நான் இதை (என் சகோதரியும் நபி -ஸல்- அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன்.

3739 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயி ருக்கும்) என்று சொன்னார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் -ரலி- அவர்களின் மகன்) சாலிம் (ரஹ்) அவர்கள், (நபி -ஸல்- அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள் என்று கூறுகிறார்கள்.119

3740 & 3741 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர் என்று சொன்னார்கள்.

இதை தம் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

பாடம் : 20

அம்மார் மற்றும் ஹுதைஃபா- ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகியோரின் சிறப்புகள்.120

3742 அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளி வாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதேன். பிறகு, இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு என்று பிரார்த்தித்தேன். பிறகு, ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். மக்கள், (இவர் தான் நபித் தோழர்) அபுத்தர்தா என்று பதிலளித்தார்கள். நான், அபுத் தர்தா (ரலி) அவர்களை நோக்கி, எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆகவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நீங்கள் எந்த ஊர்க்காரர்? என்று கேட்டார்கள். நான், கூஃபாவாசி என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், நபியவர்களின் செருப்பு களையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்-ரலி- அவர்கள்) உங்களிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நய வஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா-ரலி) உங்களிடையே இல்லையா? என்று கேட்டு விட்டு, பிறகு, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், வல்லய்- இதா யஃக்ஷா என்று தொடங்கும் (திருக் குர்ஆனின் 92லிம் அத்தியாயம் அல்லை-ன்) இறைவசனங்களை எப்படி ஓதுகின்றார் என்று கேட்டார்கள். நான், அவர்களுக்கு, வல்லய்- இதாயஃக்ஷா வன்னஹாரி இதா தஜல்லா வத்தகரி வல் உன்ஸா (-இப்படித் தான் ஓதுவார்கள்) என்று ஓதிக் காட்டினேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள்.121

3743 அல்கமா பின் கைஸ் அந் நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாச-ல் நுழைந்(து இரு ரக்அத்கள் தொழு)ததும் இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தேன். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர் களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள் நீங்கள் எந்த ஊர்க்காரர்? என்று கேட்டார்கள். அதற்கு நான் கூஃபா வாசி என்றேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்கள் அறிவித்த) வேறெவருக் கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா? என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட் டார்கள். நான், ஆம் (இருக்கிறார்) என்று பதிலளித்தேன். அவர்கள், தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களி டையே இல்லையா? என்று கேட்டார். - அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்- நான், ஆம் (இருக்கிறார்) என்று பதிலளித்தேன். அவர்கள், நபி (ஸல்) அவர்களின் (பல் துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலை யணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்... (இப்னு மஸ்ஊத்) உங்களிடம் இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், ஆம் (இருக் கிறார்) என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்கள் வல் லய்- இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா என்னும் (அத்தியாயம் அல்லை-ன்) வசனங்களை எப்படி ஓதினார்கள்? என்று கேட்க, வத் தகரி வல் உன்ஸா என்று (வ மா கலக்க என்னும் சொல் இல்லாமல் தான் ஓது வார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத் தர்தா (ரலி) அவர்கள், (ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை) விட்டுக் கொடுத்து விடும் படி என்னை எச்சரிக்கிறார்கள் என்று சொன்னார்கள்.122

இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 21

அபூ உபைதா பின் ஜர்ராஹ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.123

3744 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் ஜர்ராஹ் அவர்கள் தாம்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3745 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசி களிடம், நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன் என்று சொன்னார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த அமீன் என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.124

பாடம்

முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.125

பாடம் : 22

ஹஸன் மற்றும் ஹுஸைன்- ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகியோரின் சிறப்புகள்.126

 நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக் கொண் டார்கள் என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து அறிவிக்கிறார்கள்.127

3746 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன் (ரலி) அவர்கள், நபி (ஸல்)அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறுமுறை ஹஸன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, இந்த எனது (மகளின்) மகன் மக்களின் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான் என்று சொல்ல நான் கேட்டேன்.128

3747 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள்(சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன் (ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக என்று கூறினார்கள்.129

3748 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 அலீ (ரலி) அவர்களுடைய மகன் ஹுஸைன் (ரலி-அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட பின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டு வரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுஸைன் (ரலி) அவர்களுடைய அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.130

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத் தாரிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் தாம் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதரவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். வஸ்மா என்னும் ஒரு வகை மூ-கையால் தமது (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டி ருந்தார்கள்.

3749 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக! என்று பிரார்த்திக்கக் கண்டேன்.

3750 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஸன்(ரலி) அவர்களைச் சுமந்தபடி, என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களைத் தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.131

3751 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.132

3752 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹசன் பின் அலீ (ரலி) அவர்களை விட நபி (ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்க வில்லை.133

3753 அப்துர் ரஹ்மான் பின் அபீ நுஅம்

(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் அணிந்தவரைக் குறித்து வினவினார். -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், இஹ்ராம் அணிந்தவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்து கேட்டார் என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்து கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கெனவே அல்லாஹ்வின் தூதருடைய மகளின் மகனை (ஹுஸைனை)க் கொன்று விட்டார்கள். (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள், அவர்கள் இருவரும் (ஹஸன் -ரலி- அவர்களும் ஹுசைன் -ரலி- அவர்களும்) உலகின் இரு துளசி மலர்கள் ஆவர் என்று (அவர்களைக் குறித்து) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.134

பாடம் : 23

அபூபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ் - ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.135

(பிலாலே!) சொர்க்கத்தில் உமது காலணிகளின் ஓசையை எனக்கு முன்பாக நான் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.136

3754 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள் என்று சொல்வார்கள்.

3755 கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம், நீங்கள் உங்களுக்காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனாவிலேயே) வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ்வுக்காக செயலாற்ற விட்டு விடுங்கள் என்று சொன்னார்கள்.137

பாடம் : 24

(அப்துல்லாஹ்) இப்னு அப்பாஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.138

3756 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக! எனப் பிராத்தித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.139

இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹிக்மத் என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.

பாடம்: 25

கா-த் பின் வலீத் -ரலியல்லாஹு அன்ஹு - அவர்களின் சிறப்புகள்.140

3757 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் (பின் ஹாரிஸா) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதா-ப்) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்து விட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

(முத-ல்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு, ஜஅஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக் கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (கா-த் பின் வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்து விட்டான் என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) சொன்னார்கள்.141

பாடம் : 26

அபூ ஹுதைஃபா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட சாலிம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.142

3758 மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், அவர் எத்தகைய மனிதரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை

முத-ல் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்.

பாடம் : 27

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.143

3759 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்த தில்லை. மேலும் அவர்கள், உங்களில் நற் குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் என்று சொன்னார்கள்.144

3760 மேலும், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை யான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

3761 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் நாட்டிற்குள் சென்று (பள்ளிவாச-ல்) இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். அப்போது, இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்து விட்டதாக நம்புகிறேன் என்று சொன்னேன். அந்த முதியவர், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். நான் கூஃபாவாசி என்று பதிலளித்தேன். அவர், நபி (ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும், தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத்) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்) உங்களிடையே இல்லையா? நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா) உங்களிடையே இல்லையா? என்று கேட்டார். உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) வல் லய்- என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறை வசனங்களை எப்படி ஓதினார்கள்? என்று மேலும் கேட்டார்கள். நான், வல் லய்- இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா வத் தகரி வல் உன்ஸா என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுவதைப் போன்று) ஓதிக் காட்டினேன். அம்முதியவர், நபி (ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக் கொடுத்தார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதை விட்டு விட்டு புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்து கொண்டேயிருந்தனர் என்று சொன்னார்கள்.145

3762 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி (ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக் கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்ஊதை) விட வேறெ வரையும் நான் அறியமாட்டேன் என்று பதிலளித்தார்கள்.

3763 அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் சகோதரரும் யமன்

நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம்.146 அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.

பாடம் : 28

முஆவியா -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.147

3764 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள், தம்மிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா -ரலி- அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைச் சொன்னார்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அவரை (அப்படியே தொழ) விட்டு விடு. ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டிருந்தார் என்று சொன்னார்கள்.

3765 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா (ரலி) அவர்கள் விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார் என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஆவியா (மார்க்கச்) சட்டநிபுணர் ஆவார் என்று பதிலளித்தார்கள்.

3766 ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், அவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக் அத்துகளையும்-அஸர் தொழுகைக்குப் பின் (உங்களில் சிலர் தொழுகின்ற) இரு ரக்அத்களையும்- தொழ வேண்டாமென்று தடைவிதித்துள்ளார்கள் என்று கூறினார்கள்.148

பாடம் : 29

ஃபாத்திமா -ரலியல்லாஹு அன்ஹா- அவர்களின் சிறப்புகள்.149

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவியாவார்.150

3767 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151

பாடம் : 30

ஆயிஷா -ரலியல்லாஹு அன்ஹா- அவர்களின் சிறப்பு.152

3768 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல் லாஹி வபரக்காத்துஹு - அவர் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும் என்று பதில் முகமன் சொல்லி விட்டு, நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.153

3769 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர் அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. (உலகின் மற்ற) பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் ஸரீத் என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

இதை அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.154

3770 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ஸரீத் என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

3771 காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதரும் அபூபக்ரும் காத்திருக்கும் இடத்திற்கு (சொர்க் கத்திற்கு) நீங்கள் செல்லவிருக்கிறீர்கள் என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

3772 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் (தமக்கு ஆதரவாக ஜமல் போரில் கலந்து கொள்ளும் படி) மக்களை அழைப்பதற்காக அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹஸன் (ரலி) அவர்களையும் கூஃபா நகருக்கு அனுப்பி வைத்த போது (மக்களுக்கு) அம்மார் உரையாற்றினார்கள். அப்போது (தமது உரையில்) நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா இந்த உலகிலும் மறுமையிலும் மனைவியாவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வி(ன் கட்டளைத)னைப் பின்பற்று வதா? அல்லது ஆயிஷாவி(ன் யோசனை த)னைப் பின்பற்றுவதா? என (முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு) உங்களை (ஆளாக்கி) அல்லாஹ் சோதனையில் ஆழ்த்திவிட்டான் என்று கூறினார்கள்.155

3773 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்த-க் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்து விட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் உளூவின்றித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்ற போது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக்கடி யான நிலையை முறையிட்டார்கள். அப்போது தான் தயம்மும் உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் இறங்கியது. ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி) உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகின்ற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை; மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள்வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை என்று சொன்னார்கள்.156

3774 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப் பட்டிருந்த போது தம் மனைவிமார்களிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் நாளை நான் எங்கேயிருப்பேன்? நாளை நான் எங்கேயிருப்பேன்?157 என்று கேட்கத் தொடங்கினார்கள். என் (முறைக்குரிய) நாள் வந்த போது தான் அமைதியடைந்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

3775 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்: (நபியவர் களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, உம்மு சலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷா விடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக் கிறார்கள். ஆயிஷா, நபி (ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகின்றோம். ஆகவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

(உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

நான் நபி (ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி (ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்த போது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவர்களிடம் இதே கோரிக் கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், உம்மு சலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (வேத வெளிப்பாடு) அருளப்பட்டதில்லை என்று பதிலளித்தார்கள்.158

 

02.11.2009. 02:38




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
30 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி