மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!
மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!
பி. ஜைனுல் ஆபிதீன்
குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!
இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து படிக்க 23.03.2010. 17:26 ஜனநாயகம்நவீன இணை வைத்தலா? பி. ஜைனுல் ஆபிதீன் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. தொடர்ந்து படிக்க 11.03.2010. 00:09 தாடி ஓர் ஆய்வு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஏகத்துவம் இதழுக்காக எழுதிய இந்த ஆய்வை நேயர்கள் பயனடைவதற்காக வெளியிடுகிறோம். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.. தொடர்ந்து படிக்க 24.02.2010. 16:00 அனைவரும் ஒன்று பட முடியாதா? உங்கள் கேள்வியில் உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது. நாம் எதை ஆசைப்பட்டாலும் அது சத்தியமாகுமா என்பதை அடிப்படையாக வைத்துத் தான் ஆசைப்பட வேண்டும். அறிவுப்பூர்வமாக சிந்தித்துப்பார்த்துத் தான் ஆசைப்பட வேண்டும். தொடர்ந்து படிக்க 23.01.2010. 00:22 வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது சிறப்பானதா கேள்வி: ஜும்மா நாளில் கஹ்ஃப் அத்தியாயம் ஓதுவது ஸுன்னதா பித்அத்தா ஆதாரத்துடன் விளக்கவும். சாபிர் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்பு குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வெள்ளிக் கிழமை தோறும் கஹ்பு அத்தியாயம் ஓத வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். 15.01.2010. 19:56 ஸிஹ்ர் ஓர் ஆய்வு9 சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்கள் வருமாறு: தொடர்ந்து படிக்க 11.01.2010. 20:02 ஒன்று முதல் ஒன்பது தொடர்களும் ஸிஹ்ர் ஓர் விளக்கம்-1 (ஸிஹ்ர் பற்றிய ஆய்வாக இது இருப்பதால் இது தனித் தொடராக வெளிவரும்) மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் புகுந்த இஸ்மாயில் ஸலஃபி அந்தத் தலைப்பின் கீழ் தனது வாதத்தை அறவே நிரூபிக்காமல் ஸிஹ்ர் என்ற தலைப்பில் தான் முழுத் தொடரையும் அமைத்திருந்தார். தொடர்ந்து படிக்க 18.11.2009. 11:49 பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நன்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப்போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அந்த மூன்று தொடர்களுக்கும் தக்க மறுப்பு வெளியிட்டோம். இவை அனைத்தும் தனித் தனி கட்டுரைகளாக இடம்பெற்றதால் வாசிக்க சிரமம் ஏற்படும் என்பதைக் கவணத்தில் கொண்டு அனைத்தயும் ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்க 30.12.2009. 20:58 இரண்டாம் ஜமாஅத் ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார். தொடர்ந்து படிக்க 23.11.2009. 11:28 பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமானதா? பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒரு அறிஞர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும். தொடர்ந்து படிக்க 08.11.2009. 12:34 பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா? தொடர்ந்து படிக்க 17.10.2009. 23:02 நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம். தொடர்ந்து படிக்க 23.09.2009. 19:22 தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு வீடியோ ஆடியோ வடிவில் அறிய தொடர்ந்து படிக்க 22.09.2009. 19:46 ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பி. ஜைனுல் ஆபிதீன் حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ தொடர்ந்து படிக்க 17.09.2009. 10:50 தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். தொடர்ந்து படிக்க 26.08.2009. 18:22 நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க 15.08.2009. 21:02 சிக்கனமான திருமணம் விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள் பி. ஜைனுல் ஆபிதீன் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்து படிக்க 13.08.2009. 03:15
இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க 12.08.2009. 11:07 நபியை அவமதிக்கும் மவ்லிது தொடர்ந்து படிக்க 05.08.2009. 06:47 தொப்பியும் தலைப்பாகையும் தொடர்ந்து படிக்க 05.08.2009. 06:41ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?
தாடி ஓர் ஆய்வு
அனைவரும் ஒன்று பட முடியாதா?
வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது
கியாமத் நாளில் ஒளி?
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது சாட்டப்பட்டாது. (அதாவது தஜ்ஜாலின் தீங்கு ஏற்படாது) என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹாகிம், பாகம்: 2, பக்கம்: 123
இதே கருத்தில் தப்ரானீ அவர்களின் அவ்ஸத் (பாகம்: 2, பக்கம்: 123), ஸுனனுல் குப்ரா (பாகம்: 6, பக்கம்: 25) முஸன்னப் இப்னு அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 1, பக்கம்: 186) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இரண்டு முறைகளில் இடம் பெற்றுள்ளது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவும், மற்றொன்று நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபித்தோழரின் கூற்று என்பதே சரியனது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வருவது தவறாகும். நபித்தோழரின் கூற்று என்பதே சரியானதாகும் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். (நூல்: அமலுல் யவ்மி வல்லைலா, பாகம்: 1, பக்கம்: 173)
நபிகளாரின் கூற்றாக வந்துள்ளதை ஹாஸிம் அவர்கள் பலவீனமாக்கி உள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் நபித்தோழரின் கூற்று என்பது தான் சரி என்று கூறுகிறார்கள். இமாம் தாரகுத்னீ நபித்தோழரின் கூற்று என்பதற்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். (தல்கீஸுல் ஹபீர், பாகம்: 1, பக்கம்: 102)
இதே செய்தி வேறு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது என்று ஷைக் அல்பானீ அவர்கள் தனது இர்வாவுல் கலீல் என்ற நூல் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் முழுமையான அறிவிப்பாளர் வரிசை இல்லாததால் அதை நாம் ஆய்வு செய்ய முடியவில்லை.
முழுமையான ஒளி?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப வசனங்களையும் அதன் இறுதியையும் ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும். யார் அதை முழுவதையும் ஓதுகிறாரோ வானத்திலிருந்து பூமி வரை ஒளி உண்டாகும்
நூல்: அஹ்மத் (15073), முஃஜமுல் கபீர் தப்ரானீ (பாகம்: 2, பக்கம்: 197)
அஹ்மதின் அறிவிப்பாளர் வரிசையில் மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுகின்றனர்.
1-அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி தெளிவாக, விரிவாக நாம் ஏகத்துவம் மாத இதழில் குறிப்பிட்டுள்ளோம்.
2. ஸப்பான் பின் பாயித் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமான அறிவிப்பாளரே! இமாம் அஹ்மத் அவர்கள் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இப்னு மயீன் அவர்கள் பலவீனமானவர் என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள், ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இவர் ஸஹ்ல் பின் முஆத் என்பவர் வழியாக ஒரு ஏட்டின் மூலம் தனித்து அறிவிக்கிறார்; இது இட்டுக்கட்டதைப் போன்றதாகும்; இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்கள். இவரிடத்தில் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று ஸாஜி குறிப்பிடுகிறார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 3, பக்கம்: 265)
3. ஸஹ்ல் பின் முஆத் என்பவரும் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவராவார். இப்னு மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை ஸிகாத் என்ற கிதாபில் கூறிவிட்டு இவருடைய ஹதீஸை ஸபான் பின் பாயித் வழியாக அறிவித்தால் கணக்கில் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (இந்த ஹதீஸ், ஸபான் பின் பாயித் வழியாகவே இடம் பெற்றுள்ளது)
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்:4, பக்கம்: 224
தப்ரானியின் அறிவிப்பில் நாம் முன்னர் குறிப்பிட்ட ஸப்பான் பின் பாயித் மற்றும் ஸஹ்ல் பின் முஆத் என்ற பலவீனமான அறிவிப்பாளரே இடம் பெற்றுள்ளனர்.
இதைப் போன்று இப்னுஸ் ஸின்னீ அவர்களின் அமலுல் யவ்மி வல்லைலா (676) நூலில் இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியிலும் நாம் முன்னர் குறிப்பிட்ட இப்னு லஹீஆ, ஸப்பான் பின் பாயித் மற்றும் ஸஹ்ல் பின் முஆத் என்ற பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதே செய்தி முஸன்னப் இப்னு அபீ ஷைபா (பாகம்: 3, பக்கம்: 377)ல் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. கதாதா என்பவரின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர்களின் சொந்தக் கூற்றுகள் மார்க்க ஆதாரமாக ஆகாது.
மக்கா வரை ஒளி?
யார் வெள்ளிக்கிழமை அன்று கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதி பின்பு தஜ்ஜாலை அடைந்தால் தஜ்ஜால் அவருக்குத் தீங்கு இழைக்க முடியாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தியாத்தின் இறுதியை ஓதுவாரோ அவருக்கும் மக்கா வரை ஒளி உண்டாகும் என்று அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: ஷுஅபுல் ஈமான் பாகம்: 3, பக்கம்: 112
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேகம் வரை ஒளி?
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு மறுமை நாளில் அவரின் பாவத்திலிருந்து வானத்தின் மேகம் வரை ஒளியை ஏற்படும். மேலும் இரண்டு வெள்ளிக்கிழமைக்கு இடையில் ஏற்படும் பாவங்கள் மன்னிக்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
இந்தச் செய்தியை இப்னு மர்தவைஹி அவர்கள் தனது தப்ஸீரில் பதிவு செய்திருப்பதாக தப்ஸீர் இப்னுகஸீரில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெற்றுள்ளது.
இதில் இடம் பெற்றிருக்கும் காலித் பின் ஸயீத் பின் அபீ மர்யம் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். இவர் யாரென நாம் அறியவில்லை என்று இப்னுல் மதீனீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்:தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 3, பக்கம்: 83)
அனைத்து சோதனையிருந்தும் பாதுகாப்பு?
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை அன்று ஓதுவாரோ அவர் ஒவ்வொரு சோதனையில் இருந்தும் எட்டு நாள் பாதுகாக்கப்படுவார். தஜ்ஜால் வெளியேறினால் அவனிடமிருந்து இவர் பாதுகாப்பு பெறுவார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
நூல்: அல்அஹாதீஸில் முக்தார் (பாகம்: 2, பக்கம்:50)
இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் முஸ்அப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 201)
பத்து நாட்கள் பாதுகாப்பு?
நான் உங்களுக்கு ஒரு அத்தியாயத்தை அறிவிக்கட்டுமா? அதன் மகத்துவம் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ள இடைப்பட்ட அளவாகும். அதைஓதியவருக்கு இது போன்ற நன்மைகள் கிடைக்கும். யார் வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் அது நீடிக்கப்படும் (அதை அறிவிக்கட்டுமா?)என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர் ஆம் என்றார்கள். அது தான் கஹ்ஃப் அத்தியாயமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தைலமீ)
இச்செய்தியில் ஹிஷாம் பின் அப்துல்லாஹ் பின் இக்ரிமா அல்மக்ஸூமீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
இவர் அடிப்படையற்ற செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்லுஃபாவு வல்மத்ரூகீன் லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்:3, பக்கம்: 175)
அனைத்து நோயிலிருந்தும் பாதுகாப்பு?
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும். வெள்ளிக் கிழமையிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையிலும் மேலும் மூன்று நாட்கள் வரை பாவங்கள் மன்னிக்கப்படும். அவருக்காக காலை வரை வானவர்கள் ஆயிரம் தடவை பாவமன்னிப்புத் தேடுவார்கள். பைத்தியம், அனைத்து தொழுநோய், தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் காப்பாற்றப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தத்கிரத்துல் மவ்லூஆத் பாகம்: 1, பக்கம்: 565)
இந்தச் செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்டது என்றும் இதில் இடம் பெறும் இஸ்மாயீல் என்பவர் பொய்யர் என்றும் நூலாசியர் குறிப்பிடுகிறார்.
அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்கள் தன்னுடைய விரிப்புக்கு வந்து விட்டால் கஹ்ஃப் அத்தியாயம் எழுதப்பட்ட பலகையை கொண்டு வந்து அதை ஓதுவார்கள். மேலும்எந்த மனைவியிடத்தில் சென்றாலும் அதை அங்கே கொண்டு செல்வார்கள்.
நூல்: ஷுஅபுல் ஈமான், பாகம்: 2, பக்:475
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. ஹஸன்(ரலி) அவர்களின் செயலாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.
கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதியவரை தவ்ராத் வேதத்தில் அல்ஹாயிலா (தடுப்பு) என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவருக்கும் நரகத்திற்கும் மத்தியில் திரையாக அது அமைகிறது.
நூல்: முஸ்னத் அல் பிர்தவ்ஸ்
பாகம்: 3, பக்கம்: 215
இந்தச் செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.
வெள்ளிக்கிழமை கஹ்பு அத்தியாயத்தை ஓதுவது குறித்த செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. பொதுவாக கஹ்ப் அத்தியாயத்தை ஓதுவது குறித்து பின் வரும் செய்திகள் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளன.
வானவர்கள் விரும்பும் அத்தியாயம்
பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது)அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அது என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (5011)
மேலும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் (1325) திர்மிதி (2810) அஹ்மத் (17776) இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 46), சுனனுல் குப்ரா (பாகம் 6 பக்கம் 462), முஸ்னத் தயாலிஸி (பாகம்: 1, பக்கம்: 97), முஃஜமுல் கபீர் தப்ரானீ (பாகம்:1, பக்கம்: 208), ஷுஅபுல் ஈமான் (பாகம்:2, பக்கம்: 474) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெருங்குழப்பவாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.
நூல்: முஸ்லிம் (1475)
மேலும் இந்த ஹதீஸ் திர்மிதி (2811), அபூதாவூத் (3765), அஹ்மத் (20720), ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 65), ஸுனனுல் குப்ரா நஸயீ (பாகம்: 6, பக்கம்: 236), முஸ்னத் ரூவ்யானி (பாகம்: 1, பக்கம்: 404), அமா லி அல்முஹாமிலீ (பாகம்: 1, பக்கம்: 331) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
ஸிஹ்ர் ஓர் ஆய்வு9
ஸிஹ்ர் ஓர் விளக்கம்-1
தொடர் 1பெண்கள் தங்க நகை அணியலாமா முழுமை
இரண்டாம் ஜமாஅத்
பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?
பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும
நெஞ்சின் மீது கை கட்டுதல்
வீடியோ ஆடியோ வடிவில் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு
தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு75தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில்300தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது.ஆறு நோன்பு ஆதாரமற்றதா?
தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்
நோன்பு திறக்கும் துஆ
சிக்கனமான திருமணம்
தொற்று நோய் உண்டா
நபியை அவமதிக்கும் மவ்லிது
டென்மார்க் பத்திரிகையும் சன்மார்க்க (?) மவ்லிதுகளும்
பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ
வந்து விட்டது ரபீவுல் அவ்வல் மாதம். நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் இடம் பெற்றுள்ள இந்த மாதத்தில் கந்தூரீ, மவ்லூத், எட்ஸெட்ரா எட்ஸெட்ரா என்று இன்னும் பற்பல விஷயங்களும் விஷேசங்களும் வந்து விடும்.தொப்பியும் தலைப்பாகையும்
பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
